புத்தாண்டு பலன் 2014 மேஷம்
மேஷம் (அஸ்வினி, பரணி,கிருத்திகை & 1ம் பாதம்)
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே ! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 ஆண்டு உங்களுக்கு சற்று பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவே இருக்கும். உங்கள் ஜென்ம ராசியில் கேதுவும், 7இல் சனி & ராகுவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் போன்றவை உண்டாகும். தற்போது ஜென்ம ராசிக்கு 3இல் சஞ்சரிக்கும் குரு பகவான் வரும் 13.6.2014 முதல் 4ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களாலும் வீண் செலவுகள் ஏற்படும். 21.6.2014இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 6ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பது மூலம் எதையும் எதிர் கொண்டு வெற்றிப்பெறக்கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் கடனில்லாத கண்ணியமான வாழ்க்கையை வாழ்வீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலப்பலன்களை அடைய முடியும். இந்த ஆண்டின் இறுதியில் 16.12.2014 ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் உங்களுக்கு அஷ்டம சனி தொடங்கவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது நல்லது.
தேக ஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்ட படியே இருக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட முடியாத அளவிற்கு மனக்குழப்பங்களும், நிம்மதி குறைவும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைக்க முடியும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் கணவன்&மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியம் நடைபெறுவதில் தடைகள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே விட்டுக் கொடுத்து நடப்பதின் மூலம் பல நல்ல காரியங்களை சாதித்து கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள்.
கொடுக்கல் வாங்கல்
பண வரவுகள் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு திருப்திகரமாக இருக்காது என்பதால் பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது. பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் தாமத நிலை உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேர்ந்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகத் தானிருக்கும்
.
தொழில் வியாபாரிகளுக்கு
கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்து செல்வதும் தட்டி கொடுத்து வேலை வாங்குவதும் நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெறுவீர்கள். எதிலும் எதிர் நீச்சல் போட்டாலும் முன்னேறி விடக் கூடிய ஆற்றல் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர் பார்த்த அளவிற்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும், கிடைப்பதை பயன் படுத்திக் கொள்வது நல்லது. யாருடைய விஷயங்களிலும் தலையீடு செய்யாமலிருப்பதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
அரசியல்வாதிகளுக்கு
மேடை பேச்சுக்களில் கவனமுடன் செயல் படுவது. தேவையற்ற வாக்குறுதிகளை வழங்காதிருப்பது நல்லது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சற்று கஷ்டப்பட வேண்டியிருந்தாலும் சொன்னதை செய்து முடிப்பீர்கள். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டி வரும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளும் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். முடிந்த வரை தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாதிருப்பது நல்லது.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல் முடியும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமையுடன் செயல்படுவீர்கள். முடிந்த வரை குடும்ப பிரச்சனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது மிகவும் நல்லது.
படிப்பு
கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். பயணங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும். அரசு வழியில் ஒரளவுக்கு உதவிகள் கிட்டும்.
ஸ்பெகுலேஷன்
லாட்டரி, ரேஸ், ஷேர், போன்றவற்றில் பெரிய தொகைளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது.
ஜனவரி
ஜென்ம ராசியில் கேதுவும், 7&ஆம் வீட்டில் சனி ராகுவும் சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6&ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 10&இல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். 3&இல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெற கூடிய வாய்ப்புகளும் கை கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது. தினமும் விநாயகப் பெருமானை வழிபடவது நல்லது.
சந்திராஷ்டமம் ; 25.01.2014 மாலை 6.00 மணி முதல் 27.1.2014 இரவு 09.32 மணி வரை
பிப்ரவரி
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதாலும் 10&இல் சூரியனும் புதனும் சஞ்சாரம் செய்வதாலும் இம்மாதம் தொழில் வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். பண வரவுகள் திருப்திகரமாக இருப்பதால் குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் கிட்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 22.02.2014 அதிகாலை 01.53 மணி முதல் 24.02.2014 காலை 05.33 மணி வரை.
மார்ச்
எதையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் குருவும், 7&இல் சனியும் ராகுவும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளும், எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் உண்டாகும் என்றாலும், 10&இல் சுக்கிரனும், 11&இல் சூரியனும் சஞ்கரிப்பதால் எதிர்பார்க்கும் லாபங்கள் தடையின்றி கிடைக்கும். பண வரவுகள் ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் போட்டி பொறாமைகளை சமாளிக்கும் அளவிற்கு ஆற்றல் உண்டாகும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 21.03.2014 காலை 09.38 மணி முதல் 23.03.2014 மதியம் 01.27 மணி வரை
ஏப்ரல்
நிறைய பொது அறிவும், பரந்த மனப்பான்மையும் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசியில் கேதுவும் 12&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. 6&இல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், 7&இல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதாலும் உங்களுக்குள்ள பிரச்சனைகள் எதிர்ப்புகள் யாவும் விலகி குடும்பத்தில் முன்னேற்றமான நிலையினைப் பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும், பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் மந்தநிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 17.04.2014 மாலை 05.22 மணி முதல் 19.04.2014 இரவு 09.21 மணி வரை.
மே
தன்னை நம்பியவர்களை எந்த துன்பத்திலிருந்தும் காப்பாற்றக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு 6&ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் 7&இல் உள்ள சனி வக்ர கதியிலிருப்பதாலும் எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய ஆற்றலும், உங்களின் பலம், வலிமையும் கூடும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படுவர்கள். கூட்டாளிகளிடையே இருந்த பிரச்சனைகள் விலகி வர வேண்டிய லாபங்கள் வந்து சேரும். தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 15.05.2014 அதிகாலை 01.16 மணி முதல் 17.05.2014 அதிகாலை 05.27 மணி வரை.
ஜீன்
எந்த இடையூறுகளையும் பொறுமையோடு தாங்கும் உள்ளம் கொண்ட உங்களுக்கு 6&இல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், மாத பிற் பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய விருப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் ஒரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் லாபங்களைப் பெற முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. 13&ஆம் தேதி முதல் குரு 4&இல் சஞ்சரிக்க விருப்பதாலும் பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமலிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும். 21&ஆம் தேதி முதல் ராகு 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நற்பலனை உண்டாகும். துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 11.06.2014 காலை 09.13 மணி முதல் 13.06.2014 மதியம் 01.35 மணி வரை.
ஜீலை
அகங்கார குணமும், வாக்கு சாதுர்யமும் கொண்ட உங்களுக்கு இம் மாத முற்பாதி வரை சூரியன் 3&ஆம் வீட்டிலும், செவ்வாய் 6&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றத்தைப் பெறுவீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குரு 4&இல் சஞ்சரிப்பதால் சுக வாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்புகள் ஏற்படுவதுடன், அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் ஏற்பட்டாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படவும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் 08.07.2014 இரவு 09.14 மணி முதல் 10.07.2014 இரவு 09.97 மணி வரை.
ஆகஸ்ட்
தைரியமும், அஞ்சா நெஞ்சமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4&ஆம் வீட்டில் சூரியனும் குருவும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்பட்டாலும், ராகு பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறாமைகள் யாவும் விலகும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போதும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 05.08.2014 காலை 01.09 மணி முதல் 07.08.2014 காலை 05.58 மணி வரை.
செப்டம்பர்
வசீகரமான உடலமைப்பு கொண்ட உங்களுக்கு இம்மாதம் 6&ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் விரோதிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள் பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். பொன் பொருள் சேரும். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வதால் எதிலும் ஒற்றுமையுடன் செயல் படமுடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 01.09.2014 காலை 08.58 மணி முதல் 03.09.2014 மதியம் 01.54 மணி வரை மற்றும் 28.09.2014 மாலை 04.37 மணி முதல் 30.09.2014 இரவு 09.46 மணி வரை.
அக்டோபர்
சமயத்திற்கேற்றார் போல் வளைந்து கொடுக்கும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் ராகுவும் சூரியனும் சஞ்சரிப்பதால் நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும் என்றாலும், சனி 7&லும், செவ்வாய் 9&லும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்ப ஒற்றுமை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணவரவுகள் எதிர்பார்த்த படி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சமாளிப்பீர்கள், முருகப்பெருமானை வழிபடுவதால் நற்பலன் கிட்டும்.
சந்திராஷ்டமம் 25.10.2014 இரவு 12.17 மணி முதல் 28.10.2014 காலை 05.42 மணி வரை..
நவம்பர்
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவிசாய்க்காத பண்பு கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 6&இல் ராகுவும், 9&இல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். 4&இல் குரு சஞ்சாரம் செய்வதால் பணம் கொடுக்கல்&வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. 7&ஆம் வீட்டில் சூரியனும், சனியும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல் படவும், தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 22.11.2014 காலை 08.05 மணி முதல் 24.11.2014 பகல் 01.41 மணி வரை.
டிசம்பர்
தாணுண்டு தன் காரியம் உண்டு என செயல்பட கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&ஆம் வீட்டில் ராகுவும், 10&இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்த வித எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடியிருக்கும். ஜென்ம ராசிக்கு 8&இல் சூரியன் சஞ்சரிப்பதும், இம்மாதம் 16&ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தின் மூலம் சனி பகவான் 8&ஆம் வீட்டிற்கு மாறுதலாகி அஷ்டம சனி தொடங்கவிருப்பதும் சற்று சாதக மற்ற அமைப்பு என்பதால் எந்த வொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 19.12.2014 மதியம் 03.48 முதல் 21.12.2014 இரவு 09.42 மணி வரை.
அசுவனி
அசுவனி நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி கேது பகவான் ஆவார். அதிகாரத்திற்கு பெயர் பெற்ற செவ்வாயின் ராசியில் பிறந்துவிருப்பதால் மிகவும் துணிவும் தைரியமும் உடன் பிறந்ததாக இருக்கும். இந்த வருடம் உங்களுக்கு எதிலும் சற்று ஏற்ற இறக்கமானப் பலன்களே உண்டாகும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல் படுவது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடப்பது, முன்கோபத்தை குறைப்பது, ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது போன்றவற்றின் மூலமும் அனுகூலப் பலனை அடைய முடியும். சுப காரியங்கள் தாமதப்படும்.
பரணி
பரணி நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்த்திராதிபதி சுக்கிர பகவானாவார். சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்திருப்பதால் அழகாக உடை உடுத்துவது அணிகலன்களை அணிந்து கொள்வது போன்றவற்றில் ஈடுபாடு அதிகமிருக்கும். இந்த வருடத்தில் உங்களின் பொருளாதார நிலை சுமாராகத் தானிருக்கும் என்பதால் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன்&மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்கள் ஏதாவது பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும் நிங்கள் நிதானத்தைக் கடை பிடிப்பது நல்லது. பணம் கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய துணிவார்கள்.
கிருத்திகை 1ம் பாதம்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி சூரிய பகவானாவார். சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்திருப்பதால் எதையும் வெளிப்படையாக பேசும் குணமும், முன் கோபமும் அதிகமிருக்கும். இந்த வருடம் நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல் பட்டால் மட்டுமே தேவையற்றப் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க முடியும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர் பார்த்த லாபத்தினை அடை சற்று தாமதம் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பை
எண் - 1,2,3,9,10,11,12
நிறம் - ஆழ் சிவப்பு
கிழமை - செவ்வாய்
கல் - பவளம்
திசை - தெற்கு
தெய்வம் - முருகன்
பரிகாரம்
மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது முயற்சி ஸ்தானமான 3இல் சஞ்சரிக்கும் குருபகவான் வரும் 13.6.2014 முதல் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைத் தொடர்ந்து செய்வதும், குரு ப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும் நல்லது. இந்த ஆண்டு முழுவதும் 7இல் சனி சஞ்சரிப்பதால் சனிக்குரிய பரிகாரங்களை செய்வதும், ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது. ராகுபகவான் 21.6.2014 வரை 7இல் சஞ்சரிப்பதால் துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.
Contact
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope readingplease contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,
(Near Valli Thirumanamandapam)
Vadapalani,
Chennai-600026
My Cell - 0091 - 7200163001, 9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank account details are
Name ; Murughu Balamurugan
Bank name - IndianbankSavings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
Name ; R.Balamurugan
Bank name - Bank of BaradoSavings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078
No comments:
Post a Comment