Saturday, August 31, 2013

கேந்திராபத்திய தோஷம்

                           

                                      



ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் உண்டாக கூடிய இன்பம், துன்பம், துக்கம், சந்தோஷம், நல்லது, கெட்டது இவை அனைத்திற்கும் நவ கிரகங்கள் தன் காரணம் என ஜோதிட ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் நாமே அறிவோம். நவ கிரகங்கள் தான் நம்மை ஆட்சி செய்து கொண்டு இருக்கின்றது. அவை ஏற்படுத்தும் அதிர்வுகளுக்கேற்ப நாம்  அசைந்து கொண்டிருக்கின்றோம். நம்முடைய சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் கூட நவகிரகங்களே காரகத்துவம் வகிக்கின்றன. நவகிரகங்கள் தானே நம்மை ஆட்டுவிக்கின்றன. 

அதனால் நான் படுத்துக் கொண்டே விட்டதை பார்த்து கொண்டிருக்கிறேன் எனக்கு எல்லா தேவைகளும் பூர்த்தியாகி விடுமா என நீங்கள் கேட்கலாம். சும்மா படுத்து சோம்பேறியாக திரிபவனை கூட கோட்டீஸ்வராக்கும் நவகிரகங்கள் உழைத்து உழைத்து ஒடாய் தேய்பவனை பிச்சைகாரனாகவே வைத்திருப்பதும் உண்டு. இதற்கு அவரவர் பிறக்கும் போதுள்ள ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் அமைப்பே காரணமாகும். ஒருவன் பிறந்தது முதல் இறக்கும் வரை வாழ்க்கைக்கு தேவையானவைகளைப் பெற்று திருப்திகரமான வாழ்க்கை வாழவே விரும்புவான். சிலர் வறுமையான வீட்டில் பிறந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் சுகமான வாழ்க்கை வாழ்வார்கள். சிலர் பிறக்கும் போது நல்ல வசதிவாய்ப்புகளுடன் இருந்து இறுதி காலம் வரை அப்படியே வாழ்வார்கள். சிலருக்கு வசதி வாய்ப்புகளுடன் பிறந்தாலும் எல்லாவற்றையும் இழந்து தரித்திரவாசியாய் வாழக்கூடிய சூழல் உண்டாகும். இன்னும் சிலரோ பிறந்தது முதல் இறப்பது வரை கஷ்ட ஜீவனமே நடத்துவார்கள். இதற்கெல்லாம் காரணமும், நவ கிரகங்கள் தான்  நாம் செவ்வாய் தோஷம் ராகு கேது தோஷம் போன்றவற்றைப் பற்றி தெரிந்து  வைத்திருப்பதைப் போல கேந்திராபத்திய தோஷத்தை பற்றியும் இங்கு பார்ப்போம். ஒரு மனிதனின் ஏற்றத் தாழ்விற்கு இந்த கேந்திராபதிபத்திய தோஷம் எந்தெந்த கிரகங்கள் எங்கெங்கு அமைந்தால் என்னென்ன பலன்களை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம்.

பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்கள் என்பது 1,4,7,10 ஆகிய ஸ்தானங்களை குறிப்பதாகும். இந்த 1ம் பாவத்திலிருந்து நம்முடைய ஆயுள் ஆரோக்கியம், குண அமைப்புகள் பற்றி அறியலாம். கேந்திர ஸ்தானமான 4ம் பாவத்தை கொண்டு ஒருவருக்கு உண்டாகக் கூடிய சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, வீடு மனை யோகம், வண்டி வாகன யோகம் கல்வி, தாய்,தாய் வழி உறவுகளால் உண்டாக கூடிய பலன்கள் போன்றவற்றைப் பற்றி அறியலாம். அது போல கேந்திர ஸ்தானமான 7ம் வீட்டைக் கொண்டு ஒருவருக்கு உண்டாக கூடிய மண வாழ்க்கை, நட்பு கூட்டுத்தொழிலில் உண்டாக கூடிய பலன்கள் பற்றி அறியலாம். 10ம் வீடான கேந்திர ஸ்தானத்தை கொண்டு தொழில் வியாபாரம் உத்தியோகம் பற்றியும் அறியலாம். பொதுவாக கேந்திர  ஸ்தானங்களில் என்னென்ன கிரகங்கள் இருந்தால் நற்பலன்கள் உண்டாகிறது என பார்க்கின்ற போது பாவ கிரகங்கள் அமைந்திருந்தால் அனுகூலமான பலன்கள் ஏற்படுகிறது. சுப பலனை தரக் கூடிய சுப கிரகங்கள் கேந்திர ஸ்தானங்களில் அமைந்து ஆட்சி பெறுகின்ற போது நற்பலனை தருவதற்கு பதில் கேந்திராபத்திய தோஷத்தை ஏற்படுத்தி நற்பலன்கள் உண்டாகத் தடையை எதிர் கொள்ள நேரிடுகிறது.
     
குறிப்பாக சுப கிரகங்களின் கேந்திர ஸ்தானங்களில் தனித்து ஆட்சிப் பெறும் போது அதன் திசா புக்தி காலங்களில் பல்வேறு வகையில் சோதனையான பலன்களை அடைய வேண்டியிருக்கிறது. தற்போது நாம் 12 லக்னங்களிற்கும் கேந்திர ஸ்தானம் எது எனவும் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த லக்னத்திற்கு தோஷத்தை ஏற்படுத்துகிறது என்பதனை தெளிவாக பார்ப்போம்.
     
மேஷ இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு  4ஆம் வீடான கடகமும் 7ஆம் வீடான துலாமும், மகரமும்  கேந்திர ஸ்தானங்கள் ஆகும். கடகத்தில் சந்திரன் ஆட்சி பெற்றிருந்தால் தேவையற்ற மனக்குழப்பங்கள் சொந்த வீடு வாகனம் அமையத் தடை, சுக போக வாழ்க்கைக்கு இடையூறுகள் உண்டாகிறது. அது போல  7ம் வீடான  துலாத்தில் சுக்கிரன் ஆட்சிப் பெற்றிருந்தால் மண வாழ்க்கை விரைவில் அடையத் தடை அப்படி அமைந்தாலும் நிம்மதியில்லாத நிலை உண்டாகிறது. கூட்டு தொழிலில் பிரச்சனைகள் நல்ல நண்பர்கள் கிடைப்பதில் தடை ஏற்படுகிறது.

ரிஷப இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு எடுத்துக் கொண்டோமானால் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய வீடுகள் கேந்திர ஸ்தானங்களாகும். இந்த வீட்டு அதிபதிகளில் லக்னாதிபதி சுக்கிரன் மட்டுமே சுபராவார். அவர் லக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். இதனால் ரிஷப லக்னகாரர்களுக்கு கேந்திராதிபத்திய தோஷம் உண்டாவதில்லை.
     
மிதுன இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1,4 இக்கு அதிபதியாக புதன் பகவானும் 7,10 இக்கு அதிபதியாக குரு பகவானும் உள்ளார்கள் . லக்னத்தில் புதன் ஆட்சிப் பெற்றால் லக்னாதிபதி என்பதால் நற்பலன்களையே உண்டாக்குவார். அதுவே 4ல் ஆட்சி உச்சம் பெற்றால் எதிலும் தடை தாமதங்கள், வீடு வாகனம் வாங்க தடை சுக வாழ்வு சொகுசு வாழ்வு உண்டாவதில் இடையூறுகள் உண்டாகும். அது போல 7 இல் குரு ஆட்சிப் பெற்றால் மண வாழ்க்கையில் பிரச்சனைகள். கூட்டு தொழிலில் சங்கடங்கள் ஏற்படுகிறது. 10இல் குரு ஆட்சிப் பெற்றாலும் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகி தொழில் உத்தியோக ரீதியாக தேவையற்ற பிரச்சனைகள் எதிர் கொள்ள நேரிடுகிறது-. புதன் ஏதாவது ஒரு பாவ கிரக சேர்க்கைப் பெற்றிருந்தால் நற்பலன் உண்டாகிறது.

  கடக இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் 4 இல் ஆட்சி பெற்றால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாவதுடன் பாதகாதிபதி என்ற காரணத்தாலும் அளவு கடந்த சோதனைகளை சந்திக்க நேரிடுகிறது. சந்திரன் லக்ன கேந்திரம் பெறுவது தோஷம் என்றாலும் இலக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது.
     
சிம்ம இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 10இல் சுக்கிரன் ஆட்சி பெறுவதால் தோஷம் உண்டாகி தொழில் உத்தியோக ரீதியாக பாதிப்புகளை அடைய நேரிடும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது.
     
கன்னி இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்றால் சிறுசிறு இடையூறுகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் லக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. 4இல் குரு ஆட்சி பெற்றால் சுக வாழ்வில் தடை வீடு வாகனம் வாங்க இடையூறுகள் உறவினர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். 7இல் குரு ஆட்சிப் பெற்றால் மணவாழ்வில் பிரச்சனைகள் கூட்டு தொழிலில் தடைகள் உண்டாகும். 10இல் புதன் ஆட்சிப் பெறுவது நல்லதல்ல என்றாலும் புதன் ஏதாவது ஒரு பாவ கிரக சேர்க்கை பெற்றிருந்தால் நற்பலன்களையே வழங்குவார்.
     
துலா இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு  இலக்னாதிபதி அதிபதி சுக்கிரனாவார். 10ஆம் அதிபதி சந்திரனாவார். சுக்கிரன் ஆட்சிப் பெற்றால் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் லக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். வளர் சந்திரன் ஆட்சி பெற்றால் தேவையற்ற மனக்குழப்பங்கள் தொழில் வியாபார ரீதியாக இடையூறுகள் உண்டாகும். அதுவே தேய்பிறை சந்திரனாக இருந்து விட்டால் நற்பலன்களே உண்டாகும்.
     
விருச்சிக இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7ஆம் அதிபதி சுக்கிரன் மட்டுமே சுப கிரகமாவார். சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் ஆட்சிப் பெற்றால் மண வாழ்வில் தேவையற்ற பிரச்சனைகள் எதிர் கொள்ள நேரிடும் அது மட்டுமின்றி கார கோபாவ நாச ரீதியாகவும் களத்திர காரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் ஆட்சிப் பெறுவது நல்லதல்ல. இதனால் திருமண நடை பெற தடை தாமதங்களும் உண்டாகும். தாமதித்து திருமணம் அமையும் அதன் பின்னர் நற்பலன் உண்டாகும்.

  தனுசு இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1,4 இக்கு அதிபதியாக குருவும் 7,10 இக்கு அதிபதியாக புதனும் உள்ளனர். கேந்திர ஸ்தானங்கள் அனைத்தும் சுபர் வீடாக இருப்பதால் கேந்திராதிபத்ய தோஷத்தால் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.  1இல் குரு ஆட்சி பெறுவது தோஷம் என்றாலும் இலக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. அதுவே 4இல் ஆட்சிப் பெற்றால் சுகவாழ்வில் பாதிப்பு, வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்குவதில் தடைகள், கல்வியில் இடையூறுகள் உண்டாகும். 7,10இல் புதன் ஆட்சிப் பெற்றால் மண வாழ்க்கையில் இடையூறுகள், திருமணம் நடைபெற தடைகள், தொழில்  வியாபார உத்தியோகரீதியாக வீண் சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்றாலும் புதன் பாவ கிரக சேர்க்கையுடனிருந்தால் பெரிய கெடுதிகள் ஏற்படாது.
     
மகர இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுப கிரக சுக்கிரன் 10 இல் ஆட்சிப் பெற்றால் தொழில் வியாபார ரீதியாக வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றாலும் அவர் திரிகோண ஸ்தானமான 5 இக்கும் அதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை ஏற்படுத்த மாட்டார். சந்திரன் 7ஆம் அதிபதி என்பதால் ஆட்சிப் பெற்று அமைந்து விட்டால் மனக்குழப்பம், மண வாழ்க்கை ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும் என்றாலும் தேய்பிறை சந்திரனாக இருந்தால் பெரிய கெடுதிகள் ஏற்படாது.
     
கும்ப இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 4 ஆம் அதிபதி சுக்கிரன் ஆட்சிப் பெற்று அமைந்தால் கேந்திராதிபத்திய தோஷம் உண்டாகி சுக வாழ்வு உண்டாக தடை, இல்வாழ்வில் பிரச்சனை, பெண்களால் இடைஞ்சல்கள் உறவினர்களால் வீண் மனக்கவலைகள் உண்டாகும்.
     
மீன இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1,4,7,10 ஆம் அதிபதிகள் சுபர்கள் என்பதால்  1இல் குரு ஆட்சிப் பெற்றால் சிறிது தோஷம் என்றாலும் இலக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. அதுவே 10இல் ஆட்சிப் பெற்றால் தொழில் உத்தியோக ரீதியாக இடையூறுகள் முன்னேற்றமற்ற நிலை உண்டாகும். 4,7ல் புதன் ஆட்சிப் பெற்றால் சுக வாழ்வு உண்டாவதில் தடை வீடு வாகனம் அமைவதில் தடை உண்டாகும். மண வாழ்க்கை அமைவதிலும் தாமதம் ஏற்படும். இல்வாழ்க்கை ரீதியாகவும் நிறைய பிரச்சனைகள் எதிர் கொள்ள நேரிடும். அதுவே புதன் பாவ கிரக சேர்க்கையுடனிருந்தால் ஒரளவுக்கு கெடு பலன் குறைகிறது-. குறிப்பாக அந்தந்த கிரகங்களின் தசாபுக்தி காலங்களில் தான் பாதிப்புகள் அதிகமாகிறது. ஜென்ம இலக்னம் கேந்திர ஸ்தானம் என்றாலும் இலக்னாதிபதியாக இருந்து ஆட்சிப் பெற்றால் பெரிய கெடுதல்களை ஏற்படாது.
                       

தொடர்புக்கு

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  


Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com



Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.MICR no - 600019072IFS code ; IDIB000S082CBS CODE-01078

Tuesday, August 20, 2013

லக்னாதிபதி எப்படி இருக்க வேண்டும்

 

  ஓம் சரவணபவ

செப்டம்பர் இதழடன்
இலவச இனைப்பாக
96 பக்கம்
முருகு பாலமுருகன்
எழதிய

நலம் தரும் நவகிரக வழிபாடு (96 பக்கம்)

பரிகார தலங்கள் வழிமுறைகளுடன்


உலகில் மனிதனாய் பிறந்தவர்கள் எல்லோரும் பல்வேறு கஷ்ட நஷ்டங்களை கடந்து வருகிறார்கள். நவ கோள்களே நம் அனைவரையும் வழி நடத்துகிறது. ஜெனன ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருந்தால் வளமான வாழ்வு ஏற்படும் என்பதை பற்றி இங்கு பார்ப்போமா..

     ஜெனன ஜாதகத்தில் யோகமான கிரக அமைப்பு இருந்தால் தான் வாழ்வு சிறப்பாக இருக்கும். குறிப்பாக லக்னாதிபதி ஒருவர் ஜாதகத்தில் கேந்திரத்திலோ அல்லது திரி கோணத்திலோ அமைந்தால் வாழ்வு சிறப்பாக இருக்கும். லக்னாதிபதி ஒருவர் ஜாதகத்தில் கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ அமைந்தால் வாழ்வு சிறப்பாக இருக்கும். லக்கினாதிபதி என்பவர் மிகவும் முக்கியமான கிரகமாகும். அவர் தான் வாழ்கையை வழி நடத்துபவர். லக்கினாதிபதி ஒருவர் ஜாதகத்தில் கேந்திர திரிகோணத்தில் அமையாமல் மறைவு ஸ்தானமான 6,8,12ல் அமைவது நல்லது அல்ல. அப்படி அமைந்தால் வாழ்க்கையே மிகவும் போராட்டம் நிறைந்ததாக இருக்கும். அது போல லக்கினாதிபதி பாதக ஸ்தானத்தில் இருக்க கூடாது.
     
ஒரு வேளை லக்கினாதிபதி பாவ கிரகமான  செவ்வாய், சூரியன், சனி ஆக இருந்தால் உபஜெய ஸ்தானமான 3,6,11ல் அமைவது உத்தமம். லக்கினாதிபதி சுப கிரகமாகி கேந்திரத்தில் வலு பெறுவது சுமாரான அமைப்ப தான். குறிப்பாக லக்கினாதிபதிக்கு பல்வேறு குறிப்புகள் உண்டு. அதாவது ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி ஆனவர் சுபரோ, பாவரோ அந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மிகவும் யோகத்தை அளிக்க கூடியவர். அதாவது உதாரணமாக சனி பாவி என்றாலும் சனியின் பார்வை கெடுதியை தரும் என்றாலும், சனி பார்வை மகர, கும்ப லக்னத்தால் பிறந்தவர்களுக்கு நன்மையை செய்யும். சனி பகவான் சுபர் என்றால் எவ்வளவு நற்பலனை செய்வாரோ அது போல நன்மை பலனை மகர கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்படுத்துவர்.

     அது போல இவ்வளவு சிறப்பு வாய்ந்த லக்கினாதிபதி எக்கிரக சேர்க்கை பெற்றால் நல்லது என்று பார்த்தாலே லக்கினாதிபதி ஆனவர் கேந்திர, திரிகோணதிபதி சேர்க்கை பெறுவது மிகவும் உத்தமம். குறிப்பாக லக்கினாதிபதி மறைவு ஸ்தானாதிபதி எனப்படும் 6,8,12க்கு அதிபதிகள் சேர்க்கை பெறுவது நல்லது அல்ல. அது மட்டும் இன்றி 6,8,12க்கு அதிபதிகளின் பார்வை பெறுவது நல்லது அல்ல. அது போல லக்கினாதிபதி எந்த கிரக சேர்க்கை பெறுவது நல்லது என்று பார்த்தால் நட்பு கிரக சேர்க்கை பெறுவது மிகவும் உத்தமம். உதாரணமாக சூரியன், குரு, செவ்வாய், வளர்பிறை சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒருவருக்கு ஒருவர் நண்பர்கள் இவர்கள் இணைவது ஒருவர் மற்றொருவர் வீட்டில் இருப்பது ஒரளவுக்கு யோகத்தையும் மேன்மையும் ஏற்படுத்தும் அமைப்பு ஆகும். 
சுக்கிரன், சனி, புதன் ஆகிய கிரகங்கள் ஒருவருக்கு ஒருவர் நண்பர்கள் அவர்கள் சேர்க்கையும், ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தின் வீட்டில் இருப்பதும் நற்பலனை உண்டாக்கும் அதை தவிர்த்து ஒரு கிரக பகை கிரகத்தின் வீட்டில் இருப்பது நல்லது அல்ல. உதாரணமாக சூரியன் லக்கினாதிபதியாகி சனி வீடான மகரம், கும்பத்தில் இருப்பது சிறப்பு அல்ல.  சனி லக்கினாதிபதி ஆகி செவ்வாய் வீடான மேஷம், விருச்சிகத்தில் இருப்பது, சூரியன் வீடான சிம்மத்தில் இருப்பது நல்லது அல்ல.
     
ஆக லக்னாதிபதி ஒருவர் ஜாதகத்தில் நட்பு கிரக வீட்டிலோ, கேந்திர, திரிகோணத்திலோ அமைய பெற்றால் நல்லதொரு ஏற்றம் உயர்வு வாழ்வில் உண்டாகும்.


தொடர்புக்கு

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com



Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.MICR no - 600019072IFS code ; IDIB000S082CBS CODE-01078

Friday, August 16, 2013

செப்டம்பர் மாத பலன்கள்







மேஷம்   ; அஸ்வினி பரணி கிருத்திகை1 ம் பாதம்
    
தன்நலம்பாராது மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4ல் செவ்வாயும் 3ல் குருவும் 5ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது வீண் பிரச்சனைகளை உண்டா க்கும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களால் மனச ஞ்சலங்கள் ஏற்படும் தொழில் வியாபாரத்தில் போட் டிகள் அதிகரிக்கும். சிவனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 11-09-2013 அதிகாலை 01.55 மணிமுதல் 13-      09-2013 காலை 04.48 மணி வரை

ரிஷபம்   ;  கிருத்திகை 2.3.4 ரோகிணி மிருகசீரிஷம் 1.2 ம் பாதங்கள்
     தற்பெருமைக்கும் புகழ்ச்சிக்கும் ஆசை ப்படாத உங்களுக்கு தனஸ்தானத்தில் குருவும் 3ல் செவ்வாயும் 6ல் சனி ராகுவும் சஞ்சரிப்பது அற்பு தமான அமைப்பாகும். திருமணம் போன்ற சுபகா ரியங்கள் தடபுடலாக நிறைவேறும். கொடுத்த கட ன்கள் தடையின்றி வசூலாகும். உறவினர்களிடை யே இருந்த வேற்றுமைகள் மறையும். பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள் சிவபெருமானை வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம் 13-09-2013 காலை 04.48 மணி
           15-09-2013 காலை 07.08 மணி வரை


மிதுனம்  ;  மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 123 ம் பாதங்கள்
     பிடிக்காதவர்களை ஒரு நொடியில் தூக்கி எறிந்து விடக் கூடிய குணம் கொண்ட உங்களுக்கு மாத முற்பகுதியில் சூரியன் 3ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் ஓரளவுக்கு சுமாரான நற்பலனை பெற முடியும். பண வரவுகள் அவ்வளவு திருப்திகரமாக இருக்கும் என்று கூறமுடியாது. கொடுக்கல் வாங்களில் பெரிய முதலீடுகளை ஈடுபடாதிருப்பத நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் வீண்வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள்; கடன்கள் உண்டாகும். முருகனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 15-09-2013 காலை 07.08 முதல்
            17-09-2013 காலை 09.45 மணி வரை.


கடகம்     ;  புனர்பூசம் 4ம் பாதம் பூசம் ஆயில்யம்
     நண்பர்களுக்காக எதையும் விட்டு கொடு க்கும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாயும் 2ல் சூரியனும் 4ல் சனியம் 12ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யவே கடன் வாங்க வேண்டியிருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். குடும்ப விஷ யங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 17-09-2013 காலை 09.45 மணி முதல்
           19-09-2013 மதியம் 01.45 மணி வரை


சிம்மம்     ;  மகம் பூரம். உத்திரம்1 ம் பாதம்
     தனக்கு இடையூறு செய்பவர்களை வே ரோடு களையும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியனும் 12ல் செவ்வாயும் சஞ்சரிப்பது உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். என்றாலும் 3ல் சனிராகுவும் 11ல் குருவும் இருப்பதால் எதையும் சமாளிப்பார்கள் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. சேமிப்புகளும் பெருகும். முருகனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 19-09-2013 மதியம் 01.45 மணி முதல்
           21-09-2013 மாலை 07.41 மணிவரை

கன்னி    ;  உத்திரம் 234 அஸ்தம் சித்திரை 12ம் பாதங்கள்
     சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னை மாற்றிய மைத்துக்கொள்ளும் உங்களுக்க 2ல் சனி   ராகு சஞ்சரித்தாலும் லாபஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்ப தால் எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு முன்னேற்ற மடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று நெருக்கடியான காலம் என்பதால் உயரதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பணவர வுகள் சுமாராகத்தானிருக்கும். முடிந்தவரை ஆடம் பர செலவுகளை செய்வதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை சிவபெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்  21-09-2013 மாலை 07.41 மணிமுதல்
           24-09-2013 அதிகாலை 04.01 மணிவரை


துலாம்   ; சித்திரை34 சுவாதி விசாகம்123 ம் பாதங்கள்
     தன்னை அழகுபடுத்திகொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சனிராகுவும் 7ல் கேதுவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் 9ல் குருவும் 10ல் செவ்வாயும் 11ல் சூரியனும் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்ப தால் எதிலும் திறம்படசெயல்பட்டு வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உத்தியோக த்திலிருப்பவர்களுக்கு கௌரவமான பதவிகள் தேடி வரும் ஆஞ்சநேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 24-09-2013 அதிகாலை 04.01 மணி முதல்
           26-09-2013 மதியம் 02.41 மணிவரை

விருச்சிகம்; விசாகம்4ம் பாதம் அனுஷம் கேட்டை
     துப்பறியும் வேலைகளை சிறப்பாக செய்யும் உங்களுக்கு 6ல் கேதுவும் 9ல் செவ்வாயும் 10ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. கணவன் மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்று மை சிறப்பாக அமையும். திருமண சுபகாரி யங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்  26-09-2013 மதியம் 02.41 மணிமுதல்
           29-09-2013 அதிகாலை 02.21 மணிவரை

தனுசு ; மூலம் பூராடம் உத்திராடம்1ம் பாதம்
     தாம் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுக்கும் பண்பு கொண்ட உங்களுக்கு 7ல் குருவும், 9ல் சூரியபகவானும் 11ல் சனிராகுவும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகிட்டும். பொன்பொருள் ஆடை ஆபரணம் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கலிலும் லாபம் உண்டாகும். சொந்த முயற்சியால் பலசாதனைகளை செய்வீர்கள் தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 01-09-2013 மாலை 07.16 மணிமுதல்
           04-09-2013 காலை 06.16 மணிவரை
           29-09-2013 அதிகாலை 02.21 மணிமுதல்
           01-10-2013 மதியம் 01.28 மணிவரை

மகரம்; உத்திராடம் 234 திருவோணம் அவிட்டம்12ம் பாதங்கள்
     எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் தன் கொள்கையிலிருந்து மாறாத உங்களுக்கு, 7ல் செவ் வாயும், 8ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். தாங்கள் நல்லதாக நினைத்து பேசும் வார்த் தைகளும் உறவினர்களுக்குள் கருத்து வேறு பாட்டினை ஏற்படுத்தி விடும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு கூட்டா ளிகளால் பிரச்சனைகள் உண்டாகும்.
சந்திராஷ்டமம் 04-09-2013 காலை 06.16 மணிமுதல்
     06-09-2013 மியம் 03.55 மணிவரை

கும்பம் ; அவிட்டம்34 சதயம் பூரட்டாதி 123ம் பாதங்கள்
     பிறர் வாழ்வில் குறுக்கிடாத உயர்ந்த பண்பு கொண்ட உங்களுக்கு 5ல் குருவும் 6ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறை வேற்று வீர்கள் அசையும் அசையா சொத்துக்களையும் வாங்கமுடியும். 7ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றுகவனம் எடுத்துக் கொள்வ தும் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல் வதும் நல்லது. தொழில் வியாபாரத்திலுள்ள போட்டி பொறாமைகளை திறமையாக சமாளிக்க முடியும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றும்.
சந்திராஷ்டமம் 06-09-2013 மதியம் 03.05 மணி முதல்
     08-09-2013 இரவு 09.36 மணிவரை


மீனம் ; பூரட்டாதி4ம் பாதம் உத்திரட்டாதி ரேவதி
     ஆடம்பர பொழுது போக்குகளில் அதிக நாட்டம் கொண்ட உங்களுக்கு குரு 4லும் சனிராகு 8லும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். மாத முற்பாதிவரை சூரியன் 6ம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஓரள வுக்கு உதவிகள்கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். சிலருக்கு வேலைபளு கூடுவதால் விடுப்பு எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
சந்திராஷ்டமம் 08-09-2013 இரவு 09.36 மணிமுதல்

            11-09-2013 அதிகாலை 01.55 மணிவரை

தொடர்புக்கு

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com



Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.MICR no - 600019072IFS code ; IDIB000S082CBS CODE-01078