Saturday, May 18, 2013

குருப்பெயர்ச்சி பலன்கள் கடக ராசி


கடகம்
புனர்பூசம் 4ம் பாதம்,பூசம்,ஆயில்யலம்


செல்வம் செல்வாக்கினை சேர்ப்பதில் அதிக ஆர்வமும், குடும்பத்திலுள்ளவர்களின் மீது அதிக அக்கறையும் கொண்ட கடக ராசி அன்பர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு 6,9 க்கு அதிபதியான குருபகவான் வரும் 28.5.2013 முதல் விரய ஸ்தானமான 12.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் விரயங்களும், மறைமுக எதிர்ப்புகளும் உண்டாகும். இது மட்டுமின்றி சுகஸ்தானமான 4.ஆம் வீட்டில் சனியும் ராகுவும் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ன்கள் அதிகரிப்பதோடு அசையும் ஆசையா சொத்துக்களாலும் சிறு சிறு செலவுகள் ஏற்படும். குருபார்வை 4,6,8 ஆம் வீடுகளுக்கு இருப்பதால் பூமி மனை போன்றவற்றிலுள்ள பிரச்சினைகளை சமாளிக்க முடியும். சகவாழ்வு சொகுசுவாழ்வும் ஓரளவுக்கு திருப்தியளிப்ப தாக இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் நிதானத்தை கடைப் பிடிப்பது உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது போன்றவற்றால் ஓரளவுக்கு அனுகூலங்களைப் பெறமுடியும். தொழில் வியாபாரத்தில் போட் பொறாமைகளை சமாளிக்க முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளுவை குறைத்து கொள்ள முடியும்.





முருகுஜோதிட ஆராய்ச்சி மையம்
நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்
ஜோதிடர்கள் மாநாடு

இடம் ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்
வடபழனி சென்னை

குருபெயர்ச்சியைமுன்னிட்டு
28.5.2013 மாபெரும் காலை 5  மதியம் 1 வரை குருபெயர்ச்சி யாகம்
27.5.2013 மதியம் 3 இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு



குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும்
மேஷம்,மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மற்றும் மீன
ராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து
குரு குபேர டாலர், சுதர்சன யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

அன்பர்கள் ரூபாய் 500 (ரூபாய் 1000 வெளிநாடு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்
வெளியூர் அன்பர்களுக்கு தபால் (அ) கொரியர் மூலம் பிரசாதம் அனுப்பபடும்

தொடர்புக்கு

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன் .
117-/-33, பக்தவச்சலம் காலனி முதல் தெரு, வடபழனி, சென்னை&600026
செல் 0091 7200163001 , 9383763001,  9444072006

தொடர்புக்கு


please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com



Bank account details are


Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078


Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078
தேக ஆரேக்கியம் :

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தேவையற்ற அலைச்சல் டென்ன்களால் மனநிம்மதி குறையும். எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாதநிலை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களும் அவ்வளவ நலமாக இருக்க மாட்டார்கள். உணவு வியத்தல் கவனம் தேவை.

குடும்பம் பொருளாதாரநிலை :

கணவன் மனைவியிடையே ஒரளவுக்கு ஒற்றுமை நிலவினாலும், உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் குடும்பத்தில் நிம்மதி குறையும், வீடுமனை, வண்டிவாகனம் போன்றவற்றால் வீண்விரயங்களை எதிர்              கொள்வீர்கள். பிறர் வியங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் பிறருக்கு பிரச்சினையை ஏற்படுத்திவிடும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

கொடுக்கல் வாங்கல் :

குருபகவான் விரயஸ்தானமான 12.ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிற்பபாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். எதிர்பாராத சிறுசிறு உதவிகள் கிடைக்கப்பெறும்.

தொழில் வியாபாரிகளுக்கு :

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலையே இருக்கும். வேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும், பயணங்களால் சற்று அலைச்சல்களும் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை உண்டாகும். வரவேண்டிய நிலுவைத் தொகைகளும் கைக்கு வந்து சேருவதில் இழுபறி நிலை நீடிக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நடுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பிறர் செய்யும் தவறுகளுக்காக உயரதிகாரிகளிடம் வீண் அவப்பெயரை எடுக்க வேண்டியிருக் கும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு :

மக்களின் ஆதரவினைப் பெற சற்று அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருப்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். மக்களுக்கு கொடுத்த வாக்குறதிகளை காப்பாற்றவது. அவர்களின் தேவையறிந்து செயல்படுவது மிகவும் நல்லது.

விவசாயிகளுக்கு : 

பட்ட பாட்டிற்கான பலனைப் பெறமுடியாத அளவுக்கு பயிர்களின் விளைச்சல்கள் சுமாராகத்தானிருக்கும். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் தாமதப்படும். புதிய நவீன முறைகளை கையாள்வதில் கவனம் தேவை. கால்நடைகளால் சிறுசிறு ஆதாயங்களைப் பெறுவீர்கள். வாய்க்கால் வரப்பு பிரச்சினை களில் தலையிடாதிருப்பது நல்லது.

பெண்களுக்கு :

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சிக்கன மான செயல்படவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைப்பதில் தாமதநிலை ஏற்படும்.

படிப்பு :

கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். தேவையற்ற நட்புகள் உங்களின் வாழ்க்கை பாதயையே மாற்றி விடக்கூடும் என்பதால் உடன் பழகுபவர் களிடம் கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதபடையும். பயணங்களில் கவனமுடனிருப்பது நல்லது.

ஸ்பெகுலேன் :
ஷேர் லாட்டரி, ரேஸ் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தினால் விண் விரயங் களை சந்திப்பீர்கள்.

குரு பகவான் மிருகசீரிநட்சத்திரத்தில் 28.5.2013 முதல் 26.6.2313 வரை

குரு பகவான் ஜென்ம ராசிக்கு விரிய ஸ்தானமான 12 ஆம் வீட்டில் சஞ்சரித்தாலும் தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத் திரத்தில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் பண வியங்களில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. செவ்வாய் 5.10.க்கு அதிபதி என்பதால் எந்தவொரு மறைமுக எதிர்ப்புக் களையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக புதிய முயற்சிகளை மேற்கொள்ள முடியும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடமுடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற் றங்கள் கிடைக்கப் பெறும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனத்தை செலுத்தவது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகளை சற்று தாமதப்பட கூடும். குருப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 27.6.2013 முதல் 28.8.2013 வரை

குருபகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 12 ஆமிடத்தில் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்ப என்று கூறமுடியாது. இதனால் குடும்பத்தில் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யவே கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை களும் உண்டாகும். கணவன் மனைவி யிடையே அடிக்கடி வாக்கவாதங்களும், சுக வாழ்வில் பாதிப்புகளும் உண்டாகும். இதுமட்டுமின்றி 4 ம் வீட்டில் சனியும் ராகுவும் சஞ்சரிப்பதால் வீடு மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றால் வீண் செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் சிறு சிறு ஆதாயங்களை பெறமுடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ன்கள் உண்டாவதோடு உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதோடு குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை ஏற்படக்கூடிய காலம் என்பதால் எந்தவொரு காரியத்திலும் பெரிய முதல்களை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழி படுவது நல்லது.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 29.89.2013 முதல் 13.11.2013 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக் காலங்களிலும் ஏற்ற இறக்கமானப் பலன் களையேப் பெறமுடியும். சகஸ்தானமான 4 ஆமிடத்தில் சனியும் ராகுவும் சஞ்சரிப்பதும் சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவை யற்ற அலைச்சல் டென்~ன்கள் ஏற்பட்டு சுகவாழ்வில் பாதிப்பு உண்டாவதுடன் நிம்மதி யாக உணவு உண்ணக் கூட நேரமிருக்காது. இதனால் உடல்நிலையும் சோர்வடையும். கணவன் மனைவியிடையேயும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகள் ஏற்;படுவதால் சற்று மனநிம்மதியும் குறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடு களை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. எந்த வொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துக் கொண்டால் ஓரளவுக்கு அனுகூலங்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று கவனமுடன் செயல்படவும். துர்கை யம்மனை வழிபடுவது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 14.11.2013 முதல் 12.3.2014 வரை

விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் இக்காலங்களில் வக்ரகதியிலிருப்பதால் பணவரவுகளிலிருந்து வந்த தடைகள் சற்றே விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவம் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமானப் பலன்களைப் பெறமுடியும். உற்றார் உறவினர் களிடையே இருந்த  கருத்துவேறுபாடுகள் சற்றேக்குறையும் கணவன் மனைவிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வியங்களில் சற்றே கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர் களுக்கு போட்டிகள் சற்று குறைவதால் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்றுவிட முடியும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மதிப்பெண்களும் சிறப்பாக கிடைக்கும். உடன்பழகுபவர்களிடம் கவனம் தேவை. பயணங்களில் வேகத்தை குறைப்பது நல்லது. தினமும் விநாயகரை வழிபடுவது மூலம் நற்பலன் உண்டாகும்.

குருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 13.3.2014 முதல் 12.4.2014 வரை

குருபகவான் ராகுவின் நட்சத்திரத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் 4.இல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதால் பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும் பணவரவுகளில் சில நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள்ளிருப்பதால் எதையும் சமாளித்து விடமுடியும். வீடு மனை வண்டி வாகனங்களால் இருந்த வீண் விரயங்கள் குறையும் பணவியத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றம் தொழிலாளர்களின் ஆதரவுகள் அனுகூலமளிப்பதாக அமையும். போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்புகளை யும் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப்பெற முடியும். வேலை பளுவும் சற்று குறைவாதல் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் சற்று குறையும். விவசாயி களும் பட்டபட்டிற்கானப் பலனைப் பெற முடியும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த மான்பு மிகு பதவிகளைப் பெற முடியும். குருப்பாதி தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.4.2014 முதல் 13.6.2014 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் விரய ஸ்தானத்தில் சந்திப்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. 4.இல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியிலிருப்பதால் உடல் ஆரோக்கியம் சற்றே சிறப்பாக இருக்கும். என்றாலும் தேவையற்றப் பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த நெருக்கடிகள் சற்றே குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பெரிய முதலீடு களை ஈடுபடுத்துவதை தவிர்த்து விடுவது நலலது. உத்தியோகஸ்தர்கள் உடன்பணி புரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பழுவை குறைத்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரைவுகளில் நெருக்கடிகள் தோன்றி னாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் எதையும் சமாளிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் சிறுசிறு வீண்செலவுகள் ஏற்படக் கூடும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்கப் பின் கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாராக இருக்கும். தினமும் விநாயகரை வழி படுவது நல்லது.

புனர்பூசம் 4ம் பாதம் :

கற்பனை வராமும் கீழ்படிதல் எனும் சிறந்த குணமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12.ஆம் வீட்டில் குருபகவான் சஞ்சாரம் செய்வதாய் பொருளா தார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைப்பதும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. சகஸ்தானமான 4.ஆமிடத்தில் சனியும் ராகுவும் சஞ்சரிப்பதால் அசையும் அசையா சொத்துக் களால் வீண் விரயங்கள் உண்டாகும். தேவையற்றப் பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல் டென்ன்களை குறைத்துக் கொள்ள முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

பூசம் :

எல்லோரிடமும் இனிமையாக பழகும் குணமும், சொன்ன சொல்லை காப்பாற்ற கூடிய பண்பும் கொண்ட உங்களுக்கு குருபக வான் வரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் பண வியங்களில் நெருக்கடிகள் உண்டாகும். பூர்வீக சொத்து வியங்களிலுள்ள வம்பு வழக்குகள் இழுபறிகள் இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சிறுசிறு உதவிகளைப் பெற முடியும். சனியும் ராகுவும் 4.ஆமிடத்திலிருப்பதால் சுகவாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்புகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

ஆயில்யம் :
நல்ல கூர்மையான யுக்கதியும், இசையில் நல்ல ஈடுபாடும் கொண்ட உங்களுக்கு இந்த குருபெயர்ச்சியால் குருபகவான் விரய ஸ்தானமான 12.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இதனால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். எதிர்பாராத திடீர் விரயங்களும் உண்டாகும். சனியும் ராகுவும் 4.ஆமிடத்தில சஞ்சரிப்பதால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்குகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல் படுவது நல்லது. பயணங்களால் அலைச்சல் கள் அதிகரிக்கும்.

அதிர்;டம் அளிப்பவை 
எண் - 1,2,3,9,10,11,12,18
நிறம் - வெள்ளை, சிவப்பு
கிழமை - திங்கள், வியாழன்
கல் - முத்து 
திசை - வடகிழக்கு
தெய்வம் - வெங்கடாசலபதி

பரிகாரம் :

ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12.ல் குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்துவருவது நல்லது. வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்தரமும், கொண்டை கடலை மாலையும் சாற்றி, ணெய்தீபமேற்றி வழிபடுவது நல்லது. சனி பகவான் 4.ல் சஞ்சரிப்பதால் சனிப் பரீதியாக ஆஞ்சநேயருக்கு துளசி மாலை, மற்றும் வெண்ணை சுற்றுவது உத்தமம்.

No comments: