Saturday, March 23, 2013

காதலித்து திருமணம் திருமணத்திற்கு பின் காதல்

     
காதல் காதல் காதல் காதல் இல்லையேல் சாதல்  இது இன்றைய இளைஞர்களின் வேத வாக்கு. பள்ளி படிப்பா, கல்லு£ரி படிப்பா? எதைப் பற்றியும் கவலை இல்லை. எத்தனை மதிப்பெண் எடுத்திருக்கிறோம் என்பதை விட யாரின் மனதில் இடம் பிடித்திருக்கிறோம் என்பது தான் சவால். காதல் யாரிடமும் உத்தரவு பெற்று வருவதில்லை. காற்றுப் புகாத இடத்தில் கூட காதல் புகுந்து விடும். கோடி இளம் உள்ளங்களை இந்த காதல் தினமும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. கல்லாதவன் கூட கவிஞனாவான். காதல் வயப்பட்டால் பக்தியே இல்லாதவன் கூட நெற்றியில் விபூதி வைப்பான் தன் காதலியை வசப்படுத்த சந்தேகமென்றால் இந்த மாதம் 14ம் தேதியன்று பாருங்கள். தந்தை தினம், தாய் தினம், குழந்தைகள் தினம் என எத்தனையோ தினங்கள் வந்தாலும் இந்த காதலர் தினம் மட்டும் தான் களைகட்டும். கடற்கரை, பூங்கா, ஹோட்டல் இன்னும் எத்தனை எத்தனையோ இடங்களில் இளம் ஜோடிகளை மலர் கண்காட்சி போல விதவிதமாக பார்க்கலாம். இளம் உள்ளங்களே கண்டதும் காதல் கொள்ளாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து, தக்க வயதில் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவிற்கு உங்களை வலிமை படுத்திக் கொண்ட பின்பு திருமண பந்தத்தை ஆரம்பியுங்கள். முடிந்த வரை பெற்றோரின் மனம் நோகாமல் அவர்களின் சம்மதத்துடன் வாழ்க்கையை அனுபவியயுங்கள். இது தான் உங்களுக்கும் நல்லது. உங்களை சார்ந்தவர்களுக்கும் நல்லது.
     
காதல் என்ற வளையத்திற்குள் வருவதற்கு அவரவரின் ஜெனன ஜாதக ரீதியாக 5ம் பாவமே முக்கிய காரணமாக அமைகிறது. ஒருவரை பார்த்தவுடன் மனதில் ஏற்படக் கூடிய ஈர்ப்பு தன்மை, உணர்வுகள், காதல் போன்றவற்றிற்கு 5ம் பாவத்தில் அமையக் கூடிய கிரகங்களே காரணமாகிறது.
     
5ம் பாவத்தில் சனி, ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் அமையப் பெற்று, 5ம் அதிபதியும் பாவ கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ, பெற்றிருந்தால் காதல் வயப்படக் கூடிய அமைப்பு, தான் விரும்பியவரையே திருமணம் செய்து கொண்டு வாழும் யோகம் போன்ற யாவும் உண்டாகும். அது போல 5ல் பாவிகள் அமையப் பெற்று 7ம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் 5,7க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும் ஜாதகருக்கு காதல் வயப்படக் கூடிய அமைப்பு உண்டாகும். 5,7க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் காதல் திருமணம், கலப்பு திருமணம் செய்யக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.
     
நவ கிரகங்களில் ஆண்களுக்கு களத்திர காரகன் சுக்கிரனாவார். பெண்களின் களத்திர காரகன் செவ்வாயாவார். மனம் மற்றும் அறிவு சம்மந்தப்பட்ட விஷயத்திற்கு காரகன் சந்திரனாவார். ஒருவரது ஜாதகத்தில் 5,7 செவ்வாய், சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள்  அமைந்து சனி ராகுவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், சனி பார்வை 5,7க்கு இருந்தாலும் வேறு மதத்தவரை காதலித்து மனம் முடிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். 
     
ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 5ல் 1,7க்கு அதிபதிகள் இருந்தாலும் 5ம் அதிபதி பாவியாக இருந்து ஜென்ம லக்னத்தில் அமைந்து 7ம் வீட்டை பார்வை செய்தாலும் காதலித்து திருமணம் செய்யும் வாய்ப்பு, கலப்பு திருமணங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். குறிப்பாக 5,7ல் சனி ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் வேறு மதத்தவரையோ, இனத்தவரையோ காதலித்து திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். 5,7க்கு அதிபதிகள் கேது சேர்க்கை பெற்றாலும் கேதுவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் காதலித்தவரையே மணம் முடித்துக் கொள்வார்கள்.
     
காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டுமா? ஏன் திருமணம் செய்து கொண்டு காதலிக்கக் கூடாதா-? என் கேட்பவர்களுக்கு
     
5ம் பாவமானது பாதிக்கப்படாமல் இருந்து உறவுகளை குறிக்கக் கூடிய கிரகங்களாகிய சூரியன் செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்கள் 5ல் அமையப்பெற்று பாவ கிரக சேர்க்கை பார்வை இன்றி குரு போன்ற சுப கிரக சேர்க்கை பார்வை பெற்றால் பெற்றோர்களும் பெரியோர்களும் பார்த்து நிச்சயம் செய்தவரையே மணமுடித்துக் கொண்டு திருமணத்திற்கு பின்பு ஒருவரையருவர் காதலித்து அன்புடன் வாழ முடியும்.
     
நவ கிரகங்கள் நம்மை ஆட்டி வைப்பதால் அதற்கேற்றார் போல நாமும் ஆடுகிறோம். காதல் என்ற பெயரில் உடலை மட்டும் ரசிக்கும் வேஷதாரிகளை தவிர்த்து உள்ளத்திற்கு மதிப்புக் கொடுத்து வாழுங்கள்.


please contact my postal adress  
Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.

No comments: