Sunday, March 25, 2012

தாய்

தாய் என்ற வார்த்தைக்குத்தான் என்ன மதிப்பு. தாய் என்றாலே அன்பு, பாசம், பண்பு என்று எல்லாம் கலந்த கலவையாக அல்லவா இருக்கிறாள். ஆசைப்பட்டா, காசு இருந்தா எல்லாத்தையும் வாங்கலாம். அம்மாவ வாங்க முடியுமா, என்ன ஒரு கவிஞனின் வார்த்தைகள். அம்மாவை புகழாத கவிஞனோ, மகளோ, மகன்களோ இந்த பூமியில் இருக்கவே முடியாது. கருவறையில் பத்து மாதங்கள் நம்மை பத்திரமாக பாதுகாத்து உள்ளிருந்து நாம் தரும் துன்பங்களை எல்லாம் பொறுமையுடன் தாங்கி, தான் ஆசைபட்டவைகளை உண்ணாமல், உறங்காமல் அனைத்தையும் தியாகம் செய்து பூமியில் நாம் ஜனிக்க காரணமாக விளங்குபவள் தாய். நாம் பிறந்தவுடன் அள்ளி அணைத்து முத்தமிட்டுதான் பட்ட கஷ்டங்களை எல்லாம் மறந்து பாலூட்டி சீராட்டி வளர்ப்பவள் தாய். ஒரு தாய்க்கு ஒரு மகன் எழுதிய கவிதை வரிகள் 'அடுத்த ஜென்மத்தில் என் தாய்க்கு மிதி

அணிகளாய் பிறக்க ஆசைப்படுகிறேன். என்னை கருவறையில் சுமந்த என் தாயை நான் சுமக்க அது ஒன்றே வழி'  என்று எழுதியிருக்கிறான்.

இப்படி தாயின் பெருமைகளைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம். ஆனால் நாம் பிறந்த நேரம் தாய்க்கு நல்லது செய்யுமா? தாய் வழி உற்றார், உறவினர்களிடையே பந்தம் நீடிக்குமா? தாயின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்? நம்மால் அவளுக்கு அனுகூலம் உண்டா? அவளால் நமக்கு நற்பலன் விளையுமா? என்பதைப் பற்றியெல்லாம் ஜோதிடம் என்ற காலக கண்ணாடியின் மூலம் தெளிவாக அறியலாம்.

இதற்கு உறுதுணையாக இருப்பது அவரவரின் ஜனன காலத்தில் அமையும் 4 ம் பாவமே. நவக்கிரகங்களில் தாய் காரகனாக விளங்குபவர் சந்திரன். ஒருவரது ஜாதகத்தில் 4 ம் பாவமும், தாய் காரகன் சந்திரனும் பலமாக அமைவது ஜாதகரைப் பெற்ற தாய்க்கு நல்ல அனுகூலத்தை ஏற்படுத்தும். தாயால் ஜாதகருக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து நற்பலன்களையும் உண்டாக்கும்.

4ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருப்பதும், நட்பு கிரக வீட்டில் அமைந்திருப்பதும் சிறப்பு. நட்பு கிரகசேர்க்கைப் பெற்றிருப்பதும் குரு போன்ற சுப கிரக பார்வையுடன் 4ம் அதிபதியும் சந்திரனும் பலமாக அமையப் பெற்றிருப்பதும், தாய்க்கு நீண்ட ஆயுளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். தாய் காரகன் சந்திரன் ஆட்சி உச்சம் பெற்றோ, நட்பு வீட்டில் அமையப் பெற்றோ இரந்தால் தாய்க்கு ஆயுள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

4ம் அதிபதி பலம் பெற்று, திரிணோதிபதிகளாகிய 5,9 ம் அதிபதிகளின் சேர்க்கை பெற்று அந்த கிரகங்களுக்கு சந்திரனின் தொடர்பிருந்தால், ஜாதகருக்கு தாயால் ஏற்படக்கூடிய அனைத்து நற்பலன்களும், செல்வம் மற்றும் செல்வாக்குகளும் கிடைக்கப் பெறும். தாய் வழியில் அசையாச் சொத்து யோகம் உண்டாகும். தாய் வழி உற்றார் உறவினர்களின் அனுசரணையும், ஆதரவும் சிறப்பாக இருக்கும்.

குழந்தை பிறப்பு என்பது தாய்க்கு மறு ஜென்மம் என்றே கூறலாம். எல்லா பெண்களுக்கும் எளிதாக குழந்தை பிறந்து விடுவதில்லை. சிலருக்கு அறுவை சிகிச்சை மூலமோ, சிலருக்கு ஆயுதங்களை உபயோகப்படுத்தியோ, குழந்தையை வெளியே எடுக்கக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகின்றது. அதற்கும் பிறக்கும் குழந்தையின் 4ம் பாவமானது பாதிக்கப்பட்டோ, சுபர் பார்வை இன்றி இருந்தாலோ, சனி பார்வை மற்றும் கிரகணங்களை ஏற்படுத்தக்கூடிய ராகு கேது,  சேர்க்கை பெற்றோ சந்திரன் இருந்தாலும் பிரசவத்தில் மிகவும் கஷ்டங்களை எதிர்கொள்ள நெரிடுகிறது.

கடந்த மாதம் அயல்நாட்டில் பிரசவத்தின் போது தாயும் மகளும் இறந்து விட்டதாக அறிவித்த மருத்துவர்கள் மீண்டும் அவர்கள் உயிர்த்தெழுந்த அதிசயத்திற்க விடை தெரியாமல் விழித்தார்கள். இதற்குக் காரணம் விஞ்ஞானத்தையும் தாண்டி அந்த குழந்தையின் 4ம் பாவ கிரக அமைப்பாக இருக்கலாமல்லவா?

சில குழந்தைகள் பிறக்கும்போதே தாயை இழக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகிறது. இதற்கு என்ன காரணம் என ஜோதிடரீதியாக பார்க்கம் போது 4ம் அதிபதி நீசம் பெற்றிருந்தாலும், சந்திரன் பலஹீனமாக  இருந்து சனி, ராகு போன்ற பவ கிரகங்களின் சேர்க்கை பெற்று சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்திருந்தால், முதலில் சந்திர திசை நடக்கும். அதுவே தாய்க்குக் கண்டத்தைக் கொடுக்கும்.
4 ம் பாவமும் சந்திரனும் பாதிக்கப்பட்ட ஒரு ஜாதகருக்கோ, ஜாதகிக்கோ பாதிக்கப்பட்ட கிரகங்களின் தசா புத்திகள் நடைபெறும் காலங்களில் தாய்க்குப் பாதிப்புகளை உண்டாக்கும். மேலே குறிப்பிட்ட காலத்தில் ஏழரை சனி, அஷ்டமச் சனி போன்றவைகள் நடைபெற்றாலும் தாய்க்கு மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் ஏற்படும். தூய்மையானது தாய்மை. குழந்தையை இழிவுபடுத்தக்கூடிய சில பேய்களும் தாய் என்ற பெயரில் உலா வந்து கொண்டுதான் இருக்கின்றனர். இப்படி தாயாலேயே கொடுமைகளை அனுபவிக்கும் குழந்தைகளும் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். பிறந்தவுடன் குப்பைத் தொட்டியில் போடுவது, கொடுமைப் படுத்துவது, மற்றவர்களுடன் சேர்ந்துக் கொண்டு பெற்ற பிள்ளைகளையே விரோதியாக நினைப்பது போன்ற துரூ குணங்களைக் கொண்ட தாய் அமையக் காரணம் என்னவென்று ஜோதிட ரீதியாக  ஆராயும்போது, 4ம் அதிபதிபதியும் சந்திரனும்  6ம் வீட்டிலோ, பாதக ஸ்தானத்திலோ அமையப் பெற்றிருந்தாலும், 4ம் அதிபதியும், 6ம் அதிபதியும் சேர்க்கை பெற்றிருந்தாலும்  தாயாலேயே பிள்ளைகளுக்கு துன்பம் உண்டாகும்.

காலபுருஷ தத்துவப்படி 4ம் பாவம் கடகராசியாகும். அதுவே சந்திரனின் சொந்த வீடாகும். கடகத்தில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையப் பெற்றிருந்தால் தாய்க்குப் பாதிப்பு, தாய் வழி உறவினர் வகையில் பகை உண்டாகம்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001



No comments: