Sunday, May 6, 2012

குரு பெயர்ச்சிபலன்கள் ரிஷப ராசி

ஆடம்பர வாழ்க்கையிலும், அழகாக ஆடை அணிவதிலும் அதிக ஆர்வம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே!

ஆண்டுக் கோளான குருபகவான் வரும் 17.05.2012 முதல் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செ;யவுள்ளார். ஜென்ம ராசியில் கேது வும் 7ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் பண விஷயங் களில் கவனமுடன் செயல்படுவது திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை பெறமுடியும், என்றாலும் உங்கள் ஜென்ம ராசிக்கு தர்ம கர்மாதிபதியான சனி பகவான் குணரோக ஸ்தானமான 6ம் வீட்டில் உச்சம் பெற்று பலமாக சஞ்சரிப்பதால் குருவால் ஏற்படகூடிய பிரச்சனைகள் குறைந்து வாழ்வில் முன்னேற்றங்களை அடைய முடியும். 02.12.2012ல் ஏற்படக்கூடிய சர்ப கிரகமாற்றத்தின் மூலம் ராகுபகவானும் 6ம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் மேலும் உங்களின் பலமும் வலிமை யும் கூடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக உள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். பொருளாதாரம் உயரும் கடன்கள் சற்று குறையும்.


முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்

0091 7200163001,9383763001

குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி  ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்  குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

    அன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300  (ரூபாய் 1200  வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன்,   தொடர்புக்கு ஜோதிடமாமணி  முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல்  7200163001.9383763001 ,

 

 

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail: murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

Name ; MurughuRajendran
Bank name - Indianbank
Savings Account No - 437764153
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
தேக ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் அஜீரண கோளாறு போன்றவை உண்டாகும். மனைவி மற்றும் நெருங்கியவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உங்களுக்கிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி விரோதிகள் நண்பர்களாக செயல் படுவதால் மனநிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும் மற்றவர்களின் உதவிகள் தடையின்றி கிடைத்து எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

குடும்பம் பொருளாதார நிலை
குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். குருபகவான் கேது சேர்க்கைப் பெற்று ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பொரு ளாதார நிலையானது குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யுமளவிற்கு அமையும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். கணவன் மனைவியடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குருபார்வை 7ம் வீட்டிற்கு இருப்பதால் பெரிய கெடுதிகள் ஏற் படாது. உற்றார் உறவினர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. ஆடம்பர செலவு களை குறைத்துக்கொண்டால் கடன்கள் உண்டாவதை தவிர்க்கலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, ஊதிய உயர்வுகள் போன்ற யாவும் தடையின்றி கிட்டும். பணியிலும் நிம்மதியான நிலையிருக்கும். திறமைகளை வெளிப்படுத்து வதற்கான சந்தர்ப்பங்களும் கிடைப்பதால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், ஆதரவும் சிறப்பாக அமையும். வெளியூர் வெளிநாடு களுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்கள் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடன் பணிபுரிபவர்களும் ஒத்துழைப்புடன் செயல்படு வதால் வேலைபளு குறையும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி ஓடும். என்றாலும் எதிர்பார்த்த லாபங்களும், புதிய வாய்ப்புகளும் சற்று தாமதப்படும். குறித்த நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. பயணங்களால் அனுகூலம் கிட்டும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து விடக்கூடிய ஆற்றலும் உண்டாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம்.

கமிஷன், ஏஜென்ஸி

தனக்காரன் குருபகவான் உங்கள் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் பணவிஷ யங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றத் துறைகளிலிருப்போருக்கு சுமாரான லாபமே கிட்டும். முடிந்தவரை பெரிய முதலீடு களை ஈடுபடுத்துவதை தவிர்ப்பதால் வீண் விரயங்கள் ஏற்படுவதையும் குறைக்க முடியும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல் வாதிகள் பதவிகளை தக்கவைத்துக் கொள்ள மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவது நல்லது. எடுக்கும் முயற்சிக ளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடுவதால் பொருளாதார நிலை சற்று மந்தமடையும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகள் பட்டபாட்டிற்கான பலனை சற்று கஷ்டப்பட்டாவது அடைந்து விடுவார்கள். விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலையினைப் பெற முடியாமல் போகும். கால்நடைகளால் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டு. புதிய முயற்சிகளில் ஈடு படும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம்.

பெண்களுக்கு

குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறை யாது. முடிந்தவரை குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணவரவுகள் தேவைகேற்ற படியிருந்தாலும் ஆடம்பரமாக செலவுகள் செய் வதை தவிர்த்து விட்டால் கடன்கள் ஏற்படுவதை யும் குறைக்கலாம். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். பணிபுரியவர்களுக்கும் உயர்வுகள் ஏற்படும்.

படிப்பு

கல்வி பயிலுபவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைத்து மகிழ்ச்சியடைவார்கள். பெற்றோர் ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் மேலும் மேலும் உற்சாகத்தை அளிக்கும். உல்லாசப் பயணங்கள் செல்லும் வாய்ப்புகளும் கிட்டும். தேவையற்ற நட்புகள் விலகி நல்ல நண்பர்களின் ஆதரவும் மகிழ்ச்சிதரும். அரசு வழியில் ஆதரவுகள் சற்று தாமதமாகும்.

ஸ்பெகுலேஷன்

லாடட்டரி, ரேஸ் போன்றவற்றில் பெரிய தொகை களை ஈடுபடுத்தினால் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள்.

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் 17.05.2012 முதல் 29.06.2012 வரை

குருபகவான் இக்காலங்களில் கேது சேர்க்கைப் பெற்று ஜென்ம ராசியிலேயே சஞ்சரிக்கிறார். குரு ஜென்ம ராசியில் சஞ்சரித்தாலும் கேது சேர்க்கையுடனிருப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றகூடும் என்பதால் அனை வரையும் அனுசரித்து செல்வது நல்லது. ஜென் மராசியில் கேதுவும் 7ல் ராகுவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். தொழில் வியா பாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதும் உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்க ளுக்கும் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில்  30.06.2012 முதல் 10.10.2012 வரை

குருபகவான் ஜென்ம ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் பொருளாதார நிலை சுமாராகத்தானிருக்கும். பணம் கொடுத்தால் திரும்ப பெறுவது கடினமான காரியமாகும். பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப் பதை தவிர்ப்பதும் நல்லது. குடும்ப ஒற்றுமை ஓரளவுக்கு திருப்திகரமாக இருந்தாலும் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். வரும் 12.09.2012 முதல் மீண்டும் சனி துலா ராசியில் 6ம் வீட்டில் சஞ்சரிக்க இருப் பது அற்புதமான அமைப்பு என்பதால் எந்தவித வம்பு வழக்குகள், போட்டி பொறாமைகள் யாவும் இல்லாமல் மனநிம்மதி உண்டாகும். பொருளாதார நிலையும் சற்று உயரும். தொழில் வியாபாரம் செய்பவர்களின் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களும் உயர் வடைவார்கள். அரசியல் வாதிகளின் பேச்சிற்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும், கௌரவமும் உயரும்.

குருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை

குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பே என்றாலும் சனி 6ல் பலமாக சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றிப் பெறக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டா கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்ச pகளில் தடைகள் நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள  சர்பகிரக மாற்றத்தால் ராகு பகவான் 6ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது மேலும் உங்கள் பலத்தை அதிகரிக்கச் செய்யக்கூடிய அமைப்பாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்த நெருக்கடிகள் குறைந்து உயரதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

குருபகவான ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை சந்திப்பீர்கள். இது மட்டுமன்றி 6ல் சஞ்சரிக்கும் சனியும் வக்ர கதியி லிருப்பதால் இக்காலங்களில் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவதே நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறைவு, உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடு போன்ற யாவும் ஏற்பட்டு மன உளைச்சலை உண்டாக்கும். குடும்பத் தேவை களைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டி வரும். நீங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டாலே பிரச்சனைக்கு உள்ளாவீர்கள். தொழில் வியாபாரத்திலும் போட்டிகளை எதிர் கொள்ள நேரிடும். மறைமுக எதிர்ப்புகளால் வரவேண்டிய வாய்ப்புகளும் தட்டி செல்லும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறு களுக்கும் பொறுப்பேற்க வேண்டிய காலம் என்பதால் பணியில் கவனமுடனிருப்பது நல்லது. வேலை பளுகூடும். 

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை

இக்காலங்களிலும் எதிலும் சிந்தித்து செயல்படு வதே நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உங்களுக்கே தேவை யற்ற பிரச்சனைகளை உண்டாக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலிலும் வீண் விரயங் கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும், 6ல் ராகு இருப்பதால் எதையும் சமாளித்து விடக் கூடிய ஆற்றலையும் பெறுவீர்கள். உத்தியோகஸ் தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும். அரசியல்வாதி கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் உடனிருப்பவர்களிடம் கவனமுடனிருப்பதும் மிகவும் உத்தமம்.

கார்த்திகை 2,3,4 பாதங்கள்

இயற்கையிலேயே நல்ல தைரியமும் துணிவும் கொண்டு கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குருபகவான் சற்று சாதகமற்று சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவிஷயத்தில் கொடுத்ததை கேட் டால் அடுத்தது பகையாகிவிடும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகள் நிலவும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நன்மையளிக்கும்.

ரோகிணி

எந்த எதிர்ப்புகளையும் திறமையுடன் சமாளிக்க கூடிய ரோகினி நட்சத்திர நேயர்களே குருவின் சாதகமற்ற சஞ்சாரத்தால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டாலும் சனிபகவான் 6ல் சஞ்சரித்து உங்கள் குறைகளை தீர்ப்பார் என்றாலும் பண விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்றாலும் எதிர்பார்த்த லாபங்கள் சற்று தாமதப்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த நேரிடும். புத்திர வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

மிருகசீரிஷம்

எதிலும் சிந்தித்து செயல்படும் மிருகசீரிஷ நட்சத்திர நேயர்களே! குரு ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகள் தாராளமாக இருந்தாலும் தேவையற்ற விரயங்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் அமையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும். 

அதிர்ஷ்டம் அளிப்பவை

திகதி: 6,15,24

 திசை: தென்கிழக்கு

கிழமை: வெள்ளி

 கல்: வைரம்

நிறம்:வெள்ளை

 தெய்வம்:ஸ்ரீலக்ஷ்மி

பரிகாரம்

ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குருஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, வியாழக் கிழமைதோறும் தட்சிணாமூர்த்திக்கு கொண் டைக்கடலை மாலை சாற்றி நெய்தீபமேற்றி வழிபடுவது உத்தமம் 02.12.2012 வரை கேது ஜென்ம ராசியிலும் ராகு 7லும் சஞ்சரிப்பதால் துர்க்கை வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

No comments: