Monday, February 20, 2012

வண்டி வாகன யோகம்

இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் வண்டி வாகனங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை. ஏனென்றால் வண்டி, வாகன நெரிசல்களில் நடப்பதற்கு பாதைகளும் இல்லை, நடந்து செல்வதை யாரும் விரும்புவதும் இல்லை. எங்கு சென்றாலும் காரிலோ, இரு சக்கர வாகனங்களிலோ சென்று  இறங்குவதைத்தான் கௌரவமாக நினைக்கிறார்கள். அதிலும் சொந்தமான வாகனங்கள் இல்லை என்றாலும் கால் டாக்ஸி, ஆட்டோ என கட்டண வாகனங்களும் தாராளமாகவே கிடைக்கிறது. பஸ்ஸில் செல்பவர்களும் ரயிலில் பயணம் செய்பவர்களும் ஒரு புறம் ஷேர் ஆட்டோக்களும் பெருகிவிட்டதால், ஏதாவது ஒரு வாகனங்களில் பயணம் செய்யாதவர்களே இல்லை என கூறலாம். பள்ளிகளில் கூட இன்று இலவச சைக்கிள்கள் வழங்கப்படுவதால் எல்லோருக்குமே வாகன யோகமானது இருக்கத்தான் செய்கிறது என்றாலும் சொந்தமாக சம்பாதித்து அந்த வருமானத்தில் வண்டி வாகனம் வாங்க கூடியயோகம் இருந்தால்தானே மகிழ்ச்சி அந்த யோகம் யாருக்கு அமையும் என பார்ப்போமா?

ஒருவரின் ஜாதகத்தில் 4ம் வீடு வண்டி வாகன யோகத்தைப் பற்றி குறிப்பிடுவதாகும். வண்டி வாகனங்களுக்கு காரகன் சுக்கிரனாவார். 4ம் அதிபதியும் சுக்கிரனும் பலமாக இருந்து விட்டால் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும். அதை அனுபவிக்கும் அதிர்ஷ்டமும் உண்டாகும். சுக்கிரனும் 4ம் அதிபதியும் சுபகிரக பார்வை, சுபகிரக சேர்க்கையுடன் இருந்து கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால் சொகுசான  ஆடம்பரமிக்க வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும்.

சந்திரன் பயணங்களுக்கு காரகன் என்பதால், சந்திரன் சுக்கிரன் 10ம் அதிபதியுடன் இருந்தால் வண்டி வாகனங்களை வாங்கி அனுபவிக்கும் யோகம், உடன் சனியின் சம்மந்தமும் இருந்தால் டிராவல்ஸ் மூலம் சம்பாதிக்கும் யோகம், பயண தொடர்புடையவைகளுக்காக சொகுசு வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும்.

சனி இரும்புக்கு காரகன் என்பதால் சனி சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 4ம் வீட்டதிபதியுடன் சம்மந்தம் ஏற்பட்டிருந்தால் பழைய வாகனங்களை வாங்கி அனுபவிக்கும் யோகம், கனரக வாகனங்கள் வாங்கக் கூடிய அதிர்ஷ்டம் உண்டாகும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001

Sunday, February 19, 2012

பஞ்ச மகா புருஷ யோகம்


யோகங்களிலேயே  சிறப்பான யோகங்கள் பஞ்சமகா புருஷ யோகங்களாகும். நவகிரகங்களில் சூரியன், சந்திரன் மற்றும் சர்ப கிரகங்களான ராகு கேதுவை தவிர்த்து, மற்ற கிரகங்களான செவ்வாய், குரு, சுக்கிரன், புதன், சனி போன்ற கிரகங்களால் உண்டாகக்கூடிய யோகங்களே பஞ்சமகா புருஷ யோகங்களாகும்.

இவைகள் ருச்சுக யோகம்,  பத்திர யோகம், ஹம்சா யோகம், மாளவியா யோகம், சச யோகம் என்று குறிப்பிடப்படுகின்றன. இவற்றைப் பற்றி தெளிவாகப் பார்ப்போம்.

ருச்சுக யோகம்

நவகிரகங்களில் அங்காரகன், மங்கள காரகன், பூமி காரகன் என பலவகையில் போற்றப்படும் செவ்வாய் பகவான் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ 1,4,7,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் ஏதாவது ஒன்றில் அமயப்பெற்றால் ருச்சுக யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு துணிவும், தைரியமும் சிறப்பாக இருக்கும். மிகச் சிறந்த கெட்டிக்காரர்களாக இரப்பார்கள். செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று பலமாக இருந்துவிட்டால் போலீஸ், ராணுவம் போன்ற துறைகளில் பெரிய பதவிகளை வகிக்க்கூடிய யோகமானது தேடிவரும்.

நல்ல கட்டமான உடலமைப்பு மற்றவர்களை கவரும்படி அமையும். நல்ல அறிவாற்றல், பேச்சுத் திறன் இருக்கும். கல்வியில் நல்ல ஈடுபாடு கொடுக்கும். குறிப்பாக நிர்வாக தொடர்புடைய கல்வியில் மேன்மை உண்டாகும்.

செவ்வாய், பூமி காரகன் என்பதால் செவ்வாய் பலம் பெற்றவர்களுக்கு பூமி, மனை சேர்க்கைகள் சிறப்பாக அமையும். செவ்வாய் பெண்களுக்கு களத்திர காரகன் என்பதால் பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் வலுப்பெற்று ருச்சுக யோகம் உண்டாகுமேயானால் நல்ல தேக ஆரோக்கியம், மண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் எதுவும் இல்லாமல் சிறப்புடன் செயல்படும் ஆற்றலை கொடுக்கும். பூமி, மனை போன்றவற்றால் லாபத்தை அள்ளி தருவது ருச்சுக யோகமாகும்.

ஹம்ச யோகம்

தனக்காரன், புத்திரகாரகன், மங்களகாரகன் என பல பெயர்களால் வர்ணிக்கப்படும் பொன்னவனான குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ 1,4,7,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் அமையப் பெற்றிருந்தால் ஹம்ச யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமைய பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியான மணவாழ்க்கையும், சிறப்பான வாழ்க்கைத் துணையும் அமையும். சுபகாரகனான குருபகவானே பலம் பெற்றிருப்பதால் சுமுதாயத்தில் பலர் போற்ற கூடிய அளவிற்கு பெயரும் புகழும் பெறுவார்கள். நல்ல தெய்வீக சிந்தனை, ஆண்மிக, தெய்வீகக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு, பலருக்கு எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்யும் நற்பண்புகள், நல்ல ஒழுக்கமான வாழ்க்கை சிறப்பாக அமையும்.

வேத சாஸ்திரங்களை கற்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். பிறருக்கு ஆலோசனைகள் வழங்கும் ஆற்றல், ஆசிரியர் பணி செய்யும் வாய்ப்பு உண்டாகும். பின்னால் நடக்கப் போவதைக் கூட முன் கூட்டியே அறியக்கூடிய ஞானம் இருக்கும். இவருடைய வார்த்தைகளுக்கு ஊரே கட்டுபடுமளவிற்கு சமுதாய உயர்வினைக் கொடுக்கும். குரு தனக்காரகன் என்பதால் ஹம்ச யோகம் பெற்றவர்களுக்கு பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம், வெளிவட்டார தொடர்புகளில் பெயர் புகழ் உயரும் யோகம் உண்டாகும். குரு புத்திர காரகனானவும் இருப்பதால் ஹம்ச யோகம் பெற்றவர்களுக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். பிள்ளைகளால் நல்ல அனுகூலமானப் பலன்களை அடையும் வாய்ப்பு உண்டாகும். பணபுழக்கம் அதிகமுள்ள இடங்களில் உயர்வான பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும். கமிஷன், ஏஜென்ஸி, வட்டித் தொழில் போன்றவற்றில் ஈடுபடக்கூடிய யோகமும் அவற்றால் நல்ல அனுகூலங்களும் உண்டாகும். பெரியோர்களின் நட்பும், ஆன்றோர் சான்றோர்களின் ஆசி போன்றவை யாவும் ஹம்ச யோகம் பெற்றவர்களுக்கு சிறப்பாக அமையும்.

பத்திர யோகம்

கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சிமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை யாவும் அமையும். கற்றவர்களின் சபையில் ஒரு முக்கியமான பங்கு  வகிப்பவராக இருப்பார். பலருக்கு ஆலோசனை வழங்கும் திறன் இருக்கும். தன்னுடைய பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து விடுவார், கல்வி அறிவு மிகச் சிறப்பாக இருக்கும்,  கணிதத்தில் மேதையாக இருப்பார். பேச்சால், வாக்கால் முன்னேற்றம் ஏற்படும். வக்கீல் பணியில் திறமைசாலியாக இருப்பார். சமுதாயத்தில் மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய அளவிற்கு உன்னதமான நிலை உண்டாகும். நீண்ட ஆயுளையும் அற்புதமான ஆரோக்கியத்தையும் அழகான உடலமைப்பையும் பத்திர யோகம் கொடுக்கும். சகல கலைகளையும் கற்று தேறக்கூடிய ஆற்றல் உண்டாகும்.  வாக்கு சாதுர்யமும், கற்பனை திறனும் உண்டாகும் என்பதால் கலைத்துறையில் பெரிய இடத்தை பிடிக்கும் வாய்ப்பு  அமையும்.
புதன பகவான் பலம் பெற்று பத்திர யோகம் உண்டாகி இருந்தால் நல்ல உடல் ஆரோக்கியமும், ரத்த ஓட்டமும் உண்டாகி உடல் நிலை சிறப்பாக இருக்கும்.


மாளவியா யோகம்

அசுரகுரு, களத்திர காரகன், சுக காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சுக்கிர பகவான் ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானமான 1,4,7,10 ல் அமையப் பெற்றால் மாளவியா யோகம் உண்டாகிறது. மாளவியா யோகம் அமையப் பெற்றவர்களுக்கு  சிறப்பான மண வாழ்க்கை அமைந்து தாம்பத்திய வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு உயர்வடையும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கைகளும் குடும்பத்திற்கு தேவையான அதி நவீன பொருட்களின் சேர்க்கைகளும் சிறப்பாக அமையும். ஆடம்பரமான வாழ்க்கை, வாசனை திரவியங்களில் ஆர்வம் உண்டாகும்.  பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் அனுகூலம் சிலருக்கு பெண்களாலேயே உயர்வு உண்டாகும்.

சந்திரனின் சேர்க்கையுடன் சுக்கிரன் இருந்தால் கலை, இசைத் துறைகளில் அதிக ஈடுபாடும் அதன்மூலம் வாழ்வில் உயர்வும் உண்டாகும். வண்டி, வாகனச் சேர்க்கை, சுகவாழ்வு, சொகுசு வாழ்வு போன்ற யாவும் மாளவியா யோகம் அமையப் பெற்றவர்களுக்கு மிகச் சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும்.

சச யோகம்

ஆயுள்காரகன், ரவி புத்ரன், ஜடாதரன் என அழைக்கப்படக்கூடிய சனி பகவான் ஆட்சியோ உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ 1,4,7,10 ஆகிய ஸ்தானங்களில் அமைந்திருந்தால் சச யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு நீணட ஆயுள், நல்ல ஆரோக்கியம், திடகாத்திரமான உடல் அமைப்பு யாவும் உண்டாகும்.  அரசாங்க வழியில் உயர்பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் அமையும். பல வேலையாட்களால் வாழ்வில் உயரக்கூடிய யோகம்  உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து வாழ்வில் ஏற்றம் பெறும் ஆற்றலைக்கொடுக்கும். வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம், இரும்பு சம்பந்தப்பட்ட துறைகளில் முன்னேற்றம் கொடுக்கும். சமுதாயத்தில் கௌரவமான நிலையை உண்டாக்கும். நல்ல குடும்ப வாழ்க்கையும், மனைவி பிள்ளைகளால் அனுகூலங்களும் குடும்பத்தில் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை யாவும் சிறப்பாக அமையும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001

Saturday, February 18, 2012

பயணங்கள் செல்லக் கூடிய யோகம்


ஒவ்வொருவரின் வாழ்விலும் பயணங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. வேலை வாய்ப்பிற்காகவும் வசதிகளை பெருக்கிக் கொள்வதற்காகவும் மனிதன் வாழ்நாள் முழுவதும் மேற்கொள்ளும் பயணங்கள் எண்ணிலடங்காதவை. பள்ளி சொல்லும் காலங்கள் தொட்டு நம்முடைய இறுதிக் காலங்கள் வரை பயணம், பயணம், பயணம் தான். பிறந்த ஊரை விட்டு வெளியூர்களில் வாழ்வதும்,வெளிநாடுகளில்  வாழ்வதும் பயணங்கள் மூலம் தான். அடிக்கடி வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று வருபவர்களும் ஏராளம். பயணங்களால் நம்முடைய நாட்டின் வருமானமும் அதிகமாகிறது. அடிக்கடி பயணங்கள் மேற்கொளளக்கூடிய வாய்ப்புகள், யோகங்கள் ஜோதிட ரீதியாக யாருக்கு உண்டாகும் என ஆராய்ந்தால்...

நவகிரகங்களில் சந்திரன் பயணங்களுக்கு காரகனாகிறார். சந்திரனுடைய திசை அல்லது புக்தி நடைபெறுகின்ற  காலங்களில்தான் பயணங்கள் அதிகமாக மேற்கொள்ள நேரிடுகிறது. சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்று நட்பு வீட்டில் சுபகிரக பார்வையுடனிருந்தால் பயணங்களால் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும்.  குறிப்பாக ராசிக்கட்டத்தில் உள்ள 12 வீடுகளில் 3,6,9,12 ம் வீடுகளைக் கொண்டு பயணங்களை நிர்ணயம் செய்யலாம். 3,6 ம் வீட்டைக் கொண்டு குறுகிய பயணங்களையும், 9,12ம்  வீடுகளைக் கொண்டு வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய பயணங்களையும் பற்றி அறியலாம். 3ம்  அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்று கேந்திரதிரி கோணங்களில் சுபர் சேர்க்கையுடன் இருந்தால் அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள கூடிய  வாய்ப்பினை உண்டாக்கும். 3ம்  அதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி குரு, சுக்கிரன், சந்திரன், புதன், சூரியன், போன்ற கிரகங்கள் பார்வை செய்தால் அடிக்கடி பயணங்களும், அதன் மூலம் பொருளாதார மேன்மைகளும் உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 9,12 க்கு அதிபதிகள் இணைந்தோ, பரிவர்த்தனைப் பெற்றோ அமைந்திருந்தால் வெளியூர் வெளிநாட்டுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். 9,12 க்கு அதிபதிகள் இணைந்து, ஜல ராசிகள் என வர்ணிக்கப்படக்கூடிய கடகம், விருச்சிகம்,மீனத்தில் அமைந்தாலும், கடகம் விருச்சிகம் மீனம் ஆகியவை 9,12 ம் வீடுகளாக அமைந்து அதில் சந்திரன் அமையப் பெற்றாலும் வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ள கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அதிலும் குறிப்பாக 9,12 ல் சனி ராகு போன்ற கிரகங்கள் சுபர் பார்வையுடன் அமையப் பெற்று சுப ஆதிபத்யம் பெற்றிருந்தால் கடல் கடந்து அயல் நாடுகளுக்கு செல்லக்கூடியயோகம், பயணங்களால் அனுகூலம் உண்டாம்.

9,12 ல் ராகு அமையப் பெற்றாலும் 9,12 ம் அதிபதிகளுடன் ராகு இணைந்திருந்து ராகு திசை நடைபெற்றாலும் வெளியூர், வெளிநாடுகளுக்கு  பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். 9,12 க்கு அதிபதிகள் 6 ம் வீட்டில் அமையப் பெற்று திசை நடைபெற்றாலும் அனுகூலமான பயணங்கள் ஏற்படும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001

Friday, February 17, 2012

சொந்த வீடு யோகம்


சொந்த வீட்டில் வாழ்வதென்பதே ஒரு தனி மகிழ்ச்சிதான். எலி வலை என்றாலும் தனி வலை வேண்டும் என்பார்கள். அதுபோல நமக்கென ஒரு வீடு இருப்பதென்பது மனநிறைவை  தரக்கூடியதுதானே. தற்போதுள்ள சூழ்நிலையில் சொந்த வீடு என்பது எட்டாக்கனியாக இருக்கின்றது. நீர்நிலைகளில்  வீட்டை கட்டிக் கொண்டு, மழைக்காலத்தில் வீட்டுக்குள் தண்ணீர் வந்து விட்டது என புலம்புவது என்ன நியாயம்.

நம் முன்னோர்கள் நமக்காக எவ்வளவுதான் சேர்த்து வைத்திருந்தாலும் நம்முடைய சொந்த சம்பாத்தியத்தில் சொந்தமாக வீடு கட்டி தரையில் கை, கால் நீட்டி படுக்கும் சுகம் இருக்கிறதே அப்பப்பா வாழ்க்கையில் பெரிய அளவில் சாதித்து விட்ட பெருமையும், மன நிறைவும் பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அப்படி வீடு கட்டி வாழ்வதற்கும் ஒரு யோகம் வேண்டுமல்லவா. அந்த யோகத்தை அடைய நாம் பிறக்கும் போதுள்ள கிரக நிலைகளானது சாதகமாக இருந்து விட்டால் போதும். சொந்த வீடு, மனை, பூமி யோகங்களானது சிறப்பாக அமையும்.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 4ம் வீட்டைக் கொண்டு அவருக்கு உண்டாகக்கூடிய வீடு, மனை யோகத்தைப் பற்றி தெளிவாக  அறியலாம். 4ம் வீட்டதிபதி ஆட்சியோ, உச்சமோ பெற்று கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்றிருந்தாலும், கேந்திர திரிகோணாதிபதிகளின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் பூமி, மனை, வீடு, மனை காராகனாகவும், சுக காரகனாகவும் விளங்கும் சுக்கிரனும், பூமிகாரகனான செவ்வாயும் பலம் பெற்று அமைந்து 4ம் அதிபதியின் சம்மந்தமுடன் இருந்தால் வீடு, மனை வாங்கக்கூடிய யோகமும், அதிர்ஷ்டமும் உண்டாகும்.

அது போல பூர்வ புண்ணிய ஸ்தானங்களான 5,9 க்கு அதிபதிகளுடன் 4ம் அதிபதி சம்மந்தப்பட்டிருந்தாலும், சுப ஸ்தானங்களான 2,11 க்கு அதிபதிகளுடன் 4ம் அதிபதியின் சேர்க்கை இருந்தாலும் சொந்த வீடு, மனை, பூமி யோகங்களானது மிகவும் சிறப்பாக அமையும். 4ம் வீட்டில் எத்தனை சுபகிரகங்கள் அமைந்தாலும், 4ம் வீட்டை எத்தனை சுப கிரகங்கள் பார்வை செய்தாலும், 4ம் அதிபதியுடன் எத்தனை சுபகிரகங்களின் சேர்க்கை இருந்தாலும் அத்தனை வீடு, மனை வாங்கும் யோகங்களானது அமைந்து அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். 4ம் அதிபதியையும், 4ம் வீட்டையும் குரு பார்வை செய்தாலும் வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001

Thursday, February 16, 2012

நீசபங்க ராஜயோகம்

ஒருவர் வளமான வாழ்க்கை வாழ்வதற்கும், பல அதிர்ஷ்டங்களை அடைவதற்கும், ஜெனன ஜாதகத்தின் கிரக நிலைகள் பலமாக இருப்பது அவசியம். அதுவே கிரகங்கள் பலமிழந்து இருப்பது நல்லதல்ல. ஒரு கிரகம் தனது பலவீன ஸ்தானமான நீச ஸ்தானத்தில் இருப்பது, அந்தக் கிரகத்தின் காரகத்துவத்தையும், அந்தக் கிரகம் எந்த வீட்டின் அதிபதியாக இருக்கிறதோ அந்த வீட்டின் பலனையும் பாதிக்கும் என்றாலும், நீசபங்கம் பெற்று நீசபங்க ராஜயோகம் உண்டாகி இருந்தால் முதலில் கெடுபலன்களை ஏற்படுத்தினாலும் அதன் பிறகு பெரிய அளவில் அதிர்ஷ்டமும் யோகமும் உண்டாகும்.

ஒரு கிரகம் நீசம் பெற்றாலும் அந்தக் கிரகம் நின்ற வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ, கேந்திர ஸ்தானங்களான 1,4,7,10ல் அமைந்திருந்தாலும் நீசம் பெற்ற கிரகத்துடன் ஒரு உச்ச கிரகம் இருந்தாலும், நீசம் பெற்ற கிரகம் ராசி சக்கரத்தில் பரிவர்த்தனை பெற்றோ, அம்ச சக்கரத்தில் ஆட்சி உச்சம் பெற்றோ இருந்தால் நீசபங்க ராஜயோகம் உண்டாகிறது.

உதாரணமாக, தந்தை காரகனான சூரியன் நீசம் பெற்றிருந்தால், அந்த குழந்தை பிறக்கின்ற போதே தந்தைக்கு பாதிப்புகள் ஏற்படும். அதுவே நீசபங்க ராஜயோகம் உண்டாகி இருந்தால் பாதிப்புகள் விலகி பின்பு நல்லது நடக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில்  திருமணத்தைக் குறிக்கக்கூடிய ஸ்தானம் 7ம் வீடாகும். 7ம் அதிபதி நீசம் பெற்று பங்கம் அடைந்திருந்தால், அந்த ஜாதகருக்கு திருமண வாழ்க்கை அமையும் போது சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் விலகி பின்பு நல்லது நடக்கும்.

அது போல ஒருவர் ஜாதகத்தில் 5ம் அதிபதியோ, குருவோ நீசபங்கம் பெற்றிருந்தால் முதலில் ஒரு கருசிதைவு ஏற்பட்டு அதன் பின்பு குழந்தை யோகம் உண்டாகும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001

Wednesday, February 15, 2012

நவீன பொருட்களை வாங்கி அனுபவிக்கும் யோகம்

இந்த நவீனகரமான உலகில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்பாதவர் யார்? வீட்டில் உபயோகப் படுத்தும் பொருட்கள் முதல் வீடு கட்டும் பொருட்கள் வரை எல்லாமே நவீனகரமாக கிடைக்கின்றன. நகரங்களில் வசிக்கும் நடுத்தர் வர்க்கத்தினர் கூட ஏசி இல்லாமல்  இன்று வாழ முடிகிறதா? ஐஸ்வாட்டர் இல்லாமல் தாகம் தணிகிறதா? படுக்கும் கட்டில் முதல் தரையில் பதிக்கும் கற்கள் வரை பார்த்து பார்த்து நவீனகரமானதாக வாங்கி உபயோகிக்க அல்லவா ஆசைப்படுகிறோம்.

சுகபோக வாழ்க்கை வாழ்வதே ஒரு யோகம் தானே. நவீன கரமான பொருட்களை வாங்கி உபயோகித்து சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கும் ஒருவரின் ஜாதகமானது பலமாக அமைந்திருக்க வேண்டும். குறிப்பாக 4ம் வீடும் 4ம் அதிபதியும் சுக்கிரனும் பலம் பெறுவது மிகவும் அவசியம். அதிலும் சுக்கிரனும், 4ம் வீடும் பலம் பெறுவது மட்டுமின்றி சுபர் சேர்க்கைப் பெற்றிருப்பது நல்லது.

சுகவாழ்வு, சொகுசு வாழ்வு ஸ்தானமான 4ல் சுபகிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், சுபர் சேர்க்கைப் பெற்ற புதன் அமைவதும் அல்லது 4ம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றிருப்பதும், சுகவாழ்வையும், நவீன பொருட்களை அனுபவிக்கும் யோகத்தையும் கொடுக்கும்.

4ம் வீட்டையும், 4ம் அதிபதியையும் சுபகிரகங்கள் பார்வை செய்வது நல்லது. அதுபோல 4ம் அதிபதியும், சுக்கிரனும், சுபகிரகங்களின் நட்சத்திரங்களில் அமைவதும் சிறப்பாகும். அதாவது பரணி, ரோகினி, புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கோட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி ஆகிய சுபகிரக நட்சத்திரங்களில் அமைவது மூலமாக சொகுசான வாழ்க்கை நவீன பொருட்களை அனுபவிக்கும் யோகம் உண்டாகும்.

4 ம் வீட்டில் பாவகிரகங்கள் அமைந்தாலும், 4ம் வீடு பாவ கிரகங்களின் வீடாக இருந்தாலும்,4ம் அதிபதி பாவ கிரக நட்சத்திரங்களில் அமைந்திருந்தாலும், ஒருவருக்கு எவ்வளவு தான் சொத்துக்கள் இருந்தாலும், நவீனகரமான பொருட்களை வாங்க தடை மற்றும் நவீன பொருட்களை வாங்கி அனுபவிக்க தடை, இடையூறு போன்றவை உண்டாகும். அதிலும் குறிப்பாக சனி, ராகு கேதுவின் ஆதிக்கம் 4ம் வீட்டிற்கோ, சுக்கிரனுக்கோ, இருந்தால் நவீன பொருட்களை அனுபவிக்க தடங்கல்கள் ஏற்படும். சூரியன் செவ்வாய் பாவகிரகம் என்றாலும், சுபகிரக சேர்க்கை, சுபகிரக நட்சத்திரத்தில் அமையப் பெற்றால் நவீன பொருட்களை வாங்கி அனுபவித்து சுகவாழ்வு, சொகுசுவாழ்வை வாழ முடியும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001

Tuesday, February 14, 2012

தாமத அதிர்ஷ்டத்தைத் தரும் கால சர்ப யோகம்

தாமத அதிர்ஷ்டத்தைத் தரும் கால சர்ப யோகம்
என்னதான் முழு முயற்சியுடன் பாடுபட்டு உழைத்தாலும் ஒரு சிலரால் முன்னேற்றமான நிலையினை அடையவே முடியாது. அப்படி கஷ்டப்படும் ஒருவர் 30 வயதுக்கு மேல் திடீரென உயர்வுகளை அடைவார். இளமைக் காலத்தில் கஷ்டங்களையே அனுபவித்து அனுபவித்து மனம் வெறுக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஆளான ஒருவர் வாழ்க்கையில் திடீரென்று உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார். எப்படி இருந்தவன் இப்படி உயர்ந்து விட்டானே என பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு உயர்வுகள் உண்டாகும்.

இளம் வயதில் ஏன் கஷ்டப்பட்டார், 30 வயதுக்கு மேல் எப்படி வாழ்க்கையில் உயர்ந்தார்? என தெரிந்து கொள்ள, அப்படி முன்னேற்றமடைந்த ஒருவரின் ஜாதகத்தை ஆராய்ந்தோமானால், அவளுக்கு கால சர்ப்ப தோஷம் உண்டாகி இருக்கும். கால சர்ப தோஷமானது 30 வயதுக்கு மேல் யோகமாக மாறி அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். ராகு கேது பிடிக்குள் அனைத்து கிரகங்களும் அமைந்திருப்பது கால சர்ப யோகமாகும். ராகு, கேது பிடிக்குள் அனைத்து கிரகங்களும் இல்லாமல் ஓரிரு கிரகங்கள் தனித்து வெளியே அமைந்தாலும் 80% அது  காலசர்ப தோஷமாகவே கருதப்படுகிறது. ராகு, கேது பிடிக்குள் இல்லாமல் தனியே வெளியில் அமைந்திருக்கும் கிரகங்கள் ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயத்திலோ, கேதுவின் நட்சத்திரங்களான  அஸ்வினி, மகம், மூலத்திலோ இருந்தாலும் இதுவும் காலசர்ப தோஷமே ஆகும்.
கால சர்ப தோஷம் அமையப் பெற்றவர்களுக்கு திருமண நடைபெற தடை, புத்திர பாக்கியம் அமைய தாமதம், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, உத்தியோக உயர்வுகளுக்குத் தடை, தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமற்ற நிலை, எதைத் தொட்டாலும் சிக்கல்கள் பிரச்சினைகள் போன்றவை 30 வயது வரை ஏற்பட்டு வாழ்வில் முன்னேற்றமடைய தடைகளைக் கொடுக்கும்.
முப்பது வயதுக்கு மேல் தோஷமானது யோகமாக மாறி வாழ்வில் எல்லையில்லா வளர்ச்சியைக் கொடுக்கும். எதிர்பாராத வகையில் உயர்வுகளும் உண்டாகும். வாழ்க்கை நிலையே மாறி, எடுக்கும்  காரியங்கள் அனைத்திலும் வெற்றியும், செல்வம், செல்வாக்கு உயர்வும், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலையினையும் உண்டாக்கும். தொட்டதெல்லாம் துலங்கி வாழ்வில் யோகமும் அதிர்ஷ்டமும் உண்டாகி பெயர், புகழ் யாவும் உயரும்.
ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Monday, February 13, 2012

அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் கேந்திர திரிகோண ஸ்தானங்கள்

அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் கேந்திர திரிகோண ஸ்தானங்கள்
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற்றமடைவதற்கும், சுக வாழ்க்கையை வாழ்வதற்கும அல்லும் பகலும் அயராது பாடுபடுகிறார்கள். தற்போதைய மக்கள் தொகை பிரச்சினைகளால் எல்லாப் பொருட்களின் விலை உயர்ந்து இருப்பதால், அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதற்குக்கூட அரும்பாடு பட வேண்டி இருக்கிறது. சேமிப்பு என்பது இயலாத காரியமாகவே உள்ளது.  இந்த நிலையில்  செல்வச் செழிப்போடு வாழக்கூடிய யோகம் என்பது எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. ஒருவர் செல்வச் செழிப்போடு வாழ்வதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும். பிறக்கும்போதே  வசதியுள்ளவராய் பிறந்து விட்டால் பூர்வீக வழி புண்ணியங்களால்  சொகுசான வாழ்க்கை அமைகிறது. அதுவே சுயமாக சம்பாதித்து வாழ்வதற்கும் சேமிப்புகளை வைத்திருப்பதற்கும் அவரவரின் ஜனன ஜாதக கிரக நிலைகள் பலமாக இருந்தால் மட்டுமே முடிகிறது.
ஜனன ஜாதகத்தில் உள்ள  ஸ்தானங்களில் சில ஸ்தானங்கள் யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஸ்தானமாக விளங்குகிறது. ஒருவரது ராசிக்கட்டத்தில் 1,4,7,10 ம் வீடுகள் கேந்திர ஸ்தானங்களாகவும் 1,5,9ம் வீடுகள் திரிகோண ஸ்தானங்களாகவும் விளங்குகிறது. கேந்திர ஸ்தானங்களான  1,4,7,10 ல் 1 ஐ விட 4ம், 4 வை விட 7ம் 7ஐ விட 10ம் பலம் வாய்ந்ததாக உள்ளது. அதுபோல திரிகோண ஸ்தானங்களான 1,5,9 ல் 1ஐ விட 5ம், 5 ஐ விட  9ம் பலம் வாய்ந்த ஸ்தானங்களாக உள்ளது.
மேற்கூறிய ஸ்தானங்களில் கேந்திர ஸ்தானங்களில் பாவ கிரகங்கள் பலம் பெறுவது சிறப்பு. சுப கிரகங்கள் கேந்திர ஸ்தானங்களில் அமையப் பெறும்போது அந்த வீடானது, அந்த கிரகத்தின் சொந்த வீடாக இல்லாமல் இருப்பது சிறப்பு. ஏனென்றால் அங்கே கேந்திராதிபதி தோஷம் உண்டாகி நற்பலன்களை அடைவதற்கு இடையூறு உண்டாகிறது. ஸ்தானங்களிலேயே திரிகோண ஸ்தானங்கள் பலம் மிக்கதாகும். திரிகோண ஸ்தானங்களில் கிரகங்கள் அமையப் பெறுவதே சிறப்பான அமைப்பாகும்.
ஒருவரது வாழ்வில் யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் அடைவதற்கு கேந்திராதிபதியும், திரிகோணாதிபதியும் இணைவது சிறப்பு. கேந்திர திரிகோண ஸ்தானாதிபதிகள் இணைந்து கேந்திர ஸ்தானத்திலோ, திரிகோண ஸ்தானத்திலோ அமைவது மிகவும் சிறப்பு.
கேந்திர ஸ்தானங்களான 1,4,7,10 க்கு அதிபதிகளும், திரிகோண ஸ்தானங்களான 1,5,9 க்கு அதிபதிகளும் ஒருவருக்கொருவர் இடம் மாறி பரிவர்த்தனை பெற்று கொள்வதும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதும் சிறப்பான அமைப்பாகும். மேற்கூறியவாறு கேந்திர திரிகோணாதிபதிகளின் சேர்க்கை உண்டாகி. அக்கிரகங்களின் திசை அல்லது புக்தி நடைபெற்றால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அடைந்த செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் போன்றவற்றுடன் சிறப்பாக வாழக்கூடிய யோகம் உண்டாகும்.

மேற்கூறிய கிரகச் சேர்க்கைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது 9,10 க்கு அதிபதிகளின் சேர்க்கையாகும். ஒருவர் ஜாதகத்தில் 9,10 க்கு அதிபதிகள் அத்துடன் 4 அல்லது 5 க்கு அதிபதி இணைவது மிகவும் சிறப்பாகும். அதுபோல 4,5 க்கு அதிபதிகள் இணைந்து பலம் பெறுகின்றபோது சகலவிதமான அதிர்ஷ்டங்களையும்அடையும் யோகம் உண்டாகும்.
கேந்திர திரிகோணதிபதிகள் இணைகின்ற போது அந்த கிரகங்களாக  நட்பு கிரகங்களாக அமைந்து விட்டால் அந்த கிரக சேர்க்கையால் உண்டாகக்கூடிய யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் வர்ணிக்கவே முடியாது.

Sunday, February 12, 2012

தாமத அதிர்ஷ்டத்தைத் தரும் கால சர்ப யோகம்

என்னதான் முழு முயற்சியுடன் பாடுபட்டு உழைத்தாலும் ஒரு சிலரால் முன்னேற்றமான நிலையினை அடையவே முடியாது. அப்படி கஷ்டப்படும் ஒருவர் 30 வயதுக்கு மேல் திடீரென உயர்வுகளை அடைவார். இளமைக் காலத்தில் கஷ்டங்களையே அனுபவித்து அனுபவித்து மனம் வெறுக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஆளான ஒருவர் வாழ்க்கையில் திடீரென்று உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார். எப்படி இருந்தவன் இப்படி உயர்ந்து விட்டானே என பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு உயர்வுகள் உண்டாகும்.

இளம் வயதில் ஏன் கஷ்டப்பட்டார், 30 வயதுக்கு மேல் எப்படி வாழ்க்கையில் உயர்ந்தார்? என தெரிந்து கொள்ள, அப்படி முன்னேற்றமடைந்த ஒருவரின் ஜாதகத்தை ஆராய்ந்தோமானால், அவளுக்கு கால சர்ப்ப தோஷம் உண்டாகி இருக்கும். கால சர்ப தோஷமானது 30 வயதுக்கு மேல் யோகமாக மாறி அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். ராகு கேது பிடிக்குள் அனைத்து கிரகங்களும் அமைந்திருப்பது கால சர்ப யோகமாகும். ராகு, கேது பிடிக்குள் அனைத்து கிரகங்களும் இல்லாமல் ஓரிரு கிரகங்கள் தனித்து வெளியே அமைந்தாலும் 80% அது  காலசர்ப தோஷமாகவே கருதப்படுகிறது. ராகு, கேது பிடிக்குள் இல்லாமல் தனியே வெளியில் அமைந்திருக்கும் கிரகங்கள் ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயத்திலோ, கேதுவின் நட்சத்திரங்களான  அஸ்வினி, மகம், மூலத்திலோ இருந்தாலும் இதுவும் காலசர்ப தோஷமே ஆகும்.

கால சர்ப தோஷம் அமையப் பெற்றவர்களுக்கு திருமண நடைபெற தடை, புத்திர பாக்கியம் அமைய தாமதம், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, உத்தியோக உயர்வுகளுக்குத் தடை, தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமற்ற நிலை, எதைத் தொட்டாலும் சிக்கல்கள் பிரச்சினைகள் போன்றவை 30 வயது வரை ஏற்பட்டு வாழ்வில் முன்னேற்றமடைய தடைகளைக் கொடுக்கும்.

முப்பது வயதுக்கு மேல் தோஷமானது யோகமாக மாறி வாழ்வில் எல்லையில்லா வளர்ச்சியைக் கொடுக்கும். எதிர்பாராத வகையில் உயர்வுகளும் உண்டாகும். வாழ்க்கை நிலையே மாறி, எடுக்கும்  காரியங்கள் அனைத்திலும் வெற்றியும், செல்வம், செல்வாக்கு உயர்வும், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலையினையும் உண்டாக்கும். தொட்டதெல்லாம் துலங்கி வாழ்வில் யோகமும் அதிர்ஷ்டமும் உண்டாகி பெயர், புகழ் யாவும் உயரும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001

Saturday, February 11, 2012

ஆபரண யோகம்


ஆபரணங்களை விரும்பாதவர் யார். ஆணானாலும் பெண்ணானாலும் அணிகலன்கள் மீதும் ஆபரணங்கள் மீது ஆசை உடையவராகத்தான் இருக்கிறார்கள். பெண்ணிற்கு பொன் நகை வேண்டாம். புன்னைகையே போதும் என்ற காலமெல்லாம் போயே போச்சு. பெண் பார்க்கும் படலத்தில்கூட பெண்ணை பிடிக்கிறதோ இல்லையோ, முதலில் எத்தனை சவரன் பொன் போடுவார்கள் என்று  தான் கேட்கிறார்கள். அழகும், கலரும் குறைவாக இருந்தாலும் அதற்கு ஈடாக ஒரு ஐந்து சவரன் அதிகமாக போட்டால் போதும்.

இப்பொழுதெல்லாம் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் பறந்து கொண்டு இருப்பதால், மக்கள் தங்களின் முதலீட்டை பொன்னில் போட விரும்புகிறார்கள். ஆண்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன? நகை போட்டுக் கொள்வதில் நடமாடும் நகைக் கடையாகவே ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பொன்னை வைத்த இடத்தில் எல்லாம் பூவை வைத்து பார்ப்பதென்பதெல்லாம் தற்போது நடக்காத கதை. பொன்னை வைக்கும்  இடத்தில் கட்டி கட்டியாக தங்கத்தை வைத்து பார்க்க ஆசைப்படுகிற நிலைமை வந்து விட்டது. மனிதனுக்கு மதிப்பு இருக்கிறதோ இல்லையோ அணிந்திருக்கும் ஆபரணங்களுக்கு அதிக மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறார்கள். வசதியே இல்லாதவர்கள் கூட  பத்து சவரன்களுக்கு கம்மியாக வைத்திருப்பது இல்லை. நகைகளைப் போட்டு பார்த்து அனுபவிக்கும் யோகம் அனைவருக்கும் அமைகிறதா, என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். கடனை வாங்கி தன் மகளுக்கு பத்து சவரன் போட்டு கட்டிக் கொடுத்தால் முன்றாவது நாளே அவற்றை அடமானகடைகளில் வைக்கும் கணவன் மார்கள் எத்தனையோ பேர். அப்படி என்றால் அவர்களுக்கு அந்த நகைகளை போட்டு அனுபவிக்கும்  யோகம் இல்லை என்றுதானே கூற வேண்டும்.  பொன் ஆபரணங்களை அதிகம் வாங்கி அனுபவிக்கும் யோகம் யாருக்கு அமைகிறது என்று பார்ப்போமா?

ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் பலமாக அமைந்திருப்பது யோகத்தை ஏற்படுத்தும். அணிகலன்கள், பொன் ஆபரணங்களை அனுபவிக்கக்கூடிய யோகம், அதிர்ஷ்டம் யாருக்கு ஏற்படும் என பார்த்தால், சுக்கிரனும் குருவும் பலமாக அமையுப் பெற்றவர்களுக்குத்தான் உண்டாகும்.

சேமிப்பு என்பது  வீடு, மனை மட்டுமின்றி ஆபரணங்களை வாங்கிக் சேர்ப்பதும் ஒரு சேமிப்புதான். இப்படிப்பட்ட சேமிப்புகள் பலமாக இருக்க ஒருவரின் ஜாதகத்தில் 4ம் அதிபதியும், 4ம் வீடும் பலம் பெறுவது மட்டுமின்றி, 4ல் குரு, சுக்கிரன் அமையப் பெற்றாலும், 4ம் அதிபதிக்கு குரு, சுக்கிரன், சந்திரன், புதன் போன்ற சுபகிரகங்களின் தொடர்பு இருந்தாலும் பொன், பொருள், ஆபரண சேர்க்கை, சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.

ஒருவரின் ஜாதகத்தில் 3ம் அதிபதியானவர் குரு வீட்டிலோ, சுக்கிரன் வீட்டிலோ அமைந்திருந்தாலும், 3ல் குரு, சுக்கிரன் அமைந்து பலம் பெற்று, சுபர் பார்வையுடன் இருந்தாலும், ஜென்ம லக்னத்திற்கு 3ம் அதிபதி 8ம் அதிபதியுடன் இணைந்து பலம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தாலும், 3,8 க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும், ஆபரணங்கள் மீது ஆசை கொண்டவர்களாகவும், ஆபரணங்களை வாங்கி அனுபவிக்கக்கூடியவர்களாகவும் இருப்பர். 3ம் அதிபதி பலம் பெற்று இருந்து சுபர் பார்வையுடன் இருந்தால் ஆபரண சேர்க்கைகளும் அவற்றை அனுபவிக்கும் யோகமும் உண்டாகும். 3ல் சந்திரன் அமைவது, 5ல் குரு அமைவது, 8ம் அதிபதி ராகு சேர்க்கைப் பெற்று 9 ல் அமைவது போன்றவற்றால் ஆபரண சேர்க்கைகளையும் நவரத்தினங்கள் அணியும் யோகத்தையும் கொடுக்கும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Friday, February 10, 2012

கல்வி யோகம்


ஒரு குழந்தையானது பூமியில் பிறந்தவுடன், அக்குழந்தையின் தாய், தந்தையருக்கு குழந்தையை வளர்த்தெடுக்கும் கடமையானது தொடங்கிவிடுகிறது. நம் குழந்தை என்னவாக ஆகவேண்டும் என கனவு காண ஆரம்பிக்கிறார்கள். அந்த குழந்தை உயர்ந்த நிலையை அடைய முதல் அடிப்படைத் தேவையாக கல்வி அமைகிறது.

பழங்காலங்களில் நெல் மணியை தரையில் கொட்டி அ, ஆ எழுத சொல்லிக் கொடுத்தவர்கள், அடுத்து கரும்பலகைகளில் எழுதி படிக்கக் கற்று கொடுத்தார்கள். வலது கையை தலைக்கு மேல் கொண்ட வந்து இடது காதை தொட்டால்தான் பள்ளியில் சேர்த்துக் கொள்ளும் நிலைகள் போய் பால் மணம் மாறாத பச்சிளங் குழந்தைகளை இரண்டரை வயது முதலே பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து, இவன் டாக்டராக வேண்டும், வக்கீலாக வேண்டும், எஞ்சினியராக வேண்டும் என குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே பெற்றோர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். 10ம்  வகுப்பு வரை சமமாக செல்லும் காலங்கள், 11ம் வகுப்பு வரும் முதலே எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ள கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. அப்படி கஷ்டப்பட்டு தன் மகனை என்ன படிக்க வைக்கலாம், எதில் கொண்டு சென்றால் இவன் முன்னேற்றமடைவான் என ஆராயும் பெற்றோர்களுக்கு இதே சில டிப்ஸ்.

நவகிரகங்களில் கல்வி காரகன் புதன் பகவானாவார். ஒரு குழந்தையானது தனது அடிப்படை ஆரம்ப கல்வியில் காலடி எடுத்து வைக்க அக்குழந்தையின் ஜெனன ஜாதகத்தில் 2ம் வீடானது பலமாக இருத்தல் அவசியம். 2ம் வீடானது பலமாக இருந்தால் குழந்தை எந்த தடைகளும் இன்றி அடம்பிடிக்காமல் அழாமல் பள்ளிக்கு செல்லும். அதுவே 2ம் வீட்டிற்கு பாவ கிரக சம்மந்தம் ஏற்பட்டிருந்தால் குழந்தை அடிப்படை கல்வியிலேயே பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 4ம் வீட்டைக் கொண்டு அந்தக் குழந்தையின் மேல்நிலைக் கல்வியைப் பற்றி அறியலாம். 4ம் வீடானது பலமாக இருந்து விட்டால் அக்குழந்தையின் மேற்கல்வியில் தடைகள் இல்லாமல் இருக்கும். அதுவே 4ம் வீட்டிற்கு பாவகிரக சம்மந்தம் ஏற்பட்டிருந்தால் கல்வியை  பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை, கல்வியில் ஈடுபாடற்ற நிலை போன்றவற்றால் கல்வி நிலை பாதிப்படையும். 5ம் வீடானது உயர்கல்வி, பட்டயக் கல்வி பற்றி குறிப்பிடக்கூடிய ஸ்தானம் என்பதால் 5ம் வீடானது பலமாக இருந்தால் ஏதாவது ஒரு துறையில் சாதனைகள், ஆராய்ச்சிகள் செய்யக்கூடிய யோகம் அமையும்.

ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து, அதன் கல்வியும் தரமானதாக, சிறப்பாக அமைய, அக்குழந்தையின் ஜெனன ஜாதகத்தில் 2,4,5 ஆகிய வீடுகள் பலம் பெற்றிருப்பது மிகவும் அவசியமாகும். அதுபோல  கல்வி காரகன் புதனும் பலமாக இருத்தல் மிகமிக அவசியம்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001

Thursday, February 9, 2012

தாராள பணவரவை ஏற்படுத்தும் கிரக அமைப்பு

மனிதன் பிறப்பது முதல் இறப்பது வரை பணத்தின் தேவையானது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. பணம் இல்லை என்றால் இந்த உலகில் அணுகூட அசையாது என்ற நிலைமை வந்து விட்டது. பணவரவுகள் ஒரு குடும்பத்தில் தாராளமாக இருந்தால் வாழ்க்கை வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். கி£மப்புறங்களில் நெல் விளைச்சல் இருப்பதால் பணத்திற்கு பதில் நெல்லைக் கொடுத்து மற்ற பொருட்களை பண்டமாற்று முறையில் பண்டைய காலங்களில் வாங்கிக் கொள்வார்கள். இந்த பண்டமாற்று முறைகள் கூட இப்பொழுது மாறி உலகம் எல்லாம் பணப்புழக்கம் முறை நடைபெறுகிறது. எனக்குத் தெரிந்து ஒரு பைசா, இரண்டு பைசா, 3 பைசா காசுகள் புழக்கத்தில் இருந்தன. இப்போது அவை காணாமல் போய் விட்டன.

பணத்திற்காகத்தான் மனிதன் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறேன். ஆடம்பர வாழ்க்கை வாழ்வதைத்தான் ஒவ்வொரு மனிதனும் விரும்புகிறான். வாழ்க்கையை வசதியாக வாழ்வதற்கும் தாராள தன வரவிற்கும் யோகங்கள் உண்டாக வேண்டுமல்லவா, இப்பொழுது தாரளமான தனச்சேர்க்கை யாருக்கு உண்டாகிறது என பார்ப்போமா?

நவகிரகங்களில் பணத்திற்கு காரகனாக இருப்பவர் குரு பகவானாவார். குரு ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சமோ பெற்று பலமாக அமைந்திருந்தாலும், குறிப்பாக தனித்து அமையால் நட்பு, கிரக சேர்க்கையுடன் இருந்தாலும் பணவரவானது சிறப்பாக இருக்கும். அதிலும் குரு தனக்கு நட்பு கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய் போன்றவற்றுடன் இணைந்து கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால், பணவரவுகளுக்கு பஞ்சமே இருக்காது. தாராள தன வரவுகளால் செல்வம், செல்வாக்கு உயரும்.

ஒருவரது ஜென்ம ராசி மண்டலத்தை 12 ஆக பிரித்துள்ளார்கள். இதில் தனவரவைப் பற்றி குறிப்பிடுவது 2ம் வீடாகும். மேற்கூறியவாறு குரு பலம் பெற்றிருந்தால் தாராள தன வரவுகள் உண்டாகும் என்றாலும், 2ம் வீட்டதிபதி யோகத்தைத் தரக்கூடிய கேந்திர ஸ்தானங்கள் என வர்ணிக்கப்படும் 1,4,7,10 வீடுகளிலும் மற்றும் திரிகோண ஸ்தானங்கள் என வர்ணிக்கபடும் 5,9 ம் வீடுகளிலும், லாப ஸ்தானமான 11 லும் அமையப் பெற்றாலும். அந்த வீட்டதிபதிகளின் சேர்க்கைப் பெற்றாலும் தாராள தன வரவுகள் உண்டாகி செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

குரு மற்றும் 2 ம் அதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி பாவகிரக சேர்க்கை, பாவகிரக பார்வை பெறாமல் இருப்பது அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். ஒருவரின் ஜனன ஜாதகத்தைக் கொண்டு, அவருக்கு உண்டாகி இருக்கக்கூடிய யோகங்களைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வது மட்டுமின்றி, அவருடைய சொந்த பந்தங்களால் அவருக்கு ஏற்படக்கூடிய அதிர்ஷ்டத்தைப் பற்றியும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். ஒருவரின் ஜாதகத்தில் தந்தை ஸ்தானம் 9ம் வீடாகும். தந்தைகாரகன் சூரிய பகவானாவார். 9ம் வீடும், சூரியனும் பலம் பெற்று 2ம் அதிபதியின் சம்மந்ததுடன் இருந்தால், அவருக்கு பெற்ற தந்தையின் மூலம் அதிர்ஷ்டமும் யோகமும் உண்டாகும்.

அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 4ம் வீடும், சந்திரனும் தாய்க்குரியதாகும். இதனால் 2,4 க்கு அதிபதிகள் பலம் பெற்று தாய் காரகன் சந்திரனும் பலமாக இருந்துவிட்டால் தாய் வழியில் செல்வ சேர்க்கைகளும் அதிர்ஷ்டங்களும் உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 3,11 ம் வீடுகளும், செவ்வாயும் உடன் பிறப்புகளைப் பற்றி குறிப்பிடுவதாகும். சகோதர காரகன் செவ்வாய் பலம் பெற்று 3,11 க்கு அதிபதிகளுடன் 2ம் அதிபதியின் சம்மந்தமும் உண்டாகியிருந்தால் உடன் பிறந்தவர்கள் மூலம் அதிர்ஷ்டமூம் வாழ்க்கையில் உயர்வுகளும் உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடு வாழ்க்கைத் துணை மற்றும் கூட்டாளிகளைப் பற்றி குறிக்கக்கூடியதாகும். 2,7 க்கு அதிபதிகள் பலம் பெற்றிருந்தால் வாழ்க்கை துணையாலும் கூட்டாளிகளாலும் முன்னேற்றத்தையும் அதிர்ஷ்டத்தையும் அடையக்கூடிய உன்னத அமைப்பு உண்டாகும். ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் மனைவி மற்றும் பெண்களால் பொருளாதார மேம்மையை அடைய நேரிடும். பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றிருந்தால் கணவர் மூலமாக பொருளாதார மேன்மைகளையும் அதிர்ஷ்டங்களையும் அடைய நேரிடும்.
ஜென்ம லக்னத்தித்கு 2,5 க்கு வீட்டதிபதிகளுடன் குரு பகவான் பலம் பெற்றிருந்தால், பெற்றெடுத்த பிள்ளைகள் மூலம் பொருளாதார மேம்மைகளையும, உயர்வுகளையும் பெற முடியும்.

சனி பகவானும் 2 ம்வீடும் பலமாக இருந்தால் வேலையாட்களின் ஒத்துழைப்பால் பல்வேறு  அதிர்ஷ்டங்களை அடைய நேரிடும்.

மேற்கூறியவாறு அதிர்ஷ்டங்களையும் யோகங்களையும் எப்பொழுது அடைய முடியும் என பார்த்தால், அந்தந்த யோகங்களை ஏற்படுத்தக்கூடிய கிரகங்களின் தசாபுக்திகள் வரும் போது யோகங்களின் பலம் அதிகரித்து கொருளாதார மேம்மையையும், தாராளதன வரவையும் பெற முடியும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001

Wednesday, February 8, 2012

திருமண பொருத்ததில் கவனிக்கப்பட வேண்டியவை

நட்சத்திர ரீதியாக 10 பொருத்தங்கள் பார்ப்பது எவ்வளவு அவசியமோ, அது போல     ஜாதக ரீதியாகவும் கிரகங்களின்  ஆதிக்கத்தை ஆராய்ந்து பொருத்தங்கள் பார்ப்பதும் மிகவும் முக்கியம். தம்பதியர் மன ஒற்றுமையுடன் வாழ்வார்களா, அனுசரித்துச் செல்வார்களா, புத்திரபாக்கியம் சிறப்பாக இருக்குமா, உற்றார் உறவினர்களிடையே ஒற்றுமை இருக்குமா? என பலவிதமான பொருத்தங்களையும் ஜாதக ரீதியாக ஆராய்ந்து திருமணம் செய்து வைப்பது மிகவும் நல்லது. அதனைப் பற்றிய பல்வேறு முக்கிய அம்சங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

செவ்வாய் தோஷம்  

குடும்ப வாழ்க்கைக்கு முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஸ்தானங்களான 2,4,7,8,12 ல் செவ்வாய் அமைவது செவ்வாய் தோஷமாகும். ரத்த காரகன், காம காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய செவ்வாய் ஒரு உஷ்ண கிரகமாவார். செவ்வாய் பெண்கள் விஷயத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடியவராகவும், களத்திர காரகனாகவும் விளங்குகிறார்.
மேற்கூறிய இடங்களில் செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் அமையப் பெறுமேயானால், அவருக்கு அதே மாதிரியான ஜாதகப் பலன் அமையப் பெற்றவரை திருமணம் செய்து வைப்பது தான் நல்லது. அப்பொழுதுதான் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாகவும்,  கட்டில் சுகவாழ்வு திருப்தியானதாகவும் இருக்கும். செவ்வாய் தோஷம் உள்ளவருக்கு செவ்வாய் தோஷம் இல்லாத நபரை திருமணம் செய்து வைத்தால் உடலுறவில் திருப்தியற்ற நிலை, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். அது மட்டுமின்றி செவ்வாயின் திசை அல்லது புக்தி காலங்களில் வாழ்க்கை துணைக்கு ஆரோக்கிய ரீதியாக பாதிப்பு, எதிர்பாராத விபத்து, பிரிவு, வாழ்க்கைத் துணையையே இழக்கக்கூடிய அவலநிலை உண்டாகும்.

செவ்வாய் 7,8 ல் அமையப் பெறுவது கடுமையான தோஷமாகும். 2,4,12 ல் இருந்தால் தோஷத்தின் தன்மை சற்று குறையும். திருமணப் பொருத்தம் பார்க்கும் போது சிறிது தோஷம் இருந்து அவருக்கு செவ்வாய் திசையே வராது என்றால் திருமணம் செய்யலாம். 2,4,12 ல் செவ்வாய் அமைந்து பரிவர்த்தனை அல்லது குரு பார்வை இருந்து  செவ்வாய் திசை வராமல் இருந்தாலும் பார்க்கலாம். செவ்வாய், மேஷம், விருச்சிகம், கடகம், மகரத்தில் அமைந்தால் செவ்வாய் தோஷம் அமையப் பெற்றவர்கள் நமக்கு திருமணமே ஆகாதோ என பயப்பட தேவையே இல்லை. ஏனென்றால் நாட்டில் 40% பேருக்கு செவ்வாய் தோஷம்  இருக்கத்தான் செய்கிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் தோஷத்துக்குரிய ஜாதகங்களை தேர்வு செய்து திருமணம் செய்வதும், உரிய பரிகாரங்களை மேற்கொள்வதும் நற்பலனை உண்டாக்கும்.

சர்ப தோஷம்

சர்ப கிரகங்களான ராகு கேது 7,8 ல் அமைகின்ற போதும் 7ம் அதிபதி ராகு கேது சேர்க்கைப் பெற்றோ, சாரம் பெற்றோ அமைகின்ற  போதும், ராகு கேது பிடிக்குள் அனைத்து பிரதான கிரகங்களும் அமைகின்ற போதும் கடுமையான சர்ப தோஷம் உண்டாகிறது. அது போல திருமண வயதில் ராக கேதுவின் திசை அல்லது புக்தி நடைபெற்றாலும் சர்ப தோஷம் உண்டாகி திருமணம் நடைபெற தாமத நிலை ஏற்படுகிறது. இப்படி சர்ப தோஷம் உள்ளவர்களுக்கு சர்ப தோஷம்  உள்ளவரனாக பார்த்து திருமணம் செய்து வைத்து நல்லது. அப்பொழுதுதான் மணவாழ்க்கையில் கருத்து வேறுபாடுகளின்றி ஒற்றுமையுடன் வாழ முடியும். இல்லை என்றால் வாழ்க்கை கீரியும், பாம்பும் போல போராட்டகரமானதாக இருக்கும்.
குறிப்பாக ராகு, கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்களில் 7ம் அதிபதியும் களத்திர காரகனான சுக்கிரனும் அமையப் பெற்றால் சர்ப தோஷம் உண்டாகி திருமணம் நடைபெறாத தாமத நிலையை ஏற்படுத்தும். உரிய பரிகாரங்கள் செய்வதன் மூலமாக தடைகள் விலகும்.


மாங்கல்ய தோஷம்

நம் நாட்டில் சுமங்கலி பெண்களுக்கு தனி மரியாதை உண்டு. ஒரு பெண்ணின் ஜனன ஜாதகத்தில் 8ம் வீடு மாங்கல்ய ஸ்தானமாகும். 8ம் வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், 8ல் சுபகிரகங்கள் அமையப் பெற்றாலும், 8ம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்தாலும் நீண்ட மாங்கல்ய பாக்கியம் உண்டாகி, கணவரின் ஆயுளை அதிகரிக்கச் செய்யும். ஒரு ஆணுக்கு ஆயுள் பாவம் பலமிழந்திருந்தால் மாங்கல்ய பலம் கொண்ட பெண்ணை திருமணம் செய்து வைப்பது நல்லது.

அதுவே பெண் ஜாதகத்தில் 8ம் வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும், சனி, செவ்வாய் போன்ற பாவிகள் பார்வை செய்தாலும் கடுமையான மாங்கல்ய தோஷம் உண்டாகும். இதனால் இளம் வயதிலேயே வாழ்க்கை துணையை இழக்கக் கூடிய அவலநிலை ஏற்படும். இப்படி மாங்கல்ய பாவம் பலமிழந்த பெண்ணிற்கு நல்ல ஆயுள் பலம் கொண்ட வரனாக பார்த்து திருமணம் செய்து வைத்தால்தான் தீர்க்க சுமங்கலியாக வாழக்கூடிய  பாக்கியம் உண்டாகும். எனவே, பொருத்தம் பார்க்கும் போது 8ம் வீட்டையும் இருவரின் ஜாதக ரீதியாக ஆராய்ந்து பார்ப்பது உத்தமம்.

களத்திர தோஷம்

களத்திர ஸ்தானமான 7ம் இடமும் களத்திர காரகன் சுக்கிரனும் பாவகிரகங்களால் சூழப்பட்டிருந்தால் களத்திர தோஷம் உண்டாகிறது. இதுபோல தோஷம் அமையப் பெற்றவர்களுக்கு இதே போல கிரக அமைப்புகள் உள்ள வரனாக பார்த்து திருமணம் செய்து வைத்தால்தான் மணவாழ்க்கையானது போராட்டமின்றி அமையும்.



புத்திர தோஷம்

ஆண் பெண் இருவருக்கும் நட்சத்திர பொருத்தங்கள் பார்ப்பது மட்டுமின்றி ஜாதக ரீதியாக புத்திர ஸ்தானம் பலமாக உள்ளதா என ஆராய்வது அவசியம். ஒருவரின் ஜாதகத்தில் 5ம் இடமும், புத்திர காரகன் குருவும் பலமாக இருப்பது நல்லது. அப்படி புத்திர ஸ்தானம் பலமாக உள்ளவராகப் பார்த்து திருமணம் செய்து வைத்தால் ஒருவரின் பலத்தாலேயே சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். அப்படி பலமிழந்த ஜாதகருக்கு பலமிழந்தவராக பார்த்து மணம் முடித்தால் புத்திர பாக்கியம் என்பது எட்டாகனியாக ஆகிவிடும்.

தசா சாந்தி

ஜாதகப் பொருத்தங்கள் பார்க்கும் போது ஆண், பெண் இருவருக்கும் நடக்கக்கூடிய தசா புக்திகளையும் ஆராய வேண்டும். ஆண், பெண் இருவருக்கும் அப்படி ஒரே தசா புக்தி நடந்தால் திருமணம் செய்யக்கூடாது. குறைந்தபட்சம் 3 வருட இடைவெளி இருப்பது நல்லது. அப்பொழுது தான் மணவாழ்வில் ஒற்றுமை இருக்கும்.


வயசுப் பொருத்தம்

வயசு பொருத்தம் என பார்க்கின்ற போது கண்டிப்பாக ஆணைவிட பெண்ணுக்கு 3 வயது முதல் 6 வயது வரை குறைவாக இருப்பது நல்லது. ஆணைவிட பெண்ணுக்கு அதிக வயது இருக்கக்கூடாது.  இப்படி வயசு பொருத்தம் பார்ப்பது சரியாக இருக்கும். மேலும் ஆணுக்குப் பெண்ணை விட 10, 15 வயது அதிகமாக இருப்பதும் நல்லதல்ல. அதிக வயதுள்ள ஆண்மகனாக இருந்தால் இல்வாழ்வில் இன்பம் இருக்காது.


சகுனப் பொருத்தம்

ஜாதகப் பொருத்தங்கள் பார்க்கும் போதும் வரன் பார்க்கச் செல்கின்ற போது சகுனம் சிறப்பாக இருப்பது நல்லது. சகுனம்  சரியில்லையென்றாலும் திருமணம் செய்யக்கூடாது.


மனப்பொருத்தம்

இத்தனைப் பொருத்தங்கள் பார்ப்பதெல்லாம் பெரியதில்லை. மிக முக்கியப் பொருத்தமான மனப்பொருத்தம் இருப்பது மிகவும் நல்லது. இருவருக்கும் மனரீதியாக பிடித்திருந்தால்தான் வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001



Tuesday, February 7, 2012

நட்சத்திர பொருத்தம்


திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். அதைப் பருவத்தில் பயிர் செய்வது மட்டுமின்றி பாதுகாப்பதும் அவசியம். ஆண், பெண் இருவரையும் சேர்த்து வைக்கக்கூடிய திருமண உறவானது நீண்டகாலம் கமிழ்ச்சியுடன் அமைவது நல்லதல்லவா. மணவாழ்க்கையில் எல்லா வகையான சிறப்பான அம்சங்கள் அமைந்தால்தான் மனமகிழ்ச்சியுடன் வாழமுடியும். இல்லை என்றால் மகிழ்ச்சி இருக்காது. எப்படி டாக்டரிடமும் வக்கீலிடமும் பொய் சொல்லக்கூடாதோ, அது போல வரன் தேடும் விஷயத்தில் ஜோதிடரிடமும் பொய் சொல்லக்கூடாது. ஒருவரது பிறந்த தேதி, மாதம், வருடம் மற்றும் சரியான பிறந்த நேரம், ஊர் ஆகியவற்றைத் தெளிவாக எந்த தவறுதலும் இன்றி ஜோதிடரிடம் கூறினால் மட்டுமே,  அவரால் தெளிவான ஜனன ஜாதகத்தை கணிக்க முடியும். அப்படி கணிக்கப்படும் ஜாதகமே அவரின் மரண காலம் வரை உள்ள பலா பலன்களை எடுத்துரைக்கும் ஜாதகத்தைக் கொண்டுதான் திருமணத்தை நிச்சயிக்க வேண்டும். ஜோதிட ரீதியாக ஆண் பெண் இருவருக்கும் வரன் தேடும் படலம் தொடங்கியதும் முதலில் நாம் பார்ப்பது நட்சத்திரம் பொருந்துகிறதா என்பதுதான். ஆனால் நட்சத்திர பொருத்தம் பார்ப்பது மட்டுமின்றி ஜாதக ரீதியாகவும் பொருத்தங்கள் உள்ளதா என தெளிவாக ஆராய வேண்டும். பெயர் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது சுமாரான அமைப்பே ஆகும்.

முதலில் நட்சத்திரப் பொருத்தங்களான 10 வகையான பொருத்தங்களை பார்க்க வேண்டும். பிறகு ஜாதக ரீதியாக உள்ள சாதக, பாதகப் பலன்களைப் பற்றி ஆராய வேண்டும். இப்படி பொருத்தங்கள் பார்த்து செய்யும் திருமணங்கள் நீண்டகால சந்தோஷப் பலன்களை ஏற்படுத்தும். இப்பொழுது பத்து பொருத்தங்களைப் பற்றி பார்ப்போம்.

தினப்பொருத்தம்

ஆண் பெண் இருபாலரின் நட்சத்திர பொருத்தங்களில் தினப் பொருத்தம் சிறப்பாக இருந்தால் இருவரும் அனைத்து செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். பெண் நட்சத்திரம் தொடங்கி ஆண் நட்சத்திரம் வரை  எண்ணும் போது 2,4,6,8,9,11,13, 15,,17,18,20,22,24,26,27 ஆகிய நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் உண்டு. கண்டிப்பாக 7வது நடத்திரமாக இருந்தால் திருமண செய்யக்கூடாது.

ஏகநட்சத்திரம்,

பெண், ஆண் இருவரும் ஒரே நட்சத்திரமாக இருந்தால்
ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம, விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியவைகள் மிகவும் உத்தமம்.
அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடமாக இருந்தால் மத்திமம் மற்ற நட்சத்திரமாக இருந்தால் பொருந்தாது.

கணப்பொருத்தம்,

ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணமாக இருந்தால் கணப் பொருத்தம் உத்தமம். ஆண் தேவ கணமும், பெண் மனுஷ கணமும் ஆனால் உத்தமம். பெண் தேவ கணமும் ஆண் மனுஷ அல்லது ராஷஸ கணமானால் மத்திமம். மற்றவை பொருந்தாது. கணப்பொருத்தமானது சிறப்பாக இருந்தால் இருவருக்கும் அன்யோன்யம் சிறப்பாக இருக்கும். செல்வ செழிப்பு தாராளமாக உண்டாகும்.

மகேந்திர பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் 4,7,10,13,16,19,22,25 ஆக வந்தால் மகேந்திர பொருத்தம் உண்டு. இதன் மூலம் இருவருக்கும் நீண்ட ஆயுள் உண்டு.

ஸ்திரீ தீர்க்க பொருத்தம்

பெண் நட்சத்திரம் தொடங்கி ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 13 க்கு மேல் வந்தால் உத்தமம். 7 க்கு மேல் வந்தால் மத்திமம்.  பொருத்தம் சிறப்பாக இருந்தால் வாழ்க்கை இன்பமயமாக இருக்கும்.

யோனி பொருத்தம்

யோனி பொருத்தம் தாம்பத்ய திருப்தியையும், தம்பதிகளுக்குள் சினேகத்தையும் வளர்க்கும். யோனி ஆண், பெண் இனக்குறிகளை குறிக்கும். 14 வகை மிருகங்களின் காம உணர்வு 27 நட்சத்திரங்களில் பிறந்தோரின் காம உணர்வுடன் ஒப்பிடப்படுகிறது.

பகையோனிகள் நட்சத்திரங்கள்

குரங்கு & ஆடு, பூராடம், திருவோணம்& பூசம், கிருத்திகை

சிங்கம் & யானை, அவிட்டம், பூரட்டாதி& பரணி, ரேவதி

குதிரை & எருமை, அஸ்வினி, சதயம்&சுவாதி, அஸ்தம்

பசு& புலி, உத்திரம், உத்திராடம், விசாகம்& சித்திரை, உத்திரட்டாதி

எலி & பூனை, மகம், பூரம்& ஆயில்யம், புனர்பூசம்

பாம்பு & எலி , ரோகிணி, மிருகசீரிஷம்& மகம், பூரம்

கீரி& பாம்பு, உத்திராடம்& ரோகினி, மிருகசீரிஷம்,

மான் & நாய், கேட்டை, அனுஷம்& மூலம், திருவாதிரை

இது இருவரின் உடல் பொருத்தம் ஆகும்.
பலனறிதல்

குதிரையும் எருமையும் ஒன்றுக்கொன்று பகையாம். இதே போல் யானை சிங்கம் ஆடு குரங்கு, நாகமும் கீரியும், நாயும்  மானும், பூனை எலியும், புலிபசுவும் ஒன்றுக் கொன்று பகையாம் எனவே, இவைகளுக்குரிய ஆண் பெண் நட்சத்திரங்களை சேர்க்கக்கூடாது.

இதன்படி அஸ்வினி அல்லது சதய நட்சத்திரத்தில் பிறந்த ஆண் அல்லது பெண்ணுக்கு அஸ்தம் சுவாதி நட்சத்திரத்தில்   பிறந்த ஆண் அல்லது பெண்ணுக்கு இடையில் யோனி பொருத்தம் ஏற்படாது.

நட்சத்திரம்  கணம்   பால்   மிருகம்
அஸ்வினி தேவ   ஆண்  குதிரை
பரணி  மானுஷ        ஆண்  யானை
கிருத்திகை  ராஷஸ  பெண்  ஆடு
ரோகிணி மானுஷ   ஆண்  நாகம்
மிருகசீரிஷம் தேவம்  பெண்  சாரை
திருவாதிரை  மானுஷ        ஆண்  நாய்
பனர்பூசம் தேவம்  பெண்  பூனை
பூசம்  தேவம்  ஆண்  ஆடு
ஆயில்யம் ராஷஸ  ஆண்  பூனை
மகம்  ராஷஸ  ஆண்  எலி
பூரம்   மானுஷ        பெண்  எலி
உத்திரம் மானுஷ        பெண்  எருது
அஸ்தம் தேவம்  பெண்  எருமை
விசாகம் ராஷஸ  ஆண்  புலி
அனுஷம் தேவம்         பெண்  மான்
கேட்டை  ராஷஸ  ஆண்  மான்
மூலம்   ராஷஸ  பெண்  நாய்
பூராடம்  மானுஷ   ஆண்  குரங்கு
உத்திராடம்  மானுஷ        பெண்  மலட்டு பசு
திருவோணம்  தேவம்         பெண்  குரங்கு
அவிட்டம் ராஷஸ  பெண்  சிங்கம்
சதயம்  ராஷஸ  பெண்  குதிரை
பூரட்டாதி  மானுஷ        ஆண்  சிங்கம்
உத்திரட்டாதி  மானுஷ        பெண்  பசு
ரேவதி  தேவம்         பெண்  யானை

ராசி பொருத்தம்

பெண் ராசிக்கு ஆண் ராசி 7,9,10,11,12, ஆக இருந்தால் உத்தமம். 3,4 ஆக இருந்தால் மத்திமம். ராசிப் பொருத்தம் சிறப்பாக இருந்தால் மன ஒற்றுமை இருக்கும்.

ராசி அதிபதி பொருத்தம்

பெண் ராசிக்கு ஆண் ராசி அதிபதி நட்பு ஆனால் உத்தமம். சமம் ஆனால் மத்திமம். பகையானால் பொருந்தாது. ராசி அதிபதி பொருத்தம் சிறப்பாக இருந்தால் மட்டுமே உறவினர்களிடம் ஒற்றுமை சிறப்பாக  அமையும்.
கிகரகம  நட்பு  சமம்  பகை
சூரியன்      சந்திரன்   புதன்  சுக்கிரன்
    செவ்வாய்,          சனி  ராகு, கேது
  குரு  
சந்திரன்  சூரியன்  செவ்வாய் ராகு, கேது
  புதன்  குரு, சனி
    சுக்கிரன்
செவ்வாய் சூரியன் சுக்கிரன்,  புதன், ராகு, கேது
  குரு, சந்திரன் சனி 
புதன்  சூரியன்  செவ்வாய் சந்திரன்
  சுக்கிரன் குரு, சனி
    ராகு
குரு  சூரிய   சனி, ராகு
  சந்திரன் கேது   புதன், சுக்கிரன்
  செவ்வாய்
சுக்கிரன்  புதன், சனி செவ்வாய்
  ராகு, கேது  குரு   சூரியன், சந்திரன்
சனி  புதன்  குரு  சூரிய, சந்தி
  சுக்கிரன்   செவ்வாய்
  ராகுகேது
ராகு   சுக்கி சனி புதன்  சூரிய சந்தி
கேது     குரு   செவ்வாய்

வசியப் பொருத்தம்

ராசி   வசிய ராசிகள்
மேஷம்  சிம்மம், விருச்சிகம்
ரிஷபம்  கடகம், துலாம்
மிதுனம்  கன்னி
கடகம்   விருச்சிகம், தனுசு
சிம்மம்  துலாம், மீனம்
கன்னி   ரிஷபம், மீனம்
துலாம்  மகரம்
விருச்சிகம்  கடகம், கன்னி
தனுசு   மீனம்
மகரம்   கும்பம்
கும்பம்  மீனம்
மீனம்  மகரம்

பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமானால் உத்தமம். ஆண் ராசிக்கு பெண் ராசி வசியமானால் மத்திமம். வசியப் பொருத்தம் சிறப்பாக இருந்தால் ஈர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ரச்சுப் பொருத்தம்

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் & சிரசு ரச்சு.
ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம் & கண்டரச்சு.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி & உதிரரச்சு.
பரணி, பூரம், பூராடம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி & தொடை ரச்சு.
ஆண் பெண் இருவருக்கும் ஒரே ரச்சானால் பொருத்தம் இல்லை. இது மாங்கல்ய பொருத்தம் என்பதால் இந்த பொருத்தம் இருந்தால்தான் திருமணம் செய்ய வேண்டும்.

வேதை பொருத்தம்

அஸ்வினியும் கேட்டையும்,
பரணியும் அனுஷமும்
 கிருத்திகையும் விசாகமும்,
ரோகிணியும் சுவாதியும்,
திருவாதிரையும் திருவோணமும்,
புனர்பூசமும் உத்திராடமும்
பூசமும் பூராடமும்,
ஆயில்யமும், மூலமும்,
மகமும் ரேவதியும்,
பூரமும் உத்திரட்டாதியும்,
உத்திரமும் பூரட்டாதியும்,
ஹஸ்தமும் சதயமும்

ஒன்றுக்கொன்று வேதைகள். வேதைகள் இருவருக்கும் உண்டானால் பொருத்தம் இல்லை.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Monday, February 6, 2012

திருமண தோஷத்தை நீக்கும் திருத்தலங்கள்


திருமணஞ்சேரி,

திருமணஞ்சேரி ஆலயம் திருமணமாகாத பெண்களுக்கு நல்லதொரு மணவாழ்க்கையை அமைத்துத் தரக்கூடிய சிறப்பு வாய்ந்த திருத்தலமாக இருக்கிறது. திருமணஞ்சேரி திருத்தலம் சென்று  இறைவன் அருள் வள்ளல் நாதரையும், இறைவி யாழினும் மென் மொழீயையும் தரிசித்து தங்களுடைய திருமண ஏக்கத்தை வேண்டுதலாய் வைத்தால் திருமணமானது விரைவில் வைகூடும் என்பது ஐதீகம்.
இதற்கு சான்றாக பல புராண கதைகளும் உள்ளன.  பண்டைய காலத்தில் மாகவிஷ்ணுவும் பரமேஸ்வரனும் பார்வதியை சாட்சியாக வைத்து சதுரங்கம் ஆட, அந்த ஆட்டத்தில் மாகாவிஷ்ணு ஜெயிக்க, பார்வதி தேவி தன் அண்ணன் ஜெயித்த சந்தோஷத்தில் பரமனை பார்த்து ஏளனமாக சிரித்து விட்டாராம். இதனால் கோபமடைந்த பரமன் நீ பூமியில் பசுவாக பிறப்பாயாக என  சபித்தாராம்.  தன் தவறை உணர்ந்த பார்வதி மன்னிப்பு கேட்க நீ மணச்சேரி கிராமத்தில் என்னை பூஜித்து வந்தால் உனக்கு சாப விமோசனம் கொடுத்து உன்னை மணந்த கொள்வேன் என்றாராம். பசுவான பார்வதியும்  அவ்வாறே மணஞ்சேரியில் நம்பிக்கையுடன் பரமேஸ்வரனை பூஜித்து வர சாப விமோசனம் கொடுத்து தேவியை திருமணம் முடித்துக் கொண்டாராம் பரமேஸ்வரன். திருமண ஏக்கத்தை போக்குவதால் மணச்சேரி என்ற ஊர் 
திருமணஞ்சேரி ஆயிற்று.

இத்திருத்தலத்தில் பூஜை  நேரத்தில் கன்னிப் பெண்கள் 3 மாலையையும், ஒரு எலுமிச்சம் பழத்தையும் கொண்டு வந்து அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும். அர்ச்சகர்கள் அந்தமாலையை  இறைவனுக்கு சாற்றி எலுமிச்சம் பழத்தை இறைவனிடம் வைத்து இரண்டு மாலைகளையும் எலுமிச்சம் பழத்தையும் விபூதி, குங்கும பிரசாதத்தையும் திரும்பக் கொடுப்பார்கள். கன்னிப் பெண்கள் இறைவனிடம் மனமுருகி தனக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டுமென்ற கோரிக்கையை இறைவனிடம் வைத்து விட்டு மாலையையும் எலுமிச்சம் பழத்தையும் வீட்டுக்கு கொண்டு வந்து, பூஜையறையில் மாலையை  வைத்து விட்டு  எலுமிச்சம்பழத்தை மென்று தின்ன வேண்டும்.
தினமும் கோவிலிலிருந்து கொண்டு வந்த விபூதி குங்குமத்தை அவர்கள் மட்டும் நெற்றியில் வைத்துக் கொண்டே  வந்தால் திருமணமானது விரைவிலேயே கைகூடிவிடும். இறைவன் கல்யாண சுந்தரேஸ்வரரும், அவரது கரம் பற்றி நாணத்துடன் நிற்கும் கோகிலாம்பாள் அம்மையும் விரைவில் திருமணம் நடைபெற அருள்பாலிப்பார்கள் என்பது கண்கூடாக கண்ட உண்மை.

திருமணம் முடிந்தவுடன் கணவருடன் அந்த இருமாலைகளையும் கொண்டு வந்து இக்கோவிலின் திருக்குளத்தில் விட்டு விட்டு, கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையை முடித்துக் கொள்ள வேண்டும். வெள்ளி, ஞாயிறு போன்ற கிழமைகளில் ஜாதி, மத வேறுபாடுகளின்றி எல்லா மதத்தினரும் இங்கு வந்து பிரார்த்தனை செய்வது இக்கோவிலின் சிறப்பாகும்.

திருவிடந்தை,

சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் வழியில் உள்ளது திருவிடந்தை ஆலயம். திருமணமாகாதவர்கள் இவ்வாலயத்திற்குச் சென்று இருமாலைகள் வாங்கி இறைவன் இறைவிக்கு சாற்றி, அந்த மாலைகளை திரும்பப் பெற்று வீட்டிற்கு கொண்டு வந்து தினமும் தொட்டு வணங்கிவர தடைபட்டுக் கொண்டிருக்கும் திருமணத் தடைகள் விலகி கைகூடும்.

ஸ்ரீவில்லபுத்தூர்,

மதுரையிலிருந்து குற்றாலம் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தில் சூடிக்கொடுத்த சுடர்மணியாம் ஆண்டாள் பிறந்து இறைவனை மணாளனாக கைபிடித்தார். இத்திருத்தலத்திலும் இறைவனை வேண்டி, மாலை சாற்றி, பூஜைகள் செய்து வழிபட்டால் விரைவில் பழுத்தில் மணமாலை விழும் என்பது ஐதீகம்.

அழகர்கோவில்,

மதுரையில் அழகர் சன்னதியில் உள்ள இறைவனை எப்பொழுதும் மணக்கோலத்தில் காணலாம். ஈரேழு உலகில் உள்ள தேவர்களும், முனிவர்களும் சேர்ந்து இறைவன் இறைவிக்கு திருமணம்  செய்து வைத்து கண்டுகளித்த இடமாக இது விளங்குகிறது. இதனால் மணமாகாதவர்கள் இங்கு வந்து அம்மை அப்பனை வணங்கினால் திருமணம் வெகு சிறப்பாக கைகூடும்.

திருச்செந்தூர்,

ஆறுபடை விடுகளில்  ஒன்றான முருகனின் திருத்தலம் இது. திருமணத்திற்கான பலத்தை கொடுக்கக்கூடிய மங்கள குருபகவானே இங்கு வந்து முருகனின் அருளை பெற்றுச் சென்றதாக வரலாறு.  அது மட்டுமின்றி செவ்வாய் தோஷம்த்திற்கும் சிறந்த பரிகார ஸ்தலமாக இவ்வாலயம் விளங்குகிறது. எனவே இங்கு சென்ற கடலில் நீராடி முருகப்பெருமானை வழிபட்டால் மணமாகாதவர்களுக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும்.

திருப்பரங்குன்றம்,

இங்கு முருகனுக்கு தினமும் திருமணக்கோலம். எனவே திருமணமாகாதவர்கள் இத்திருத்தலத்திற்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும்.

வைத்தீஸ்வரன் கோவில்,

இங்கு முருகப் பெருமான் முத்துகுமார சுவாமி என்ற பெயரில் வீற்றிருக்கிறார். சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருந்த போது அவரின் 3 வது கண்ணில் இருந்து வியர்வை துளியானது பூமியில் விழுந்தது. அதிலிருந்து தோன்றியனே  அங்காரகன் எனும் செவ்வாயாவார். இத்திருத்தலம் செவ்வாய்க்கு சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.  எனவே செவ்வாய தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்திற்கு சென்று முருகப் பெருமாளையும், அங்காரகனையும் வழிபட்டால் திருமண தோஷங்கள் விலகி திருமணம் வெகு விரைவில் கைகூடும்.

உமாமகேஸ்வரன் ஆலயம்,

கேரள மாநிலம் கொல்லத்திலுள்ள இவ்வாலயத்தில் இறைவனும் இறைவியும் இன்பமான இல்வாழ்வினை வாழ்ந்து மக்களுக்கு சிறப்பான இல்லற வாழ்வை அருளிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாலயம் சென்று இறைவனுக்கும் இறைவிக்கும் மாலை அணிவித்து, குங்கும அர்ச்சனை செய்தால் விரைவில் மண வாழ்க்கை அமைந்து இனிமையான இல்வாழ்க்கை உண்டாகும்.

திருநாகேஸ்வரம்,

ஒருவரின் ஜாதக ரீதியாக களத்திர தோஷம், புத்திர தோஷம் ஆகியவை நீங்குவதற்கு இராகு பகவானை பூஜிப்பது நல்லது. நவகோள்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயைவிட புதனும் புதனைவிட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனைவிட சந்திரனும், சந்திரனை விட சூரியனும் இவர்கள் அனைவரைவிட  ராகு கேதுவும் பலம் பொருந்தியவர்களாக உள்ளார்கள். சூரிய சந்திரனையே பலம் இழக்க செய்யும் ஆற்றல் ராகு கேதுவுக்கு உண்டு. ராகு கேதுவுக்கு ராசி கட்டத்தில் சொந்த வீடு என்று எதுவும் இல்லை. அவர் எந்த ராசியில் அமைந்துள்ளாரோ, எந்த கிரகத்தின் சேர்க்கை பார்வைப்பெற்றுள்ளாரோ அதற்குத் தகுந்த பலன்களை ஏற்படுத்துவார்.

ஒருவர் ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருந்து விட்டால் அனைத்துவிதமான நற்பலன்களையும் அனுபவிக்கக்கூடிய யோகம் உண்டாகும். ஆண்டியையும் அரசனாக மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர் ராகு. அதுவே, ராகு பலம் பெறவில்லை என்றால் இதற்கு தலைகீழ பலன்களை அடைய நேரிடும். ஒருவரது ஜாதகத்தில் 7ம் இடத்தில் ராகு இருந்தாலும், 7ம் அதிபதி ராகுவின் நட்சத்திரத்தில் அமைந்திருந்தாலும், திருமண வயதில் ராகு திசை நடைபெற்றாலும் திருமணம் நடைபெற தாமதமாகிறது. 5 ம் இடத்தில் ராகு இருந்தால் புத்திர பாக்கியம் உண்டாக தடை தாமதம் உண்டாகிறது. ஆகவேதான், களத்திர தோஷம், புத்திர தோஷம் நீங்க ராகுவை வழிபடுவது சிறப்பு.

சிறப்பான சிவனருள் பெற்ற ராகுவானவர் திருநாகேஸ்வரத்தில் மட்டுமே நாகவல்லி, நாக கன்னி என இரு தேவியருடன் தனிக்கோவில் கொண்டு மங்கள ராகுவாக அமைந்துள்ளார். குறை தீர்க்க தன்னைத் தேடிவரும் பக்தர்களுக்கு  சிறப்பாக அருள்பாலித்து அவர்களின் குறைகளை தீர்த்து வைக்கிறார். இங்கு ஐந்தலை அரசு எனும் ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக மாறிவிடும். இத்திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில்  அன்பர்கள் வந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்கின்றனர். தங்களது பல்வேறு தொல்லைகளிலிருந்து விடுபட்டு இன்பம் பெற்றிட இங்கு  வரும் பக்தர்களுக்கு, அபிஷேக ஆராதனைகள் செய்யவும், விளக்கேற்றவும் ஒரு கட்டணத்தை வசூலித்து ஆலய நிர்வாகமே அனைத்து வித  ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து தருகிறது. தோஷங்கள் விலக ராகுவை வழிபடுவோம். பல தொல்லைகளிலிருந்து விடுபடுவோம்.

சங்கடஹர சதுர்த்தி விரதம்

நமக்கு வரக்கூடிய சங்கடங்களை நீக்க சகல சௌபாக்கியத்தையும் தரக்கூடியது சங்கடஹர சதுர்த்தி விரதம். அதிலும் குறிப்பாக கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலத்தில் பிறந்தவர்கள், தங்களுக்கு உண்டாகக்கூடிய திருமணத்தடையை  போக்கிக் கொள்ள இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்ளலாம். கேது திசை புக்தி நடப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டால் வாழ்வில் எல்லா தடைகளும் விலகும். சங்கடஹர சதுர்த்தி என்பது சந்திரன் உதயமாகும் போது விநாயகரை வழிபட்டு சந்திரனுக்கு பூஜை செய்வதாகும்.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி நாளில் காலையிலிருந்து விரதம் மேற்கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். இரவு சந்திரனுக்கு பூஜை முடிந்தபின் அந்த நெய்வேதிய பிரசாதத்தை மட்டும் உண்டு தனிமையில் படுத்து உறங்க வேண்டும்.  இப்படி திருமணமாகாதவர்கள் கேதுவால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த விரதத்தை மேற்கொள்வது மூலம் நல்ல மண வாழ்க்கை அமையும். அதிலும்  மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தியானது மிகவும் விஷேசமானது. அது செவ்வாய் கிழமையாக இருந்து விட்டால் மிக மிக  விஷேசமான நாளாக கருதப்பட்டு மஹா சங்கடஹர சதுர்த்தி என அழைக்கப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்வோம். எல்லா வளங்களையும் பெற்று பயன் பெறுவோம்.

கீழப்பெரும்பள்ளம்,

வானகிரி என வழங்கப்படும் இத்திருத்தலத்தில் கேது பகவான் கூப்பிய கரங்களுடன் இத்தலத்து இறைவனாகிய சிவன் நாகநாத சுவாமியை வணங்கும் விதமாக அமைந்துள்ளார். பாம்புகளின் தலைவனாகிய வாசுகியும் இங்கு வந்து வணங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.  கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள், புத்திரதோஷம் உள்ளவர்கள், திருமணம் தடைபடுகிறவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். வட மேற்கு திசையை நோக்கி அமர்ந்துள்ளார் கேதுவின் மனைவி சித்ரலேகா. இத்திருத்தலத்தில் வந்து முறைப்படி வழிபட்டால் இல்லற வாழ்க்கையானது நன்றாக அமையும். கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு  வந்து வழிபட்டால் எல்லா தடைகளும் விலகி சிறப்பான வாழ்க்கை அமையும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Sunday, February 5, 2012

திருமணம் எப்பொழுது நடக்கும்?

பண்டைய காலங்களில் இளம் பிராயத்திலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்தது. ஆனால், காலங்கள் மாற மாற இளமையில் திருமணம் செய்வது சட்டபடி குற்றம் என கூறப்பட்டதால் இளமை திருமணங்கள் வெகுவாக குறைந்து விட்டது. ஆனாலும் தமிழ் கலாசாரத்தில் சமய சந்தர்ப்பங்களுக்கேற்ப ஆணுக்கு 21 வயது பெண்களுக்கு 18 வயது  ஆகிவிட்டாலே திருமணத்தை செய்து வைத்து விடுவார்கள். இலங்கையில் சில பகுதிகளிலும் இந்த வயதுகளில் திருமணம் செய்கிறார்கள். ஆனால் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பெண்களுக்கு 30 வயதுக்கு மேலும் ஆண்களுக்கு 35, 40 வயதுகளிலும் திருமணம் செய்கிறார்கள்.

இளம் வயதிலேயே திருமணம் செய்வது தவறு. இளம் வயது திருமணத்தால் எதையும் புரிந்து கொள்ள முடியாத நிலை, சுற்றத்தாரை அனுசரித்து செல்ல முடியாத சூழ்நிலை போன்றவை ஏற்படுகிறது.  திருமணத்திற்கு உடல் தகுதி, மனத்தகுதி இரண்டுமே அவசியமாகும்.

இது ஒரு புறம் இருக்க வயது முதிர்ந்து திருமணம் செய்து கொள்வதால் பெண்களுக்கு பிள்ளைகளை பெற்றெடுப்பதில் சிக்கல்கள், அவர்கள் வளர்வதற்குள் முதுமை, பருவத்தை எட்டி விடும் நிலை போன்றவை ஏற்படுகிறது. திருமணத்தை தக்க வயதில் செய்வதுதான் சிறப்பு. ஒருவரின் ஜெனன ஜாதக ரீதியாக அவருக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்பதினைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம். வரன் பார்க்கும் பெற்றோர்களுக்கு ஒரு தவறான கருத்து உள்ளது. குருபலன் வந்து விட்டால் தன் பிள்ளைக்கு திருமணம் நடந்து விடும் என்று ஜோதிடரை அணுகும் போது குருபலம் வந்து விட்டதா பாருங்கள் என ஜாதகத்தை காண்பித்து கேட்கிறார்கள். குரு பலம் என்பது கோட்சார ரீதியாக குருபகவான் ஜென்மராசிக்கு 2,5,7,9,11 ஆகிய வீடுகளில் சஞ்சரிப்பதைத்தான் சொல்வார்கள்.

குரு இந்த வீடுகளில் கோட்சார ரீதியாக சஞ்சரிக்கும் காலங்களில் நற்பலன்களையும், சுபகாரியங்கள் கைகூடக்கூடிய அமைப்புகளையும் ஏற்படுத்துவார் என்றாலும், திருமண வயதை அடைந்தவர்களுக்கு கோட்சார ரீதியாக உண்டாகக் கூடிய குருபலம் மட்டுமின்றி ஜெனன ஜாதக ரீதியாக நடைபெறகூடிய தசாபுக்திகளும் பலமாக இருப்பது மிகவும் அவசியமாகும்.

ஒருவருக்கு திருமணம் கைகூட 7ம் அதிபதியின் தசாபுக்தியோ, 7ல் அமையப் பெற்ற சுபகிரகங்களின் தசாபுக்தியோ, 7ம் அதிபதி சேர்க்கைப் பெற்ற சுபகிரக தசாபுக்தியோ, 7ம் அதிபதியின் நட்சத்திரத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் தசாபுக்தியோ நடைபெற்றால் திருமணம் கைகூடும், அதுபோல களத்திரகாரன் என வர்ணிக்கப்படக்கூடிய சுக்கிரனின் தசாபுக்தியோ, சுக்கிரனின் நட்சத்திரங்களாகிய பரணி, பூரம், பூராடத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் தசாபுக்தியோ, நடைபெற்றால் திருமண சுபகாரியம் கைகூடும். சந்திரனுக்கு 7ல் அமையப் பெற்ற சுபகிரகங்களின் தசாபுக்தியிலும், 7ம்  அதிபதியின் தசாபுக்தியிலும் ஒருவருக்கு என்னதான் ஜாதக அமைப்புகள் சிறப்பாக இருந்தாலும், கேதுவின் திசை அல்லது புக்தி நடைபெறும் காலங்களில் திருமணம் அவ்வளவு எளிதில் கைகூடி வருவதில்லை. அப்படியே கூடினாலும் மணவாழ்வில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. சிலருக்கு கேதுதிசை ராகுபுத்திக்கு பிறகு வரக்கூடிய குருபுத்தி காலத்தில் மணவாழ்க்கை அமைந்தாலும் வரக்கூடிய வரனுக்கும் ராகுகேது தோஷம் இருந்தால் மட்டுமே ஒரளவுக்கு மனவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

கேதுவின் திசையைவிட திருமண வயதை அடைந்தவர்களுக்கு கேதுவின் புத்தி நடைபெறுகின்ற போதும், கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் தசாபுத்தி நடைபெறும் காலங்களிலும் எவ்வளவு தான் முயற்சித்தாலும் திருமணங்கள் கை கூடுவதில்லை. அப்படியே கூடி வந்தாலும் பல இடையூறுகள் ஏற்பட்டு தாமத நிலையினை உண்டாக்கும். கேது ஞான காரகன் என்பதால் கேது திசாபுக்தி காலங்களில் இல்வாழ்வில் ஈடுபாடு குறையும். வாழ்க்கை துணையை சந்தோஷப்படுத்த முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். இதனால் மணவாழ்க்கையானது மகிழ்ச்சியற்றதாக மாறும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Saturday, February 4, 2012

திருமண வாழ்க்கை இல்லாத நிலை


பிறக்கும் போது பெற்றோரின் அரவணைப்பில் வளரும் நாம் பள்ளிக்கு செல்லும் வயதில் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என அனைவரின் ஆதரவோடு வளர்கிறோம். திருமண வயது என்ற ஒன்று வந்தவுடன் நமக்கென  அமையும் வாழ்க்கைத் துணையின் அரவணைப்பில் மற்ற எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம். என் குடும்பம், என் மனைவி, என் பிள்ளைகள் என ஒரு தனித்துவமே வந்து விடுகிறது. என்ன தான் பெற்றோரின் அரவணைப்பும் பாசமும் நண்பர்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்றாலும், திருமண உறவு என்ற ஒன்று வரும் போது தான் மனிதன் முழுமையடைகிறான்.

மற்ற எல்லா உறவுகளிடம் இருந்தும் ஒரு அடிதள்ளிச் செல்ல நேரிடுகிறது. அதிலும் வரக்கூடிய வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டானால் அந்த வாழ்க்கையே இன்பமயமாகிறது. ஆனால் சிலருக்கு இந்த  திருமண உறவு என்பது எட்டாக்கனியாகவே  மாறிவிடுகிறது. சிலருக்கு திருமணம் என்று நடந்தாலும் இளம் வயதிலேயே வாழ்க்கைத் துணையை இழக்கக்கூடிய சூழ்நிலை, பிரியக்கூடிய வாய்ப்பு என பலவகையில் சங்கடங்கள் உண்டாகின்றது. சிலருக்கு வாழ்க்கை துணையாலேயே பாதிப்புகள் உண்டாகிறது. இதில் ஜோதிட ரீதியாக வாழ்க்கை துணையே ஏற்படாத நிலை ஏன் என பார்ப்போம்.

ஒருவரது ஜாதகத்தில் திருமண வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்ககூடிய 2,4,7,12 ஆகிய வீடுகளும், களத்திர காரகன் சுக்கிரனும் வலு இழந்து பாவகிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தால், திருமண வாழ்க்கையே இல்லாத நிலை ஏற்படும். குறிப்பாக ஒருவரது  ஜாதகத்தில் 4க்கு மேற்பட்ட கிரகங்கள் எந்தவொரு வீட்டில் அமைந்தாலும் அது சந்நியாச வாழ்க்கையை ஏற்படுத்தும். அது போல செவ்வாய், சூரியன், சனி, ராகு கேது, தேய்பிறை சந்திரன், பாவிகள் சேர்க்கைப் பெற்ற புதன்  ஆகியவை  பாவகிரகங்கள் என்பதால் இவற்றில் 4 அல்லது  5 கிரகங்கள் சேர்க்கைப் பெற்று ஒருவரது ஜாதகத்தில் சேர்ந்திருக்குமேயானால்  மணவாழ்க்கை ஏற்படாமல் போய்விடும். குறிப்பாக இந்த மாதிரியான கிரக சேர்க்கைகளானது 7ம் வீட்டில் இருந்தாலும், சுக்கிரன் அல்லது 7ம்  அதிபதியுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும் சந்நியாச வாழ்க்கை வாழ நேரிடம்.

ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டில் 2 க்கும் மேற்பட்ட பாவகிரகங்கள் இருந்து 7ம் வீடு பாவிகள் வீடாக அமைந்து, சுபர் பார்வையின்றி இருந்தாலும், தேய்பிறை சந்திரனானவர் இருபாவிகள் சேர்க்கை பெற்று 7ம் வீட்டில் அமைந்தாலும்,  சந்திரன் சுக்கிரன் இணைந்து சனி, செவ்வாய்க்கு 7ல் இருந்தாலும், ஜென்ம லக்னத்திற்கு 12ம் வீட்டில் சந்திரன் பாவிகள்  சேர்க்கை பெற்றிருந்தாலும் திருமண வாழ்க்கை அமைந்தாலும் நிலைக்காத நிலை உண்டாகும்.  களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் ராக பகவான் இருபாவிகள் சேர்க்கை பெற்று சுபர் சம்மந்தம் இல்லாமல் இருந்தாலும் சனி சந்திரன் இணைந்து 7 ல் அமைந்து சுபர் பார்வையின்றி இருந்தாலும், சுக்கிரன், சந்திரன் பலவீனமாக இருந்து 7,12 ல் பாவிகள இருந்தாலும் மண வாழ்க்கை அமைய தடைகள் ஏற்படும். அப்படியே அமைந்தாலும் பிரச்சினைகள் பிரிவுகள் உண்டாகும்.

நவகிரகங்களில் அலிகிரகம் என வர்ணிக்கப்படுவது சனி, ராகு, புதன் ஆகும். ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றி இருந்தாலும், சனி பகவான் ராக சேர்க்கை பெற்று, 1,7 ல் இருந்து சுபர் பார்வையின்றி இருந்தாலும், ஜென்ம லக்னத்தை சனி, ராகு, புதன் போன்ற கிரகங்கள் சூழ்ந்திருந்தாலும், 8ல் சனி, ராகு, புதன் அமைந்து  7,8 ம் வீட்டிற்கு சுபர் பார்வையின்றி இருந்தாலும், 8ம் வீடு புதன் வீடாக இருந்து சனி, ராகு 8ம் வீட்டைப் பார்த்தாலும், புதன், சனி, ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தாலும், ஜென்ம ராசி என வர்ணிக்கப்படக்கூடிய சந்திரன் சனி, செவ்வாய், ராகு, கேது ஆகிய  பாவகிரகங்களில் ஏதாவது இரு கிரகங்களின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் ஜாதகருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டு இல்வாழ்வில் மகிழ்ச்சியற்ற நிலை உண்டாகும். மேற்கூறிய கிரக அமைப்புகள் பெண்கள் ஜாதகத்தில் இருக்குமேயானால் மணவாழ்க்கை சிறப்பாக அமையப்பெறாத நிலை ஏற்படுகிறது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Friday, February 3, 2012

திருமணத்தின் மூலம் வாழ்வில் ஏற்படக்கூடிய முன்னேற்றங்கள்

ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு சென்றவுடன், அந்த வீட்டில் எதிர்பாராத முன்னேற்றங்களும் பொருளாதார உயர்வுகளும் உண்டாகினால் இந்த பெண் வந்த நேரம் நல்ல நேரம். இவள் மகாலஷ்மி என எல்லோரும் போற்றுவார்கள். கஷ்டப்பட்டு ஜீவனம் நடத்தும் குடும்பத்தில் கூட மனைவி என்ற உறவு வந்தவுடன் அதிர்ஷ்டங்களும் தேடி வரும். வாழ்க்கைத் தரமும் உயரும், குப்பை மேட்டிலிருந்தவர்களும் கோபுரத்திற்கு வருவார்கள். மனைவி வந்த பின் தான் வாழ்க்கையில் மாற்றங்களும் உண்டாகும். பொன் 'பொருள்' வரவு, தொழிலில் உயர்வு, சுக வாழ்வு, சொகுசாக அமையும்.

ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடானது களத்திர ஸ்தானமாகும். சுக்கிரன் களத்திர காரகனாவார். பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் 7ம் வீடும், சுக்கிரனும் ஆட்சி உச்சம் பெற்று அமைந்தால் திருமணத்திற்கு பின் அவர் வாழ்வில் பொருளாதார மேன்மைகளும் உயர்வுகளும் உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 2ம் இடம் தனஸ்தானம் ஆகும். 11ம் இடம் லாப ஸ்தானம் ஆகும்.  ஒருவரின் ஜாதகத்தில் 2,11 க்கு அதிபதிகள் 7ம் வீட்டு அதிபதியுடனோ, சுக்கிரனுடனோ இணைந்து பலம் பெற்றிருந்தாலும், 7ம் அதிபதியுடன் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் திருமணத்திற்குப் பின் வாழ்க்கைத் தரமே உயர்ந்து எல்லாவகையிலும் மேன்மைகள் உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 4ம் பாவம் வீடு, வாகன யோகத்தை குறிக்கக்கூடிய ஸ்தானமாகும். ஜாதகத்தில் 4ம் அதிபதியும், 7ம் அதிபதியும், சுக்கிரனும் பலம் பெற்றிருந்தால் 4,7 க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் திருமணத்திற்கு பின் சொந்த பூமி மனை, வீடு,யோகம், வண்டி,வாகன வசதிகள் போன்றயாவும் சிறப்பாக அமையும். 4,7 க்கு அதிபதிகள் சுக்கிரனுடன் இணைந்து ஆட்சி உச்சம் பெற்றோ, பரிவர்த்தனை பெற்றோ, பலமாக இருந்தால், சிறப்பாக தொழில் யோகம் உண்டாகி நிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதிலும் 10ம்  அதிபதியுடன் 7ம் அதிபதி இணைந்திருந்தாலும், பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் திருமணத்திற்குப் பின் வாழ்க்கைத் துணையுடன் இணைந்து தொழில் செய்து வாழ்வில் உயரக்கூடிய யோகம் உண்டாகும்.

7,10 க்கு அதிபதிகளுடன் சுக்கிரனின் சம்மதமும் ஏற்பட்டிருந்தால் கணவன், மன¬வி இணைந்து தொழில் மூலம் சம்பாதித்து ஏற்றங்கள், உயர்வுகளை அடைய முடியும். உபய லக்னமான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு 7,10 க்கு அதிபதிகள் இணைந்து பலம் பெற்றிருந்தால் எக்காரணத்தைக் கொண்டும் வெளியாட்களை கூட்டாளிகளாகச் சேர்க்காமல் மனைவியை மட்டுமே கூட்டாளியாக வைத்து தொழில் செய்வது மூலம் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். ஏனென்றால் உபயலக்னகார்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் ஆகும்.
ஒருவர் ஜாதகத்தில் 10 ம் அதிபதி பலமாக அமைந்திருந்தாலும் 7ம் அதிபதி அதிபலம் பெற்றிருந்தால் தங்கள் பெயரில் தொழில் செய்வதை விட அவர்களின் வாழ்க்கைத் துணையின் பெயரில் தொழில் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடையமுடியும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Thursday, February 2, 2012

காதல், கலப்பு திருமணம் ஏற்படமா?

இன்றைய இளைஞர்களுக்கு காதல் என்ற சொல்லே ஐஸ் கிரீம் சாப்பிடுவது போல இனிமையாக இருக்கும். இளைஞர்கள் மத்தியில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் பேய் என்றும் காதலைக் கூறலாம். காதல் செய்வதால் வரக்கூடிய சாதக பாதகங்களைப் பற்றியோசிப்பதற்கு  இன்றைய இளைஞர்களுக்கு நேரமில்லை. காதல் என்பது ஜாதி, மதம், இனம், மொழிகளைக் கடந்து, வரதட்சணை போன்ற பிரச்சனைகளுக்கும் ஓர் தீர்வு என்பதால் அது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், காதல் என்ற பெயரால் காம விளையாட்டுகளில் ஈடுபட்டு, பெற்றவர்களுக்கும் சுற்றத்தாருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் காதலர்களை ஏற்றுக் கொள்ள முடியாது தான்.

காதலுக்கு கண்ணில்லை என்பதால் காதலிக்கும் போது நிறை குறைகள் பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் திருமணத்திற்குப் பின் சின்ன சின்ன விஷயங்கள் கூட பூதாகரமாகி விடும். காதலிப்பது மன ரீதியாக ஆரோக்கியமான விஷயம் என்பதால், காதலிப்பதில் தப்பில்லை. திருமண வாழ்க்கையை அனுசரித்து வாழ  முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே காதலிப்பது நல்லது. ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது, ஏமாறுவது போன்றவை நடக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. காதலிக்கக்கூடிய வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லை. காதல் திருமணமும், கலப்புத் திருமணமும் அவரவரின் பிறந்த ஜாதகத்திலேயே கிரகங்களால் குறிப்பிடப்பட்டு இருக்கும். காதல் என்பது காமம் அல்ல. அது ஒரு அன்பின் ஈர்ப்பு. இனக்கவர்ச்சியும், உடல் உணர்ச்சியையும் காதல் என்ற பெயரால் அசிங்க படுத்தாமல் இருப்பது நல்லது. முதலில் மனதை புரிந்து கொள்ளுங்கள்.
ஜோதிட ரீதியாக காதலுக்கு முக்கிய காரணமாக விளங்கும் கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும். இதில் சந்திரன் மனோகாரகன். சுக்கிரன்  காதல், பாலியல் உணர்வுகளுக்கு காரகன். காதல் உணர்வுகளுக்கும் காமவிளையாட்டுகளுக்கும் செவ்வாயின் பங்கும் உண்டு. ஏனென்றால், செவ்வாய் பெண்களுக்கு களத்திரகாராகனாவார். ஜென்ம லக்னத்திற்கு  5 ம் வீடும் 7ம் வீடும் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் போன்றவையும் பாவகிரகங்களால் பாதிக்கப்பட்டாலும், சந்திரன், சுக்கிரன், செவ்வாயுடன் 5,7 க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும், அந்த ஜாதகங்களுக்கு காதல் கண் மூடித்தனமாக அதிகரித்து திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகிறது.

சந்திரன் மனோகாரகன் என்பதால் காதல் உணர்வை அதிகம் தூண்டி விடுவார். குருபகவானிடம் வித்தை கற்கசீடராக சேர்ந்த சந்திரன் அழகாக இருந்ததால், குருவின் மனைவி தாராவின் ஆசை நாயகன் ஆனார்.  இதை அறிந்த குரு உண் அழகினால் தானே இந்தநிலை என சந்திரனை தேய்ந்து வளர சாபமிட்டார். இதனால்தான் சந்திரன் கெட்டதும் பெண்ணாலே என கூறுவார்கள். காதல் எல்லை தாண்டினால் பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு. சந்திரனை நிலா என்றும் கூறுவதுண்டு. எத்தனை காதலர்கள் நிலாவைப் பார்த்து பெருமூச்சு விட்டிருப்பார்கள். நிலவின் ஒளியில் மடியில் படுத்து மயக்கமொழி பேசியிருப்பார்கள். நிலா தூது செல்லாது என தெரிந்தும் எத்தனை காதலர்கள் தூது விட்டிருப்பார்கள். காதலர்கள் தம்பதிகள் ஆனதும் முதலில் செல்வது தேனிலவுக்குத் தானே.

திருமணம் என்பது இருமனங்களை ஒன்றுபடுத்தக்கூடிய சமயச் சடங்காகும். அவரவர் மொழி,  இனங்களுக்கேற்ப நடத்தப்படும் இந்த சடங்கானது பாரம்பரியமிக்கதாகும். இதிலிருந்து மாறி அவரவர் மனதிற்கேற்றவரை தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளும் காதல் வாழ்க்கையானது, இந்த சமய சடங்குகள் அனைத்தையும் தாண்டி கலப்புத் திருமணமாகவும் அமைகிறது. ஒருவரின் ஜாதகத்தில் 5ம்  வீடானது பூர்வீதத்தைப் பற்றி குறிப்பிடுவதாகும். இந்த 5ம் வீடானது பாதிக்கப்படுகின்ற போது உறவுகளிலிருந்து விலகி காதல் வயப்படக்கூடிய சூழ்நிலை கலப்புத் திருமணம் செய்து கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டாகிறது.

ஒருவர் ஜாதகத்தில் 5 வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும், 5ம் அதிபதி சனி, ராகு கேது சேர்க்கைப் பெற்றாலும், 5ல் அமையக்கூடிய பாவிகளுடன் 7ம் அதிபதி சேர்க்கைப் பெற்றாலும், 5,7 க்கு அதிபதிகள் இணைந்து உடன் பாவகிரகங்களின் தொடர்பு -ஏற்பட்டிருந்தாலும் காதல் வயப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு திருமணம் செய்யும் வாய்ப்பு உண்டாகும். 5,7 க்கு அதிபதிகள்  பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் ஒருவருக்கொருவர்  பார்த்துக்கொண்டு சனி, ராகு சேர்க்கைப் பெற்றாலும், காதல் ஏற்பட்டு கலப்பு திருமணம் நடைபெறுகிறது.

ஒருவர் ஜாதகத்தில் 7ம் வீடு களத்திர ஸ்தானமாகும். களத்திரகாரகன் சுக்கிரனாவார். 7ம் வீட்டதிபதியும், சுக்கிரனும் சனி, ராகு போன்ற பாவிகளின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும், 7ல் செவ்வாய் சனி, ராகு அமையப் பெற்று, சுபர் பார்வையின்றி இருந்தாலும் காதல் திருமணம் கலப்பு திருமணம் நடைபெறுகிறது..  7ம் வீட்டில் கேது அமையப்பெற்று 7ம் அதிபதியும் சுக்கிரனும் கேது சேர்க்கை அல்லது கேதுசாரம் பெற்றிருந்தால் திருமணம், கலப்புத் திருமணம் நடைபெறும். ஜென்ம லக்னத்திற்கு 5ல் 1,7 க்கு அதிபதிகள் இருந்தாலும் 5 ம் அதிபதி பாவியாக இருந்து ஜென்ம லக்னத்தில் அமைந்து 7 ம் வீட்டை பார்வை செய்தாலும் காதலித்து திருமணம் செய்யும் வாய்ப்பு மற்றும் கலப்புத் திருமணங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டில் ராகுபகவான் அமையப் பெற்று, 7ம் அதிபதியும் சுக்கிரனும் ராகு சாரம் பெற்றிருந்தால், சிறிதளவாவது வேறுபட்ட ஒருவரை  கலப்புத் திருமணம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டை குறிப்பிடுவது போல சந்திரனுக்கு 7ம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு போன்ற கிரகங்களில் ஏதாவது இருகிரகங்கள் அமையப் பெற்றாலும் பழக்கவழக்த்தில் மாறு பட்ட இடத்தில் திருமணம் செய்ய நேரிடும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Wednesday, February 1, 2012

சொந்தத்தில் திருமணம்

ஒருவருக்கு அமையக்கூடிய வாழ்க்கைத் துணை யானது சொந்தத்தில் அமையுமா, அந்நியத்தில் அமையுமா என்பது திருமண வயதை அடைந்தவர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாகும். அக்காலங்களில் சொந்தங்கள் விட்டு போய்விடக்கூடாது என்பதற்காகவும், சொத்துக்கள் கைமாறி வெளியில்  சென்றால் பிறர் அனுபவிப்பார்கள், அதைவிட நம் சொந்தங்கள் அனுபவிக்கட்டுமே என்பதற்காகவும் ஒன்றுக்குள் ஒன்றாகவே சொந்தத்தில் திருமணத்தை செய்து முடிப்பார்கள். ஆனால் மருத்துவ ரீதியாக சொந்தங்களில் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தைகள் ஊனமாக பிறக்கும் என கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் சொந்தத்தில் திருமணம் செய்வதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. என்றாலும் தூரத்து சொந்தங்களில் திருமணம் செய்து வைக்கிறார்கள். சரி ஜோதிட ரீதியாக ஒருவருக்கு அமையக்கூடிய வாழ்க்கை துணையானது சொந்தத்தில் அமையுமா, அந்நியத்தில் அமையுமா என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஜென்ம லக்னத்திற்கு களத்திர ஸ்தானமான 7ம் வீடும்,  களத்திரகாரகன் சுக்கிரனும் சுபகிரக சேர்க்கை, பார்வை மற்றும் சுபநட்சத்திரங்களில் அமையப் பெற்று இருந்தால் மனைவியானவள் நல்ல ஒரு கௌரவமான இடத்திலிருந்து அமைந்து மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடும், சுக்கிரனும் சொந்த பந்தங்களைக் குறிக்க கிரகங்களின் சேர்க்கை பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் உறவில் திருமணம் நடைபெறக்கூடிய உன்னதமான அமைப்பு உண்டாகும். நவகிரகங்களில் முதன்மை கிரகமாக விளங்கக்கூடிய சூரியன் தந்தை காரகனாவார். ஜென்ம லக்னத்திற்கு 9ம் இடம் தந்தை ஸ்தானமாகும். 9 க்கு 9 இடமாக, 5 ம் வீடு தந்தை வழி மூதாதையர் பற்றியும் பூர்வ புண்ணியத்தை பற்றியும் குறிப்பிடும் ஸ்தானமாகும். ஒருவரின் ஜாதகத்தில் 5,9 ல் சுபகிரகங்கள் அமையப் பெற்று 7ம் அதிபதியும், சுக்கிரனும் சூரியன் சேர்க்கை அல்லது சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் போன்றவற்றில் அமையப் பெற்றோ 5,9 க்கு அதிபதிகளுடன் 7ம் அதிபதியும். சுக்கிரனும் அமையப் பெற்றோ இருந்தால் திருமணமானது தந்தை வழி உறவில் அமையும்.

நவக்கிரகங்களில் தாய்காரகன் சந்திரனவார். தாய்மாமனை குறிக்கக்கூடிய கிரகம் புதன் பகவான் ஆவார். 4ம் வீட்டில் வளர்பிறை சந்திரனும், புதன் பகவானும் சுபர் பார்வை பெற்றாலும் 7ம் அதிபதி சுபராக இருந்து வளர்பிறை சந்திரன் புதன் சேர்க்கைப் பெற்றாலும், சுக்கிரனும் சந்திரன் புதன் சேர்க்கை பெற்றாலும்,  நட்சத்திரங்களான ரோகினி, அஸ்தம், திருவோணம், ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்றவற்றில் அமையப்பெற்றாலும் தாய் வழி உறவில் அல்லது மாமன் மகளை மணம் முடிக்கக்கூடிய அமைப்பு, பெண் என்றால் மாமன் மகனை மணம் முடிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

ஜென்ம  லக்னத்திற்கு 3ம் இடமானது இளைய உடன் பிறப்பையும், 11 ம் இடமானது மூத்த உடன் பிறப்புகளையும் பற்றி குறிப்பிடக்கூடிய ஸ்தானமாகும். நவக்கிரகங்களில் செவ்வாய் சகோதர காரகனாவார். ஒருவரது ஜாதகத்தில் 7ம் அதிபதியும், சுக்கிரனும் 3,11 க்கு அதிபதிகளுடன் சேர்க்கைப் பெற்று, சுபர்சாரம் மற்றம் சுபர்சேர்க்கை பெற்று, செவ்வாயின் சம்மந்தம் ஏற்பட்டிருந்தால் உடன் பிறந்தவர்களின் உறவினர்களின் வழியில் மண வாழ்க்கையானது அமையும்.

ஆக ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடும் சுக்கிரனும் பந்தங்களை குறிக்கக்கூடிய கிரகங்களான சூரியன், சந்திரன் செவ்வாய், புதன் குரு தொடர்புடன் அமைந்தால் நெருங்கிய உறவில் திருமணம் நடைபெறும். என்றாலும் 7ம் அதிபதியோ, சுக்கிரனோ சனி, ராகு, கேது சேர்க்கை அல்லது சாரம் பெற்றிருக்கும் பட்சத்தில் நெருங்கிய உறவில் அமையாமல், தூரத்து உறவில் அந்நியத்தில் திருமணம் கைகூடும். சுபகிரகங்களின் ஆதிக்கம் 7ம் வீட்டிற்கும், 7ம் அதிபதிக்கும் இருக்குமேயானால் ஜாதி மத வேறுபாடுமின்றி பிறந்த குலத்திலேயே திருமணம் செய்யும் வாய்ப்பு உண்டாகும்.

ஒருவரது ஜாதகத்தில் 7ம் வீட்டில் சனி அமையப் பெற்றாலோ, 7ம் அதிபதி சனி சேர்க்கை பெற்றாலோ உறவுகளில் இல்லாமல் அந்நியத்தில் திருமணம் நடக்கும். சனிபகவானனவர் சுபகிரக சம்மந்தத்துடனிருந்தால் அந்நியத்தில் ஓரளவுக்கு நல்ல இடத்தில் வாழ்க்கை அமையும். 7ல் அமையும் சனி ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றாலும்,5ல் சனி ராகு அல்லது கேதுயுடன் இனைந்தாலும் சனி,ராகு இனைந்து 7ம்    அதிபதியின் சேர்க்கை அல்லது சுக்கிரனின் சேர்க்கை பெற்றிருந்தாலும்  கலப்பு திருமணம், மதம் மாறி திருமணம், செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001