Tuesday, January 31, 2012

கணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள்

ஒருசில குடும்பங்களில் கணவன் மனைவியிடையே காரணமின்றி பிரச்சினைகள் உருவாகும். வாக்குவாதங்கள் அதிகரிக்கும். அனுசரித்துச் செல்ல முடியாத நிலையால் விவாகரத்து வரை போய் நிற்கும். நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா என்ற பாகுபாடு மண வாழ்வில் ஏற்படுமாயின், அந்த வாழ்க்கை நரகமாகத்தான் இருக்கும். உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ள முடியாத பிரச்சனை என்ற ஒன்று இல்லை. ஆனால், விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் இல்லாதவர்களுக்கு சின்ன பிரச்சினைகள் கூட மலையளவு பெரியதாக இருக்கும். இதனால் பாதிக்கப்படுவது கணவன் மனைவி மட்டுமின்றி அவர்களை சார்ந்திருக்கும் குடும்பமும்தான். இதனால் பிள்ளைகளுக்கும் நிம்மதி- குறைவு, தீயபழக்கங்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை போன்றவை ஏற்படுகிறது. பார்த்து பார்த்து செய்து வைக்கும் திருமணமானாலும்,அவர்களே தேர்ந்தெடுத்து அமைத்து கொள்ளக்கூடிய காதல் வாழ்க்கையானாலும் ஏனிந்த அவலநிலை என மனம் புண்படத்தான் செய்கிறது. ஜோதிட ரீதியாக ஏணிந்த பிரச்சினை ஏற்படுகிறது என ஆராய்ந்தோமானால் பல்வேறு உண்மைகள் புலப்படுகிறது.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 7ம் அதிபதியும், சுக்கிரனும் சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவகிரகங்களில் ஏதாவது இரண்டு கிரகங்களின் சேர்க்கை பெற்று அமைவது நல்லதல்ல. இப்படி பாவகிரக சேர்க்கை பெற்றிருந்தால் இந்த கிரகங்களின் தசா புக்திகள்  வரும் போது கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். நவகிரகங்களில் ஞான காரகன், மோட்ச காரகன் என வர்ணிக்கப்படுவர் கேது பகவான். கேது பகவானானவர் ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாட்டை அதிகரித்து இல்வாழ்க்கையில் ஈடுபாட்டை குறைக்கக் கூடிய ஆற்றல் கொண்டவர். ஒருவரின் ஜாதகத்தில்  கேது பகவானின் புக்தி நடைபெறும் காலங்களிலும், கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் போன்ற நட்சத்திரங்களில் அமையப் பெற்ற  கிரகங்களின் புக்தி நடைபெறும் காலங்களிலும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை, இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை ஏற்படும். அதிலும் குறிப்பாக 1,2,8 ல் கேது அமைந்திருந்தாலும், 7ம் அதிபதி கேதுவின் நட்சத்திரத்தில் அமையப் பெற்றிருந்தாலும் கேதுவின் புக்தி காலங்களில் அதிக பாதிப்புகள் உண்டாகிறது.

சர்ப கிரகங்களான ராகுவும், கேதுவும் பின்னோக்கி சஞ்சரிக்கக்கூடியவர்கள். கோட்சார ரீதியாக ராகு,  கேது ஒரு ராசியில் ஒன்றரை வருடங்கள் தங்குவார்கள். எப்படி ஜென்ம  லக்னத்திற்கு 1,7, 2,8 ல் சஞ்சரிக்கும் போது ராகு, கேது, அதன் தசாபுக்தி காலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவார்களோ, 1,7, 2,8 ல் ராகு&கேது ஒன்றரை வருடங்கள் சஞ்சரிக்கும் காலங்களில் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகளையும், வீண் பிரச்சினைகளையும் உண்டாக்குவார். இதில் யாருக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது என பார்த்தோமானால் அஸ்வினி, திருவாதிரை, மகம், சுவாதி, மூலம், சதயம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அதிகப்படியான பாதிப்புகள் நெருக்கடிகள் உண்டாகிறது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Monday, January 30, 2012

உங்கள் துணைவரின் பண்பும் தோற்றமும்

ஆண் பெண் இருவருமே தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் அடையவர்களாக இருப்பார்கள். அழகு என்பது சிலருக்கு இயற்கையிலேயே அமைந்து விடும். சிலர் அழகாக இல்லாவிட்டாலும் தன்னை அழகு படுத்திக் கொள்வார்கள். அக்காலங்களில் பெண்கள் மஞ்சள் பூசி குளித்துஅந்த மஞ்சளின் வாசம் மேனியில் தவழ, நெற்றியில் குங்குமம் இட்டு, தலையில் நன்றாக எண்ணெய் வைத்து தலைவாரி, கொண்டைபோட்டு அந்த கொண்டையில் நான்கு முழ பூவை மடித்துச் சொருகி வாயில் வெற்றிலை போட்டு மென்று, நாக்கு முழுக்க சிவப்ஙபேறி பேசும் அழகே அழகுதான். மஞ்சள் பூசுவது தோளுக்கு நல்லது. வியர்வை நாற்றம் தெரியாது. குங்குமம் நெற்றியில் வைத்துக் கொள்வதால் மன அழுத்தங்கள் விலகும். கூந்தலில் பூவைத்துக் கொள்வது மங்களகரமான அழகையும் கணவரை மயக்க செய்யும் நிலையையும் உண்டாக்கும். இயற்கை அழகு  இயற்கை அழகுதான். ஆனால் தற்போதுள்ள நிலைமையே தலைகீழ். முகத்திற்கு பவுடர் ஸ்டிக்கர் பொட்டு, தலையை விரித்துப் போட்டுக் கொண்டு செல்லும் ஸ்டைல், காலில் போட்டிருப்பது செருப்பா, மரப்பலகையா என புரியாத அளவிற்கு உயரம், உம் இதுவும் ஒரு அழகுதான்!.

ஆண்களையும், பெண்களையும் அழகுபடுத்த எத்தனை அழகு நிலையங்கள், அழகு ராணியா, அருக்கானியா என போட்டிகள். ஆனால் புற அழகு வெளித் தோற்றத்தில் பிறரை கவர்ந்திழுக்க மட்டுமே. அக அழகுதான் எல்லோர் மனதிலும்  உங்களை நிலை நிறுத்தி வைக்கும். சரி, ஜாதக ரீதியாக ஒருவருக்கு அமையக்கூடிய வாழ்க்கைத் துணையானது அழகு,அறிவு,திறமை வாய்ந்ததாக இருக்குமா என பார்ப்போம்.

ஒருவரின் ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடானது களத்திர ஸ்தானமாகும். களத்திர காரகன் சுக்கிரனாவார். பொதுவாக 7ல் உள்ள கிரகத்தையும், 7ம் அதிபதியையும், 7ம் அதிபதியுடன் சேர்க்கைப் பெற்ற கிரகத்தையும் கொண்டு அமையக்கூடிய வாழ்க்கை துணையானது எவ்வாறு இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணநிலை  இருக்கும் என்பதால், 7ம் அதிபதி எந்த ராசியில் உள்ளாரோ அதையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஜென்ம லக்னத்திற்கு 7ம் அதிபதி, 7ம் அதிபதியின் சேர்க்கை பெற்ற கிரகம், 7 ல் உள்ள கிரகம் இவற்றில் எந்த கிரகம் பலமாக இருக்கிறதோ, அந்தக் கிரகத்தின் தன்மை கொண்டவராக வாழ்க்கைத் துணை இருப்பார்.

நவகிரகங்களில் நாயகனாக விளங்கும் சூரியன் ஒருவரது ஜாதகத்தில் பலம்பெற்று அமையுமேயானால் வரக்கூடிய வாழ்க்கைத் துணை சிவப்பு நிறமாக இருப்பார். சற்றுமுன் கோபமும் இருக்கும். பெரிய அந்தஸ்துள்ள  குடும்பத்தை சார்ந்தவராகவும், இளம்வயதாக இருந்தாலும் தோற்றத்தில் சற்று முதுமையானவராகவும் இருப்பார்.

வளர்பிறை சந்திரன் 7ம் வீட்டில் பலம் பெற்றிருந்தால் வாழ்க்கைத் துணை அழகானவராகவும், மென்மையான குணம் படைத்தவராகவும், வாழ்க்கை துணை மீது அதிகபாசம் உடையவராகவும், வசதியான குடும்பத்தைச் சார்ந்தவராகவும் இருப்பார். அதுவே தேய்பிறை சந்திரனாக இருந்தால் அழகற்றவராகவும், சோம்பல் உடையவராகவும், ஜல தொடர்புடைய பாதிப்புகள் உடையவராகவும், குழப்பவாதியாகவும் இருப்பார்.

செவ்வாய் 7ம் வீட்டில் பலம் பெற்றிருந்தால் வரக்கூடிய வாழ்க்கை துணையானவர் சிவந்தமேனியுடையவராகவும், வசீகரமான உடலமைப்பு கொண்டவராகவும், மற்றவர்களை அனுசரித்துச் செல்லக்கூடியவராகவும், வசதியான வாழ்க்கை வாழ்பவராகவும் இருப்பார். அதுவே செவ்வாய் நீசம் பெற்றிருந்தால் கோபம் அதிகம் உடையவராகவும், மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்ல முடியாமல் சண்டையிடுபவராகவும் கர்பபை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், மாதவிடாய் கோளாறுகள் உள்ளவராகவும் இருப்பாள்.

7ம் புதன் சுபர்பார்வை சேர்க்கைப் பெற்று பலம் பெற்றிருந்தால் வரக்கூடிய வாழ்க்கைத்  நன்கு படித்தவராகவும் புக்திகூர்மை உள்ளவராகவும், அறிவாற்றல் உடையவராகவும், எதையும் எளிதில் புரிந்து கொண்டு மற்றவரை வழிநடத்திச் செல்பவராகவும் இருப்பார். அதுவே புதன் பாவிகள் சேர்க்கை பார்வை பெற்றால் சுமாரான அழகுடையவராகவும், குழந்தை போன்ற குணமும், மனக்குழப்பவாதியாகவும், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உடையவராகவும் இருப்பார்.

7ல் குரு தனித்து அமையாமல் சுபகிரக சேர்க்கையுடன் இருந்து பலம் பெற்றிருந்தால் வரக்கூடிய வாழ்க்கை துணையானவர் தெய்வீக குணமும், நல்ல அழகும்., ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும், வசதியான இடத்தைச் சார்ந்தவராகவும், சமுதாயத்தில் கௌரவமான நிலையை உடையவராகவும் இருப்பார். அதுவே குரு பலமிழந்திருந்தால் குடும்ப வாழ்வில் ஈடுபாடற்றவராகவும், தேவையற்ற பழக்க வழக்கங்கள் உள்ளவராகவும் இருப்பார்.

7ம் வீட்டில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் வரக்கூடிய வாழ்க்கைத் துணையானவர் நல்ல அழகும், வசதி வாய்ப்புகள் நிறைந்த குடும்பத்தைச் சார்ந்தவராகவும் பிறரை கவர்ந்திழுக்கும் உடலமைப்பும் கொண்டவராகவும், நல்ல பழக்க வழக்கங்கள் உடையவராகவும் இருப்பார். அதுவே சுக்கிரன், சனி, ராகு, தேய்பிறை சந்திரன் போன்ற கிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தால் உடல் இச்சைகள் அதிகம் ஏற்பட்டு தடம்மாறி செல்லக்கூடியவராக இருப்பார்.

ஜென்ம லக்னத்திற்கு 7ல் சனி பலம் பெற்றால் வரக்கூடிய வாழ்க்கைத் துணைக்கு வயது முதிர்ந்த தோற்றம் அல்லது அதிக வயது இருக்கும். கறுப்பாகவும், அழகற்றவராகவும் இருப்பார். ஆனால், அறிவாற்றல் அதிகம் இருக்கும். அதுவே சனி 7ல் பாவிகளின் சேர்க்கைப் பெற்றிருந்தால் உடல் அங்க பாதிப்புகள் மற்றும் ஊனம் உடையவராகவும் மிகவும் சோம்பேறியாகவும், பார்ப்பவருக்கு அறுவெறுக்கத்தக்க தோற்றம் கொண்டவராகவும் இருப்பார்.

7ம் வீடானது ராகு&கேது போன்ற சர்பகிரகங்களால் பாதிக்கப்பட்டிருந்தால் வரக்கூடிய வாழ்க்கைத் துணை கவர்ச்சியற்றவராகவும் வயது முதிர்ந்தும் காணப்படுவார். திருமணம் நடைபெறவும் தாமதநிலை ஏற்படும். அதுவே சுபகிரக வீட்டில்அமைந்து சுபகிரகங்களின் சேர்க்கையோடு பார்வை பெற்றால் வரக்கூடிய வாழ்க்கைத் துணையால் மேன்மைகளை அமையும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Sunday, January 29, 2012

கிரக அமைப்பும் வாழ்க்கை துணைக்கு உண்டாகக்கூடிய நோய்களும்

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைவது எவ்வளவு முக்கியமோ, அது போல கணவன் மனைவி இருவரும் நோய் நொடி இல்லாமல்  வாழ்வதும் முக்கியம். கஷ்டப்பட்டு சம் பாதித்த அனைத்து பணத்தையும் டாக்டருக்கு மொய் எழுதிக் கொண்டிருந்தால், அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி என்பதே இருக்காது. ஒரு சிலருக்கு தினமும் ஏதாவது ஒரு பாதிப்பு உண்டாகிக் கொண்டேயிருக்கும். காலையில் தலைவலி அடுத்த நாள் உடல் வலி, உட்கார்ந்தார் எழுந்திருக்க முடியாத நிலை என ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டு, இதனால் மன உளைச்சல், குடும்பத்தை ஒழுங்காக நிர்வகிக்க முடியாத சூழ்நிலை, அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படுவதால் பொருளாதாரத்தில் பற்றாக்குறை உண்டாகும். ஒரு சிலருக்கோ நிரந்தரமாக உடல் பாதிப்புகள், சர்க்கரை வியாதி, ரத்த அபத்தம், இருதய பாதிப்பு என உடலோடு வியாதி ஒட்டிக்கொண்டேயிருக்கும.  மருத்துவருக்கு செலவு செய்து செய்து, பேசாமல் நாமே மருத்துவம் படித்திருக்கலாமே எனத் தோன்றும். இப்படி நோயுடனேயே போராட வேண்டிய காரணம் என்ன வென்று ஜோதிட ரீதியாக ஆராய்ந்தோனால், ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் வீடும், களத்திர காரகன் சுக்கிரனும் பலஹீனமடைந்தால் மனைவிக்கு ஆரோக்கிய பாதிப்பு (பெண் என்றால் கணவருக்கும்) உண்டாகும்.

7ம் அதிபதி நீசம் பெற்றிருந்தாலும், சூரியனுக்கு மிக அருகில் அமையப் பெற்று அஸ்தங்கம் பெற்றாலும் சனி, ராகு போன்ற பாவ கிரகங்களின் சேர்க்கைப் பெற்றிருப்பதும் பலஹீனமான அமைப்பாகும். இப்படிப்பட்ட கிரக அமைப்புகள் ஏற்பட்டு அதன் தசா புக்திகள் நடைபெற்றால் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் மனைவிக்கு (கணவருக்கு) ஏற்படும்.

நவகிரகங்களில் ஆணுக்கு களத்திர காரகன் சுக்கிரனும், பெண்ணுக்கு செவ்வாயும் ஆகும். சுக்கிரன் செவ்வாய் பலவீனமடைவதும் பாவிகள் சேர்க்கை பார்வை பெற்றிருப்பதும் குடும்பத்தில் மருத்துவ செலவுகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் வீட்டிற்கு 2ம் பாவமான 8ம் வீட்டிலும், 12ம் பாவமான 6ம் வீட்டிலும் பாவகிரகங்களான சனி  ராகு போன்ற கிரகங்கள் அமையப்பெற்று அதாவது ஜென்ம லக்னத்திற்கு 6,8 ல் பாவகிரகங்கள் அமையப்பெற்று 7ம் பாவமானது பாவிகளால் சூழப்பட்டால் 7ம் வீடானது பலவீனப்பட்டு குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

அதுபோல 7ம் வீட்டிற்கு 8ம் வீடான ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீட்டில் அதிக பாவ கிரகங்கள் அமைவது, 2ம் வீட்டதிபதி பலவீனப்படுவது போன்றவை சாதகமற்ற அமைப்பாகும். இது போன்ற கிரக அமைப்புகள் ஏற்பட்டு அதன் தசாபுக்திகள் நடைபெற்றால் மனைவிக்கு (கணவருக்கு) ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும்.

ஜென்ம லக்னத்திற்கு 2,6,7,8 போன்ற வீடுகளில் பாவ கிரகங்கள் அமையப் பெற்று, அதன் தசாபுக்திகள் நடைபெற்றால் மனைவிக்கு உடல்ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பெண்கள் ஜாதகத்தில் மேற்கூறிய கிரக அமைப்புகள் இருக்கின்ற போது அதன் தசா புக்தி காலங்களில் கணவருக்கு ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படும் என்றாலும், குறிப்பாக 8ம் பாவத்தை அதிமுக்கியத்துவம் கொடுத்து மாங்கல்ய ஸ்தானமாக குறிப்பிட்டுவதால் 8ம் இடம் பலவீனப்பட்டோ, 8ல் பாவிகள் அமைந்தோ அதன் தசாபுக்தி நடைபெற்றால் கணவருக்கு கண்டம் ஏற்படக்கூடிய சூழ்நிலை  உண்டாகும்.

சந்திரனுக்கு 2,6,7,8 போன்ற ஸ்தானங்களில் அதிக பாவகிரகங்கள் அமையப் பெற்று அமைந்திருந்தால் அதன் தசாபுக்தி காலங்களிலும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Saturday, January 28, 2012

தாரதோஷம்

ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வதுதான் நம்முடைய இந்திய கலாச்சாரமாகும். மேல நாடுகளே நம்மைப் பார்த்து ஆச்சர்யப்படும் விஷயம்  நம்முடைய கட்டுப்பாடான தாம்பத்ய வாழ்க்கைதான். பெண்கள் அனைவரும் சீதையாகவும், ஆண்கள் அனைவரும் ராமனாகவும் வாழத்தான் ஆசைபடுவார்கள். ஆனால், அந்த ஆசையானது எல்லோருக்குமே பூர்த்தியாகி விடுவதில்லை.  சில சமய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை நிலை தடுமாறச் செய்து விடுகிறது.

மனரீதியான பிரச்சினைகளும். உடல் ரீதியான தேவைகளும் வாழ்க்கைத் துணையைவிட மற்றவர்களிடம் நிறைவேறும் போது, மனமும் அவரைநாடி செல்கிறது. வீட்டு சாப்பாடு சரியில்லாத போது நல்ல உணவு விடுதியை தேடிச் செல்வதைப் போல இது சரியா தவறா என்ற வாதத்தை முன் வைத்தால் நம்முடைய கலாச்சாரப்படி தவறுதான். ஆனால் இது மேலோட்டமான கருத்து ஆகும். வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பவருக்குதான் தெரியும் அதிலுள்ள பிரச்சனைகளும்.

இப்படி தடம் மாறி வாழ்க்கை செல்வதற்கும் ஜோதிட ரீதியாக உள்ள கிரக அமைப்புகளே காரணமாக இருக்கின்றன. தடம் மாறி வாழுபவர்களை இந்த சமூகம் தூற்றத்தான் செய்யும் என்றாலும், ஒவ்வொருவரிடம் என் ஜாதக நிலை இவ்வாறு உள்ளது என விளக்கம் கூற முடியாது. எவ்வளவுதான் நல்லவராக வாழ மனம் நினைத்தாலும்  கிரக நிலையின் ஆதிக்கங்களால் கண்டிப்பாக ஏதாவது ஒருவகையில் தவறுதான் செய்வார்கள்.

ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடான களத்திரஸ்தானமும், களத்திரகாரகன் சுக்கிரனும் மற்ற கிரகச் சேர்க்கைப் பெற்றிருக்கின்ற போதும், 7ம் வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்திருக்கும்  போது களத்திரதோஷம் எனும் தாரதோஷம் ஏற்படுகிறது. பொதுவாக 7ம் வீட்டில் எத்தனை கிரகங்கள் இருக்கின்றதோ, அது போல சுக்கிரனுடன் எத்தனை கிரகங்கள் சேர்க்கைப்பெற்றுள்ளதோ, 7ம் அதிபதி எத்தனை கிரகங்களின் சேர்க்கை பெற்றுள்ளரோ அத்தனை நபர்கள் அவர்களின் வாழ்கையில் குறிக்கிடுவாகள்.  அதனால் தான் நிம்மதியான வாழ்க்கை அமைவதற்கு 7ம் வீடு சுத்தமாகவும், 7ம் அதிபதி கிரக சேர்க்கைகளின்றியும் அமைய வேண்டும் என்று கூறுவார்கள்.

நவக்கிரகங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு,கேது போன்ற  பாவகிரகங்களில் ஏதாவது இரு கிரகங்கள் 7ல் அமைந்தாலோ, 7ம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றாலோ, சுக்கிரனுடன் இணைந்திருந்தாலோ, ஒன்றுக்கும் மேற்பட்ட தாரம் அமையும். இதில் சூரியன், செவ்வாய் ஒரு ராசியில் எந்த வீட்டில் கூடியிருந்தாலும் இருதாரம் அமையும் என்ற பழமொழியும் உண்டு.குடும்ப ஸ்தானமான 2ம் வீட்டிலும் 2க்கும் மேற்பட்ட பாவகிரகங்கள் அமைகின்ற போதும்  ஜென்ம  ராசி என வர்ணிக்கப்படக் கூடிய சந்திரனுக்கு 7ம் வீட்டில்  இரண்டிற்கும், மேற்பட்ட பாவகிரகங்கள் இருந்தாலும், சந்திரனுக்கு 7ம்  வீட்டில்   இரண்டிற்கும், மேற்பட்ட பாவகிரகங்கள் இருந்தாலும், சந்திரனுக்கு 7ம் அதிபதி 2க்கும் மேற்பட்ட பாவக்கிரகங்களின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும், களத்திரகாரகன் என வர்ணிக்கப்படக் கூடிய சுக்கிரனுக்கு 7ம் வீட்டில் இரண்டிற்கும் மேற்பட்ட பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும் களத்திரதோஷம் உண்டாகி மண வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ஒருவரின் ஜாதகத்தில் 7ம் வீட்டில் எத்தனை கிரகங்கள் பலம் பெறுகிறதோ, 7ம் அதிபதியுடன் எத்தனை கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றிருக்கிறதோ அத்தனை  தாரங்கள் கண்டிப்பாக அமையும். அதிலும்  தாரதோஷம் உண்டான நபர்களுக்கு இளம் வயதில் திருமணம் நடைபெற்றால் மற்றொரு தாரமோ அல்லது வேறு ஒரு நபருடன் தொடர்போ உண்டாகும்.

ஒருவரின் ஜாதகத்தில் எந்த கிரகங்களால் தோஷங்கள் ஏற்பட்டிருக்கிறதோ, அந்த கிரகங்களின் தசாபுக்திகள் நடைபெறுகின்ற போது எவ்வளவு தான் குடும்ப வாழ்க்கையானது மகிழ்ச்சிகர மானதாகவும், நிம்மதியாகவும் இருந்தாலும் வேறு ஏதாவது ஒரு நபரின் தொடர்பு ஏற்பட்டு குடும்ப வாழ்வில் நிம்மதி குறையும்.

Murugu Balamurugan

Friday, January 27, 2012

படித்த மனைவி

கல்வி என்பது அனைவருக்கும் இன்றி அமையாத ஒன்றாகும். இதில் மணவாழ்க்கை ரீதியாக வரக்கூடிய வாழ்க்கைத் துணையானது நன்கு படித்திருந்தால் வாழ்க்கை தரமும் உயர்வாகவே இருக்கும். இன்றைய சூழலில் பெற்ற குழந்தையை பள்ளியில் சேர்க்கச் சென்றாலும் முதலில் எழும் கேள்வி பெற்றோர் படித்தவர்களா? என்றுதான். ஏனென்றால் கணவனோ மனைவியோ படித்திருந்தால் நல்ல உத்தியோகத்தைப் பெறமுடியும். அதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தால் பிறக்கும் குழந்தைகளுக்கும் நல்ல கல்வியைத் தர முடியும் பள்ளியில் மட்டுமின்றி வீட்டிலும் நல்ல பழக்க வழக்கங்கள், பலகலைகளில் தேர்ச்சி பெறக்கூடிய வாய்ப்பு உண்டாகும். இவை அனைத்திற்கும் மூலதனமாக அமைவது கணவன் மனைவியின் கல்வி தகுதியே ஆகும். ஜோதிட ரீதியாக உஙகளுக்கு  வரக்கூடிய வாழ்க்கைத் துணையானது படித்தவராக இருக்குமா என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். முதலில் ஒரு ஆண் மகனுக்கு கிடைக்கும் பெண்ணாவள் படித்தவளாக இருப்பாளா என்பதனை பற்றி பார்ப்போம்.

ஒருவரது ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீட்டைக் கொண்டு அடிப்படைக் கல்வி, பேச்சுதிறன், எழுத்துத்திறன் பற்றியும், நான்காம் வீட்டைக் கொண்டு இளமைக் கல்வி, மற்றும் பொது அறிவைப் பற்றியும், 5ம் வீட்டைக் கொண்டு உயர்கல்வி, புத்திசாலித்தனம், அறிவுக் கூர்மை, ஞாபகசக்தி போன்றவற்றை பற்றியும், 10 ம் வீட்டைக் கொண்டு தொழில், உத்தியோக நிலை பற்றியும், இத்துடன் நவக்கிரகங்களில் குரு, புதனைக் கொண்டு ஒருவரது கல்வி ஆற்றலைப் பற்றியும் மிகத் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

ஒரு ஆணுக்கு அமையக் கூடிய மனைவியானவள் படித்தவளாக இருப்பாளா என ஆராய்வதற்கு களத்திர ஸ்தானமான 7ம் வீட்டிற்கு 2,4,5 ம் அதிபதிகள் மற்றும் குரு,புதன் பலத்தைக் கொண்டு தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 7ம் வீட்டிற்கு 4,5 க்கு  அதிபதிகள் (ஜென்மலக்னத்திற்கு 10,11 க்கு அதிபதி) சுபர் சேர்க்கைப் பெற்று  கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும், ஆட்சி உச்சம் பெற்ற இப்படிப்பட்ட கிரகநிலை ஒரு பெண் ஜாதகத்தில் இருந்தால் நன்கு படித்த கணவணாக அமைவார். 

ஒரு ஆணின் ஜாதகத்தில் 7க்கும் 4 ம் அதிபதி பலமிழந்து 7க்கு, 5 ம் அதிபதி பலம் பெற்றிருந்தால் வரக்கூடிய மனைவியானவள் கல்வித் தகுதியில் சற்று குறைந்தவளாக இருந்தாலும், நல்ல அறிவாற்றலும் குடும்பத்தை நிர்வகிக்கும் ஆற்றலும், கணவருக்கு எல்லா வகையிலும் உதவிகரமாக இருக்கும் பண்பும் உண்டாகும். 7க்கு 2ம் இடமான 8 ம் அதிபதி பலம் பெற்றிருந்தால் நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல், குடும்பத்தை சிறப்பாக வழி நடத்தும் ஆற்றல் போன்றவை  சிறப்பாகவும், மனைவி வழி உறவுகளிடையே ஒற்றுமையாகவும், மகிழ்ச்சி கரமாகவும் இருக்கும்.

ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டிற்கு 4,5 க்கு அதிபதிகள் புதன் போன்ற சுபகிரக சேர்க்கை பெற்று, ஆட்சி உச்சம் பெற்று, கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்று, சந்திரன் சுக்கிரனும் பலம் பெற்று, பரிவர்த்தனைப் பெற்றிருந்தால் நல்ல அழகான, படித்த, பண்புள்ள, நாகரீகமான பெண் மனைவியாக அமைவள்.

ஆக 7 க்கு 4,5 அதிபதிகள் பலம் பெற்றிருப்பது மூலமாக நல்ல படித்த வாழ்க்கைத் துணையானது அமையும். அதுமட்டுமின்றி 7க்கும் 10ம் அதிபதி 7ம் அதிபதியுடன் சேர்க்கைப் பெற்றோ, பரிவர்த்தனைப் பெற்றோ  அமைந்திருந்தால் நன்கு படித்த  மனைவி அமைவது மட்டுமின்றி, உயர்ந்த பதவிகளில் உத்தியோகம் வகிக்க கூடியவராகவும், கணவருக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக விளங்கக்கூடியவராகவும் இருப்பார்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholoar -0091 72001 63001

Thursday, January 26, 2012

ஏக தாரத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்பு

கணவன் மனைவியிடையே உள்ள தொடர்பானது உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு போல இணை பிரியாததாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு. ஒருவருக்கு அமையக் கூடிய வாழ்க்கைத் துணையானது மனமொத்து வாழ்வதாக அமைந்து விட்டால், அந்த வாழ்வில் இன்பத்திற்கு எல்லையே இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு எந்த சூழ்நிலையிலும் எந்த பிரச்சினைக்கும் இடம் கொடுக்காமல் அன்போடு வாழும் குடும்ப சூழல் மிக சிறப்பானதாக இருக்கும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடுடன் பிறன் மனைவி நோக்காது, வாழும் தம்பதிகள் தங்கள் குடும்பத்தையும், தம்மை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சிகரமானதாக வைத்துக் கொள்ள முடியும்.

ஆலம் விழுதுகள் போல் உறவுகள் ஆயிரம் வந்து மென்ன வேரென நீ இருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருப்பேன் என மனைவியிடம் மட்டுமே தம்முடைய மனக்குறைகளை பகிர்ந்து கொள்ளும் ராமர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள், துன்பங்கள், மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெற்றாலும், அதில் இருவருக்குமே பங்க உள்ளது என்பதை உணர்ந்து ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ராமன் சீதையைப் போல வாபம் ஜோடிகள் இந்தியாவில் ஏராளம் ஏராளம். இப்படி ஒருவருக்கொரவர் ஒருடல் ஈருயிராய் வாழ்வதென்பது அறிதல்லவா. இப்படி சீதாராமனாய் வாழக்கூடிய யோகம் எத்தனைப் பேருக்க உள்ளது என ஜோதிட ரீதியாக பார்ப்போமா?

ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம  லக்னத்திற்கு 7ம் பாவம் களத்திரஸ்தானமாகும். 2ம் வீடு குடும்பஸ்தானமாகும். களத்திரகாரகன் சுக்கிரன் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் 7ம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருந்து, 7ம் அதிபதி கேந்திர, திரிகோணஸ்தானங்களில் தனித்து அமையப் பெற்று, சுபர் பார்வை மற்றும் சுபர் நட்சத்திரத்தில் அமையப் பெற்றிருந்தாலும், அப்படியே 7ம் வீட்டில் கிரகங்கள் அமையப் பெற்றாலும் ஒரே ஒரு கிரகமாக இருப்பதும் அதிலும் குறிப்பாக சுபகிரகமாக இருப்பதும் நல்லது.

ஒருவரது வாழ்க்கையில் களத்திரகாரகனாக சுக்கிரன் மிக முக்கிய பங்குவகிப்பதால் அவர் கிரகச்சேர்க்கையின்றி அமைவதும், சுபர் பார்வையுடன், சுபர் நட்சத்திரத்தில்  அமைந்திருப்பதும் நல்லது. குடும்ப ஸ்தானமான 2ம் வீட்டில் அதிக கிரகச் சேர்க்கையில்லாமல் இருப்பதும் மிகவும் நல்லது. குருவின் பார்வையானது 7ம் வீட்டிற்கோ, 7ம் அதிபதிக்கோ, சுக்கிரனுக்கோ இருப்பதும் மிகவும் சிறப்பு. மேற்கூறியவாறு ஒருவரது ஜாதகத்தில் கிரக அமைப்புகள் அமையுமேயானால் ஏக தாரம் மட்டுமே உண்டாகி வாழ்க்கையில் எந்த விரத சலனங்களும் இன்றி வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் இருக்கும்.

பொதுவாக 7ம் அதிபதியும் சுக்கிரனும் கிரகச் சேர்க்கை இல்லாமல் இருப்பது ஏக தாரத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும், அக்கிரகங்களுக்கு இருபுறமும் பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும் பாவி கிரகங்களின் பார்வை பட்டாலும் வாழ்வில் சில பாதிப்புகள் உண்டாகிறது. இப்படி அமையப் பெற்ற பாவகிரகங்களின் தசாபுக்தி நடைபெறுகின்ற போது ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகளை உண்டாவதில்லை.

சுக்கிரன் களத்திரகாரகன் என்றாலும், செவ்வாயும் திருமண வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். செவ்வாயும் சூரியனும்  கூடி ஒருவரின் ஜாதகத்தில்  எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் இரு தாரம் உண்டாக கூடிய வாய்ப்புகள் உண்டு. அதனால் செவ்வாய் சூரியன் சேர்க்கை  இல்லாமல் இருப்பது நல்லது.
ஜென்ம லக்னம் எப்படி ஒருவரின் ஜாதகத்தில் எவ்வளவு முக்கியமோ, சந்திரா லக்னமும் அவ்வளவு முக்கியமாகும். சந்திரனுக்கு 7ல் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும் சந்திரனுக்கு 7ம் அதிபதி கிரகச் சேர்க்கையின்றி இருப்பதும் நல்லது.
இப்படிப்பட்ட கிரகச் சேர்க்கைகள் ஆண், பெண் ஜாதகங்களில் அமைந்திருக்குமேயானால் வாழ்க்கையில் எந்த பிரச்சினைகளும் இன்றி பெண்கள் சீதையைப் போலவும், ஆண்கள் ராமனைப் போலவும் வாழ முடியும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholoar -0091 72001 63001

Wednesday, January 25, 2012

தாமத திருமணம்

வசதி வாய்ப்புகள் குறைவால் திருமணம் தாமதமானால், அவர்கள் ஏழை அதனால் திருமணம் செய்து வைக்க முடிய வில்லை என்றொரு சமாதானம் ஏற்படும். ஆனால் எல்லா வசதி வாய்ப்புகளும் அமையப் பெற்றவர்களுக்கே திருமணம் தள்ளிக் கொண்டே சென்றால், அவள் ராசியில்லாதவளாகி விடுவாள். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். சில பெற்றோர்கள் வரன் பார்த்தே சொத்துக்களை இழந்திருப்பார்கள். சிலர் தேடினோம் தேடினோம் தேடிக்கிட்டே இருக்கோம் என்பார்கள். முதலிலேயே நல்ல வரன் ஒன்று வந்தது அதையே முடித்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் நல்ல வரனாக அமையட்டுமே என நினைத்தோம். அதுவே பெரிய தவறாகிப் போய்விட்டது. என ஆதங்கப் படுபவர்களும் உண்டு. ஏன் இந்த தாமதநிலை.

இவளை ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டால் நிம்மதியாக கண்ணை மூடுவோம் என எமனிடத்தில் பெண்ணுக்கு வரன் கேட்பார்கள் சிலர். ஜாதக ரீதியாக இதைப் பற்றி ஆராயும்போது, கிரக நிலைகளின் சாதகமற்ற சஞ்சாரமே காரணமாகிறது. பருவத்தே பயிர் செய், என்பது போல எந்த வயதில் திருமணம் நடக்க வேண்டுமோ அந்த வயதில் திருமணம் நடைபெறுவதுதான் சிறப்பாகும். ஏனிந்த தாமதநிலை என்று ஜோதிட ரீதியாக ஆராயும்போது திருமண ஸ்தானத்திற்குரிய 7ம் அதிபதி மறைவு ஸ்தானமாகிய 6,8,12 ல் மறைந்து அமைந்திருந்தாலும், ஆண்களுக்கு களத்திர காரகனான  சுக்கிரனும், பெண்கள் ஜாதகத்தில் செவ்வாயும் மறைவு ஸ்தானங்களாகிய 6,8,12 ல் இருந்தாலும் திருமணம் தாமதமடையக்கூடிய நிலை உண்டாகும்.

நவக்கிரகங்களில் மந்த காரகன் என்று கூறக்கூடிய சனி பகவானின் ஆதிக்கம் ஒருவர் ஜாதகத்தில் பலமாக இருந்தால் எந்தவொரு சுபகாரியம் நடைபெறுவதற்கும் தாமத நிலை உண்டாகும். நவகிரகங்களில் சனியின் பார்வையானது சற்று கெடுதலை உண்டாக்கக்கூடியது. சனி, தான் இருக்கும் இடத்திலிருந்து 3,7,10ம் வீடுகளை பார்வை செய்வார். இப்படி பார்வை செய்யும் சனி பகவானின் பார்வை 7ம் வீட்டிற்கோ, 7ம் வீட்டின் அதிபதிக்கோ, சுக்கிரனுக்கோ உண்டாகுமானால் திருமண வாழ்க்கை ஏற்பட தாமத நிலை உண்டாகும். சிறப்பான மணவாழ்க்கைக்கு 7ம் வீடு மட்டுமின்றி தாமதமின்றி திருமண அமைய குடும்ப ஸ்தானமான 2ம் வீடும் பலமாக இருப்பது மிகவும் முக்கியமாகும். சனியின் கொடிய பார்வை இந்த 2ம் வீட்டிற்கும் 2ம் வீட்டின் அதிபதிக்கோ இருக்குமேயானாலும் மணவாழ்க்கை என்பது தாமதமாகத்தான் அமையும்.

இது மட்டுமின்றி களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் இருந்தாலும் 7ம் வீட்டதிபதி சனி, ராகு போன்ற பாவகிரகங்களின் சேர்க்கை அல்லது சாரம் பெற்றிருந்தாலும் மண வாழ்க்கையானது தாமதமாகவே உண்டாகும். பொது வாக , சனி எந்தவொரு காரியத்திலும் தாமதத்தை ஏற்படுத்தும் என்றாலும் லக்னாதிபதியாகவோ, 7ம் அதிபதியாகவோ சனி ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் பட்சத்தில் பெரிய கெடுதல்களை உண்டாக்குவதில்லை.

ஒருவர் ஜாதகத்தில் கிரக நிலைகளின் சாதகமற்ற சஞ்சாரங்கள் கூட திருமணத்தை தாமதப்படுத்தும். ஒருவருக்கு 7ம் பாவம் 7ம் அதிபதி அனைத்தும் சிறப்பாக இருந்தாலும் இவருக்கு நடக்கக்கூடிய தசா புத்தியானது சாதகமின்றி இருந்தால், எடுத்துகாட்டாக சர்பகிரகங்களான ராகுகேதுவின் தசாபுக்தியோ, ராகு கேது சாரம் பெற்ற கிரகங்களின் தசாபுக்தியோ திருமண வயதில் நடைபெறுமேயானால் திருமண வாழ்க்கை அமைய தாமத நிலை உண்டாகிறது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholoar -0091 72001 63001

Tuesday, January 24, 2012

இளமைத் திருமணம்


பெண்ணின் திருமண வயது 21. இது எல்லா இடங்களிலும் பொதுவாக தற்போது வைக்கப்பட்டுள்ள விளம்பரம். இதை எல்லோரும் கடைபிடித்துதான் ஆகவேண்டும் என்ற சட்டமில்லை. சட்டத்திலேயே 18 வயது ஆனாலே திருமணம் செய்து வைத்துவிட வேண்டியது கடமை என பெற்றோர்கள் நினைக்கத் தொடங்குகிறார்கள். நம்முடைய முன்னோர்கள் சொந்தங்கள் விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக, ஒரு குழந்தை பிறக்கும்போதே இது என் தங்கை மகனுக்கு, இது என் அண்ணன் மகளுக்கு என ஒரு முடிவெடுத்து வைத்து விடுவார்கள். எனக்குத் தெரிந்து என் பாட்டி உறவில் வரக்கூடிய ஒருவருக்கு வயதுக்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்து வைத்து, புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தார்களாம். ஆனால் மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி இல்லாமல் திருமணங்கள் செய்வதற்கு தற்போது யாரும் ஒத்துக் கொள்வதில்லை. இளமையிலேயே திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்பு எல்லோருக்குமே அமைந்து விடுவதில்லை. சரியான வயதில் திருமணம் நடைபெற வேண்டும். இவ்வாறு  பருவத்தே பயிர் செய் என்ற பழமொழிக்கேற்ப வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய பாக்கியம் ஒரு சிலருக்கே அமைகிறது.  இப்படி தக்க வயதில் திருமணம் நடைபெறுவதற்கு ஜோதிட ரீதியில் கிரகங்கள் பலம் பெற்று அமைந்திருப்பதே காரணம். ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என கூறக்கூடிய 7ம் பாவமானது பலமாக இருந்தாலும், 7ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் சுபர் சேர்க்கை பார்வை பெற்றிருந்தாலும், சுபகிரகங்களின் சாரம் பெற்றிருந்தாலும் அவருக்கு தக்கவயதில் திருமணம் நடைபெறக் கூடிய பாக்கியம் உண்டாகம். 7ம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானங்களில் நட்புகிரக வீடுகளில் அமையப் பெற்றிருப்பதும் நல்லது.

நவகிரகங்களில் சுபகிரகங்கள் என வர்ணிக்கப்படக் கூடியவைகள் குரு, சுக்கிரன், வளர் பிறை சந்திரன், சுபர்சேர்க்கைப் பெற்ற புதன் ஆகும். சுபகிரகங்கள் 7ம் வீட்டில் அமையப் பெற்றாலும், 7ம் அதிபதி சுபகிரக சேர்க்கை பெற்று, சுபகிரகங்களின் தசாபுக்தி திருமணவயதில் நடைபெற்றாலும் இளமையிலே திருமணம் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். 7ம் அதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி ஆண்களுக்கு சுக்கிரனும் பெண்களுக்கு  செவ்வாயும், சுபகிரக சேர்க்கை, சுபகிரக நட்சத்திரத்தில் அமையப் பெற்றாலும், சுபர் பார்வை பெற்றாலும் இளம் வயதில் திருமணம் நடக்கும். சுபகிரகங்களில் முக்கிய கிரகமான குரு, தான் இருக்கும் இடத்திலிருந்து 5,7,9  ஆகிய வீடுகளை பார்வை செய்வார். சுபகிரகமாகிய குருவின் பார்வை குடும்ப ஸ்தானமான 2ம் வீட்டிறோ, 2ம் அதிபதிக்கோ சுக்கிரனுக்கோ இருக்குமேயானால் தக்க வயதில் திருமணம் நடைபெறக்கூடிய வர்ய்ப்பு உண்டாகும்.

திருமண வயதை அடைந்த ஆண், பெண் இருவருக்கும் இளம் வயதில் பாவகிரகங்களின் தசாபுத்திகள் நடைபெற்றால் சுக்கிரனின் திசையோ அல்லது புக்தியோ, சுக்கிரனின் நட்சத்திரங்களில் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தியோ நடைபெற்றால் தக்க வயதில் திருமணம் கைகூடும். மணவாழ்க்கை வாழ்வதற்கேற்ற உடல் தகுதியும் மன தகுதியும் உண்டாகி இல்வாழ்க்கை இன்பகரமாக இருக்கும். இளமை திருமணம் என்பதை 10,12 வயதுகளில் நடக்கக்கூடிய பால்ய திருமணமாக தவறாக நினைத்து பிள்ளைகளின் வாழ்வை கெடுக்காமல் தக்க வயதில் திருமணம் செய்து வைப்பது நல்லது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Monday, January 23, 2012

திருமண வாழ்வில் சுக்கிரனின் ஆதிக்கம்

குடும்ப வாழ்வில் கணவன், மனைவி ஒற்றுமை மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் மேன்மைகள் ஏற்பட்டால்தான் மண வாழ்க்கை என்பதே மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். நவக்கிரகங்களால் நம் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. அவற்றில் திருமணத்தையே தீர்மானிக்கும் கிரகமாக சுக்கிரன் விளங்குகிறார். திருமணத்தை மட்டுமின்றி ஆடம்பரமான வாழ்க்கை அமைவதற்கும் சுக்கிரன் மிக முக்கிய கிரகமாவார். ஒருவருக்கு பூமி, மனை, யோகம், வண்டி வாகனங்கள், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமைவதற்கு சுக்கிரன் மிக முக்கிய காரகனாகிறார். ஆடை, ஆபரணங்கள், அணிகலன்கள் போன்றவைகள் சேருவதற்கும் சுக்கிரனே காரகனாகிறார்.

ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரனானவர் கேந்திர திரிகோணங்களில் நட்பு வீட்டில் அமையப் பெற்றிருந்தாலும், ஆட்சி உச்சம் பெற்று சுபகிரகங்களின் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தாலும் அந்த ஜாதகருக்கு இயற்கையாகவே மண வாழ்க்கை சிறப்பாக அமைவது மட்டுமின்றி சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழும் யோகம் உண்டாகிறது.

சுக்கிரன் கிரகச் சேர்க்கையின்றி சுபர் பார்வையுடன் அமையப் பெறுவது சிறப்பு. அப்படி சுக்கிரன் கிரக சேர்க்கைப் பெறுவாராயின் களத்திரம் தோஷம் உண்டாகும். குறிப்பாக சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவகிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தாலும், சுக்கிரன் பாவிகளின் சேர்க்கை பெற்று ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் போன்றவற்றில் அமைந்திருந்தாலும் வாழ்வில் தடம் மாறி செல்லக்கூடிய சூழ்நிலை உண்டாகிறது.

சுக்கிரன் மேற்கூறியவாறு அமைந்திருந்தால் நற்பலன்களை தரமாட்டார் என்பது மட்டுமின்றி சுக்கிரனை பற்றி ஆராய்கின்ற போது மிக முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் அஸ்தங்கம் ஆகும். அதாவது சுக்கிர பகவான் ஒரு ராசியில் ஒரு மாதம் தங்குவது மட்டுமின்றி, சூரியனை ஒட்டியே சஞ்சரிப்பார். சூரியனானவர் மிகவும் சக்தி வாய்ந்த உஷ்ணகிரகம் என்பதால், சூரியனுக்கு மிக அருகில் எந்த கிரகம் சென்றாலும் அந்த கிரகத்தின் வலிமையை முழுமையாக குறைத்து விடுவார். சூரியனை ஒட்டியே சுக்கிரன் சஞ்சரித்தாலும் சூரியனுக்கு முன்பின் 8 டிகிரிக்குள் அமையப் பெற்றால் பலம் குறைந்து அஸ்தங்கம் பெறுகிறார். அதுவும் ஒரு டிகிரிக்குள் அமைவரானால் சுக்கிரன் தன் முழு பலத்தையுமே இழந்துவிடுகிறார். ஒருவருக்கு சுக்கிரன் பலமிழந்த அஸ்தங்கம் பெற்று விட்டால் ரகசிய நோய்களால் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை, சிலருக்கு திருமணமே நடைபெறாமல்  போகக்கூடிய  அனுகூலமற்ற நிலை உண்டாகிறது.

சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றவர்களுக்கு சுக்கிரனின் தசா, புக்தி நடைபெறும் காலங்களில் ரகசிய நோய்களின் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. சுக்கிரன் தேவகுருவான  குருவின் சேர்க்கை பெற்றாலும் களத்திர தோஷம் தான்.

ஆனால் ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்தால் அதன் தசாபுக்தி காலங்களில் வாழ்வில் பல உயர்வுகள் தேடிவரும். ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெறுமேயானால் பெண்களால் சாதகமான பலன்களும், தொழில் ரீதியாக உயர்வுகளும் ஏற்படும். பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் மட்டுமின்றி பெண்களுக்கு மிக முக்கிய கிரகமாக விளங்கக் கூடிய செவ்வாயும் பலம் பெற்றிருந்தால் வாழ்க்கைத் துணையால் நல்ல மேன்மைகள் உண்டாகிறது. சுக்கிர ஓரையில் திருமணம் சம்பந்தப்பட்ட சுபகாரியங்களை மேற்கொள்வதும் நல்லது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholoar -0091 72001 63001

Sunday, January 22, 2012

மகிழ்ச்சியை ஏற்படுத்தும் மணவாழ்க்கை


மகிழ்ச்சியான மணவாழ்க்கைதான் ஒவ்வொரு மனிதரின் குடும்ப வாழ்க்கைக்கும் ஆணி வேராக இருக்கும்.  வாழ்ந்தால் அவர்களைப் போல வாழ வேண்டும் என மற்றவர் உதாரணம் கூறுவதற்கேற்ப வாழ்ந்து காட்ட வேண்டும். குறை நிறை இல்லாத குடும்பங்களே இல்லை. வீட்டுக்கு வீடு வாசற்படிதான். என்றாலும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டுடன் இன்ப துன்பங்களை சமமாக ஏற்றுக் கொண்டு குடும்பத்தை நல்ல வழியில் நடத்தி செல்வதன் மூலமே மகிழ்ச்சி என்பது அந்த குடும்பத்தில் குடியேறும். வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை என்பது குறிக்கோளாக கொள்ள வேண்டும். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அடித்தளமே ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதுதான். விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம், அனுசரித்துச் செல்லும் குணமும் இருந்தாலே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காலையில் காபி போட்டுத்தர நேரமாகி விட்ட காரணத்தால் விவாகரத்து கோரும் இக்காலத்தில், மன மெர்த வாழ்க்கை அமைவதற்கு ஜெனன ஜாதகத்தில் கிரகங்களின் ஆதிக்கங்கள் பலமாக இருந்தல் அவசியம்
.
ஒருவருக்கு மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைய 7ம் பாவமும், களத்திர காரகன் சுக்கிரனும் பலமாக இருக்க வேண்டும். நவக்கிரகங்களில் சுபகிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடியவை குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், சுபசேர்க்கைப் பெற்ற புதன் ஆகியவைகள் ஆகும். சூரியன், செவ்வாய், சனி, ராகு கேது, தேய்பிறை சந்திரன், பாவிகள் சேர்க்கை பெற்ற புதன் ஆகியவை பாவகிரகங்களாகும். மணவாழ்க்கையானது மகிழ்ச்சிகரமாக அமைவதற்கு 7ம் அதிபதி சுபரமாக இருப்பதும், 7ம் வீட்டில் சுபகிரகம் இருப்பதும் நல்லது. 7ம் அதிபதி பாவியாக இருக்கும் பட்சத்தில் சுபர் நட்சத்திரத்தில் அமைவதும், சுபர் பார்வையுடனிருப்பதும், சொந்த வீட்டில் அமைவதும் கெடுதியில்லை. பொதுவாக 7ம் அதிபதியும் களத்திர காரகனான சுக்கிரன் கிரக சேர்க்கையின்றி தனித்து அமையப்பெற்று, சுபர் நட்சத்திரத்தில் சுபர் பார்வையுடனிருப்பது நல்லது.

7ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றோ, கேந்திர  ஸ்தானமான  1,4,7,10 ல் அமைந்தோ, திரிகோண ஸ்தானம்  என கூறக்கூடிய 1,5,9 லோ அமையப் பெறுவது சிறப்பு. பொதுவாக, எந்தவொரு ஸ்தானத்திற்கும் சுபகிரக பார்வை இருப்பது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக, குரு பார்வை கோடி புண்ணியம் என்பார்கள். குரு பகவான் தான் இருக்கும் இடங்களிலிருந்து 5,7,9 ஆகிய ஸ்தானத்திற்கு கிடைக்கப் பெற்றால் அதில் எவ்வளவு தோஷங்கள் இருந்தாலும் அதன் கெடுதிகள் அனைத்தும் விலகி நற்பலன்கள் உண்டாகும். இவ்வளவு மகத்துவங்களை பெற்ற குருவின் பார்வை ஜென்ம லக்னத்திற்கு, 7ம் வீட்டிற்கோ, 7ம் அதிபதிக்கோ, சுக்கிரனுக்கோ அமையுமானால் மணவாழ்க்கையானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

7ம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும், 7ம் அதிபதியும் சுக்கிரனும், பெண்களுக்கூரிய செவ்வாயும் கிரக சேர்க்கையின்றி இருப்பது நல்லது. 7ம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும் நல்லது என்ற காரணத்தால்தான் பொதுவாக மக்கள் 7ம் இடம் சுத்தமாக இருக்கிறதா என பேச்சவாக்கில் கேட்பார்கள். திருமண வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய  2,4,8,12 ல் பாவகிரகங்கள் ஏதும் இல்லாமல் பலமாக அமையப்பெற்றால் மண வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Saturday, January 21, 2012

எண் 9 (9,18, 27)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்



எண்களின் கடைசி எண்ணாக விளங்குவது ஒன்பதாம் எண்ணாகும். ஒன்பதாம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே தனித்தன்மை வாய்ந்ததாகவே உள்ளது. நவரசங்கள், நவதானியங்கள், நவரத்தினங்கள் என ஒன்பதாம்  எண்ணிற்கும் தனிச்சிறப்பு உண்டு. ஏன் உடலில் வாசல்கள் கூட ஒன்பது உண்டு. ஒன்பதாம் எண் செவ்வாயின் ஆதிக்கத்திற்குட்பட்டதாகும். எந்த மாதத்திலும் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். ஜாதகக் கட்டத்தில் ஒன்பதாம் இடம் பாக்கிய ஸ்தானத்தை குறிக்கும். எனவே ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களை பாக்கியசாலிகள் எனலாம்.

குணநலன்கள்

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் எல்லா விஷயங்களிலும் பொது அறிவு நிரம்பப்பெற்றிருப்பார்கள். கலா ரசிகர்களாகவும், விநோத பிரியர்களாகவும் இருப்பார்கள். எந்த விஷயத்தைப் பற்றி பேசினாலும் தமக்குத் தெரிந்த விஷயம் போலவே காட்டிக் கொள்வார்கள். பிறர் கூறும் விஷயங்களை அப்படியே அங்கீகரிக்காமல் தனக்கென ஒரு கொள்கையை வைத்திருப்பார்கள். எதையுமே தனக்கு பிடித்த மாதிரிதான் செய்ய வேண்டுமென்ற பிடிவாத குணம் இருக்கும். வெகுளியாகவும் கபடமற்றும்  காணப்படும் இவர்கள் எந்தவொரு விஷயத்தையும் ரகசியமாக வைத்திராமல் மனம் திறந்து பேசுவார்கள். வாத பிரதிவாதங்களில் திறமையோடு வாதித்து தனது அபிப்ராயத்தை அங்கு நிலைநாட்டி எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும். தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து அவர்களுக்கு உதவி செய்வார்கள். தனது அந்தஸ்துக்கும் புகழுக்கும் பழுது ஏற்படாத பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். மன அமைதியை இழக்கக்கூடிய சூழ்நிலைகள் வந்தாலும் அதை பிறருக்கு தெரியாதவாறு மறைத்துக் கொள்வார்கள்.

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இயற்கையிலேயே அஞ்சா நெஞ்சமும் தைரியமும் படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் காரியவாதிகள். ஆதலால் வீண் பழி சொற்களுக்கு செவி சாய்க்கமாட்டார்கள். இவர்களது சுயேற்சையான சுபாவத்தையும், அகங்கார குணத்தையும் கண்டு இவர்களை நேசிப்பவர்கள் கூட சில சமயம் வெறுப்படைந்து விடுவார்கள். பெரியவர்களிடத்தில் மரியாதையும், சிறியவர்களை அடக்கியாளும் குணமும் இருக்கும். மற்றவர்களின் குற்றம் குறைகளை கண்டு பிடித்து அம்பல மாக்குவதில் தனிக்கவனம் செலுத்துவார்கள். இவர்களை துணையாக கொண்டால்  எந்தக் காரியத்திலும் எதையும் சாதித்த வெற்றி பெறமுடியும்.

உடல் நிலை ஆரோக்கியம்

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரமும், கம்பீரமான தோற்றமும் கொண்டவர்களாக இருப்பார்கள். நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும், சுருட்டையான தலைமுடியும் இருக்கும். பார்ப்பதற்கு வெகுளியாகக காணப்பட்டாலும் எதையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். நீண்ட மூக்கும் அடர்த்தியான பல் வரிசையும் கொண்டவர்கள். ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாதலால் இவர்களுக்கு பெரும்பாலும் உடலில்  காயங்கள், இரத்தக் கசிவுகள் போன்றவை ஏற்படக்கூடும். உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அம்மை, மஞ்சள் காமாலை போன்ற  நோய்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். முடிந்தவரை மது, மாமிசம் போன்றவற்றை தவிர்த்தால் உடல் நிலை சிறப்பாக அமையும்.

குடும்ப வாழ்க்கை

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதில் பாதிப் பேருக்கு சுகமான சுபிட்சமான வாழ்க்கையும், வாழ்க்கை துணையால் முன்ன«ற்றங்கள் போன்றவை  அமைந்தாலும் பாதிப்பேருக்கு குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களும் குழப்பங்களும் உண்டாகிறது. இதனால் விரக்தியான மனோநிலைகளும் ஏற்படுகிறது. இதனால் எதையும் சிந்தித்து சரியான முறையில் அனுசரித்து நடந்தால் மட்டுமே நற்பலனைப் பெற முடியும். ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு தாயின் ஆதரவு அவ்வளவாக கிடைப்பதில்லை. உடன் பிறந்தவர்கள் மீது இவர்களுக்கு பாசம் அதிகம் இருந்தாலும் அவர்களால் ஒரு பிரயோசனமும் உண்டாவதில்லை. இவர்கள் எதிலும் முன் யோசனையுடன் திட்டங்களை தீட்டி செயல்பட்டால் குடும்ப வாழ்வில் முன்னேற்றமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.

பொருளாதார நிலை

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் சகல வசதிகளையும் பெற்று சுக வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். இவர்களுக்கு தேவைக்கேற்ப பணவசதி ஏற்படுமே தவிர சேமிக்கும் அளவிற்கு இருக்காது. வரவுக்கேற்ற செலவுகளும் உண்டாகும். வாழ்க்கையின் முற்பாதியில் பொருளாதார நிலையில்  சங்கடங்கள் இருந்தாலும் பிற்பாதியில் வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வார்கள். மனைவி வழியில் ஒரு சிலருக்கே பொருளுதவிகள் கிடைக்கும். வரவுக்கு தகுந்த மாதிரி செலவு செய்யக்கூடிய வாழ்க்கை இணை அமைந்த போதிலும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் தங்களுக்கு தேவைற்ற கடன்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். பெரும்பாலும் தங்களுடைய கௌரவத்தையும், அந்தஸ்தையும் உயர்த்தி கொள்ள எப்பாடுபட்டாவது சம்பாதித்து முன்னேறி விடுவார்கள்.

தொழில்

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த தொழிலை ஏற்றுக் கொண்டாலும் அதை திறம்பட நிர்வாகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்களுக்கு பெரும்பாலும் அரசாங்கத்தில் அதிகாரம் செய்யக்கூடிய உயர் பதவிகளை கிடைக்கும். பலர் ஆயுதங்களை தாங்கி பணி செய்யக்கூடிய மிலிட்டரி, போலீஸ் துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். மற்றும் தீயுடனும், மின்சாரத்துடனும் தொடர்பு கொண்டதுறைகளிலும் பணிபுரிவார்கள். போர்க்கலைகள், மல்யுத்தம், மலையேறுதல், விளையாட்டுத் துறைகளில் பயிற்றுவிக்கும் பணி போன்றவற்றிலும் ஈடுபடுவார்கள். மிகப்பெரிய பணியாக இருந்தாலும் துணிச்சலுடன் செய்வித்து அனைவரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்று விடுவார்கள். சிலர் மருத்துவ துறையில் அறுவை சிகிச்சை நிபுணராக விளங்குவார்கள்.

நண்பர்கள், பகைவர்கள்

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் வீரத்தின் சின்னமாக விளங்குகிறார்கள். இவர்களுக்கு அதிகார தோரணையும்,பிறருக்கு ஆடிபணியாத குணமும் இருக்கும் என்றாலும் பிறருக்கு உதவி செய்யக்கூடிய குணமும் உண்டு. இவர்களது அதிகார குணம் மற்றவர்களுக்கு எவ்வளவுதான் உதவி செய்தாலும் போற்றுவதற்கு பதில் தூற்றுவற்குரியதாக இருக்கும்.  என்றாலும் இகழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் இவர்கள் அவ்வளவு எளிதில் மயங்கி விடுவதில்லை. இவர்களுக்கு 1,2,3 ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். 4,5,7 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் ஒத்தப்போகமுடியாது.

செவ்வாக்குரிய காலம்

மார்ச் மாதம் 21ம் தேதி முதல் ஏப்ரல்19ம் தேதி வரையிலும், அக்டோபர் மாதம் 23ம் தேதி முதல் நவம்பர் 21ம் தேதி வரையிலும்  செவ்வாயக்குரிய காலமாகும். இந்த எண்ணில் உள்ளவர்கள் இந்த தேதிகளுக்கு இடையே பிறந்தால் மிகவும்  அதிர்ஷ்ட சாலியாக இருப்பார்கள். இரவில் வலிமை கொண்டவன் செவ்வாய். செவ்வாய்க்குரிய நாள் செவ்வாய் கிழமையாகும். குறுகிய  கால அளவில் ஒருநாள் செவ்வாக்குரிய  காலமாகும். செவ்வாய் ஓரையில் இயந்திரங்கள், நெருப்பு சம்பந்தப்பட்ட காரியங்களை செய்யலாம். சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது.

செவ்வாய்க்குரிய திசை

செவ்வாய்க்குரிய திசை தெற்கு, சமையல் அறை, கசாப்பு கடை, போர்க்களம் போன்றவை செவ்வாயக்குரிய இடங்களாகும்.

செவ்வாய்க்குரிய கல்

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் அதிக்கத்திற்குரியவர்கள். ஆதலால் அவர்கள் அணிய வேண்டிய கல்  பவளமாகும். மிகச் சிறந்த பவளம் கிளியின் மூக்கு நிறத்தைப் போன்று இருக்கும். பவளத்திற்கு அடுத்து ப்ளட் ஸ்டோன் என்ற கல்லையும் அணிந்து கொள்ளலாம்.

பரிகாரம்

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் கொண்டவர்கள். ஆதலால் முருகப் பெருமானை வழிபாடு செய்வது மிகவும் உகந்ததாகும். சஷ்டி விரதங்களும் மேற்கொள்ளலாம். கந்த சஷ்டி கவசத்தை தினமும் படிப்பதால் நற்பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்டம் தருபவை

அதிர்ஷ்ட தேதி-9,18,27

அதிர்ஷ்ட நிறம் -சிவப்பு

அதிர்ஷ்ட திசை-தெற்கு

அதிர்ஷ்ட கிழமை -செவ்வாய்

அதிர்ஷ்ட கல்-பவளம்

அதிர்ஷ்ட தெய்வம் -முருகன்

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001 

Friday, January 20, 2012

எண் 8 (8, 17, 26)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


ஓவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்தன்மை இருப்பது போல 8 ம் எண்ணிற்கு உண்டு. அஷ்டவர்கங்கள், அஷ்ட லஷ்மிகள், அஷ்ட ஐஸ்வர்யங்கள், அஷ்டமா சித்திகள் என 8ம் எண்ணும் தெய்வ சக்தி வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கூட 8 வதாக அஷ்டமி திதியில் பிறந்தவர்தான். ஒவ்வொரு மாதமும் 8,17,26 ம் தேதிகளில் பிறந்தவர்கள் 8ம் எண்ணில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். 8ம் எண்ணுக்குரிய கிரகம் சனி பகவானாவார். எட்டாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் தி.றி ஆகும்.

குண நலன்கள்

எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். எப்பேர்பட்ட அவசரமான காரியமாக இருந்தாலும் மிகவும் நிதானமாகவே செய்வார்கள்.  நிதானமே இவர்களின் பிரதானமாக இருக்கும். தங்கள் கஷ்டங்களை பிறரிடம் சொல்லி உதவி கேட்க மாட்டார்கள். இவர்களும் தன்னால் முடிந்த உதவியை மட்டும் தான் பிறருக்கு செய்வார்கள். எதையும் எளிதில் கிரகித்து கொள்ளக்கூடிய ஆற்றல் இருக்கும்.  கடமையே பிரதானமாக கொண்ட இவர்களுக்கு வாழ்வில் எவ்வளவு சோதனைகள் நேர்ந்தாலும் வேதனையடைய மாட்டார்கள். எந்தக் காரியங்களை எடுத்துக் கொண்டாலும் இருவிதங்களில் ஆதாயம் அடையக்கூடிய ஆற்றல் இவர்களுக்கு உண்டு. எப்போதும் கவலை தோய்ந்த முகத்துடன் ஆழ்ந்தை சிந்தனை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் பேச்சில் அழுத்தம் திருத்தமும், நிதானமும், உறுதியும் இருக்கும்.

எதிலும் பிரதிபலன் பாராது உழைத்திடும் இவர்கள் தெய்வத்தை கூட உழைப்பிற்கு அடுத்தபடியாகத்தான் நினைப்பார்கள். நினைத்ததை விடாத பிடிவாததக்காரர் என்றாலும் வீண் பிடிவாதக்காரர் இல்லை.  வீண் பேச்சிலும், வெட்டிப் பேச்சிலும் ஈடுபட மாட்டார். பிறர் தம் மீது கொண்டுள்ள தவறான அபிப்ராயங்களுக்கு செவி சாய்க்க மாட்டார். சிரிக்க, சிரிக்க பேசும் சுபாவம் கொண்ட இவர்களுக்கு, மற்றவர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கக்கூடிய ஆற்றலும் உண்டு. எதையும் கூர்ந்து ஆராய்ந்து பார்ப்பவர். ஆதலால் எந்த காரியத்திலும் அதன் சாதகப் பலனை பார்த்த பின்தான் செயலில் ஈடுபடுவார்கள். மற்றவர்களின் குணாதிசயங்களை கூர்ந்து கவனிப்பதிலும், அவர்களை எடை போடுவதிலும் மிகவும் திறமை சாலிகள். நியாயம், அநியாயம் இவற்றை தெள்ளத் தெளிவாக யாராக இருந்தாலும் பயமின்றி எடுத்துரைப்பார்கள். சொன்ன சொல் தவறாத குணம் இருக்கும் பிறர் வாழ்க்கையில் எந்த வகையிலும் குறுக்கிடாத உயந்த பண்பும், லட்சியமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

உடல்நிலை ஆரோக்கியம்

எட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நடுத்தர உயரத்தை விட சற்றே குறைவான உயரம் இருக்கும். முட்டி எலும்புகள் எடுப்பான தோற்றம் அளித்து அழகாக இருக்கும். இவர்கள் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். ஆதலால் கருப்பான நிறமும், சற்று வயது முதிர்ந்தத் தோற்றமும் இருக்கும். நீண்ட கழுத்தும், பரபரப்பில்லாத நடையும், நெற்றியில் ஆழ்ந்த கோடுகளும் இருக்கும். முகத்தில் எப்பொழுதும் கவலை குடிகொண்டிருக்கும். நிதானமாக பேசினாலும் பேச்சில் உறுதி தொனிக்கும். இவர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அடிக்கடி உண்டாகிக்கொண்டே இருக்கும். வயிற்று வலி, வயிற்றுப் புண், மலச்சிக்கல், வாயுத் தொல்லை போன்றவைகள் உண்டாகும். தோல் சம்மந்தமான வியாதிகளும் ஏற்படும். மார்புச் சளியும், இவர்களுக்கு தொல்லை கொடுக்கும். எலும்பு சமபந்தப்பட்ட பிரச்சினைகளும் உண்டாகும்.

குடும்ப வாழ்க்கை

எட்டாம் எண்ணில் பிறந்தவர்களின் குடும்ப வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தின் மீது அதிக அக்கறை உடையவர்களாக இருப்பார்கள். காதல் விவகாரங்களில் ஈடுபட்டாலும் இவர்களுக்கு  அவ்வளவு எளிதில் வெற்றி கிடைப்பதில்லை. தன்னுடைய முயற்சி தவறு எனத் தெரிந்தவுடன் ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என நழுவி விடுவார்கள். வாழ்வில் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும். இவர்களுக்கு வாய்க்கும் வாழ்க்கை துணை மிகவும் சிக்கனமானவராகவும் எதிர்த்து பேசாத குணசாலியாகவும் இருப்பார். கணவன், மனைவி இருவரும் எப்போதும் இணைபிரியாது ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திரர்களால் மிகச் சிறப்பான அனுகூலம் இருக்கும். உடன் பிறப்புகளை மிகவும் அனுசரித்து செல்பவர்களாக இருப்பார்கள்.

பொருளாதாரம்

எட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு தேவைக்கேற்றபடி பணவசதியும் உண்டாகி கொண்டே இருக்கும். தங்களுடைய சுக வாழ்க்கைக்காக இவர்களது வருமானம் முழுவதும் செலவழியும். தாமே சுயமாக உழைத்து பூமி, வீடு, வாகனம் முதலியவற்றை அமைத்துக் கொள்வார்கள். கொடுக்கல், வாங்கலில் இவர்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும். தாராள மனப்போக்காலும், பிறருக்கு உதவி செய்ய நினைக்கும் பண்பாலும் கடன்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு. எவ்வளவு கடன்கள் ஏற்பட்டாலும் அவற்றைக் குறித்த நேரத்தில் அடைக்கும் ஆற்றலும் உண்டு. கொடுத்த வாக்குறுதியை  காப்பாற்ற தவறமாட்டார்கள். சேமிப்பு என்பது இவர்களுக்கு குறைவாகவே இருக்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை மேல் அலாதி விருப்பம் உடையவராக இருப்பார்கள்.

தொழில்

எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் மிக கடினமான வேலைகளையும் மிக எளிதில் செய்து முடிப்பார்கள். இவர்களுக்கு இரும்பு சம்பந்தமான தொழில்கள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். குறிப்பாக இரும்பு உருக்குதல், அச்சு வார்த்தல், பாத்திரங்கள் செய்தல், இயந்திரங்கள் செய்தல், இயந்திரங்கள் பழுது பார்க்கும் பணிகள்  போன்றவைகள் இவர்களுக்கு ஏற்றது. பெரிய கரும்பாலைகள், எண்ணெய் எடுக்கும் செக்கு போன்றவை ஏற்றம் தரும். நீதிபதிகள், வக்கீல்கள், இராணுவ அதிகாரிகள், இரயில்வே அதிகாரிகள் போன்ற துறைகளும் 8ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு அமையும். சிலருக்கு விவசாயப் பணி, நிலபுலன்கள், பெரிய காண்டிராக்டர்கள் போன்ற  துறைகளும் முன்னேற்றம் கொடுக்கும். அடிமைத் தொழில்கள் சிலருக்கு அமைந்தாலும் படிப்படியாக முன்னேறி விடுவார்கள்.

நண்பர்களும் பகைவர்களும்

எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கலகலப்பாக பேசி பிறரை சிரிக்க வைக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள் என்றாலும் திடீரென்று கோபம் கொள்வார்கள். இவர்களுக்கு எப்பொழுது கோபம் வரும் என்று கூறமுடியாது. தான் பிடித்த முயலுக்கு முன்றே கால் என பிடிவாதம் பிடிக்கும் இவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பதற்கு 4,5,6,7 போன்ற எண்ணில் பிறந்தவர்களே தகுதியானவர்கள் 1,2,9 ம் எண்ணில் பிறந்தவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.

சனிக்குரிய காலம்

டிசம்பர் மாதம் 22ம் தேதி முதல் பிப்ரவரி 18 ம் தேதி வரையிலான காலம் சனிக்குரியது. சனி இரவில் பலமுடையவன். சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்ததாகும். குறுகிய  கால அளவில் ஓர் ஆண்டு காலம் சனிக்குரியது.

சனிக்குரிய திசை

தெற்கு அல்லது தென் கிழக்கு சனிக்குரிய திசையாகும். எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் இந்த திசைகளில் எந்த பணிகளைத் துவங்கினாலும் வெற்றி கிட்டும். குகைகள், சுடுகாடுகள், சுரங்கங்கள், பழைய பாழடைந்த வீடுகள், பாலைவனங்கள் போன்ற  யாவும் சனிக்குரிய பிரதேசங்களாகும்.

சனிக்குரிய கல்

சனிக்குரிய கல் நீலம். நிறத்தின் பெயராலேயே இக்கல் நீலம் என்றழைக்கப்படுகிறது. எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் மட்டும்தான் நீல நிறக் கல்லை அணிய வேண்டும். அதிலும் மிக ஆழ்ந்த நீலநிறக் கல்லை அணியக்கூடாது. சனியால் பாதிக்கப்பட்டவர்கள் அக்காலங்களில் மட்டும் நீலக்கல்லை அணிந்து கொள்ளலாம். நீலகற்களுக்கு பதிலாக அக்கோமரின் கற்களையும் பயன்படுத்தலாம். சனியால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் இக்கல்லை அணியக்கூடாது.

பரிகாரம்

எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் கலந்த நல்லெண்ணெயில் தீபமேற்றி நீலநிற சங்கு பூக்களால் அலங்கரித்து கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்வது நல்லது. சனி ப்ரீதி ஆஞ்சநேயரையும் வழிபடலாம். தினமும் காக்கைக்கு அன்னம் வைப்பது நல்லது. ஏழை, எளியவர்களுக்கும் தம்மால் இயன்ற உதவிகளை செய்யலாம். இதனால் சனியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும்.

அதிர்ஷ்டம் தருபவை

அதிர்ஷ்ட தேதி - 8,17,26

அதிர்ஷ்ட நிறம்-கருப்பு, நீலம்.

அதிர்ஷ்ட திசை-தெற்கு

அதிர்ஷ்ட கிழமை- சனி, புதன்

அதிர்ஷ்ட கல் - நீலம்

அதிர்ஷ்ட தெய்வம்-ஐயப்பன்

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001 

Thursday, January 19, 2012

எண் 7 (7, 16,25)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்



7 என்ற எண்ணும் மனித வாழ்வில் பெருமை மிகுந்ததாகவே கருதப்படுகிறது.. வானவில்லின் வண்ணங்கள் ஏழு, கடல்கள் ஏழு, ஏழு ரிஷிகள், வாரத்தின் கிழமைகள் ஏழு என ஏழாம் எண்ணும் பல சிறப்புகளைப் பெற்று விளங்குகிறது. 7,16,25 எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் ஆவார்கள். ஏழாம் எண்ணுக்குரிய கிரகம் கேதுவாகும். ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு சந்திரனின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களின் குண நலன்களும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏழாம் எண்ணிற்குரிய ஆங்கில எழுத்துக்கள் ளி. ஞீ  ஆகியவை.

குணநலன்கள்

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் சிந்தனை, செயல்பாடு, அணுகுமுறையாவும் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும். தான் பிறர் வழியில் செல்லாது தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொள்வது இவர்களின் நோக்கமாகும்.  இவர்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ளமுடியாது. தெய்வ பக்தியும், இறை வழிபாடுகளிலும் அதிக நாட்டம் இருக்கும். நல்லதோ கெட்டதோ பிறருக்காக தம்மை மாற்றிக்கொள்ளமாட்டார்கள். சில நேரங்களில் கலகலப்பாக மற்றவரை சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட இவர்கள், சில நேரங்களில் அதிக மௌனத்தை சாதிப்பார்கள்.  தன்னம்பிக்கையும் துணிச்சலும் பெற்றவர்களாக இருந்தாலும், ஒருவித அச்சம் மனதில் நிறைந்திருக்கும். பல்வேறு விதமான வாய்ப்புகள் வாழ்வில் முன்னேறுவதற்கு கிடைத்தாலும், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என பிடிவாத குணத்துடன் தன் வழியிலே செல்வார்கள். இதனால் வாழ்வில் பல சமயங்களில் சங்கடமான சூழ்நிலைகளையே சந்திக்க நேரிடும். கலைத் துறை, இசைத்துறை போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். வாழ்வில் பல்வேறு சாதனைகளை செய்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பொது காரியங்களில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. வாழ்க்கையில் எப்போதுமே சுகத்தை அனுபவிக்க துடிப்பவர்கள். இவர்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ள நேரம் கிடைப்பது அரிது. கற்பனை சக்தி அதிகம் பெற்றவர்கள். ஆதலால் சின்ன விஷயங்களுக்கு கூட  அதிகம் கவலைப்படுவார்கள். எந்தவொரு காரித்திலும் ஈடுபடுவதற்கு முன்னாலும் தீர ஆலோசித்த பின்தான் ஒரு முடிவுக்கு வருவார்கள். வெகுளித்தனம் படைத்தவர்களாயினும் முக்கிய கருத்துக்களை மறைத்து வைத்துக் கொள்வார்கள். கைமாறு எதிர்பாராமல் பிறருக்காக பல அரிய காரியங்களில் ஈடுபட்டு பலரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் காப்பாற்றுவார்கள்.

உடல்நிலை ஆரோக்கியம்

ஏழாம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நடுத்தர உயரம் கொண்டவர்களாக இருப்பார்கள். இளம் வயதில் மிகவும் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் நடு வயதில் நல்ல சதைபிடிப்பு உண்டாகும். உடல் அமைப்பும் மற்றவர்களை கவர்ந்திழுப்பதாக இருக்கும். கூர்மையான மூக்கு, கெட்டியான பாதங்கள், வட்டமான முகமும், மாநிறமும், குவிந்த உதடுகளும் இருக்கும். மெல்லிய குரலில் பேசினாலும் பேச்சில் உறுதி இருக்கும் நடையில் வேகமும், குறுகுறுப்பான பார்வையும் இருக்கும். இவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். வாய்வு சம்மந்தப்பட்ட நோய், மலசிக்கல்கள், சுவாச நோய்கள், காச நோய் போன்ற பாதிப்புகளும் உண்டாகும். எந்த நோய் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் உண்டாகாமல் குணமாகாது. தேவையற்ற பழக்க வழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பது உடல் நலத்திற்கு நல்லது.

குடும்ப வாழ்க்கை

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்வு அவ்வளவு திருப்தியளிக்கும் என்று கூறமுடியாது. வாழ்வில் சுக துக்கங்கள் மாறி மாறி வரினும் எதையும் பொருட்படுத்த மாட்டார்கள். அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக இவர்கள் செய்யும் முயற்சிகள் ஓரளவுக்கு பயன் அளிக்கத்தான் செய்யும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்கள். ஆதலால் குடும்ப சுகத்திற்காக அவ்வளவு ஈடுபாட்டுடன் செயல்பட மாட்டார்கள். உற்றார், உறவினர்களாலும், உடன் பிறந்தவர்களாலும் ஓரளவுக்கே அனுகூலப் பலன்கள் உண்டாகும்.  தாய், தந்தையரால் அவ்வளவு நற்பலன்கள் உண்டாகாது. என்றாலும் தாயின் ஆதரவும் ஆசியும் எப்போதும் உண்டு.  இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் யோகசாலிகள் என்றே கூற வேண்டும். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் வாழ்க்கை துணையால் அனுகூலம் உண்டாகும்.

பொருளாதாரம்

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை வசதி குறைந்து காணப்பட்டாலும், இவர்கள் வளர வளர பொருளாதார நிலையும் வளர்ந்து கொண்டே இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் இவர்களுக்கு கிடைப்பது அரிது. எதிலும் எதிர்நீச்சல் போட்டுதான் முன்னேற முடியும். இவர்களுக்கு கடன் வாங்குவதென்பது பிடிக்காத விஷயம்.  கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அவற்றை அடைக்கக்கூடிய ஆற்றலும் கொண்டவர்கள். பொருளாதார நிலையில் சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் இது விதியின் பயன் என கருதாமல் முன்னேற்றத்திற்கான வழிகளை கண்டு பிடித்து மேன்மையடைவர். நிலையான வருமானம் இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் எப்படியாவது சமாளித்து விடுவார்கள். பூர்விக வழியில் ஓரளவுக்கு செல்வம், செல்வாக்கு வந்து சேரும்.

தொழில்

ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் பல துறைகளில் பிரசித்தி அடைவார்கள். 7ம் எண்ணிற்கு ஞானக்காரகன் கேது அதிபதி  என்பதால், பல புதிய சிந்தனைகளால் புதிய கண்டுபிடிப்புகளை செய்வார்கள். திரைப்படத் துறைகளிலும் முன்னேற்றம் பெறுவார்கள். ஜலத் தொடர்புடைய தொழில்கள், படகு, கப்பல் மூலமாக வியாபாரங்கள், தண்ணீரில் மீன் பிடிக்கும் தொழிலில் கூட மேன்மைகள் உண்டாகும். மத சம்பந்தமான தத்துவ பேச்சாளர்களாகவும் விளங்குவார்கள். கடல் வழியில் ஏற்றுமதி இறக்குமதி போன்ற துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம் அமையும். உத்தியோகத்துறையில் அவ்வளவு உயரிய பயணிகள் கிடைக்காது. சமையல் வேலை, வீட்டு வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள். ரசாயன ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட துறைகளும் இவர்களுக்கு ஏற்றதே.

நண்பர்கள், பகைவர்கள்

ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் சற்று குழப்பமான மனநிலையை உடையவர்களாக இருப்பார்கள். பிடிவாத மான குணம் இருக்கும். 8,5 ம் எண்ணில் பிறந்தவர்கள் அவர்களை அனுசரித்து செல்லும் குணமுடையவர்களாக இருப்பார்கள். 1,2,9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் அனுசரித்து செல்வது கடினமான காரியம்.

கேதுவுக்குரிய காலம்

கேதுவும் சந்திரனைப் போலவே ஆற்றல் கொண்டவர் என்பதால் கேதுவுக்கும் திங்கட்கிழமையே உகந்த நாளாக உள்ளது. கேதுவுக்கு ஒரு மணி நேரமே குறுகிய கால அளவு ஆகும்.

கேதுவுக்குரிய திசை

வடமேற்கு திசை கேதுவுக்குரியது. ஜல சம்பந்தப்பட்ட இடங்கள் கேதுவுக்கு உரியவை.

கேதுவுக்குரிய கல்

கேதுவுக்குரிய கல் வைடூரியம், லேசான பச்சையும், பழுப்பும் கலந்த மஞ்சள் நிறமும் உடையது வைடூரியம். இந்த இரண்டு நிறமும் ஒரே கல்லில் காணப்படுகிறது.  எனவே இது பார்ப்பதற்கு பூனை கண் போன்று இருப்பதால் கேட் ஐ என்றும் அழைக்கின்றனர். இதற்கு மாற்றாக ஒப்பல் என்ற கல்லையும் அணியலாம். வைடூரியம் மிகவும் தெய்வீக தன்மை வாய்ந்ததால் இதற்கு எந்த தீட்டும் படாமல் பாதுகாத்து அணிந்து கொள்வதன் மூலம் வாழ்வில் பல நன்மைகள் உண்டாகும்.

பரிகாரம்

கேது பகவானுக்கு பரிகாரம் செய்வது, சர்ப சாந்தி செய்வது நல்லது. கணபதியை தினமும் வழிபாடு செய்வது, சதுர்த்தி விரதங்கள் மேற்கொள்வது, கணபதி ஸ்தோத்திரம் சொல்வது மூலம் செல்வம், செல்வாக்கு பெருகும். 

அதிர்ஷ்டம் தருபவை

அதிர்ஷ்ட தேதி - 7,16,25

அதிர்ஷ்ட நிறம்- வெள்ளை, காவி

அதிர்ஷ்ட திசை-வடமேற்கு

அதிர்ஷ்ட கிழமை -திங்கள்

அதிர்ஷ்ட கல் -வைடூரியம்

அதிர்ஷ்ட தெய்வம்-கணபதி

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001 

Wednesday, January 18, 2012

எண் 6 (6,15,24) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


மனிதர்கள் அறுசுவை உணவு என ஆறு வகையான சுவைகளை உண்ணுகிறார்கள். சுவையையும் உணர்கிறார்கள். ஆறு வகையான சாஸ்திரங்களும் உள்ளன. முருகப்பெருமானின் ஆறுமுகங்களும் ஆறு வகையான தத்துவங்களை சூட்சும முறையில் உணர்த்துகின்றன. அதுபோல 6 என்ற எண்ணும் மனித வாழ்வில் சிறந்த முறையில் செல்வாக்கினை பெற்றதாக திகழ்கிறது. 6,15,24 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்திற்குரியவர்கள். 6ம் எண்ணுக்குரிய கிரகம் சுக்கிரனாவார். சுக்கிரனை வெள்ளி என்றும் அழைப்பார்கள். வாரத்தில் 6ம் நாளாக வெள்ளிக்கிழமை வரும்.  வெள்ளிக்கிழமை வாரத்தின் சிறந்த நாளாக கருதப்படுகிறது. 6ம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள்  ஹி.க்ஷி.கீ  ஆகியவைகள் ஆகும்.

குண நலன்கள்

நேர்மையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். பிறருக்கு உதவி செய்வதில் வல்லவர்கள். தன்னலம் கருதாமல் விட்டுக் கொடுப்பார்கள். மிகவும் பொறுமைசாலிகளாக இருந்தாலும் சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு. தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைப்படாதவர்கள் என்பதால் இவர்கள் எளிதில்  உணர்ச்சி வசப்படுவதில்லை. மிகவும் பொறுமைசாலிகள். ஆதலால் அதிக சகிப்பு தன்மையும் உண்டு. சிந்தனா சக்தியிலும், செயலாற்றுவதிலும் நிதானமாக செயல்பட்டாலும் தன்னம்பிக்கையும் அசட்டு தைரியமும் மேலோங்கி இருக்கும். எதிலும் சாதுர்யமாகப் பேசி பிறரை தம் வசப்படுத்திக் கொள்வார்கள்.
ஆனால், சில நேரங்களில் மற்றவரின் மனதை புண்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு சொல் என்றாலும் மறக்க முடியாத அளவிற்கு பேசி விடுவார்கள். கேலியும், கிண்டலும் நையாண்டித் தனமும் அதிகம் இருக்கும். குதர்க்கமாகவும், பரிகாசமாகவும் பேசி எதிரிகளை அவமானப்படுத்தி விடுவதில் சாமர்த்திய சாலிகள். பிடிவாத குணம் படைத்த இவர்கள் பிறருக்கு அடிபணிவதென்பது இயலாத காரியம். இவரிடம் எவ்வளவு குறைகள் இருந்தாலும் அதை மறைத்து மற்றவர்களின் குறைகளை அம்பலமாக்கி விடுவார்கள்.  தனக்கு நெருங்கியவர்கள் நெறி தவறும் போது இவருடைய மனநிலை இவரின் கண்களில் தெரியும். நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள். எந்த காரியத்திலும் லாப நஷ்டத்தை ஆராய்ந்து பார்த்த பின்தான் செயலில் இறங்குவார்கள். தனக்கு மிஞ்சியதைத்தான் பிறருக்கு தானமாக கொடுப்பார்கள். சமூக நல்லப்பணிகளிலும் ஆர்வம் இருக்கும்.

உடல் நிலை, ஆரோக்கியம்

ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் குள்ளமானவர்களாக இருப்பார்கள். உடல் குண்டாக இருக்கும். கருணை நிறைந்த கண்ஙகளைக் கொண்டிருப்பார்கள். எப்பொழுதும் தம்மை அழகாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் உடையவர்கள். ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் சுக்கிரன் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் குளிர்ச்சியான உடலை பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற நோய்களும், இருதய சம்பந்தமான வியாதிகளும், சுவாசம் சம்பந்தமான நோய்களும் உண்டாகும். சர்க்கரை நோய் அதிகம் பேருக்கு ஏற்படும். மர்ம பிரதேசங்களில் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.

குடும்ப வாழ்க்கை

ஆறாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை திருப்தியளிப்பதாகவே அமையும். பெரும்பாலானவர்கள் காதல் விஷயங்களில் வெற்றி பெற்று தன் மனதிற்கு பிடித்தவரையே வாழ்க்கை துணையாக அடைவர். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.

பொருளாதாரம்

ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் ஆடை, ஆபரணங்களுக்காகவும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவும் நிறைய செலவு செய்வார்கள். சிலர் பிறவியிலேயே செல்வந்தராக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நடுத்தர வர்க்கம் என்றால் பொருளாதார நிலை பற்றாக்குறையாகவே இருக்கும். எப்பாடுபட்டாவது தம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவிற்கு சம்பாதிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும்.

நண்பர்கள், பகைவர்கள்

ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் புதிதாக பழகுவதற்கு சற்று சங்கோஷப்படுபவர்களாக இருந்தாலும், பழகிய பின் இனிமையானவர்களாக இருப்பார்கள். தனக்கு பிடிக்காதவர்களை சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல ஓட ஓட விரட்டுவார்கள். 4,5,7,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் நட்புடன் பழக முடியும். 1,2 ம் எண்ணில் பிறந்தவர்களிடமிருந்து சற்று விலகி இருப்பதே நல்லது.

சுக்கிரனுக்குரிய காலம்

ஏப்ரல் மாதம் 20ந் தேதி முதல் மே மாதம் 20ம் தேதி வரையிலும், செப்டம்பர் 22 ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 22ம் தேதி வரையிலும் உள்ள காலங்கள் சுக்கிரனுக்குரிய காலங்கள் ஆகும்.

தொழில்

ஆறாம் எண்ணிற்குரியவர் சுக்கிரனின் ஆதிக்கத்தை பெற்றவர்கள் என்பதால் கலைத்துறை சம்மந்தமானவற்றில் முன்னேற்றமடைவார்கள். சினிமா, சங்கீதம், இசை, நாட்டியம், நாடகம் போன்றவற்றில் பிரகாசம் உண்டாகும். அரசாங்க பணிகளில் உயர் பதவிகள் அமையும். ஓவியம் வரைதல், கவிதைகள், பாடல்கள் எழுதுதல் போன்றவற்றில் புகழும், கௌரவமும் கிடைக்கும். பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய அழகு சாதனப் பொருட்கள்,  பெண்கள் அணியும் ஆடைகள், பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் போன்றவற்றிலும் நல்ல லாபம் அமையும். வாசனை திரவியங்களை வியாபாரம் செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும்.

சுக்கிரனின் திசை

மேற்கு திசையும், தென் மேற்கு திசையும், சுக்கிரனுக்குரிய திசைகள் ஆகும். படுக்கை அறைகள், அழகிய வீடுகள், பயிடும் நிலங்கள் யாவும் சுக்கிரனுக்குரியவை. ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் இந்த திசை நோக்கி பயணம் செய்தபின் புதிய சுபகாரிய முயற்சிகள் மேற்கொள்வது உத்தமம்.

அதிர்ஷ்டக்கல்

ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் என்பதால் வைரக்கல்லை அணிவது மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். வைரத்தை வாங்க முடியாதவர்கள் ஜிர்கான கற்களும் வைரத்தை போலவே குணநலன்களை கொண்டதாகும்.

பரிகாரம்

ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் லஷ்மி தேவியை வழிபாடு செய்வது, லஷ்மி பூஜை செய்வது உத்தமம். வெள்ளிக்கிழமை  தோறும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் தருபவை

அதிர்ஷ்ட தேதி - 6,15,24,9,18,27

அதிர்ஷ்ட நிறம் - வெளிர்நீலம்

அதிர்ஷ்ட திசை- தெற்கு

அதிர்ஷ்ட கிழமை-வெள்ளி

அதிர்ஷ்ட கல்- வைரம்

அதிர்ஷ்ட தெய்வம் - ஸ்ரீலட்சுமி

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001 

Tuesday, January 17, 2012

எண் 5 (5, 14, 23) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


ஒரு ஜாதகத்தை கணிப்பதென்றால் கூட திதி, வாரம், யோகம், கரணம், நட்சத்திரம் பார்க்க பஞ்சாங்கம் தேவைப்படுகிறது. பஞ்ச என்பது 5 ஐ குறிக்கும். மனித வாழ்க்கை ஆகாயம், பூமி, நீர், நெருப்பு, காற்று என்னும் பஞ்ச பூதங்களுக்குள் அடங்கியுள்ளது. அது மட்டுமின்றி தமிழ் இலக்கியங்களில் ஐம்பால்களான ஆண்பால், பெண் பால், பலர் பால், பலவின்பால், ஒன்றன் பால் போன்றவை ஐந்து வகையாகத்தான் அமைந்துள்ளன. நாம் பூமியின் வகைகளைக்கூட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான கத்தான் பிரித்துள்ளோம். வீட்டில் ஏற்றக்கூடிய குத்து விளக்கில் கூட இந்து முகங்கள் உள்ளதை நாம் அறிவோம். எனவே ஐந்து என்ற எண்ணும் நம் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ள சிறப்பான எண்ணாகும். 5, 14, 23 ம் தேதிகளில் பிறந்தவர்கள் 5ம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாக உள்ளார்கள்.  ஐந்தாம் எண்ணுக்குரிய கிரகம் புதன் பகவானாவார். ஐந்தாம் எண்ணிற்குரிய ஆங்கில எழுத்துக்கள் E,H,N,Xஆகும்.

குண அமைப்பு

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால்  நடக்கப் போவதைக்கூட முன் கூட்டியே அறியக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள். வெளித் தோற்றத்திற்கு வெகுளியாக காட்சியளிக்கும் இவர்கள் மிகுந்த காரியவாதிகள். பிடிக்காதவர்களின் தொடர்பை உடனே  அறுத்தெறிவார்கள். இவர்களின் பேச்சில் கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கும். மற்றவர்களுக்கு துன்பம் நேர்ந்தால் மனதிற்குள் சந்தோஷப்படுவார்கள். எதையும் அவசர அவசரமாக செய்து முடிப்பார்கள். சிரிக்க சிரிக்கப் பேசி தன்னுடைய காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். இவர்களுக்குத் தனிமை பிடிக்காது. சமூக வாழ்வில் ஈடுபட்டு தனக்கென ஒரு அந்தஸ்தை உருவாக்கிக் கொள்வார்கள். அறிவும் சாமர்த்தியம் அதிகம் இருந்தாலும் ஆழ் மனதில் ஏதோ ஒரு பயமும், சந்தேகமும் குடி கொண்டிருக்கும். இவரது பேச்சுத் திறமை பிறரை ரசிக்கும்படி வைக்கும். புத்தி கூர்மையும், அறிவாற்றலும் நிறைந்திருப்பதால் எந்தப் பிரச்சினைகளிலும் மாட்டிக் கொள்ளலாமல் நழுவி விடுவார்கள். அனுபவமும் அறிவாற்றலும் நிறைய உடையவர்கள் என்றாலும், தங்களுடைய குண அமைப்புகளை நேரத்திற்கேற்றார் போல் மாற்றிக்கொள்வார்கள். எந்த விதமான கடின வேலைகளை எடுத்துக் கொண்டாலும், அதை பொறுப்போடு தவறுதலின்றி செய்து முடிப்பார்கள். முடிந்தவரை கடினமான பணிகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எதிர்பாராத திடீர் உயர்வுகளும் இவர்களுக்கு உண்டாவதுண்டு.

உடலமைப்பும், ஆரோக்கியமும்

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரமும், அழகான முக அமைப்பும் கொண்டிருப்பார்கள். கண்களில் ஒருவிதமான கவர்ச்சி இருக்கும். வேகமாக நடப்பார்கள். பேச்சில் இனிமை இருக்கும். இவர்கள் அதிகமாக சிந்தனை செய்வதால் நரம்பு பலவீனம் அடைந்து நரம்பு தளர்ச்சி நோய் உண்டாகும். தலைவலி, உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.  சரியான ஓய்வு இல்லாமல் தூக்கமின்மை, முதுகு வலி, கை, கால் வலி, உடல் வலி போன்றவை உண்டாகும். வாயுத் தொல்லையும் இருக்கும் சரியான நேரத்திற்கு சாப்பிடாததால் குடல் புண்ணும் ஏற்படும். நன்றாக ஓய்வெடுப்பதும், உணவு பழக்க வழக்கத்தில் சரியான முறையைக் கடைப்பிடிப்பதும் நல்லது.

குடும்ப வாழ்க்கை

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை என்பது திருப்தி அளிப்பதாகவே இருக்கும். கூட்டுக் குடும்பமாக இருந்தாலும், தனிக் குடும்பமாக இருந்தாலும் வரக்கூடிய வாழ்க்கையை அனுசரித்து நடப்பவராக இருப்பார். நல்ல அறிவாற்றலும், கல்வித் தகுதியும் உடையவராக இருப்பார். சிறுசிறு பிரச்சினைகளால் கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது தோன்றி மறையும். இவர்கள் சுகமாக வாழ்க்கை வாழ்வதையே விரும்புவார்கள். விருப்பத்திற்கேற்ற வாழ்க்கையே இவர்களுக்கு அமையும். கிடைக்காதவற்றிற்கு ஏங்காமல், இருப்பதை வைத்து திருப்தியுடன் வாழ்வர்கள் உடன்பிறந்தவர்களின் ஆதரவும் திருப்தியளிப்பதாக இருக்கும். உற்றால், உறவினர்களின் ஒத்துழைப்பு இவர்களுக்கு தடையின்றி கிடைக்கும்.

பொருளாதாரம்

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு போது மென்கிற அளவிற்கு பொருளாதார நிலை திருப்தியளிப்பதாக இருக்கும். பகட்டான செல்வாக்கு நிறைந்த வாழ்க்கை அமையும்.  ஓய்வு நேரங்களிலும் உடலுழைக்காமல் மூளையை பயன்படுத்தி  ஏதோ, ஒரு வழியில் சம்பாதிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். ஆதலால் பணவரவுகள் திருப்திகரமாகவே இருக்கும். சேமிப்பும் ஓரளவுக்கு சிறப்பாக அமையும். பெரிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது மிகவும் உத்தமம்.

தொழில்

ஐந்தாம் எண் அறிவு சம்பந்தமான எண் என்பதால் அறிவுப் பூர்வமான பணிகளும், எதையும் புதிதாக கண்டு பிடிப்பதில் ஆர்வமும் அதிகமிருக்கும். வங்கி கணக்கர் தொழில், ஆடிட்டர் தொழில், கணிப்பொறி சம்பந்தப்பட்ட துறைகளில் சாதனை செய்யக்கூடிய அமைப்பு என இது போன்றவற்றில் உயர்வு கிட்டும். ஜோதிடம், வானவியல், காண்ட்ராக்ட் தொழில்,  எழுத்து துறை, பத்திரிகை, புத்தகம் வெளியிடுதல் போன்றவற்றிலும் நல்ல முன்னேற்றம் கிட்டும். கலைத்துறை, இசைத்துறையிலும் உயர்வு ஏற்படும். உடல் உழைப்பு இவர்களால் முடியாத காரியமாகும். அறிவு பலத்தால் எதையும் சாதிப்பார்கள்.

நண்பர்கள், பகைவர்கள்

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் சிரிக்க சிரிக்க  பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள் என்பத£ல், இவர்களுக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம் இருக்கும். இவரின் நகைச்சுவையுணர்வால் பலரை கவர்ந்திழுப்பர். 1 மற்றும் 6ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நெருங்கிய  நண்பர்களாக இருப்பார்கள். 2ம் எண்ணைத் தவிர மற்ற எண்ணில் பிறந்தவர்களும் நட்பாகவே அமைவார்கள்.

புதனுக்குரிய காலம்

ஒவ்வொரு ஆண்டிலும் மே மாதம் 21 ம் தேதி முதல் ஜுன் மாதம் 22ம் தேதி வரையிலும், ஆகஸ்டு மாதம் 23ம் தேதி முதல் செப்டம்பர் 22ம் தேதி வரையிலான காலமும் புதனுக்குரியது. புதன் கிழமை புதனுக்குரியது.

புதனுக்குரிய திசை

வடக்கு திசை புதனுக்குரியது. மலைகள், கல்வி நிலையங்கள், விளையாடும் இடங்கள், வாசக சாலைகள் யாவும் புதனுக்குரியவை. ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் வடக்கு முகமாக எந்த காரியங்களைத் தொடங்கினாலும் வெற்றி கிட்டும்.

அதிர்ஷ்ட கல்

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் என்பதால் மரகதப் பச்சை என்ற கல்லை அணிய வேண்டும். இதனால் நோய்கள் நீங்கும் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். செய்யும் தொழிலில் வெற்றியும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். நரம்பு பலவீனப்பட்டவர்களுக்கு நலம் கிட்டும்.

பரிகாரம்

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் ஸ்ரீவிஷ்ணு பகவானை வழிபடுதல் நல்லது. புதனுக்கு பரிகாரம் செய்வதும்  உத்தமம்.

அதிர்ஷ்டம் தருபவை

அதிர்ஷ்ட தேதி-5,14,23,6,15,24

அதிர்ஷ்ட நிறம்- சாம்பல், வெளிர் நீலம், வெளிர் பச்சை

அதிர்ஷ்ட திசை -வடக்கு

அதிர்ஷ்ட கல் -வைரம், மரகதப் பச்சை

அதிர்ஷ்ட தெய்வம் -ஸ்ரீவிஷ்ணு

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001 


Monday, January 16, 2012

எண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

எண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு வேதங்கள், நான்கு உபாயங்கள் என  நான்காம் எண்ணுக்கு தனித்தன்மைகளும் உண்டு. 4,13,22, 31 ம் தேதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணுக்குரியவர்களாகிறார்கள். நான்காம் எண்ணின் கிரகம் ராகுவாகும். நான்காம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் D,M,T ஆகியவை. ராகு ஒரு சாயாகிரகமாகும்.

குண அமைப்பு

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் அதிக பிடிவாத குணம் இருக்கும். அடக்கமாகவோ, விட்டுக் கொடுக்கும் பண்பாகவோ பேசத் தெரியாது. எப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுவார்கள். அழுத்தம் திருத்தமாகவும் திட்ட வட்டமாகவும் இவர்களின் பேச்சு அமையும். பிறருடைய அந்தஸ்தையோ, வளத்தைய«£, செல்வத்தையோ, பின்னால் இருக்கும் பலத்தையே பற்றி சற்றும் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக கூறக்கூடிய இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லா இடங்களிலும் தங்கள் கருத்துக்களையே நிலை நிறுத்த முயற்சிப்பார்களே தவிர பிறருடைய கருத்தை செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள். சண்டை போடுவது போல எப்பொழுதும் குரல் உச்ச ஸ்தானியில் ஒலிக்கும். எவ்வளவுதான் நல்ல பயன்கள் இருந்தாலும் பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மனதில் பட்டதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒளிவு மறைவற்ற இவர்களின் அதிகாரமான பேச்சால் பல இன்னல்கள் சந்திக்க நேரிடும்.

இவர்களை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இவர்களை அனுசரித்துச் செல்ல முடியும். இந்த உலகத்தில் தனக்கு தெரியாத விஷயங்கள் இல்லை என்ற ஆணவம் அதிகம் இருக்கும். புகழிலோ, பொருளிலோ அவ்வளவு ஆசை இருக்காது. எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். பொதுவாகவே இவர்கள் எதிலும் சட்டென உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். பொது நல காரியங்களுக்காக தம் உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள். காதல் விவகாரங்களில் ஈடுபடுபவதும் உண்டு.  அதில் முழு வெற்றி கிடைக்கும் என்று கூறி விட முடியாது. எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் ஒரு தீவிரவாதியாக செயல்படுவார்கள். திடீர் அதிர்ஷ்டங்களைக் காட்டிலும் உழைத்து முன்னேறுவதிலேயே  அதிக விருப்பம் கொண்டவர்கள். சிலர் நடுத்தர வயதுக்கு மேல் ஞானிகள், துறவிகள் போல மாறி விடுவதும் உண்டு. எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராயந்த பிறகே முடிவெடிப்பார்கள்.

உடலமைப்பும், ஆரோக்கியமும்

நான்காம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சற்று தடித்த உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தர உயரமும், வட்ட வடிவமான முகத்தோற்றமும் இருக்கும். இவர்களுக்கு எப்பொழுதும் ஏதாவது உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். கருப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருப்பார்கள். இவர்களுடைய கால்கள் உடலுக்கு கேற்றபடி இல்லாமல் குறுகலாக இருக்கும். மற்றவர்கள் ஒருமுறை பார்த்தவுடன் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய உருவ அமைப்பைப் பெற்றிருப்பார்கள். இவர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பதால் உடல் சோர்வு முதுகு தண்டு வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். மன உளைச்சல் அதிகம் இருக்கும். தேவையற்றவைகளுக்கெல்லாம் குழப்பிக் கொள்வார்கள். காரசாரமான பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு சம்பந்தமான வியாதிகளும், வாயுத் தொல்லைகளும் உண்டாகும். சிறுநீரகக் கோளாறு, வறட்டு இருமல், சளி, சுவாச கோளாறு போன்றவைகளால்  அடிக்கடி பாதிப்பு உண்டாகும்.

குடும்ப வாழ்க்கை

நான்காம் எண்ணுரிக்குரியவர்கள் குடும்ப வாழ்க்கை ரீதியாக அதிர்ஷ்ட சாலிகள் என்றே  கூறலாம். ஏனெனில் இவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்று விடக்கூடிய சூழ்நிலைகள் மிக அதிகம். இதனால் இவர்களுக்கு குடும்பத்தை நடத்தக்கூடிய பொறுப்பு வந்து விடுகிறது. அதற்கேற்றால் போல இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் அமைதியுடனும், தெய்வ பக்தியுடனும் அமைந்து விடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் பிரச்சினைகள் வருவதென்பது மிகவும் அரிதாகும். கெட்ட பழக்க வழக்கங்களுக்கு எளிதில் அடிபணிபவராக இருப்பார். எதிலும் கவனமுடன் நடந்து கொண்டால் இவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றவர்கள் பின்பற்றக்கூடியதாக இருக்கும்.

பொருளாதாரம்

நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பணம் எப்போதுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும் என்றாலும் இவர்கள் செய்யும் செலவு வீண் செலவாக இருக்காது. தாராள மனம் கொண்டவர்கள் என்பதால் யாராவது கஷ்டத்தை சொல்லி உதவி கேட்டால் கையில் இருப்பதை கொடுத்து விடுவார்கள். சொந்த செலவுக்காக திண்டாட வேண்டியிருக்கும் என்றாலும் எதையும் துணிவுடன் சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.

தொழில்

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் அதிக அக்கறையும் கவனமும் கொண்டிருப்பார்கள். நாம் நன்றாக இருக்கிறோமோ இல்லையோ மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்படுவார்கள். அரசாங்க உத்தியோகத்திலும் பெரிய அதிகாரிகளாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும் பலர் அடிமைத் தொழில் செய்பவர் களாகவே இருப்பார்கள். ஹாஸ்டல், ஹோட்டல் நடத்துபவர்களாகவும், ஆல்கஹால் போன்றவை கலந்த மருந்துகளையும் விற்பனை செய்பவர்களாகவும் இருப்பார்கள். அச்சுத் தொழில், இயந்திரத் தொழில், இன்ஜினியர்ஸ், பௌதீக ஆராய்ச்சி தொழில் போன்றவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும்.

நண்பர்கள், பகைவர்கள்

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் முரட்டு சுபாவம் கொண்டவர்கள் என்பதால் இவரக்ளுக்கு நண்பர்கள் அமைவது சற்றுக் கடினமான காரியமாகும் என்றாலும், தாராள குணம் இருப்பதால் சில நண்பர்கள் அமைய வாய்ப்பு உண்டு. 5,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாகவும் 1,29 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களிடம் ஒற்றுமையாக செயல்பட முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.

ராகுவுக்குரிய காலம்

ராகுவுக்கு என தனிப்பட்ட முறையில் நாள் கிடையாது. ஜோதிட, சாஸ்திர ரீதியாக சனிக்கிழமையை ராகுவுக்கு உரியதாக கருதலாம். ஒவ்வொரு நாளும் ராகு காலம் என்று ஒன்றரை மணி நேரம் ராகுவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த சுபகாரியத்தையும் செய்யாதிருப்பது நல்லது.

ராகுவுக்குரிய திசை

தெற்கு திசை ராகுவுக்குரியது. பாலைவனங்கள், குகைகள், சுடுகாடு, புற்று, சுரங்கம், ஓட்டு வீடு, பாழடைந்த கட்டிடங்கள், உலர்ந்துபோன் நிலங்கள் போன்றவை ராகுவுக்கு சொந்தமான இடங்களாகும்.

ராகுவுக்குரிய அதிர்ஷ்ட கல்

நான்காம் என் ராகுவின் ஆதிக்கத்தில் இருப்பதால் 4ம் எண் உடையவர்கள் கோமேதகத்தை அணிய வேண்டும். தேனின் நிறத்தைக் கொண்ட கோமேதகத்தை அணிவதால் உடல் நலம் சிறப்படையும். எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய்யும் தொழில் மேன்மை, செல்வம், செல்வாக்கு உயரும். அனைத்து நற்பலன்களும் உண்டாகும்.

பரிகாரங்கள்

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகு பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது உத்தமம். ராகு காலங்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு காலங்களில் சரபேஸ்வரரையும் வழிபடலாம்.

அதிர்ஷ்டம் தருபவை

அதிர்ஷ்ட தேதி, -1,10,19,28

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்ட திசை -கிழக்கு

அதிர்ஷ்ட கிழமை - ஞாயிறு

அதிர்ஷ்ட கல் - கோமேதகம்

அதிர்ஷ்ட தெய்வம்- துர்க்கை

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001 

Sunday, January 15, 2012

எண் 3 (3, 12, 21, 30) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

எண் 3 (3, 12, 21, 30)  ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களும் அதிர்ஷ்ட சாலிகளே, திருவள்ளுவரே அறத்துப்பால், பொருட்பால், காமத்து பால் என மூன்று வகையாகப்பிரித்து திருக்குறளை இயற்றியுள்ளார். முத்தமிழ் முழக்கம் நம் முன்னோர்களால் இயற்றப்பட்டுள்ளன. அவை இயல், இசை, நாடகமாகும். எனவே மூன்று என்ற எண்ணும் நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. முன்றாம் எண்ணில் பிறந்தவர்கள்  குருவின் ஆதிக்கத்திற்குரியவர்கள். முன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள்  C,G,L,S ஆகியவை. 3,12,21,30 தேதிகளில் பிறந்தவர்கள் 3ம் எண்ணுக்குரியவர்கள் ஆவார்கள்.

குண அமைப்பு

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளையும் பெற்றிருப்பார்கள். நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் அமைந்திருக்கும். தாம் கற்றதை பிறருக்கும் கற்றுக் கொடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். நல்லவர்களிடத்தில் சுமூகமாக பழகும் குணமும், அத்துமீறி நடப்பவர்களை கண்டிக்கத்தக்க தைரியமும் உடையவர்கள். தன்னைச் சார்ந்தவர்களாக இருந்தால் தவறுகளை மன்னிக்கும் சுபாவம் இருக்கும். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதை செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். மிகவும் சுறுசுறுப்பும், எதையும் எளிதில் கிரகிக்கக்கூடிய தன்மையும் இவர்களுக்கு உண்டு. சுயநலம் பாராமல் உதவி செய்யக்கூடிய குணமிருப்பதால், இவர்களிடம் எதையும் எளிதில் சாதித்துக் கொள்ளலாம். முகஸ்துதிக்கு  அடிமையாவார்கள். உண்மையே பேசி நீதி நியாயத்தை வாழ்வில் கடைபிடிப்பார்கள். பெரிய கருத்தரங்குகளிலும் மணிக்கணக்கில்பேசக்கூடிய திறமை இருக்கும். எவ்வளவு வேகமாகப்பேசினாலும் சொற்கள் அழுத்தம் திருத்தமாக வந்து விழும். தம் செய்த பெரிய சாதனைகளைப் பற்றி  பிறருடைய குற்றம் குறைகளையும் சில நேரங்களில் பழித்து பேசுவார்கள்.

இவர்களிடம் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் வில்லில் இருந்து விடுபடும் அம்பு போல கடுமையானதாக இருக்கும். முன் கோபக்காரர்கள். ஆனாலும் கோபம் தணிந்து பின் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கள்ளம் கபடமின்றி உள்ளன்புடன் அனைவரிடமும் மனம் திறந்து பேசுவதால், இவர்களிடம் ரகசியங்கள்  தங்காது. மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பண்பு இருந்தாலும் அடிமைத் தொழில் செய்வது அறவே பிடிக்காது. பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். ஆன்மிக தெய்வீகப் பணிகளில் அதிக ஈடுபாடுடையவர்கள்.

உடலமைப்பும் ஆரோக்கியமும்

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரத்தை உடையவர்கள், நீண்ட கழுத்தும், திரண்ட புஜங்களும் கூரிய மூக்கும், நல்ல நிறமும் இருக்கும். இவர்கள் குரலில் அதிகாரமும், கட்டளையிடுவது போல கண்டிப்பும் பிரதிபலிக்கும். தலையில் சீக்கிரமே வழுக்கை விழும்.  சாதாரணமாக சரும நோய் தோன்றும். நரம்புத் தளர்ச்சி, மூட்டு வாதம் முதலியவை உண்டாகும். சரியான நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் குடலில் புண்களும் ஏற்படும்.  இருதய பலவீனம் உண்டாகும். இவர்கள் அதிக சிந்தனைகள் செய்வதால் தலைவலி ஏற்படவும் வாய்ப்புண்டு. குளிர்ச்சியான பொருட்களைத் தவிர்ப்பது நல்லது-

குடும்ப வாழ்க்கை

மூன்றாம் எண்ணில்  பிறந்தவர்கள் குடும்ப வாழ்வில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை சுலபமாக  சமாளித்து விடுவார்கள். காதல் விவாகாரங்களில் ஈடுபட்டாலும் ஒரு சிலருக்கு மட்டுமே காதல் திருமணம் கைகூடும். பலருக்கு பெரியவர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணமே நடைபெறும். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணை நல்ல தெய்வ நம்பிக்கை மிக்கவராகவும், கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஒருவரின் வாழ்க்கைக்கு மற்றொருவர் ஏணியாக இருப்பார்கள் என்று கூறினால் மிகையாகாது. உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கே அமையும். சில நேரங்களில் அவர்களுடன் ஒத்துப் போக முடியாத சூழ்நிலையும் உண்டாகும்.

பொருளாதாரம்

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாகவே இருப்பார்கள். எதிர்பாரத வகையில் திடீர் தனவரவுகளையும் கிடைக்கப்பெறுவார்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. வாழ்க்கையில் பணமுடை இருக்காது. பல்வேறு பொதுக் காரியங்களுக்கும், ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்காகவும் செலவு செய்யக்கூடிய வாய்ப்பு அமையும்.

தொழில்

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் மிகுந்த புத்தி சாலிகள் என்பதால் இவர்களுக்கு ஏற்ற தொழில் என பார்க்கும்போது பல பேருக்கு கல்வி சொல்லித் தரக்கூடிய ஆசிரியர் பணி, தலைமை ஆசிரியர் பொறுப்பு யாவும் அமையும். நீதிபதிகள், வக்கீல்கள் முதலான சட்டத் தொடர்புடைய தொழில்களும் முன்னேற்றம் கொடுக்கும். நல்ல வியாபாரிகளாகவும், கோயிலில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். 3ம் எண் குருவின் ஆதிக்கத்திலிருப்பதால் ஜோதிடக் கலையிலும் ஆர்வம் இருக்கும்.

நண்பர்கள், பகைவர்கள்

கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்துடன் பழக்க்கூடிய இவர்கள் பிறருக்கு சுயநலமில்லாமல் உதவி செய்வார்கள். நன்றிக்கு உதாரணமாக இருப்பார்கள். தனக்கு பிடிக்காதவர்களை கண்டு கொள்ளவே மாட்டார்கள். 1,2, 9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நட்பாக இருப்பாரர்கள்.  5,6 ம் எண்ஙணில் பிறந்தவர்களுடன் இவர்களால் ஒத்துப் பேகமுடியாது.

குருவுக்குரிய காலம்

நவம்பர் மாதம் 22 ந்தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரையிலான ஒரு மாத காலமும், மற்றும் பிப்ரவரி 19 ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி வரையிலான காலமும் குருவைச்  சேர்ந்தவை. பகல் இரவு இரண்டும் குருவுக்கு பலமான காலங்கள். வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள்.

குருவுக்குரிய திசை

குருவுக்குரிய திசை வடகிழக்கு மூலை எனக்குறிப்பிடக்கூடிய ஈசானிய மூலையாகும். 3ம் எண்ணுக்குரியவர்கள் எந்த காரியத்தையும் ஈசானிய மூலையில் தொடங்கினால் நற்பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட கல்

குருவுக்குரிய ரத்தினம் புஷ்பராகம் ஆகும். புஷ்பராக கல் பதிந்த மோதிரம், சங்கிலி போன்றவற்றை அணிந்து  கொள்வதால் எல்லாவகையிலும் மேன்மைகளையும், வெற்றிகளையும் அடையலாம்.

பரிகாரங்கள்

குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மல்ர்களால் அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை செய்வது உத்தமம். குருவுக்கு ப்ரீதியாக  தட்சிணாமூர்த்தியையும், வழிபடலாம். ஸ்ரீராமனுடைய சிறப்பைக் கூறும் பாடல்களையும் பாராயணம் செய்யலாம்.

அதிர்ஷ்டம் தருபவை

அதிர்ஷ்ட தேதி,-3,12,21,30

அதிர்ஷ்ட நிறம் - பொன் நிறம், மஞ்சள்


அதிர்ஷ்ட திசை - வடக்கு

அதிர்ஷ்ட கிழமை - வியாழன்

அதிர்ஷ்ட கல் -புஷ்பராகம்

அதிர்ஷ்ட தெய்வம் - தட்சிணாமூர்த்தி

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001