Saturday, May 18, 2013

குருப்பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசி



மகம், பூரம் உத்தரம் - 1ம் பாதம்


கம்பீரமான உடல் அமைப்பும், வசீகரமான பேச்சுத் திறனும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களை உங்கள் ஜென்ம ராசிக்கு 5.8க்கு அதிபதியான குருபகவான் வரும் 28.5.2013 முதல் லாபஸ்தானமான 11.ஆம் வீட்டில சஞ்சரிப்பதால் தன உறவுகள் சிறப்பாக இருக்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங் கள் தபுடலாக கைகூடும். இது மட்டுமின்றி சனி ராகுவும் 3.ஆம் வீட்டில் சஞ்சரிப்பது மென்மேலும் வெற்றிகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். குருபார்வை 3,5,7 ஆமிடங் களுக்கு இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புத்திரபாக்கி யம் வேண்டுவர்களுக்கு அழகான புத்திரபாக்கியம் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்திகளை யும் வாங்குவீர்கள். பொன்பொருளும் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி யினை உண்டாக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறமைகள் யாவும் செயபவர்களுக்கு போட்டி பொறமை கள் யாவும் கு றந்த லாபங்கள் பெருகும். புதிய பதிய வாய்ப்பு களும் தேடிவரும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து அன்றாடபணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். உத்தியோ கஸ்தர்களுக்கு கௌரவமான உயர்பதிகள் கிடைக்கப்பெறும்.

முருகுஜோதிட ஆராய்ச்சி மையம்
நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்
ஜோதிடர்கள் மாநாடு

இடம் ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்
வடபழனி சென்னை

குருபெயர்ச்சியைமுன்னிட்டு
28.5.2013 மாபெரும் காலை 5  மதியம் 1 வரை குருபெயர்ச்சி யாகம்
27.5.2013 மதியம் 3 இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு



குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும்
மேஷம்,மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மற்றும் மீன
ராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து
குரு குபேர டாலர், சுதர்சன யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

அன்பர்கள் ரூபாய் 500 (ரூபாய் 1000 வெளிநாடு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்
வெளியூர் அன்பர்களுக்கு தபால் (அ) கொரியர் மூலம் பிரசாதம் அனுப்பபடும்

தொடர்புக்கு

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன் .
117-/-33, பக்தவச்சலம் காலனி முதல் தெரு, வடபழனி, சென்னை&600026
செல் 0091 7200163001 , 9383763001,  9444072006

தொடர்புக்கு


please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com



Bank account details are


Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078


Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078

தேக ஆரோக்கியம் :

உங்களின் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக அமையும். இதுவரை நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் நீண்டகால நோய் களுக்கான சிகிச்சைகளும், அதனால ஏற்படக்கூட மருத்துவ செலவுகளும் படிப்படி யாக குணமடையும் குடும்பத்திலுள்ள மனைவி, பிள்ளைகள் மற்றும் பெரியவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

குடும்பம் பொருளாதாரநிலை :

இதுவரை தடைப்பட்டுக்கொண்டிருந்த திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தற்போது அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். சிலருக்கு நினைத்தவரையே கைபிடிக்க கூடிய யோகமும் அமையும். சிலர் அசையும் அசையா சொத்துக்களையும் வாங்கிசேர்ப்பார்கள். பொன் பொருள் ஆடை ஆபரணம் போன்ற யாவும் சேரும். இதுவரை பகைபாராட்டி கொண்டிருந்த உற்றார் உறவினர்கள் அனைவரும் தேடி ஒற்றுமை கரம் நீட்டுவார்கள். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும்.

கொடுக்கல் வாங்கல் : 

பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலும் தாராளமாகவே நடைபெறும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபத்தை பெறமுடியும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கொட்டை நிரப்பும் கொடுத்த கடன்களும் வீடுதேடி வரும். உங்களுக்கு இதுவரை இரந்து வந்த வம்பு வழக்குகளும் ஒரு நல்ல முடிவுக்கு வரும். பொருளாதார உயர்வுகளால் வெளிவட்டாரத் தொடர்புகளும் விரிவடையும். பலநட்புகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரிகளுக்கு : 

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த போட்டி பொறாமை கள், நெருக்கடிகள் யாவும் குறைந்து எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகளும் தேடிவரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கு வதுடன் பல புதிய கிளைகளையும் நிறுவ முடியும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்பும் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு : 

எதிர்பார்த்து காத்திருந்த நல்ல பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். உங்கள் பணியில் யாரும் தலையீ செய்யாதிருப்பதால் எதிலும் திறம்பட செயல்படுவார்கள். திறமைகளுக் கேற்ற பாராட்டுத்தல்களையும் பெற்று மன நிறைவு உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும், வெளியூர் வெளிநாடு களுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களுக் கும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும். பொருளாதாரம் உயரும்.

அரசியல்வாதிகளுக்கு :

மக்களின் மத்தியில் மதிப்பும் மரியாதையும் உயரும். மாண்புமிகு பதவிகளும் தேடிவரும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் கட்சிப் பணிகளுக்காகவம் நிறை செலவுகள் செய்வீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத் திலும் வெற்றி கிட்டும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைத் தடையின்றி காப்பாற் முடியும். அடிக்கடி பயணங்களையும் மேற் கொள்வீர்கள்.

விவசாயிகளுக்கு : 

விளைச்சல் சிறப்பாக அமைவதுடன் விளை பொருளுக்கேற்ற விலைகள் தையில் கிடைக்கப்பெறுவதால் லாபம் பெருகும். பட்ட பாட்டிற்கான பலனைப் பெறமுடியும். அரச வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று கடன்கள் யாவும் நிவர்த்தியாகும். பூ காய் சனியால் லாபமும், கால்நடைகளால் அனுகூலமும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

பெண்களுக்கு 

உடல் ஆரோக்கயம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் திறம்படசெயல்பட முடியும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். கணவன் மனைவி யிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன்னும் பொருளும் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சொந்த வீடுமனை போன்ற வற்றை வாங்குவீர்கள்.


படிப்பு :

மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல் படமுடியும். நினைக்கும் காரியங்களை நிறை வேற்ற முடியும். தேவையற்ற நட்புகள் விலகி நல்ல நண்பர்களின் சேர்க்கை மகிழ்ச்சியினை உண்டாக்கும். கல்விக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். அரசு வழியிலும் உதவிகள் தேடிவரும். நல்ல மதிப்பெண் கிட்டும்.

ஸ்பெகுலேன் :
லாட்டரி ரேஸ் ஷேர் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை விட அதிக லாபங்கள் கிடைக்கும்.

குரு பகவான் மிருகசீரிநட்சத்திரத்தில் 28.5.2013 முதல் 26.5.2013 வரை

குருபகவான் தனக்கு நட்பு கிரகமான செவ்வாய் நட்சத்திரத்தில் லாப ஸ்தானமான 11.ஆம் வீட்டில அமைந்துள்ள இக்காலங் களில் தன வரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். 3.ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருந் தாலும் உடன் ராகு இருப்பதால் எந்த தடை களையும் வெல்ல கூடிய அளவிற்கு வலிமை யும் பலமும் உண்டாகும். கடந்தகால கடன்கள் யாவும் குறைவதுடன் இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். பொன்பொருள் சேரும். கணவன் மனைவியடையே ஒற்றுமை பலப்படும். வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற நீண்ட நாளைய ஆசைகள் யாவும் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். தொழில் வியாபாரம் போட்டி பொறாமைகளின்றி சுமூகமாக நடைபெறும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் தேடிவரும். பயணங்களால் அனு கூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பதவி உயர்வுகளையும் பெறுவார்கள். பூர்வீக சொத்து வியங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒருமுடிவுக்கு வரும். சனிப் பீதி ஆஞ்சநேயரை வழிபடவும்.

குருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 27.6.2013 முதல் 28.8.2013 வரை

குருபகவான் ராகுவின் நட்சத்திரத்தல் லாப ஸ்தானமான 11.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும், சனி ராகு 3.ல் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக மேன்மைகளை ஏற்படுத்துவதுடன், எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றியினை உண்டாக்கும். குடும்பத்தல் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். சிலர் நினைத்தவரையே கை பிடித்து மகிழ்வர். புதிய கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகமும் அமையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். புதிய நட்புகள் தேடி வரும் பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர் களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர் களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும்.புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடு வார்கள். புத்தர வழியில் பூரிப்பு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் பல சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப் பார்கள். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் பல சாதனைகள் செய்து பள்ளி கல்லூரி களுக்கு பெருமை சேர்ப்பார்கள். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 29.8.2013 முதல் 13.11.2013 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் லாபஸ்தானமான 11.இல் சஞ்சாரம் செய்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். பணம் பல வழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். கடன்கள் யாவும் குறைந்து சேமிப்புகளும் பெருகும். திருமண சுபகாரியங்களும் தடபுடலாக நிறைவேறும். கணவன் மனைவி யிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு புததிர பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் தோன்றும் உற்றார் உறவினர் களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் யாவும் விலகி ஒற்றுமை ஏற்படும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். சனி ராகு 3.ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு  என்பதால் நினைத்த காரியங்களை நிறைவேற்றி காட்டுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான அதிநவீன பொருட் களும் சேரும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு தெய்வ தரிசனங்களுக் காக பயணங்கள் மேற்கொள்ளும் அமைப்பு உண்டாகும். விவசாயிகளுக்கு விளைச்சல்கள் பெருகுவதால் லாபங்களும் பெருகும். கால்நடைகளாலும் அனுகூலம் ஏற்படும். புதிய பூமிமனை வாங்குவீர்கள் தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 14.1.2013 முதல் 12.3.2014 வரை

லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியிலிருந்பதால் பண வியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. சனி ராகு 3.இல் பலமாக சஞ்சரிப்பதால் பண வரவு களுக்கு பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் முயற்சி கள் அனைத்திலும் வெற்றி விட்டும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். பொன்னையும் பொருளையும் வாங்கி சேர்ப்பீர்கள். கணவன் மனைவியின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர்களால் சிறுசிறு மனசஞ் சலங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவிகளை வகிக்கும் அமைப்பு உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். அரசியல்வாதிகள் கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேர்ந்தாலும் மக்களின் ஆதரவுகளால் பெயரும் புகழும் உயரும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற் றத்தை அடையமுடியும். குருபரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 13.3.2014 முதல் 12.4.2014 வரை

குருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களும் மேன்மையளிப்பதாகவே அமையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. தாராள தன வரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிலைத்திருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமான நிலையிருப்பதால்லா பங்கள் பெருகும். பொன்பொருள் சேரும். பெரிய மனிர்களின் நட்புகளால் பல காரியங்களை சாதித்துக்கொள்ள முடியும். உற்றார் உறவினர்களும் ஒத்துழைப்புடனேயே இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் அசையும் அசையா சொத்துக் கள் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் தொழிலாளர்களால் வீண் சஞ்சலங்கள் நேர்ந்தாலும் அபிவிருத் தியோ, லாபமோ குறையாது. உத்தியோகஸ் தர்களும் பணியில் கௌரவமாகச் செயல்பட முடியும். விவசாயிகள் பட்டபாட்டிற்கான பலனை கையில் கிடைக்க கூடிய லாபத்தின் மூலம் அறிவார்கள். சேமிப்பும் பெருகும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.4.2014 முதல் 13.6.2014 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக் காலங்களும் பொற்காலங்களே. தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிட்டும் பயணங்களால் நல்ல அனுகூலத்தை அடைவீர்கள். பல புதிய கிளைகளை நிறுவக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல்  சரளமான நடைபெறும். கொடுத்து வாக்குறுதி களையும் காப்பற்ற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுவதால் மன நிம்மதியும், சந்தோமும் குடிகொள்ளும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தையம் தடையின்றி பூர்த்தி செய்ய முடியும். அசையும் அசையா சொத்துகளும் சேரும். உத்தியோகஸ்தர்கள் கௌரவமானப் பதவி உயர்வுகளை பெறமுடியும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வேலை பளுவும் குறையும். அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவுகள் கிடைப்பதோடு பெயர் புகழும் உயரும். கட்சிப் பணிகளுக்காக நிறை செலவுகள் செய்ய நேர்ந்தாலும் நல்ல மறைமுக வருவாய்களும் பெருகும். சனிப்பரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

மகம் :

பிறருடைய உதவிகளை எதிர்பாராமல் எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி யினைப் பெறக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு குருபகவான் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சனியும் ராகுவும் 3.ஆம் வீட்டில் சஞ்சாரம செய்வதால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். சொந்த பூமி மனை போன்றவற்றையும் வாங்க முனைப் பீர்கள். குடும்பத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ் தர்கள் கௌரவமான பதவி உயர்வுகளை பெறுவதுடன் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும்.

பூரம் :

பகைவரை வெல்லக் கூடிய ஆற்றலும் நன்றி மறவாத குணமும் கொண்ட உங்களுக்கு குருபகவான் லாபஸ்தானமான 11.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றியினைப் பெறுவீர்கள்.  சனியும் ராகும் 3.ம் வீட்டில் சஞ்சரிப்பதால் கொடுக்கல் வாங்கலும் சரளமான நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் சுறுசுறுப்பான நிலை உண்டாகும். திருமண வயதை அடைந்தவர் களுக்கு சுபகாரியங்கள் தடபடலாக நிறை வேறும். சொந்த கார் பங்காள போன்றவற்றை வாங்குவீர்கள். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர் வடைவார்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும்.

உத்தரம் - 1 - ம் பாதம்

தன்மானமும், ஒழுக்கமும் தான தர்மம் செய்யும் குணமும் கொண்ட உங்களுக்குகுருபகவான் லாபஸ்தானமான 11.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகும். திருமண வயதை அடைந் தவர்களுக்கு நல்ல வரன்களும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் உண்ட யிருக்கும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறுவதால் பல புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூர் தொடர்புடை யவைகளாலும் லாபங்கள் பெருகும். பயணங்க ளால் அனுகூலம் ஏற்படும்.

அதிர்டம் அளிப்பவை 
எண் - 1,2,3,9,10,11,12,18
நிறம் - வெள்ளை, சிவப்பு
கிழமை - ஞாயிறு, திங்கள்
கல் - மாணிக்கம் 
திசை - கிழக்கு
தெய்வம் - சிவன்


பரிகாரம்
தினமும் விநாயகரை வழிபாடு செய்வது சதுர்த்தி விரதம் மேற்கொள்வது, விநாயகருக்கும் அருகம்புல் மாலை சாற்றுவது நல்லது.



No comments: