Wednesday, May 22, 2013

குருப்பெயர்ச்சி பலன்கள் மீன ராசி


மீனம் பூரட்டாதி  4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி


தெய்வ பக்தியும் நல்ல ஒழுக்கமும், தன் மானமும் மிக்கவராக விளக்கும் மீன ராசி அன்பர்களே! உங்கள் ராசியாதிபதி குருபகவான் ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங் களை சந்திக்க வேண்டியிருக்கும். பண வரவுகளிலும் ஏற்ற இறக்கமாக நிலையிருப்பதால் முடிந்தவரை ஏற்ற இறக்கமான நிலையிருப்பதால் முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்காலம். கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகள ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். 2.இல் கேதுவும் 8.இல் சனி ராகுவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாவதுடன் குடும் பத்திலும் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். குருபார்வை 8,10,12ஆம் வீடுகளுக்கு இருப்பதால் உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய வலிமை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமை களுக்கேற்ற உயர்வுகள் சற்று தாமதப்பட் டாலும் பாராட்டுதல்கள் கிடைக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளவேண்டிய வாய்ப்புகள் ஏற்பட்டாலும் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளமுடியும்.



முருகுஜோதிட ஆராய்ச்சி மையம்

நடத்தும்
மாபெரும்குருபெயர்ச்சியாகம்
ஜோதிடர்கள்மாநாடு
இடம்.ராஜாம்மாள்திருமணமண்டபம்
வடபழனி.சென்னை


குருபெயர்ச்சியைமுன்னிட்டு
28.5.2013 மாபெரும் காலை 5  மதியம் 1 வரை குருபெயர்ச்சி யாகம்

27.5.2013 மதியம் 3 இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு





குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும்
மேஷம்,மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மற்றும் மீன
ராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து
குரு குபேர டாலர், சுதர்சன யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

அன்பர்கள் ரூபாய் 500 (ரூபாய் 1000 வெளிநாடு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்
வெளியூர் அன்பர்களுக்கு தபால் (அ) கொரியர் மூலம் பிரசாதம் அனுப்பபடும்

தொடர்புக்கு

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன் .

117-/-33, பக்தவச்சலம் காலனி முதல் தெரு, வடபழனி, சென்னை&600026
செல் 0091 7200163001 , 9383763001,  9444072006

தொடர்புக்கு



please contact my postal adress  



Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com



Bank account details are


Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078


Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078


தேக ஆரோக்கியம் :

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் எப்பொழுதும் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துக் கொண்டேதானிருக்கும். மனைவி பிள்ளைகள் மற்றும் குடும்பத்திலுள்ள பெரியவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும் தேவையற்ற அலைச்சல் டென்ன்களாலும் உடல்நிலை சோர்வடையும். சுகவாழ்வு பாதிக்கும்.

குடும்பம் பொருளாதாரநிலை

கணவன் மனைவியிடையே உண்டாக கூடிய வாக்குவாதங்களர் ஒற்றுமை குறையக் கூடும். குடும்பத்தில் நிம்மதி குறையும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது முன் கோபத்தை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். திருமண சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களாலும் சிறு சிறு விரயங்கள் ஏற்படும்.

கொடுக்கல் வாங்கல்

பணவரவுகள் சுமாராகத்தானிருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உங்களுக்கு உள்ள வம்பு வழக்குகளிலும் இழுபறி நிலையே நீடிக்கும். சேமிப்புகள் குறையும்.

தொழில் வியாபாரிகளுக்கு

செய்யும் தொழில் வியாபாரத்தில் கூட்டாளி களையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துக் கொண்டால் மட்டுமே போட்ட முதலீட் டினை எடுக்கும் அளவிற்காவது லாபத்தைப் பெற முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. எந்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை நழுவ விடாமல் காப்பாற்றி கொள்வது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தை கையாள்வது பணிபுரிவர்களே தட்டிச் சொல்வதால் மனநிம்மதி குறைவடையும். சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டுப் பிரியக் கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். அலைச்சல் டென்ன் அதிகரிக்கும். என்றாலும எதையும் சமாளித்து முன்னேற்றமடையக்கூடிய வலிமையையும் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு

உடனிருப்பவர்களையும், பத்திகையாளர்களையும் அனுசரித்து நடந்துக் கொள்ளுவதால் பெயர் புகழை தக்க வைத்துக் கொள்ள முடியும். பயணங்களால் வீண் சங்கடங்களை சந்திக்க கூடிய கணம் என்பதால் எதிலும் சிந்தித்து செயல் படுவது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் தடைதாமங்கள் உண்டாகும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்க முழு நேரமும் பாடுபட வேண்டியிருக்கும். புழு பூச்சிக்களின் தொல்லைகளால் பயிர் விளைச் சல் பாதிப்படையும். பயிர்களை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளில் வீண் விரயங்களும் உண்டாகும்.  மனை வாய்க்கால் வரப்பு போன்றவற்றால் சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சோர்வு மந்தநிலை உண்டாக மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறுவதில் இடை யூறுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அணைத்துச் செல்ல வேண்டியிருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறு பாடுகள் உண்டாகும்.

படிப்பு

மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை உண்டாக கூடிய காலம் என்பதால் அதிக கவனத்தை செலுத்துவது நல்லது. படித்ததை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு ஞாபகமறதி உண்டாகும். பயணங்களின் போது வேகத்தை குறைப்பது, தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது.

ஸ்பெகுலேன்
நெட்டரி, ரேஸ், ஷேர்  ோன்றவற்றில் வீண் விரயங்களை சந்திக்க வேண்டி வரும் என்பதால் பணவியத்தில் கவனம் தேவை.

குரு பகவான் மிருகசீரி நட்சத்திரத்;தில் 28.5.2013 முதல் 26.6.2013 வரை

உங்கள் ராசியாபதி குருகபவான் சுக ஸ்தானமான 4.ம் வீட்டில் தனபாக்கியாதிபதியான செவ்வாயின் நட்சத்தரத்தில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவை களையும் பூர்த்தி செய்யமுடியும். சனிராகு 8.ல் சஞ்சரிப்பதாலும், கேது 2.இல் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்ல வேண்டிவரும். முடிந்தவரை பிறர் வியங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைப்படிப்பது போன்றவற்iறின் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளமுடியும். தொழில் வியாபரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. பயணங்களின் போது வேத்தை குறைப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தவேண்டியிருக்கும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களின் வாழ்க்கை பதையை மாற்றக்கூடும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 27.6.2013 முதல் 28.8.2013 வரை

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் சகஸ்தானமான 4.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் பணவியங் களில் கவனமுடன் செயல்படுவது, கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்ற வற்றைத் தவிர்ப்பது நல்லது. 2.ல் கேதுவும், 8.ல் சனி ராகுவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதுடன், குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். கணவன் மனைவி அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய காலமிது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உங்களுக்கே வீண் பிரச்சினை களை ஏற்படுத்தும். எந்தவொரு வியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் ஏற்பாடது. உத்தியோகஸ் தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். அரசியல் வாதிகள் மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்த்திரத்தில் 29.8.2013 முதல் 13.11.2013 வரை


குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெற முடியும். 2.இல் கேதுவும் 8.இல் சனி ராகுவும் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு வியத் திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. திருணம சுபகாரியங்களாக எடுக்கும் முயற்சி களில் தடைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்பா செயல்படமுடியாத அளவிற்கு மந்த நிலை உண்டாகும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்துகொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் தேவையற்ற கருத்துவேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. தொழில் வியாபாரத்தில் உண்டாக கூடிய போட்டிகளால் வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியாக செயல்படமுடியாத நிலை ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் உடல் நிலையில் சோர்வு நிலை ஏற்பட்டு அடிக்கடி பணிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 14.11.2013 முதல் 12.3.2013 வரை

ஜென்ம ராசிக்கு 4.இல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். எதிலும் தடை தாமதங்கள் ஏற்படுவதால் மன நிம்மதி குறைவு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர் களுக்கும் மந்த நிலையே நிலவும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாட்டினால் தேவையற்ற வம்பு வழக்குகளையும் சந்திக்க நேரிடும். வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை உண்டாகும். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடியகாலம் என்பதால் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல் வது நல்லது. மாணவர்கள் சற்றே முன்னேற்றத்தை அடைவார்கள். அரசியல்வாதிகள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பற்ற அரும்பாடுபட வேண்டியிருக்கும். விவசாயிகள் எதிர்பார்த்த பயிர் விளைச்சால் பெற இயலாது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியாக செயல்பட இயலாத நிலை ஏற்படும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 13.3.2014 முதல் 12.4.2014 வரை

குருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 4.ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் நன்மை தீமை கலந்தப் பலன்களையே சந்திக்க வேண்டியிருக்கும். 2.இல் கேதுவும் 8.இல் ராகுவும் சஞ்சரிப்பதும் சனி வக்ர கதியிலிருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு ஏற்படும். உற்றால் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினை சந்திக்க வேண்டிய சூழ்நிலை அபிவிருத்தி குறைவு போன்றவை உண்டாகும். முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற பணிகள் கிடைப்பதால் தாமதநிலை உண்டாகும். பணி புரிபவர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும். அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, பத்திரிகை நண்பர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.4.2014 முதல் 13.6.2014 வரை

குருபகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 4.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத அளவிற்கு அலைச்சல்கள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களும் உண்டாகும். கேது ராகு 2..8.இல் சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை மிகவும் அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் மருத்து செலவுகளை ஏற்படுத்தும், உற்றார் உறவினர்களை ஆதரவுகளை பெறுவதில் சிக்கல்கள் நீடிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்து கடன்களை ஒரளவுக்கு வசூலிக்க முடியும். 8.ல் சனி வக்ரகதியிலிருப்பதால் கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பார்கள். முடிந்தவரை பயணங்களில் கவனமுடனி ருத்தல் நல்லது. அரசியல்வாதிகளுக்கு எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும். தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

பூரட்டாதி - 4ம் பாதம் : 

எல்லோரையம் அன்பாலேயே வசியம் செய்யும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குருபகவான் 4.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். 2.இல் கேதுவும் 8.இல் சனி ராகுவும் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். தொழில் வியாபாரத் தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.

உத்திரட்டாதி :

எந்த காரியத்திலும் நற்பலனையே பெற விரும்பும் உங்களுக்கு குருபகவான் 4.ம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ன்கள் அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை சந்திக்க வேண்டியிருக்கும். பணவரவு களில் ஏற்ற இறக்கமான நிலை நீடிக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. 2.ல் கேதுவும. 8.ல் சனி ராகுவும் சஞ்சரிப்பதால் உடல் நிலையிலும் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலுவுகள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்ய துணிவார்கள். பயணங்களில் கவனம் தேவை.

ரேவதி :

மற்றவர்களின் பேச்சிலேயே அவரது எண்ணங்களை புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குருபகவான் சுகஸ் தானமான 4.ம் வீட்டில் சஞ்சரிப்பதால் சுக வாழ்வு வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்ல, 2.இல் கேது வும் 8.இல் சனி ராகுவும் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவி குடும்பத்தில் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நற்பலனை உண்டாக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சற்று வேலை பளு கூடும்.

அதிர்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9,10,11,12
கிழமை - வியாழன். ஞாயிறு
திசை - வடகிழக்கு
நிறம் - மஞ்சள், சிவப்பு
கல் - புப ராகம்
தெய்வம் - தட்சிணாமூர்த்தி

பரிகாரம் :

குருபகவான் 4.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருவுக்கு பரிகாரம் செய்வது, குருப்ரீதி தட்சிணா மூர்த்திக்கு தவறாமல் நெய்தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றுவது நல்லது. சனி 8.இல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிக் குரிய பரிகாரங்களை செய்வது ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது. 2.இல் கேதுவும் 8.இல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் சர்பசாந்தி செய்பது, தினமும் விநாயகரை வழிபடுவது, துர்கை அம்மனை ராகு காலங்களில் வழிபடுவது நல்லது.

No comments: