Thursday, August 30, 2012

தீர்க்க சுமங்கலி




தீர்க்க சுமங்கலி

தாலி என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் பாதுகாப்பு வேலியாக உள்ளது. நம்முடைய தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் மட்டுமே தாலி கட்டும் முறை உள்ளது. என்றாலும், அவரவர் சம்பிராயப்படி பெண்ணையும், ஆணையும் சேர்த்து வைக்கும் முறைகள் மாறுபடுகின்றன. எந்தவொரு மதமாக இருந்தாலும் கணவனுடன் சேர்ந்து வாழும் பெண்களை சுமங்கலியாக கருதுகிறார்கள். சடங்குகளில் கூட தீர்க்க சுமங்கலி பவ என்றுதான் வாழ்த்துவார்கள்.




சுமங்கலியாக இருப்பவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. நம் நாட்டு பெண்கள் குளித்து மஞ்சள் பூசி, நெற்றி திலகமிட்டு நடப்பதே மிகவும் அழகுதான். பார்ப்பதற்கே மங்களகரமாக இருக்கும். வயதாகியும் சுமங்கலியாய் இருப்பவர்களை எந்தவொரு மங்களகரமான சுபகாரியங்களிலும் முதன்மையாக நிறுத்தி சுப காரியங்களைத் தொடங்குவார்கள்.
ஒரு ஆண் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஒரு பெண்ணின் ஜாதக ரீதியாக மாங்கல்ய ஸ்தானம் பலம் பெற்றிருக்க வேண்டும். 8ம் பாவம் பலமாக அமைந்து விட்டால் ஆணுக்கும் நீண்ட ஆயுள் உண்டாகும். அதனால்தான் திருமண பொருத்தங்கள் பார்க்கும் போது மாங்கல்ய பாக்கியம் பலமாக உள்ளதா என ஆராய்ந்த பிறகே ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு களத்திர ஸ்தானமான 7ம் இடம் எப்படி பலமாக இருக்க வேண்டுமோ அது போல 8ம் இடமான மாங்கல்ய ஸ்தானமும் பலமாக இருத்தல் வேண்டும். 8ம் வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 8ம் வீட்டை குரு போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்தாலும் கணவருக்கு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் உண்டாகி பெண்ணுக்கு நீண்ட சுமங்கலி யோகம் உண்டாகிறது.

எல்லா பெண்களுமே தீர்க்க சுமங்கலியாய் வாழ்வதையே விரும்புவார்கள். அப்பொழுதுதான்  இந்த சமுதாயத்தினரால் புறக்கணிக்கப்படாமல் வாழமுடியும். ஆனால்  சில பெண்களுக்கு நீண்ட சுமங்கலி பாக்கியம் உண்டாவதில்லை. வயதாகி கணவரை இழக்கும் பெண்களை பரவாயில்லை நன்றாக வாழ்ந்தாகிவிட்டது என ஏற்றுக்கொள்ளும் இ வ்வுலகம், இளம் வயதில் கணவரை இழந்தவர்களை தீண்டத் தகாதவர்களாக கருதி ஒதுக்கியும் வைக்கிறார்கள். தன்னுடைய பிரச்சினைகளை வெளியே  சொல்லவும் முடியாமல் மனம் விட்டு அழவும் முடியாமல் எத்தனை பெண்கள் வீட்டுக்குள் அடங்கி கிடக்கிறார்கள் தெரியுமா?

ஏன் இந்த இளம் வயதிலேயே இப்படி ஒரு அவலநிலை என ஜோதிட ரீதியாக ஆராயும்போது, தோஷமுள்ள பெண்ணிற்கு தோஷமுள்ள வரனாக அமைத்து கொடுக்காததுதான். தோஷமுள்ள ஜாதகம் என பார்க்கின்றபோது 7,8 ம் வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது அமையப் பெற்று சுபபார்வையின்றி இருந்தாலும் 7,8 ம் அதிபதிகள் மேற்கூறிய கிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தாலும், மாங்கல்ய தோஷம் உண்டாகி கணவருக்கு கண்டத்தை  ஏற்படுத்துகின்றது.

7,8 ம் அதிபதிகள் நீசம் பெற்றிருந்தாலும், நீசம் பங்கம் பெற்றிருந்தால் முதல் வாழ்க்கை தவறினாலும் இரண்டாவதாக ஒரு வாழ்க்கை அமையக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 7, 8ம் வீட்டிற்கு  இருபுறமும் பாவிகள் அமைவதும் 7,8 ம் அதிபதிகள் அமைந்த வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் இருப்பதும் மாங்கல்ய தோஷமாகும். அது போல மாங்கல்ய ஸ்தானமான 8ம் வீட்டிற்கு சமசப்தமஸ்தானமான 2ல் பாவிகள் அமைவதும் மாங்கல்ய தோஷமாகும். களத்திரகாரகன் என வர்ணிக்கக்கூடிய செவ்வாய், சுக்கிரன் ஆகியோர் சனி, ராகு போன்ற பவ கிரக சேர்க்கைப் பெற்றிருப்பதும் 8ம் வீட்டை சனி, செவ்வாய் ஆகிய பாவகிரகங்கள் பார்வை செய்வதும் மாங்கல்ய தோஷமாகும்.

எனவே ஆண்களின் ஆயுளை அதிகரிக்க கூடிய பலம் பெண்களின் ஜாதகத்திற்கு உள்ளதால் 7,8 ம் பாவங்களை நன்கு ஆராய்ந்து திருமணம் செய்வது நல்லது. இதனால் பெண்களுக்கும் தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும்.

பெண்களுக்கு மறு மணம் என்பது கனவாக இருந்த காலங்கள் மாறி கைம்பெண்களுக்கும் நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்து தரக்கூடிய நல்ல மனதுள்ள ஆண்ஙகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனவே பெண்களே சென்றதை நினைத்தே உங்களை வருத்திக் கொள்ளாமல் ஒரு வாசல் மூடினால் மறுவாசல் திறக்கும் என்பதை மனதில் வையுங்கள்.



ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Tuesday, August 28, 2012

கணவர் எப்படிப்பட்டவர்?



கணவர் எப்படிப்பட்டவர்?

பெண்ணின் வாழ்வில் எத்தனை உறவுகள் இருந்தாலும் கணவன் என்ற உறவின் மூலமே சமூகத்தில் பெருமையடைகிறாள். பெண்ணின் உடல்ரீதியான உணர்வுகளுக்கும் சிறந்த வடிகாலாக விளங்குவது கணவன் என்ற பந்தமே. பிறந்த வீட்டில் எவ்வளவு பாசமாக வளர்ந்திருந்தாலும் திருமண பந்த உறவு மூலம் வரக்கூடிய கணவனின் உறவுகளிடம் தான் அவளுக்கு அதிக பாசம் உண்டாகும். பிறந்த வீட்டையும், வளர்ந்த சூழலையும் விட்டு புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்ணிற்கு கணவன் மட்டும் பண்புள்ளவராய், அனுசரித்துச் செல்பவராய் அமைந்து விட்டால் அவள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இதற்கு ஜோதிட ரீதியாக ஒரு பெண்ணிற்கு அமையக்கூடிய கணவரைப் பற்றி அறிய, அவளின் ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடும், 7ம் அதிபதியும், 7ம் வீட்டில் அமையும் கிரங்களும் பலமாக அமைந்திருத்தல் அவசியம். 




நவக்கிரகங்களில் நவநாயகனாக விளங்குபவர் சூரியனாவார். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சூரியன் 7ம் வீட்டில் அமையப் பெற்றால், வரக்கூடியவர் முன்கோபக்காரராகவும், நெஞ்சழுத்தம் உள்ளவராகவும், இரக்கக்குணம் இல்லாதவராகவும் இருப்பார். இவரை அனுசரித்துச் செல்வது என்பது சற்று கடினமான காரியமே. 

7ம் வீட்டில் வளர்பிறை சந்திரன் இருந்தால் அமைகின்ற கணவர் அழகானவராகவும், தேய் சந்திரன் இருந்தால் வசதி வாய்ப்பில் சற்று குறைந்தவராகவும், குழப்பவாதியாகவும் இருப்பார். 

7ம் வீடு செவ்வாயின் வீடாக இருந்தாலும், 7ம் வீட்டில் செவ்வாய் அமைந்திருந்தாலும் முன் கோபம் கொண்டவராகவும், அதிகார குணம் உடையவராகவும் இருப்பார்.

7ம் வீட்டில் புதன் அமைந்திருந்தாலும், 7ம் வீடு புதனின் வீடாக இருந்தாலும், கணவர் நல்ல அறிவாளியாகவும் வியாபார நோக்கம் உடையவராகவும் இருப்பார்.

பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீடு குருவின் வீடாக இருந்தாலும் 7ம் வீட்டில் குரு அமைந்திருந்தாலும் கணவர் நல்ல வசதி வாய்ப்புடையவராகவும், பெயர் புகழ் பெற்றவராகவும், எல்லோரையும் அனுசரித்துச் செல்பவராகவும் இருப்பார். 

7ல் சுக்கிரன் இருந்தாலும் 7ம் வீடு சுக்கிரனின் வீடாக இருந்தாலும் நல்ல செல்வம் செல்வாக்குடன், நல்ல உடலமைப்பு, சர்வலட்சணம் பொருத்திய உடலமைப்பு, சுகபோக வாழ்க்கை வாழும் யோகம், கலை, இசை போன்றவற்றில் ஆர்வம் உடையவராகவும் இருப்பார். 

7ல் சனி இருந்தாலும் 7ம் வீடு சனியின் வீடாக இருந்தாலும், கறுப்பு நிறமுடையவராகவும், இளைத்த தேகம் கொண்டவராகவும், உரத்த குரலில் பேசுபவராகவும் இருப்பார். 

7ல் சர்ப கிரகங்களான ராகு, கேது அமைந்திருந்தால் கணவர் நல்ல நடத்தை உள்ளவராக இருக்கமாட்டார். குறிப்பாக 7ல் சூரியன், ராகு இருந்தால், பல பெண்களின் தொடர்பும் அதன் மூலம் எல்லாவற்றையும் இழக்கக்கூடிய நிலையும் உண்டாகும். 

நல்ல கணவர் அமையும் பெண்ணின் வாழ்க்கையானது இனிமையானதாகவும், மகிழ்ச்சியுள்ளதாகவும் இருக்கும். அதுவே கணவன் நல்லவராக அமையாவிட்டால் அவளின் வாழ்க்கையே நாசமாகிவிடும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதால் முடிந்தவரை போராடி வெற்றி காணுங்கள்.



ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Sunday, August 26, 2012

காதல் திருமணம், கலப்புத் திருமணம்


காதல் திருமணம், கலப்புத் திருமணம்

மனதில் இடம்பிடித்தவரை வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக் கொள்வதில்தான் பெண்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி. காதல் என்பது ஒன்றும் தீண்டதகாதது அல்ல. காதல் திருமணம் என்பதும் தற்போது பெற்றோர்களின் சம்மதத்துடனேயே நடைபெறுகிறது. நம் பிள்ளைகள் நன்றாக இருந்தால் போதும் என நினைக்கக்கூடிய பெற்றோர்கள் பெருகிக் கொண்டே வருகிறார்கள்.


காதல் திருமணத்தில் மதம், இனம் மொழி அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்து விடுவதால் இதில் ஏற்றத்தாழ்விற்கோ, பிரிவினைக்கோ இடம் இருக்காது. இப்படி காதலித்தவரையே கைபிடிக்கும் யோகம் யாருக்கு உண்டாகும். என பார்க்கும் போது ஜாதக ரீதியாக 5,7 க்கு அதிபதிகள் இணைந்தோ, பரிவர்த்தனைப் பெற்றோ இருந்து உடன் சனி, ராகு, கேது போன்ற பாவகிரகங்கள் இருந்தாலும், 5,7ல் சனி, ராகு, கேது போன்ற  பாவிகள் இருந்தாலும், 7ம் அதிபதியும், சுக்கிரன் செவ்வாயும் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சனி, ராகு, கேது சேர்க்கை பெற்றோ, சாரம் பெற்றோ இருந்தாலும், பருவ வயதில் மேற்கூறிய கிரகங்களின் தசா புக்தி நடைபெற்றால் காதல் திருமணம், கலப்பு திருமணம் நடைபெறம்.

பொதுவாக செவ்வாயும் சுக்கிரனும், 7ம் அதிபதியும் சர்பகிரக நட்சத்திரங்களான அஸ்வினி, திருவாதிரை, மகம், சுவாதி, மூலம், சதயம் போன்றவற்றில் அமையப் பெற்றால் அந்நியத்தில் திருமணம் நடைபெறும். 



ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Friday, August 24, 2012

பெண்களுக்கு கணவர் சொந்தத்திலா? அசலிலா?



பெண்களுக்கு கணவர் சொந்தத்திலா? அசலிலா?

ஒவ்வொரு பெண்ணுமே தனக்கு வரக்கூடிய கணவர் இப்படி இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டும் என பல கனவுகளை காண்பார்கள். பழங்காலத்தில் எல்லாம் தம்முடைய பெண்ணை வெளி இடங்களில் கொடுக்காமல் தாய் வழி உறவுகளிலோ, தந்தை வழி உறவுகளிலோ தான் திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார்கள். அப்பொழுதுதான் வாழையடி வாழ¬யாக நம் இனம், மதம் தழைக்கும் !  சொத்துக்களும் வெளியே சொல்லாது என்பது அவர்களின் நம்பிக்கை.

சில குடும்பங்களில் பெண் குழந்தைகள் பிறந்தவுடனேயே இவள் என் மருமகள் என முன்பதிவு செய்து வைத்து விடுபவர்களும் உண்டு. இப்படி சொந்தத்திற்குள்ளேயே திருமணம் அமையக்கூடிய வாய்ப்பு யாருக்கு அமையும் என பார்க்கும் போது 5,9 ம் வீடுகளில் சுபகிரகங்கள் அமையப் பெற்று 7ம் வீட்டில் புதன் பகவான் சுப சாரம் பெற்று வலுவாக அமையப்பெற்றால் 7ம் அதிபதி புதனாக இருந்தாலும் தாய்மாமனை மணக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.  7ல் சூரியன் வலுவாக அமையப் பெற்று சுபசாரத்துடன் குரு போன்ற சுப கிரகப் பார்வைப் பெற்றிருந்தால், தந்தை வழி உறவில் திருமணம் நடைபெறும். 7ம் வீட்டில் வளர்பிறை சந்திரன்  பலமாக இருந்தோ, 7ம் அதிபதியாகி பலம் பெற்றோ சுப பார்வையுடனிருந்தால் தாய் வழியில் திருமணம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொதுவாக 5,9 ம் பாவங்கள் பாதிக்கப்படாமல் இருந்து, 7ல் சுப கிரகங்கள் அமைகின்றபோது  சொந்தத்திலோ, தூரத்து சொந்தத்திலோ மண வாழ்க்கை உண்டாகும். ஒரு சில பாவக்கிரகங்கள் 7ல் அமைந்திருந்தாலும், 7ம் வீட்டிற்கு சுபபார்வை இருந்தால் பருவ வயதில் வலுப்பெற்ற சுபகிரகங்களின் தசாவோ, புக்தியோ நடைபெற்றால் ஜாதகி பிறந்த ஜாதியிலேயே தூரத்து சொந்தத்தில் திருமணம் நடைபெறும்.


ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Wednesday, August 22, 2012

நிம்மதியற்ற திருமண வாழ்க்கை



நிம்மதியற்ற திருமண வாழ்க்கை

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீடும், நவகிரகங்களில் செவ்வாய், சுக்கிரனும் பலமாக அமையப்பெற்றால் மணவாழ்க்கை நன்றாக இருக்கும். 8ம் வீடு மாங்கல்ய ஸ்தானம் என்பதினால், பெண்கள் ஜாதகத்தில் 7,8 ஆகிய பாவங்களில் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும் 7,8 க்கு அதிபதிகள் நீச்சம், அஸ்தங்கம் பெறாமல் செவ்வாய் சுக்கிரன் தனித்து அமையப் பெற்றால் மணவாழ்க்கை நன்றாக இருக்கும்.

அதுவே, 7ம் வீட்டில் 2க்கும் மேற்பட்ட கிரகங்கள் அமையப் பெற்று 7,8 க்கு அதிபதிகள் பாவிகள் பார்வையோ, சேர்க்கை பெற்றோ, செவ்வாய், சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றோ, இருந்தால் மணவாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும். அதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்ட கிரகங்களின் தசாபுக்தி நடைபெறுகின்ற போது பிரிவு, பிரச்சினைகள், சிக்கல்கள் உண்டாகும்.  7, 8 க்கு அதிபதிகள் நீசம் பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ இருந்தாலும் 7ம் அதிபதியும் செவ்வாய், சுக்கிரனும், சேதுவின் நட்சத்திரமான அஸ்வினி, மகம் மூலத்தில் அமையப் பெற்றிருந்தாலும், செவ்வாய், சுக்கிரன், சூரியனுக்கு மிக அருகில் அமையப் பெற்று அந்தங்கம் பெற்றிருந்தாலும் மண வாழ்க்கை அமையாது. அப்படி அமைந்தாலும் நிலைக்காது. நீசம் பெற்று 7ம் அதிபதி அமைந்தாலும் நிலைக்காது. நீசம் பெற்ற 7ம் அதிபதி பலமான நீசபங்க ராஜயோகம் பெற்றிருந்தால் மணவாழ்வில் தொடக்கத்தில் சில பிரச்சினை ஏற்பட்டு, அதன் பின்னர் தான் மணவாழ்க்கை சிறப்படையும்.



ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Monday, August 20, 2012

மங்கையும் மண வாழ்க்கையும்



மங்கையும் மண வாழ்க்கையும்

பெண்ணிற்கு செல்வி என்ற பட்டம் மறைந்து திருமதியாக்குவது திருமண பந்தம் தான். ஒரு ஆணானவன் திருமணம் செய்து கொண்டால் தம் சொந்தங்களுடனேயே வாழ்வான் ஆனால் பெண் என்பதால், தான் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு பெற்றோர் மற்றும் சொந்தங்களைப் பிரிந்து புதிதாக ஒரு பந்தத்துடன் இணைவதுதான் திருமணம். 

அதன்பிறகு அவள் கணவனின் குடும்பத்தாரை பற்றி புரிந்து கொண்டு,அவரவரின் குணநலன்களுக்கு ஏற்ப தன்னையும் மாற்றிக் கொண்டு, தன்னுடைய இல்வாழ்க்கையைத் தொடங்குகிறாள். திருமண பந்தம் என்பது சிலருக்கு இளம் வயதிலேயே நடக்கக்கூடிய யோகமும் சிலருக்கு மத்திய வயதிலும், சிலருக்கு தாமத திருமணமும், ஒரு சிலருக்கு திருமணமே  நடைபெறாமல் கன்னியாக வாழக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். சிலருக்கு காதலித்தவரையே கைபிடிக்கும் யோகமும்  உண்டாகும். காதல் என்பது வரும் போது அங்கு ஜாதி மதத்திற்கு வேலையில்லை என்பதால், கலப்பு திருமணமும் கலந்து விடுகிறது. 

திருமண வாழ்க்கை

ஜோதிட ரீதியாக அவரவரின் ஜென்ம லக்னத்திற்கு 7ம் பாவமானது களத்திர ஸ்தானமாகும். நவக்கிரகங்களின் சுக்கிரன் களத்திர காரகன் என்றாலும், பெண்களுக்கு செவ்வாயையும் களத்திர காரகனாக கூறுவார்கள். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீடும், செவ்வாய் சுக்கிரனும் பலமாக அமைந்து கிரகச் சேர்க்கையின்றி சுபபார்வையுடன் இருந்தால் மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

இளமைத் திருமணம்

ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டில் சுபக்கிரகம் என வர்ணிக்கப்படக் கூடிய குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதன் அமையப் பெற்றோ, 7ம் வீட்டு அதிபதியாக இருந்தோ, 7ம் வீட்டையும், 7ம் அதிபதியும் குரு பகவான் பார்வை செய்தோ அமையப் பெற்ற ஜாதகிக்கு திருமணம் என்பது இளமையிலேயே நடைபெறக்கூடிய யோகம் உண்டாகும். 7ம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானத்தில் குரு பார்வையுடன் அமையப் பெற்று, பருவ வயதில் பாவக்கிரகங்களின் தசாவோ, புக்தியோ நடக்காமல், சுபக்கிரகங்களின் தசாபுக்தி நடைபெற்றால் இளம் வயதிலேயே திருமணம் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.

மத்திம வயதில் திருமணம்

ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டில் சூரியன், செவ்வாய் போன்ற பாவிகள் இருந்தாலும், 7ம் வீடு சனியின் வீடாக இருந்தாலும், சுபர் பார்வை 7ம் வீட்டிற்கும், 7ம் அதிபதிக்கும் இருந்தால் மத்திம வயதில் திருமணம் நடைபெறும்.

தாமத திருமணம்

பெண்ணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் வீட்டதிபதி 6,8,12 ல் மறைந்து இருந்தாலும், நவகிரகங்களில் மந்தன் என்றும் தாமதகாரகன் என்றும் ஜோதிட ரீதியாக அழைக்கப்படும் சனி பகவான் தான் இருக்கும் வீட்டிலிருந்து 3,7,10 ஆகிய பாவங்களை பார்வை செய்யும் திறன் கொண்டவர். 

சனிபகவான் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீட்டையும், 7ம் அதிபதியையோ, சுக்கிரனையோ பார்வை செய்தால் திருமணம் தாமதமாக நடைபெறும். பொதுவாக, சனியானவர் 7ல் இருந்தாலும், குடும்ப ஸ்தானமான 2ல் இருந்தாலும் திருமணம் அமைய தடை தாமதம் ஏற்படுகிறது. அது போல சர்ப கிரகங்களான ராகு, கேது 7ல் இருந்தாலும் திருமணம் நடைபெற கால தாமதம் ஏற்படுகிறது. திருமண வயதில் சர்ப கிரகங்களின் தசாவோ, புக்தியோ நடைபெற்றாலும் திருமணம் நடைபெற தாமதம் ஏற்படும். 



ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Saturday, August 18, 2012

தாய்மை


தாய்மை

மானிடராய் பிறப்பதற்கே இம்மண்ணில் மாதவம் செய்திடல் வேண்டும். இதில் குறிப்பாக பெண்கள்  இந்நாட்டின் கண்களாக கருதப்படுகிறார்கள். பெண்மை என்ற சொல்லுக்கே மென்மை என்று தானே பொருள். பெண்ணுக்குள் பல மென்மைகள் இருப்பதால்தான் இயற்கையும் அவளுக்கு தாய்மை அடையும் பாக்கியத்தை அளித்திருக்கிறது.


ஓர் உயிரணுவை கருவாக்கி, தன் கருவறையில் சுமந்து, தான் உண்ணும் உணவையே அந்த உயிருக்கும் அளித்து, பத்து மாதங்கள் வரை பாதுகாத்து, ஒரு குழந்தையை முழு உருவமாக பெற்றெடுக்கும் பெருமை தாய்மைக்குத்தான் உண்டு. அதற்காக அவள் படும்பாடுகள் அனைத்தும் அந்த ஜீவனின் முகத்தை பார்த்தவுடன் பறந்து விடுகின்றது. தாய்மை என்ற ஒன்று பெண்ணிற்கு இல்லை என்றால், அவள் மலடியாக கருதப்பட்டு ஒரு வாரிசு பெற்றெடுக்க முடியாதவள் என்ற பட்டத்தோடு இந்த சமுதாயத்தினரால் புறக்கணிக்கப்படுகிறாள்.

ஒரு பெண்ணை முழுமையானவளாகவும், மணவாழ்க்கை ஏற்றவளாகவும் மாற்றுவது குழந்தை பாக்கியமே. எவ்வளவு பொன், பொருள், செல்வங்கள் இருந்தாலும், திருமணமான பெண்ணைப் பார்த்தால் எத்தனை குழந்தைகள் உள்ளன என கேட்பார்களே தவிர, எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என கேட்க மாட்டார்கள்.

பாமரர் முதல் பணக்காரர் வரை தமக்கு ஒரு குழந்தை பாக்கியம் இருப்பதை பெருமையாக கருதுகிறார்கள். இப்படி பெண்ணிற்கு தாய்மையடையும் பாக்கியம் உண்டாவதைப் பற்றி ஜோதிட ரீதியாக பார்க்கும் போது ஒருவரின் ஜனன ஜாதக  ரீதியாக 5ம் பாவம் புத்திர ஸ்தானம் என்றாலும், பெண்களுக்கு 5க்கு 5ம் பாவமான 9ம் பாவமும் புத்திர ஸ்தானமாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி நவகிரகங்களில் குரு பகவான் புத்திர காரகனாக கருதப்படுகிறார்.

எனவே, பெண்களுக்கு 5ம் பாவமும் 5க்கு 5ம் பாவமான 9ம் பாவமும், புத்திர காரகன் குருவும் பலமாக அமைந்துவிட்டால் சிறப்பான புத்திர பாக்கியத்தை பெற்றெடுக்கும் யோகமும் உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கும், சந்திரனுக்கும் 5,9 க்கு அதிபதிகள் ஆட்சி உச்சம் பெற்றாலும், கேந்திர ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும் சிறப்பான தாய்மை யோகம் உண்டாவது மட்டுமின்றி புத்திர காரகன் குருவும் பலம் பெற்று 5,9ம் பாவத்தையோ 5,9 ம் அதிபதிகளையோ பார்வை செய்தால் அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கும் யோகம் பெண்ணிற்கு உண்டாகிறது. 5,9 ம்வீடுகள் சுபக்கிரகங்களின் வீடாக இருந்து சுப பார்வை பெறுவது நல்லது. 5,9 ம் அதிபதிகள் பாவியாக இருந்தாலும், வலுப்பெற்று அமைந்து சுப பார்வை பெறுவதாலும் சிறப்பான தாய்மை பாக்கியத்தை உண்டாக்கும்.

ஆண்குழந்தை பாக்கியம்

குறிப்பாக, ஆண்குழந்தையை பெற்றெடுக்கும் பாக்கியம் யாருக்கு அமைகிறது என பார்த்தால், நவக்கிரகங்களில் ஆண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள் 5,9 ல் இருந்தாலும் 5,9 க்கு அதிபதிகளின் சேர்க்கை பெற்றிருந்தாலும் 5,9 க்கு அதிபதிகளாக இருந்தாலும் அழகான ஆண் குழந்தை யோகம் உண்டாகும். அதுமட்டுமின்றி ஆண் கிரகங்களின்  வீடு என வர்ணிக்கப்படக்கூடிய மேஷம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய வீடுகளில் 5,9 க்கு அதிபதிகள் பலமாக அமைந்திருந்தால் சிறப்பான ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

பெண் குழந்தை யோகம்

பெண் குழந்தை என்றாலே கருவிலேயே கலைத்து விடக்கூடிய அவலநிலையும், கள்ளிப் பால் கொடுத்து கொல்லும் சூழ்நிலைகளும் மாறி ஆணுக்கு பெண் சமம்  என்ற நிலை உண்டாகி உள்ளதால், பெண் குழந்தைகளைபெற்றெடுக்கும் யோகம் யாருக்கு என பார்க்கின்ற போது, நவகிரகங்களில் பெண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய  சந்திரன், சுக்கிரன் ஆகியவை 5,9 ல் வலுவாக அமைந்தாலும், 5,9 க்கு அதிபதிகளாக இருந்தாலும் 5,9 க்கு அதிபதிகளின் சேர்க்கை பார்வை பெற்றிருந்தாலும் அழகிய பெண் குழந்தை யோகம் உண்டாகும். அதுபோல 5,9 க்கு அதிபதிகள் ரிஷபம், துலாம்,  கடகம் ஆகிய பெண்கிரக வீடுகளில் இருந்தாலும் சிறப்பான பெண் குழந்தை யோகம் உண்டாகும்.

ஒரு பெண்ணானவள் தாய்மையடைந்து ஒரு குழந்தையை பெற்றெடுப்பதன் மூலம் அவள் மறு ஜென்மம் எடுப்பதாகவே கருதப் படுகிறாள். பிரசவம் என்பது சுலபமாக இருந்தால்தான் குழந்தையை  நல்ல முறையில் பெற்றெடுக்க முடியும். அதுவே பிரசவம் சுலபமாக இல்லையென்றால் பெண்ணுக்கும் பிரச்சினை, பிறக்கும் குழந்தைக்கும் பிரச்சினையாக அமைந்து விடுகின்றது. இப்படி பல கஷ்டங்களையும் தாண்டி மென்மையான பெண்மை தாய்மையை அடைகிறது. அதனால் பெண்மையே புனிதமாகிறது.



ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Thursday, August 16, 2012

பெண்களின் கட்டில் சுகவாழ்வு


பெண்களின் கட்டில் சுகவாழ்வு

பெண்களின் உடல் ரீதியான தேவைகள் பூர்த்தியாக கட்டில் சுகமும் அவசியமான ஒன்றாகிறது. நிம்மதியான உறக்கமும் அதில் ஒன்றாகிறது. பெண்களின் ஜாதகத்தில் 12ம் அதிபதி பலமாக அமையப் பெற்று 12ம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை அமையப் பெற்று 12ம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்தால் நிம்மதியான உறக்கம், தாம்பத்ய வாழ்வில் திருப்தியடையும் நிலை உண்டாகிறது. அதுவே 12ம் வீட்டில் பாவகிரகங்கள் அமையப் பெற்றால் சரியாக உறங்க முடியாத நிலை, தாம்பத்ய வாழ்வில் நிம்மதியற்ற நிலை உண்டாகும். 


ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Tuesday, August 14, 2012

பெண்களின் மண வாழ்க்கை, கூட்டுத் தொழில்


பெண்களின் மண வாழ்க்கை, கூட்டுத் தொழில்

எந்தவொரு பெண்ணுமே தனக்கு அமையக்கூடிய மணவாழ்க்கையானது சீரும், சிறப்போடும், கணவனின் அன்போடும் மகிழ்ச்சியாக அமைவதைத்தான் விரும்புவாள். 

பெண்கள் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் வீடும், சுக்கிரன், செவ்வாயும் கிரகச் சேர்க்கையின்றி சுபர்பார்வையுடன் பலமாக அமையப் பெற்றால், மணவாழ்க்கையானது சிறப்பாக இருக்கும். ஆகவே 7ம் அதிபதி பலஹீனமாக இருந்தாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகச் சேர்க்கை இருந்தாலும், மண வாழ்வில் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். 



கூட்டுத்தொழில் யோகம்

பல கணவன்மார்கள் தங்களுடைய மனைவியை கூட்டாக சேர்த்து தொழில் செய்து முன்னேற்றமடைகிறார்கள். அப்படி கூட்டுத் தொழில் செய்வதற்கு மனைவியின் ஜாதகமும் ஒத்து வர வேண்டும்.  பெண்கள் ஜாதகத்தில் கூட்டுத் தொழில் ஸ்தானமான 7ம் வீட்டதிபதி தொழில் ஸ்தானமான 10ல் அமையப் பெற்று, 10 ம் அதிபதியுடன் இணைந்து பலமாக இருந்தாலும், 7, 10 க்கு அதிபதிகள் இடம் மாறி பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும், கணவருடன் சேர்ந்து தொழில் செய்து வளமான வாழ்க்கையை அடையமுடியும்.



ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001


Sunday, August 12, 2012

மாங்கல்ய பாக்கியம், கணவன் வழி உறவுகள்


மாங்கல்ய பாக்கியம், கணவன் வழி உறவுகள்

திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வதையும், புகுந்த வீட்டில் கணவர் வழி உறவினர்களிடம் சுமூகமாக இருப்பதையும் விரும்புவார்கள் பெண்கள் ஜாதகத்தில் 8ம் இடமானது ஆயுள் ஆரோக்கியத்தை குறிப்பதுடன் மாங்கல்ய பாக்கியத்தையும் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள உதவுகிறது. 8ம் வீட்டில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்று 8ம் அதிபதியும் பலமாக சுப பார்வையுடன் அமைந்திருந்தால், நல்ல ஆரோக்கியம், கணவருக்கு நீண்ட ஆயுள் உண்டாகி நல்ல மாங்கல்ய பாக்கியமும் உண்டாகும்.

கணவன் வழி உறவுகள்

கணவர் வழி உறவுகளைப் பற்றி பார்க்கின்ற போது 7க்கு 2ம் இடமான 8ம் இடம் பலமாக அமைந்து சுபகிரகங்கள் அதில் அமைந்து சுபகிரகங்களின் பார்வையும் இருந்தால் கணவர் வழி உறவுகளிடையே ஒந்றுமை சிறப்பாக இருக்கும். அதுவே 8ம் வீட்டில் பாவகிரகங்கள் அமையப் பெற்றால் கணவர் வழி உறவுகளிடையே ஒற்றுமை குறைவும், அனுசரித்துச் செல்ல முடியாத நிலையும் உண்டாகும். குறிப்பாக சனி, ராகு போன்ற கொடிய பாவகிரகங்கள் அமைந்து அதன் தசாபுக்திகள் நடைபெற்றால் கணவர் வழி உறவுகளிடையே பிரிவினையைக் கொடுக்கும்.



ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Friday, August 10, 2012

பெண்களின் வாரிசு யோகம்




ஒரு பெண்ணானவள் தாய்மை அடைவதன் மூலமே முழுமையடைகிறாள். அம்மா என்று அழைக்க ஒரு குழந்தை பாக்கியம் கண்டிப்பாக வேண்டும். அப்பொழுதுதான் அவளின் குடும்பத்தாரும் நமக்கென ஒரு வாரிசை உருவாக்கித் தந்திருக்கிறாள் என பெருமையுடன் நடத்துவார்கள். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5, 9 ம் வீடானது, அவளுக்கு அமையும் குழந்தை யோகத்தைப் பற்றி அறிய உதவுகிறது. 5,9ம் வீட்டில் சுபகிரகங்கள் அமையப் பெற்று சுபர் பார்வை சேர்க்கைப் பெற்றிருந்தால் சிறப்பான குழந்தை  யோகம் உண்டாகும். அதுவே சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் பகை பெற்று 5, 9 ல் இருந்தாலும், 5, 9 ம் அதிபதியும் குருவும் பலவீனமாக இருந்தாலும் அவளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாக தடை ஏற்படும்.


ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001




Wednesday, August 8, 2012

பெண்ணின் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு, கற்பு, அசையும், அசையா சொத்து


பெண்ணின் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு, கற்பு, அசையும், அசையா சொத்து

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 4ம் வீட்டைக் கொண்டு அவளுக்கு அமையக்கூடிய சுகவாழ்வு, சொகுசு வாழ்வு, அசையும், அசையாச் சொத்துக்கள் பற்றியும், அவளது அறிவாற்றல் பற்றியும், கற்பு நிலை பற்றியும் அறியலாம். 

மனிதராய் பிறந்தவர் அனைவருமே சுகமான வாழ்க்கை வாழ்வதைத்தான் விரும்புவார்கள். ஆனால் அது எல்லோருக்கும் அமையுமா? என்றால் அதுதான் இல்லை. பொதுவாக பெண்களின் ஜாதகத்தில் சுபகிரககங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியோர் 4ல் இருந்தாலும், 4ம் வீட்டை பலமாக பார்வை செய்தாலும் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு வாழக்கூடிய யோகம் உண்டாகும். குறிப்பாக சுகக் காரகன் சுக்கிரன் வலிமையாக அமையப் பெற்றிருந்தால், அனைத்து விதமான ஆடம்பரப் பொருள்களும், மற்றும் பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கைகளும் குறைவில்லாமல் கிடைக்கப்பெறும்.

ஆகவே 4ம் வீட்டில் பாவக்கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் அமையப்பெற்றாலும் அப்பெண்ணிற்கு சுகவாழ்வு, சொகுசு வாழ்வில்  பாதிப்பு உண்டாகும். 4ல் கொடிய கிரகங்களான சனி, ராகு அமையப் பெற்று பகை பெற்றிருந்தால், எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்த போதிலும் நிம்மதி இருக்காது.

பெண்களின் ஜாதகரீதியாக 4ம் வீட்டைக் கொண்டு அவர்களின் ஒழுக்கம் பற்றியும், கற்பு நெறி பற்றியும் அறிந்து கொள்ளலாம். பெண்ணானவள் நெருப்பைப் போல வாழ்ந்தால், எந்தக் கெட்ட சகவாசகங்களும் தன்னை நெருங்காமல் பார்த்துக் கொள்ளலாம். நெருப்பை நீர் அணைக்குமே என தர்க்கம் பேசாமல் நல்ல வழியில் நடந்து கொண்டால், அந்தப் பெண்னை சந்ததியினரும் பின்பற்றுவார்கள். நவகிரகங்களில் சுபகிரகங்களாகிய குரு, சுக்கிரன், வளர்பிறை, சந்திரன் ஆகிய கிரகங்கள் லக்னத்திற்கு 4ம் வீட்டிலோ, சந்திரனுக்கு 4ம் வீட்டிலோ அமையப் பெற்றால் பண்புள்ள பெண்ணாகவும், நல்ல குணவதியாகவும் இருப்பாள்.


இன்றைய சூழலில் வீடு, வாகன யோகம் என்பதை ஏழைமுதல் பணக்காரர் வரை அடைவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பொதுவாக ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 4ம் அதிபதியும், சுக்கிரனும் பலமாக அமைந்து கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால் அசையும், அசையாச் சொத்து யோகம் சிறப்பாக அமையும். அதுவே 4ம் அதிபதியும் சுக்கிரனும் 6,8,12 ல் மறைந்தோ, பாதக ஸ்தானத்தில் அமைந்தோ பாவக்கிரகச் சேர்க்கையுடன் பலஹீனமாக இருந்தால், அவளின் பெயரில் சொத்துக்கள் அமையாது. அப்படி அமைந்தாலும் அபிவிருத்தியாகாது.


ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001
=====================================================


Monday, August 6, 2012

பெண்ணின் பேச்சாற்றல்




ஜென்ம லக்னத்திற்கு 2ம் பாவத்தை கொண்டு பேச்சாற்றலை பற்றியும் அறியலாம். 2ம் வீட்டில் சுக்கிரன், புதன், கேது,குரு,சந்திரன் போன்ற கிரகங்கள் அமையப் பெற்றால், இனிமையாக பேசக்கூடிய சுபாவமும், மற்றவர்களை கவரக்கூடிய பேச்சாற்றலும் கொண்டிருப்பாள். சூரியன், செவ்வாய் இருந்தால் பேச்சில் அதிகாரத்துவமும், வேகமும் இருக்கும். சனி, ராகு போன்ற பாவக்கிரகங்கள் அமையப் பெற்றால் பேச்சில் கடுமையும், மற்றவர்களை புண்படுத்தக்கூடிய அளவிற்குப் பேசும் குணமும் இருக்கும். 

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Saturday, August 4, 2012

பெண்ணின் குடும்பச்சூழல், பொருளாதார நிலை, பேச்சாற்றல்


பொதுவாக ஒருவரின் இரண்டாம் பாவத்தைக் கொண்டு அவரின் குடும்பம், பொருளாதார நிலை, பேச்சாற்றலைப் பற்றி அறியலாம். பெண்ணானவள் குடும்பத்தை கட்டிக்காத்து, சிக்கனமாகச் செலவுகளைச் செய்து, தம்முடைய பேச்சாற்றலால் அனைவரையும் தம் கைக்குள் வைத்திருந்தால், அந்த குடும்பமானது அவளுக்கு கட்டுப்பட்டு ஒழுக்கமுடையதாக அமையும்.

குடும்பமானது ஒற்றுமையானதாக அமைய 2ம் வீட்டில் சுபக் கிரகங்கள் அமைவதும், சுபக்கிரகங்கள் பார்வை செய்வதும் நல்லது. 2ம் அதிபதி பாவியாக இருந்தாலும், 2ல் பாவக்கிரகங்கள் அமைந்தாலும் குடும்ப ஒற்றுமை பாதிக்கும். கிரகங்களில் கொடிய பாவிகளாக கருதக்கூடிய சனி, ராகு 2ல் இருந்தால் கண்டிப்பாக அதன் தசா புக்தி காலங்களில் தேவையற்ற வாக்கு வாதங்களால் ஒற்றுமை குறையக்கூடிய சூழல் உண்டாகும். சில நேரங்களில் கணவன், மனைவி பிரியக்கூடிய சூழ்நிலையே உண்டாகிறது.

ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீட்டை கொண்டு பொருளாதார நிலையைப் பற்றியும் அறியலாம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 2ம் அதிபதியும் தனக்காரகன் குருவும் ஆட்சி உச்சம் பெற்றோ, கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றோ, லாபஸ்தானத்தில் அமையப் பெற்றோ, கேந்திர திரிகோணாதிபதிகளுடன் பரிவர்த்தனைப் பெற்றோ இருந்தால், அந்தப் பெண்ணிற்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றமும், அதனால் குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். 

அதுவே 2ம் அதிபதியும் குரு பகவானும் பலஹீனமாக இருந்தால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்காது. இப்படி ஜாதகப் பலன்களைக் கொண்ட பெண்கள் பண விஷயங்களில் கவனமாகச் செயல்படுவது நல்லது.


ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001


Thursday, August 2, 2012

பெண்ணின் குண அமைப்பு


பெண்ணின் குண அமைப்பு

ஒருவரின் ஜாதக ரீதியாக அவரின் குணநலன்களை பற்றி அறிய அவரின் ஜென்ம லக்னம் உதவியாக அமைகிறது. பொதுவாக, பெண் என்பவள் நல்ல குணநலன்களுடனும், மற்றவர்களை அனுசரித்து, அரவணைத்துச் செல்லுபவளாகவும், இறைபக்தி உள்ளவளாகவும் இருந்தால், அவளின் குடும்பமும் செல்வச் செழிப்புடன், லட்சுமி கடாட்சமாக அமையும். 

இப்படி நற்குணங்கள் யாருக்கு அமையும் என பார்க்கும்போது ஜென்ம லக்னத்தில் சுபக்கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைசந்திரன் போன்ற கிரகங்கள் அமையப் பெற்றாலும், சுபக்கிரகங்கள் ஜென்ம லக்னத்தை பார்வை செய்தாலும் நல்ல அறிவாற்றல், அழகான உடலமைப்பு, சிறந்த குண நலன்கள் போன்ற யாவும் சிறப்பாக அமையும். 

அதுவே பாவக்கிரகங்ள் லக்னாதிபதியாக இருக்கும் பட்சத்தில் பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் கோபக்காரியாக இருந்தாலும் நல்ல குணவதியாக இருப்பாள்.  சனி, ராகு  போன்ற பாவக் கிரகங்கள் லக்னத்தில் பகை பெற்று அமையப் பெற்றாலும் ஜென்ம லக்னத்தை பார்வை செய்தாலும் மிகுந்த கோபக்காரியாகவும், மற்றவர்களை அனுசரிக்கத் தெரியாதவளாகவும், அழகிற்குறைந்தவளாகவும் இருப்பாள். 


ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001