Sunday, September 22, 2013

அக்டோபர் மாத பலன்கள்






இது எனது 300 வது பதிவு ஆதரவு ளித்த அனைத்து நபர்களுக்கும்  நன்றி .  நன்றி


முருகு பாலமுருகன்


காதல் திருமணத்தம்பதியர்களுக்கு  
இலவச ஆலோசனை

ஜோதிடவியல் துறையில் திருமண வாழ்வு தொடர்பாக முனைவர் பட்டத்திற்காக ஆய்வு  செய்வதால்  காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியர்களின் ஜாதகங்கள் ஆய்வுப்பணிக்காக தேவைப்படுகிறது.அதனால் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியர்கள் தங்களது பிறந்த தேதி,நேரம்,ஊர்,திருமணநாள், முகவரி செல்போன் எண், ஆகியவற்றை தெளிவாக E.mail அனுப்பவும்.அப்படி அனுப்பும் நேயர்களுக்கு அவர்களின் ஜாதகத்திலுள்ள முக்கிய கேள்விக்கு E.mail மூலம் இலவசமாக ஆலோசனை வழங்கப்படும்.இவை அனைத்தும் ஆய்வுப்பணிக்காக மட்டும் என்பதால் ரகசியமாக பாதுகாக்கப்படும். 
இப்படிக்கு
முருகு பாலமுருகன் முனைவர் பட்ட ஆய்வாளர்,
117/33 பக்தவச்சலம் காலனி, முதல் தெரு,
வடபழனி,சென்னை&600026,செல்&7200163001 9383763001



மேஷம்

தங்களது கௌரவத்திற்கு பங்கம் ஏற்படாதவாறு நடந்து கொள்ளும் உங்களுக்கு மாத முற்பகுதியில் 6ல் சூரியன் சஞ்சரிப்பது ஓரளவுக்கு நற்பலனை ஏற்படுத்தும் என்றாலும் ஜென்மராசிக்கு 7ல் சனிராகு சஞ்சாரம் செய்வதால் குடும்பத்திலும் பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகளிலும் சீரான நிலையிலிக்காது. கூட்டுத் தொழில் வியாபாரம் செய்ப வர்களுக்கு கூட்டாளிகளால் வீண் விரயங்களை ஏற்படும். எந்தவொரு காரியத்தையும் சரிவர செய் இயலாது. தட்;சிணா மூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 08-10-2013 காலை 09.49 மணிமுதல் 
      10-10-2013 மதியம் 12.49 மணி வரை

ரஷபம்

மற்றவரை சமமாக நினைத்து பழககூடிய பண்பு கொண்ட உங்களுக்கு 2ல் குருவும் 6ல் சனி ராகுவும் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்க செய்ய கூடிய அமைப்பாகும். கணவன், மனைவியிடையே ஒற்றுமையும் உற்றார் உறவி னர்களால் அனுகூலமும் உண்டாகும். வம்பு வழக்கு களிலிருந்து இழுபறி நிலைகள் மறைந்து தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகும். கொடுத்த வாக்குறு திகளை காப்பாற்றுவதால் பல பெரிய மனிதர்களின் தொடர்புகளை பெறுவீர்கள். தொழில் வியாபாரத் திலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி அபிவிரு த்தியை பெருக்க முடியும். விநாயகப் பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 10-10-2013 மதியம் 12.49 மணிமுதல் 
     12-10-2013 மதியம் 03.10 மணி வரை


மிதுனம்

சிரித்து பேசியே காரியங்களை சாதித்துக் கொள்ளும் உங்களுக்கு ஜென்மராசியில் குருவும் 4ம் வீட்டில் சூரியனும் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படுத்தும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் தடை படும் தேவையற்ற பயணங்களால் அலைச் சல்கள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் வருகை வீண் விரயத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைபடும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.

சந்திராஷ்டமம் 12-10-2013 மதியம் 03.10 மணி முதல் 
      14-10-2013 மாலை 05.47 மணி வரை.

கடகம்
எதுவந்தாலும் எதிர்த்து நின்று வெற்றி பெறக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசியில், 2ல் செவ்வாயும், 4ல் சனியும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாத முற்பகுதியில் சூரியன் 3ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறமுடியும். தொழில் வியாபாரத்தில் ஏற்படக்கூடிய போட்டிக ளையும் சமாளிக்க முடியும் பணவரவுகளில் நெருக்க டிகள் ஏற்படுவதால் சில நேரங்களில் கடன்களும் உண்டாகும். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 14-10-2013 மாலை 05.47 மணி முதல் 
     16-10-2013 இரவு 09.32 மணி வரை.

சிம்மம்

வாழ்க்கையில் எவ்வித இடையூறுகள் ஏற்பட்டாலும் அதை மகிழ்ச்சியுடன் தாங்கும் உங்க ளுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரித்தாலும், 3ல் சனி ராகுவும், 11ல் குருவும் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். முன் கோபத்தால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகா ரியங்களும் கைகூடும். பொன் பொருள் சேரும் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டா கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் வெளிவட்டாரத் தொடர்பும் மகிழ்;ச்சியளிக்கும். முருகப் பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்   16-10-2013 இரவு 09.32 மணிமுதல் 
       19-10-2013 அதிகாலை 03.14 மணிவரை

கன்னி

பேச்சிலும் செயலிலும் பிறர் மனதை புண்ப டுத்தி விரும்பாத உங்களுக்கு ஜென்ம ராசியியில் சூரியனும், 2ல் சனிராகுவும் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவதும், முன்னேற்றத் ;தைக் குறைப்பதும் நல்லது. பணவரவுகளில் நெருக்க டிகள் இருக்காது. தொழில் வியாபாரம் செய்ப வர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்தாலும் பெரிய முத லீடுகளை ஈடுபடாதிருப்பது நல்லது. உத்தியோக ஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் தாமத நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கம். தட்சிணாமூர்த்தியை வழி படவும்.

சந்திராஷ்டமம் 19-10-2013 அதிகாலை 03.14 மணிமுதல் 
21-10-2013 காலை 11.21 மணிவரை


துலாம்

சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் உங்களுக்கு 9ல் குருவும் 10ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். 12ம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறையும். எதிர்பாராத வீண் விரயங்களும் ஏற்படும். பணவர வுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தே வைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கம் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பொன் பொருள் சேரும் சிவபெருமா னை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம 21-10-2013 காலை 11.21 மணி மதல் 
23-10-2013 இரவு 09.48 மணிவரை



விருச்சிகம்

இரக்க சுபாவமும், தயாளகுணமும் கொண்ட உங்களுக்கு 6ல் கேதுவும் 11ல் சூரியனும் சஞ்சரிப்பதால் எடுக்கம் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கம். குடும்ப த்தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். பொருள் இழப்பும் உண்டாகும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் சில நேரங்களில் வீண் பிரச்சனைகளை உண்டா க்கிவிடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அரசு வழியில் சிறுசிறு லாபம் கிட்டும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

சந்திராஷ்டமம 23-10-2013 இரவு 09.48 மணி முதல் 
26-10-2013 காலை 09.27 மணிவரை


தனுசு

தீய நெறிகளில் ஈடுபடுபவர்களை தண்டி க்கும் குணம் கொண்ட உங்களுக்கு 7ல் குருவும் 10ல் சூரியனும் 11ல் சனிராகுவும் சஞ்சாரம் செய்வ தால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி கள் குறையும். புதிய கிளைகளை நிறுவும் நோக்க மும் நிறைவேறும். பொருளாதார நிலையும் உயர்வ டைவதால் சொந்த வீடு மனை வண்டி வாகன ங்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். கொடுத்த கடன்க ளும் திருப்திகரமாக வசூலாகும். வம்பு வழக்குகளில் நல்ல தீர்வு கிடைக்கம். விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 26-10-2013 காலை 09.27 மணிமுதல் 
28-10-2013 இரவு 08.44 மணிவரை

மகரம்
மிகவும் சிக்கனமாக செலவுகள் செய்யும் உங்களுக்கு சூரியன் 9லும் சுக்ரன் 11லும் சஞ்சாரம் செய்வதால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். பணவர வுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடை க்கப்பெறும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் தங்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். வேளைபளுவும் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 01-10-2013 மதியம் 01.28 மணிமுதல் 
03-10-2013 இரவு 10.37 மணிவரை 
28-10-2013 இரவு 08.44 மணிமுதல்
31-10-2013 காலை 06.12 மணிவரை

கும்பம்
பிடிக்காதவற்றை துச்சமாக நினைத்து தூறஎறியும் குணம் கொண்ட உங்களுக்கு 5ல் குருபகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபகா ரியங்கள் கைகூடும். சிலருக்கு நினைத்தவரையே கைபிடிக்கும் பாக்கியமும் அமையும். பணவரவுகளு க்கும். பஞ்சம் ஏற்படாது. உற்றார் உறவினர்களின் வருகை மகிச்சியை அளிக்கும். 8ம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்ம ந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். நெருங்கிய வர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 03-10-2013 இருவு 10.37 மணிமுதல் 
06-10-2013 அதிகாலை 05.22 மணிவரை



மீனம்
குடும்பத்தின் மீது அதிக பற்று கொண்ட உங்களுக்கு, 2ல் கேதுவும், 4ல் குருவும் 7ல்; சூரியனும், 8ல் சனிராகு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவதே நல்லது. உடனிருப்பவர்களே துரோகம் செய்யதுணிவார்கள் கணவன் மனை வியிடையே ஏற்பட கூடிய கருத்து வேறுபாடுகளால் மனநிம்மதி குறைவடையும். உடல் ஆரோக்கியத்தி லும் பாதிப்புகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செ ய்பவர்களுக்கு கூட்டாளிகளால் வீண் பிரச்சனை கள் ஏற்படும் குல தெய்வ வழிபாடுகள் செய்வது நல்ல து.

சந்திராஷ்டமம்   06-10-2013 அதிகாலை 05.22 முதல் 
       08-10-2013 காலை 09.49 மணிவரை

சந்திரன்


காதல் திருமணத்தம்பதியர்களுக்கு  
இலவச ஆலோசனை

ஜோதிடவியல் துறையில் திருமண வாழ்வு தொடர்பாக முனைவர் பட்டத்திற்காக ஆய்வு  செய்வதால்  காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியர்களின் ஜாதகங்கள் ஆய்வுப்பணிக்காக தேவைப்படுகிறது.அதனால் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியர்கள் தங்களது பிறந்த தேதி,நேரம்,ஊர்,திருமணநாள், முகவரி செல்போன் எண், ஆகியவற்றை தெளிவாக E.mail அனுப்பவும்.அப்படி அனுப்பும் நேயர்களுக்கு அவர்களின் ஜாதகத்திலுள்ள முக்கிய கேள்விக்கு E.mail மூலம் இலவசமாக ஆலோசனை வழங்கப்படும்.இவை அனைத்தும் ஆய்வுப்பணிக்காக மட்டும் என்பதால் ரகசியமாக பாதுகாக்கப்படும். 
இப்படிக்கு
முருகு பாலமுருகன் முனைவர் பட்ட ஆய்வாளர்,
117/33 பக்தவச்சலம் காலனி, முதல் தெரு,
வடபழனி,சென்னை&600026,செல்&7200163001 9383763001

விஞ்ஞானத்தில் சந்திரன் 

சந்திரனும் சூரியனை சுற்றி வரும் ஒரு துணை கோளாகும். சந்திரன் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் துணை கோளாதலால் அது ஒளிரும் தன்மைப் பெற்றது. சந்திரன் தேய்ந்து வளரும் தன்மை கொண்டது. சந்திரன் பூமியை சுற்றி வரும் போது பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் நேரத்தில் சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன. சூரிய கிரகணம் அமாவாசையன்றும், சந்திர கிரஹணம்  பௌர்ணமியன்றும் உண்டாவது நாம் அறிந்ததே. சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதே போன்று பூமி சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் உண்டாகிறது.

புராணத்தில் சந்திரன்

சூரியனின் வரலாறு போலவே அத்தரி மகரிஷிக்கும் அவருடைய மனைவி அனுசுயா என்பவளுக்கும் பிறந்த சோமன், துர்வாசன், தத்தாத்திரேயன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் சோமன் என்பவரே நவகிரகாதிகளின் ஒருவராகிய சந்திரன். சந்திரன் குருவிடம் சீடராக சேர்ந்து சகல கலைகளையும் கற்று தேர்ந்தர். சந்திரனுடைய வல்லமையையும், பேரழகையும் கண்டவர்கள் அவனுக்கு பெண் கொடுக்க நீ, நான் என முன்வந்தனர். ஆனால் சந்திரன் தட்சனுடைய 27 பெண்களை கண்டு மனம் மயங்கி அவர்கள் அனைவரையும் திருமணம் செய்து கொண்டார். 

சந்திரன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள வந்த குருவின் மனைவி தாரா சந்திரனின் அழகில் மயங்கி அங்கேயே தங்கி விட்டார். இதையறிந்த தட்சன் தன் மகள்களின் மேல் சந்திரன் அன்பு செலுத்தாதை கண்டு கோபம் கொண்டு சந்திரனுடைய 15 கலைகளும் நாள் ஒன்று வீதமாக தேயந்து போக சாபமிட்டார். இதனால் சந்திரனின் கலைகள் நாளரு கலையாக தேய ஆரம்பித்தது. இதை கண்ட சந்திரன் சிவனிடம் சரணடைந்து தட்சனுடைய சாபத்தை போக்கும் படி வேண்டினான். சிவனால் தட்சன் கொடுத்த சாபத்தை முழுவதுமாக போக்க முடியாது என்பதால் தேயும் கலைகள் மீண்டும் வளர்ந்து பூரண சந்திரனாக காட்சியளிப்பாய் என வரமளித்தார். இதனால் தான் பௌர்ணமியும், அமாவாசையும் வருகிறது. 

சூரியன் பகலில் உலா வரும் ராஜ கிரகம் என்றால் சந்திரன் இரவில் உலா வரும் ராஜ கிரகமாகும். பூமி சூரியனை சுற்றுவது போல சந்திரன் பூமியை சுற்றி வரும். சூரியனிடமிருந்து தான் ஒளியைப் பெற்று சந்திரன் பிரகாசிக்கிறார். கேது என்ற கிரகத்தால் மறைக்கப்படுவார். சந்திரன் உறவுகளில் தாய்க்கு காரகனாகிறார். மனநிலை திடமாக இருப்பதற்கும் சந்திரனின் பலம் அவசியம். வயிற்று காரகன் என்பதால் சாப்பாடு இவர் கட்டுப்பாட்டில் உள்ளது. 

குருபகவானிடம் வித்தை கற்க வேண்டி சீடராக சேர்ந்த சந்திரன், குருவின் மனைவி தாராவின் ஆசை நாயகனானார்.  இதை அறிந்து கொண்ட குரு சந்திரனை வளர்ந்து தேயும் படி சாபம் விட்டார். அதனால் தான் 15 நாட்களுக்கு ஒரு முறை அமாவாசையும்,  பௌர்ணமியும் மாறி, மாறி வருகிறது. இதனால்தான் என்னவோ சந்திரன் கெட்டதும் பெண்ணாலோ, அந்த இந்திரன் கெட்டதும் பெண்ணாலே என்ற பழமொழியும் உண்டு.

சந்திரன் வளர்ந்தாலும், தேய்ந்தாலும் அதன் அழகே அழகுதான். சந்திரன் ஒரு ராசியில் 2.25 நாட்கள் சஞ்சாரம் செய்கிறார். இவர் குளுமையானவர். உப்பு ருசியை விரும்புவார் குள்ளமானவர். வைசிய ஜாதியை சேர்ந்தவர். வாயு மூலை எனப்படும் வடமேற்கு திசை இவருடைய ஆதிக்கத்திற்கு குட்பட்டது. இவருடைய சின்னம் முயல். வானவில், மேகம், மீன், சஞ்சலம், சந்தேகம், குண்டாகுதல், இளைத்தல் யாவும் இவர் கை வண்ணமே.

சந்திரன் காதலுக்கு மிகவும் காரணமானவர். இவர் பஞ்சு போன்ற வெண்மை நிறத்தை உடையவர். நீர் நிலைகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் இவரின் ஆதிக்கமும் இருக்கும். நிலாவை தூது விடாத காதலர்களும் உண்டா? மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவை பார்த்து ரசிக்க தெரியாதவன் மனிதனே இல்லை. சந்திரனை பார்த்தாலே கற்பனையும், கவிதையும் ஊற்றெடுக்கும். பெண்ணை வர்ணிப்பதே நிலவை வைத்து தானே. மனோகாரகனல்லவா சந்திரன். சந்திரனை கண்டால் தான் அல்லி மலர் மலரும். இரவு பொழுதை நீட்டிக்க விரும்பும் ஒரு கவிஞன் நிலாவே வா செல்லாதே வா என்கிறான். காதலி கோபமுற்றால் காதலன் நிலவுக்கு என் மேல் என்னடி  கோபம் நெருப்பாய் எரிகிறது என்கிறான் கோபம் தனிந்த காதலியோ அந்த நிலாவைத் தான் என் கையில் பிடிச்சேன் என் ராசாவுக்காக என்கிறாள். காதலுக்கு எவ்வளவு உறுதுணையாக இருக்கிறார். பாருங்கள்.

காதல் தோன்றி வளரும் இடம் 

நீர் நிலைகள் அனைத்தும் சந்திரனின் ஆதிக்கத்திற்குட்பட்டவை அக்காலங்களில் எல்லா காதலர்களுக்கும் சந்திக்கும் இடமாக விளங்கியவைகள் பெண்கள் தண்ணீர் எடுக்க, குளிக்க செல்லும் குளம், கிணறு, ஆற்றங்கரை, பம்பு செட் ஆகும். கிணற்றின் உள்ளிறங்கி படிக்கட்டுகளின் மணி கணக்காய் பேசியவர்களும் உண்டு. தற்போது இவை யெல்லாம் அரிதாகி விட்டதால் காதலர்கள் அனைவரும் கடற்கரைகளுக்கு சென்று  விடுகிறார்கள். பௌர்ணமி நிலவிலே கடற்கரை மணலிலே கைகள் கோலம் போ, கண்கள் ஆயிரம் பாஷைகள் பேச முழு மதியின் அழகில் தன் மதியை மறந்து உட்கார்ந்து இருப்பார்கள். அதை கண்டு அலைகளும் ஆர்பரித்து தன்னுடைய வேகத்தை அதிகரிக்கும். 

காதல் வசனங்கள் 

சந்திரனின் அம்சம் மான் என்கிறார்கள். சந்திரன் ஒரு பெண்கிரகமாவார். பொதுவாக பெண்களை  வர்ணிக்கும் போது மான் போல துள்ளி துள்ளி ஓடுகிறாள். மீன் போல கண்கள் (நீரில் வாழும் உயிரினம்)  அல்லி தண்டு போல கால்கள் (சந்திரனை கண்டு மலரும் பூ) தந்தம் போன்ற கால்கள், வெண்ணையை போல் வழவழப்பான உடல் வானவில் போன்ற  புருவம், பிறைபோன்ற நெற்றி, வட்ட நிலவு போன்ற முகம், முத்து போன்ற பல்வரிசை, பஞ்சு போன்ற பாதம். என்று சந்திரனின் காரகத்துவங்களை வைத்து வசனங்களை அடுக்கி கொண்டே போகலாம். திருமணம் முடிந்தவுடன் தம்பதியர் தேன்நிலவுக்கு செல்கிறார்கள். அதற்கு ஆங்கிலத்தில் Honey moon  என பெயரிட்டுள்ளனர். இந்த தேன் நிலவு மூலம் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ள மனம் விட்டு பேச முடிகிறது. உடல் இணைவது மட்டும் வாழ்க்கையல்ல உள்ளங்களும் இணைவது தானே முழுமையான வாழ்க்கை.

சித்திரையில் வரும் பௌர்ணமி 

மாதம் ஒரு முறை பௌர்ணமி வந்தாலும் சித்திரையில் வரும் பௌர்ணமியானது மிகசிறந்ததாக கருதப்படுகிறது. சூரியன் உச்சம் பெற்று தன் உக்கிரகத்தை வெளிபடுத்த, அதிலிருந்து வெளிச்சத்தை பெறும் சந்திரனும் வானில் தகதக வென மினுமினுக்க, அப்பப்பா பார்ப்பதற்கு தான் கண்கள் நூறு வேண்டும். இந்நாளில் பெண்கள் பால் குடம் எடுத்து வந்து பெண் தெய்வமாகிய அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது, இளநீர் அபிஷேகம் செய்வது போன்றவற்றின் மூலம் தெய்வங்களை குளிர்விப்பார்கள். இவைகளும் சந்திரனின் காரகத்துவங்கள் அல்லவா? கன்னியாகுமரி கடற்கரையில் இந்த ஷிuஸீ sமீt ம் விஷீஷீஸீ ஸிவீsமீ ம் அந்நியநாட்டவரையும்  அசையாமல் நிற்க வைக்கும். இந்த அழகை ரசிக்க ஆயிரமாயிரம் மக்கள் திரள்வார்கள். 

பௌர்ணமியின் பெருமை 

திருமணமாகாதவர்கள், குழந்தைபேறு இல்லாதவர்கள், வாழ்க்கையில் பலவிதமான துன்பங்களை சந்திப்பவர்கள் போன்ற அனைவரும் பௌர்ணமி நாட்களில் கோவில்களில் சென்று இரவு தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வதையும் மனம் விரும்பி செய்கிறார்கள். ஐப்பசி மாத பௌர்ணமியில் எல்லா சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் செய்து அதை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். பௌர்ணமியில் விரதம் இருப்பது, தெய்வவழிபாடு செய்வது போன்ற வற்றின் மூலம் வாழ்வில் துன்பங்கள் விலகும் என்பது ஐதீகம் கார்த்திகையில் வரும் பௌர்ணமியை தீப திருநாளாக போற்றி கொண்டாடுகிறார்கள். 

அமாவாசையின் பெருமை

சந்திரனை வானில் காண முடியாத நாள் அமாவாசை என்றாலும் இந்த அமாவாசை நாட்களிலும் பித்ருக்களுக்கு தர்பணம் செய்வது, திருஷ்டிகழிப்பது, ஆடு கோழி போன்றவற்றை  பலி கொடுத்து மாந்தீரீக வித்தைகளை கற்பது போன்ற வற்றை முழு அமாவாசைகளில் செய்கிறார்கள். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மஹாளய அமாவாசை என்பார்கள். குடும்பத்தில் பித்ருக்களுக்கு தர்பணம் செய்ய  இயலாதவர்கள் இந்த மஹாளயை அமாவாசையில் பித்ரு தர்பணம் செய்வார்கள். இறந்தவர்களுக்கு வருடா வருடம் திதி கொடுக்க முடியாதவர்களும் இந்த மஹாளய அமாவாசையில் பித்துருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களின் கடமையை நிறைவேற்றி கொள்கிறார்கள். 

நிலாச் சோறு

உணவு சந்திரனின் கட்டுபாட்டிலிருப்பதாக முன்பே பார்த்தோம். நிலா சோறு சாப்பிடுவதென்பது பலருக்குப் பிடிக்கும். பௌர்ணமி நிலவில் சாப்பாட்டை மொத்தமாக பிசைந்து தாயனவர் குழந்தைகளுக்கு  ஒவ்வொரு கவளமாக கையில் உருண்டை பிடித்து கொடுப்பதும் அதை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி உண்பது மனதிற்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா?  அதுபோல கூட்டாஞ்சோறு சமைத்து குழந்தைகள் விளையாடி மகிழ்வதும் இந்த சந்திரனின் ஒளியில்தான். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அரிசி எண்ணெய் பருப்பு, காய் உப்பு புளி போன்றவற்றை ஆரைக்கு ஒரு பங்காக எடுத்து வந்து நில வொளியில் அடுப்பு மூட்டி நில சோறு சமைத்து அதை தோப்பத்தில் உள்ள வாழை இலையை பறித்து அனைவருக்கும் பரிமாறி உண்டு மகிழ்வது அந்த பிஞ்சு நெஞ்சங்களுக்கு  எத்ததை ஆர்வம் தெரியுமா? அது போல சாப்பிடாத குழந்தையும் சந்திரனின் அழகை கண்டால் சாப்பிட்டு முடிக்கும். தாயானவள் அதே பார் சந்தமாமா என குழந்தைக்கு  காட்டி அவருக்கு வாய் கொடுப்போமாம் நீ ஒர வாய் சாப்பிடுவியாம் என சாப்பிடாத சந்திரனுக்கு சோறுட்டி, தன் குழந்தையை வயிறு நிறைய சாப்பிட வைப்பாள். தாய். அன்பு, உணவு இம்மூன்றிற்கும் சந்திரனே காரகனல்லவா. 

கடல் அலைகள்

பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் கடலில் சீற்றங்கள் அதிகமாக இருப்பதாக விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. பூமியின் புவியீர்ப்பு சக்தியும், சந்திரனின் காந்த சக்தியும் இதற்கு காரணங்களாகும்.  பூரண நிலவாக சந்திரன் உலா வரும் நாட்களில் கடல் அவரை பார்த்து பூரித்து மகிழ்கிறதோ என எண்ணத்தோன்றும். அதுவே சந்திரனை பார்க்க முடியாத  அமாவாசை நாட்களில் சந்திரனை தேடுவதற்காக பொங்கிப் பாய்கிறதோ? இதற்கான விடை சந்திரனுக்கு மட்டுமே தெரியும். 

சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர் பாரதியார் 

பார் முழுவதும் பெண் சுதந்திரத்திற்காகவும் நாட்டின் நலனுக்காகவும் தன்னையே அர்பணித்து கொண்டவர் பாரதி. பெண்களின் அடிமைத் தனங்களை உடைத்தெரிய பாடுபட்டவர்களில் முக்கியமானவர் பாரதி. அவர் பிறந்த தேதி என்ன தெரியுமா? 11. 1+1=2. 2 ம் எண்ணின் சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்து பெண்களுக்காக பாடுபடாவிட்டால் எப்படி?

சிந்து நதி இன்னிசை நிலவினிலே 
சேர நன் நாட்டிளம் பெண்களுடனே 
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து 

தோனிகள் ஒட்டி விளையாடி மகிழ்வோம் எத்தனை கற்பனை திறன் பார்த்தீர்களா? சந்திரனை கற்பனை காரகன் மனோகாரகன், காதலுக்கு ஏற்றவன், கவிதைதிறனை வழங்குபவன் என பலவகையில் பார்த்தாலும் விஞ்ஞான ரீதியாக நிலாவிற்கே  மனிதன் சென்று அங்கு ஆய்வுகளை நடத்தி கொண்டிருக்கிறான் என்பது உண்மை. ஆயா வடை சுடுவதாக நம் கண்ணுக்கு  தெரியும் அனைத்தும் பாறைகளும், கற்களும் தான்.  நிலவில் மனிதன் வாழ முடியும் என்பதையும் விஞ்ஞானம் ஊர்ஜிதம் செய்துள்ளது. சொல்ல முடியாது சந்திரனில் உண்டாக கூடிய குடியிருப்புகளால் வானில் டிராபிக் ஜாம் ஆனாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை. 

முதன்முதலில் நிலவில் காலடி வைத்தவரின் பெயர் என்ன என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் அவர் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர் என்பது யாருக்கும் தெரியாது. சந்திரனின் காலடி பதித்தவரின் பெயர் 

Neel Amstrong
5553 14342753 = 47 4+7=11 - 1+1=2

ஆச்சரியமாக இருக்கிறதா? 
2ம் எண் சந்திரனின் ஆதிக்கமல்லவா? அதனால்தான் முதன்முதலில் சந்திரனில் காலடி எடுத்து வைக்கும் பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. 


தொடர்புக்கு


For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  


Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.

Astro Ph.D research scholar

No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com



Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.MICR no - 600019072IFS code ; IDIB000S082CBS CODE-01078

Monday, September 16, 2013

சூரியன்

காதல் திருமணத்தம்பதியர்களுக்கு  
இலவச ஆலோசனை

ஜோதிடவியல் துறையில் திருமண வாழ்வு தொடர்பாக முனைவர் பட்டத்திற்காக ஆய்வு  செய்வதால்  காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியர்களின் ஜாதகங்கள் ஆய்வுப்பணிக்காக தேவைப்படுகிறது.அதனால் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியர்கள் தங்களது பிறந்த தேதி,நேரம்,ஊர்,திருமணநாள், முகவரி செல்போன் எண், ஆகியவற்றை தெளிவாக E.mail அனுப்பவும்.அப்படி அனுப்பும் நேயர்களுக்கு அவர்களின் ஜாதகத்திலுள்ள முக்கிய கேள்விக்கு E.mail மூலம் இலவசமாக ஆலோசனை வழங்கப்படும்.இவை அனைத்தும் ஆய்வுப்பணிக்காக மட்டும் என்பதால் ரகசியமாக பாதுகாக்கப்படும். 
இப்படிக்கு
முருகு பாலமுருகன் முனைவர் பட்ட ஆய்வாளர்,
117/33 பக்தவச்சலம் காலனி, முதல் தெரு,
வடபழனி,சென்னை&600026,செல்&7200163001 9383763001

விஞ்ஞானத்தில் சூரியன் 

சூரியனை மையமாக கொண்டுதான் மற்ற கோள்கள் அனைத்தும் சுற்றி வருகின்றன என்ற உண்மையை முதன் முறையில் உலகத்திற்கு உணர்த்தியவர் கோபர் நிகஸ் என்ற இத்தாலிய விஞ்ஞானியாவார். சூரியனை மையமாக கொண்டு சூரிய குடும்பம் என்று அழைக்கப்படும்  9  கோள்கள் சுற்றி வருகின்றன. நாம் வாழும் பூமியும் சூரிய குடும்பத்தை சேர்ந்த ஓர் கோளாகும். மற்றவை செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, யூரேனஸ், நெப்டியூன், புளுட்டோ போன்றவைகளாகும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சூரியனை சுற்றி வரும் கோல்கள் புதன் வெள்ளியாகும்(சுக்கிரன்). இதனை தாழ்நிலை கோள்கள் என்றும், பூமி நீங்களாக மற்ற கோள்கள் அனைத்தையும் உயர்நிலை கோள்கள் என்றும் விஞ்ஞானிகள் பிரித்துள்ளனர். 

சைடிரியஸ் காலம் என்பது ஒரு கோள் சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் கால அளவு ஆகும். உதாரணமாக நாம் வாழும் பூமி சூரியனை சுற்றிவர 365.25 நாட்கள் ஆகிறது. பூமியில் பருவக்காலம் உண்டாவதற்கும் இரவு பகல் மாற்றத்திற்கும் கால அலரீடுகள் மற்றும் கனிப்புகளுக்கும் சூரியனே முக்கிய காரணமாகிறது.

புராணத்தில் சூரியன்

கசிப முனிவருக்கும் அவருடைய முதல் மனைவி அதிதிக்கும் பிறந்தவர்கள் துவாதசி ஆதித்தியர்கள் என்றும் 12 பேர். இவர்கள் 12 பேரும் நாராணனின் திருவருளாளல் ஒன்று சேர்ந்து சூரியன் என்ற பெயரில் விளங்கினர். இவரே நவகிரகங்களின்  தலைநாயகராவார். இதனால் தான் இவரை சூரிய நாராயணன் என்று அழைக்கிறோம். சூரியன் ஏறி செல்லும் தேர் ஒற்றை சக்கரமுடையது. அதன் ஒரு முனை துவரு மண்டலத்துடன் இணைந்துள்ளது. இந்த ஒற்றை சக்கரத்தில் ஏழு குதிரைகள் பூட்டப்பட்டு சூரியன் அமர்ந்து செல்ல சிற்றன்னயின் புதல்வனை அருணன் சூரியனின் சாரதியாக இருந்து தேரை ஓட்டி செல்கிறார். 

கசிபரின் அநேக புத்திரங்களில் சூரியனே ஷத்திரிய தர்மத்தை காக்க அரம் பரிபாலனம் செய்தார். சூரியன் தேரில் அமர்ந்து நவகிரக பரிபாலனத்தையும், பிரபஞ்ச இயக்கத்தையும் நீதி தவாமல் நடத்தி வருகிறார். 

சூரியனின் மகத்துவங்கள் 

தங்கத் தட்டுப்போல தகதகவென வானில் உலா வரும் ஒரு ராஜ கிரகம் சூரியனாவார். உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் சூரியனின் தயவின்றி வாழவே முடியாது. தூங்கும் அனைவரையும் தட்டி எழுப்பி தன் கடமைகளை செய்ய சொல்லி தூண்டுவார். கண்ணுக்குத் தெரிந்த இயற்கை கடவுளான சூரியன் யாருக்காகவும், எதற்காகவும் தன் கடமைகளை செய்ய தவறமாட்டார். அதுபோல இவர் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவும் மாட்டார். சூரியனின்றி பூமிக்கு வெப்பம் கிடைக்குமா? மழைபெய்யுமா? மரம் செடிகொடிகள் தான் உயிர் வாழுமா? இவை அனைத்தும் இல்லாமல் மனிதனால் தான் உயிர் வாழ முடியுமா? பயிர்களுக்கு தன் பார்வையாலேயே உணவை தருபவரல்வா சூரியன். ஒளி வெள்ளத்தை உலகில் பாய்ச்சி பிரகாசிக்க வைக்கிறார். கொடை வள்ளல் குணத்தை கொண்டவர். கடமை உணர்வு மிக்கவர். தாமரையை மட்டும் தான் சூரியனை கண்டு மலருவதாக உதாரணத்திற்கு கவிஞர்கள் கூறினாலும், அனைத்து பயிர் வகைகளுமே சூரியனால் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்ற உண்மையை நம்மாள் மறக்க முடியாது-. அதிகாலையில் கொக்ரகோ என சேவல் கூவுவதும்,  பறவைகளும் கிறிச்கிறிச் சத்தமும் மகிழ்ச்சி அளிப்பதுதானே. 

சூரியனை சுற்றித்தான் அனைத்து கிரகங்களும் வலம் வருகின்றன. இவர் யாரையும் சுற்றமாட்டார். இவரிடமிருந்து ஓளியை  பெற்றுதான் சந்திரனும் நட்சத்திரங்களும் இரவில் பிரகாசிக்கின்றன. சூரியனுக்கு கொடுத்துதான் பழக்கமே தவிர யாரிடமிருந்தும் வாங்கி பழக்கமில்லை. அதனால் தான் அக்காலத்தில் அரசர்கள் தங்களை சூரியவம்சம் என பெருமையுடன் கூறிக்கொண்டனர். வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாது கொடை வள்ளல்களாகவும் இருந்தனர். உதாரணத்திற்கு கர்ணன். சூரியனின் பார்வையால் பிறந்தவன். சூரியனின் அம்சமாகவே கருதப்பட்டவன். சூரியன் உச்சமாக இருக்க பிறந்தவன். அவன் அரச குலத்தில் பிறந்தவன் என்று யாரும் அறியாத போதும் அரசகுணங்களுடன் வாழ்ந்தவன். தோரோட்டியாக வாழ்நாளில் இருந்தாலும் வலதுகை கொடுப்பதை இடது கை அறியா வண்ணம் தான தர்மங்கள் செய்தவன். அவனது தான தர்மங்கள் அவனுக்கு கவசமாக இருப்பதால் அவனை அழிக்க முடியாது என அறிந்த கண்ண பரமாத்மா அவன் குற்றுயிராய் இருக்கும் தரவாயில் அவனிடம் மாறுவேடத்தில் வந்து தானம் கேட்க என்னிடம் இந்த சமயத்தில் கொடுக்க ஒன்றுமில்லையே என மனதில் கர்ணன் யோசித்து கொண்டு இருக்கும் போதே உன்னுடைய தான தர்மங்களை எனக்கு தாரை வார்த்து கொடு என பெற்றுக் கொண்டு கர்ணனுக்கு முக்தி கொடுத்தார். இன்று வரை கொடுக்கும் குணம் கொண்டவரை கர்ணன் பரம்பரை என்று தானே கூறுகிறோம். கர்ணன் சூரியனின் பரம்பரை அல்லவா.

ஸ்ரீராமம் கூட ரகுவம்சம்  என தான் புராணம் கூறுகிறது. கடவுளின் அம்சமான ஸ்ரீராமபிரானே சூரியவம்சம் என்று தன்னை கூறி கொள்ளும் அளவிற்கு புகழ் பெற்றவர் சூரியன். இவர் இரகங்களின் அரசனாவார்.  ஷத்ரிய ஜாதியான இவர் தலையில் சிறு கொம்புள்ளவர். சமமான உயரம் உடையவர். கிழக்கு திசை இவரது ஆதிக்கமாகும். காயத்ரி மந்திரத்தின் காரணகர்த்தா ஆவார். இவருடைய சுவை கசப்பு, இவரின் நிறம் சிவப்பு, தானியம் கோதுமை, மலையை ஆளுமை செய்பவர். பருத்த தலையும் சிறும்பிய முடியும் உடையவர். அதிகாரகுணம் மிக்கவர். ரசவாத வேலை செய்பவர். சித்த வைத்தியம் அறிந்தவர். பால்,மிளகு,ஒன்றை தலைவலி, வலதுகண், பஞ்சலோகம் பிரயாணம் செய்தல் போன்றவற்றிற்கு சூரியன் காரண கர்த்தா ஆவார். பகல் பொழுது இவருடையது என வேதம் கூறுகிறது. உறவு முறைகளில் தந்தைக்கு காரககனாகிறார். சிவ பூஜை செய்து வணங்குவர்.

சித்திரையில் ஏன் குழந்தை பிறக்க கூடாது 

சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பது நல்லதல்ல. குடும்பத்தை பிரித்துவிடும். தந்தைக்கு கண்டத்தை கொடுக்கும் என்று மேலோட்டமாக நம்ப படுவதால் நாம் திருமண மான புதுமண தம்பதியினரை ஆடி மாதங்களில் பிரித்து வைக்கிறோம். ஏனென்றால் ஆடி மாதத்தில் கர்பம் தரிக்குமேயானால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சூரியன் உச்சத்தில் இருப்பார். சூரியன் உச்சம் பெற்றவர்களுக்கு அதிகார குணமும், பிறரை அடக்கி ஆளும் தன்மையும் இருக்கும். ஒரு நாட்டில் பலர் சூரியன் உச்சம் பெற்றிருக்கும் போது பிறந்தால் அனைவருக்கும் அதிகார குணமிருக்கும். அதிகாரமிக்க பதவிகளுக்கும் ஆசைபடுபவர்களாக இருப்பார்கள். இதனால் யாரும் யாரையும் அடக்கி ஆளமுடியாத நிலைமை உண்டாகும். நாட்டின் நிலைமை  என்னவாகும் என யோசித்து பாருங்கள். பெரிய பெரிய ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் அனைவருமே சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக தான் இருப்பார்கள். சித்திரையில் பிறந்தவர்களுக்கு சமுதாயப் பணிகளில் ஈடுபாடு அதிகம் இருக்கும். வீட்டை பற்றி சிந்தனையே இல்லாமல் போகும். அனைவருமே சமுதாயம், சீர்திருத்தம் அரசியல், அதிகாரம் என்று போனால் அவர்களின் குடும்பங்களின் கதி என்னவாகும். இது மட்டுமின்றி சித்திரையில் பிறக்கும் குழந்தைகளுக்கு சூரியனின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும். என்பதால் தான் நம் முன்னோர்கள் உஷாராக சித்திரையில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என வரியில் முடித்து விட்டார்கள். ஆனால் பிராமணர்களுக்கு இது விதி விலக்காகும். அதனால்தான் பெரிய பெரிய உயர்பதவிகளையும், அரசு பணிகளையும் பிரமாணர்கள்  பிறர் போற்றும்படி நிர்வாகம் செய்கிறார்கள். சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் நிர்வாகத்தில் கொடி கட்டிப் பறப்பார்கள். 

சூரியனை நமஸ்காரம் செய்வது ஏன்? 

நாம் காலையில் எழுந்தவுடன் இறைவனை வணங்குகிறோம். அது போல குளித்து முடித்தவுடன் தினமும் சூரியனை நமஸ்காரம் செய்வது மூலம் ஆத்மபலமும், கண்பார்வைக்கு வேண்டிய வைட்டமின் சத்தும் நமக்கு கிடைக்கிறது. பிறந்த குழந்தைகளை கூட காலையில் சூரிய ஒளியில் சிறிது நேரம் வைத்திருப்பது நல்லது. சூரியன் கண்களுக்கு காரகன் என்பதால் தினந்தோறும் காலையில் சூரியனுக்கு நமஸ்காரம்  செய்ய வேண்டும் என பெரியவர்கள் கூறினார்கள். கண்பார்வை குறையத்தொடங்கும் வயதில் சூரியனை நமஸ்கரிப்பதால் ஒரு பலனும் இல்லை. இதனால் தான் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதில் எந்த பலனும் இல்லை என கூறுகிறோம். 

தந்தையும் மகனும்,

சூரியன் தந்தைக்கு காரகனாவார். ஆங்கிலத்தில் பாருங்கள் ஷிuஸீ  என்ற சொல் சூரியனையும் ஷிஷீஸீ என்ற சொல் மகனையும் குறிப்பதாக உள்ளது. சூரியனுக்கும், தகப்பனுக்கும், மகனுக்கும் உள்ள தொடர்பு விளங்குகிறதல்லவா. 

ஞாயிறு அன்று நான்வெஜ்

ஞாயிறு என்றால் சூரியன் என்று பொருள், சூரியன் ஷத்திரிய குலத்தை சார்ந்தவர். சண்டை பிரியர். வலிமை உடையவர். சண்டை போட வேண்டுமென்றால் உடல் வலிமை வேண்டும்.  உடல் வலிமை வேண்டுமென்றால் நல்ல உணவு வேண்டும். கறி மீன் சாப்பிட்டால்தான் நல்ல உடல் வலிமை இருக்கும். இதனால் தான் ஞாயிற்று கிழமைகளில் கறி மீன் கடைகளில் கூட்டம் அலை மோதும். எவ்வளவு விலை என்றாலும் மறுபேச்சின்றி வாங்கி செல்லும். ஞாயிறு விடுமுறை தினம் தானே. உண்ட மயக்கம் தொண்டணுக்கும் உண்டு என்பது போல அசைவ கறி சாப்பிட்டுவிட்டு அமைதியாக ஓய்வும் எடுக்கலாமே.

சூரியனின் ஆதிக்கம் கொண்ட கலெக்டர் பதவி

சூரியன் அரசு வழியில் அதிகாரமிக்க பதவிகளை வகிப்பதற்கு காரகனாக இருப்பவர். உதாரணத்திற்கு கலெக்டர் பதவியை  எடுத்துக்கொள்வோம். கலெக்டர் என்றால் ஆட்சியாளர் என்று பொருள். அதாவது நிர்வாகம் செய்யக்கூடிய ஆளுமை பெற்றவர். கலெக்டர் என்ற சொல்லுக்கு கூட்டுத் தொகை எவ்வளவு வருகிறது என்று பார்ப்போமா? சூரியனின் ஆதிக்க எண் 1 என்பது நாம் அறிந்ததே. அதுபோல
சிஷீறீறீமீநீtஷீக்ஷீ
373353472= 37=10-1
கலெக்டர் பதவிக்கு சூரியனின் ஆதிக்கம் வந்து விட்டதல்லவா?  

மற்றொரு உதாரனத்தைப் பாருங்கள்.

Government: 


என்பதற்கு அரசு என்று பொருள்.  அதாவது ஒரு நாட்டை கட்டி காத்திடும் அமைப்பு அரசுக்கு எல்லா விதமான அதிகாரங்களும் உண்டு. இதை செய், இதை செய்யாதே என ஆனையிடவும் அதிகாரம் உண்டு. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது தான் அரசு என்றாலும் அந்த அதிகாரம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களின் ஆட்சி காலம் முடியும் வரை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவும், அந்நிய நாட்டினாரால் உண்டாக கூடிய தீவிர  வாத செயல்களை அழிக்கவும் அரசுக்கு முழு அதிகாரம் உண்டு. 
Government:
3765254554 = 46=10 = -1
ம் எண் வருகிற தல்லவா. இதுவும் சூரியனின் ஆதிக்கம் தானே. 


தொடர்புக்கு


For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  


Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.

Astro Ph.D research scholar

No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com



Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.MICR no - 600019072IFS code ; IDIB000S082CBS CODE-01078


Friday, September 13, 2013

காதல் திருமணத்தம்பதியர்களுக்கு இலவச ஆலோசனை

காதல் திருமணத்தம்பதியர்களுக்கு  இலவச ஆலோசனை

ஜோதிடவியல் துறையில் திருமண வாழ்வு தொடர்பாக முனைவர் ((Ph.D)    பட்டத்திற்காக ஆய்வு  செய்வதால்  காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியர்களின் ஜாதகங்கள் ஆய்வுப்பணிக்காக தேவைப்படுகிறது.அதனால் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியர்கள் தங்களது பிறந்த தேதி,நேரம்,ஊர்,திருமணநாள், முகவரி செல்போன் எண், ஆகியவற்றை தெளிவாக   Email -  மூலம் அனுப்பவும்.அப்படி அனுப்பும் நேயர்களுக்கு அவர்களின் ஜாதகத்திலுள்ள முக்கிய கேள்விக்கு Email - மூலம் இலவசமாக ஆலோசனை வழங்கப்படும்.இவை அனைத்தும் ஆய்வுப்பணிக்காக மட்டும் என்பதால் ரகசியமாக பாதுகாக்கப்படும். 
இப்படிக்கு
முருகு பாலமுருகன் முனைவர் (Ph.D) பட்ட ஆய்வாளர்,
117/33 பக்தவச்சலம் காலனி, முதல் தெரு,
வடபழனி,சென்னை&600026,செல்7200163001 9383763001

please contact my postal adress  


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com