Wednesday, April 30, 2014

குரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 கடகம்

குரு பெயர்ச்சி பலன்  2014 - 2015 

கடகம் : புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்

     நல்ல அறிவாற்றலும், கற்பனைத்திறனும் எதிலும் சிந்தித்து செயல்படும் குணமும் கொண்ட கடக ராசி அன்பர்களே! ஆண்டுக்கோள் என வர்ணிக்கப் படக்கூடிய குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியிலேயே 13.06.2014 முதல் 5.07.2015 வரை சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பிள்ளைகளால் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பண வரவுகளில் சுமாரான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். ராகு 3&இல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றமானப் பலன்களைப் பெறுவீர்கள்.

தேக ஆரோக்கியம்

     உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணம் கோளாறு போன்றவை தோன்றும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக செயல்படும் ஆற்றலும் உண்டாகும்.

குடும்பம் பொருளாதாரநிலை

     பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகளும், புத்திர வழியில் மகிழ்ச்சி குறைவும் ஏற்படும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உற்றார் உறவினர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

கொடுக்கல் வாங்கல்

     பணவரவுகள் தேவைக் கேற்ற படி இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளில் சிக்கி கொள்வீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளின் தீர்ப்பு இழுபறி நிலையிலிருக்கும்.

தொழில் வியாபாரிகளுக்கு

     செய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். அவ்வப்போது சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலம் அடைவார்கள். அபிவிருத்தியும் பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு

     பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது, உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தை கையாள்வது நல்லது. உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன்படுத்தி கொள்ளவும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும்.

அரசியல்வாதிகளுக்கு

     பெயர் புகழை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய காலமிது என்பதால் மக்களின் ஆதரவை பெற முயற்சி செய்வது நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். கட்சி பணிகளுக்காக சில செலவுகளை செய்ய நேரிடும். மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு

     பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். நீர் வரத்து தேவைக் கேற்றபடி இருக்கும். புதிய பூமி மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளை பெரிது படுத்தாமலிருப்பது நல்லது.

பெண்களுக்கு

     உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பொருளாதார நிலை ஒரளவுக்கு தேவைக் கேற்றபடி இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.

படிப்பு

     கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் அனுகூலத்தை அடையலாம். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கைகள் வீண் அலைச்சலையும், பிரச்சனைகளையும் உண்டாக்கும். அரசு வழியில் ஆதரவு கிட்டும்.

ஸ்பெகுலேஷன்

     லாட்டரி ரேஸ், ஷேர் போன்றவற்றில் பெரிய தொகைகளை கவனமுடன் ஈடுபடுத்துவது நல்லது.

குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 13.06.2014 முதல் 28.06.2014 வரை

     குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இது மட்டுமின்றி 4&இல் சனி ராகு சஞ்சரிப்பதும் வீண் அலைச்சல்களை உண்டாக்கும் என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். முடிந்த வரை குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது அலைச்சலை குறைக்க உதவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும்.

குரு பகவான் பூச நட்சத்திரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை

     குரு பகவான் ஜென்ம ராசிக்கு 7&ஆம் அதிபதியான சனியின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். 21.06.2014 இல் ஏற்பட்ட சர்ப கிரக மாற்றத்தால் ராகு பகவான் 3&இல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு கை கால் அசதி, மூட்டுக்களில் வலி போன்றவை உண்டாகும். மருத்துவ செலவுகள் ஏற்படும். பண வரவுகள் சுமாராக இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படவும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர் பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். அசையா அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை.

குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 29.08.2014 முதல் 02.12.2014 வரை

     குரு பகவான் விரயயாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும். சனி  4&இல் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல் படுவது நல்லது. ராகு 3&இல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு  பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும் அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயம் ஏற்படும் காலம் என்பதால்  வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படக் கூடிய காலம் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

குரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை

     குரு பகவான் இக்காலங்களில் அதிகாரமாக சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2&இல் அதிசாரமாக சஞ்சரிக்கும் இக்காலங்களில் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளையும் தற்போது மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சனி 4&இல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் தோன்றும் ராகு 3&இல் இருப்பது சிறப்பு என்பதால் எதையும் எதிர் கொள்வீர்கள். தொழில் வியபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர் பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளையும்  ஊதிய உயர்வுகளையும் பெற முடியும். வரும் 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி 5&இல் சஞ்சரிக்க விருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி முடிவடைகிறது.

குரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2015 வரை

     குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எதிர் பாராத வீண் செலவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். 5&இல் சனி சஞ்சரிப்பதால் புத்திர வழியில் மன சஞ்சலங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் உறவினர்களிடையே பிரச்சனைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் நலமுடன் அமைய மாட்டார்கள். 3&இல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உற்றார் உறவினர்களால் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் தாமதப்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 16.04.2015 முதல் 05.07.2015 வரை

     குரு பகவான் விரயாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எதிர்பாராத வீண் விரயங்கள் அதிகரிக்கும். குரு ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்படும். கணவன் மனைவி எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். புத்திர வழியிலும் கவலைகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். குடும்பத்திலும் நிம்மதி குறைவு உண்டாகும். 3&இல் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகளால் ஆதாயங்கள் கிட்டும். எதிர்பாராத அரசு உதவிகளும் கிடைக்கப் பெற்று தொழிலை விரிவு செய்ய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

புனர்பூசம் 4 ம் பாதம்

     பொய் பேசாத குணமும் நல்ல வாக்கு வன்மையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியிலேயே குரு சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகளிலும் நெருக்கடியே நிலவும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சொந்த பூமி மனை போன்றவற்றால் சிறு சிறு விரயங்களை எதிர் கொள்வீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. கடன்கள் படிப்படியாக குறைவடையும்.

பூசம்

     எந்த வித பிரச்சனைகளிலும் அலசி ஆராய்ந்து தீர்வு காணும் உங்களுக்கு ஜென்ம ராசியிலேயே குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பண வரவுகள் ஒரளவுக்கு சுமாராக இருக்கும். புத்திர வழியில் வீண் மன சஞ்சலங்கள் தோன்றும். எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெறும்.

ஆயில்யம்

     சகலவித வித்தைகளையும் கற்றறியக் கூடிய ஆர்வம் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கமான நிலைகள் ஏற்படும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகத்தில் உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை 

எண்   1,2,3,9,10,11,12,18
நிறம்   வெள்ளை, சிவப்பு
கிழமை    திங்கள், வியாழன்
கல்   முத்து
திசை   வடகிழக்கு
தெய்வம்   வெங்கடாசலபதி

பரிகாரம்

     கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியிலேயே குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது. வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்திக்கு கொண்டை  கடலை மாலை சாற்றி நெற் தீப மேற்றவது நல்லது. சனி சாதகமற்று சஞ்சாரம் செய்வதால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது.

For your consultation
Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


No comments: