Thursday, April 25, 2013

எந்த தசா யாருக்கு யோகம்?




      இன்றைய வாழ்வில் மனிதனின் அன்றாட வாழ்க்கை அனைத்தையும் நவகிரகங்கள் ஆட்டிப் படைக்கின்றன. ஜெனன கால கிரக அமைப்பு கொண்டு ஜாதகம் துல்லியமாக கணிக்கப்பட்டால் ஒருவரது அன்றாட வாழ்க்கையினை தெள்ளத் தெளிவாக கணித்து விடலாம்.

      குறிப்பாக ஒரு ஜாதகத்தில் பலா பலன்களை நிர்ணயம் செய்கின்ற போது ஜனன கால தசா புக்தி இருப்பைக் கொண்டு அடுத்தடுத்து வரக்கூடிய திசை மற்றும் புத்திகளைக் கொண்டு பலா பலன்களை நிர்ணயம் செய்கின்றோம். குறிப்பாக கோட்சார பலன்கள் ஐம்பது சதவிகிதமும் தசா புக்தி பலன்கள் 50 சதவீதமும் பலன்களை வழங்கும். குறிப்பாக தசா புக்தி பலன்களை பொறுத்த வரையில் நடப்பில் உள்ள திசையானது ஜென்ம லக்னத்திற்கு யோகத்தைக் கொடுக்கக் கூடிய கிரகத்தின் திசையாக இருந்தால் தான் அனுகூலமான பலன்களை தரும்.

      குறிப்பாக ஜென்ம லக்னத்திற்கு நட்பு கிரகமாக தசா நாதன் இருந்தாலும் அவருக்கு உரிய சாதகமான இடத்தில் இருந்தாலும் நட்பு வீட்டில் அமைந்தாலும் மட்டுமே நற்பலனை வழங்குவார். அதுவே பகை வீடாக இருந்தால் அனுகூலப்பலன்கள் அடைய இடையூறுகள் உண்டாகும். உதாரணமாக சனி பகவான் 3,6,10,11ல் அமையப் பெற்றால் சனி திசையில் பலா பலன்களை வாரி வழங்கும் என்றாலும் அதுவே சனியானவர் தனக்கு பகை கிரகமான செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்களின் வீட்டில் அமையப் பெற்று தசா புக்தி நடைபெற்றால் கெடு பலன்களை வழங்குவார்.

      உதாரணமாக மிதுன லக்னத்திற்கு சனி பகவான் நட்பு கிரகம் என்றாலும் 6 ஆம் வீட்டில் அமையப் பெற்றால் யோகம் வழங்க வேண்டுமென்றாலும் செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் அமைவதால் அனுகூலப்பலன்களை வழங்காமல் நிறைய எதிர்ப்பு பகைமை எல்லாம் உண்டாக்குவார்.

      அது போல கேந்திர திரிகோணங்களில் அமைகின்ற கிரகங்களின் தசா புக்தி அனுகூலமான பலன்களை உண்டாகும் என்றாலும் தசா நாதன் பாதகாதிபதி சாரமோ 6,8,12க்கு அதிபதிகளின் சாரமோ பெற்றிருந்தால் அனுகூலமற்ற பலன்களை வழங்குவார். பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு நட்பு கிரகங்களின் தசா புக்தியில் தான் அனுகூலமான பலன்களை அடைய முடியும்.

      உதாரணமான நவ கிரகங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகமாக விளங்குகிறார்கள். அது போல சனி, சுக்கிரன், புதன் போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகமாக விளங்குகிறார்கள். பொதுவாக ஜென்ம லக்னாதிபதியும் தசா நாதனும், ஒருவருக்கொருவர் நட்பு கிரகமாக இருந்தால் அனுகூலமான பலனை எளிதில் அடைய முடியும்.
     
பொதுவாக ஒருவருக்கு ஜென்ம கால முதல் திசை முதல் நடப்பில் இருக்கக் கூடிய தசையானது. 3வது திசையாக இருந்தால் 3வது திசையில் பெரிய அளவிற்கு முன்னேற்றங்களை அடைய முடியாது. ஒருவருக்கு 3வது திசையானது எவ்வளவு தான் யோகக்காரனாக இருந்தாலும் அனுகூலமான பலன்களை அடைய முடியாது. உதாரணமாக அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக கேது திசை வரும் 2வது திசையாக சுக்ர திசையும் 3வது திசையாக சூரிய திசையும் வரும்.
     
கேது திசையில் பிறந்தவர்களுக்கு 3வது திசையாக சூரிய திசை வருவதால் சூரிய திசை பிரகாசமான பலன்களைத் தராது. அது போல உதாரணமாக புனர்பூசம் விசாகம் பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக குரு திசையும் 2வது திசையாக சனி திசையும் 3வது திசையாக புதன் திசையும் வரும் புதன் திசை 3வது திசை என்பதால் எவ்வளவு திறமை இருந்தாலும் குரு திசையில் பிறந்தவர்களுக்கு புதன் மகா திசை நட்பில் இருக்கும் போது பெரிய அனுகூலத்தைத் தராது.
     
பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களிலும் தன லாப ஸ்தானத்திலும் அமைகின்ற கிரகங்கள் பகை  கிரக சேர்க்கை பெறாமல் வலுப் பெற்று அமையப் பெற்றால் அனுகூலமான பலன்களை வழங்குவார்கள்.

      அதுவே பலம் பெற்ற கிரகமானது தசா நாதனுக்கு நட்பு கிரகமாக அமையப் பெற்று புத்தி நடைபெற்றால் அந்த யோகத்தின் பலனை வர்ணிக்க முடியாது. பொதுவாக திசையானது சுக்கிரன், புதன் சனி போன்றவை பலம் பெற்று இருந்தால் அந்த திசை காலங்களில் யோகத்தின் பலனை எவராலும் வர்ணிக்க முடியாது.

தொடர்புக்கு

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 
7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com 
murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com



Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No -
 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078

Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No -
 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078



Tuesday, April 23, 2013

இறைபணியில் ஈடுபடும் இதயங்கள்


                
                

     இன்றைய சமுதாயத்தில் தெய்வீக ஆன்மீக பணிகள் சிறப்பாக நடைபெற்றால் தான் நாட்டில் அமைதி உண்டாகும். இறை பணிகள் செய்வது என்பது மிகச்சிறந்த பாக்கியம் ஆகும். அப்படிப்பட்ட பாக்கியமாவது எல்லாருக்கும் எளிதில் கிடைக்காது குறிப்பாக ஜெனன ஜாதகமானது தெய்வீகத்திற்கு ஏற்ற ஜாதகமாக அமைவதற்கு ஏற்றார் போல் திசா புக்தியும் சாதகமாக நடைபெற்றால் தான் இறை பணி தெய்வீக பணிகளில் ஈடுபடுவது கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது போன்ற நல்ல காரியங்களை செயல்படுத்த முடியும்.
     
குறிப்பாக இறைப்பணி என்பது அனைத்து மதத்திற்கும் பொதுவானது. அவரவர் மதத்திற்கு ஏற்றவாறு இறை பணிகளில் மக்கள் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக தேவ குரு என வர்ணிக்கக்கூடிய குரு பகவான் ஒரு ஜாதகத்தில் வலுப் பெற்றால் மட்டுமே அமைதியான தெய்வீக எண்ணம் அந்த ஜாதகருக்கு ஏற்படும். அது போல ஞானக்காரகன் கேது பகவான் ஒருவர் ஜாதகத்தில் வலுப் பெற்று அமைவதும் கேது குரு நட்சத்திரத்தில் அமைவது நல்ல அமைப்பாகும்.
    
குறிப்பாக ஒருவர் ஜாதகத்தில் 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகும். 5ம் வீட்டில் குரு கேது போன்ற கிரகங்கள் அமைவதும் 5ம் வீடு குரு வீடாக அமைவதும் 5ல் பாவிகள் அமையப் பெறாமல் 5ம் வீட்டை குரு போன்ற சுப கிரகங்கள் பார்வை செய்தால் அந்த ஜாதகருக்கு தெய்வீக எண்ணும் இறைப்பணி கோயில் கட்டும் யோகம் உண்டாகும். குறிப்பாக ஜென்ம லக்கினம் அல்லது சந்திரனுக்கு 5ல் குரு கேது அமைவதும் இவர்களுடன் நட்பு கிரகங்களான சூரியன் சந்திரன் செவ்வாய் போன்றவை அமைந்தால் இறை பணியில் ஈடுபாடு உண்டாகும். அது மட்டுமின்றி குரு கேது போன்ற கிரகங்களுடன் சுக்கிரன் சனி ராகு போன்ற கிரகங்கள் சேர்க்கை பெறுவதும் 5ம் வீட்டில் சனி ராகு போன்ற கிரகங்கள் வலிமையாக அமையப் பெற்று இருந்தால் இறை பணி தெய்வீக காரியங்களில் ஈடுபாடு குறைவாக இருக்கும். அது மட்டும் இன்றி ஒருவர் ஜாதகத்தில் குரு கேது போன்ற கிரகங்களின் திசை நடைபெற்றால் குரு கேது சம்மந்தம் பெற்ற சூரியன் சந்திரன் செவ்வாய் போன்ற கிரகங்களின் திசா நடைபெற்றாலும் கண்டிப்பாக ஆன்மீக தெய்வீக பணிகளில் ஈடுபடும் நிலை உண்டாகும்.
     பொதுவாக 5,9ல் வலுப் பெற்ற குரு மற்றும் குரு சேர்க்கை பெற்ற சூரியன் சந்திரன் செவ்வாய் போன்ற கிரக திசா காலங்களில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும் யோகம் உண்டாகும்.

தொடர்புக்கு

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading
please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001.9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com




Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078


Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078





Sunday, April 21, 2013

பஞ்சம ஸ்தானமும் புத்திர பாக்யமும்



       
ஜென்ம லக்னத்திற்கு பஞ்சம ஸ்தானம் என வர்ணிக்கப்டும் 5 ஆம் வீடு மிகவும் சக்தி வாய்ந்த வீடாகும் 5 ஆம் வீட்டை புத்திரன், புத்திரி, பூர்வீகம், உயர் கல்வி போன்றவைகளை மிகத் தெளிவாக அறிய உதவும் பாவமாகும். போட்டி பொறாமைகள் நிறைந்த இவ்வுலகில் நமது பூர்வீகம் பலமாக இருந்தால் தான் இந்த எந்திர உலகில் எளிதில் ஜீவிக்க முடியும்.
     
அதாவது மானிடனாய் பிறப்பதில் பூர்வ புண்ணிய பலத்துடன் பிறப்பது மிகவும் நல்லது. நம் மூதாதையர் முன்னோர்கள் நமக்கென சொத்து, சுகங்கள், சேர்த்து வைப்பது மட்டுமின்றி சில புண்ணியங்களை சேர்த்து வைத்திருந்தால் தான் எந்த வித கெடுதியும் இன்றி சுக போக வாழ்க்கையினை இவ்வுலகில் வாழ முடியும்.
     
சொத்துக்கள் ஒரு புறம் இருந்தாலும் நம் முன்னோர்கள் எதாவது கெடுதலை செய்து விட்டால் அது நம்மையும் நம் சந்தியினரையும் அதிகமாக பாதிக்கும். ஜாதகம் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் ஒருவரது பூர்வ புண்ணியம் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களது வாழ்வு சங்கடங்கள் நிறைந்ததாகி விடும்.
     
ஜாதகத்தில் புத்திர தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், போன்றவை ஏன் ஏற்படுகின்றது என்று பார்த்தால் நம் முன்னோர்கள் யாராவது நாகத்தை அடித்துக் கொன்று விட்டாலும் இரு நாகங்கள் இணைந்து சந்தோஷமாக இருக்கின்ற பொழுது அதற்கு இடையூறுகளை ஏற்படுத்தி விட்டாலும் இது போன்ற நாக தோஷத்தால் நாகம் என வர்ணிக்கப்படும் ராகு பகவானால் தோஷங்கள் உண்டாகி புத்திர பாக்கியம் பெறத் தடை திருமணத் தடை போன்ற அனுகூலமற்ற பலன் உண்டாகிறது. இதற்கு பரிகாரமாக ராகு, கேதுவுக்கு பரிகாரங்கள் செய்கின்ற போது கெடுதிகள் விலகி நல்லது உண்டாகிறது. அது போல ஒருவரது தந்தை, பாட்டன் போன்றோர் மற்ற பெண்களின் வாழ்க்கையில் சில கெடுதிகளை செய்து விட்டால் அதுவே களத்திர தோஷமாக மாறி திருமணத் தடை திருமணம் அமைந்தாலும் குடும்ப வாழ்வில் ஒற்றுமை இல்லாத நிலை உண்டாகிறது.

      இது போன்ற கெடுதிகள் எல்லாம் விளக்கும் பாவமாக விளங்குவது 5 ஆம் பாவமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆம் வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும் 5 ஆம் அதிபதி நீசம் பெற்று பகை பெற்றிருந்தாலும் 5 ஆம் அதிபதி சனி ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் பூர்வீகம் பாதிக்கப்படுகிறது. அதாவது பூர்வீக வழியில் ஜாதகருக்கு அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகிறது. அது மட்டுமின்றி பூர்வீக வழியில் அதாவது உறவினர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகிறது-. 5 ஆம் வீடு பூர்வீக ஸ்தானம் மட்டுமின்றி புத்திர ஸ்தானமும் என்பதால் தகுந்த காலத்தில் நல்ல குழந்தைகளை ஈன்றெடுக்க முடியாத அவல நிலை உண்டாகிறது.
     
பொதுவாக இவ்வளவு சிறப்பு வாய்ந்து 5 ஆம் வீடு பலம் பெற்றிருந்தால் நல்ல புத்திரர்களை ஈன்றெடுக்கும் அமைப்பு பூர்வீகத்தால் ஏற்றம், உயர்வு உண்டாகும். குறிப்பாக 5 ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 5ஆம் வீட்டில் குரு, சுக்கிரன் சந்திரன், புதன் போன்ற சுப கிரகங்கள் அமையப் பெற்றாலும் 5 ஆம் வீட்டை சுபர் பார்வை செய்து 5ல் பாவிகள் இல்லாமல் இருந்தாலும் அந்த ஜாதகரின் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து ஜாதகருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி ஜாதகரின் தலைமுறைக்கு பின்பும் அழியாமல் இருக்கும். அது மட்டுமின்றி 5 ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் ஜாதகரின் வாழ்க்கையானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அது மட்டுமின்றி அழகிய குழந்தைகளை ஈன்றெடுக்கும் அமைப்பு, புத்திரர்களால் மகிழ்ச்சி, உண்டாகும்.

தொடர்புக்கு

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 
7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com 
murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com



Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No -
 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078

Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No -
 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078

Friday, April 19, 2013

அதிகாரப் பதவி






நடைமுறையில் நாம் பார்க்கையில் பலர் ஊழியம் செய்து வாழ்கிறார்கள். அதே நேரம் சிலருக்குத் தான் அதிகாரம் செய்யக் கூடிய பதவிகள் கிடைக்கிறது. அதிகாரப் பதவிகளில் பல வகை இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு துறை சார்ந்த இராணுவம், போலீஸ், பாதுகாப்பு சார்ந்த துறைகளில் பணி புரியும் யோகம் சிலருக்கு தான் உண்டாகிறது. அது யாருக்கு ஏற்படுகிறது. அங்காரகன் என வர்ணிக்கப்படும் செவ்வாய் பகவான் யார் ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்கின்றாரோ அவர்களுக்கு தான் அந்த யோகம் உண்டாகிறது. நவ கிரகங்களில் செவ்வாயை சேனாதிபதி என்பார்கள். சண்டை, போர், நெருப்பு, எதிரிகளை அழித்தல் சண்டை பயிற்சி போன்றவைக்கெல்லாம் செவ்வாய் தான் காரகன் ஆவார்.
     
குறிப்பாக செவ்வாய் வலு இழந்து பாவிகள் சேர்க்கை பெற்று கோட்சார ரீதியாக சஞ்சாரம் செய்யப்படுகின்ற போது தான் நாட்டில் அசம்பாவிதங்கள், போர் தீவிரவாதத்துவம் அதிகரிக்கும் நிலை போன்ற செயல்கள் நடக்கின்றன. இது போன்ற செயல்களுக்கு எல்லாம் அதிபதியாகிய செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் 10 ஆம் வீட்டில் வலிமையாக அமையப் பெற்றால் ராணுவத் துறையில் பணி புரியும் அமைப்பு உண்டாகிறது.
     
குறிப்பாக ஜென்ம லக்னத்திற்கு 10 ஆம் வீட்டில் செவ்வாய் வலுவாக அமையப் பெற்றால் ராணுவம் போலீஸ் போன்ற துறைகளில் பணி புரியும் அமைப்பு உண்டாகிறது. குறிப்பாக கடகம், விருச்சிகம், மீனம் ராசி நேயர்களுக்கு 10ல் செவ்வாய் அமையப் பெற்றால் ராணுவம் பாதுகாப்பு தொடர்புடைய துறைகளில் பணி புரியும் யோகம் உண்டாகும். செவ்வாய் 10 ஆம் வீட்டில் திக் பலம் பெறுகிறார். இதனால் ஒருவருக்கு அதிகாரம் செய்யக் கூடிய பலம் உண்டாகிறது.

      10ல் செவ்வாய் பாவிகள் சேர்க்கைப் பெற்று அமையப் பெற்றால் குறிப்பாக வலு இழந்து அமையப் பெறுவது நல்லதல்ல. அப்படி அமையப் பெற்றால் சில சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நிலை உண்டாகும். 10ல் செவ்வாய் 10 ஆம் அதிபதி சேர்க்கை பெற்று அமையப் பெற்றால் அரசாங்கத்தில் பெரிய உயர் பதவி கிடைக்கும். 10 ஆம் அதிபதி செவ்வாய் நவாம்சத்தில் அமையப் பெற்றால் அந்த ஜாதகர் பூமி, நெருப்பு, எண்ணெய் ராணுவம், போலீஸ், போன்ற துறைகளில் பணி புரியும் நிலை உண்டாகும்.
    
10ல் செவ்வாய், புதன் அமையப் பெற்றால் விஞ்ஞானி ஆகும் நிலை விசாரணை அதிகாரி, பொறியியல் வல்லுனர் ஆகும் நிலை உண்டாகும். 10 ஆம் வீட்டில் செவ்வாய், குரு அமையப் பெற்றால் ராணுவத்துறையில் பணி புரியும் நிலை உண்டாகும். அது மட்டுமின்றி மருத்துவமனையில் பணி புரியும் அமைப்பும் உண்டாகிறது. சனி, செவ்வாய், இணைந்து 10ல் அமையப் பெற்றால் ராணுவம், போலீஸ், பாதுகாப்பு, மருத்துவமனை போன்ற துறைகளில் கூலி ஆளாக வேலை செய்யும் நிலை உண்டாகும்.
     
செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சி உச்சம்  பெற்றிருந்தாலும் ஜென்ம லக்னாதிபதி 10 ஆம் அதிபதியாக இருந்தாலும் செவ்வாய் 10 ஆம் வீட்டை பார்வை செய்தாலும்  10ஆம் அதிபதி சேர்க்கை பெற்றாலும் 10 ஆம்  அதிபதி செவ்வாயின் நவாம்சத்தில் இருந்தாலும் இந்த ஜாதகர் போலீஸ், ராணுவம் பாதுகாப்பு தொடர்புடைய துறைகளில் பணி புரியக் கூடிய நிலை உண்டாகும். 10 ஆம் வீட்டில் செவ்வாய் அதி பலம் பெற்றிருந்தால் இது போன்ற பணிகளில் சிறந்து விளங்கக் கூடிய நிலை உண்டாகும்.

தொடர்புக்கு

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com




Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078


Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078

Monday, April 8, 2013

அட்சயதிருதி கிராம் தங்கம் கிலோவாகும் அதிசயம்


     சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வருகின்ற மூன்றாவது திதியான வளர்பிறை திதியைத் தான் அட்சயதிருதி என்கிறோம். அன்று சூரியன் மேஷத்தில் உச்சம் பெறுகிறார். அதே நேரத்தில்  சந்திரன் ரிஷபத்தில் உச்சமடையும் பொழுது தான் அட்சயதிருதி வருகிறது.

     தந்தைக்கு அதிபதி சூரியன் தாய்க்கு அதிபதி சந்திரன். எனவே அன்றைய தினம் பெற்றோரை வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுவது அவசியம்.

     இந்த அக்ஷய திருதியை நன்னாளை பொன்னாளாக போற்றி கொண்டாடுவது மக்களின் பழக்கமாக உள்ளது. அதாவது இந்நாளில் ஒரு கிராம் தங்கம் வாங்கினால் கூட அடுத்த அக்ஷய திருதியை வருவதற்குள் அது பத்து, இருபது சவரம் வாங்கக்கூடிய யோகத்தை உண்டாக்கும். பழங்காலங்களில் ஒரு சில சமுதயாத்தினர் மட்டுமே கொண்டாடிய இந்த அக்ஷய திருதியை தற்போது ஜாதி, மத தேபமின்றி யாவரும் பொன் நகைகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
                                      
அட்சயதிருதி பூஜை

     வறுமையில் வாடுபவர்களும் அக்ஷய திருதியை நாளுக்காக சிறுக சிறுக சேமிக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. அக்ஷய திருதியை நாளில் நகைகள் வாங்குவது மட்டுமின்றி பித்ருக்களுக்கும் சாந்தி செய்வது வழிபாடு செய்வது நன்மையளிக்கும். சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்து வெற்றிளை தாம்பூலம், மஞ்சள் கயிறு, ரவிக்கைத் துணி போன்றவற்றையும் கொடுத்து தானம் செய்யலாம். லட்சுமி தேவியை வழிபாடு செய்வது, தேவிக்குரிய ஸ்தோத்திரங்களை உச்சரிப்பது போன்றவற்றாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும்.

     அட்சய திருதியை அன்று லட்சுமி சமேத நாராயணனை வணங்க வேண்டும். விஷ்ணுவுக்கு துளசியுடன் கோதுமை போன்ற பொருளைப் படைக்க வேண்டும். கோதுமையில் செய்த இனிப்பு பண்டங்களையும் படைக்கலாம். அதன் பின்பு அவற்றை பிராமணர்களுக்கும் ஏழைகளுக்கும் தானமாக வழங்க வேண்டும்.

     மோர், நீர், பானகம், தானியங்கள் போன்றவற்றை தானம் செய்வதாலும் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். விபத்துகளை தவிர்க்கும். கஞ்சிக்கே வழியில்லாமல் வறுமையில் வாடிய குசேலன் கண்ணனை சந்தித்து தான் கொண்டு வந்த அவலை கொடுத்து திடீரென்று குபேரன் ஆனது இந்த அக்ஷய திருதியை நன்னாளில் தான். சித்திரை மாதம் முழுவதும் விஷ்ணுவுக்குரியது என்பதால் விஷ்ணு பகவானை வழிபடுவதன் மூலமும் நற்பலன்கள் அமையும்.

     நாமும் பிறருக்கும் நம்மால் முடிந்த உதவிகளை அள்ளி கொடுக்க முடியாவிட்டாலும் கிள்ளி கொடுத்தாவது நமது பாவங்களை சற்று குறைத்துக் கொள்வோம்.

     இப்பொழுதெல்லாம் கோயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதை கண்கூடாகவே பார்க்கிறோம். ஏன்? வாழ்வில் வளம் பெறவும் எந்த சேதங்களும் தங்களை தாக்காதிருக்கவும் தான். நாட்டில் பாவங்களை பெருக பெருக பூமித்தாயால் பாரம் தாங்க முடியாமல் சுனாமி, பூகம்பம் போன்றவை உண்டாகி பெரியளவில் இழப்புகளை சந்தித்து கொண்டிருக்கும் இவ்வேளையில் உதவிகளை செய்ய முடியாவிட்டாலும் நம்மால் முடிந்த தன, தருமங்களை செய்வோம்.

     இவ்வருடம் திருதியை திதியானது 12.5.2013 ஞாயிற்றுகிழமை காலை 09.49 மணியிலிருந்து 13.5.2013 திங்கட்கிழமை பகல் 11.49 மணி வரை உள்ளது.

     12.5.2013 ஞாயிற்றுகிழமை அன்று பிற்பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை. மதியம் 2.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை , மாலை 6,00 மணி முதல் 7.00 மணி வரை இரவு 09.00 மணி முதல் 11.00 மணி வரை.   13.5.2013 திங்கட்கிழமை அன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை நகைகள் வாங்க உத்தமம்.

தொடர்புக்கு

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 
7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com 
murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com



Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No -
 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078

Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No -
 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078


Saturday, April 6, 2013

குருவால் உண்டாகும் யோகம்






     குரு பார்க்க கோடி புண்ணியம், குரு பகவான் நவ கிரகங்களில் சுப கிரகமாக விளங்குகிறார். பொதுவாக நாம் குருவால் ஏற்றுக் கொள்வது முதலில் மாதா பிதாவை பிறகு நமக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களை மற்றது நமக்கு ஒரு தொழிலையோ, நல்ல பண்பையோ கற்றுக் கொடுக்கும் மனிதர்களை  அதுபோல நமக்கு நல்லது நினைப்பவர்களையும், குருவாக ஏற்றுக் கொள்கிறோம். அது போல தான் நவ கிரகங்களில் முதன்மை பங்கு வகிப்பவராகவும் சுப கிரகமாகவும் குரு பகவானை குறிப்பிடுகிறோம். யோகங்களை கொடுப்பதிலும், அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்குவதிலும் குரு முதன்மையான பங்கு வகிக்கிறார். எந்தவொரு காரியத்தை செய்வதென்றாலும் இறை வணக்கம், குரு வணக்கம் செய்து விட்டு தான் அந்த காரியத்தையே தொடங்குவோம் அது போல
                         
குரு பிரம்மா குரு விஷ்ணு                         
குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பர பிரம்ம தஸ்யை
ஸ்ரீ குருவே நமஹ

என குருவின் நாமத்தை சொல்லி அவரால் உண்டாகக் கூடிய யோகங்களைப் பற்றி காண்போம்.

கஜகேசரி யோகம்

     ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் குரு காணப்பட்டால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. கஜம் என்றால் யானை கேசரி என்றால் சிங்கம். பல யானைகளுக்கு மத்தியில் வாழக்கூடிய சிங்கம் போன்ற வலிமை இந்த யோகத்தால் உண்டாகும். நீண்ட ஆயுள் புகழ், செல்வம், செல்வாக்கு, உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் எடுக்கும் காரியங்களில் வெற்றி, போன்ற  உன்னதமான நற்பலன்கள் அமையும். அரசியலில் உயர்ந்த பதவிகளை வகிக்க கூடிய யோகம் உண்டாகும்.
ஹம்ச யோகம்
     குரு பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரமாகிய 4,7,10ல் ஆட்சி, உச்சம் பெற்று காணப்பட்டால் ஹம்ச யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் நல்ல உடலமைப்பு மற்றவர்களால் மதிக்கப்படும் உன்னத நிலை ஒழுங்கான வாழ்வு போன்ற நற்பலன்கள் யாவும் உண்டாகிறது.

குரு மங்கள யோகம்
     
குருவுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் செவ்வாய் காணப்படுவதால் குரு மங்கள யோகம் உண்டாகிறது-. இதனால் பூமி, வீடு, வாகனம் போன்றவை சேரும் யோகம். குறிப்பாக நிலபுலன்களால் ஜாதகருக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

குரு சந்திர யோகம்
   
  சந்திரனுக்கு 1,5,9ல் குரு அமையப் பெற்றால் குரு சந்திர யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் உயர்ந்த அந்தஸ்து பெருமை புகழ் போன்ற நற்பலன்கள் உண்டாகும். இந்த யோகத்தால் கல்விக்கு சம்மந்தமில்லாத தொழிலில் யோகம் கொடுக்கும்.

சகடை யோகம்
   
  சந்திரனுக்கு 6,8,12ல் குரு மறைவு பெற்றால் சகடை யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்க்கை வண்டி சக்கரம் போல ஏற்றத் தாழ்வுகள் உடையதாக இருக்கும். ஆனால் குரு அமையப் பெற்றிருக்கும் வீடு சுபர் வீடாக இருந்தால் பெரிய கெடுதிகள் ஏற்படாது.
கோட்டீஸ்வர யோகம்

கேதுவை குரு பார்வை செய்தாலும், கேதுவும் குருவும் இணைந்து காணப்பட்டாலும் கோட்டீஸ்வர யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் திடீர் தனச்சேர்க்கை, எதிர்பாராத அதிர்ஷ்டம், தெய்வீக ஆன்மீக பணிகளில் ஈடுபாடு போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

சண்டாள யோகம்

ராகுவை குரு பார்த்தால் சண்டாள யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண்டாக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் உண்டாகி மகிழ்ச்சி அளிக்கும்.

சந்திராதிபதி யோகம்

சந்திரனிலிருந்து  6,7,8ல் குரு,சுக்கிரன், புதன் போன்ற சுப கிரகங்கள் அமையப் பெற்றிருந்தால் சந்திராதிபதி யோகம் உண்டாகிறது. இதனால் மனமகிழ்ச்சி சத்துரு தொல்லையின்றி இருந்தல், உயர்ந்த பதவி, தீர்க்காயுள், நல்ல மனோதிடம், பெயர், புகழ் செல்வம், செல்வாக்கு போன்ற யாவும் சிறப்பாக அமையும்.

லக்னாதிபதி யோகம்

ஜென்ம லக்னத்திலிருந்து குரு பகவான் 6,7,8ல் சுக்கிரன் புதன் போன்ற சுப கிரகங்களின் சேர்க்கைப் பெற்றால் லக்னாதிபதி யோகம் உண்டாகிறது. இந்த யோக அமைப்பால் உயர்ந்த பதவி, சந்தோஷமான வாழ்வு, பெரிய மனிதர்களின் தொடர்பு, நீண்ட ஆயுள் போன்ற உன்னதமான நற்பலன்கள் உண்டாகும்.

வசுமதி யோகம்

ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ குரு பகவான் 3,6,10,11 ஆகிய இடங்களில் சுக்கிர புதன் சேர்க்கை பெற்றிருந்தால் வசுமதி யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் ஜாதகர் தன் சொந்த முயற்சியால் முன்னேறுவார். செல்வம், செல்வாக்கு யாவும் சிறப்பாக அமையும்.
                                                                                             

முருகு பாலமுருகன், 0091 7200163001

Wednesday, April 3, 2013

எதிர்ப்பை சமாளிக்கும் செயல் திறன் பெற






     எல்லோரும் முடிந்த வரை உழைத்து முன்னேற வேண்டும் என்று விரும்புகிறோம். குந்தித்தின்றால் குன்றும் மாளும் எவ்வளவு  சொத்து இருந்தாலும் உட்கார்ந்து சாப்பிட்டால் எவ்வளவு நாள் இருக்கும் என்பது பழமொழி எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் உழைத்தால் தான் நற்பலனும் எதிர் கால வாழ்க்கையும் நன்றாக இருக்கும். நாம் உழைக்கத் தயாராக இருந்தாலும் சில நேரங்களில் உழைப்பும் பயன் இல்லாமல் போய் விடுகிறது. அது என்னவென்றால் நம் உழைப்புக்கு சமுதாயத்தில் உண்டாகும் எதிர்ப்பு தான். எதிர்ப்பு ஏற்படுவதால் நம் முன்னேற்றத்திற்கு பல்வேறு இடையூறு உண்டாகிறது. சிலருக்கு எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளைச் சமாளிப்பதே ஒரு முக்கியச் செயலாகி அவர் தனது சொந்தத்                   தொழிலைச் செய்ய முடியாமல் போய் விடும். இவ்வளவு கொடுமையான எதிர்ப்பு யாருக்கு ஏற்படும். யாரால் எப்போது ஏற்படும்?

     ஜோதிட ரீதியாக எதிர்ப்பு யாருக்கு ஏற்படுகிறது என்று பார்த்தால் ஜெனன லக்கினத்தில் 6ம் அதிபதி அதிபலம் பெற்று ஜென்ம லக்கினாதிபதி பலம் இழந்து காணப்படும் நிலையில் எதிர்ப்பு ஏற்படுகிறது. 

ஜெனன ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 6ம் வீட்டை வைத்து எதிர்ப்பு பற்றியும், எதிர்ப்பு யார் மூலம் ஏற்படும் என்பதையும் தெளிவாகக் கூற முடியும். பொதுவாக 6ம் வீட்டின் அதிபதியை விட ஜென்ம லக்கினாதிபதி பலம் பெற்று இருந்தால் எதிர்ப்பு இல்லாமல் இருக்கும். அது போல 6ம் வீடு உபஜய ஸ்தானம் என்பதால் 6ல் சனி, செவ்வாய், சூரியன், ராகு போன்றவை பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் எதிர்ப்பை சமாளிக்கும் வலிமை எதிரிகளைப் பந்தாடும் பலம் உண்டாகும். 6ம் அதிபதி பலம் இழந்து காணப்பட்டாலும் 6ம் வீட்டை சனி, செவ்வாய் போன்ற பாவிகள் பார்வை செய்தாலும் எதிரிகளைச் சமாளிப்பதே மிகப் பெரிய வேலையாகி விடும்.
     
பொதுவாக யாரால் எதிர்ப்பு உண்டாகிறது என்பதைப் பார்க்கும் போது ஜென்ம லக்னத்திற்கு 6ம் வீட்டில் உள்ள கிரகம் 6ம் அதிபதி சேர்க்கை பெறும் கிரகமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி பலம் இழந்து 6ம் அதிபதியுடன் இணைந்து இருந்தாலும், 6ல் அமையப் பெற்றாலும் அவரே அவருக்கு எதிரியாகவும், அவரின் செயல்பாடுகளே அவரின் முன்னேற்றத்திற்கு இடையூறாகவும் அமைந்து விடுகிறது. 6ம் வீட்டின் அதிபதியை விட ஜென்ம லக்னாதிபதி பலம் பெறுவது மிகவும் உத்தமம். 

லக்கினத்திற்கு 2ம் அதிபதி பலம் இழந்து 6ம் அதிபதியுடன் இணைந்து இருந்தால் குடும்பத்தில் உள்ளவர்களே எதிரியாக மாறும் நிலை, கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனை எதிர்ப்பாக மாறும் சூழ்நிலை, கொடுத்து வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலையால் எதிர்ப்பு உண்டாகும் அமைப்பு ஏற்படும்.
     
அது போல் ஜென்ம லக்கினத்திற்கு 3,6க்கு அதிபதிகள் இணைந்து 3 ஆம் அதிபதி பலம் இழந்து இருந்தால் சகோதர, சகோதரி மூலம் எதிர்ப்பு உண்டாகிறது. 3,6க்கு அதிபதியுடன் பலம் இழந்த செவ்வாய் சேர்க்கை உண்டானால் உறுதியாக சகோதரனுடன் பகைமை உண்டாகும். சகோதரர் இல்லையென்றால் பங்காளியுடனாவது எதிர்ப்பு உண்டாகும்.
     
ஜென்ம லக்னத்திற்கு 4ம் அதிபதி பலம் இழந்து 6ம் அதிபதியுடன் சேர்க்கை பெற்றால் நெருங்கிய நண்பர்களே எதிரியாகும் சூழ்நிலை 4,6 அதிபதியுடன் சந்திரன் இணைந்தால் தாயே எதிரியாகும் அமைப்பு, தாய் வழி உறவினர்கள் எதிரியாகும் சூழ்நிலை உண்டாகும்.
     
அது போல ஜென்ம லக்னத்திற்கு 5ம் அதிபதி பலம் இழந்து 6ம் வீட்டில் அமையப் பெற்றாலும், 6ம் அதிபதியுடன் இணைந்து இருந்தாலும் புத்திரர்கள் எதிரியாகும் சூழ்நிலை உண்டாகும்.
     
பொதுவாக 7ம் வீட்டை களத்திர ஸ்தானம் என்றும், கூட்டுத் தொழில் ஸ்தானம் என்றும் கூறுவார்கள். 6ம் அதிபதியுடன் 7ம் அதிபதி இணைந்து பாவிகள் பார்வை பெற்றால் கைப் பிடித்த மனைவியே எதிரியாகும் சூழ்நிலை உண்டாகும். குறிப்பாக 7ம் அதிபதி பலம் இழந்து 6ம் அதிபதியுடன் இணைந்து உடன் சுக்கிரன் இருந்தால் வாழ்நாள் முழுவதும் மனைவியே எதிரியாக இருக்கும் சூழ்நிலை உண்டாகும். 6,7க்கு அதிபதி சேர்க்கை பெற்று, 7ம் அதிபதி பலம் இருந்தால் கூட்டாளிகள் எதிரியாக மாறும் சூழ்நிலை உண்டாகிறது. 

தந்தை ஸ்தானமான 9ம் வீட்டின் அதிபதி பலம் இழந்து 6ம் அதிபதியுடன் இணைந்தால் தந்தையும், தந்தை வழி உறவினர்களும் எதிரியாக மாறும் சூழ்நிலை 6,9க்கு அதிபதிகள் சேர்க்கையுடன் சூரியன் இணைந்தால் உறுதியாக தந்தையால் மிகப் பெரிய எதிர்ப்பை எதிர் கொள்ள நேரிடும்.
     
தொழில் ஸ்தானமான 10ம் அதிபதி பலம் இழந்து 6ல் அமைந்தாலும், 6ம் அதிபதியுடன் இணைந்து இருந்தாலும் செய்யும் தொழிலில் எதிர்ப்பு, உத்தியோகத்தில் இருந்தால் சக ஊழியர்கள் எதிர்ப்பு என பல்வேறு சோதனைகளை எதிர் கொள்ள நேரிடும்.

11ஆம் அதிபதி பலம் இழந்து 6ம் அதிபதி சேர்க்கை பெற்றால் மூத்த உடன் பிறப்புடனும், நெருங்கிய உறவினர்களுடனும் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும். பொதுவாக 6ம்  அதிபதியுடன் சேர்க்கை பெறும். கிரகத்தின் இயல்புக்கு ஏற்ப எதிர்ப்புகள் ஏற்படும் என்றாலும் 6ம் வீட்டை குரு போன்ற சுப கிரகங்கள் பார்வை செய்தால் எதிர்ப்பைச் சமாளிக்கும் திறன் ஏற்படும். எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாத அளவிற்கு மறையும்.



please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar

No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.