Wednesday, May 22, 2013

குருப்பெயர்ச்சி பலன்கள் மகரம் ராசி


உத்திராடம் 2,3,4, திருவோணம் அவிட்டம் 1,2.ம் பாதங்கள்


நல்ல சிந்தனையும், நேர்மையான நடத்தையும் கொண்ட மகர ராசி அன்பர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு 3.12.க்கு அதிபதியான குருபகவான் ருண ரோஸ்தான 6.ம் வீட்டில் வரும் 28.5.2013 முதல் சஞ்சாரம் செய்ய விருப்பது ஓரளவுக்கு அனுகூலத்தை ஏற்படுத் தும் அமைப்பாகும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்ற குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சனி பகவான் 10.ம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தாமதப்படும். 4.இல் கேதுவும் 10.இல் ராகுவும் சஞ்சரிப்பதால் வீடு வாகனம் போன்றவற்றல் வீண் செலவுகள் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும் குரு பார்வை 2,10,12 ஆம் வீடுகளுக்கு இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும். சகவாழ்பு சொகுவாழ்வு திருப்திகரமாக இருக்கும். வீண் விரயங்கள் ஏற்படாது உடல் ஆரோக்கியமும் மேன்மை யடையும்.



முருகுஜோதிட ஆராய்ச்சி மையம்
நடத்தும்
மாபெரும் குருபெயர்ச்சி யாகம்
ஜோதிடர்கள் மாநாடு


இடம் ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்
வடபழனி சென்னை

குருபெயர்ச்சியைமுன்னிட்டு
28.5.2013 மாபெரும் காலை 5  மதியம் 1 வரை குருபெயர்ச்சி யாகம்

27.5.2013 மதியம் 3 இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு





குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும்
மேஷம்,மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மற்றும் மீன
ராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து
குரு குபேர டாலர், சுதர்சன யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

அன்பர்கள் ரூபாய் 500 (ரூபாய் 1000 வெளிநாடு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்
வெளியூர் அன்பர்களுக்கு தபால் (அ) கொரியர் மூலம் பிரசாதம் அனுப்பபடும்

தொடர்புக்கு

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன் .

117-/-33, பக்தவச்சலம் காலனி முதல் தெரு, வடபழனி, சென்னை&600026
செல் 0091 7200163001 , 9383763001,  9444072006


தொடர்புக்கு



please contact my postal adress  



Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com



Bank account details are


Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078


Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078

தேக ஆரோக்கியம் :

உங்களின் உடல் ஆரோக்கியம் சுமாராகத் தானிருக்கும். எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாக முடிக்க இயலாத நிலை உண்டாகும். தேவையற்ற அலைச்சல்களாலும் உடல் நிலை சோர்வடையும். சகவாழ்வில் பாதிப்பு உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமானப் பலன் களை பெற முடியும்.

குடும்பம் பொருளாதாரநிலை :

திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை உண்டாககூடிய காலம் என்பதால் ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். எதையும் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துக் கொண்டால் ஓரளவுக்கு ஆதாயங் களை பெற முடியும்.

கொடுக்கல் வாங்கல் :

குருபகவான் 6.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாரகத்தானிருக்கும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருந்தாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது மற்றவருக்க முன் ஜாமீன் கொடுப் பதினாலும் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்ய துணி வார்கள். கொடுத்ததைக கேட்டால் அடுத்தது பகை என ஆகும்.

தொழில் வியாபாரிகளுக்கு :

தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்த வொரு புதிய முயற்சிகளிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. போட்டி பொறாமைகளை கண்கூடாக காண்பதால் எதையும் சமாளிக்கும் உங்களால் மறைமுக எதிர்ப்புகளால் உண்டாக கூடிய விரயங்களை சமாளிக்க முடியாமல் போகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கைகளிலும் எச்சரிக்கை தேவை. லாபம் சுமாராக தானிருக்கும்.


உத்தியோகஸ்தர்களுக்கு :

உயரதிகாரிகளிடமும், உடன்பணிபுரிபவர்களிடும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. நீங்கள் செய்து முடிக்கும் பணிகளுக்கான பாராட்டுதல்களை பிறர் தட்டிச் செல்வதால் சற்றே மன தளர்ச்சி உண்டாகும். எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் தாமதப்படுவதால் அலைச்சல்களும் அதிகரிக்கும். பணியில் எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல் கடமையே கண்ணாக நினைத்து பணிபுரிந்தால் கிடைக்க வேண்டிய பெருமைகள் தானாகவே கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு :

மேடை பேச்சுகளில் நிதானத்தை கடை பிடிப்பது, பத்திரிகை நண்பர்களை அனுசரித்துச் செல்வது போன்றவற்றின் மூலம் உங்களின் பெயர் புகழுக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். மக்களுக்கு கொடுத்த வாங்குறுதிகளை காப்பாற்ற முடியா மல் தடை தாமதங்கள் ஏற்படும். பதவிகளை காப்பற்றிக் கொள்ள மக்களின் தேவையறிந்து செயல்படுவது நற்பலனை தரும்..

விவசாயிகளுக்கு :

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இல்லா விட்டாலும், போட்ட முதலீட்டினை எடுத்து விடக் கூடிய அளவிற்கு விளைச்சல் அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதமாககூடும். புதிய நவீன கருவிகள் வாங்குவதால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும் கால் நடைகளால் சுமாரான லாபத்தைப் பெற முடியும். எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும்.

பெண்களுக்கு :

உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலமிது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் சில தடைகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக்கு குறையிருக்காது உற்றார் உறவினர்களால் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். முடிந்தவரை பிறர் வியங்களில் தலையீடு செய்வதை தவிர்க்கவும்.

படிப்பு :

மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலையே இருக்கும். படித்ததை மனதில் வைத்துக் கொள்ள இயலாது அளவிற்கு மந்தநிலை, ஞாபகமறதி உண்டாகும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவை அவ்வளவாக எதிர்பார்க்க இயலாது. அரசுவழியில் சிறுசிறு உதவிகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

ஸ்பெகுலேன் :
லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத தனவரவு சுமாராக இருக்கும்.

குரு பகவான் மிருகசீரி நட்சத்திரத்தில் 28.5.2013 முதல் 26.5.2013 வரை

உங்கள் ஜென்ம ராசிக்கு 3.12.க்கு அதிபதியான குருபகவான் ருண ரோகஸ்தான மான 6.ஆம் வீட்டில் தன் நட்புகரமான செவ்வாயின் நட்சத்திரத்தல் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் ஓரளவக்கு பூர்த்தியாகும். செவ்வாய் 4.11.க்கு அதிபதி என்பதால் தேவையற்ற அலைச்சல்களும் அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களும் உண்டாகும். 10.இல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதால் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபங்களை பெறமுடியாமல் மந்த நிலை ஏற்படும் என்றாலும், பொருட்தேக்கமின்றி சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிலும் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறமுடியும். எதிர்பார்க்கும் உயர்வு கள் சற்று தாமதப்படும். அரசியல்வாதிகள் தங்கள் பெயர் புகழை காப்பாற்றி கொள்ளும் அளவிற்கு மக்களின் ஆதரவு இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. தினமும் விநாயகரை வழிபடவும்.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 27.6.2013 முதல் 28.8.2013 வரை

குருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் நன்மை தீமை கலந்தப் பலன்களையேப் பெறமுடியும், குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, மந்தநிலை, சோர்வு போன்றவை ஏற்படுவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுபாக செயல்பட முடியாத நிலை ஏற்படும். சனி 10.அல் சஞ்சரிப்பதால் பணி புரிபவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை கண்ணெதிரிலேயே பிறர் தட்டிச் செல்வதால் மனநிம்மதி குறைத்துக் கொள்ளமுடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் கூட்டாளிகளால் பிரச்சினைகள், மறைமுக எதிர்ப்புகளால் தொல்லைகள் உண்டாகும். வேலையாட்களுக்கும் சரியாக சம்பளம் கொடுக்க இயலாத அளவிற்கு நெருக்கடிகள் உண்டாகும்.  எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் மேடை பேச்சுக் களில் நிதானத்தை கடைப்பிடிப்பது, பத்திரகை நண்பர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 29.8.2013 முதல் 13.11.2013 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் 6.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும், நண்பர்களும் துரோகம் செய்யத் துணிவார்கள். எதிலும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. உற்றால் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப் பலன்களை பெற முடியும். திருமண சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வதை சற்று தள்ளிவைப்பது நல்லது. கணவன், மனைவி டையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் வியங்களில் கவனம் தேவை. சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் வீண் விரயங்களை சந்திப்பார்கள். சனியும் ராகுவும் 10.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர் களுக்கு வீண் போட்டிகள் அதிகரிக்கும் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. விவசாயிகளுக்கு விளைச் சல் சுமாராகத்தானிருக்கும். அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது. 

குரு பகவான் வக்ர கதியில் 14.11.2013 முதல் 12.3.2014 வரை

ருணரோக ஸ்தானமான 6.ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் குருபகவான் வக்ரகதியிலிருப்பதால் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகளும் விலகி மணமாகாதவர்களுக்கு மணமாகும். சொந்த பூமி மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபம் கிட்டும் ஆடை அணிகலன்களும் சேரும்.  புத்திரவழியில் மகிழ்ச்சித் தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள்யாவும் தடையின்றி பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். சனி ராகு 10.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள தாமதப்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கு சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். இதனால் தேவையற்ற மனசஞ்சரங்களும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாட்டினால் மந்த நிலை ஏற்படும். அபிவிருத்தியை பெருக்குவதற்கான எந்தவொரு முயற்சியிலும் ஈடுபடுமுடியாமல் போகும். கடன்களும் உண்டாகும். ராகுகாலங்களில் துர்க்கையை வழிபடவும்.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 13.3.2014 முதல் 12.4.2014 வரை

குருபகவான் மீண்டும் திருவாதிரை நட்சத்திரத்தில் 6 ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குடும்பத்தில் சுபகாரியத் தடைகளும், பணவரவுகளில் நெருக்கடிகளும் ஏற்பட்டாலும் 10 ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதால் ஒரளவுக்குப் பிரச்சனைகளை சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடனிப்பது நேரத்திற்கு உணவு உண்பது போன்றவற்றின் மூலம் தேவையற்ற மருத்துவச் செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும் பணவரவுகள் சுமாராக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைப் பதன் மூலம் கடன்களின்றி தப்பிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடனிருப்பது நேரத்திற்கு உணவு உண்பது போன்றவற்றில் மூலம் தேவையற்ற மருத்துவச் செலவுகளை குறைத்துக்கொள்ளமுடியும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்களின்றி தப்பிக்க முடியும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளைத் தவர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை விலகும். போட்டிலகள் நிலவினாலும் உங்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். அரசியல்வாதிகளால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தல் 13.4.2014 முதல் 13.6.2014 வரை

குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் 6.ம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் நன்மை தீமை கலந்தப் பலன்களையேப் பெற வேண்டியிருக்கும். 10.இல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியிலிருப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்தநெருக்கடிகள் குறையும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர் புடைய வாய்ப்புகள் கிடைக்கும். எந்தவித எதிர்ப்புகளையும் வெல்லக்கூடிய அளவிற்கு வலிமையும் வல்லமையும் கூடும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அதற்கேற்ற பாராட்டுதல்களையும், உயர்வுகளையும் பெறுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் வியத்தில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாகக் கொடுப்பதை சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும் மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கலலூரிகளுக்கு பெருமை சேர்க்க முடியும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

உத்திராடம் 2,3,4ம் பாதங்கள் :

எந்த காரியத்திலும் சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குருபகவான் ருணரோக ஸ்தானமான 6.ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் சுமாரான நிலையே இருக்கும். எந்தவொருகாரியத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் நல் பலனைப் பெறமுடியும். சனியும் ராகுவும் 10.ம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. சேமிக்க முடியாது. உறவினர்களை அனுசரித்து செல்லவேண்டியிருக்கும்.

திருவோணம் :

அமைதியான குணமும் கடவுள் பக்தியும் அதிகம் கொண்ட உங்களுக்கு குருபகவான் ருண ரோகஸ்தானமான 6.ம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உடனிருப்பவர்களையும் குடும்பதிலுள்ளவர்களையும் அனுசரித்து நடந்துக்கொண்டால் அனுசுலமானப் பலனைப் பெறமுடியும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவக் கூடும் என்பதால் ஆடம்பர செலவு களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ் தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதும் உடன்பணிபுரிபவர்களை அனு சரித்து செல்வதும் நல்லது. தொழில் வியா பாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும்.

அவிட்டம் 1,2.ம் பாதங்கள் :

மற்றவருக்கு உதவிகள் செய்வதில் அதிக அக்கறை கொண்ட உங்களுக்கு குருபகவான் 6.ம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உங்களுக்கே பிரச்சினையை உண்டாக்கும். சனி ராகு 10.இல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். கூட்டாளிகளிடையே பிரச்சினைகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, மற்ற வரை அனுசரித்து நடந்துகொள்வது போன்ற வற்றால் நற்பலன் உண்டாகும்.


அதிர்டம் அளிப்பவை

எண் - 8,5,6,17,14,15
கிழமை - சனி, புதன்
திசை - மேற்கு
நிறம் - நீலம், பச்சை
கல் - நீலக்கல்
தெய்வம் - ஐயப்பன்

பரிகாரம் :

குருபகவான் ருணரோக ஸ்தானமான 6.ம் வீட்டில் சஞ்சரிப்பதால் குருப்ரீதி தட்சிணா மூர்த்திக்கு வியாழக்கிழமை தோறும் நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. சனி 10.இல் சஞ்சரிப்பதால் சனிப்ரீதி  ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது. கேது 4லும் ராகு 10லும் சஞ்சரிப்பதால் துர்கை வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.

No comments: