Wednesday, May 22, 2013

குருப்பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி



மூலம், பூராடம்.உத்திராடம் -1ம் பாதம்



எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய வலிமையும், நன்றி மறவாத நல்ல குணமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! உங்கள் ராசியாதிபதி குருபகவான் வரும் 28.5.2013 முதல் சமசப்பதம் ஸ்தானமான 7.ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமண சுபகாரியங்கள்  தட புடலாக கைகூடும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சனி ராகுவும் 11.ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். சொந்த வீடுமனை, வண்டி வாகனங்களையும் வாங்கும் யோகம் அமையும். உற்றார், உறவினர்களின் ஆரவுகளும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறுவார்கள். குருபார்வை ஜென்ம ராசிக்கும் 3,11.ஆம் வீடுகளுக்கும் இருப்பதால் உடல் ஆரோக்கி யம் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். தொழிலில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பாராத உயர்வுகளும், பதவிகளும் கிடைக்கும். இடமாற்றங்களும் நினைத்தபடி கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். கொடுக்கல் வாங்கலிலும் சரளமாக இருக்கும். அரசியல்வாதிகள் மாண்புமிகு பதவிகளை பெறுவார்கள். மக்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.


முருகுஜோதிட ஆராய்ச்சி மையம்
நடத்தும்
மாபெரும் குருபெயர்ச்சி யாகம்
ஜோதிடர்கள் மாநாடு


இடம் ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்
வடபழனி சென்னை

குருபெயர்ச்சியைமுன்னிட்டு
28.5.2013 மாபெரும் காலை 5  மதியம் 1 வரை குருபெயர்ச்சி யாகம்

27.5.2013 மதியம் 3 இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு





குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும்
மேஷம்,மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மற்றும் மீன
ராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து
குரு குபேர டாலர், சுதர்சன யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

அன்பர்கள் ரூபாய் 500 (ரூபாய் 1000 வெளிநாடு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்
வெளியூர் அன்பர்களுக்கு தபால் (அ) கொரியர் மூலம் பிரசாதம் அனுப்பபடும்

தொடர்புக்கு

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன் .

117-/-33, பக்தவச்சலம் காலனி முதல் தெரு, வடபழனி, சென்னை&600026
செல் 0091 7200163001 , 9383763001,  9444072006

தொடர்புக்கு



please contact my postal adress  



Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com



Bank account details are


Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078


Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078


தேக ஆரோக்கியம் :

உங்களின் உடல் ஆரோக்கியம் மிகவும் அற்புதமாக அமையும். குடும்பத்திலிருந்து வந்த மருத்துவ செலவுகளும் குறையும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு கொண்டிருப்பவர்களுக்கு கூடப் படிப்படியான முன்னேற்றங்கள் உண்டாகி நிம்மதியான வாழ்க்கையினை வாழ முடியும்.

குடும்பம் பொருளாதார நிலை :

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிலை கொண்டிருக்கும். திருமண சுபகாரியங்கள் யாவும் தடபுடலாக நிறைவேறும் கணவன் மனைவியடையே ஒற்றுமையும், புத்திரவழியில் பூரிப்பும் உண்டாகும். உற்றார் உறவினர்கள் அனைவரும் உங்களுக்கே சாதகமாக செயல் படுவார்கள். பகைவரும் நண்பர்களாக மாற கூடிய வாய்ப்புகள் அமையும் சொந்தமாக கார், பங்களா போன்றவற்றையும் வாங்கும் யோகம் அமையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.

கொடுக்கல் வாங்கல் :

குரு 7.ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகம். பல பொதுநல காரியங்களில் ஈடுபடுவதோடு அதற்காக செலவுகளையும் செய்வீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும்.

தொழில் வியாபாரிகளுக்கு :

செய்யும் தொழிலிருந்து வந்த போட்டி பொறாமைகளும் பணத்தட்டுப்பாடுகளும் விலகி நல்ல லாபம் கிடைக்கும். எதிரிகளை ஓடஓட விரட்டக்கூடிய அளவிற்கு வலமும் பலமும் கூடும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடிவரும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியைப் பெருக்க உதவும். அரசு வழியிலும் பல உதவிகள் கிடைக்கும். நவீன கருவிகளை வாங்கமுடியும்.


உத்தியோகஸ்தர்களுக்கு :

பணியில் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதுடன் பாராட்டுத்தல்களும் மன நிறைவைத் தரும். பெயர் புகழ் உயர்வடையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கச் சென்று பணி புரிய விரும்புபவரின் விருப்பங்களும் நிறைவேறும். பணியிலிருப்பவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து வாழக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பொற் காலமாகும். மாண்புமிகு பதவிகள் கிடைக்கப் பெறுவதால் மதிப்பும் மரியாதையும் உயரும். மக்களின் ஆதரவும் பெருகும். கட்சிப்பணிகளை எந்தவித இடையூறுகளுமின்றி மேற்கொள்ள முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்றபரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். வருவாய் பெருகும். பொருளாதாரம் உயரும்.

விவசாயிகளுக்கு :

பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். லாபங்களும் எதிர்பார்த்த படி அமையும். புதிய நவீன கருவிகள் வாங்கும் யோகம் பூமி மனை சேர்க்கை யாவும் சிறப்பாக இருக்கும். பங்காளிகளின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். குடும்பத்திலும் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். அரசு வழியிலும் எதிரபாராத உதவிகள் கிடைக்கும். கடன்களும் குறையும்.

பெண்களுக்கு :

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதோடு குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமணம் நடைபெறும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியமும் உண்டாகும். சொந்த வீடு, கார் போன்றவற்றையும் வாங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதியும் சுபீட்சமும் நிலவும். ஆடை அணிகலன்கள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகையும் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.

படிப்பு :

கல்வியில் மாணவ மாணவியர்கள் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். தேவையற்ற நட்புக்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும். கல்விக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் பாராட்டுதல்களும் கிடைக்கும்.

ஸ்பெகுலேன் :
லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் எதிர் பாராத அளவிற்கு லாபங்கள் பெருகும். திடீர் தனவரவுகளால் பொருளாதாரம் மேம்படும்.

குரு பகவான் மிருகசீரிநட்சத்திரத்தில் 28.5.2013 முதல் 26.6.2013 வரை

ராசியாதிபதி குருபகவான் ஜென்ம ராசிக்கு 5,12.க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். செவ்வாய் குருவுக்கு நட்பு கிரகம் என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும். வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். குடும்பத்தி லிருந்து வந்த குழப்பங்கள் யாவும் விலகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்களாக தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியினை உண்டாக்கம்.  பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். 11.ல் சனி ராகுவும் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் நல்லதொரு லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகள் யாவும் தேடிவரும். கூட்டாளிகளாலும் அனுகூலங்கள் உண்டாகும். பயணங்களால் லாபங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கௌவரமான பதவி உயர்வுகளும், திறமைக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளின் பெயர் புகழ் உயரக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மக்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

குருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 27.6.2013 முதல் 28.8.2013 வரை

ஜென்ம ராசியபதி குருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் சமசப்தம ஸ்தான மான 7.ஆம் வீட்டில் சஞ்சரம செய்வதால் நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். சனியும் ராகுவும் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளும் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தி யாகும். அதிநவீன பொருட் சேர்க்கைகளும் உண்டாகும். திருமண சுபகாரியங்களும் நடைபெறும் புத்திரவழியிலும் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். உற்றார் உறவினர்களின் வருகையால் பல நற்பலன்கள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத் தியை பெருக்கி கொள்ள முடியும். நல்ல நல்ல ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவீர்கள் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். திறமைகளுக்குகேற்ற பாராட்டுத்தல்களும் கிட்டும். அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவுகள் மன மகிழ்ச்சி யினை உண்டாகும். பத்திரிகை நண்பர்களின் ஆதரவுகளும் உயர்வினை உண்டாக்கும்.  விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 29.8.2013 முதல் 13.11.2013 வரை

குருபகவான் தன் சுயசாரத்தில் 7.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் யாவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப் படும் பிரிந்து சென்று உறவுகளும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள் சொந்த பூமி மனை, வண்டி வாகனங் போன்றவற்றை வாங்க கூடிய யோகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலி லும் நல்ல லாபங்கள் ஏற்படும். உங்களுக்குள்ள கடன்களும் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பண உயர்வுகளையும், உத்தியோக உயர்வுகளையும் பெற்று மகிழ்வர். இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளாலும் அனுகூலங்கள் ஏற்படும். பயணங்களாலும் சாதகப் பலன்கள் உண்டாகும்.  மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். சனியும் ராகுவும் 11.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்த காரியங்களை நினைத்தபடி நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கும் மாண்புமிகு பதவிகள் தேடிவரும். மாணவர்களின் கல்வித் திறன் உயரும். கல்விக்காக பயணங்களை மேற் கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். தினமும் விநாயகப் பெருமானை வழிபடுவது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 14.11.2013 முதல் 12.3.2013 வரை

சமசப்தம ஸ்தானமான 7.ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் ராசியாதிபதி குருபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. என்றாலும் லாபஸ்தானத்தில் சனியும் ராகுவும் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திரர்களால் எதிர்பாராத மனக் கவலைகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களிடம் சற்று விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளில் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். கூட்டாளிகளை ஈடுபடுத்து வதை தவிர்க்கவும். கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாகவே இருக்கும். எதிர்பாராத பயணங் களாலும் அனுகூலமானபயன்கள் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் தடையின்றிப் பூர்த்தியாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற சற்றே முழு முயற்சியுடன் பாடுபடவேண்டியிருக்கும். ஆடை அணிகலன்கள் சேரும் குருப்ரீதி ஆஞ்ச நேயரை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 13.3.2014 முதல் 12.4.2014 வரை

குருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 7.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும். மணமாகதாவர்களுக்கு மணமாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் சொந்த வீடு கார், போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் சுபச் செலவுகள் உண்டாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சிரிக்கும் சனி வக்ர கதியிலிருந்தாலும் குருபார்வையுடனிருப்பதாலும் உடன் ராகு அமைந்திருப்பதாலும் எதையும் சமாளித்து முன்னேற கூடிய அளவிற்கு வலிமையும் வல்லமையும் உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும். தொழில் வியாபாரத்திலும் புதிய யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்க முடியும்.  வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். உத்தியோகஸ் தர்களுக்கு வர வேண்டிய ஊதிய உயர்வு பதவி உயர்வு யாவும் தடையின்றி கிடைக்கும் வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். மாணவர்கள் உயர்வடைவார்கள் சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.4.2014 முதல் 13.6.2014 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தல் 7.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் இக் காலங்களும் பொற்காலங்களே! பணம் பல வழிகளினால் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். கடன்கள் யாவும் குறையும். சிலருக்கு நினைத்தவரையே மணம் முடித்துக் கொள்ளக் கூடிய பாக்கியம் கிட்டும். பொருளாதார மேம் பாடுகளால் புதிய வீடுகார் போன்றவற்றை வாங்குவதுடன் குடியிருக்கும் வீட்டையும் புதுப் பித்து கொள்வீர்கள். உற்றார் உறவினர்கள் வருகை குடும்பத்தில் மன நிறைவை ஏற்படுத்தும். பிறந்தவர்களும் ஒன்று கூடுவார்கள் சனி லாபஸ்தானத்தில் வக்ரகதி பலமாக சஞ்சரிப்பதாலும் தொட்டதெல்லாம் துலங்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவுகளால் பல புதிய கிளைகளை நிறுவமுடியும். முதலீடுகள் செய்வதற்கும் அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். புதிய நவீனக் கருவிகளையும் வாங்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். எதிர்பார்த்த இடமாற்றங் களும் கிடைக்கப்பெறும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப் பெண்களை பெறுவார்கள் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கனிப்ரீதி ஆஞ்ச நேயரை வழிபாடு செய்வது நல்லது.

மூலம் :

பிடிவாத குணமும், அதிகாரம் செய்யக் கூடிய இயல்பும் கொண்ட உங்களுக்கு ராசியாதிபதி குருபகவான் சமசப்தமஸ்தான மான 7.ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையிலிருந்த நெருக்கடிகள் குறையும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். சொந்தபூமி மனை போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். சொத்துக்கள் சேரும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்து சென்ற உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவி உயர்வுகளை பெறுவார்.

பூராடம் :

சுகபோக வாழ்க்கையினை விரும்புபவராகவும் எந்த சூழ்நிலையிலும் நல்லதையே நினைக்கும் குணம் கொண்டவராகவும் விளங்கும் உங்களுக்கு, குருபகவான் 7.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும்.  சனி ராகுவும் லாப ஸ்தானத்திலிருப்பதால் பணவரவுகள் பஞ்சமின்றி இருக்கும். கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். பொன்பொருள் சேரும். தொழில் வியாபாரம் கூட்டாளிகளால் மேன்மையடையும். பல புதிய வாய்ப்புகள் தேடிவரும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும். பூமி மனை வண்டி வாகனம் போன்றவற்றையும் வாங்கி சேர்ப்பீர்கள். சேமிப்பும் பெருகும்.

உத்திராடம் - 1ம் பாதம் :

எப்பொழுதும் கலகலப்பாக பேசி மற்றவரை மகிழ்விக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குருபகவான் சமசப்தம ஸ்தானமான 7.ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் தடைபட்ட மங்களகரமான சுபகாரியங்கள் யாவும் கைகூடும். பொருளாதார நிலையும் மிகச் சிறப்பாக இருக்கும். இது மட்டுமின்றி சனியும் ராகுவும் லாபஸ்தானத்தல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்களை பெறமுடியும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். கடன்கள்யாவும் படிப்படியாக குறையும்.

அதிர்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9,10,11,12
கிழமை - வியாழன், திங்கள்
திசை - வடகிழக்கு
நிறம் - மஞ்சள் பச்சை
கல் - புப ராகம்
தெய்வம் - தட்சிணா மூர்த்தி

பரிகாரம் :

கேது பகவான் 5.ஆம் வீட்டில் சஞ்சரிப்ப தால் தினமும் விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதம் மேற்கொள்வது நல்லது. அருகம்புல் மாலை, தேங்காய் மாலை போன்ற வற்றையும் விநாயகருக்கு சாற்றி வழிபடலாம்.


No comments: