Friday, June 29, 2012

மின்சார அறை, உபரணங்கள் அமைக்கும் இடங்கள்



 மின்சார அறை, உபரணங்கள் அமைக்கும் இடங்கள்

     வாழும் வீட்டிற்கு மிக முக்கியமானது மின்சாரமாகும். மின்சாரம் இல்லாமல் நம்மால் ஐந்து நிமிடங்கள் வாழ முடியுமா என்றால் முடியாது என்றே கூற வேண்டும். தற்போதுள்ள விஞ்ஞான யுகத்தில் சமைக்கும் அடுப்பு முதல் சமையல் செய்யும் பாத்திரங்கள் வரை  மின்சாரத்தில் இயங்க கூடியவையாக இருக்கின்றன. குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வீட்டிற்கு வந்தோமா? சுவிட்சை தட்டினோமா? சமையலை முடித்தோமா? என அவசர கதியில் செயல்பட்டு சாப்பிட்டு முடித்தவுடன் அறைக்கு சென்று ஒய்வெடுக்கவே விரும்புகிறோம். ஒய்வெடுப்பதற்கும் வேண்டாமா ஏ.சி. பழைய பாடல் ஒன்றில் பட்டனை தட்டி விட்டால் தட்டில் இட்லி வந்திடனும்,காபியும் வந்திடனும் என வரிகள் இருக்கும். பாரதி பாடிய பாடல்கள் பலித்ததோ இல்லையோ மின்சார வசதியால் பட்டனை தட்டி இட்லி வருவது உண்மையாகி விட்டது.

     இத்தனைக்கும் உறுதுணையாக இருக்கும் மின்சார போர்டினை வீட்டின் எந்த பகுதியில் அமைப்பது என பார்க்கும் போது மின்சாரம் என்பது நெருப்பு, உஷ்ணம் சார்ந்த பொருள்  இந்த நெருப்பு சார்ந்த பொருளான மின்சார போர்டினை அக்னி முலை என கூறக்கூடிய தென் கிழக்கு மூலையில் வைப்பது நல்லது. அது போல ஒவ்வொரு அறைக்கும் வைக்க கூடிய சுவிட்ச் பாக்ஸினை தென்கிழக்கு பகுதிலேயே அமைப்பது சிறந்தது. வசதி படைத்தவர்கள் ஜெனரேட்டர், ஹி.றி.ஷி போன்றவற்றையும் பயன்படுத்தினால் அவற்றை கட்டியத்தின் தென்கிழக்கு அறையில் வைப்பது சிறப்பு. பெரிய கட்டிடங்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் மின்சார தேவைகளுக்காக ஜெனரேட்டரை பயன்படுத்துகிறார்கள். அவற்றை எந்த பகுதியில் அமைத்தால் சிறப்பாக இருக்கும் என பார்க்கின்ற போது கட்டிடத்தின் வெளியே தென்கிழக்கு பகுதியில் அமைப்பது சிறப்பு.

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001


Wednesday, June 27, 2012

வண்டி&வாகனங்கள் நிறுத்துமிடம்



     வண்டி&வாகனங்கள் நிறுத்துமிடம் 

     
     விஞ்ஞான வளர்ச்சியில் மனிதன் ஆடம்பரமான வாழ்க்கையை வாழவே விரும்புகிறான். ஆசைகளுக்கு அளவில்லை என்பார்கள். ஒரு 30 வருடங்களுக்கு முன்பு கூட சைக்கிள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகத் தான் இருந்தது. எங்காவது வெளியில் செல்பவர்களும் வாடகை சைக்கிளை தான் எடுத்து செல்வார்கள். சொந்தமாக சைக்கிள் வைத்திருப்பவர்கள் அப்பொழுது பணக்காரக்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கிறார்களோ இல்லையோ வீட்டிற்கு ஒரு கார் பைக் போன்றவற்றை வைத்திருக்கிறார்கள். பெட்ரோல்,டீசல் விலைகள் எவ்வளவு தான் ஏறினாலும் வண்டி வாகனங்கள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவதில்லை. முதலில் சொந்த வீட்டை  கட்ட ஆசைப்படும் மனிதன் அடுத்த வாங்க நினைப்பது வண்டி வாகனங்களை தான்.

     சொந்த  வீட்டின் முன் ஒரு கார் அல்லது பைக் நிற்பது என்பது பெருமையான விஷயம் தானே. வண்டி வாகனங்களை வாஸ்துப் படி எங்கு நிறுத்தினால் நல்லது என பார்க்கும் போது ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு மூலையில் அதிக எடையுள்ள வண்டி வாகனங்களை நிறுத்த கூடாது. ஈசான்ய மூலை ஈசனே குடியிருக்க கூடிய இடம் என்பதால் இங்கு வாகனங்களை நிறுத்துவதால் அதன் டயர்க்களில் ஒட்டியிருக்கும் சேறு, மற்றும் அதிலிருந்து வழியும் ஆயில் பெட்ரோல் ஆகியவை அந்த இடத்தில் படுமேயானால் அந்த இடத்தின் தூய்மையானது கெட்டுவிடும். எனவே வடகிழக்கு மூலையில் வண்டி வாகனங்களை நிறுத்த கூடாது.

     வடகிழக்கு மூலையைத் தவிர தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு பகுதிகளில் வண்டி வாகனங்களை நிறுத்தும் இடமாக அமைத்து 

     வடக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கின் உச்ச ஸ்தானத்தில் வாசற்படி இருக்கும் போது வண்டி கார் நிறுத்துமிடமாக தென்கிழக்கை அமைப்பது நல்லது.

     கிழக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கில் உச்சஸ்தானத்தில் வீட்டின கேட் இருக்கின்ற போது வண்டி கார் நிறுத்துமிடமாக வடமேற்கு பகுதியாக இருப்பது நல்லது.

     தெற்கு பார்த்த வீட்டிற்கு உச்ச ஸ்தானமான தென்கிழக்கில் வீட்டின் கேட் இருக்கும் போது வண்டி வாகனங்களை நிறுத்துமிடமாக தென்கிழக்கு பகுதியாக இருப்பது நல்லது.

     மேற்கு பார்த்த வீட்டிற்கு வடமேற்க்கின் உச்ச ஸ்தானத்தில் வீட்டின்  கேட் இருக்கும் போது வண்டி வாகனங்களை நிறுத்துமிடமாக வடமேற்கு பகுதியாக இருப்பது நல்லது.

     மேற்கூறியவாறு உச்ச ஸ்தானங்களில் கேட்டை அமைத்து அதன் வழியே வண்டி வாகனங்கள் செல்லுமாறு அமைத்துக் கொள்ளலாம்.

     அப்படி இல்லாமல் இடபற்றா குறை உள்ளவர்கள் நீச ஸ்தானங்களில் வண்டி வாகனங்களை நிறுத்த கூடிய (இடம்) கேட் அமைக்க வேண்டிய சூழ்நிலை வருமேயானால் அந்த வழியை வண்டி வாகனங்கள் நிறுத்தவதற்கு மட்டும் அமைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே செல்வதற்கு உச்ச ஸ்தானத்தில் கேட்டை அமைப்பது நல்லது.

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Monday, June 25, 2012

பிரதான வாயில் கதவு வைக்கும் இடம்





     பொதுவாக ஒரு வீட்டிற்கு பிரதான கேட் எந்த இடத்தில் இருக்க வேண்டுமென வாஸ்து  சாஸ்திர ரீதியாக பார்க்கும் போது பல விஷயங்கள் புலப்படுகிறது. அனைத்து திசைகளிலுமே நல்ல திசை தான் சிலர் குறிப்பிட்ட திசை தான் யோக திசை மற்ற திசைகள் கெடுதியை ஏற்படுத்த கூடிய திசை எனக்கூறுகிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எந்த திசையாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த திசைக்கு ஏற்றவாறு வீட்டின் அமைப்பு இருந்து விட்டால் எல்லா வகையிலும் அனுகூமான பலன்கள் உண்டாகும். பொதுவாக ஒவ்வொரு திசைக்கும் உச்ச ஸ்தானம் நீச்ச ஸ்தானம் என உள்ளது. உச்ச ஸ்தானத்தில் பிரதான கேட் வைத்தால் சுபிட்சங்கள் மேலோங்கும்.

வடக்கு திசை
     
வடக்கு பார்த்த வீட்டிற்கு கிழக்கை ஒட்டிய வடகிழக்கு பகுதி உச்ச ஸ்தானமாகும். வடமேற்கு பகுதி நீச்ச ஸ்தானமாகும். பொதுவாக வடகிழக்குப் பகுதியில் கேட் வைப்பது மிகவும் சிறப்பு. நெருக்கடி மிகுந்த ப-குதிகளில் வீட்டை சுற்றி அதிக இடம் விடாமல் வீடு கட்டும் போது பிரதான கேட்டானது. வடகிழக்குப் பகுதியில் வைத்து விட்டு அதற்கு நேராக வீட்டின் தலை வாசலும் வைத்துக் கொள்ளலாம். பெரிய இடங்களில் கட்டிடம் கட்டும் போது சுற்றி இடம் விட்டு கட்டினால் வடக்கை பார்த்த வீட்டிற்கு வடக்கு மற்றும் கிழக்குபுறம் அதிக இடம் விடும் பட்சத்தில் கிழக்கு புறம் அதிக இடம் காலியாக இருக்கும் போது அல்லது காலி இடத்திற்கு நேராக வடகிழக்கில் ஒரு கேட்டும் கட்டிடத்திற்கு வடகிழக்கில் தலைவாசல் அமைத்து தலை வாசலுக்கு நேராக ஒரு சிறிய கேட்டும் அமைத்து கொள்ளலாம். பொதுவாக ஒரு திசையில் கேட்டு வைக்கின்ற போது 2&க்கும் மேற்பட்ட கேட் வைக்கக் கூடாது. பொதுவாக வடக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கு திசையில் கேட்டின் தலை வாசல் வைப்பது சிறப்பு.

கிழக்கு திசை
     
கிழக்கு பார்த்த மனைக்கு வடக்கை ஒட்டிய வடகிழக்கு திசை உச்ச ஸ்தானமாகும் அக்னி மூலை என வர்ணிக்கப்பட கூடிய தெற்கை ஒட்டிய தென்கிழக்கு திசை நீச்ச ஸ்தானமாகும்.  பொதுவாக கிழக்குப் பார்த்த மனை கொண்ட வீட்டிற்கு உச்ச ஸ்தானம் என வர்ணிக்கப்பட கூடிய வடகிழக்கு மூலையில் சுற்று சூழல் அமையக்கூடிய பிரதான கேட் வீட்டின் தலை வாசல்  அமைவது மிக சிறப்பு. நெருக்கடி மிகுந்த இடங்களில் வடகிழக்கு திசையில் தலைவாசல் பிரதான கேட்க்கு நேராக அமைத்துக் கொள்ளலாம். கிழக்கு பார்த்த மனைக்கு கிழக்கு மற்றும் வடக்கு பக்கம் அதிக இடம் விட்டு கட்டினால் மனைக்கு வடகிழக்கில் பிரதான கேட் அமைத்து விட்டு அந்த கேட்டுக்கு நேராக காலி இடம் இருக்கும் பட்சத்தில் கட்டிடத்தில் வடகிழக்கில் பிரதான தலைவாசல் அமைத்து விட்டு  தலை வாசலுக்கு நேராக ஒரு சிறிய கேட் அமைத்து கொள்ளலாம் ஆக வடகிழக்கில் தலைவாசல் மற்றும் பிரதான கேட் அமைப்பது மிகவும் சிறப்பு.

தெற்கு திசை

     தெற்கை பார்த்த மனை உள்ள வீட்டிற்கு தென்கிழக்கு மூலை உச்ச ஸ்தானமாகும் மேற்கை ஒட்டிய தென்மேற்கு மூலை நீச்ச ஸ்தானமாகும். பொதுவாக பிரதான கேட் மற்றும் தலைவாசலானது கிழக்கு ஒட்டிய தென்கிழக்கு மூலையில் வைப்பது மிக சிறப்பு. நெருக்கடி மிகுந்த பகுதிகளில் தென்கிழக்கு மூலையில் தலை வாசல் வைத்து தலை வாசலுக்கு நேராக பிரதான கேட் வைப்பது சிறப்பு. வீட்டை சுற்றி தாராளமாக இடம் விட்டு கட்டுபவர்களுக்கு கிழக்கு புறம் அதிக காலி இடம் விட்டுக் கட்டினால் தெற்கு சுற்று சுவற்றில் தென்கிழக்கு மூலையில் பிரதான கேட் அமைக்க வேண்டும். கிழக்கு புறம் இடம் வீட்டு வீடு கட்டுகின்ற போது கிழக்கை ஒட்டிய தெற்கு திசையில் தலை வாசல் வைக்கும் பட்சத்தில் வீட்டின் தலைவாசலுக்கும், பிரதான கேட்டிற்கும் சம்மந்தமில்லாமல் இருக்கும் அப்படி இருக்கும் சூழ்நிலையில் கட்டிடத்தில் தென்கிழக்கு மூலையில் அமையும் தலைவாசலுக்கு நேராக ஒரு சிறிய கேட் அமைத்து கொள்ளலாம். தெற்கை பார்த்த வீட்டிற்கு கட்டிடத்திற்கு தலைவாசலுக்கு நேராக ஒரு சிறிய கேட்டும் மனைக்கு தென்கிழக்கு திசையில் ஒரு கேட்டும் அமைத்துக் கொள்ளலாம்.

மேற்கு திசை

     மேற்கை பார்த்த மனை உள்ள வீட்டிற்கு வடக்கை ஒட்டிய வடமேற்கு மூலை உச்ச  ஸ்தானமாகும். தென்மேற்கு மூலை நீச்ச ஸ்தானமாகும் வீட்டிற்கு வடமேற்கு மூலையில் தலைவாசலும் மனைக்கு வடமேற்கு மூலையில் பிரதான கேட்டும், அமைப்பது மிக சிறப்பு. குறிப்பாக நெருக்கடி மிகுந்த பகுதிகளில் இடம் விடாமல் கட்டுகின்ற போது வடமேற்கு மூலையில் வீட்டின் கேட்டும் அதற்கு நேராக தலைவாசலும் அமைத்துக் கொள்ளலாம். சுற்றி இடம் விட்டு கட்டுகின்ற பொழுது மனைக்கு வடமேற்கில் கேட் அமைத்து கட்டிடத்திற்கு வடமேற்கில் தலைவாசல் அமைக்கும் போது சற்று வித்தியாசம் வரவும். அதற்காக தலைவாசலுக்கு நேராக ஒரு சிறிய கேட் அமைத்து கொள்ளலாம். ஆக மேற்கை பார்த்த வீட்டிற்கு வடமேற்கு மூலையில் தலைவாசல் மற்றும் கேட் வைப்பது மிகவும் சிறப்பு.

     பிரதான கேட்டிற்கும் தலை வாசலுக்கும் இடையே கழிவு நீர் குழாய் தண்ணீர் தொட்டி போர்வெல், திறந்த கிணறு போன்றவை இருக்க கூடாது. வாசலுக்கு நேராக பில்லர் குத்து போல சுவர், பெரிய மரம் மாடிப்படி, சமையலறை ஆகியவை இருப்பது நல்லதல்ல. பொதுவாக கேட்டிற்கு வெளிப்புறம் கூட நேராக மின் கம்பங்கள், வழியை மறைப்பது போல மரம் போன்றவைகள் இருப்பது நல்லதல்ல.


ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Sunday, June 24, 2012

ஒரு மனையின் நீள அகலங்கள் பற்றிய குறிப்புகள்




              ஒரு மனையின் நீள அகலங்கள் பற்றிய குறிப்புகள்

     வீடு கட்டுவது பெரிதல்ல. அது பார்ப்பதற்கு அழகாகவும் மனதை கவரும் படியும் இருக்க வேண்டும். எந்தெந்த இடத்தில் எந்ததெந்த அறைகளை அமைக்கலாம். எங்கே பூச்செடிகளை வைத்து அலங்காரம் செய்யலாம். அமைக்கும் அறைகள் எத்தனை எத்தனை அடிகளில் இருந்தால் சுபிட்சமாக இருக்கும். குடும்பம் லஷ்மி கடாட்சத்துடன் விளங்கும் என யோசித்து யோசித்து வீட்டை கட்டுகிறோம். அதை சரியாக செய்து முடிக்க வாஸ்து கலை மிகவும் உறுதுணையாக விளங்குகிறது. சிறிய வீடோ, பெரிய வீடோ அதை வாஸ்துபடி கட்டினால் எந்த வித பிரச்சனைகளும் இன்றி வாழலாம். இனி எத்தனை அடி மனைகளால் சுபிட்சம் உண்டாகும். எத்தனை அடி மனைகளால் வீண் பிரச்சனைகள் ஏற்படும் என்பதனை காண்போம்.

    மனையின் நீள அகலங்கள் (அடிகளில்)


அடிகள்   பலன்கள்  
6 நன்மைகள் ஏற்படும்  
7 ஏழ்மை நிலை உண்டாகும்  
8 இராஜ்ஜியம்  
9 மிகவும் தீயது  
10 பால் சோறு உண்டு  
11 வளம், புத்திர சம்பத்து  
12 ஏழ்மை,குழந்தை குறைவு  
13 நோய், எதிரி உண்டு  
14 நித்தம் பகை, நஷ்டம்  
15 நிலை, பாதித்தல்  
16 செல்வமுண்டு  
17 அரச அந்தஸ்து கிடைக்கும்  
18 நஷ்டம் பல உண்டாகும்  
19 மனைவி, மக்கள் இழப்பு  
20 மகிழ்ச்சி, வளம் பெருகும்  
21 நன்மை, தீமை கலந்திருக்கும்  
22 எதிரி அஞ்சுவான்  
23 தீராத நோய் ஏற்படும்  
24 மனைவிக்கு கண்டம்  
25 தெய்வ அருள் கிடைக்காது  
26 ராஜபோக வாழ்க்கை அமையும்  
27 வளமும்,செல்வமும் பெருகும்  
28 Êசல ஐஸ்வர்யமும் உண்டாகும்  
29 உற்றார் உறவினர்களால் நன்மை  
30 லட்சுமி தேவியே குடியிருப்பான்  
31 நற்பலன்கள் உண்டாகும்  
32 இழந்த பொருட்கள் திரும்ப கிடைக்கும்  
33 நற்பலன்கள் ஏற்படும்  
34 வீட்டில் குடியிருக்கவே இயலாது  
35 நல்ல வருமானம் கிட்டும்  
36 ராஜயோக வாழ்க்கை அமையும்  
37 வளமும்,மகிழ்ச்சியும் பெருகும்  
38 காரியங்கள் தடைபடும்  
39 ஆக்கமும்,வளர்ச்சி ஏற்படும்  
40 எதிரிகளின் தொல்லைகள் அதிகரிக்கும்  
41 குபேரன் போல வாழ்க்கை  
42 லட்சுமி கடாட்சம் ஏற்படும்  
43 கெடுதி உண்டாகும்  
44 கண்களில் பாதிப்பு ஏற்படும்  
45 பிள்ளைகளால் நற்பலன்  
46 வீட்டில் வாழ முடியாது  
47 ஏழ்மையான நிலை ஏற்படும்  
48 நெருப்பால் கண்டம் உண்டாகும்  
49 கெட்ட ஆவிகளால் தொல்லை  
50 நற்பலன்கள் அமையும்  
51 வழக்குகள் ஏற்படும்  
52 செல்வம் செழிக்கும்  
53 வீண் செலவு அதிகரிக்கும்  
54 லாபங்கள் பெருகும்  
55 உறவினர்களிடையே விரோதம்  
56 புத்திர பாக்கியம் சிறக்-கும்  
57 பிள்ளைகளால் கெடுதி  
58 வீண் விரோதம் ஏற்படும்  
59 நற்பலன் உண்டாகும்  
60 பொன் பொருள் சேரும்  
61 பகைமை வளரும்  
62 வறுமையை ஏற்படுத்தும்  
63 சேமிக்கவே முடியாது  
64 எல்லா வகையிலும் நன்மை  
65 பெண்களால் பிரச்சனை  
66 அறிவாற்றல் பெருகும்  
67 மனதில் பய உணர்வு ஏற்படும்  
68 திரவியங்களால் லாபம்  
69 தீயால் கண்டம் ஏற்படும்  
70 அன்னியரால் லாபம் உண்டாகும்  
71 பாசம் அதிகரிக்கும்  
72 நல்ல லாபம் பெருகும்  
73 வண்டி வாகனங்களால் லாபம்  
74 பெயர் புகழ் உயரும்  
75 சுகமான வாழ்க்கை அமையும்  
76 பிள்ளைகளால் மனகவலை  
77 சுக போக வாழ்க்கை  
78 புத்திர தோவும்  
79 கன்று காலி விருத்தி  
80 லட்சுமி கடாட்சம் உண்டாகும்  
81 இடி விழுந்து நாசமடையும்  
82 ரோவும் அதிகரிக்கும்  
83 மரண பயம் உண்டாகும்  
84 சகல பாக்கியமும் கிட்டும்  
85 அரச வாழ்க்கை அமையும்  
86 அதிக இம்சை ஏற்படும்  
87 தண்டனை அதிகரிக்கும்  
88 சகல சௌபாக்கியம் கிட்டும்  
89 பல வீடு கட்டும் யோகம் உண்டு  
90 சகல யோகம் உண்டாகும்  
91 நல்ல கல்வி யோகம் உண்டு  
92 சகல ஐஸ்வர்யமும் ஏற்படும்  
93 சொந்த நாட்டில் வாழ்வான்  
94 அந்நிய தேசம் போவான்  
95 வசதி வாய்ப்புகள் பெருகும்  
96 வெளி நாடு செல்வான்  
97 கப்பல் பயணம்,வியாபாரம் ஏற்படும்  
98 வெளி நாட்டிற்கு செல்வான்  
99 அரசனை போல நாட்டை ஆளும் யோகம்  
100 எல்லா வளமும் கிட்டும்


ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001


Saturday, June 23, 2012

பணபெட்டி&மற்றும் பீரோ வைக்க சிறந்த இடங்கள்




      பொழுது விடிந்து கண் விழிப்பது முதல் படுக்கைக்கு தூங்கச் செல்லும் வரை தினம் தினம் வாழ்க்கைக்கு, வாழ்க்கையை நகர்த்துவதற்கு மிக முக்கியமான தேவையானது பணம். சிறு துளி பெருவெள்ளம் என்பார்கள் அன்றாட செலவுகள் போக மீதி பணத்தை சேமித்து வைப்பது என்பது எதிர்கால சந்தியினருக்கு நாம் செய்ய கூடிய உதவியாகும். வசதியுள்ளவர்கள் பணத்தை என்ன செய்வது, எங்கு சேர்ந்து வைப்பது, என்னென்ன நகை வாங்குவது என்று யோசிப்பார்கள். இப்படி வாங்கக் கூடிய ஆபரணங்களையும், சேர்த்து வைக்கும் பணத்தையும் மற்றும் முக்கியமான ஆவணங்கள் போன்றவற்றை வாழும் வீட்டில் வாஸ்து ரீதியாக எங்கு வைத்தால் அவை மேலும் மேலும் பெருகும் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என பார்த்து அந்த பகுதிகளில் தங்களுடைய சேமிப்புகளை வைத்து பாதுகாக்கிறார்கள். கால் சரவனுக்காகவும், நூறு, இருநூறு பணத்திற்காகவும் கொலை கொள்ளைகள் நடக்கும் இக்காலத்தில் எல்லாற்றையும் பாக்ங் லாக்கரில் வைப்பதே நல்லது என்றாலும் வாழும் வீட்டிலும் வாஸ்து ரீதியாக பணம் பொன் பொருள் பத்திரங்களை எங்கு வைப்பது என்று பார்ப்போம். பொதுவாக வீட்டின் தென்கிழக்கு மூலை, கிழக்கை ஒட்டிய தெற்கு பகுதி, மேற்கு திசையை ஒட்டி பகுதிகள், வடமேற்கு பகுதி, வடக்கை ஒட்டிய மேற்கு, மேற்கை ஒட்டிய வடக்கு பகுதிகளில் பணப்பெட்டி, பீரோ, போன்றவற்றை வைக்கலாம். வசதியில் குறைந்தவர்களுக்கு சமையலறை, பூஜையறை, பெட்ரூம் எல்லாமே ஒரே  அறையாகத் தான் இருக்கும். ஒரே அறையாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த அறையில் தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு பகுதிகளில் பீரோவை வைப்பது சிறப்பு. அப்படி வைக்கப்படும் பணபெட்டி, பீரோ போன்றவை எந்த திசையை பார்த்து வைப்பது நல்லது என பார்க்கும் போது கிழக்கு அல்லது வடக்கு பார்த்ததுப் போல வைப்பது சிறப்பு.

     ஒரு வீட்டில் அக்னி மூலை என வர்ணிக்கப்பட கூடிய தென்கிழக்கு மூலையிலோ, அதிக எடையுள்ள பொருட்களை வைக்க கூடாத வடகிழக்கு மூலையிலோ பீரோ, பணப்பெட்டி போன்றவற்றை வைக்காமல் இருப்பதே நல்லது.

     புதிதாக வீடு கட்டுபவர்கள் அறைகளில் செல்ப் கட்டுவது, பெரிய ஜன்னல் வைப்பது போன்றவற்றினை தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, பகுதிகளில் அமைப்பதை தவிர்த்தால் அந்த இடத்தில் பீரோ பணப்பெட்டி போன்றவற்றினை வைத்து கொள்வதற்கு எளிதாக இருக்கும். மேற்கூறிய இடங்களில் பணப்பெட்டி பீரோ போன்றவற்றை அமைப்பதன் மூலம் வீட்டில் லஷ்மி கடாட்சம் உண்டாகும். ஆடை ஆபரணமும் சேரும், குறிப்பாக வீட்டின் வாசற்படிக்கு நேராக பீரோ, பணப்பெட்டி போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் உத்தமம்.


ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Thursday, June 21, 2012

மேல் நிலை தண்ணீர் தொட்டி (வாட்டர் டேங்க்)



              
     கிணற்று நீர், போர்வெல் நீர், மற்றும் சம்ப் நீர் போன்றவற்றை பைப்புகள் மூலம் மேலேற்றி மேல்நிலை தொட்டிகளுக்கு (அதாவது கீணீtமீக்ஷீ ஜிணீஸீளீ) அனுப்பி அதிலிருந்து பல குழாய்களை இணைந்து ஒரு மனையில் எத்தனை வீடுகள் உள்ளதே அத்தனை வீடுகளுக்கும் விநியோகம் செய்கிறார்கள். இப்படி அமைக்கப்படும் மேல்நிலை தொட்டிகளில் நீர் சேமிக்கப்படுவதால் வீட்டின் மேற்புறத்தில் எடை கூடுதலாகிறது. பொதுவாக கட்டிடங்கள் கட்டும் போது தென் மேற்கு மூலையானது உயர்ந்தும். மற்ற மூலைகள் தாழ்ந்தும் இருந்தால் தான் நற்பலன் உண்டாகும் என்பது வாஸ்துவின் விதி. மேல்நிலை தொட்டியானது தென்மேற்கு மூலையில் அமைக்கலாம் என பலர் கூறி வந்தாலும் ஆராய்ச்சி பூர்வாக வாஸ்துப்படி பார்க்கின்ற போது மேல் நிலை தொட்டியினை (கீணீtமீக்ஷீ ஜிணீஸீளீ) வடமேற்கு அல்லது தென்கிழக்கு மூலையில் அமைத்து விட்டு, இந்த தண்ணீர் தொட்டியை விட உயரமாக இருப்பது போல ஒரு வீட்டையோ அல்லது ஒரு அறையையயோ தென்மேற்கு மூலையில் அமைப்பது சிறப்பு, ஏனென்றால் வீட்டின் கட்டிடமானது தண்ணீர் தொட்டியை விட உயரமாக இருப்பது தான் வாஸ்துப்படி நல்லது. ஆக ஷ்ணீtமீக்ஷீ tணீஸீளீ-ஐ வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கிலோ, வடமேற்கிலோ அமைப்பது உத்தமம். கண்டிப்பாக ஒரு கட்டிடத்தில் அதிக எடையானது வடகிழக்கில் இருக்க கூடாது. இது மட்டுமின்றி வடகிழக்கு பகுதி உயரமாகவும் இருக்க கூடாது.


ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001


Tuesday, June 19, 2012

சம்ப்& கீழ்நிலை தண்ணீர் தொட்டி


இன்றளவில் பெரிய, சிறிய, வீடுகள் முதல் தங்களுடைய தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக சூழ்நிலை தண்ணீர் தொட்டிகளை அமைக்கிறார்கள். அதாவது சம்ப் இந்த சம்பில் சேமிக்கப்படும் நீரை கொண்டு (கிணறு போர்வெல் போன்றவற்றில் நீர் வற்றினாலும்) அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. சம்ப்பில் சேமிக்கப்படும் நீரானது அரசாங்கத்தால் சுத்திகரிக்கப்பட்டு பொது மக்களுக்காக வினியோகிக்கும் தண்ணீராகும். இதை கார்ப்பரேஷன் வாட்டர் என்பார்கள். வீதியை ஒட்டி தரைமட்டத்திற்கு கீழே உள்ள பிரதான குழாயிலிருந்து, ஒரு சிறிய குழாயானது பிரிந்து வீடுகளுக்கு புகுந்து  கீழ்நிலை நீர்தேக்க தொட்டியின் உள்ளே நீரை செலுத்தும் நிலத்தடி நீருக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்றாலும் கிணறு அமைக்க வாஸ்துப்படி எந்த விதிமுறைகளை கடைபிடிக்கிறோமோ அதே விதிமுறையை தான் கீழ்நிலை தொட்டியை (சம்ப்) அமைப்பதிலும் பயன்படுத்த வேண்டும். அதாவது வடகிழக்கு மூலையில் தான் அமைக்க வேண்டும் அல்லது வடக்கு மற்றும் கிழக்கு சுவற்றை ஒட்டியுள்ள இடங்களிலும் சம்பினை அமைக்கலாம்.

      மாநகராட்டி குடிநீர் குழாய்களின் இணைப்பானது தெருவை ஒட்டி இருப்பதால் தெருப்புறத்தை ஒட்டியே சம்ப்பை அமைக்க வேண்டி உள்ளது. அப்படி அமைக்க வேண்டிய பட்சத்தில் முடிந்தவரை வடகிழக்கு மூலையில் அமைப்பது தான் சிறப்பு. வீட்டின் வாசலானது தெற்கு பார்த்தபடி இருந்தால் சம்ப்பை கிழக்கு சுவற்றை ஒட்டியுள்ள இடத்திலும், மேற்கு பார்த்த படியிருந்தால் வடக்கு சுவற்றை ஒட்டியுள்ள இடத்திலும் அமைப்பது நல்லது. எந்தவொரு காரணத்திற்காகவும் சம்ப், கிணறு, போர்வெல் போன்றவற்றை தென்மேற்கு மூலையில் அமைக்கவே கூடாது. அப்படி அமைத்தால் பல்வேறு வகையில் தேவையற்ற சோதனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பிரச்சனைகள், ஆரோக்கிய பாதிப்புகள் போன்றவையும் ஏற்பட கூடும்.

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Sunday, June 17, 2012

கிணறு&போர்வெல் அமைக்கும் இடங்கள்

     மனிதன் உயிர் வாழ அடிப்படை காரணங்களில் மிகவும் முக்கியமான ஒன்று நீர். பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் தடையின்றி கிடைத்தால் தான் மனிதனின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். காலையில் எழந்து காலை கடன் முடிப்பது முதல் இரவு மாத்திரை சாப்பிட்டு படுக்கும் வரை நீரின் முக்கியத்துவம் மனித வாழ்வில் இன்றியமையாததாகிறது. தற்போதைய மக்கள் தொகை பெருக்கத்தால் நீர் நிலைகள் எல்லாம் இருப்பிடங்களால் மாறிக் கொண்டு இருப்பதால் நிலத்தடி நீரின் அளவானதும் குறைந்து கொண்டே வருகிறது. நல்ல மழை பெய்தாலும் மழை நீரனது  கழிவு நீரால் வெளியேற்றப்படுகிறதே தவிர நிலத்தடி நீராக மாற நாம் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.

நம் வீட்டு தரைகளுக்கு சிமெண்ட், அல்லது மொசைக் போட்டு அழகுப் படுத்துவதில் காட்டும் ஆர்வத்தை சற்று அரசின் மழை நீர் சேமிப்பு திட்டத்திலும் காட்டினால் தண்ணீர் பஞ்சம் என்பதே நாட்டில் வராது. கடல் நீரை குடிநீராக்கினால் மக்களின் தண்ணீர் தட்டுபாடு விலகும் என்று அரசு கஷ்டப்பட்டு எடுக்கும் முயற்சிகளிலும் மக்கள் தண்ணீர் சுவையாக இல்லை, குடித்தால் தாகம் தீரவில்லை என்று குறை கண்டு பிடிக்கிறார்களே தவிர மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்த செய்ய வேண்டிய கடமைகளை செய்வதில்லை. ஏரிக்குள் வீட்டை கட்டிக் கொண்டு தண்ணீர் வீட்டிற்குள் வந்து விட்டது என்று கூறினால் என்ன நியாயம்? வாழும் வீட்டில் தண்ணீரின் தேவையறிந்து எங்கு கிணறு தோன்டினால் நன்றாக தண்ணீர் கிடைக்கும். எங்கு போர்வெல் அமைத்தால் தண்ணீர் தெளிவாக கிடைக்கும் என்று வாஸ்து ரீதியாக ஆராய்ந்து அந்த இடத்தில் கிணறு போர்வெல் போன்றவற்றை அமைத்தால் வீட்டின் தண்ணீர் தேவையானது பூர்த்தியாவதுடன் கங்கா தேவியும் வற்றாமல் நமக்கு உறுதுணையாக இருப்பாள்.
    
ஒரு வீட்டின் நீர் ஆதாரம் என்பதை கிணறு மற்றும் போர்வெல் மூலம் தான் அடைய முடியும். ஒரு இடத்தில் எந்த மனை என்றாலும் அந்த மனையில் வடகிழக்கு மூலையில் தான் மற்ற இடங்களை விட நீர் ஆதாரங்கள் சிறப்பாக இருக்கும். அதனால் கிணறு மற்றும் போர்வெல்லை ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு மூலையில் தான் அமைக்க வேண்டும். இப்படி வடகிழக்கில் அமைக்கப்படும் இடங்களில் நீர்வற்றாமல் இருக்கும் என்பது ஆதார பூர்வமான உண்மை.

     வடகிழக்கு பகுதியில் கிணறோ, அல்லது போர்வெல்லோ அமைக்கும் போது வடக்குதிசையின் மத்திம பகுதியிலிருந்து வடகிழக்கு திசைக்குள் அமைத்தல் நல்லது. இல்லையெனில் கிழக்குதிசையின் மத்திய பகுதியிலிருந்து வடகிழக்கு திசைக்குள் அமைத்து கொள்வதும் சிறப்பு.

      இதில் நாம் கணக்கிட வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு மூலையை இணைக்க கூடிய ஒரே நேர்கோட்டில் இருக்ககூடாது. அதுபோல வீட்டை சுற்றி அதிக இடமிருந்தால் மனையின் வடகிழக்கு மூலையையும், கட்டிடத்தின் வடகிழக்கு மூலையையும் இணைக்கும் கோட்டிலும் கிணறு அல்லது போர்வெல் அமைக்க கூடாது.

     தற்போதுள்ள இடபற்றாகுறையினால் கிணறு வைத்திருப்பவர்கள் கூட அதன் மேல் தளத்தை மூடி விட்டு அதனை கடந்து தான் செல்கிறார்கள். கிணற்றை மூடாமல் சூரிய ஒளி படும்படி அமைப்பது தான் நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களால் கிணற்றின் மேற்பகுதியை மூட நேர்ந்தாலும் அதனை வழி பாதையாக பயன்படுத்தா திருப்பது நல்லது. குறிப்பாக ஒரு வீட்டின் பிரதான வாசலுக்கு செல்லும் வழியிலாவது கிணற்றை அமைக்காமல் இருப்பது நல்லது.

      ஆக கிணறு, போர்வெல்லை வடகிழக்கு பகுதி, அதனை ஒட்டிய பகுதியில் அமைப்பது நல்லது. கண்டிப்பாக தென்மேற்கு பகுதியில் அமைக்கக் கூடாது.


ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Friday, June 15, 2012

கதவு ஜன்னல் வைக்கும் முறைகள்

     காடுகளிலும் மலைகுகைகளிலும் வாழ்ந்த மனிதன் காலப் போக்கில் வீடு என்ற ஒன்றை கட்டி வாழ கற்றும் கொண்டான். வீடு கட்டிய மனிதனுக்கு அதை பாதுகாக்க கதவு என்ற ஒன்றை அமைக்கத் தெரியாமல் அதற்கு தட்டி செய்து மறைப்பதும், துணியை திரையாக தொங்க விடுவதுமாக இருந்தான். காலங்கள் முன்னேற முன்னேற மரத்தை அறுத்து அதில் கதவு செய்வதையும் கற்றுக் கொண்டான். சிறிய வீடோ பெரிய வீடோ வீட்டின் உள்ளே உள்ள பொருட்களை பாதுகாக்க அமைக்கப் படுவது தான் கதவு. தற்போதுள்ள சூழ்நிலையில் கால்சவரனுக்காக கூட கொலை கொள்ளை நடக்கிறது என்பதால் நல்ல திடமான கதவுகளை அமைப்பதுடன் அதற்கு பாதுகாப்பாக கிரில் கேட்டையும் அமைத்து கொள்கிறார்கள். சிலர் வீட்டின் வெளியே கேமராவை அமைத்து உள்ளிருந்த படியே வெளியே வரும் மனிதர்கள் யார் யார் என கண்காணிக்கிறார்கள்.

     வாஸ்து ரீதியாக வீட்டிற்கு பாதுகாப்பாக விளங்கும் கதவுகளை எந்த திசையில் அமைத்தால்  சிறப்பாக இருக்கும் என பார்கின்ற போது ஒவ்வொரு திசையின் உச்ச ஸ்தானங்களில் கதவு வைப்பது நல்லது. ஹால், பெட்ரும், கிட்சன், பூஜையறை, பாத்ரூம் போன்ற எல்லாவற்றிற்கும் கதவு வைக்கும் பழக்கம் பெருகி வரும் நிலையில் அந்தந்த அறைகளுக்கும், அந்தந்த உச்ச ஸ்தானங்களில் கதவு அமைப்பது நல்லது.

வடக்கு திசை:

     வடக்கு பார்த்து அமைந்துள்ள அனைத்து அறைகளுக்கும் அதன் உச்ச ஸ்தானமான வடகிழக்கு பகுதியில் அதிலும் குறிப்பான வடக்கு மத்திய பகுதி முதல் வடகிழக்கு இறுதி வரை உள்ள பகுதியில் கதவை அமைப்பது மிகவும் சிறப்பு. மேற் கூறிய பகுதிகளில் கதவிற் அருகில் ஜன்னலையும் அமைப்பது நல்லது. இப்படி அமைக்கும் கதவுகளுக்கு கீலை மேற்கு புறத்தில் அமைத்து கிழக்குலிருந்து மேற்காக திறக்கும்படி அமைக்க வேண்டும்.கதவு ஜன்னல் போன்றவை வடமேற்கு பகுதியில் அமைக்காமல் இருப்பது மிகவும் நல்லது.

கிழக்கு திசை

     கிழக்கு  பார்த்து அமைந்துள்ள அனைத்து அறைகளுக்கும் அதன் உச்ச ஸ்தானமான வடகிழக்கு பகுதியில் அதாவது கிழக்கு மத்திம பகுதி முதல் வடகிழக்கு மூலை வரையுள்ள பகுதியில் கதவு மற்றும் ஜன்னல்களை அமைப்பது சிறப்பு. இப்படி அமைக்கும் கதவுகளுக்கு கீலை தெற்கு புறத்தில் அமைத்து வடக்குலிருந்து தெற்காக திறக்கும்படி அமைக்க வேண்டும். தென்கிழக்கு  பகுதியில் கதவினை அமைக்காமலிருப்பது நல்லது.

தெற்கு திசை

     தெற்கு பார்த்து அமைந்துள்ள அனைத்து அறைகளுக்கும் அதன் உச்ச ஸ்தானமான தென்கிழக்கு பகுதியில் அதாவது தெற்கு மத்திம பகுதி முதல் தென்கிழக்கு மூலை வரையுள்ள பகுதியில் கதவு மற்றும் ஜன்னல்களை அமைப்பது சிறப்பு. இப்படி அமைக்கும் கதவுகளுக்கு கீலை மேற்கு புறத்தில் அமைத்து கிழக்குலிருந்து மேற்காக திறக்கும்படி அமைக்க வேண்டும். தென்மேற்கு பகுதியில் கதவினை அமைக்காமலிருப்பது நல்லது.

மேற்கு திசை

     மேற்கு பார்த்த அமைந்துள்ள அனைத்து அறைகளுக்கும் அதன் உச்ச ஸ்தானமான வடமேற்கு பகுதியில் அதாவது மேற்கு மத்திம பகுதி முதல் வடமேற்கு மூலை வரையுள்ள பகுதியில் கதவு மற்றும் ஜன்னல்களை அமைப்பது சிறப்பு. இப்படி அமைக்கும் கதவுகளுக்கு கீலை கதவிற்கு தெற்கு புறமாக அமைத்து, வடக்கிலிருந்து தெற்காக கதவை திறப்பது போல அமைப்பது நல்லது. தென்மேற்கு பகுதியில் கதவினை அமைக்காமலிருப்பது நல்லது.

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Wednesday, June 13, 2012

படிகட்டுகள்


     சிறிய இடமாக இருந்தாலும் அதில் தனக்கென ஒரு சொந்த வீட்டை கட்டி வாழ்வதில் தான் மனிதனுக்கு தனி பெருமைதான். வீடு கட்டினால் மட்டும் போதாது அது தளம் போட்ட வீடாக இருந்தால் அதில் ஒரு மகிழ்ச்சிதான். தளம் போட்ட வீட்டிற்கு அதனுடையே படிகட்டுகளையும் கட்டி விட்டால் அது மாடி வீடாகி விடும். படிகட்டுகளுடன் மாடி வீட்டை கட்டி கொண்டால் காற்றுக்காக மாடியில் போய் அமர்ந்து கொள்ளலாம், படுத்துக் கொள்ளலாம். வானில் உள்ள நட்சத்திரங்களின் அழகையும் பௌர்ணமி நிலவையும் ரசிக்கலாம். மாடி வீடு என்பதே நிறைய சௌகர்யங்கள் நிறைந்தாக தான் இருக்கும். மன்னர்கள் காலத்திலேயே மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் அமைந்திருக்கிறார்கள். இவற்றில் ஏறி செல்ல படிக்கட்டுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த படிக்கட்டுகளுக்கென்று ஒரு புராண கதையும் உண்டு. அக்காலங்களில் கருங்கல்லில் தான் படிக்கட்டை அமைப்பார்கள். நாம் வழிபடும் இறைவனையும் கருங்கல்லில் தான் வடிப்பார்கள். தினமும் படிக்கட்டுகளில் பல்லாயிரம் பேர் ஏறி ஏறி இறைவனை வழிபட்டு அருள் பெற்று சென்றார்களாம். பலர் ஏறி சென்றதால் வலி தாங்க முடியாத படிகட்டுகள் ஒர் இரவில் இறைவனிடத்தில் புலம்பியதால், நீயும் கல் தான் நானும் கல் தான். என்னை மிதிக்கிறார்கள். உன்னை வணங்குகிறார்கள். இது என்ன வேற்றுமை என்று--?  அதற்கு கடவுள் நீ அவர்களின் பாவங்களை தாங்கி மன்னித்து மேலே ஏற உதவி செய்தால் மட்டுமே அவர்களுக்கு என் ஆசி கிடைக்கும். அதனால் நீதான் என்னை விட பெரியவன். பாவங்களை மன்னிப்பவன். நான் வெறும் ஆசி கூறுபவன் மட்டும் தான் என்றாராம்.
    
இப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த படி கட்டுகளை வீடுகளில் அமைக்கும் போது வாஸ்து படி எந்தந்த தசைகளில் அ¬ப்பது நல்லது என்று ஆராய்ந்தே கட்ட வேண்டும். பொதுவாக ஒரு கட்டிடத்தில் அதிக எடை வைக்க கூடாத திசையான வடகிழக்கு மூலையைத் தவிர மற்ற எந்த திசைகளில் வேண்டுமானாலும் படிகட்டுகளை அமைத்துக் கொள்ளலாம். இதிலும் ஒரு சில விதிகள் உள்ளன. படிக்கட்டுகள் அமைக்கும் போது அதன் எண்ணிக்கையானது ஒற்றை படையில் இருப்பது நல்லது. ஏனென்றால் நம் வீட்டில் பூஜையறையில் வைக்கும் மகாலஷ்மி விளக்கை (காமாட்சி விளக்கு) வாங்கும் போது பெரியவர்கள் அந்த விளக்கின் ஒரத்தில் உள்ள அறம் போன்ற அமைப்பை லாபம், நஷ்டம் லாபம், நஷ்டம் என எண்ணிக் கொண்டே வருவார்கள் அப்படி எண்ணும் போது அதன் முடிவானது லாபத்தில் இருக்க வேண்டும். அதைப் போலத் தான் நாம் ஏறி செல்லும் படிக்கட்டுகளும் லாபம், நஷ்டம் என்ற கணக்கில் வரும் போது லாபத்தில் நிற்க வேண்டும்.
    
படிக்கட்டானது எந்த திசையில் அமைக்க வேண்டும் என பார்க்கின்ற போது வடக்குலிருந்து தெற்கு  நோக்கி ஏறும்படியோ, அல்லது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஏறும்படியோ அமைப்பது சிறப்பு, படிக்கட்டில் ஏறி மாடிக்கு செல்லும் போது மாடியிலுள்ள வீட்டின் தலைவாசலானது எந்த திசையை நோக்கி உள்ளதோ அந்த திசையின் உச்ச ஸ்தானத்தில் அமைவது நல்லது.


ஒரு வீட்டில் ஒரே நேர் குத்தால படிக்கட்டுகள் அமைக்கும்படி நேர்ந்தால் மேலே காட்டப்பட்டுள்ள வரை படத்தை போல அதாவது தெற்கு பார்த்த வாசற்படியுள்ள வீட்டிற்கு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஏறும்படியும், மேற்கு பார்த்த வாசற்படியுள்ள வீட்டிற்கு வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கி ஏறும்படியும் படிக்கட்டுகளை அமைப்பது நல்லது. அதிலும் தெற்கு பார்த்து அமைந்துள்ள வீட்டிற்கு தென்கிழக்கு மூலையில் வாசற்படியும் மேற்கு பார்த்த வீட்டிற்கு மாடியின் வாசற்படியானது வடமேற்கு மூலையிலும் அமைத்தல் நல்லது.

பொதுவாக வடகிழக்கு மூலையில் படிக்கட்டுகளை அமைக்க கூடாது என்ற காரணத்தால் வடக்கு பார்த்து அமைந்த வீட்டிற்கு நேர்குத்தாக படிக்கட்டுகளை அமைக்கும் பொழுது வடக்கு மத்தியில் படிகட்டு தொடங்கி வடமேற்கு திசையை நோக்கி ஏறுவது போல அமைத்து விட்டு மாடியில் ஒரு (வராண்டா) நடைபாதை போல அமைத்து விட்டு வடகிழக்கு உச்ச ஸ்தானத்தில் வீட்டின் வாசற்படியை வைப்பது நல்லது.
    
கிழக்கு பார்த்த வீட்டிற்கு நேர் குத்தாக படிகட்டுகளை அமைக்கும் போது கிழக்கின் மத்திய பகுதியில் படிகட்டை தொடங்கி தெற்கு திசையை நோக்கி ஏறுவது போல அமைத்து விட்டு மாடியில் ஒரு நடைபாதை போல (வராண்டா) அமைத்து விட்டு வடகிழக்கு உச்ச ஸ்தானத்தில் வீட்டின் வாசற்படியை அமைப்பது நல்லது.

 

     படிகட்டுகளை இரு பாகங்களால் அமைக்கின்ற போது முதலில் ஏறுவது தெற்கு அல்லது மேற்கு நோக்கி ஏறுவதும் படிக்கட்டை ஒற்றை படையில் அமைத்து கொள்வதும் நல்லது. நான்கு திசைகளுக்கும் எப்படி அமைத்தால் நன்றாக இருக்கும் என்பதனை மேலே உள்ள வரைபடத்தில் காணலாம். முதல் மாடிக்கு சென்று வீட்டின் உள்ளே செல்லும் போது கதவானது உச்ச ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. வடக்கு மற்றும் கிழக்கு  மதில் சுவரை தொடாமல் படிகட்டுகளை அமைப்பு சிறப்பு.

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Monday, June 11, 2012

செப்டிக் டேங்க்


    சென்னை போன்ற பெருநகரங்களில் கழிவு நீர் கட்டிடத்தை விட்டு வெளியே செல்வதற்கு டிரைனேஜ் வசதி இருக்கிறது. கிராமப் பகுதிகளில் டிரைனேஜ் வசதி இல்லாத காரணத்தால் கழிவு நீர் தேங்குவதற்காக செப்டிங் டேங்க் அமைக்கிறார்கள் அந்த செப்டிக் டேங்கானது எந்த இடத்தில் அமைத்தால் சிறப்பு என பார்க்கின்ற போது கட்டிடத்தின் வெளியே வடமேற்கு, மேற்கு ஒட்டிய வடக்கு, வடக்கு ஒட்டிய மேற்கு தென்கிழக்கு, தெற்கு ஒட்டிய கிழக்கு, கிழக்கு ஒட்டிய தெற்கு ஆகிய திசைகளில் உள்ள பகுதிகளில் செப்டக் டேங்க் அமைக்கலாம் வடகிழக்குப் பகுதியில் நீரோட்டம் இருப்பது நல்லது என்றாலும், ஈசான்ய மூலை என்பதால் கழிவுநீர் தேங்குவது நல்லதல்ல. அதனால் வடகிழக்குப் பகுதியில் செப்டிக் டேங்க் அமைக்க கூடாது. ஒரு மனையில் தென்மேற்குப் பகுதியில் பள்ளம் இருக்க கூடாது என்ற காரணத்தாலும் செல்வத்தை குவிக்கும் உன்னத ஸ்தானம் தென்மேற்கு ஸ்தானம் என்பதாலும், தென்மேற்கில் செப்டிக் டேங்க் அமைக் கூடாது.

     ஒரு மனையில் உள்ள நுழையும் தலைவாசல் பகுதியல் நடைபாதைக்கு கீழே செப்டிக்டேங்க் கழிவுநீர் தேங்கும் சேம்பர், கழிவுநீர் குழாய் அமைவது கண்டிப்பாக கூடாது. தவிர்க்க முடியாத இடங்களில் கழிவுநீர் குழாய் மட்டும் அமைவது தவறல்ல.

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Saturday, June 9, 2012

கழிவு நீர் செல்லும் வழி

        கழிப்பறை குளியல் அமைந்த பிறகு இதிலிருந்து செல்லும் கழிவு நீரானது எந்த திசையில் கொண்டு சென்றால் நல்லது என பார்த்தால் குறிப்பாக ஒரு வீட்டின் நீரோட்டம் வடகிழக்கு மூலை வழியாக செல்வது நல்லது. குறிப்பாக ஒரு மனையில் தென் மேற்கு மூலையிலிருந்து முடிந்த வரை தெற்கு சுவருக்கு வெளிபுறம் குழாய் அமைத்து தென்கிழக்கு மூலைக்கு வந்து அதன் பிறகு அங்கிருந்து கிழக்கு சுவர்புறமாக வடகிழக்கு மூலைக்கு வந்து வடகிழக்கு வழியாக கழிவு நீர் வெளியேற வேண்டும். மற்றொரு பாதையாக மேற்கு சுவரை ஒட்டி வெளிபுறமாக வடமேற்கு மூலைக்கு வந்து அங்கிருந்து வடகிழக்கு மூலைக்கு வந்து வடகிழக்கு வழியாக கழிவு நீரானது வெளியேற வேண்டும். மேற்கூறிய விஷயங்கள் வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த வீட்டிற்கு சாத்தியமான ஒன்றாகும்.

வடக்கு பா£த்த வீட்டிற்கு கண்டிப்பாக வடமேற்கு கழிவு நீர் வெளியேறாமல் வடகிழக்கு மூலையிலோ, கிழக்கு சார்ந்த வடக்குப் பகுதியிலோ அமைப்பது தான் மிகவும் சிறப்பு. அது போல கிழக்குப் பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கு மூலையில் கழிவு நீர் வெளியேறாமல் வடகிழக்கு பகதியிலோ வடக்கு ஒட்டிய கிழக்கு பகுதியிலோ கழிவு நீரானது வெளியேறுவது போல் அமைக்க வேண்டும்.
    
வடகிழக்கு மூலையில் கழிவு நீர் வெளியேற வேண்டிய அமைப்பு வாஸ்து ரீதியாக சிறப்பான அமைப்பு என்றாலும் தெற்கு மற்றும் மேற்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கு மூலையில் கழிவு நீர் வெளியேற்ற முடியாது என்பதால் முடிந்தவரை வடமேற்கு மூலையில் வடக்கை ஒட்டிய மேற்கு பகுதியில் கழிவு நீர் வெளியேறுவது போல் அமைப்பது சிறப்பு. கண்டிப்பாக தென்மேற்கு பகுதியில் கழிவு நீர் கட்டிடத்தை விட்டு வெளியேறுவது போல் அமைக்கக் கூடாது.
    
தெற்கு பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கு மூலையிலும், கிழக்கு ஒட்டிய தெற்கு பகுதியிலும் கழிவுநீர் கட்டிடத்தை விட்டு வெளியேறுவதுப் போல் அமைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் கழிவு நீரானது தென் மேற்கு மூலையில் கட்டிடத்தை விட்டு வெளியேறுவது போல் கழிவு நீர் குழாய் அமைக்க கூடாது.
    
மேற்கு பார்த்த வீட்டிற்கு தென் மேற்கு மூலையிலிருந்து வடமேற்கு பகுதிக்கு குழாய் சென்று அதன் மூலம் கழிவு நீர் வெளியேறுவது போலவும் மற்றொரு பாதையாக தென்கிழக்கிலிருந்து கிழக்கு சுவர் வழியாக வடகிழக்குக்கு சென்று அங்கிருந்து வடக்கு சுவர் வழியாக வடமேற்கு மூலம் கழிவு நீர் வெளியே செல்ல வேண்டும்.
    
தெற்கு பார்த்த வீட்டிற்கு தென் மேற்கு மூலையிலிருந்து குழாய் மூலம் தெற்கு சுவர் வழியாக தென்கிழக்கு மூலைக்கு வந்து வெளியே செல்ல வேண்டும். மற்றொரு பாதையாக தென்மேற்கு மூலையிலிருந்து மேற்கு சுவர் வழியாக வடமேற்கு சென்று அங்கிருந்து வடக்கு சுவர் வழியாக வடகிழக்கு சென்று அதன் பிறகு கிழக்கு சுவரை ஒட்டி தென்கிழக்கு வந்து அங்கிருந்து கழிவு நீர் கட்டிடத்தை விட்டு வெளியேற வேண்டும். பொதுவாக கழிவு நீர் குழாய் செல்லும் வழியில் அமைக்கப்படும். சேம்பரானது தெற்கு மேற்கு புறங்களில் முழுமையாக முடியிருக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அமையக் கூடிய சேம்பரானது திறந்தும் இருக்கலாம். குறிப்பாக கழிவு நீர் செல்ல கூடியக் குழாய் ஆனது கட்டித்திற்கு நடுவே அமைக்ககூடாது.
    

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Thursday, June 7, 2012

குளியல் மற்றும் கழிவறை

 ஒரு வீட்டில் கழிவறை குளியலறை எங்கு அமைக்க வேண்டுமென வாஸ்து ரீதியாக பார்த்தால் ஒரு வீட்டில் தென் கிழக்கு, தெற்கு பகுதி கிழக்கை ஒட்டிய தெற்கு பகுதி வடமேற்குப் பகுதி, மேற்கு பகுதியில் வடக்கை ஒட்டிய பகுதியில் கழப்பறை, குளியலறை அமைக்கலாம். பொதுவாக தென் மேற்கு  பகுதியிலும் வடகிழக்கு பகுதியிலும் கழிவறை குளியலறை அமைக்க கூடாது. குறிப்பாக தென் கிழக்கு அல்லது வடமேற்கில் தான் கழிவறை குளியலறை அமைக்க வேண்டும். கழிப்பறையில் கழிவு பொருட்கள் செல்ல கூடிய தொட்டியானது எப்படி அமைக்க வேண்டுமென்றால் ஒருவர் கழிவறையை உபயோகிக்கும் போது தெற்கு அல்லது வடக்கு பார்த்து அமர்வதுப் போல அமைக்க வேண்டும். கண்டிப்பாக சூரியன் உதிக்கும் திசையான கிழக்குப் பார்த்தும் சூரியன் உதிக்கும் திசைக்கு எதிர்புறமான மேற்கு திசையிலும் கழிவறையில் அமர்வதும் போல் இருக்க கூடாது.

குறிப்பாக படுக்கையறைக்கு ஒட்டியவாறு கழப்பறை அமைக்கும் போது கூட அந்த படுக்கை அறைக்கு தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் உள்ள பகுதியில் தான் அட்டாச்டு பாத்ரூம் அமைக்க வேண்டும். கண்டிப்பாக வடகிழக்கு தென்மேற்கில் அமைக்கக் கூடாது. பொதுவாக வடகிழக்கு திசையானது ஈசனே குடியிருக்க கூடிய தெய்வீக ஸ்தானம் என்பதினால் அங்கு கழிப்பறை அமைப்பதும் செல்வத்தை குவிக்கும் ஸ்தானமான தென்மேற்கு திசையிலும் கழிவறை அமைக்க கூடாது. கழிவறைக்கு ஒட்டியது போல பூஜையறை இருக்க கூடாது. அது போல தலைவாசலுக்கு நேராகவும், படிக்கட்டுக்கு கீழும் கழிவறை இருக்க கூடாது.

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Wednesday, June 6, 2012

பூஜை அறை


                         

     ஒரு வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நிகழ்ந்தால் முதலில் நன்றி சொல்வது இறைவனுக்கு தான். எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருளான இறைவனை வீட்டில் நாம் வைத்து வணங்குவது பூஜையறையில் தான். கஷ்டங்கள் வந்தால் இறைவா ஏனிந்த நிலை என புலம்புகிறோம். மனநிம்மதி வேண்டி நாம் சென்று மனதார கை கூப்பி வணங்கி ஐந்து நிமிடங்கள் இறைவனிடம் நம் குறைகளை இறக்கி வைக்கும் இடமும் பூஜையறைதான். நம்மோடு வாழ்ந்து இறைவனடி சேர்ந்தவர்களையும் பூஜையறையில் வைத்து தான் இறைவனாக இருந்து நல்வழி காட்டும்படி வேண்டிக் கொள்கிறோம். தினமும் பூப் போட்டு, விளக்கேற்றி ஊதுபத்தி ஏற்றி, சாம்பிராணி புகை போட்டு நம்மால் முடிந்த அளவிற்கு ஏதாவது பொங்கலோ அல்லது ஏதாவது ஒரு பழ வகையோ வைத்து தினமும் வழி படுகிறோம்.
  
   நாம் வாழம் வீடானது சுபிட்சங்கள் நிறைந்ததாகவும், மகிழ்ச்சி கரமானதாகவும் இருப்பதற்கு பூஜைகள் செய்வது, பிராத்தனை செய்வது, கடவுளை வணங்குவது போன்றவை ஒர் சிறந்த வழியாகும். அதிலும் வாஸ்து ரீதியாக பூஜையறையை எங்கு அமைக்க வேண்டுமோ அந்த இடத்தில் அமைத்து வழிப்பட்டால் வீடு எப்பொழுதும் லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருக்கும். நம் வீட்டின் பூஜையறையை வாஸ்து ரீதியாக எங்கு அமைக்க வேண்டும் என பார்க்கின்ற போது ஈசானே குடியிருக்க கூடிய ஈசான்ய மூலையில் அதாவது வடகிழக்கு மூலையில் அமைப்பது மிகவும் சிறப்பு. கட்டிடம் அமைக்கும் இடம் பெரியதாக இருந்து தனியாக பூஜையறை அமைக்கும் பட்சத்தில் வடகிழக்கு மூலையில் பூஜையறையை வைத்து அந்த பூஜை அறையின் மேற்-கு சுவற்றில் மேடை அமைத்து சுவாமி படமானது கிழக்கு நோக்கி இருக்கும் படி வைத்தால் நாம் சுவாமியை வணங்கும் போது மேற்கு நோக்கி நின்று வணங்குவோம். இப்படி வணங்குவது குடும்பத்திற்கு மிகவும் நல்லது.
    
] வீட்டில் ஏற்றப்படக் கூடிய மகா லக்ஷமி விளக்கை கிழக்கு அல்லது வடக்கு பார்த்ததுப் போல ஏற்றுவது நல்லது. குறிப்பாக வடகிழக்கு மூலையில் பூஜை அறை அமைக்கும் போது பூஜை அறையின் அளவானது அகலம் மற்றும் நீளமாக 6,8,10,11 அடிகளாக இருப்பது மிகவும் நல்லது.
    
கை கால் நீட்டி படுக்கே இடமில்லை இதில் பூஜை அறைக்கென்று தனி இடத்திற்கு எங்கு செல்வது என நினைப்பவர்கள் முடிந்த வரை கிழக்கு பா£த்தது போல வடகிழக்கில் சுவாமி மேடை அமைத்து அதில் படங்களை வைத்து வழிபடுவது நல்லது. முடிந்தவரை சுவாமி கும்பிடும் அறை அல்லது இடத்திற்கு அருகில் (அ) பக்கத்தில் கழிவறையோ குளியலறையோ இல்லாதிருப்பது நல்லது. குறிப்பாக மாடி படிகட்டுகளுக்கு கீழே பூஜையறை இல்லாதிருப்பது மிக மிக உத்தமம்.

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001


Tuesday, June 5, 2012

சமையலறை


           
     ஒரு வீட்டில் சமையலறை எங்கு அமைத்தால் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்பதினை வாஸ்து சாஸ்திர ரீதியாக பார்த்தால் அக்னி மூலை என வர்ணிக்கப்பட கூடிய தென் கிழக்கு மூலையில் அமைப்பது மிக சிறப்பு. தென் கிழக்கு  மூளையில் அமைக்கும் அறையில் எப்படிப்பட்ட அமைப்பு இருந்தால் சிறப்பான பலன்கள் ஏற்படும் என பார்த்தால் தென்கிழக்கு அறையில் கிழக்கு சுவற்றில் அதுவும் தெற்கை ஒட்டிய கிழக்கு சுவற்றில் சமையல் மேடை அமைக்க வேண்டும். அந்த மேடையில் அடுப்பு வைத்து கிழக்கு பார்த்து சமைப்பது போல் சமையலறை இருக்க வேண்டும். சமையல் மேடைக்கு மேல் கிழக்கு சுவற்றில் சன்னல் அல்லது வென்டிலேட்டர் அமைத்து சமையலறைக்குள் சூரிய ஒளி வருவது போல் அமைப்பது மிகவும் சிறப்பு. சமையல் மேடைக்கு அருகில் கிழக்கு சுவற்றில் அதுவும் வடக்கை ஒட்டிய கிழக்கு சுவற்றில் பாத்திரம் கழவுவதற்கான தொட்டி அமைப்பது, வடகிழக்கு பகுதியில் தண்ணீர் வருவது போல் வைப்பது மிக சிறப்பு. குறிப்பாக சமையல் அறையில் வடகிழக்குப் பகுதியில் பலமான பொருட்கள் எதுவும் வைக்காமல் முடிந்த வரை காலியாக விட்டு விட்டு தண்ணீர் தேக்கி வைக்க கூடிய பாத்திரங்களை வைப்பது மிகவும் சிறப்பு.

சமையல் அறையில் முடிந்த வரை கனமான பாத்திரங்களை தென் மேற்குப் பகுதியில் வைப்பது மிக சிறப்பு. அதாவது கிரைண்டர், குளிர் சாதனப் பெட்டி ஆகியவற்றை தென்மேற்கு பகுதி அல்லது மேற்கு சுவரை ஒட்டிய பகுதி, வடமேற்கு பகுதியில் வைப்பது மிக சிறப்பு. சமையல் அறையில் செல்ப் ஆனது தெற்கு சுவர் மற்றும் மேற்கு சுவற்றில் அமைத்து அதில் சமையலுக்கு தேவையான பொருட்களை வைக்கலாம். செல்ப் ஆனது கிழக்கு மற்றும் வடக்கு சுவற்றில் அமைப்பது அவ்வளவு சிறப்பல்ல. ஒரு வீட்டில் சமையல் அறை ஆனது மேற் கூறியவாறு அமைப்பதன் மூலமாக அனுகூலமான பலன்கள் உண்டாகும். தென் கிழக்கு மூலையில் சமையலறை வைக்க சாத்தியமான சூழ்நிலை இல்லாத பட்சத்தில் அதாவது தெற்கு பார்த்த வீட்டிற்கு உச்ச ஸ்தானமான கிழக்கு ஒட்டிய தெற்கு பகுதியில் தலை வாசல் வைக்கும் பட்சத்தில் சமையலறை தென் கிழக்கில் வைக்க முடியாது. அப்போது வடமேற்கில் சமையலறை அமைத்து எப்படி தென் கிழக்கு அறையில் சமையலறை வைத்தால் எப்படி அமைப்போமோ, அதே போல அமைப்பில் வடமேற்கில் அமைக்க வேண்டும்.
    
இடநெருக்கடிக் கொண்ட சென்னை போன்ற பெருநகரங்களில் தென் கிழக்கில் அமைக்க முடியாத சூழ்நிலையில் மற்ற இடங்களில் சமையலறையை அமைத்தால் தெற்கை ஒட்டிய கிழக்கு பகுதியில் சமையலறை, கிழக்-கு சுவற்றில் சமையல் மேடை அமைப்பது மிகவும் சிறப்பு. பொதுவாக தென்கிழக்கில் சமையலறையை அமைக்காமல் ஈசான்ய மூலை என வர்ணிக்கப்பட கூடிய வடகிழக்குப் பகுதியில் சமையலறை அமைத்தால் நல்லதல்ல நைரிதி என வர்ணிக்கப்பட கூடி தென் மேற்கிலும் சமையலறை அமைக்க கூடாது. வடகிழக்கு பகுதி தெய்வீகமான ஸ்தானம் ஆகும். ஜல நடமாட்டம் கொண்ட ஸ்தானம் ஆகும். அங்கு அடுப்பு இருப்பதன் மூலமாக பல்வேறு கெடுபலன்கள் ஏற்படும். தென் மேற்கு பகுதியில் பணப்பெட்டி முக்கியமான பொருட்கள், படுக்கயறை போன்றவை இருக்கும் ஸ்தானமாகும். அங்கு அடுப்பு வைத்தால் குடும்பத்தில் சுபிட்சங்கள் குறையும்.
   
 உண்ணும் உணவானது உடலுக்கு மிகுந்த அவசியமாகும். உண்ணும் உணவை கூட வாஸ்து ரீதியாக எந்த திசையில் அமர்ந்து உணவு உண்பது என்ற விதியும் உள்ளது. உணவு உண்ணும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி உட்கார்ந்து உண்டால் நல்ல செரிமானமாவதுடன் உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.



ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Friday, June 1, 2012

படுக்கையறை

    பகவெல்லாம் ஒடியாடி உழைத்துக் கொண்டிருக்கும் உடம்பிற்கு ஒய்வு என்பது மிக அவசியமான ஒன்றாகும். அதற்கு உதவும் இடம் தான் படுக்கை அறை. சிலருக்கு எந்த வெளி இடங்களுக்கு சென்றாலும் தூக்கமே வராது. தன் வீட்டில் தன்னுடைய பெட் மற்றும் தலையணை, பெட்சீட்டுடன் படுத்தால் மட்டுமே உறக்கம் வரும். இதற்கு காரணம் இவையெல்லாம் பழக்கப்பட்டவையாக இருக்கும். வெளியிடம் என்பது பழகாத இடமாக இருக்கும். வெளியில் செல்லும் மனிதனுக்கு தினம் தினம் எவ்வளவோ பிரச்சனைகள், சங்கடங்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. சிலருக்கு மகிழ்ச்சியான செய்திகளும், குதூகலமும் உண்டாகிறது. அன்றாட நிகழ்வுகளை மீண்டும் நினைவு கூர்ந்து கணவன் மனைவி பகிர்ந்து கொள்ள கூடிய இடம் படுக்கை அறை தான். இப்பொழுது எல்லாம் இளைஞர்களுக்கும்  (ஜீக்ஷீவீஸ்ணீநீஹ்) தனிமை தேவைப்படுகிறது. படுத்துறாங்க, தன்னுடைய பொருட்களை பாதுகாத்து கொள்ள தனித்தன்மை முக்கியமாகிறது. இதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடமும் அவர்களது படுக்கையறைதான். இளம் தம்பதியருக்கு சொல்லவே வேண்டாம். கொண்டாட்டமும் குதூகலமும் படுக்கையறையில் தான். முதியவர்களுக்கு எப்பொழுதும் ஒய்வு வேண்டும். அவர்களுக்கென்று படுத்துறங்க ஒரு அறையை ஏற்படுத்தி கொடுத்து விட்டால் அவர்களுக்கொரு மகிழ்ச்சி. வாழ்க்கை சக்கரத்தில் சிக்கி அன்றாடம் சுழன்று கொண்டிருக்கும் மனிதன் எல்லா கவலைகளையும் மறந்து நிம்மதியாக ஒய்வெடுக்க கூடிய இடமாக அவனது படுக்கை அறை இருக்க வேண்டும்.

    மனநிம்மதியையும், சந்தோஷத்தையும் தரக் கூடிய படுக்கையறையானது வாஸ்து ரீதியாக எந்த திசையில் அமைந்தால் நிம்மதியான உறக்கம், நல்ல ஆரோக்கியம், கட்டில் சுகம் தாம்பத்ய வாழ்வில் ஒற்றுமை கனவுகளற்ற உறக்கம், மனநிம்மதி போன்ற நற்பலன்கள் உண்டாகும் என பார்க்கும் போது மேற்கு, தென்மேற்கு, வடமேற்கு பகுதிகளே சிறந்ததாக கருதப்படுகிறது.

    இத்திசைகளில் அமையும் படுக்கை அறையில் கூட ஒருவர் படுத்து உறங்குவதற்கு உரிய பகுதியாக கருதப்படும் இடம் தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு பகுதியாகும். மேற்கூறிய இடங்களில் தான் கட்டில், மெத்தை, பாய் பேட்டுப் படுப்பது மிக சிறப்பு. அதுவும் கட்டில் மெத்தையானது கண்டிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு சுவற்றை ஒட்டிப் போடக் கூடாது. கட்டிலில் எந்த பக்கம் தலை வைத்துப் பார்த்தால் சிறப்பு என பார்க்கின்ற போது தெற்கில் தலை வைத்து வடபுறம் கால் நீட்டுவதும் மேற்கில் தலை வைத்து கிழக்கு புறம் கால் நீட்டுவதும், மிகச் சிறப்பாகும். தவிர்க்க முடியாத இடங்களில்  கிழக்குப் புறம் தலை வைக்கலாம். கண்டிப்பாக வடக்கு திசையில் தலை வைக்கவே கூடாது.

    படுக்கையறையானது தென்கிழக்கு திசையான அக்னி மூலையில் அமைத்தால் உடல் ஆரோக்கிய பாதிப்பு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு, வீண் சண்டை சச்சரவுகள் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும் என்பதால் தென்கிழக்கு படுக்கையறை அமைக்க கூடாது. அது போல வடகிழக்கு திசையானால் ஈசனே குடியிருக்கும். ஈசான்ய திசை என்பதால் அங்கு படுக்கை அறை அமைப்பது அவ்வளவு நல்லதல்ல. இந்த இடத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வடகிழக்கில் படுக்கை அறை அமைந்தால் முதியவர்கள் குழந்தைகள் வேண்டுமென்றால் உபயோகிக்கலாம். தாம்பத்திய வாழ்வில் ஈடுபட கூடிய இளம் தம்பதிகள் கண்டிப்பாக உபயோகிக்க கூடாது. அது போல தென்கிழக்கு திசையில் படுக்கையறை அமைந்தால் அதனை விருந்தினர்கள் உபயோகிக்கலாமேத் தவிர பெண்கள் மற்றும் இளம் தம்பதியினர் உபயோகிப்பது அவ்வளவு நல்லதல்ல. சில வாஸ்து புத்தகங்கள் வடமேற்கு திசையில் வடக்கை, ஒட்டிய பகுதிகளில் கூட படுக்கை அறை அமைத்தால் அங்கு விருந்தினர்கள் மற்றும், முதியவர்கள் படுப்பது தான் சிறப்பு என கூறுகிறார்கள்.

   திருமணமாகாத இளம் பெண்கள் வடக்கை ஒட்டிய வடமேற்கு திசையில் படுக்கையறை அமைத்து படுத்தால் மனது  அலைபாய கூடிய சூழ்நிலை தேவையற்ற சிந்தனைகள் உண்டாகும் என சில வாஸ்து நூல்கள் கூறுகின்றன. ஆக தென் மேற்கில், மேற்கில், மற்றும் வடமேற்கு பகுதியில் படுக்கை அறை அமைப்பது தான் மிகச் சிறப்பு. தென் மேற்கில் படுக்கை அறை அமைக்கும் போது கூட சிலர் வீடு கட்டும் போது படுக்கை அறைக்கு தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதியில் கட்டில் போட முடியாத அளவிற்கு செல்ப், ஜன்னல் அல்லது கழிப்பறை கதவு போன்றவற்றை அமைத்து விடுகிறார்கள். அப்படி அமைக்காமல் கட்டில் போடுவதற்கு வசதியாக படுக்கை அறை அமைக்க வேண்டும். பொதுவாக நெருக்கடி மிகுந்த பகுதிகளில் இடப் பற்றாகுறை காரணமாக மிகச்சிறிய வீடுகளில் குடியிருப்பவர்கள் படுக்கை அறை எந்த இடத்தில் அமைத்தாலும் பரவாயில்லை. அந்த  இடத்திற்கு தென்மேற்கு திசையில் கட்டில் மெத்தை போன்றவற்றை போட்டு படுத்தால் நிம்மதியான உறக்கமும் திருப்தியான குடும்ப வாழ்வும், கணவன் மனைவியிடையே அந்யோன்யமும் அதிகரிக்கும். நல்ல ஆரோக்கியமும் உண்டாகும். தேவையற்ற கனவுகளும் வராது.


ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001