Monday, May 13, 2013

குருபெயர்ச்சி மேஷ ராசி





மேஷம்,

அஸ்வினி, பரணி, கிருத்திகை-1ம் பாதம்

நல்ல பேச்சுத்திறனும் எதிரிகளை ஓட ஓட விரட்டக்கூடிய ஆற்றலும் கொண்ட மேஷ ராசி அன்பர்களோ! உங்கள் ஜென்ம ராசிக்கு 9.12.க்கு அதிபதியான குருபகவான் வரும் 28.5.2013 முதல் முயற்சிஸ்தானமான 3ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்ற கூற முடியாது. இதனால் பணவரவுளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். ஆடம்பர செலுவகளை அன்றே குறைப்பது நல்லது. இதுமட்டுமின்றி 7ம் வீட்டில் கவிராகுவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உட்டாவதுடன், குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. குருப் பார்வை 7, 9, 11 ஆமிடங்களுக்கு இருப்பதால் உற்றால் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதாரவுகிட்டும். புத்திரவழியில் அனுகூலமும், பூர்வீகசொத்துக்களூல் சற்று லாபமும் அமையும். தொழில்வியாபாரம் செய்பவர்கள் அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவதால் எதிர்பார்த்த லாபங் களைப் பெற முடியும்.


ஒம்சரவணபவா

முருகுஜோதிட ஆராய்ச்சி மையம்
நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்
ஜோதிடர்கள் மாநாடு

இடம் ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்
வடபழனி சென்னை

குரு பெயர்ச்சியை முன்னிட்டு
28.5.2013 மாபெரும் காலை 5  மதியம் 1 வரை குருபெயர்ச்சி யாகம்
27.5.2013 மதியம் 3 இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு



குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும்
மேஷம்,மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மற்றும் மீன
ராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து
குரு குபேர டாலர், சுதர்சன யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

அன்பர்கள் ரூபாய் 500 (ரூபாய் 1000 வெளிநாடு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்
வெளியூர் அன்பர்களுக்கு தபால் (அ) கொரியர் மூலம் பிரசாதம் அனுப்பபடும்

தொடர்புக்கு

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன் .
117-/-33, பக்தவச்சலம் காலனி முதல் தெரு, வடபழனி, சென்னை&600026
செல் 0091 7200163001 , 9383763001,  9444072006

தொடர்புக்கு


please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com



Bank account details are


Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078


Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078
தேக ஆரோக்கியம் :
உடல் ஆரோக்கியத்தில் சேர்வு, கை, கால் அசதி, வயிறுசம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும், சிலருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி சூழ்நிலையும் ஏற்படும். பயணங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை :
கணவன் மனைவியடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறை யாது. பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் பிறருக்கு வீண் சஞ்சலங்களை ஏற்படுத்திவிடும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்க சற்று தாமதமாகும். ஆடம் பரமாக செலவு செய்வதை தவிர்க்கவும்.

கொடுக்கல் வாங்கல் :

பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை யிலிருக்கும் என்பதால் பண வி~யங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றில் எச்சரிக்கையுடன் செயல்படாவிட்டால் வீண் பிரச்சினைகளில் சிக்கி கொள்வீர்கள். பிறர் வாங்கிய கடனுக்கு நீங்கள் பதில் கூறவேண்டியிருக்கும். நம்பி யவர்களே துரோகம் செய்வார்கள்.

தொழில் வியாபாரிகளுக்கு :

தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். 4ட்டாளிகளிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழிலாளர் களே தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் மட்டுமே அபிவிருத்தியை பெருக்கிகொள்ள முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவி கள் சற்ற தாமதப்படும். தேவையற்ற பயணங் களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.


உத்தியோகஸ்தர்களுக்கு,

பணியில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். திறமைக்கேற்ற பாராட் டுதல்களை பெறமுடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்கள் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். இதனால் வேலை பளு அதிகரிப்பதுடன் மனநிம்மதியும் குறையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு : 

பதவிகளை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய காலமாகும். உடனிருப்பவர்களே குழிதோண் டிக் கொண்டிருப்பார்கள். நண்பர்கள் யார் துரோகிகள் யார் என்பதை தரம் பிரித்து கண்டறிந்து அவர்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வது நல்லது. மேடை பேச்சுக்களிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. மக்களின் ஆதரவு ஓரளவுக்கு இருக்கும்.

விவசாயிகளுக்கு :

புழு, பூச்சிகளின் தொல்லைகளால் பயிர் விளைச்சல் சுமாராகவே இருக்கும் பயிர்களை பாதுகாக்கும் முயற்சியிருப்பதுடன், வேலை களையும் அதிகரிக்கும். புதிய பூமி மனை வாங்கும் முயற்சிகளில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. சிலருக்கு அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

பெண்களுக்கு :

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர் களிடையே வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் அனைவரையும் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. ஆடம்பரமாக செலகள் செய்வதை குறைத்து கொண்டால் கடன்களை தவிர்க்கலாம். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும்.

படிப்பு 

கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புக்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டும் என்பதால் உடன்பழகுபவர்களிடம் கவனம் தேவை. வண்டிவாகனங்களில் பயணம் செய்யும்போது வேகத்தை குறைப்பது நல்லது.

ஸ்பெகுலேஷன் :
லாட்டரி,  ரேஸ் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது.

குரு பகவான் மிருகசீரிஷநட்சத்திரத்தில் 28.5.2013 முதல் 26.6.2013 வரை

குருபகவான் தங்கள் ராசியாதிபதி செவ் வாயின் நட்சத்திரத்தில் ஜென்மராசிக்கு 3ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இக்காலங்களில் பண வி~யங்களில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. ஜென்மராசியில் கேதுவும் 7 இல் ராகுவும் சங்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உட்டாவதுடன், குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் நல்பலன் உண்டாகும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படக்கூடிய காலம் என்றாலும் 7. இல் சஞ்சிரிக்கும் சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்ககூடிய ஆற்றல் உண்டாகும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் களிலும் சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபாரம் குறைந்து நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றாலும் பெரிய முதல்களை ஈடு படுத்தும்போது கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுன் செயல்பாட்டால் எதிர்பார்த்த மதிப்பாட்டுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களே பெற்றுவிட முடியும். வினாயகரை வழிபடலாம்.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 27.6.2013 முதல் 28.8.2013 வரை

திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் 3ம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல், வாங்கல் களிலும், N~ர், லாட்டரி, ரேஸ் போன்றவற்றி லும் ஈடுபடும் போது பெரிய தொகைகளை தவிர்க்கவும். ஜென்ம ராசியில் கேதுவும், 7இல் சனி ராகுவும் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவு சற்று விட்டுக்கொடுத்து நடந்துக் கொள்வதும், உற்றார் உறவினர்களை அனு சரித்து நடந்து கொள்வதும் நல்லது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு வி~யங்களிலும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற முருத்துவ செலவுகளை குறைத்துக்கொள்ள லாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படுவதால் அலைச்சல்கள் குறையும். கல்வி பயிலும் மாணவர்கள் உடன்பழகும் நட்புகளிடம் எச்சரிக்கையுடனிருப்பது நல்லது. அரசியல் வாதிகள் பத்திரிகை நண்பர்களை பகைத்துக் கொள்ளாதிருப்பதும், கிடைக்கும் பதவிகளை பயன்படுத்தி கொள்வதும் நல்லது. துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 29.82013 முதல் 13.11.2013 வரை

தன் சொந்த நட்சத்திரத்தில் குரு சஞ்சரித் தாலும் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் எதிர் நீச்சல் போடவேண்டியிருக்கும். ஜென்ம ராசியில் கேதுவும், 7ஆம் வீட்டில் சனி ராகுவும் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவி யிடையே அடிக்கடி கருத்துவேறுபாடுகள் உண்டாகும். உற்றால் உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சினைகளை உண்டாக்கு வார்கள். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்புடன் ஈடுபடமுடியாத சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப்பெறுவதால் பணப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் சற்ற மந்தநிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. கூட்டாளிகளை யும் தொழிலாளர்களையும் மிகவும் அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வண்டிவாகனங் களில் பயணம் செய்யும்போது கவனம் தேவை. அரசியல்வாதிகள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது நல்லது. தட்சிணா மூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் வக்ர கதியில் 14.11.2013 முதல் 12.3.2014 வரை

ஜென்ம ராசிக்கு 3 இல் சஞசரிக்கும் குருபகவான் இக்காலங்களில் வக்ர கதியிலி ருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேவடி வரும். பண வரவுகளிலிருந்து வந்த தடைகள் விலகு கடன்களும் படிப்படியாக குறையும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். உற்றால் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிப் பதாவே அமையும். பணம் கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வீடுதேடிவரும். புத்திரவழியிலும் பூரிப்பு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளிடையிருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமையுடன் செயல்படக்கூடிய ஆற்றல் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். அரசியல் மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். விவசாயி களுக்கு விளைச்சல் பெருகி உழைப்பிற்கேற்ற பலனைப் பெறமுடியும். ஆஞ்சநேயரை வழி படுவது நல்லது.

குருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 13.3.2014 முதல் 12.4.2014 வரை

குருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் ஏற்ற இறக்க மான பலன்களையேப் பெறமுடியும். என்றாலும் 7.இல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதால் எதையும் சமாளித்து வெற்றியினை பெறு வார்கள். பணவரவுகள் தேவைக்கேற்ற படியிருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத் துக்கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றால் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியெங்களுக்கான முயற்சி களில் தடைகள் ஏற்படும். லாட்டரி, ரேஸ், N~ர் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க் கவும். வீடு மனை வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பிறர் வி~யங்களில் தலையீடு செய்யாமல் தங்கள் பணிகளி; மட்டும் கவனம் செலுத் தினால் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவைப் பெறமுடியும். தொழில் வியாபாரம் செய்பவர் களுக்கு போட்டிகள் சற்று குறைந்து வரவேண்டிய வாய்ப்புகள் சற்று குறைந்து வரவேண்டிய வாய்ப்புகள் தேடிவரும். அரசியல்வாதிகளால் மக்களுக்கு கொடுத்து வாக்குறுதிகளை காப்பற்றமுடியும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது

குரு பகவான் புனரபூசம் நட்சத்திரத்தில் 13.4.2014 முதல் 13.6.2014 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சுமாரான நற்பலனை பெறமுடியும். குரு 3.இல் சஞ்சரிப்ப தால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கி யத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. ஜென்மராசியில் கேதுவம், 7.ம் வீட்டில் சனி ராகுவும் சஞ்சாi; செய்வதால் கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் உண்டாகம் என்றாலும் சனி வக்ரகத்தியிலி ருப்பதால் ஒற்றுமை குறையாது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பதுனல்லது. கூட்டுத் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறையும். தேவையற்ற வம்பு வழக்குகளும் மறையும் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலமானப் பலனை பெறமுடியும். பண வரவுகள் தேவைக் கேற்றயிருப்பதால் குடும்பத்தின் தேவைகளும் பூர்த்தியாகும். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். உடன் பழகுபவர் களிடம் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தினமும் வினாயகரை வழிபடலாம்.

அஸ்வினி : 

நேர்மையும் கடமையுணர்ச்சியும் கொண்டு எதிலும் திறம்பட செயல்படக்கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு, குருபகவான் 3.ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பண வி~யங்களில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் முயற்சிகளிலும் அதிக பாடுபட்டால் மட்டுமே எதிர்பார்த்த இலக்கை அடையமுடியும். சனியும் ராகுவும் 7.ஆம் வீட்டில் சஞ்சலிப்பதால் கணவன் மனைவி யடையே கருத்துவேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டிவரும் கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துசெல்லவும்.

பரணி :

எடுத்துக்கொண்ட வேலைகளில் திறம்பட செயல்பட்டு முன்னேற்றம் அடையக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு 3.ஆம் வீட்டில் குருபகவான் சாதகமற்று சஞ்சலிப்ப தால் எந்த வொரு வி~யத்திலும் சிந்தித்து செயல் படுவதே நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிலிருப்பதால் ஆடம்பல செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல், லாட்டரி, ரேஸ், போன்றவற்றில் பெரிய தொகைளை ஈடுபடுத் தாதிருப்பது நல்லது. ஜென்ம ராசியில் கேதுவும் 7.இல் சனிராகுவும் சஞ்சலிப்பதால் கணவன் மனைவியடையே அடிக்கடி நிம்மதி குறைகளும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கிருத்திகை - 1ம் பாதம் : 

கடவுள் மீது அதிக நம்பிக்கை வரக் கூடிய ஆற்றல் கொண்டவராகவும் விளங்கும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கும் வீட்டில் குருபகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சில காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். புத்திரவழியிலும் சிறுசிறு மனச் சஞ்சலங்கள் ஏற்படும். தேவையற்ற பயணங் களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர் பார்க்கும் உயர்வுகளையும், பாராட்டுதல்களை யும் பெறமுடியும்.

அதிர்ஷடம் 

எண் - 1,2,3,9,10,11,12 
நிறம் - ஆழ்சிவப்பு 
கிழமை - செவ்வாய்
கல் - பவளம் 
திசை - தெற்கு 
தெய்வம் - முருகன்


பரிகாரம் -

குருபகவான் ஜென்ம ராசிக்கு 3ல் சஞ்சரிப்பதால் குருவுக்குப் பரிகாரங்களை செய்வது, வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்திற்கு கொண்டை கடலை மாலை சாற்றுவது நல்லது 7 ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் சனிக்குப் பரிகாரங்களை செய் வது, ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது. ஜென்ம ராசியில் கேதுவும், 7 இல் ராகுவும் சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வ நற்பலனை உண்டாக்கும். 

No comments: