Saturday, May 18, 2013

குருப்பெயர்ச்சி பலன்கள் துலா ராசி


சித்திரை  3, 4 சுவாதி,விசாகம் 2, 3 - ம் பாதங்கள்

அனைவரிடமும் இனிமையாக பழகும் குணமும், உதவியும் செய்யும் ஆற்றலும் கொண்ட துலா ராசி அன்பர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு 3.6.க்கு அதிபதியான குருபகவான் வரும் 28.5.2013 முதல் பாக்கிய ஸ்தானமான 9. ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் எதிரிகளை வெல்லக் கூடிய வலிமையும் உண்டாகும். குடும்பத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு நல்ல குழந்தை பாக்கியம் அமையும் பணவரவுகள் பஞ்சமின்றியிருப்பதால் குடும்பத்தின் தேவைகள்யாவும் பூர்த்தியாவதுடன்  கடன்கள் யாவும் குறையும். உற்றால் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். ஜென்ம ராசியில் சனி ராகுவும், 7.ஆம் வீட்டில் கேதுவும் சஞ்சலிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும். பேச்சில் நிதானததை கடைப்பிடிப்பதும் நல்லது. குருபார்வை ஜென்ம ராசிக்கும் 3, 5 ஆம் வீடுகளுக்கு இருப்பதால் மருத்துவ செலவுகள் அதிகம் ஏற்படாது. சொந்த கார், பங்காள போன்றவற்றையும் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். கௌரவமான பதவிகளும் கிட்டும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறைந்து லாபங்கள் பெருகும். அரசியல் வாதிகளின் பெயர் புகழ் யாவும் உயரும். சேமிப்பும் பெருகும்.


முருகுஜோதிட ஆராய்ச்சி மையம்
நடத்தும்
மாபெரும் குருபெயர்ச்சி யாகம்
ஜோதிடர்கள் மாநாடு


இடம் ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்
வடபழனி சென்னை

குருபெயர்ச்சியைமுன்னிட்டு
28.5.2013 மாபெரும் காலை 5  மதியம் 1 வரை குருபெயர்ச்சி யாகம்

27.5.2013 மதியம் 3 இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு





குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும்
மேஷம்,மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மற்றும் மீன
ராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து
குரு குபேர டாலர், சுதர்சன யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

அன்பர்கள் ரூபாய் 500 (ரூபாய் 1000 வெளிநாடு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்
வெளியூர் அன்பர்களுக்கு தபால் (அ) கொரியர் மூலம் பிரசாதம் அனுப்பபடும்

தொடர்புக்கு

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன் .

117-/-33, பக்தவச்சலம் காலனி முதல் தெரு, வடபழனி, சென்னை&600026
செல் 0091 7200163001 , 9383763001,  9444072006

தொடர்புக்கு



please contact my postal adress  



Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com



Bank account details are


Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078


Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078
தேக ஆரேக்கியம் :

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். சோம்பல் தனம் மந்த நிலை கைகால்களில் அசதி உண்டாகும். என்றாலும் சமாளித்து அன்றாட  பணிகளில் சுறுசுறுப்பாகவே செயல் படுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவு உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை :

கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் குடும்பத்தில் அமைதி நிலவும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வசதி வாய்ப்புகளுடன் தேடிவரும். சொந்த பூமி மனை போன்றவற்றை வாங்கவேண்டும் என்ற நீண்ட நாளைய கனவுகள் யாவும் நிறை வேறும். தந்தை வழி சொத்துக்களும் கைக்கு கிடைக்கும்.  உறவினர்களிடையே சிறுசிறு மன கசப்புகள் ஏற்பட்டாலும் அவர்களின் ஆதரவு சிறப்பாகவே இருக்கும். பொன் பொருள், ஆடை அணிகலன்கள் சேரும்.

கொடுக்கல் வாங்கல் :

குருபாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண வரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகிட்டும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். பல பொது நலக்காரியங்களுக்காகவும் செலவு செய்வீர்கள். வீண் வம்பு வழக்குகள் மறையும். பங்காளிகள் மற்றும் உடன்பழகுபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

தொழில் வியாபாரிகளுக்கு : 

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும் என்றாலும் கூட்டாளிகளால் சில மனச்சஞ்சலங்களை சந்திக்க வேண்டியிருக்கும். தொழிலாளர் பிரச்சினையும் வலுக்கும். முடிந்தவரை அனைவரிடமும் விட்டுக் கொடுத்து  செல்வதும், தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதும் நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். புதிய முறைகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்கவும் முடியும். 

உத்தியோகஸ்தர்களுக்கு :

பணியிலிருப்பவர்களக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் சற்று இருந்தாலும் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வும், உத்தியோக உயர்வும் தடையின்றி கிடைக்கும். உங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நிம்மதியாக செயல்படமுடியும். சில நேரங்களில் பிறர் செய்யம் தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் எதையும் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலும் உண்டாகும். அனைவரின் பாராட்டுதல்களை யும் பெற்ற விடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு :

நல்ல பதவிகளும் பெயர் புகழும் தேடி வந்தாலும் மக்களின் அவ நம்பிக்கைக்கு ஆளாககூடிய சூழ்நிலை ஏற்படும். முடிந்தவரை மக்களுக்கு கொடுத்த வாங்குறுதிகளை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வது நல்லது. அதுபோல மேடை பேச்சுகளில் கவனமுடனிருத்தல், பத்திரிகை நண்பர்களை பகைத்துக் கொள்ளாதிருத்தல் போன்றவற்றால் நற்பெரை எடுக்க முடியும்.

விவசாயிகளுக்கு :
விளைச்சலை சிறப்பாகப்பெற அதற்கேற்ற உழைப்பையும் கொடுக்க வேண்டியிருக்கும். தகுந்த நேரத்திற்கு ஆட்கள் கிடைக்காமல் எல்லா வேலைகளையும் தாங்களே முன்நின்று செய்யகூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். என்றாலும் நவீனக் கருவிகளின் உதவியால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய பூமி மனை வாங்குவதற்கான வாய்ப்பும் உண்டாகும்.

பெணக்களுக்கு 

உடல் ஆரோககியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொண்டால் எல்லா பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். திருமண சுபகாரியங்களும் நல்லபடியாக நடபெறும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியமும் உண்டாகும். புதிய கார் பங்காள ஆடை அணிகலன்கள் போன்றவற்றையும் வாங்குவீர்கள் கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

படிப்பு : 

கல்வியில் சற்று மந்த நிலை ஏற்படகூடிய காலம் என்றே சொல்ல வேண்டும்  என்றாலும் தேவையற்ற நட்புகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை தவிர்த்து கவனம் முழுவதையும் கல்வியில் செலுத்தினால் ஓரளவுக்கு படிப்பில் முன்னேற்றத்தை அடையமுடியும். பயணங்களின்போது கவனமுடனிருத்தல் நல்லது.

ஸ்பெகுலேன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் தைரியமாக பெரிய முதலிடுகளை ஈடுபடுத்த லாம். லாபங்களும் பெருகும்.

குரு பகவான் மிருகசீரிஷ  நட்சத்திரத்தில் 28.05.2013 முதல் 26.6.2013 வரை

குருபகவான் ஜென்ம ராசிக்கு 2.7.க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 9.ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் இக் காலங்களில் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே ஒற்றமைப் பலப்படும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனியும் வக்ரகதியிலிருப்பதால் ஆரோக்கியம் மேம்படும். தொட்டதெல்லாம் துலங்கும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியா வதுடன் கடன்களும் குறையும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர் வெளி நாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்று மனைநிறைவுகளும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். அரசியல்வாதி களுக்கு பெயர் புகழ் யாவும் உயரக் கூடிய காலமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் இறந்து விளங்குவார்கள். விநாயகரை வழி படுவது நல்லது.


குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 27.6.2013 முதல் 28.8.2013 வரை

குருபகவான் ராகுவின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் பாக்கிய ஸ்தானத்திலிருப்பதால் அனுகூலமான பயணங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகள் மூலம் லாபங்கள் கிட்டும். உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்ம சனி நடைபெறுவதும். ஜென்ம ராசியில் ராகு 7.ல் கேது சஞ்சரிப்பதும் உல் ஆரோக்கியத்தில் அடிக்அடி பாதிப்புகள் உண்டாகும் மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் சனி ராகுவை குருபார்வை செய்வதால் பெரிய கெடுதல்கள் ஏற்படாது பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும் குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து நடப்பதுடன் பேச்சிலும் நிதானத்தைக் கடைபிடித்தால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலும் சரளமாக இருப்பதால் கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். விவசாயிகள் எதிர் பார்த்தபடி உழைப்பிற்கேற்றப பலனைப் பெற முடியும். அரசியல்வாதிகளுக்கு அதிக அலைச்சல் டென்ன்கள் அதிகரிக்கும் என்றாலும் பெயர் புகழ் உயரக் கூடிய காலமாகவே இருக்கும். ராகுகாலங்களில் துர்கை அம்மனை வழிபடவும்.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 29.8.2013 முதல் 13.11.2013 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானமான 9.ஆம் வீட்டில் சஞ்சரிப்ப தால் பண வரவுகள் பஞ்சமின்றி இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். திருமண சுபகாரயங்களும் தடையின்றி நிறைவேறும். கணவன் மனைவியிடையேசிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றமைக்குறையாது. புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். உற்றால் உறவினர்களும் ஆதரவாகவே  இருப்பார்கள். கொடுக்கல் வாங்கலில் சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். பூர்வீக சொத்து வியங்களிலிருந்த வம்பு வழக்குகள் யாவும் நல்லதொரு முடிவுக்கு வரும். தீர்ப்பு உங்களுக்கே சாதகமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலும் திருப்பதியளிப்பதாகவே இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை பெறமுடியும். சிறுசிறு மறைமுக எதிர்ப்புகள் தோன்றினாலும் எதையும் சமாளித்து அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இட மாற்றங்கள் கிடைக்கும். புதிய வேலை தேடு பவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது

குரு பகவான் வக்ர கதியில் 14.11.2313 முதல் 12.3.2014 வரை

பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியிலிருப்பதும். ஜென்ம ராசியில் சனி ராகுவும், 7.இல் கேதுவும் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் இக்காலங்களில் குடும்பத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். புத்திர்களால் மனக் கவலைகள் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் திறம்பட செயல்பட முடியாத நிலை உண்டாகும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பதும், கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பதும் நல்லது. கணவன் மனைவியிடையேயும் அடிக்கடி வாக்கு வாதங்கள் ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் பிறருக்கு மனநிம்மதி குறைவினை உண்டாக்கும். நம்பியவர்களே துரோகம் செய்ய துணிவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெற எதிர் நீச்சல் போடவேண்டியிருக்கும். தேவையற்றப் பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியேகாஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்து பொறுப்பேற்க வேண்டியிருக்கும். வேலை பளுவும் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றங் களும் ஏற்படும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 13.3.2014 முதல் 12.4.2014 வரை

குருபகவான் வக்ர நிவர்த்தியாகு 9.ஆம் வீட்டில் ராகுவின் நட்சத்தித்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் மீண்டும் பொருளாதார நிலையில் மேன்மைகளை அடைவீர்கள். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியிலிருப்பதால் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும் சர்ப கிரகங்கள் 1,7.இல் சஞ்சரிப்பதால் கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். எதிர்பாராத திடீர் விரயங்கள் குடும்பத்தில் ஏற்படக் கூடும் என்றாலும் எதையும் சமாளிக்க கூடிய அளவிற்கு பணவரவுகள் இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். சிலர் கார் பங்களா போன்றவற்றை வாங்குவார்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். அரசியல்வாதிகள் தங்கள் பெயர் புகழை தக்க வைத்துக் கொள்ளமுடியும். கட்சிப்பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிவரும். சனிப் பரீதி ஆஞ்சநேயரை வழிபடவும்.


குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.4.2014 முதல் 13.6.2014 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரமாகிய புனர்பூசத்தில் பாக்கியஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யவும் இக்காலங்களிலும் ஏற்ற மிகப் பலன்களையேப் பெறமுடியும். பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். நினைத்ததை நிறைவேற்றி கொள்வ தற்கான பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் அதிகம் உண்டாகாது. திருமண வயதை அடைந்தவர் களுக்கும் நல்ல வரன்கள் கிடைக்கும். சிலர் நினைத்தவரையே கை பிடிபர். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீகசொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் நல்ல லாபம் கிட்டும். கொடுதத கடன்களும் வீடுதேடிவரும். மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். கல்விக்காக சிலர் இடம் மாறி செல்ல வேண்டிய சூழ் நிலைகளும் உண்டாகும். அரசியல்வாதிகள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி களைக் காப்பாற்றமுடியும். விவசாயிகள் எதிர்பார்த்த லாபத்தையும் விளைச்சலையும் பெறுவர் தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சித்திரை 3,4ம் பாதங்கள் :

பலவகை வேலைபாடுகள் நிறைந்த ஆடை அணிகலன்களை அணிந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9.ஆம் வீட்டில் குரு சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சினைகள் யாவும் விலகி பண வரவுகள் பஞ்சமின்றி இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டு;. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். பயணங்களால் அனுகூலம் உண் டாகும். உடல் ஆரோக்கியயத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையம். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிக்கவும்.

சுவாதி :

பிறரது துன்பம் கண்டு உதவி செய்யக் கூடிய நல்ல எண்ணத்தை கொண்ட உங்களுக்கு. குருபகவான் பாக்கிய ஸ்தானத் தில் இருப்பதால் பொருளாதார ரீதியாக நல்ல மேம்பாடுகள் உண்டாகும். என்றாலும் ஜென்ம ராசியிலேயே கவிராகு சஞ்சாரம் செய்வதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதும், உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவதும் நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். சொந்த கார் பங்களா போன்றவற்றையும் வாங்கும் யோகமும் உண்டாகும். உத்தியோகஸ் தர்களுக்கு பணியில் திருப்தியான நிலையிருக்கும்.

விசாகம் 1,2,3ம் பாதங்கள் :

அமைதியான குணமும் வசீகரமான உடலமைப்பும் கொண்ட உங்களுக்கு குருபகவான் பாக்கியஸதானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். சனி ராகு ஜென்ம ராசியில் சஞ்சரித்தாலும் பெரிய கெடுதல்கள் ஏற்படாது. தொழில் வியாபாரம் போட்டி பொறாமையின்றி சிறப்பாக நடைபெறும். பொன்பொருள் சேரும். கடன்களும் குறையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்வதாக கூடிய வாய்ப்பும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

அதிர்டம் அளிப்பவை

எண் - 4,5,6,7,8
நிறம் - வெள்ளை, பச்சை
கிழமை - வெள்ளி
திசை - தென் கிழக்கு
கல் - வைரம்
தெய்வம் - ல;மி

பரிகாரம் : 

உங்கள் ஜென்ம ராசியிலேயே சனி சஞ்சரிப்பதால் ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுகிறது. இதனால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது. சனி () ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதும் உத்தமம். ஜென்ம ராசியில் ராகுவும் 7.இல் கேதுவும் சஞ்சரிப்பதால் சர்பசாந்தி செய்வது ராகு காலங்களில் துர்கை அம்மனை வழி படுவது, தினமும் விநாயகர் வழிபாடு மேற் கொள்வது நல்லது.

No comments: