Wednesday, December 31, 2014

ஜனவரி மாத ராசிப்பலன் 2015



காணத்தவறாதீர், 

 விஜய் டிவியில்

திங்கள் முதல் வெள்ளி வரை 
 காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை
 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 

( வரும் 19.01.2015 முதல் 

காலை 07.00 முதல் 07.15 வரை )

" இந்த நாள் "

என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்




ஜனவரி மாத ராசிப்பலன்  2015




மேஷம்   ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 6&ல் இராகு 11&ல் செவ்வாய், சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள்.பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன்&மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.
பரிகாரம். விநாயகரை வழிபடுவது சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் 16.01.2015 அதிகாலை 02.42 மணி முதல் 18.01.2015 காலை 07.33 மணி வரை.

ரிஷபம்  ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே
இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7&ல் சனியும் அஷ்டம ஸ்தானத்தில் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் தடைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும்

பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 18.01.2015 காலை 07.33 மணி முதல் 20.01.2015 காலை 08.57 மணி வரை.


மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 &ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே

எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&ல் சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் மாத பிற்பாதியில் சூரியன் 8&ல் சஞ்சரிக்க உள்ளதால்எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன்&மனைவியிடையே ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய முயற்சிகளில் சற்று கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படவும்.
பரிகாரம். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 20.01.2015 காலை 08.57 மணி முதல் 22.01.2015 காலை 08.49 மணி வரை.


கடகம்     ;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே
கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3&ல் ராகுவும், ருண ரோக ஸ்தானமான 6&ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்க் கொள்ளலாம். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.
பரிகாரம். ப்ரீதி, தட்சிணா முர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 22.01.2015 காலை 08.49 மணி முதல் 24.01.2015 காலை 09.14 மணி வரை.


சிம்மம்     ;  மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு   ஜென்ம ராசிக்கு 2&ல் ராகு, 4&ல் சனி சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் நிம்மதி குறைவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும்
பரிகாரம். அம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 24.01.2015 காலை 09.14 மணி முதல்26.01.2015 பகல் 11.48 மணி வரை.


கன்னி ;  உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே
மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு  ஜென்ம  ராசிக்கு 3&ல் சனியும் 6&ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சனைகள் யாவும் விலகி நற்பலன்கள் ஏற்படும்.கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவும் முடியும்.  வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். அபிவிருத்தியும் பெருகும்.
பரிகாரம். துர்கை அம்மனை வழிபடவும்
சந்திராஷ்டமம் 30.12.2014 காலை 05.55 மணி முதல் 01.01.2015 பகல் 11.47 மணி வரை. 


துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே
உயர்ந்த நிலையை அடைய வேண்டிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 3&ல் சூரியன் 6&ல் கேது சஞ்சாரம் செய்வதும் 10&ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற் கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி  வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். 
பரிகாரம். சனி பகவானை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 01.01.2015 பகல் 11.47 மணி முதல் 03.01.2015 இரவு 07.24 மணி வரை.


விருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே
தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு   ஏழரை சனியில் ஜென்ம சனி தொடருவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11&ல் ராகு சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில்  சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தாலே வீண் பிரச்சனைகள் உண்டாவதை குறைத்து கொள்ள முடியும்.  உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும்.
பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 03.01.2015 இரவு 07.24 மணி முதல் 06.01.2015 அதிகாலை 04.55 மணி வரை

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே
வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 3&ல் செவ்வாய் 10&ல் ராகு சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும் என்றாலும் ஏழுரைச் சனியில் விரய சனி நடைபெறுவதால் எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. உடல்  ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். வேலை பளு கூடுதலாகும்.
பரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 06.01.2015 அதிகாலை 04.55 மணி முதல் 08.01.2015 மாலை 04.28மணி வரை.

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே
தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு  முயற்சி ஸ்தானமான 3&ல் கேதுவும் லாப ஸ்தானமான 11&ல் சனியும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்-&மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். ராகு பகவான் 3&இல் சஞ்சரிப்பதால்  நினைத்தது நிறைவேறும். கொடுக்கல்&வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும் வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும்.
பரிகாரம். சிவபெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 08.01.2015 மாலை 04.28 மணி முதல் 11.01.2015 அதிகாலை 05.23 மணி வரை.

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே
மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&ல் சஞ்சரிக்கும்  குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் 11&ல்  சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார  நிலை சிறப்பாகவே இருக்கும்.எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 11.01.2015 அதிகாலை 05.23 மணி முதல் 13.01.2015 மாலை 05.37 மணி வரை.

மீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு  மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், 11&ல் சுக்கிரன்  சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். கல்வியிலும் மாணவர்கள் சிறந்து விளங்க முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம். ஆஞ்சனேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 13.01.2015 மாலை 05.37 மணி முதல் 16.01.2015 அதிகாலை 02.42 மணி வரை.



சுப முகூர்த்த நாட்கள்

07.01.2015  மார்கழி மாதம், 23 ஆம் தேதி புதன்கிழமை, துவிதியை திதி, பூச  நட்சத்திரம் சித்த யோகம் காலை 09.00 மணி முதல்  10.00 மணிக்குள் கும்ப இலக்கினம்  வளர்பிறை.

11.01.2015  மார்கழி மாதம், 27 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை, சஷ்டி திதி, உத்திர  நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 09.00 மணி முதல்  10.00 மணிக்குள் கும்ப இலக்கினம் தேய்பிறை.

12.01.2015  மார்கழி மாதம், 28 ஆம் தேதி திங்கள்கிழமை, சப்தமிதிதி, ஹஸ்த  நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.30 மணி முதல்  70.30 மணிக்குள் மகர இலக்கினம்  தேய்பிறை.



18.01.2015  தை மாதம், 04 ஆம் தேதி  ஞாயிற்றுகிழமை, திரயோதசி திதி, மூல  நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 07.30 மணி முதல்  08.00 மணிக்குள் மகர இலக்கினம்  தேய்பிறை.
.

23.01.2015  தை மாதம், 09 ஆம் தேதி வெள்ளிகிழமை, சதுர்த்தி திதி, சதய  நட்சத்திரம் சித்த யோகம் காலை 10.00 மணி முதல்  10300 மணிக்குள் மீன இலக்கினம் வளர்பிறை.

26.01.2015  தை மாதம், 12 ஆம் தேதி திங்கள்கிழமை, சப்தமி திதி, ரேவதி  நட்சத்திரம் சித்த யோகம் காலை 10.00 மணி முதல்  10.30 மணிக்குள் மீ இலக்கினம்  வளர்பிறை.

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading
please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


Monday, December 29, 2014

இளமைத் திருமணம்



காணத்தவறாதீர், 

01.01.2015 அன்று விஜய் டிவியில்
 
காலை 6.30 மணிக்கு

2015 ஆம் ஆண்டின் புத்தாண்டு பலன்கள் 

பற்றிய எனது சிறப்பு 

நிகழ்ச்சியை  காணத்தவறாதீர்



திங்கள் முதல் வெள்ளி வரை 
 காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை
 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 

" இந்த நாள் "

என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்



இளமைத் திருமணம்

பெண்ணின் திருமண வயது 21. இது எல்லா இடங்களிலும் பொதுவாக  வைக்கப்பட்டுள்ள விளம்பரம். இதை எல்லோரும் கடைபிடித்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை என்ற காணத்தால் 18 வயது ஆனாலே திருமணம் செய்து வைத்துவிட வேண்டியது கடமை என பெற்றோர்கள் நினைக்கத் தொடங்குகிறார்கள். நம்முடைய முன்னோர்கள் சொந்தங்கள் விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக  குழந்தை பிறக்கும்போதே இது என் தங்கை மகனுக்கு, இது என் அண்ணன் மகளுக்கு என ஒரு முடிவெடுத்து வைத்து விடுவார்கள். எனக்குத் தெரிந்து என் பாட்டி உறவில் வரக்கூடிய ஒருவருக்கு வயதுக்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்து வைத்து, புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தார்களாம். ஆனால் மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி இல்லாமல் திருமணங்கள் செய்வதற்கு தற்போது யாரும் ஒத்துக் கொள்வதில்லை. இளமையிலேயே திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்பு எல்லோருக்குமே அமைந்து விடுவதில்லை. சரியான வயதில் திருமணம் நடைபெற வேண்டும். பருவத்தே பயிர் செய் என்ற பழமொழிக்கேற்ப வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய பாக்கியம் ஒரு சிலருக்கே அமைகிறது.  இப்படி தக்க வயதில் திருமணம் நடைபெறுவதற்கு ஜோதிட ரீதியாக கிரகங்கள் பலம் பெற்று அமைந்திருப்பதே காரணம். ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என கூறக்கூடிய 7 ஆம் பாவமானது பலமாக இருந்தாலும், 7 ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் சுபர் சேர்க்கை பார்வை பெற்றிருந்தாலும், சுபகிரகங்களின் சாரம் பெற்றிருந்தாலும் அவருக்கு தக்க வயதில் திருமணம் நடைபெறக் கூடிய பாக்கியம் உண்டாகும். 7ஆம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானங்களில் நட்புகிரக வீடுகளில் அமையப் பெற்றிருப்பதும் நல்லது. 

நவகிரகங்களில் சுபகிரகங்கள் என வர்ணிக்கப்படக் கூடியவைகள் குரு, சுக்கிரன், வளர் பிறை சந்திரன், சுபர்சேர்க்கைப் பெற்ற புதன் ஆகும். சுபகிரகங்கள் 7 ஆம் வீட்டில் அமையப் பெற்றாலும், 7 ஆம் அதிபதி சுபகிரக சேர்க்கை பெற்று, சுபகிரகங்களின் தசாபுக்தி திருமணவயதில் நடைபெற்றாலும் இளமையிலே திருமணம் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். 7 ஆம் அதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு  செவ்வாயும், சுபகிரக சேர்க்கை, சுபகிரக நட்சத்திரத்தில் அமையப் பெற்றாலும், சுபர் பார்வை பெற்றாலும் இளம் வயதில் திருமணம் நடக்கும். சுபகிரகங்களில் முக்கிய கிரகமான குரு, தான் இருக்கும் இடத்திலிருந்து 5,7,9  ஆகிய வீடுகளை பார்வை செய்வார். சுபகிரகமாகிய குருவின் பார்வை குடும்ப ஸ்தானமான 2 ஆம் வீட்டிறோ, 2 ஆம் அதிபதிக்கோ சுக்கிரனுக்கோ இருக்குமேயானால் தக்க வயதில் திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 

திருமண வயதை அடைந்த ஆண், பெண் இருவருக்கும் பாவகிரகங்களின் தசாபுத்திகள் நடைபெற்றாலும் அந்த பாவ கிரகம் 2 அல்லது 7 ஆம் பாவத்தில் அமையாமல் இருப்பது நல்லது. திருமண வயதில் பாவ கிரக திசையில் சுக்கிரனின் புக்தியோ, சுக்கிரனின் நட்சத்திரங்களில் அமையப் பெற்ற கிரகங்களின் புக்தியோ நடைபெற்றால் தக்க வயதில் திருமணம் கைகூடும்.  

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading
please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


Friday, December 26, 2014

திருமண வாழ்வில் சுக்கிரனின் ஆதிக்கம்



காணத்தவறாதீர், 

01.01.2015 அன்று விஜய் டிவியில்
 
காலை 6.30 மணிக்கு

2015 ஆம் ஆண்டின் புத்தாண்டு பலன்கள் 

பற்றிய எனது சிறப்பு 

நிகழ்ச்சியை  காணத்தவறாதீர்



திங்கள் முதல் வெள்ளி வரை 
 காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை
 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 

" இந்த நாள் "

என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்


திருமண வாழ்வில் சுக்கிரனின் ஆதிக்கம்

குடும்ப வாழ்வில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவுவது மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் மேன்மைகள் ஏற்பட்டால் தான் மண வாழ்க்கை என்பதே மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். நவக்கிரகங்களால் நம் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. அவற்றில் திருமணத்தை தீர்மானிக்கும் கிரகமாக சுக்கிரன் விளங்குகிறார். திருமணத்தை மட்டுமின்றி ஆடம்பரமான வாழ்க்கை அமைவதற்கும் சுக்கிரன் மிக முக்கிய கிரகமாவார். ஒருவருக்கு பூமி மனை யோகம், வண்டி வாகனங்கள், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமைவதற்கு சுக்கிரன் மிக முக்கிய காரகனாகிறார். ஆடை, ஆபரணங்கள், அணிகலன்கள் போன்றவைகள் சேருவதற்கும் சுக்கிரனே காரகனாகிறார். 

ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரனானவர் கேந்திர திரிகோணங்களில் நட்பு வீட்டில் அமையப் பெற்றிருந்தாலும், ஆட்சி உச்சம் பெற்று சுபகிரகங்களின் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தாலும் அந்த ஜாதகருக்கு இயற்கையாகவே மண வாழ்க்கை சிறப்பாக அமைவது மட்டுமின்றி சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழும் யோகம் உண்டாகிறது. 

சுக்கிரன் கிரகச் சேர்க்கையின்றி சுபர் பார்வையுடன் அமையப் பெறுவது சிறப்பு. அப்படி சுக்கிரன் கிரக சேர்க்கைப் பெறுவாராயின் களத்திரம் தோஷம் உண்டாகும். குறிப்பாக சுக்கிரன்  சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவகிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தாலும், பாவிகளின் சேர்க்கை பெற்று ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் போன்றவற்றில் அமைந்திருந்தாலும் வாழ்வில் தடம் மாறி செல்லக்கூடிய சூழ்நிலை உண்டாகிறது. 

சுக்கிரன் மேற்கூறியவாறு அமைந்திருந்தால் நற்பலன்களை தரமாட்டார் என்பது மட்டுமின்றி சுக்கிரனை பற்றி ஆராய்கின்ற போது மிக முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் அஸ்தங்கம் ஆகும். அதாவது சுக்கிர பகவான் ஒரு ராசியில் ஒரு மாதம் தங்குவது மட்டுமின்றி, சூரியனை ஒட்டியே சஞ்சரிப்பார். சூரியனானவர் மிகவும் சக்தி வாய்ந்த உஷ்ணகிரகம் என்பதால், சூரியனுக்கு மிக அருகில் எந்த கிரகம் சென்றாலும் அந்த கிரகத்தின் வலிமையை முழுமையாக குறைத்து விடுவார். சூரியனை ஒட்டியே சுக்கிரன் சஞ்சரித்தாலும் சூரியனுக்கு முன்பின் 8 டிகிரிக்குள் அமையப் பெற்றால் பலம் குறைந்து அஸ்தங்கம் பெறுகிறார். அதுவும் ஒரு டிகிரிக்குள் அமைவரானால் சுக்கிரன் தன் முழு பலத்தையுமே இழந்துவிடுகிறார். ஒருவருக்கு சுக்கிரன் பலமிழந்த அஸ்தங்கம் பெற்று விட்டால் ரகசிய நோய்களால் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை, சிலருக்கு திருமணமே நடைபெறாமல்  போகக்கூடிய  அனுகூலமற்ற நிலை உண்டாகிறது. அதுபோல சுக்கிரன் வக்ரம் பெறுவதும் சிறப்பல்ல. 

சுக்கிரன் அஸ்தங்கம் அல்லது வக்ரம் பெற்றவர்களுக்கு சுக்கிரனின் தசா, புக்தி நடைபெறும் காலங்களில் திருமண வாழ்வில் பிரச்சனை, நிம்மதி குறைவு போன்றவை உண்டாகும். 

ஆனால் ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்தால் அதன் தசாபுக்தி காலங்களில் வாழ்வில் பல உயர்வுகள் தேடிவரும். ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெறுமேயானால் பெண்களால் சாதகமான பலன்களும், தொழில் ரீதியாக உயர்வுகளும் ஏற்படும். பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் மட்டுமின்றி பெண்களுக்கு மிக முக்கிய கிரகமாக விளங்கக் கூடிய செவ்வாயும் பலம் பெற்றிருந்தால் வாழ்க்கைத் துணையால் நல்ல மேன்மைகள் உண்டாகிறது. சுக்கிர ஓரையில் திருமணம் சம்பந்தப்பட்ட சுபகாரியங்களை மேற்கொள்வதும் நல்லது. 

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading
please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Saturday, December 20, 2014

மகிழ்ச்சியை ஏற்படுத்தும் திருமண வாழ்க்கை



திங்கள் முதல் வெள்ளி வரை 
 காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை
 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 

" இந்த நாள் "

என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்



மகிழ்ச்சியை ஏற்படுத்தும் திருமண வாழ்க்கை

மகிழ்ச்சியான மணவாழ்க்கைதான் ஒவ்வொரு மனிதரின் குடும்ப வாழ்க்கைக்கும் ஆணி வேராக இருக்கும்.  வாழ்ந்தால் அவர்களைப் போல வாழ வேண்டும் என மற்றவர் உதாரணம் கூறுவதற்கேற்ப வாழ்ந்து காட்ட வேண்டும். குறை நிறை இல்லாத குடும்பங்களே இல்லை. வீட்டுக்கு வீடு வாசற்படிதான் என்றாலும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டுடன் இன்ப துன்பங்களை சமமாக ஏற்றுக் கொண்டு குடும்பத்தை நல்ல வழியில் நடத்தி செல்வதன் மூலமே மகிழ்ச்சி என்பது அந்த குடும்பத்தில் குடியேறும். வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை என்பது குறிக்கோளாக கொள்ள வேண்டும். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அடித்தளமே ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதுதான். விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம், அனுசரித்துச் செல்லும் குணமும் இருந்தாலே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காலையில் காபி போட்டுத்தர நேரமாகி விட்ட காரணத்தால் விவாகரத்து கோரும் இக்காலத்தில், மனமொத்த வாழ்க்கை அமைவதற்கு ஜெனன ஜாதகத்தில் கிரகங்களின் ஆதிக்கங்கள் பலமாக இருந்தல் அவசியம். 

ஒருவருக்கு மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைய 7 ஆம் பாவமும், களத்திரகாரகன் சுக்கிரனும் பலமாக இருக்க வேண்டும். நவக்கிரகங்களில் சுபகிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடியவை குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், சுபசேர்க்கைப் பெற்ற புதன் ஆகியவைகள் ஆகும். சூரியன், செவ்வாய், சனி, ராகு கேது, தேய்பிறை சந்திரன், பாவிகள் சேர்க்கை பெற்ற புதன் ஆகியவை பாவகிரகங்களாகும். மணவாழ்க்கையானது மகிழ்ச்சிகரமாக அமைவதற்கு 7 ஆம் அதிபதி சுபரமாக இருப்பதும், 7 ஆம் வீட்டில் சுபகிரகம் இருப்பதும் நல்லது. 7 ஆம் அதிபதி பாவியாக இருக்கும் பட்சத்தில் சுபர் நட்சத்திரத்தில் அமைவதும், சுபர் பார்வையுடனிருப்பதும், சொந்த வீட்டில் அமைவதும் கெடுதியில்லை. பொதுவாக 7 ஆம் அதிபதி களத்திர காரகனான சுக்கிரன் ஆகியோர் கிரக சேர்க்கையின்றி தனித்து அமையப்பெற்று சுபர் நட்சத்திரத்தில் சுபர் பார்வையுடனிருப்பது நல்லது.

7 ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றோ, கேந்திர  ஸ்தானமான  1,4,7,10 லோ  திரிகோண ஸ்தானம்  என கூறக்கூடிய 1,5,9 லோ அமையப் பெறுவது சிறப்பு. பொதுவாக, எந்தவொரு ஸ்தானத்திற்கும் சுபகிரக பார்வை இருப்பது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக, குரு பார்வை கோடி புண்ணியம் என்பார்கள். குரு பகவான் தான் இருக்கும் இடங்களிலிருந்து 5,7,9 ஆகிய ஸ்தானத்தை பார்வை செய்வார், பார்வை பெறும் பாவங்களுக்கு எவ்வளவு தோஷங்கள் இருந்தாலும் அதன் கெடுதிகள் அனைத்தும் விலகி நற்பலன்கள் உண்டாகும். இவ்வளவு மகத்துவங்களை பெற்ற குருவின் பார்வை ஜென்ம லக்னத்திற்கோ, 7 ஆம் வீட்டிற்கோ, 7 ஆம் அதிபதிக்கோ, சுக்கிரனுக்கோ அமையுமானால் மணவாழ்க்கையானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். 

ஜென்ம லக்கினத்திற்கு 2,7 ஆம் அதிபதிகள் 6,8,12 ஆம் பாவங்களில் மறையாமல் இருப்பதும்,2,7 ஆம் அதிபதிகள் வக்ரம் பெறாமல் இருப்பதும்,ஜென்ம லக்கினாதிபதியும் 7ஆம் அதிபதியும் ஒருவருக்கொருவர் 6,8,12 இல் அமைய பெறாமல் இருப்பதும் நல்லது.

7 ஆம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும், 7 ஆம் அதிபதியும் சுக்கிரனும், பெண்களுக்கு களத்திர காரகனான செவ்வாயும் கிரக சேர்க்கையின்றி இருப்பது நல்லது. 7 ஆம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும் நல்லது என்ற காரணத்தால் தான் பொதுவாக மக்கள் 7 ஆம் இடம் சுத்தமாக இருக்கிறதா என பேச்சு வாக்கில் கேட்பார்கள். திருமண வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய  2,4,8,12 ல் பாவகிரகங்கள் ஏதும் இல்லாமல் பலமாக அமையப்பெற்றால் மண வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading
please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


Sunday, December 14, 2014

ஆண்டு பலன்கள் 2015 மீனம்



காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் 

சனி பெயர்ச்சி பலன்கள் 

16.12.2014 செவ்வாய்கிழமை 

காலை 6.30 மணி முதல் 07.00 மணி வரை 

இப்படிக்கு

ஜோதிட மாமணி,

முருகுபாலமுருகன்





திங்கள் முதல் வெள்ளி வரை 
 காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை
 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 

" இந்த நாள் "

என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்

முருகு சோதிட ஆராய்ச்சி மையம் 


நடத்தும் 


சனி பெயா்ச்சி யாக அழைப்பிதழ்

ஆண்டு பலன்கள் 2015 மீனம்



(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)



நீதி, நேர்மை தவறாமல் நடக்கும் பண்பும் ஏழை எளியவர்களுக்கு உதவிசெய்யும் ஆற்றலும்கொண்ட மீன ராசி நேயர்களே! இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் அமைப்பாகும். இதுமட்டுமின்றி இந்த ஆண்டின் முற்பாதியில் உங்கள் ராசியாதிபதியான குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். புத்திரவழியிலும் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையாச் சொத்து வகையில் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப் பலன்களையும் பெறுவீர்கள். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் எதிர்பார்த்த லாபத்தினை அடைந்துவிட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெறுவீர்கள். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டுக்கு மாறுதலாகவிருப்பதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் நல்லது. தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.


உடல் ஆரோக்கியம்

சனி 9-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்துவிடக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். குரு பஞ்சம ஸ்தானத்திலிருப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. இதனால் மருத்துவச் செலவுகளும் உங்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் அலைச்சல்களை குறைத்துக்கொள்ள முடியும்.

குடும்பம்,  பொருளாதார நிலை

 குடும்பத்தில் பொருளாதார நிலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகச் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை எளிதில் அமையும். அசையாச் சொத்து வகையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபம் கிட்டும். புத்திரவழியில் மகிழ்ச்சியும் கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் அமையும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு 6-ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வதும் மற்றவர்களிடம் கவனமுடனிருப்பது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு ஆண்டின் தொடக்கமானது. அற்புதமான பதவி உயர்வுகளையும், பாராட்டுதல்களையும் அள்ளித் தருவதாக அமையும். திறமைக்கேற்ற கௌரவமான நிலையினை அடைவீர்கள். பொருளாதார நிலையும் ஊதிய உயர்வுகளால் மேம்படும். புதிய வேலைவாய்ப்பும் எதிர்பார்த்தபடியே கிட்டும். நல்ல நிர்வாகத்திறனும் பலரை அதிகாரம் செய்யக்கூடிய ஆற்றலும் உண்டாகும். ஜூலை 5-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு ருண, ரோக ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம்செலுத்துவது உங்களின் கௌரவத்துக்கு நல்லது.

தொழில், வியாபாரம்

உங்கள்  ராசிக்கு அதிபதியான குரு இந்த ஆண்டின் முற்பாதி வரை பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம்செய்வது நல்ல அமைப்பாகும். இதனால் தொழில், வியாபாரரீதியாக ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிட்டும். எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் வெல்லக்கூடிய ஆற்றலும் உண்டாகும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி குரு 6-ஆம் வீட்டுக்கு மாறுதலாகவிருப்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களை ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது.

பெண்களுக்கு

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மணமாகாத கன்னியருக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியம் அமையும். குடும்பத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் வருகையால் நற்பலன்கள் அமையும். பூர்வீகச் சொத்துகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமானதாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். குரு மாற்றத்திற்குப் பிறகு எதிலும் சிந்தித்துச் செயல்படுவது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 

கொடுக்கல்- வாங்கல்

 இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனகாரகன் குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவை சரளமாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலும் தாராளமாக லாபம் கிட்டும். பெரிய முதலீடுகளையும் தடையின்றி ஈடுபடுத்த முடியும். என்றாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவிருக்கும் குரு மாற்றத்திற்குப் பிறகு கொடுக்கல்- வாங்கலில் வீண் விரயங்களைச் சந்திப்பீர்கள் என்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்த்துவிடுவது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு

குரு பகவான் இந்த ஆண்டின் முற்பாதியில் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றமுடியும். மக்கள் செல்வாக்கு காரகனாகிய சனி பகவானும் 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு மேன்மையை உண்டாக்கும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைத் தடையின்றி காப்பாற்றிவிடுவீர்கள். கட்சிப் பணிக்காக எதிர்பாராத வீண் செலவுகளைச் சந்திக்கநேரிடும் என்பதால் பணவிஷயத்தில் கவனம் தேவை.

விவசாயிகளுக்கு

  விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும் எதிர்பார்த்த வங்கிக் கடன்களும்  கிடைக்கப்பெற்று தேவைகள் பூர்த்தியாகும். பூமி, மனை, வாங்கும் யோகம் உண்டென்றாலும்  சில தடைகளுக்குப்பின் வாங்குவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்களையும் நிறைவேற்ற முடியும். ஆடு, மாடு போன்ற கால்நடைகளாலும் சிறப்பான லாபம் கிட்டும். கடன்களை அடைக்கக்கூடிய அளவுக்கு ஆற்றலும் உண்டாகும்.

கலைஞர்களுக்கு

இந்த ஆண்டின் தொடக்கமானது கலைஞர்களுக்கு அபரிமிதமான செல்வாக்கினை உண்டாக்கும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களின் திறமைகளுக்கேற்ற கதாபாத்திரங்களும் கிடைக்கப்பெறும். குரு மாற்றத்திற்குப் பிறகு பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவக்கூடுமென்பதால் ஆடம்பரமாக செலவுகள் செய்வதைக் குறைத்துக்கொள்வது நல்லது.

மாணவ- மாணவியருக்கு

கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களைப் பெறமுடியும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். நல்ல நண்பர்களின் நட்பு உங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பும் கிட்டும்.


மாதப் பலன்கள்



ஜனவரி


மாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், 11-ல் சுக்கிரன்  சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல அனுகூலங்கள் உண்டாகும். லாபங்கள் பெருகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். எடுக்கும் காரியங்களில் எளிதாக வெற்றிகளைப் பெறுவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய சம்பவங்கள் நடைபெறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடும். ஆஞ்சனேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 13-01-2015 மாலை 05.37 மணி முதல் 16-01-2015 அதிகாலை 02.42 மணி வரை.

பிப்ரவரி 

பாக்கிய ஸ்தானத்தில் சனியும், 11-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். நீங்கள் எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்களும் ஓரளவுக்கு சாதகமாகச் செயல் படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களும் பணியில் நிம்மதியாகச் செயல்படமுடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 09-02-2015 இரவு 12.47 மணி முதல் 12-02-2015 காலை 11.08 மணி வரை.

மார்ச்

ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் 12-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பும் கண்களில் கோளாறும் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் தோன்றும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டிவரும். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாவதால் குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்ய கடன் வாங்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபத்தினைப் பெற முடியும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 09-03-2015 காலை 06.50 மணி முதல் 11-03-2015 மாலை 05.41 மணி வரை.

ஏப்ரல்

ஜென்ம ராசியில் சூரியனும் 2-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் சோர்வு, எதிலும் முழுமையாக ஈடுபடமுடியாத நிலை உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். முடிந்த வரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவும். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் தாமதப்படும். துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 05-04-2015 மதியம் 12.50 மணி முதல் 07-04-2015 இரவு 11.19 மணி வரை

மே

பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு  சஞ்சாரம் செய்வதும் 2-ஆம் தேதி முதல்  3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும்.  நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகிட்டும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். கொடுக்கல்- வாங்கலிலும் லாபம்கிட்டும். உத்தியோகஸ்தர் களும் எதிர்பார்த்த பதவி உயர்வுகளைப் பெறமுடியும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 02-05-2015 மாலை 07.38 மணி முதல் 05-05-2015 அதிகாலை 05.33 மணிவரை; மற்றும் 30-05-2015 அதிகாலை 03.24 மணி முதல் 01-06-2015 மதியம் 01.06 மணி வரை.

ஜூன் 

முயற்சி ஸ்தானத்தில் சூரியன், செவ்வாயும் 5-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்றமுடியும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அசையும்- அசையாச் சொத்துகள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு போட்டிகள் நிலவினாலும் லாபம் குறையாது. கொடுக்கல்- வாங்கலில்  சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 26-06-2015 காலை 11.41 மணி முதல்  28-06-2015 இரவு 09.46 மணி வரை.

ஜூலை 

சுக ஸ்தானமான 4-ல் சூரியன், செவ்வாயும் 7-ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். உற்றார்- உறவினர்களும் பகைமை உணர்வுடன் செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகளிலும் தடை, தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாராத வீண் விரயங்களால் கடன் வாங்க வேண்டிவரும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். உடல்நிலை சோர்வடையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர் களும் லாபத்தை எதிர்பார்க்கமுடியாது. ஆஞ்சனேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 23-07-2015 மாலை 07.43 மணி முதல் 26.07.2015 காலை 06.40 மணி வரை.

ஆகஸ்ட்

ருண, ரோக ஸ்தானமான 6-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதாரரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்துமென்றாலும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பணவரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். உற்றார்- உறவினர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். சமுதாயத்தில் கௌரவமான நிலை உண்டாகும். கடன்கள் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 20-08-2015 அதிகாலை 02.54 மணி முதல் 22-08-2015 மதியம் 02.42  மணி வரை

செப்டம்பர்

இம்மாத முற்பாதி வரை சூரியன் 6-ல் சஞ்சரிப்பதாலும், மாத பிற்பாதியில் செவ்வாய் 6-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின்  வெற்றிகிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்திலும் ஓரளவுக்கு நிம்மதி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். அசையும்- அசையாச் சொத்துகளால் ஓரளவுக்கு லாபம்கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு போட்டிகள் உண்டாகி லாபங்கள் சற்று குறையும். சிவபெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 16-09-2015 காலை 09.11 மணி முதல் 18-09-2015 இரவு 09.22 மணி வரை.

அக்டோபர்  

ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பென்றாலும் சூரியன் சாதகமின்றி சஞ்சரிப்பதால் உறவினர்களிடையே கருத்துவேறுபாடு உண்டாகும். வீண் அலைச்சல் களால், உடல்நிலையில் சோர்வு,  எதிர்பாராத விரயங்களால் பணத் தட்டுப்பாடு உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுத்தால் வீண் சிக்கலில் சிக்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம்செலுத்தவும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 13-10-2015 மதியம் 03.10 மணி முதல் 16-10-2015 அதிகாலை 03.09  மணி வரை.

நவம்பர்

ஜென்ம ராசிக்கு 6-ல் குருவும், 7-ல் ராகுவும், 8-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், உற்றார்- உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். தேவையற்ற மனசஞ்சலங்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். தொழில், வியாபாரத்திலும் நெருக்கடிகள் உண்டாவதால் லாபங்கள் குறையும். உத்தியோகஸ்தர்களும் வீண்பழிச் சொற்களை சுமக்க வேண்டிவரும். உடன் பணிபுரிபவர்களிடம் கவனம் தேவை. சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 09-11-2015 இரவு 09.37 மணி முதல் 12-11-2015 காலை 09.11 மணி வரை.

டிசம்பர் 

ராசிக்கு 6-ல் குருவும் 7-ல் செவ்வாய், ராகுவும் சஞ்சாரம் செய்வதால்  உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து நடப்பது, பேசும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இழுபறி நிலை நீடிக்கும். கொடுக்கல்- வாங்கலில் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு உடனிருப்பவர்களே துரோகம் செய்வார்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிவரும். சிவனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 07-12-2015 அதிகாலை 05.00 மணி முதல் 09-12-2015 மாலை 04.28 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1, 2, 3, 9; கிழமை - வியாழன், ஞாயிறு; திசை - வடகிழக்கு; நிறம் - மஞ்சள், சிவப்பு; கல் - புஷ்பராகம்; தெய்வம் - தட்சிணாமூர்த்தி.

பரிகாரம்

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சர்ப கிரகங்களான ராகு- கேது சாதகமின்றி சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, ராகு காலங்களில் துர்க்கை வழிபாடு, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. வரும் 05-07-2015 முதல் குரு 6-ல் சஞ்சரிக்கவிருப்பதால் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. ஏழை அந்தணர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது உத்தமம்.


Contact






For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading
please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA