Friday, November 29, 2013

குரு

நன்றி,நன்றி  

       சோதிட செய்திகளை மட்டும் தரும் எனது வலை பக்கத்திற்கு வருகை தந்த வாசக பெரு மக்களுக்கு என் மன மார்ந்த நன்றி. தொடங்கிய 2 வருடத்திற்குள்  தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 5 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. அள்ளி தருகிறேன் மேலும் சோதிட செய்திகளை, வாரி பருகுங்கள் சலிக்காமல்.

அன்புடன்
முருகுபாலமுருகன்





விஞ்ஞானத்தில் குரு 

பொன்னவன் என போற்றப்படுகின்ற குரு சூரிய குடும்பத்தை சேர்ந்த மிகப் பெரிய கோளாகும். உயர்நிலை கோளால் வானவீதியில் பிரிவு செய்துள்ள குரு. செவ்வாய் கோளை அடுத்து சூரியனை சுற்றி வலம் வருகிறது. குரு ஒரு பெரிய  கோள் என்பதால் குருவை சுற்றி வரும் துணை கோள்களின் எண்ணிக்கையும் மிக அதிகம்.  குருவின் துணைகோள்கள் 14 என கணக்கிடப்பட்டுள்ளது. குரு பூமியை விட அதிக பிரதிபலிப்பு தன்மை கொண்டது ஆகும்.  சூரிய ஒளிக்கதிர்களின் 51 சதவீகிதத்தை வாங்கி பிரதிபலிக்கிறது. குருவின் நிறம் மஞ்சள் ஆகும். குரு கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை. 

புராணத்தில் குரு 

தெய்வீக அறிவுக்கும், வேதாந்த ஞானத்திற்கும் உரியவராகவும், தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும், ஆச்சார்யராகவும் விளங்குபவராகவும், மூவுலகிற்கும் புக்தி சக்தியாக  திகழ்பவராகவும் இருப்பவர் குருபகவானாவார். உலகில் உள்ள சகல சௌபாக்கியங்களுக்கும் காரணமானவர் இவரே. கல்வியில் முதன்மை வகிப்பவர் உள்ளத்திற்கு வலிமையை தருபவர். நீதிமான். பல ஆசிரியர்களையும மேதைகளையும், நீதிபதிகளையும், மந்திரிகளையும் உருவாக்குபவர். விவேகம், வித்தை அந்தஸ்து, புகழ், ஆற்றல், பணம், தெய்வீகம் முதலியவற்றிக்கு மூலகாரணமும் இவரே.
எல்லா கிரகத்தையும் விட குருபகவானே முழு சுபராவார். யானை இவரது வாகனம் இனிப்பு பிரியர். சாத்வீக குணம் கொண்டவர். இவரது உலோகம் பொன். கல் புஷ்பராகம். வடகிழக்கு திசையை ஆள்பவர். திருமணபாக்கியத்தையும், குழந்தை செல்வத்தையும் கொடுப்பவர் இவரே. எண்கணிதத்தில் 3 வது எண்ணுக்கு சொந்தகாரர்.
3ம் எண்ணில் பிறந்தவர்கள் ஒரு பொழும் மற்றவர்களுக்கு கீழ்படியும் பணியும் வேலைகளை செய்ய விரும்ப மாட்டார்கள். உலகில் உயர்வுகளையும், புகழ்களையும் பெற வேண்டும் என்பதே இவர்களது குறிக்கோள், மனசாட்சியுடன் நடந்து கொள்வதால் நம்பிக்கையும் பொறுப்பும் வாய்ந்த எல்லாவித பதவிகளிலும் மேன்மை வகிப்பார்கள். பிறர் தம்முடைய கட்டளைகளுக்கு  கீழ் படிந்து நடக்க வேண்டும் என விரும்புவார்கள். 

மாதா பிதா குரு தெய்வம் 

மாதா பிதாவிற்கு அடுத்தபடியாக குறிப்பிடுவது குருவைதான். நமக்கு கல்வி கற்பிப்பவர்களை குரு என்றுதான் குறிப்பிடுகிறோம்.  ஆசிரியர்கள் போதிப்பவர்களாகவும், வழிகாட்டுபவராகவும் விளங்குபவர்களாக இருப்பதால் அவர்களை குரு என  அழைக்கிறோம். 

மாங்கல்யம மஞ்சள் நிறம் 

சுபகிரகமான குருவின் நிறம் மஞ்சள் என முன்பே பார்த்தோம். அடங்காமல் திரிபவனையும் கட்டுக்கடங்காவைக்கும் பந்தம் திருமணம். ஒரு திருமணத்திற்கு நிச்சயதார்த்தம், நலங்கு,, பந்தகால், உறவினர் வருகை, மகிழ்ச்சி, சந்தோஷம் என பல சடங்குகளும், சம்பிரதாயங்களும் இருந்தாலும் முழுமை பெற வைப்பது ஒரு மஞ்சள் கயிறு மட்டுமே. மஞ்சள் கயிறு கட்டினால் தான் ஒரு திருமணமே நிறைவு பெறும். குருவின்  உலோகம் பொன் என பார்த்தோம். இந்த மங்கள நிகழ்ச்சியில் மஞ்சள் கயிற்றில் பொன்னாலான தாலியை அவரவர் சம்பிரதாயத்திற்கேற்ப வடிவமைத்து பெண்ணின் கழுத்தில் கட்டுகிறார்கள். வசதியே இல்லாதவனாக இருந்தாலும் மஞ்சள் கயிற்றில் ஒரு சிறிய  மஞ்சள் துண்டை வைத்து கட்டி அதையே தாலியாக கட்டுவான். மஞ்சளுக்கு உள்ள மகிமையே மகிமைதான். அதுபோல நம காலாசாரத்தில் சுமங்கலிகளுக்கு ஒரு தனி மரியாதையும் மதிப்பும் உண்டு. கழுத்து நிறைய நகை இல்லாவிட்டாலும் மஞ்சள் நிற தாலி கயிறு இருந்துவிட்டால் அவர்கள் எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் முன்னுரிமை வகிக்கும் தகுதியை பெறுகிறார்கள். சுபகிரகமான குரு பெண்களின் மாங்கல்ய பலத்திற்கும், அதனால் உண்டாக கூடிய பெருமைக்கும் காரகனாகிறார் என்பது மறுக்க முடியாத உண்மையல்லவா. 
தாலி கயிறு கட்டுபவர்களை மட்டும் குறிப்பிட்டீர்களே, இதனால் தாலியின் மகிமை புரிகிறது. மோதிரம் மாற்றுபவர்களை பற்றி என்ன சொல்வது என கேட்டால் அதற்கும் பதில் உண்டு. குருவின் உலோகம் பொன் என்பதை அறிவோம். மோதிரத்தை பொன்னால் செய்து தானே மாற்றி கொள்கிறார்கள். இங்கும் குருவின் ஆதிக்கம் இருப்பது புரிகிறதல்லவா? 

மஞ்சள் நீர் 

வீட்டிலும் சரி அலுவலகங்களிலும் சரி எல்லா வகையிலும் சுபிட்சங்களையும் பெற கலசங்களை வைத்து யாகம் செய்கிறோம். பூஜைகள் பரிகாரங்கள் செய்கிறோம். எல்லாம் முடிந்தவுடன் அந்த கலசத்தில் உள்ள நீரை வீடு முழுவதும்.(அலுவலகத்திலும்) தெளிக்கிறோம். அந்த கலசத்தில் உள்ள நீர் என்ன தெரியுமா? மஞ்சள் கலந்த நீர்தான். வாரந்தோறும் தண்ணீரில் மஞ்சளை கரைத்து வீடுகளில் தெளித்தால் தீட்டு, பீடை தரித்திரம் யாவும் விலகும் என்பது ஐதீகம். மஞ்சள் நிறமுடைய குரு சுபரல்லவா. சுப தன்மையை தானே வழங்குவார். 

மஞ்சள் காமாலை நோய் 

மஞ்சள் காமாலை நோய் உள்ளவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் நிறம் என்ற பழமொழியே உண்டு. மஞ்சள் காமாலை நோய்க்கு காரகனே குருதானே. இருதயம் ஈரல் போன்றவற்றிற்கும் குரு காரகம் வகிக்கிறார். மஞ்சள் காமாலை வந்தால் ஈரல் பழுதடைகிறது.  இதனால் உடலும் மஞ்சள் நிறமாக மாறுகிறது. சிறுநீரும் மஞ்சள் நிறமாகவே போகிறது. மஞ்சள் காமாலை குருவின் நோய் அல்லவா. அதுபோல பித்தம் அதிகமாக ஆவதற்கும் ஈரல் ஒரு காரனம். பித்தம் அதிகமானால் தலைசுற்றல், மஞ்சள் மஞ்சளாக வாந்தி போன்றவை வரும். இந்த பித்தத்தை ªளிவிப்பதற்கும் மஞ்சள் நிறமுள்ள எலுமிச்சம் பழ  சாற்றை பிழிந்து குடிப்பதன் மூலம் நிவாரணம்கிடைக்கிறது குருவின் மஞ்சள் நிறத்திற்குள்ள மகிமையைப் பார்த்தீர்களா?

இருதய துடிப்பிற்கு காரகன் குரு 

இருதயம் குருவின் ஆதிக்கமாகும். இருதய துடிப்பானது ஒரு நிமிடத்திற்கு 75 தடவை துடிக்கிறது என மருத்துவர்கள் நிருபித்து காட்டியுள்ளனர். 75 ஐ கூட்டுங்கள் 7+5 = 12, 1 + 2 3 அனைவரின் இருதயத்திலும் குடியுள்ளார். குரு என்பது தெரிகிறதல்லவா.

தனக்காரகன் குருபகவான்

பணவரவு பணபுழக்கம் போன்றவற்றிற்கு காரகன் குருபகவானாவார். உலகின் முதல் பேங்கின் பெயர் பாங்கோ டிரிவால்டா இந்த வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு 1587. இந்த வருடத்தின் கூட்டுத் தொகையை பாருங்கள். 1+5+8+7 = 21 2+1 =3  பணம், தனம் ரொக்கம் என்பதற்கெல்லாம் ஒரே ஆங்கில சொல் சிணீsலீ பணத்தை  ஆள்பவர் குருபகவான் 
Cash
3135 = 12 1+2 = 3 
விடுவிடுவாரா தன் ஆதிக்கத்தை 

Jubiter ன் Jubileeவிழா

விழாக்களுக்கு காரண கர்த்தா வியாழ பகவான். ஒருவருக்கு பட்டம் கொடுப்பதற்காக விழா எடுக்கிறோம். விழாவில் சாதாரணமாக ஒரு துண்டை போர்த்தினாலும் அதனை பொன்னாடை போர்த்துவதாக பெருமையாக கூறுகிறோம். பொன்னன் என்பது குருவின் பெயரல்லவா Jubiter என்றால்  வியாழன் கோள் என்பது அனைவரும் அறந்ததே. கோல்டன் ஜீப்லி , சில்வர் ஜீப்லி டைமண்ட் ஜீப்லி,  என்று ஒவ்வொன்றிற்கும் விழா எடுப்பதை கேள்வி பட்டிருப்பீர்கள். (Golden Jubilee, Silver Jubilee, Diamand Jubilee) Jubiter   ல் கடைசி எழுத்தை மட்டும் எடுத்து விட்டு Jubilee  என்று அழைக்கிறார்கள். 

கடவுளுக்கு பேதமில்லை

முஸ்லீம்கள் எல்லா புகழும் இறைவனுக்கே  என்ற கொள்கையுடையவர்கள். அவர் களிக்கடவுளுக்கு  முக்கியத்துவமான எண் 786&ஐ கொண்டுள்ளார்கள். இதன் கூட்டுத் தொகையை பாருங்கள் 7+8+6=21-, 2+1 =3 கடவுள் அனைவருக்கும் சமமானவரல்லவா.

பிரகஸ்பதி மேதாவி என்று அழைக்கப்படுகின்ற குரு பொன்னிறமானவர். எனவே தான் பொன்னவன் என்று போற்றுகிறோம். இவர் காசியில் பதினாராயிரம் ஆண்டுகள் தவமிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.. குரு அஞ்ஞானம் எனப்படும் இருளை அகற்ற கூடிய  வல்லமை படைத்தவர். குருவை வித்யாகாரகன் எனவும் போற்றுகிறோம்.  குரு பகவான் தன்னுடைய பலத்தை அனைவருக்கும் கொடுத்து வாழ்விக்கும் பரந்த மனைப்பான்மை உடையவர். இவரால் நீண்ட ஆயுள் நிலையான புகழ், பாசமிக்க உறவுகள், உயர்ந்த பதவிகள், வாழ்வில் பல சாதனைகள் செய்ய கூடிய யோகம் போன்ற அற்புதமான நற்பலன்கள் அமையும். 

உதாரணத்திற்கு 12.1.1863 ல் பிறந்த விவேகானந்தர் 3ம் எண்ணின் அதிக்கத்தில் பிறந்தவர். காவி உடுத்தி தூய வாழ்க்கை வாழ்ந்தவர். உலகே வியக்கும் வண்ணம் பல சாதனைகள் செய்தவர். அவருக்கு  உலகம் முழுவதும் பக்தர்களும், ரசிகர்களும் இருந்தார்கள். இந்தியாவே அவரால் பெருமை பெற்றது என கூறலாம். 3ம் எண்ணின் ஆதிக்கமல்லவா குரு உயர்ந்தி விட்டார். 

தொடர்புக்கு


For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  


Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.

Astro Ph.D research scholar

No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com



Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.MICR no - 600019072IFS code ; IDIB000S082CBS CODE-01078

No comments: