சனி
விஞ்ஞானத்தில் சனி
சூரியனுக்கு வெகு தூரத்தில் சுற்றி வரும் கிரகம் சனியாகும். குருவை அடுத்து சுற்றும் கோள் சனி. சனி சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் 30 வருடங்களாகும். சூரியனிடமிருந்து சுமார் 50 சதவிகித ஒளி கதிர்களை பிரதிபலிக்கிறது. சனிக்கு 12 துணை கோள்கள் உண்டு.
புராணத்தில் சனி
நீதியை உலகிற்கு வழங்க வேண்டி நெறி முறை தவறாமல் அவரவர் குற்றங்களுக்கேற்ப தண்டனை கொடுப்பதை கடமையாக கொண்டவர். சதா குடிபோதையில் இருப்பதால் கண்கள் சிவந்து காணப்படும். அஞ்சா நெஞ்சம் உடையவர். எப்பொழுதும் கூட்டமாக இருப்பதையே விரும்புவார். காகம் இவரது அம்சம், எருமை இவரது வாகனம். காகம்,எருமை இரண்டுமே எப்பொழுதும் கூட்டமாகவே இருக்கும் சிறைவாசம் தண்டனை, ஒதுக்கப்பட்ட ஜாதி இவற்றிற்கு காரகன் இவரே. இழுப்பு நோய்க்கும் காரணமானவர். இவனை பிடிக்கப்போய் ஒருகால் ஊனமானாலும் வஜ்ரம் பாய்ந்த கருமையான மேனியை கொண்டவர். இவருக்கு புத்தி கொஞ்சம் மந்தம் என்றாலும் நவகிரகங்களிலேயே ஈஸ்வர பட்டத்தை பெற்றவர் இவரே.
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாக பிறந்தவர் சனி. சாயாதேவி தன் மனைவி சமுக்ஞா தேவியின் நிழல் என்பதை அறிந்த சூரியன் சாயாதேவியை வெறுத்ததால் சனிக்கும் சூரியனுக்கும் பகை ஏற்பட்டது. இதனால் தான் சூரியனும் சனியும் பகை கிரகங்களாயின என புராணங்கள் கூறுகின்றன. சனி நின்ற வீட்டை விட பார்க்கும் வீடுகளுக்கு கெட்டபலன் மிக அதிகம். சனியின் பார்வை கொடியது என்பதற்கு உதாரணமாக இராவணனின் கதையை
ஒருநாள் இராவணன் அரியனை ஏறும் சமயத்தில் நாரதர் வந்தார். இராவணனும் முதலில் நாரதரை வரவேற்று உபசரிதான். இராவணனுக்கு நவகிரகங்களை கவிழ்த்துப் போட்டு அவர்களின் முதுகில் கால் வைத்து அரியணை ஏறுவது வழக்கம். நாரதர் கலகக்காரனல்லவா விடுவாரா? ஒரு வீரன் புறர் முதுகின் மீது ஏறி செல்வது அழகல்ல. அதனால் அவர்களின் மார்பின் மீது ஏறி செல்வது தான் அழகு என ஆலோசனை கூறினார். அவர் யோசனை ஏற்ற ராவணன் நவகிரகங்களை மல்லக்கப் போட்டு அவர்களின் மார்பின் மீது கால் வைத்து அரியணை ஏறினான். அப்போது சூரியன், சந்திரன், சுக்கிரன், அங்காரகன், புதன், குரு போன்றவர்கள் மீது கால் வைக்கும் போது எந்த வித மாற்றமும் தெரிய வில்லை. ஆனால் சனியின் மார்பு மீது கால் வைத்து ஏறும் போது சனியின் பார்வை இராவணின் பார்வையுடன் கலந்தது. இதனால் இராவணின் சர்வ வல்லமையும் மறைந்தது. இதனால் இராவணன் நிலை குலைத்தான். இது பின்னாளில் இராமணனிடம் இராவணன் தோல்வி அடைய சூழ்ச்சியாக இருந்தது. இதனால் சனியின் பார்வை எவ்வளவு கொடியது என்று தெரிகிறதல்வா? சர்வ வல்லமை படைத்த இராவணனுக்கே இந்த கதி என்றால் சாதாரண மனிதர்களின் நிலை என்ன என எண்ணிப்பாருங்கள். இதனால் தான் முப்பது வருடம் வாழ்ந்தவரும் இல்லை. முப்பது வருடம் தாழ்ந்தவரும் இல்லை என கூறினார்களோ? என்னவோ? சனியின் தாக்கத்தை அனுபவிக்காதவர்கள் இந்த மண்ணில் இருக்கவே முடியாது. கோட்சாரத்தில் சனி, 3,6,11 ஆகிய வீடுகளில் சஞ்சரித்தல் மட்டுமே நற்பலனை தருவார். சனி என்றாலே அனைவருக்கும் சனி தான். அர்தாஷ்டம சனி, கண்டசனி, அஷ்டமசனி, ஏழரை சனி (விரையசனி, ஜென்மசனி, பாதசனி) என பல வகைகளில் நமக்கு தொல்லைகளை தருவார். என்றாலும் சனி போல கொடுப்பாரும் இல்லை. கெடுப்பாரும் இல்லை என்ற பழமொழிக்கேற்ப சனி கொடுக்க ஆரம்பித்தால் அதை தடுக்க யாரும் இல்லை என்பதே உண்மை.
எண்கணிதம்
எண்கணித வரிசையில் 8ம் எண்ணுக்கு சொந்தகாரர். 8ம் எண்ணில் பிறந்தவர்கள் சர்வ வல்லமை படைத்தவராக இருந்தாலும் மந்த புத்தி உடையவர்களாக இருப்பார்கள். முக்கியமான நல்ல காரியங்களுக்கு 8ம் எண்ணை தவிர்த்து விடுவார்கள்.
ஆயுள்
ஒருவரது ஆயுளை வாழ்க்கையின் அளவை குறிக்கும் ஆங்கில சொல் Life என்னடா Life என அங்கலாய்ப்பவர்களும் உண்டு. என் Life Super என மகிழ்பவர்களும் உண்டு. லிவீயீமீ ன் கால அளவு என்ன என்பது அந்த சனிபகவானுக்கே வெளிச்சம். ஆயுளை கொடுப்பவரல்லவா அவர்
Life
3185 = 17 - 1+7 =8
ஒவ்வொருவரின் உடலையும் அவர்களின் கை ஜானில் அளந்தால் 8 ஜான் இருக்கும். இதை யாரால் மறுக்க முடியும்.
சனி நீராடு
சனிக்கிழமைகளில் எண்ணெய்தேய்த்து குளித்தால் ஆயுள் நீடிக்கும் என்று ஓளவையாரே பாடியுள்ளார். அதுவும் எந்த எண்ணெயில் தெரியுமா? சனியின் காரகத்துவமான எள்ளில் இருந்து தயாரிக்கப்பட்ட நல்லெண்ணெயில் தான் இதை தான் சனி நீராடு என்றார்.
அது போல தோல் பொருட்களுக்கும் காரகன் சனி. உலகம் முழுவதிலும் பெயர் பெற்ற தோல் பொருள் செய்யும் கம்பெனி BATA. BATA என்ற நிறுவனம் செருப்புக்கு பெயர் போனது என நாம் அனைவரும் அறிந்ததே.
BATA.
2141 = 8 சனியின் ஆதிக்கமல்லவா
சிறைசாலை
தண்டனை, சிறைவாசம் இவற்றிற்க்கெல்லாம் சனியே காரகன் எனபார்த்தோம். உலகில் முதன் முதலில் பதினைந்தாம் நூற்றாண்டில் 1403 ம் ஆண்டு கைதிகளுக்கென்று சிறை சாலை கட்டப்பட்டது. இந்த வருடத்தை கூட்டி பாருங்கள் 8ம் எண் வருகிறதா. இரும்புக்கு சொந்தகாரரும் சனிதான். பின்பு கைதியின் கையில் தங்க காப்பா மாட்டுவார்கள். இரும்பால் செய்யப்பட்ட கை விலங்கை தான் மாட்டுவார்கள். தவறு செய்பவர்களையும், நீதி தவறு தவறுபவர்களையும் சனி லேசில் விடமாட்டார். இரும்பு காப்பை மாட்டி இரும்பு கம்பியை எண்ண வைப்பார். ஜெயிலுக்கு சென்றாலும் சும்மா இருக்க முடியுமா? அங்கும் கல் உடைப்பது, மரவேலை செய்வது போன்ற பணிகளை செய்ய வேண்டும். இதற்கும் காரகன் சனியே தான். கைதிக்கு காப்பு, போட்டு கோர்ட்டுக்கு கொண்டு சென்றால் வழக்கறிஞரும் நீதிபதியும் அணிந்திருப்பது கருப்பு அங்கியை தான். நீதிமானான சனியின் நிறம் கறுப்புதானே
கருப்பு நிறம்
துக்கம் சோகம், நிம்மதியின்மை போன்றவற்றிற்கும் காரகன் சனி. என்பதால் தான் துக்கம் அனுசிப்பவர்கள் கறுப்பு துண்டு, கறுப்பு பேட்ஜ், போன்றவற்றை அணிகிறார்கள். தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவும் கருப்பு நிற கொடியை காட்டுகிறார்கள்.
இது மட்டுமா வெயிலின் தாக்கம் கண்களை பாதிக்காமலிருக்க கறுப்புநிற கூலிங்கிளாஸ், பலர் கருப்பு நிற குடை பயன்படுத்துகிறோம். கார்களுக்கு சன் கிளாஸ் என்ற பெயரில் கருப்பு நிற ஸ்டிக்கரை ஒட்டி வெயில் கொடுமையிலிருந்து தப்பித்து கொள்கிறோம். சூரியனுக்கு சனி பகையல்லவா? சனியை சரணடைந்தால் சூரியனிடமிருந்தும் அவரால் ஏற்படும் உஷ்ணத்திலிருந்தும் காப்பாற்றுவார்.
ஆப்பிரிக்கா கண்டம்
சுமார் 800 மொழிகளை பேச கூடிய ஆப்பிரிக்கா கண்டம் சனியின் ஆதிக்கத்திற்குட்பட்டதே. ஆப்பிரிக்கர்கள் என்றாலோ நீக்ரோக்கள் தான் அவர்களை பாருங்கள் கறுகறுவென சுருண்ட மயிருடன் காட்சியளிப்பார்கள். நல்ல உடல் வலிமை மிக்கவர்கள். இருண்ட கண்டம் என அழைக்கப்படும் ஆப்பிரிக்காவில் நீக்ரோக்கள் கூட்டம் கூட்டமாக வாழுவார்கள். அடிமை தொழிலுக்காக கை விலங்கிடபட்டு கறுப்பர்கள் என்ற கொடுமைக்குள்ளானவர்கள் சனியின் ஆதிகத்தால் சந்தோஷத்தை ஒரு காலத்தில் தொலைரர்தார்கள்.
காக்காய் வலிப்பு
வலிப்பு நோய்க்கு காரகனாக சனி சொல்லப்படுகிறார். அதனால் தான் வலிப்பு நோய் யாருக்காவது வந்தால் அதை சனியின் அம்சமான காகத்துடன் சேர்த்து காக்காய் வலிப்பு என பெயரிட்டுள்ளனர். இரும்புக்கும் காரகன் சனி என்பதால் முன்னாள் எடுப்பது போல காக்காய் வலிப்பிற்கு இரும்பை கையில் கொடுக்கிறார்கள்.
பொதுவாகவே வீட்டில் யாரையும் சனியனே என்று திட்ட கூடாது. தன்னை அடிக்கடி அழைப்பவர்களை சனி பிடித்துக் கொள்வார் என்பது முன்னோர்களின் கூற்று. ஆகவே சனியின் சன்னதியில் சனியின் பார்வை படும் படி நேராக நின்று கையெடுத்து கும்பிடகூடாது, பக்கவாட்டில் நின்று தான் வழிபட வேண்டும். எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு ஆலயத்தில் உட்கார்ந்து எழுந்து வரலாம். ஆனால் சனியை வணங்கிவிட்டு திரும்பிபார்க்காமல் வந்து விட வேண்டும் என நம் முன்னோர்கள் சனிக்கென தனி பரிகார முறைகளை வகுத்துள்ளனர். இதையே நாமும் பின் பற்றுவோம்.
Contact
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank account details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
Name ; R.Balamurugan
Bank name - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078
Person who is will to sent money by western union money transfer or by money gram details are as follows as
R.Balamurugan,
S/O Murugu Rajendran,
No 33 Palani andavar koil street,
Vadapalani Chennai -600026,
South India. Cell 9841771188/7200163001
No comments:
Post a Comment