குரு பெயர்ச்சி பலன் 2014 - 2015 ரிஷபம்
ரிஷபம்; கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
எப்பொழுதும் மற்றவர்களுக்காக செயல்படும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! 13.06.2014 முதல் 5.7.2015 வரை சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். சனி பகவான் முற்பாதிவரை 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விட முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. பொன் பொருள் சேரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. 21.06.2014 முதல் ராகு பகவான் 5&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் மனசஞ்சலம் தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பூர்வீக சொத்துக்களாலும் வீண் விரயங்கள் உண்டாகும். கேது பகவான் 11இல் சஞ்சரிப்பதால் விரயங்கள் ஏற்பட்டாலும் லாபங்களுக்கும் குறை இருக்காது. 16.12.2014 முதல் சனி பகவான் 7ஆம் வீட்டிற்கு மாறுதலாகி கண்டச் சனி நடைபெறவுள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் குரு பார்வை சனிக்கு கிடைப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். பணம் கொடுக்கல்&வாங்கல் விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யத் துணிவார்கள் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் சற்று தாமதப்படும்.
தேக ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. அடிக்கடி பாதிப்புகள் உண்டாகியபடியே இருக்கும். மனைவி பிள்ளைகளுக்கு உண்டாக கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். புத்திர வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்க்கொள்வீர்கள். பண வரவு சுமாராக இருக்கும்.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் சற்று தடைகள் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமற்ற நிலைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையே இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். புதிய புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பயணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. முடிந்த வரை பிறர் விஷயங்களின் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு
மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் ஒரளவுக்கு ஆதாயப் பலனையே அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும்.
விவசாயிகளுக்கு
விளைச்சல் ஒரளவுக்கு தான் இருக்கும். போட்ட முதலீட்டினை எடுக்கவே அரும்பாடுபட வேண்டி வரும். வயல் வேலைகளுக்கு தகுந்த நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். சந்தையிலும் விளை பொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பங்காளிகளை அனுசரித்து செல்லவும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்புடனேயே செயல் படவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும் புத்திர வழியில் மனசஞ்சலங்கள் தோன்றும்.
படிப்பு
கல்வியில் மந்த நிலை ஏற்படக் கூடிய காலம் என்பதால் சற்று ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பொழுது போக்குகளால் மனம் வேறுபாதைகளுக்கு மாறிச் செல்லும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற இயலாமல் போகும்.
ஸ்பெகுலேஷன்
லாட்டரி ரேஸ் ஷேர் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது.
குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 13.06.2014 முதல் 28.06.2014 வரை
குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்றுக் கூற முடியாது என்றாலும் சனி 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். வேலை பளு கூடுதலாகும்.
குரு பகவான் பூச நட்சத்திரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை
குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு தர்ம கர்மாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3இல் சஞ்சாரம் செய்யவிருக்கும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமானப் பலனைப் பெற முடியும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். ராகு 5இல் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் நிம்மதி குறைவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். வேலை பளுவும் குறையும். அரசியல் வாதிகளுக்கு மக்களின் ஆதரவு கிட்டும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.
குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 29.08.2014 முதல் 02.12.2014 வரை
குரு பகவான் ஜென்ம ராசிக்கு தன பஞ்சமாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் நன்மை தீமை கலந்தப் பலன்களையேப் பெற முடியும். இதனால் பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்கனால் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். பிள்ளைகளை அனுசரித்து நடப்பது நல்லது. பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்பபது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பது நல்லது.
குரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை
குரு பகவான் சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் இக்காலங்களில் அதிசாரமாக சஞ்சாரம் செய்கிறார். இதனால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். சுக வாழ்வு பாதிப்படையும். வண்டி வாகனம், வீடு மனை போன்றவற்றால் வீண் விரயங்கள் உண்டாகும் என்றாலும் சனி 6இல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொண்டு வெற்றி பெற முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்காது. செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். உத்தியோகஸ்தர்கள் எதையும் சிறப்புடன் செய்து பாராட்டுதல்களை பெற முடியும். வரும் 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனிப் பெயர்ச்சியால் சனி 7ஆம் வீட்டிற்கு மாறுதலாகி கண்டச் சனி நடைபெறவுள்ளது என்பதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது.
குரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2014 வரை
குரு பகவான் 3ஆம் வீட்டில் சஞ்சரித்தாலும் வக்ர கதியிலிருப்பதால் எதிலும் உயர்வுகளைப் பெற முடியும். பண வரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். கடந்த காலப் பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறையும். தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும் சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெறலாம். 7&இல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். போட்டி பொறாமைகளை சமாளித்து முன்னேற முடியும். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். மாணவர்கள் கல்வியில் முழு மூச்சுடன் செயல்பட்டால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைத் பெற முடியும்.தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நற்பலனைத் தரும்.
குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 16.04.2014 முதல் 05.07.2014 வரை
குரு பகவான் ஜென்ம ராசிக்கு தன பஞ்சமாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இக்காலங்கள் ஒரளவுக்கு நற்பலனை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தாலே வீண் பிரச்சனைகள் உண்டாவதை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெற முடியும்.
கிருத்திகை 2,3,4ம் பாதங்கள்,
முன் கோபம் அதிகம் இருந்தாலும் எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் சில இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது மூலம் மருத்துவ செலவுகளை குறைக்கலாம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். புத்திர வழியில் அடிக்கடி வீண் பிரச்சனைகள் தோன்றி மறையும்.
ரோகிணி
விட்டுக் கொடுக்கும் குணமும், இனிமையாக பழகும் பண்பும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசிக்கு 3இல் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெற முடியும். பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களின்றி சமாளிக்கலாம். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல்படவும். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களேத் துரோகம் செய்யத் துணிவார்கள் என்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம்.
மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
எந்த கஷ்டங்களையும் எளிதில் தாங்கும் குணம் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசிக்கு 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறு சிறு ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது சிறப்பு. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம் அளிப்பை
எண் 5,6,8,14,15,17
நிறம் வெண்மை, நீலம்
கிழமை வெள்ளி, சனி
கல் வைரம்
திசை தென்கிழக்கு
தெய்வம் விஷ்ணு, லட்சுமி
பரிகாரம்
ரிஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 3இல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, குரு ப்ரீதி தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றுவது நல்லது. 21.6.2014 முதல் ராகு 5இல் சஞ்சரிப்பதால் துர்கை வழிபாடு, சரபேஸ்வரர் வழிபாடு செய்வது நல்லது. 16.12.2014 முதல் சனி பகவான் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது.
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of
MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
No comments:
Post a Comment