Thursday, December 27, 2012

2013 NEW YEAR PALANGAL - மீன ராசி


2013 ஆண்டு பலன்கள், மீன ராசி


தங்களுடைய விருப்பத்திற்கேற்றவாறு வாழ்க் கையை அமைத்துக் கொள்ளம் மீன ராசி அன்பர்களே! உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2013ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜென்ம ராசிக்கு 3ம் வீட்டில் சஞ்சரிக்கும். உங்கள் ராசியாதிபதி குருபகவான் வரும் 28-05-2013 முதல் 4ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பது சாதகமற்ற அமைப்பாகும். இது மட்டுமின்றி சர்பகிரகங்களான கேது 2ம் விட்டிலும் 8ல் ராகுவும் சஞ்சரிப்பது, 8ம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் அஷ்டம சனி நடைபெறுவதும் அவ்வளவு அனுகூலப்பலனை ஏற்படுத்தாது என்ப தால் எதிலும் கவனமுடன் நடந்து கொள்வத நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களும் வீண் பிரச்ச னைகளை உண்டாக்குவார்கள். பணவரவுகளிலும் நெருக்கடிகள் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளிலும் தடைகள் உண்டாகும். தொழில் வியாபாரரீதியாக எடுக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோ கஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்படுவதுடன் வேலைபளுவும் கூடும்.

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். உடல் சோர்வு கைகால் மூட்டுகளில் வலி வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றயாவும் உண்டாகும். ஏதாவது ஒரு பிரச்சனைக்காக மருத்துவ செலவுகளை செய்து கொண்டிருப்பவர்களுக்கு மேலும் அதிக செலவுகள் ஏற்படும். மனைவி பிள்ளைகளாலும் மனநிம்மதி குறையும்.

குடும்பம் பொருளாதாரநிலை

ஜென்ம ராசிக்கு 2ல் கேதுவும் 8ல் சனிராகுவும் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். வீண்வாக்கு வாதங்களால் உற்றார் உறவினர்களை பிரியக்கூடிய கூ+ழ்நிலையும் உண்டாகும். பண வரவுகளில் நெரு க்கடிகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் குடும்பத் தேவைகளை பூர்;த்தி செய்யவே கடன் வாங்க வேண்டியிருக்கும். அசையும் அசையா சொத்து க்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பும் குறையும்.

 கொடுக்கல் வாங்கல்

குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் 3ம் வீட்டிலும், பின்பு 4ம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். பணத்தை பெற்றுக் கொண்டவர்களும் துரோகம் செய்வார்கள். பணவிஷயத்தில் தேவையற்ற வம்பு வழக்குகளும் உண்டாகும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபத்தினைத் தான் பெறமுடியும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் எதிர்பார்க்கும். உதவிகளும் தாமதப்படும். வாங்கிய வங்கி கடன்களை அடைக்க முடியாமல் அவமானப்பட நேரிடும். கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் மனநிம்மதி குறையும். அலைச்சல்கள் அதிகரிக்கும்.

 உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் நிம்மதியான நிலையினைப் பெறமுடியாது. பிறர் செய்யும் தவறுகளுக்காக நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவதால் உயரதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாவீர்கள் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தைவிட்டு பிரியவேண்டியிருக்கும். புதிய வேலைவாய்ப்பு தகுதிக்கேற்றபடியிருக்காது.

 அரசியல்வாதிகளுக்கு

பெயர் புகழ் யாவும் மங்கும். மக்களின் தேவைகளை ப+ர்த்தியடைய செய்ய முடியாமல் போவதால் அவர்களின் ஆதரவும் குறையும். கட்சி பணிகளுக்காக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரித்து உடல் நிலை சோர்வடையும். வீண் விரயங்களும் அதிகரிக்கும். நீங்கள் நல்லதாக நினைத்து பேசும் வார்த்தைகளும் உங்களுக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

விவசாயிகளுக்கு

பயிர்களில் புழு பூச்சிகளின் தொல்லைகள் அதிகரிப்பதால் விளைச்சல் குறையும். பயிர்களை பாதுகாக்க அதிகபாடுபட வேண்டியிருக்கம். கால் நடைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் பங்காளிகளிடையே மனசஞ்சலங்களும் வம்புவழக்குகளும் ஏற்படும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும். திருமண சுபகாரியங்களில் தடைகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே ஏற்பட கூடிய பிரச்சனைகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் கடன் வாங்க நேரிடும். 

படிப்பு

கல்வியில் முழுமையாக ஈடுபடமுடியாதபடி ஞாபகமறதியும், மனக்குழப்பங்களும் உண்டாகும். ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். அரசு வழியில் எதிபார்க்கும் உதவிகள் தாமதப்படும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வாழ்க்கை பாதை மாறும் என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவறில் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள்.

ஜனவரி

தம்மிடமுள்ள ரகசியங்களை மறைக்காத குணம் கொண்ட உங்களுக்கு ஜென்மராசிக்கு 10ல் சூரியனும் 11ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். புதியவாய்ப்புகளும் கிடைக்கும். பணவரவுகள் சுமாராக இருக்கும் காலம் என்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. குடும்ப ஒற்றுமையும் சுமாராகத்தானிருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படவும். விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்  05-01-2013 இரவு 10.13 மணிமுதல் 
      08-01-2013 அதிகாலை 01.16 மணிவரை

பெப்ரவரி

வெகு சீக்கிரத்தில் பிறர் மனதிற்கு பிடித்தவராக மாறும் உங்களுக்கு 11ல் சூரியன் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் லாபமும் உண்டாகும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உறவின ர்களும் வீண் பிரச்சனையை ஏற்படுத்துவார்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும். தவறுகளுக்கு பொறுப்பேற்க கூடிய காலம் என்பதால் தங்கள் பணிக ளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தட்சி ணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்   02-02-2013 காலை 06.08 மணிமுதல் 
       04-02-2013 காலை 09.13 மணிவரை

மார்ச்

வெகு சீக்கிரத்தில் உணர்ச்சிவசப்படக் கூடிய உங்களுக்கு 8ம் வீட்டில் சனிராகு சஞ்சரிப்பதும், 12 வீட்டில் சூரியன் செவ்வாய், சுக்கிரன் போன்ற கிரகங்கள் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடமும் ஒற்றுமை குறைவு உண்டாகும். திருமண சுபகா ரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வேலை பளுவையும் அதிகரிக்கும் முருகப்பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 01-03-2013 மதியம் 01.59 மணி முதல் 
03-03-2013 மாலை 05.06 மணிவரை 
28-03-2013 இரவு 09.48 மணிமுதல் 
30-03-2013 இரவு 12.49 மணிவரை

ஏப்ரல்

அடிக்கடி குணத்தை மாற்றிக்கொள்ளும் உங்களுக்கு ஜென்மராசியில் சூரியன் செவ்வாயும், 2ல் கேதுவும், 3ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். கொடுத்த கடன்களை திரும்பப் பெறமுடியாமல் போகும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் கிடைக்காது. நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை கள் உண்டாகும். சிவபெ ருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்    25-04-2013 காலை 05.41 மணிமுதல் 
        27-04-2013 காலை 09.07 மணிவரை

மே

சற்று பயந்த சுபாவம் கொண்ட உங்களுக்கு 2ல் சூரியன் செவ்வாயும் 3ல் குருவும் 8ல் சனி ராகுவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக் கியத்தில் பாதிப்புகள் உண்டாவதோடு குடும்பத் திலுள்ளர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையேயும் ஒற்றுமை குறை யும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். குடும் பத்தேவைகளை பூர்த்தி செய்யவே கடன் வாங்க வேண்டியிருக்கும். பொருளாதார தடைபடும். தட்சி ணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்    22-05-2013 மதியம் 01.35 மணி முதல் 
        24-05-2013 மாலை 05.13 மணிவரை

ஜூன்

எப்போதும் கற்பனை உலகத்தில் மிதக்கும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சனைகள் யாவும் விலகும். 4ல் குருசஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அசையும் அசையா சொத் துக்களால் சிறுசிறு விரயங்கள் சந்திப்பீர்கள். உத்தி யோகஸ்தர்களுக்கு சற்று வேலை பளு குறையும். விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம்    18-06-2013 இரவு 09.43 மணிமுதல் 
        21-06-2013 அதிகாலை 01.30 மணிவரை

ஜூலை

பொறுமைசாலியாகவும், தன்னடக்கம் உள்ளவராகவும் விளங்கும் உங்களுக்கு 4ல் சூரியன் செவ்வாயும், 8ம் வீட்டில் சனிராகுவும் சஞ்ச ரிப்பதால் தேவையற்ற அலைச்சல்களும், சுகவா ழ்வில் பாதிப்புகளும் உண்டாகும். அசையும் அசை யா சொத்துக்களாலும் வீண் விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலம் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபா ரம் செய்பவர்கள் எதிலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்   16-07-2013 காலை 09.16 மணி முதல் 
       18-07-2013 காலை 09.46 மணிவரை

ஆகஸ்ட்

வெகு சுPக்கிரத்தில் உணர்ச்சிபட கூடிய இளகிய மனம் படைத்த உங்களுக்கு 2ல் கேதுவும் 4ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் குடும்ப த்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் வீண்விரயங்களை சந்திக்க வேண்டியிருக்கம். மாத பிற்பாதியில் போட்டிகள் சற்று குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று நிலையை சமாளிக்க முடியும். துர்க்கை அம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 12-08-2013 மதியம் 01.47 முதல் 
      14-08-2013 மாலை 05.53 மணிவரை

செப்டம்பர்

ஆடம்பர பொழுது போக்குகளில் அதிக நாட்டம் கொண்ட உங்களுக்கு குரு 4லும் சனிராகு 8லும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். மாத முற்பாதிவரை சூரியன் 6ம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஓரள வுக்கு உதவிகள்கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். சிலருக்கு வேலைபளு கூடுவதால் விடுப்பு எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
சந்திராஷ்டமம் 08-09-2013 இரவு 09.36 மணிமுதல் 
      11-09-2013 அதிகாலை 01.55 மணிவரை

அக்டோபர்

குடும்பத்தின் மீது அதிக பற்று கொண்ட உங்களுக்கு, 2ல் கேதுவும், 4ல் குருவும் 7ல்; சூரியனும், 8ல் சனிராகு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவதே நல்லது. உடனிருப்பவர்களே துரோகம் செய்யதுணிவார்கள் கணவன் மனை வியிடையே ஏற்பட கூடிய கருத்து வேறுபாடுகளால் மனநிம்மதி குறைவடையும். உடல் ஆரோக்கியத்தி லும் பாதிப்புகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செ ய்பவர்களுக்கு கூட்டாளிகளால் வீண் பிரச்சனை கள் ஏற்படும் குல தெய்வ வழிபாடுகள் செய்வது நல்ல து.
சந்திராஷ்டமம்   06-10-2013 அதிகாலை 05.22 முதல் 
       08-10-2013 காலை 09.49 மணிவரை

நவம்பர்

நீதி நேர்மை தவறாமல் வாழ விரும்பும் உங்களுக்கு 8ல் சூரியன் சனி,ராகு சஞ்சாரம் செய்வதால் மனக்குழப்பங்கள் நிறைய ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகளால் எதிலும் நிம்மதியாக செயல்பட முடியாது சுகவாழ்வு பாதிப்படையும். உற் றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகளால் அவர்களை பிரிய நேரிடும். சுபகாரிய முயற்சிகளிலும் தடைகள் உண்டாகும். கொடுத்ததைக் கேட்டால் அடுத் தது பகையாக மாறும். சனிக்குரிய பரிகாரங்கள் தொடர்ந்து செய்யவும்.
சந்திராஷ்டமம் 02-11-2013 பகல் 01.66 மணிமுதல் 
     04-11-2013 மாலை 05.48 மணிவரை 
     29-11-2013 இரவு 08.56 மணிமுதல் 
     02-12-2013 அதிகாலை 01.52 மணிவரை.

டிசம்பர்

மிகுந்த பெருந்தன்மையும், பரந்த மனப்பா ன்மையும் கொண்ட உங்களுக்கு 8ல் புதனும், சனிராகுவும், 7ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் முன்கோபத்தை குறைப்பதும், அனைவரையும் அனுசரித்து செல்வதும் நல்லது. எதிர்பார்க்கும் உத விகள் சற்றுகிடைக்கும் என்றாலும் வரவுக்கு மீறிய செலவுகளே உண்டாகும். கூட்டுத்தொழில் செய்ப வர்க ள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் தட்டிக் கொடுத்து வேலைவாங்குவது நல்லது. பண வரவுகள் சுமாராக இருக்கும். முருகப் பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 27-12-2013 அதிகாலை 04.51 மணிமுதல் 
     29-12-2013 காலை 10.00 மணிவரை

பூரட்டாதி 4ம் பாதம்

ஆன்மீக பணிகளில் அதிக ஈடுபாடு கொண்ட பூரட்டாதி நேயர்களே இந்த ஆண்டு முழு வதும் உங்களுக்கு சற்று சோதனையான காலங்க ளே! உங்கள் ராசியாதிபதி குருபகவான் சாதகமின்றி சஞ்சரிப்பது மட்டுமின்றி அஷ்டம சனியும் தொடருவ தால் உடல் ஆரோக்கியத்தில் கண்டிப்பாக நீங்கள் அவசியம் கவனம் செலுத்தியே ஆகவேண்டும். நீங் கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்கள் கூட மற்றவர்களுக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படு த்திவிடும். நிம்மதியும் குறையும்.

உத்திரட்டாதி

நினைத்ததை நடத்தி காட்டவேண்டும் என்ற துடிப்பு கொண்ட உத்திரட்டாதி அன்பர்களே! சனிபகவான் 8ம் வீட்டில் சஞ்சரிப்பதால் அஷ்டம சனி நடைபெறுகிறது. குரு மற்றம் ராகுகேதுவும் சாதக மின்றி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி கணவன் மனை வியிடையேயும் ஒற்றுமை குறையும். குடும்ப த்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் அதிக ரிக்கும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படு வதால் பணவரவுகளிலும் நெருக்கடிகள் உண்டா கும். அலைச்சல் டென்ஷன்களும் அதிகரிக்கும். சேமிப்புகள் குறையும்.

ரேவதி

ஆடம்பரமாக செலவு செய்வதில் அலாதி பிரியம் கொண்ட ரேவதி அன்பர்களே ராசியாதிபதி குருவும், சனி மற்றும் ராகுகேதுவும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறையும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும். பிரச்சனை களால் மனக்குழப்பங்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் மந்த நிலை நிலவுவதால் பொரு ளாதார நிலையிலும் நெருக்கடிகள் அதிகரிக்கும். ஆடம்பரசெலவுகளை குறைப்பதும், உடல் ஆரோ க்கியத்தில் கவனம் செலுத்துவதும் மிகவும் நல்லது.
அதிர்ஸ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9,10,11,12   நிறம் - மஞ்சள், சிவப்பு 
கிழமை - வியாழன், ஞாயிறு கல் - புஷ்ப ராகம்
திசை - வடகிழக்கு   தெய்வம் - தட்சிணாமூர்த்தி

; பரிகாரம்

உங்கள் ஜென்மராசிக்கு 2ல் கேதுவும் 8ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் சர்பசாந்தி செய்வது துர்க்கை வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நல்லது. குரு மே வரை 3லும் ஜூன் முதல் 4லும் சஞ்சாரம் செய்வதால் குருப்பிரிதி தட்சிணா மூர்த் தியை வழிபாடு செய்வதும் நல்லது. 8ல் சனி சஞ்சரித்து அஷடம சனி நடைபெறுவதால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வதும், ஆஞ்ச நேயரை வழிபடுவதும் நற்பலனை உண்டாக்கும்.

please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.

2013 PALANGAL - கும்பராசி



2013 ஆண்டு பலன்கள்,கும்பராசி


     புரட்சிகரமான கொள்கைகளையும் தீர்மானங்க ளையும் கொண்ட கும்பராசி அன்பர்களே! உங்க ளுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2013ம் ஆண்டு உங்கள் ராசியாதிபதி சனிபகவான் பாக்கியஸ்தான 9ல் ராகு சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு மேன்மையானப் பலனை பெறமுடியும். பயணங்களால் அனுகூலம் உண்டா கும். ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் 4ம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்ச ல்களையும் சுகவாழ்வில் பாதிப்புகளையும் சந்திக்க நேர்ந்தாலும் வரும் 28-05-2013 முதல் குருப கவான் பஞ்சம ஸ்தானமான 5ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை யும், தாராள தனவரவுகளும் உண்டாகும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். அசையும் அசையா சொத்துக்களையும் வாங்கும் யோகம் கிட்டும் சிலருக்கு அழகான புத்திர பாக்கியமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றங்கலும் லாபங்க ளும் ஏற்படும். உத்தியோகஸ்தர்களும் பணியில் கௌரவமான பதவிகளை பெறுவார்கள்.

தேக ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படுவுPர்கள் மனைவி பிள்ளைகளால் சற்று மருத்துவ செலவு களை எதிர்கொண்டாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபீட்சமும் உண்டாகும். தேவையற்ற பயணங்க ளைத் தவிர்ப்பதால் வீண் அலைச்சல்கள் குறையும்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆண்டின் முற்பாதியில் குரு 4ம் வீட்டில் சஞ்சரிப்பதால் சற்று குழப்பங்கள் நிலவினாலும், ஜூன் முதல் 5ம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர பாக்கியமும் அமையும். அசையும் அசையா சொத்து க்கள் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.

 கொடுக்கல் வாங்கல்

குருபகவான் மேமாதம்வரை 4ல் சஞ்ச ரிப்பதால் கொடுக்கல் வாங்கலில் வீண் பிரச்ச னைகளை சந்திக்க நேர்ந்தாலும் வரும் ஜூன் மாதம் முதல் குருபகவான் 5ம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். வம்பு வழக்குகள் மறையும்.

 தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபத்தினைப் பெற்றுவிட முடியும். எடுக்கும் புதிய முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனு கூலம் உண்டாகும். கூட்டாளிகளையும், தொழிலா ளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது.

 உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் அனுகூலமானப் பலனை பெறமுடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை ஏற்பட்டாலும் எடுக்கும். பணிகளை சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் யோகமும் கிட்டும்.

 அரசியல்வாதிகளுக்கு

உங்கள் தகுதிக்கு எந்தகுறைவும் இருக்காது இருக்கும். பதவிகளை இழக்காமல் காப்பாற்றி கொள்ளமுடியும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்யநேர்ந்தாலும் வருமானமும் குறை வின்றி இருக்கும். நிறைய பயணங்களை மேற் கொள்ளகூடிய வாய்ப்பும் அமையும். மக்களின் ஆதர வும் செல்வாக்கும் குறையாமலேயே இருக்கும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். பட்டபாட்டிற்கான பலனை அடைந்துவிடமுடியும். போட்ட முதலீட்டைவிட பன்மடங்கு லாபத்தினைப் பெறுவுPர்கள் பூமி நிலம் போன்றவற்றிலிருந்து வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பங்காளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியினை அளிக்கும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு ஆண்டின் பிற்பாதியில் நல்ல வரன்கள் தேடிவரும். ஆடை ஆபரணமும் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களிடையே இருந்த பகைமையும் மறந்து ஒற்றுமையுடன் செயல்படமுடியும்.

படிப்பு

கல்வியில் சிறப்பான நிலையே இருக்கும். எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண்களை பெறமுடியாவிட்டாலும் ஓரளவுக்கு சிறப்பான நிலை யினை அடைவீர்கள் அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கபெறும். நல்ல நண்பர்களின் நட்புகளால் மேலும் உயர்வுகளைப் பெறமுடியும். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருவீர்கள்.

 ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவறில் ஆண் டின் பிற்பாதியில் அனுகூலங்கள் உண்டாகும்.

ஜனவரி

புன்சிரிப்பம் முக்த்தோற்றமும் கொண்ட உங்களுக்கு ஜென்மராசிக்குப் 10ல் சுக்ரனும் 11ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப் பாக இருக்கும். தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகளையும் கிடைக்கப் பெறுவீர்கள் குடும்பத்திலும் நிம்மதி நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் கௌரவமான பதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 03-01-2013 மாலை 05.35 மணிமுதல் 
05-01-2013 இரவு 10.13 மணிவரை

பெப்ரவரி

நல்ல பேச்சாற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வதும், தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படவும். முருகப்பெருமானை வழி படவும்.
சந்திராஷ்டமம் 31-01-2013 அதிகாலை 01.27 மணிமுதல் 
02-02-2013 காலை 06.08 மணிவரை 
27-02-2013 காலை 09.10 மணி முதல் 
01-03-2013 மதியம் 01.59 மணிவரை

மார்ச்

இயற்கையான விருப்பு, வெறுப்பு கொண்ட உங்களுக்கு ஜென்மராசியில் சூரியனும், 2ல் செவ்வாயும் 4ல் குருவும் சஞ்சரிப்பதால் சுகவாழ்வு பாதிப்படையும் உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்தவ செலவுகளும் உண் டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவ ர்களுக்கும் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவுகளிலும் நெருக்கடிகள் ஏற்படும். சேமி ப்புகள் குறையும். முருகப்பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 26-03-2013 மாலை 04.44 மணிமுதல் 
28-03-2013 இரவு 09.48 மணிவரை

ஏப்ரல்

முரட்டு பிடிவாத குணம் கொண்ட உங்களுக்கு மாத முற்பாதிவரை சூரியன் செவ்வாய் 2ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவும், கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பரசெலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. மாதபிற்பாதியில் சூரியனும் செவ்வாயும் 3ம்வீட்டில் சஞ்சாரம் செய்ய விருப்பதால் ஓரளவுக்கு அனுகூலப் பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றிகிட்டும். அனை வரையும் அனுசரித்து செல்வது நல்லது. குருவை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 22-04-2013 இரவு 12.22 மணிமுதல் 
25-04-2013 காலை 05.41 மணிவரை

மே

தங்களுக்கு சமமானவர்களிடம் மட்டுமே பழகும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் மாதமுற்பாதிவரை சூரியன் செவ்வாய் சஞ்ச ரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். பொரு ளாதார நிலை ஏற்றஇறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்திலும் ஓரள வுக்கு நிம்மதி நிலவும். தொழில் வியாபாரம் செய்பவ ர்களுக்கு நிம்மதி நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே மந்தநிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் ஏற்படாது உத்தியோகஸ்தர்களுக்கு சற்றே வேலைபளு குறையும் துர்க்கை அம்மனை வழிபடவும்.    
சந்திராஷ்டமம் 20-05-2013 காலை 08.07 மணி மதல் 
22-05-2013 மதியம் 01.35 மணிவரை

ஜூன்

புரட்சிகரமான கொள்கைகளைக் கொண்ட உங்களுக்கு 4ம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பது தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்தும் என்றாலும் 5ம்வீட்டில் குரு சஞ்சரிப்பதால் பணவரவில் இருந்த நெருக்கடிகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தடைபட்ட திருமண சுபகாரியங்களிலும் வெற்றிகிட்டும். புத்திரவழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துக்களிலிருந்து வந்த வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்குவரும். கடன்கள் படிப்படியாக குறையும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 16-06-2013 மாலை 03.36 மணிமுதல் 
18-06-2013 இரவு 09.43 மணிவரை

ஜூலை

தன்னை மட்டம் தட்டி பேசபவர்களை தூக்கியெறியம் குணம் கொண்ட உங்களுக்கு 5ம் வீட்டில் குரு சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 6ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனு கூலமான அமைப்பாகும். இதனால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியமும் மேம்ப டும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகி உங்கள் பலமும் வளமும் மேம்படும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். முருகப் பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 13-07-2013 இரவு 11.50 மணிமுதல் 
16-07-2013 காலை 05.53 மணிவரை

ஆகஸ்ட்

பலரை தன் வசமாக்கி கொள்ளகூடிய அளவிற்கு பேச்சாற்றல் கொண்ட உங்களுக்கு, 5ல் குருவும் 6ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் குடும்ப த்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகளும் தாராளமாக இருக்கும். வீடு,மனை, வண்டி வாகனங்களையும் வாங்குவீர்கள். பொன், பொருள் சேரும் பிரிந்த உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். உத்தியோகஸ்தர்க ளுக்கு பணியில் கௌரவமான பதவிகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். விஷ்ணு பகவானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 10-08-2013 காலை 07.36 மணிமுதல் 
12-08-2013 மதியம் 04.47 மணிவரை

செப்டம்பர்

பிறர் வாழ்வில் குறுக்கிடாத உயர்ந்த பண்பு கொண்ட உங்களுக்கு 5ல் குருவும், 6ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறை வேற்று வீர்கள் அசையும் அசையா சொத்துக்களையும் வாங்கமுடியும். 7ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றுகவனம் எடுத்துக் கொள்வ தும், குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல் வதும் நல்லது. தொழில் வியாபாரத்திலுள்ள போட்டி பொறாமைகளை திறமையாக சமாளிக்க முடியும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றும்.
சந்திராஷ்டமம் 06-09-2013 மதியம் 03.05 மணி முதல் 
08-09-2013 இரவு 09.36 மணிவரை

அக்டோபர்

பிடிக்காதவற்றை துச்சமாக நினைத்து தூறஎறியும் குணம் கொண்ட உங்களுக்கு 5ல் குருபகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபகா ரியங்கள் கைகூடும். சிலருக்கு நினைத்தவரையே கைபிடிக்கும் பாக்கியமும் அமையும். பணவரவுகளு க்கும். பஞ்சம் ஏற்படாது. உற்றார் உறவினர்களின் வருகை மகிச்சியை அளிக்கும். 8ம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்ம ந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். நெருங்கிய வர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சிவபெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 03-10-2013 இருவு 10.37 மணிமுதல் 
06-10-2013 அதிகாலை 05.22 மணிவரை

நவம்பர்

எளிதில் பிறர் நம்பிக்கைக்கு பாத்திரமாக கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு, 5ம் வீட்டில் குரு சஞ்சாரம் செய்வதால் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உறவினர்களின் ஆதர வுகள் மகிழ்ச்சியளிக்கும். மாதபிற்பாதியில் சூரியன் 10ம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் உத்தியோ கஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் சிறப்பான முன்னேற்றத்தினை அடைய முடியும்.
சந்திராஷ்டமம் 31-10-2013 காலை 06.12 மணிமுதல் 
     02-11-2013 பகல் 01.06 மணிவரை 
     27-11-2013 மதியம் 01.44 மணி முதல் 
     29-11-2013 இரவு 08.56 மணிவரை

டிசம்பர்

மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தும் வைராக்கிய சாலியான உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 5ல் சஞ்சரிக்கம் குரு வக்ரகதியிலிருந்தாலும் 10ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஜீவனரீதியாக சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்க லில் சிந்தித்து செயல்படுவது நல்லது. 8ம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலங்கள் உண்டாகும்.
சந்திராஷ்டமம் 24-12-2013 இரவ 09.18 மணிமுதல் 
     27-12-2013 காலை 04.51 மணிவரை

அவிட்டம் 3, 4ம் பாதங்கள்

ஒழுக்கம் நிறைந்த பண்பாளராக விளங்கும் அவிட்ட அன்பர்களே! உங்களின் உடல் நிலை சிறப்பாக இருக்கம். ஆண்டின் தொடக்கத்தில் 4ல் சஞ்சரிக்கும் குருபகவான் ஜூன் முதல் 5ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணவரவுகளில் சிறப்பா னநிலை உண்டாகும். திருமண சுப காரியங்களும் தடையின்றி கைகூடும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். தொழில் வியா பாரத்தில் எதிர்பார்க்கும் லாபங்களையும் பெறமுடியும். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும்.

சதயம்

திடமான உடலமைப்பும், ஆத்மபலமும் கொண்ட சதய அன்பர்களே! உங்கள் ராசியாதிபதி சனி 9ம் வீட்டில் ராகுசேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரரீதியாக அனுகூலங்கள் உண்டா கும். பயணங்களால் எதிர்பார்த்த சாதகமானப் பலன்களை அடையமுடியும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் ஆண்டின் பிற்பாதியில் அவையாவும் சரியாகிவிடும். பூர்வீக சொத்துக்களாலும் லாபம் கிட்டும் குடும்பத்தில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடைபெறும்

பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்

ஆன்மீக பணிகளில் ஈடுபாடு அதிகம் கொண்ட பூரட்டாதி அன்பர்களே! நினைத்த காரிய ங்களை நிறைவேற்றி விடுவீர்கள். பணவரவு களிலும் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரியங்களும் நடைபெறும். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளை ஆண்டின் பிற்பாதியில் பெறமுடியும். உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் வேலைபளுவும் குறையும். தொழில் வியாபாரம் மேம்படும்.
அதிர்ஸ்டம் அளிப்பவை
எண் - 5,6,8,14,15,17 நிறம் - வெள்ளை, நீலம்  
கிழமை - வெள்ளி, சனி கல் - நீலக்கல்
திசை - மேற்கு தெய்வம்  - ஐயப்பன் 

பரிகாரம்

28-05-2013 வரை குருபகவான் 4ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் குருவுக்குரிய பரிகார ங்களை செய்வது நல்லது. வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிறவஸ்திரம் சாற்றி, நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது.


please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.



Tuesday, December 25, 2012

2013 RASI PALANGAL, மகரராசி



2013 ஆண்டு பலன்கள்,  மகர ராசி

நண்பர், விரோதி என்ற பாகுபாடுகளிற்றி அனைவ ரிடத்திலும் சமமாக பழகும் மகரராசி அன்பர்களே! உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு பொன்னவனான குருபகவான் முற்பாதிவரை ஜென்ம ராசிக்கு 5ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். புத்திர பாக்கியமும் அமையும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். சனிபகவான் 10ம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோகம் செய்பவர்களுக்கு சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் கெடுக்க மாட்டார். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகளும் கிடைக்கும். வரும் 28-05-2013 முதல் குருபகவான் 6ம்வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் பணவிஷ யங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். வம்பு வழக்குகளும், கடன்களும் ஏற்படும்.

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஏதாவது சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட் டாலும் உடனடியாக சரியாகிவிடும். குடும்ப த்திலுள்ளவர்களால் சற்று மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிட்டாலும் பெரிய கெடுதிகளில்லை. மறைமுக எதிர்ப்புகளால் மனநிம்மதி குறையகூடிய சூழ்நிலை ஏற்படும்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்பத்தில் சுபீட்சமான நிலையே இருக்கம். பொருளாதார நிலையும் மேன்மையாக அமையும். திருமணசுபகாரியங்கள் ஆண்டின் முற்பாதியில் நடைபெறும். புத்திர பாக்கியமும். உண்டாகும். பொன்பொருள் சேரும். அசையும் அசையா சொத்து க்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து க்களால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்களும் ஒற்றுமை யுடனேயே செயல் படுவார்கள்.

கொடுக்கல் வாங்கல்

ஆண்டின் முற்பாதியில் குருபகவான் 5ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கம். கொடுக்கல் வாங்கலிலும் மேன்மைகள் உண்டாகும். பலபெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும் உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகவே இருக்கம். ஆண்டின் பிற்பாதியில் எந்தவிஷயத்திலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தா திருப்பது நல்லது.

 தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு மந்த நிலை ஏற்பட்டாலும் போட்ட முதலீட்டை எடுத்துவிடக்கூடிய அளவிற்கு லாபங்கள் அமையும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்ககூடிய காலம் என்பதாலும் எச்சரிக்கையுடன் செயலாற்றுவது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயண ங்களால் அலைச்சலை சந்தித்தாலும் அதன் மூலம் அனுகூலமானப் பலன்களும் கிட்டும்.

 உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒற்றுமையற்ற செயல்பா ட்டினால் சில நேரங்களில் வீண் பிரச்சணைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்துவிடக் கூடிய ஆற்றலும் உண்டாகும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய உயர்வுகளை சில நேரங்களில் மறைமுக எதிர்ப்புகளால் பிறர்தட்டிச் செல்வார்கள்.

 அரசியல்வாதிகளுக்கு

பெயர் புகழுக்கு களங்கம் வராத படி செயலா ற்றுவது நல்லது. உடனிருப்பவர்களே மறைமுக எதிரிகளாக மாறுவதால் எதிலும் ஈடுபட முடியாத இக்கட்டான சூழ்நிலை உண்டாகும். மக்க ளின் ஆதரவைப்பெற அதிகம் பாடுபடவேண்டி யிருக்கம். மேடைப்பேச்சுகளில் வார்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பத்திரிகை நண்பர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் புழுபூச்சிகளின் தொல்லைகளால் சற்று பாதிப்பு உண்டாகும். உடனிருக்கும் பங்காளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் வீண்வம்பு வழக்குகள் ஏற்படுவதை தவிர்க்கலாம் அரசு வழியில் எதிர்பார்க்கும் கடனுதவிகள் தடையின்றி கிடைக்கும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் உண்டாகும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி அமையும். குடும்ப விஷயங்களை தேவையின்றி பிறரிடத்தில் பகிர்ந்துகொள்வதை தவிர்க்கவும். திருமண சுபகாரியங்கள் ஆண்டின் தொடக்க த்திலேயே நடைபெறும்.

படிப்பு

கல்வியில் நல்ல கவனம் செலுத்தி எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்றுவிடுவீர்கள் பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவை மகிழ்ச்சிய ளிக்கம். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையும் பொழுது போக்கும் வாழ்க்கை பாதையை மாற் றிவிடும் என்பதால் மனதை அலைபாயவிடாதிருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தைக் குறைக்கவும்.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவறில் ஆண்டின் தொடக்கத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.

ஜனவரி

நொந்து வந்தவர்களுக்கு ஆறுதல் கூறி அரவனைக்கும் உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாயும் 12ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். பேச்சில் நிதானாத்தை கடைபிடிப்பது முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத வீண்விரயங்கள் ஏற்படும் தேவையற்ற பயண ங்களை தவிர்ப்பதால் வீண் விரயங்களை குறைக்க லாம். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம 01-01-2013 பகல் 10..56 மணிமுதல்  
03-01-2013 மாலை 05.35 மணிவரை   
28-01-2013 மாலை 06.33 மணி முதல் 
31-01-2013 அதிகாலை 01.27 மணிவரை

பெப்ரவரி

நண்பர்களையும் விரோதிகளையும் சமமாக நடத்தும் உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியனும் 2ல் செவ்வாயும் சஞ்சரிப்பது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பினையும் குடும்பத்தில் ஒற்றுமை குறைவையும் உண்டாக்கும். என்றாலும் குருபகவான் 5ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. திருமணவயதை அடைந்த வர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும் புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பொருளாதார நிலை உயரும். பொன் பொருள் சேரும். முருகப் பெருமா னை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 25-02-2013 அதிகாலை 02.02 மணிமுதல் 27-02-2013 காலை 09.10 மணிவரை

மார்ச்

எத்தகைய இடர் வந்தாலும் எப்பொழுதும் மகிழ்ச்சியுடனேயே வாழும் உங்களுக்கு 3ல் செவ்வாயும், 5ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் பொரு ளாதார நிலை சிறப்பாக இருக்கம். ப+ர்வீக செர்துக்க ளால் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் திருப்தியளிப்பதாக இருக்கும். கொடுக்கல், வாங்க லிலும் லாபம் அமையும். அசையும் அசையா சொத்து க்களையும் வாங்குவீர்கள். தொழில் வியாபா ரத்தில் லாபங்கள் சிறப்பாக அமையும். புதிய முயற்சிகள் வெற்றி கொடுக்கும். சிவனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 24-03-2013 காலை 09.21 மணிமுதல் 
26-03-2013 மாலை 04.44 மணிவரை

ஏப்ரல்

பிரதிபலனை பாராது உழைத்திடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 5ல் குரு சஞ்சரிப்பதும் மாத முற்பாதிவரை 3ல் சூரியன் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பே ஆகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். ப+ர்வீக சொத்துக்களால் லாபமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலும் மேண்மை ஏற்படும். தொழில் வியாபாரத்திலும் லாபங்கள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கும் விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 20-04-2013 மாலை 04.41 மணிமுதல் 
22-04-2013 இரவு 12.22 மணிவரை

மே

வெட்டி பேச்சில் நாட்டமில்லாமல் தன் காரியத்தில் கண்ணாக செயல்படும் உங்களுக்கு 4ம் வீட்டில் சூரியனும் செவ்வாயும் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும். சுகவாழ்வு பாதிப்படையும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். குரு 5ல் இருப்பதால் எதையும்.சமாளித்து விடக்கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும் முருகனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 18-05-2013 அதிகாலை 12.11 மணிமுதல் 
20-05-2013 காலை 08.07 மணிவரை

ஜூன்

கடமையே பிரதானமாக கொண்ட உங்களுக்கு இம்மாதம் முதல் குருபகவான் 6ம் வீட்டில் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் கவனம் தேவை. குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் உண்டாகும். மாதபிற்பாதியில் சூரியன் 6ம் வீட்டில் சஞ்சாரம் செய்வ தால் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். சற்றே மந்தநிலை நிலவினாலும் பொருள் தேக்க மின்றி சமாளிக்க முடியும் சேமிப்புகள் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 14-06-2013 காலை 07.48 மணிமுதல் 
16-06-2013 மாலை 03.56 மணிவரை

ஜூலை

ஏற்றக் கொண்ட லட்சியங்களை நிறைவேற்றியே தீருவது என்ற கொள்கை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6ல் சூரியனும் செவ்வாயும் சஞ்சரிப்பது ஓரளவுக்கு அனுகூலத்தை உண்டாக்கம். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.
குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். குருவை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 11-07-2013 மாலை 03.22 மணிமுதல் 
13-07-2013 இரவு 11.50 மணிவரை

ஆகஸ்ட்

எதிலும் இருவித ஆதாயங்களை பெறவிரும்பும் உங்களுக்கு 6ல் செவ்வாயும் 10ல் ராகுவும் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பே ஆகும். எந்த காரியத்திலும் துணிந்து செயல்பட முடியும். என்றாலும் அதற்கான பலன் பெரிய அளவில் இரு க்காது கணவன் மனைவியிடையே கருத்து வேறு பாடுகள் ஏற்படகூடிய காலம் என்பதால் விட்டுக் கொடு த்து நடப்பதும், வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்பு கள் உண்டாகும். சிவபெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 07-08-2013 இரவு 10.53 மணிமுதல் 
10-08-2013 காலை 07.36 மணிவரை

செப்டம்பர்

எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் தன் கொள்கையிலிருந்து மாறாத உங்களுக்கு, 7ல் செவ் வாயும், 8ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். தாங்கள் நல்லதாக நினைத்து பேசும் வார்த் தைகளும் உறவினர்களுக்குள் கருத்து வேறு பாட்டினை ஏற்படுத்தி விடும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு கூட்டா ளிகளால் பிரச்சனைகள் உண்டாகும்.
சந்திராஷ்டமம் 04-09-2013 காலை 06.16 மணிமுதல் 
06-09-2013 மியம் 03.55 மணிவரை

அக்டோபர்

மிகவும் சிக்கனமாக செலவுகள் செய்யும் உங்களுக்கு சூரியன் 9லும் சுக்ரன் 11லும் சஞ்சாரம் செய்வதால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். பணவர வுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடை க்கப்பெறும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் தங்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். வேளைபளுவும் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 01-10-2013 மதியம் 01.28 மணிமுதல் 
03-10-2013 இரவு 10.37 மணிவரை 
28-10-2013 இரவு 08.44 மணிமுதல்
31-10-2013 காலை 06.12 மணிவரை

நவம்பர்

குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்ட உங்களுக்கு 6ல் குருவும் 8ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் மறைமுக எதிர்ப்புகள் அதிக ரிக்கும். உங்கள் பலம் குறையும் தேவையற்ற வீண் வம்பு வழக்குகளும் உண்டாகும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன்வாங்க வேண்டிவரும். மற்றவ ர்களுக்கு கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாது. மாத பிற்பகுதியில் சூரியன் 11ல் சஞ்சரிக்க விருப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதி நிலவும். குருவை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 25-11-2013 காலை 04.03 மணிமுதல் 
27-11-2013 மதியம் 01.44 மணிவரை

டிசம்பர்

சிரிக்க சிரிக்க பேசும் சுபாவம் கொண்ட உங்களுக்கு 6ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியிலிருப்பதாலும் லாப ஸ்தானத்தில் சூரியன் சங்கா ரம் செய்வதாலும் கடந்த கால பிரச்சனைகள் சற்றே குறையும். பணவரவுகளில் சரளமான நிலை யிருப்பதால் குடும்பத்திலுள்ள பணத்தட்டுபாடுகள் குறையும். கடன்களும் நிவர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் தடபுடலாக கைகூடும். பொன்பொருள் சேரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிhபாராத உயர்வினை பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். விஷ்ணுவை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 22-12-2013 பகல் 11.26 மணிமுதல் 
24-12-2013 இரவு 09.18 மணிவரை

உத்தராடம் 2,3,4ம் பாதங்கள்

காரியவாதியாகவும் புத்திசாலி யாகவும் விளங்கும் உத்தராட அன்பர்களே! இந்த ஆண்டின் முற்பாதிவரை குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிக ளிலும் வெற்றி கிட்டும். சனி பகவான் 10ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபா ரரீதியாக சில நெருக்கடிகள் உண்டாகும். என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செய ல்படவும்.

திருவோணம்

பணம், செல்வாக்குயாவும் உயர க்கூடிய அளவிற்கு பாடுபடும் திருவோண நேயர்களே! உங்கள் ராசியாதிபதி சனிபகவான் 10ம் வீட்டில் சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் சனிபகவான் உங்கள் ராசியாதிபதி என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்றுவிடுவீர்கள். திரும ண வயதை அடைந்தவர்களுக்கு ஆண்டின் தொடக்க த்திலேயே மணவாழ்க்கை அமையும். புத்திரபா க்கியமும் உண்டாகும். ப+ர்வீக சொத்துக்களாலும் லாபங்களை பெறுவீர்கள். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகளையும் சந்திப்பீர்கள்.

அதிர்ஸ்டம் அளிப்பவை
எண் - 8,5,6,17,14,15 நிறம் - நீலம், பச்சை  
கிழமை - சனி, புதன் கல் - நீலக்கல
திசை - மேற்கு தெய்வம்  - ஐயப்பன்

 பரிகாரம்

ஜென்ம ராசிக்கு 10ம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதால் சனிக்கிழமை தோறும் சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும். 28-05-2013 முதல் குருபகவான் 6ம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் குருப்ரீதி தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி நெய் தீபமேற்றுவது நல்லது.

please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.

NEW YEAR RASI PALANGAL-10



2013 ஆண்டு பலன்கள், தனுசு ராசி


                           மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் கள்ளம் கபடமின்றி பழகும் தனுசு ராசி அன்பர்களே! உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2013ம் ஆண்டில் உங்கள் ஜென்ம ராசிக்கு லாபஸ்தனமான 11ல் சனியும் ராகுவும் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். தொழில் வியாபார ரீதியாக நல்ல பல முன்னேற்றங்களை பெறமுடியும். புதிய முயற்சிகளிலும் வெற்றிகிட்டும். உத்தி யோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் 6ம் வீட்டில் சஞ்சரிப்பதால் சிறுசிறு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தாலும் வரும் 28-05-2013 முதல் குருபகவான் 7ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய விருப்பதால் தாராள தனவரவுகளும் உண்டாகும். தடைபட்ட சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். அசையும் அசையா சொத்துக்களும் சேரும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகளை ஒரு தீர்வுக்கு வரும்.

தேக ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கம். இதுவரை இருந்துவந்த மருத்துவ செலவுகளும் குறையும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செய்பட கூடிய ஆற்றலை கொடுக்கும். வாழ்வில் எல்லாசுகங்களையும் தடையின்றி பெறமுடியும் மனைவி பிள்ளைகளும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்பத்தில் பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எடுக்கம் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கொடுக்கம். திருமண வயதை அடைந்த வர்களுக்கு ஆண்டின் பிற்பாதியில் சுப காரியங்கள் கைகூடுவதுடன் சிலருக்கு புத்திர பாக்கியயோகமும் உண்டாகும். வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். பகைமை பாராட்டிய உறவினர்களும் நட்புக்கரம் கூட்டுவார்கள் கடன்கள்யாவும் படிப்படியாக குறையும்.

 கொடுக்கல் வாங்கல்

கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையே இருக்கம். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும் கொடுத்த கடன்களும் வசூலாகும். பெரிய மனிதர்களின் நட்புகளால் வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அசையும் அசையா சொத்து வகையிலிருந்த பிரச்சனைகளும், வம்பு வழக்குகளும் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

 தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இது ஒரு பொற்காலமாகவே இருக்கும். புதிய புதிய வாய்ப்புகள் தேடி வந்து குவியும். கூட்டாளிகளும்ஈ தொழிலாளர்களும் மாறிமாறி ஒத்துழைப்பை கொடுப்பார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய நிறுவனங்களையும் நிறுவமுடியும். அரசு வழியிலும் அனுகூலங்களை தேடிவரும்.

 உத்தியோகஸ்தர்களுக்கு

இதுவரை தடைபட்டுவந்த எல்லா காரிய ங்களும் சிறப்பாக நிறைவேறும். ஊதிய உயர்வு களும், பதவி உயர்வும் உங்களை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும். இதுவரை பகைமை பாராட்டியவர்கள் இப்போது உங்களுக்கு பணிந்து நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.

 அரசியல்வாதிகளுக்கு

உங்களின் புகழும் கௌரமும் உயரக்கூடிய காலமாகும். மாண்புமிகு பதவிகள் தேடிவரும் உங்களின் வார்த்தைகள் அனைத்தையும் கட்டளை களாக நினைத்து நிறைவேற்றுவார்கள் கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களையும் மேற்கொ ள்வீர்கள். கஷ்டப்படும் மக்களுக்கு ஆதர வாக இருந்து அவர்களின் துயரை துடைக்கக் கூடிய வாய்ப்புகளும் உண்டாகும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். என்றால் அது மிகையாகாது மற்றவர்களை விட உற்பத்தி உங்களுக்கே அதிகமாக இருக்கும். புதிய நவீன கருவிகளை வாங்குவதற்கு அரசு வழியில் அனுகூலங்களைப் பெறுவீர்கள். கால் நடைகளாலும் லாபங்கள் பெருகும். கடன்கள் யாவும் நிவர்த்தியா கும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நினைத் தவரையே கடைபிடிக்கும் யோகம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் ஆடை ஆபரணங்களை சேர்த்து கொள்வீர்கள். உற்றார் உறவினர்களிடையே இருந்த பகைமை விலகும்.

படிப்பு

கல்வியில் பல சாதனைகளை  செய்து பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள் விளையாட்டு துறைகளிலும் வெற்றி உங்களுக்கே. பெற்றோர் ஆசிரியர்களின் ஏகோபித்த பாராட்டுதல்கள் மனநிறை வை உண்டாக்கும். நல்ல நண்பர்களின் நட்புகள் மனதில் இனிய உணர்வுகளை உண்டாக்கம். சுற்று லா தலங்களுக்கும் சென்று வருவீர்கள்

 ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவறில் எதிர்பா ராத வெற்றிகள் குவியும் லாபங்கள் பெருகும்.

ஜனவரி

எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும ;ஆற்றல் உள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியனும் 2ல் செவ்வாயும் சஞ்சரிப்பதும் குடும்பத்தில் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் லாப ஸ்தானமான 11ம் வீட்டில் சனியும் ராகும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் உண்டா கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.  சிவனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 30-12-2013 அதிகாலை 01.49 மணிமுதல் 
01-01-2013 பகல் 10.56 மணிவரை 
26-01-2013 காலை மணிமுதல் 
28-01-2013 மாலை 06.33 மணிவரை

பெப்ரவரி

ஒழுக்கமும் நெறி தவறாத பண்பும் கொண்ட உங்களுக்கு 3ல் செவ்வாயும் மாதபிற்பகுதியில் சூரியனும் சஞ்சாரம் செய்வதும், லாப ஸ்தானத்தில் சனிராகு சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பாகும். நினைத்ததை நிறைவேற்ற முடியும். பொருளாதார நிலை ஏற்ற தாழ்வுடன் இருக்கம் என்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தி யோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளையும், எதிர்பார்க்கும் இடமாற்றங்களையும் பெறமுடியும். வேலைபளுவும் குறையும். விநாய கரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 22-02-2013 மாலை 04.25 மணிமுதல் 
25-02-2013 அதிகாலை 02.02 மணிவரை

மார்ச்

தான் விரும்பியதை அடையாமல் விடாத குணம் கொண்ட உங்களுக்கு மாத முற்பகுதியில் சூரியன் 3ல் சஞ்சரிப்பதும், ராகு 11ல் சஞ்சாரம் செய்வதும் சுமாரான நற்பலனை உண்டாக்கும் அமைப்பாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனு சரித்து செல்வது நல்லது. கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் சற்று தாமதப்படும் பணியில் சற்று கவனமுடன் நடந்து கொள்ளவும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.
சந்திராஷ்டமம் 21-03-2013 இரவு 11.31 மணி முதல் 
24-03-2013 காலை 09.21 மணிவரை

ஏப்ரல்

முன்கோபம் இருந்தாலும் இளகிய மனம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4ல் சூரியன் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி குறையும். புத்திரர்களால் மனசஞ்சலங்களும் உண்டாகும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதுடன் குடும்பத்தேவைகளை பூர்;த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 18-04-2013 காலை 06.41 மணிமுதல் 
20-04-2013 மாலை 04.41 மணிவரை

மே

தனக்கு கீழ் படிந்தவர்களை சரிசமமாக நடத்தும் உங்களுக்கு 11ல் ராகுவும், மாத பிற்பகுதியில் சூரியன் மேலும் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்க மானப் பலன்களை பெறுவீர்கள். எந்தவொரு காரிய த்திலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே நினை த்ததை சாதிக்கமுடியும். பணவரவுகளில் நெருக்க டிகள் நிலவும் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் தேக்கமடையாது. புதிய வாய்ப்பு களும் தேடிவரும் முருகனை வழி படவும்.
சந்திராஷ்டமம் 15-05-2013 மதியம் 01.50 மணிமுதல்
18-05-2013 அதிகாலை 00.11 மணிவரை

ஜூன்

கள்ளம் கபடமற்ற அனைவரிடமும் சகஜமாக பழகும் உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன் செவ்வாயும் 7ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் யாவும் கைகூடும். புத்திர வழியிலிருந்த கவலைகள் மறையும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு கூட்டா ளிகளால் அனுகூலம் உண்டாகும். அடிக்கடி பயண ங்களையும் மேற்கொள்வீர்கள் சனிக்கு பரிகாரம் செய்யவும்.
சந்திராஷ்டமம 11-06-2013 இரவு 09.17 மணிமுதல் 
14-06-2013 காலை 07.48 மணிவரை

ஜூலை

எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசும் உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 7ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பது குடும்ப த்தில் நிம்மதி குறைவையும், உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்றாலும் உடன் குரு இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள் பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களும் நிறைவேறும். உத்தி யோகஸ்தர்களுக்கு உடன்பணிபுரிபவர்களின் ஆதர வுகள் மகிழ்ச்சியளிக்கும். முருகனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 09-07-2013 காலை 04.46 மணி முதல்
11-07-2013 மாலை 03.22 மணிவரை

ஆகஸ்ட்

உரத்த குரலில் கடுமையாக பேசும் குணம் கொண்ட உங்களுக்கு 7ல் குருவும் லாப ஸ்தானத்தில் சனிராகுவும் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரரீதியாக மேன்மைகளை உண்டாக்கம். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய முயற்சிகளையும் மேற்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்ற ங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள் சொந்த பூமிமனை வாங்கும் யோகமும் அமையும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். பொன் பொருள் சேரும் சிவனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 05-08-2013 மதியம் 1203 மணி முதல் 
07-08-2013 இரவு 10.53 மணிவரை

செப்டம்பர்

தாம் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுக்கும் பண்பு கொண்ட உங்களுக்கு 7ல் குருவும், 9ல் சூரியபகவானும் 11ல் சனிராகுவும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகிட்டும். பொன்பொருள் ஆடை ஆபரணம் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கலிலும் லாபம் உண்டாகும். சொந்த முயற்சியால் பலசாதனைகளை செய்வீர்கள் தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 01-09-2013 மாலை 07.16 மணிமுதல் 
04-09-2013 காலை 06.16 மணிவரை 
29-09-2013 அதிகாலை 02.21 மணிமுதல் 
01-10-2013 மதியம் 01.28 மணிவரை

அக்டோபர்

தீய நெறிகளில் ஈடுபடுபவர்களை தண்டி க்கும் குணம் கொண்ட உங்களுக்கு 7ல் குருவும் 10ல் சூரியனும் 11ல் சனிராகுவும் சஞ்சாரம் செய்வ தால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி கள் குறையும். புதிய கிளைகளை நிறுவும் நோக்க மும் நிறைவேறும். பொருளாதார நிலையும் உயர்வ டைவதால் சொந்த வீடு மனை வண்டி வாகன ங்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். கொடுத்த கடன்க ளும் திருப்திகரமாக வசூலாகும். வம்பு வழக்குகளில் நல்ல தீர்வு கிடைக்கம். விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 26-10-2013 காலை 09.27 மணிமுதல் 
28-10-2013 இரவு 08.44 மணிவரை

நவம்பர்

முகஸ்துதிக்கு அடிபணியாமல் உயர்ந்த பண்புகளை கொண்ட உங்களுக்கு 7ல் குருவும் 11ல் சனி ராகுவும் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். நினைக்கும் காரியத்தை நிறைவேற்றமுடியும். எடுக்கம் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளாலும், தொழிலாளர்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கம். வேலைபளுவும் குறையும். கடன்கள் யாவும் தீரும் விநாயகரை தினமும் வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 22-11-2013 மாலை 04.42 மணி முதல் 
25-11-2013 காலை 04.03 மணிவரை

டிசம்பர்

உதாரண குணமும் தர்ம சிந்தனையும் கொண்ட உங்களுக்கு 10ல் செவ்வாயும் 11ல் சனிராகுவும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். குரு வக்கிரகதியிலிருப்பதால் பணவரவுகளில் மட்டும் சற்று கவனமுடன் செயல்படவும். தொழில் வியாபாரரீதியாக முன்னேற்றங்களைப் பெற முடியும். பொன் பொருள் சேரும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கம். கடன்களும் குறையும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 19-12-2013 இரவு 11.56 மணிமுதல் 
22-12-2013 பகல் 11.26 மணிவரை

மூலம்

 உணர்ச்சிவசப்பட கூடிய குணம் கொண்ட மூல ராசி நேயர்களே! உங்களுக்கு இந்த ஆண்டில் எல்லாவகையிலும் வெற்றி மேல் வெற்றிகள் குவியும். தாராளதன உறவுகளும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிலவும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமைவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்ட முதலீட்டினை விட பன்மடங்கு லாபங்களை பெருகி மகிழ்ச்சியினை ஏற்படுத்தம். குடும்பத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும்.

பூராடம்;

எப்பொழுதும் நல்லதையே செய்யக்கூடிய பூராட அன்பர்களே! உங்களுக்கு செல்வம் செல்வாக்கு யாவும் உயரக் கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கம். வீடுமனை வண்டி வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் யாவும் நிறை வேறும். புத்திரவழியில் மகிழ்ச்சியும் ப+ரிவீக சொத்து க்களால் அனுகூலமும் ஏற்படும் திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான வரன்கள் தேடிவரும். கொடுக்கல் வாங்கலிலும் சாதகமானப் பலனைப் பெறுவீர்கள் உத்தியோகத்திலிருப்பவா ;களுக்க ஊதிய உயர்வும் இடமாற்றமும் தடையின்றி கிடைக்கும். 

உத்திராடம் 1ம் பாதம்

மனிதர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரிந்த உத்திராட அன்பர்களே! குடும்பத்தின் பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கம். புதிய நவீன பொருட் சேர்க்கைகளும் அமையும். புதிய வீடுமனை வாங்கும் யோகமும், கட்டியவீட்டை புதுப்பிக்கும் வாய்ப்பு சிறப்பாக அமையும். வண்டி வாகனங்களாலும் லாபங்கள் கிட்டும் பூர்வீக வழியில் கிடைக்க வேண்டிய நற்பலன்கள் யாவும் கிடைக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். புத்திரபா க்கியத்தையும் பெறகூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9,10,11,12   கல் - புஷ்ப ராகம் 
நிறம் - மஞ்சள், பச்சை திசை - வடகிழக்கு
கிழமை - வியாழன, திங்கள்;   தெய்வம்- தட்சிணாமூர்த்தி

பரிகாரம்

28-05-2013 வரை குருபகவான் 6ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் குருபகவானுக்கு பரிகாரம் செய்வது, வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. 5ல் கேது சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவதும் உத்தமம்.

please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.