Thursday, March 21, 2013

கண்டத்தை ஏற்படுத்தும் காலங்கள்




     
பொன் தேடி பொருள் தேடி அலையும் மானிடர்கள் எப்பொழுதாவது மரணத்தைப் பற்றி யோசித்தது உண்டா? எதிர் காலம் எப்படியிருக்கும். சுக வாழ்வு வாழ வேண்டுமே எங்கு செல்லலாம், எதை தேடலாம், எதை சேர்க்கலாம், எவ்வளவு படிக்கலாம் என தினம் தினம் தேடுதல்களை மட்டுமே வாழ்க்கையாக நினைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இது என்னுடையது இது உன்னுடையது என பிரித்தாளும் மனப்பான்மையால் ஜாதி, மதம், இனம், மொழி, நாடு என அனைத்தையுமே பிரித்து வைத்து ஆளுமை செய்கின்றோம். ஆனால் போகும்போது எதையாவது கொண்டு செல்கின்றோமா என்றால் அது தான் இல்லை. மரணத்தைப் பற்றி யோசிப்பதே இல்லை. அந்த வார்த்தையை கேட்டாலே மனதில் பயம் உண்டாகி விடுகிறது-. கீதாசாரத்தில் கூறியிருப்பது போல எதை கொண்டு வந்தோம் எதை இழப்பதற்கு, எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகி விடுகிறது.
     
பள்ளி செல்லும் பருவத்தில் பல கனவுகளுடன் புத்தக மூட்டையை சுமந்த சென்ற எத்தனையோ குழந்தைகள் தீயில் கருகியதை பத்திரிகைகளில் பார்க்கவில்லையா? வாலிப பருவத்தில் விபத்தில் சிக்கி மூளை சாவு என்ற பெயரில் உடல் உறுப்புகளை தானம் செய்வதவற்றை நாம் பார்க்கவில்லையா-? வயது முதிர்ந்தும் தள்ளதா வயதில் குடுகுடு கிழவர்களாகியும் உயிருடன் இருப்பவர்களும் உண்டு. வாழ வேண்டிய வாலிப வயதில் அகால மரணத்தை தழுவுவர்களும் உண்டு. இந்த மரணம், விபத்து, கண்டம் இவை எல்லாவற்றையும் பற்றி ஜோதிட ரீதியாக ஆராய்ச்சி செய்யும் போது இதற்கு நவ கிரகங்களின் திருவிளையாடலே காரணமாக அமைகிறது.
      
ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் 8ம் பாவம் ஆயுள் ஸ்தானம் ஆகும். நவ கிரகங்களில் ஆயுள் காரகன் சனி பகவனாவார். எனவே ஒருவரின் ஜாதகத்தில் 8ம் பாவமும் சனி பகவானும் பலம் பெற்று அமைந்து விட்டால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் யாவும் சிறப்பாக அமையும். அதுவே 8ம் பாவம் பலமிழந்து சனி பகவானும் 8ம் அதிபதியும் பகை, நீசம் பாவ கிரக பார்வை பெற்றிருந்தால் இளம் வயதிலேயே கண்டங்களை எதிர் கொள்ளக் கூடிய அமைப்பு ஏற்படுகிறது-. அது போல பலமிழந்த மேற்கூறிய கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் கண்டங்கள் உண்டாகிறது.
     
ஒரு சில தசாக்கள் சிலருக்கு கண்டத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக மிருக சீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 4வது திசையாக வரும் சனி திசையும், அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5வது திசையாக வரும் செவ்வாய் திசையும், பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 6வது திசையாக வரும் குரு திசையும் ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7வது திசையாக வரும் ராகு திசையும் கண்டத்தை உண்டாக்கும் என்பது பொது விதி.
     
ஒவ்வொரு லக்னத்திற்கும் மாரகஸ்தானம் உண்டு. அந்த ஸ்தானதிபதியின் தசா புக்தியும், ஸ்தானத்திலுள்ள கிரகங்களின் தசா புக்தியும் நடைபெறும் சமயங்களில் கண்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். 12 லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர். சர லக்னம் என வர்ணிக்க பட கூடிய மேஷம், கடகம், துலாம், மகர  லக்னத்திற்கு 2,7ம் வீடுகள் மாரக ஸ்தானமாகும். ஸ்திர லக்னம் என வர்ணிக்கப்பட கூடிய ரிஷபம், சிம்மம், விருச்சிகம் கும்ப லக்னத்திற்கு 3,8ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும். உபய லக்னம் என வர்ணிக்கப்பட கூடிய மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்னத்திற்கு 7,11ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும்.

     ஜென்ம லக்னத்திற்கு மாரக ஸ்தானத்தில் உள்ள கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் மாரக ஸ்தானாதிபதியின் தசா புக்தி காலங்களிலும் கண்டங்கள் உண்டாக கூடிய சூழ்நிலைகள் ஏற்படும்.
     
அக்கிரகங்களை சுப கிரகங்கள் பார்வை செய்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை  கடக்க முடியும். அதுவே பாவ கிரக பார்வை, பாவ கிரக சேர்க்கைப் பெற்று பலவீனமாக இருந்து அந்த நேரத்தில் ஏழரை சனி அஷ்டம சனி போன்றவை நடைபெற்றால் மாரகத்தை எதிர் கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும்.
     
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7க்கு அதிபதியான சுக்கிரன் மாரகாதிபதியாவார். 2,7க்குரிய கிரகமான சுக்கிரனின் தசா புக்தி காலங்கிளலும் 2,7ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
     
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3,8 க்கு அதிபதிகள் மாரகாதிபதிகளாவார்கள் அதனால் 3ம் அதிபதி சந்திரனின் தசா புக்தி காலங்களிலும் 8ம் அதிபதி குருவின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது-. 3,8ல் அமையும் கிரகங்களின் தசா புக்தி காலத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
     
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,11க்கு அதிபதிகளான குரு, செவ்வாய் மாரகாதிபதிகளாவார்கள். இவர்களின் தசா புக்தி காலத்திலும் 7,11ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தல் கவனம் செலுத்துவது நல்லது.
     
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7க்கு அதிபதிகளான சூரியனும் சனியும் மாரகாதிபதியாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 2,7 அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
     
சிம்ம லக்னத்தில் பிறந்வர்களுக்கு 3, 8க்கு அதிபதிகளான சுக்கிரனும் குருவும் மாரகாதிபதியாவார்கள். இவர்களின் தசாபுக்தி காலங்களிலும்  3,8ல் அமையும் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கித்தில் கவனம் செலுத்துவது நல்லது.
     
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,11க்கு அதிபதிகளான குருவும் சந்திரனும் மாரகாதிபதிகளாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 7,11ல் அமையப் பெற்றுள்ள  கிரகங்களின்   தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும்.
     
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7க்கு அதிபதியான செவ்வாய் மாரகாதிபதியாவார். செவ்வாயின் திசா புக்தி காலங்களிலும் 2,7ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.
     
விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3,8க்கு அதிபதிகளான சனி, புதன் மாரகாதிபதியாவார்கள். இவர்களின் தசாபுக்தி காலங்களிலும் 3,8ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் 3,8ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும்.
     
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,11க்கு அதிபதிகளான புதன் சுக்கிரன் மாரகாதிபதிகளாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 7,11ல் அமைந்துள்ள கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.
     
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7க்கு அதிபதிகளான சனி, சந்திரன் மாரகாதிபதிகள் ஆவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 2,7ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் உண்டாகும்.
     
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3,8க்கு அதிபதிகளான செவ்வாய், புதன் மாராகதிபதிகளாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 3,8ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும்.
     
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,11க்கு அதிபதிகளான புதன் சனி ஆகியோர் மாரகாதியாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 7,11ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் ஆரோக்கிய பாதிப்புகள் எதிர் கொள்ள வேண்டும்.


please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar

No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.

1 comment:

mcckrishna said...

ஐயா சிம்ம லக்னத்திற்கு மாரகாதிபதிகள் குருவும் சுக்ரனும், குரு 7ல் அமைந்து, சுக்ரன் லக்னத்தில் அமைந்து திசா புத்தி நடத்தினால் அது எவ்வாறு இருக்கும்.