Wednesday, May 28, 2014

Higher education By MuruguBalamurugan

Education 3 By MuruguBalamurugan

Education 2 By MuruguBalamurugan

Education By MuruguBalamurugan

Luxury Life By Murugubalamurugan

Own House & Vehicle By MuruguBalamurugan

Mother By MuruguBalamurugan

Relationship with Bothers MuruguBalamurugan

Relationship with Bothers MuruguBalamurugan

Sunday, May 25, 2014

Ear problem By MuruguBalamurugan

Speech By Murugubalamurugan

Cash funds flow By Murugubalamurugan

eye sight an astrological veiw By Murugubalamurugan

இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 கடகம் ;


இராகு கேது பெயர்ச்சி பலன்கள்
 2014-2016 கடகம் ;

 புனர்பூசம் 4&ம் பாதம், பூசம், ஆயில்யம்

எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் நல்ல அறிவாற்றல் கொண்ட கடக ராசி அன்பர்களே! ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் வீட்டில் ராகுவும், 9&ஆம் வீட்டில் கேதுவும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பே ஆகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக வழியில் நற்பலன்களை பெறுவீர்கள். 16.12.2014 முதல் சனி பகவான் 5ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பது மேலும் பல நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகும். பிரிந்து சென்ற உறவினர்களும் நட்புகரம் நீட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியும் பெருகும். போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளுக்கேற்ற உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பும் கிட்டும். 05.07.2015 முதல் குரு பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கவுள்ளதால் குடும்பத்தில் மங்கள கரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சேமிப்புகள் பெருகும்.

உடல் நிலை
உடல் நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்புடனேயே செயல்பட முடியும். சிறு சிறு வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பு அஜீரண கோளாறு போன்றவை தோன்றி மறையும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் குறைவாகவே இருக்கும்.

குடும்பம் குழந்தை
கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியம் சற்று தாமதமாக நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது.

கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை தேவைக்கேற்றபடியிருந்தாலும் முடிந்த வரை கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சிந்திப்பீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சற்று இழுபறி நிலையில் இருக்கும்.

தொழில் வியாபாரம்
செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலப் பலனை பெறுவீர்கள். பயணங்களால் நற்பலன்கள் அமையும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியும் பெருகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிட்டும்.

பெண்களுக்கு
உடல் நிலை ஒரளவுக்கு சிறப்பாக அமையும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மணமாகாதவர்களுக்கு சற்று தாமதமாக மணமாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பொன் பொருள் சேரும்.

அரசியல்வாதிகளுக்கு
கட்சி பணிகளுக்காக அதிகம் உழைக்க வேண்டியிருந்தாலும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று வரக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். பொருளாதாரம் மேம்படும்.

விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். நீர் வரத்தும் தேவைக்கேற்ப அமையும். புதிய பூமி மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. உழைப்பாளர்களின் ஆதரவுகள் திருப்தியளிக்கும்.

கலைஞர்களுக்கு
நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். வர வேண்டிய சம்பள பாக்கிகளில் சற்று இழுபறி நிலையிருந்தாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். படபிடிப்பிற்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். சிறு சிறு போட்டிகளையும் எதிர் கொள்ள நேரிடும்.

மாணவ மாணவியர்களுக்கு
கல்வியில் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர் கொண்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். கல்விக்காக பயணங்களையும் மேற்கொள்ள வேண்டி வரும். நல்ல நட்புக்களால் அனுகூலப் பலனை பெறுவீர்கள். வண்டி வாகனங்களில் பயணம் செய்யு-ம் போது கவனமுடனிப்பது நல்லது.

ராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை
ராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3&லும் கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 9லும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குரு பகவான் ஜென்ம ராசியிலும் சனி 4&லும் வீட்டிலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் ராகு 3&இல் இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுத்தால் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட்டு உயர்வுகளை பெற முடியும்.

ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் நற்பலன்களை பெற முடியும். இது வரை நடைபெற்ற அர்த்தாஷ்டம சனியால் வீண் அலைச்சல்கள் அசையா சொத்துக்களால் விரயங்கள் ஏற்பட்டாலும் வரும் 16.12.2014 முதல் சனி மாறுதலாகி 5ஆம் வீட்டிற்கு செல்ல விருப்பதால் கடந்த கால பிரச்சனைகள் சற்றே குறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களில் தாமத நிலை ஏற்பட்டாலும் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது. முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்திலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பண வரவுகளில் சற்றே நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் ராகு 3இல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் ஒரளவுக்கு கிடைக்கும். உற்றார் உறவினர்களால் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும்.5&இல் சஞ்சரிக்கும் சனியும் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எந்தவொரு விஷயத்திலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளாலும் சற்றே மருத்துவ செலவுகள் கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.

ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் அற்புதமான நற்பலன்களையேப் பெற முடியும். இது வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்து வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்த குருபகவான் 05.07.2015 முதல் 2ஆம் வீட்டிற்கு மாறுதலாவதால் அனுகூலமான பலன்களை அள்ளி தருவார். சனியும் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். தடைபட்டுக் கொண்டிருக்கும் சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். சிலருக்கு புத்திர பாக்கியமும் அமையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி, மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் விலகி பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலில் போட்டிகள் குறையும்.

ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை.
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும், கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குரு பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மணமாகதவர்களுக்கு மணமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சமபவங்கள் நடைபெறும். பல பொது நலக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். சனி 5&இல் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். பொன் பொருள் சேரும் அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். செய்யும் உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு இடமாற்றம் போன்ற யாவும் கிடைக்கும்.

புனர்பூசம் 4ம் பாதம்,
பலருடன் நட்பாக பழகும் இயல்பும், பொய் பேசாத குணமும் கொண்ட உங்களுக்கு, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்ததியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை அமைய சற்று தாமதமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபமும் முன்னேற்றமும் உண்டாகும்.

பூசம்
எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து தீர்வு காணும் உங்களுக்கு, பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்கள் குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பொன் பொருள் சேரும். சிலர் அசையா சொத்துக்களையும் வாங்கி சேர்ப்பீர்கள்.

ஆயில்யம்
நல்ல பேச்சாற்றலும், கல்வி, அறிவும், சகல வித்தைகளை கற்றறியும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். அதி நவீன பொருட்களை வாங்கி சேர்க்கும் வாய்ப்பு உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த கெடுபிடிகள் குறையும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்  1,2,3,9,10,11,12,18
நிறம்  வெள்ளை, சிவப்பு
கிழமை  திங்கள், வியாழன்
கல்  முத்து
திசை  வடகிழக்கு
தெய்வம்  வெங்கடாசலபதி

பரிகாரம்
கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு  16.12.2014 சனி 5இல் சஞ்சரிப்பதால் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது. ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. 05.07.2015 வரை குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றி வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.

Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person who is will to sent money by western union money transfer or by money gram details are as follows as

R.Balamurugan,
S/O Murugu Rajendran,
No 33 Palani andavar koil street,
Vadapalani Chennai -600026,
South India. Cell 9841771188/7200163001

இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மிதுனம் ;


இராகு கேது பெயர்ச்சி பலன்கள்
 2014-2016 மிதுனம் ;


 மிருகசீரிஷம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3&ம் பாதங்கள்
எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும், தன்மானம் மிக்கவராகவும் விளங்கும் மிதுன ராசி அன்பர்களே ! ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 4&ஆம் வீட்டிலும், கேது பகவான் 10&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும் என்றாலும் 05.07.2015 வரை குருபகவான் தன ஸ்தானமான 2&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள்  தோன்றினாலும் பெரிய கெடுதியில்லை. 16.12.2014 முதல் சனி பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பது அற்புதமான அமைப்பாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பிரிந்து சென்ற உறவினர்களும் ஒற்றுமை பாராட்டுவார்கள். உடல் ஆரோக்கியமும் சிறப்படையும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலையிருக்கும். எதிர் பாராத பதவி உயர்வுகளும் கிடைக்கும்.

உடல் நிலை
உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் திறம் பட செயல் பட முடியும். வீண் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்க கூடிய காலம் என்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களால் சற்றே மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும்.

குடும்பம் குழந்தை
குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு முற்பாதியில் திருமணம் கைகூடும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.

கொடுக்கல் வாங்கல்
பணவரவுகள் ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினை காண்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை ஏற்பட்டாலும், பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் சற்று தாமதமாக தீர்ப்பு கிடைத்தாலும் சாதகமாக இருக்கும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் சிறப்பாகவே நடைபெறும். நல்ல லாபத்தை கொடுக்கும். சிறு சிறு போட்டிகள் பொறாமைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். அரசு வழியில் ஆதரவுகள் கிடைக்கும். வங்கி கடன்களை அடைப்பீர்கள். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பயணங்களை தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் திருப்தியுடன் செயல் பட முடியும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகி குடும்பத்தை பிரிய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது.

பெண்களுக்கு
உடல் நிலையில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு சற்று வேலை பளு கூடுதலாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு
பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்வீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் நன்றாகவே இருக்கும். விளைப்பொருட்கள் நல்ல விலைக்கு போகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் மானிய உதவிகள் கிடைக்க பெறும். தொழிலாளர்களை அனுசரித்து செல்லவும்.

கலைஞர்களுக்கு
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலின் கவனமுடனிருக்கவும்.

மாணவ மாணவியர்களுக்கு
கல்வியில் மந்த நிலை உண்டாக கூடிய காலம் என்பதால் சற்று முயற்சியினை எடுத்துக் கொள்வது நல்லது. நல்ல நண்பர்களின் சேர்க்கை மகிழ்ச்சியினை உண்டாக்கும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய சூழ்நிலை இடம் விட்டு இடம் மாறக் கூடிய நிலை உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.

ராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை

ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 4&இல் செவ்வாயின் நட்சத்திரத்திலும் கேது பகவான் ஜென்ம ராசிக்கு 10&இல் புதனின் நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சற்றே அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும் என்றாலும் குரு பகவான் 2&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போதும், பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது  போன்றவற்றிலும் கவனமுடனிருப்பது நல்லது. உடல் நிலையில் சற்று சோர்வு,மந்த நிலை தோன்றி மறையும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.

ராகு  பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில் கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில்  25.10.2014 முதல் 27.02.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4&இல் அமைந்துள்ளார். கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 10&ஆம் வீட்டில் அமைந்துள்ளார். இது அவ்வளவு சாதகமான சஞ்சாரம் என்று கூற முடியாது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.  குரு பகவான் குடும்ப ஸ்தானமான 2&ஆம் வீட்டில் அமைந்திருப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணம் போன்ற சுப காரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்லவும். 16.12.2014 முதல் சனிபகவான் 6&இல் சஞ்சரிக்க விருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மறையும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் கிட்டும் என்றாலும் போட்டிகள் நிலவக் கூடிய காலம் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களும் குறையும்.

ராகு  பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில் கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 4&ஆம் வீட்டிலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 10&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்கின்றனர். 4,10&இல் சஞ்சரிக்கும் ராகு கேதுவால் நன்மை தீமைக் கலந்த பலன்களே உண்டாகும் என்றாலும் குரு 2&இல் சஞ்சரிப்பதும், சனி 6&இல் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். செய்யும் தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். போட்டிகள் குறைந்து லாபங்கள் பெருகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட முடியும்.

ராகு  பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 4&ஆம் வீட்டிலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 10&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் ஒரளவுக்கு அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும்.  05.07.2015 முதல் குரு பகவான் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. சனி பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் ஏற்பட்டாலும் மறைமுக எதிர்ப்புகள் இருக்காது. வரவேண்டிய  வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். வேலை பளு குறையும்.

ராகு  பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 4&ஆம் வீட்டிலும், கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் 10&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். குரு பகவானும் 3&இல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுகள் நிலவக் கூடும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். சனி பகவான் 6&இல் சஞ்சரிப்பதால் எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் திறமைக்கேற்ற பதவிகளைப் பெற முடியும். எதிர் பார்க்கும் இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது மூலம் மருத்துவ செலவுகள் குறையும்.

மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள்
தன்னைத் தானே வழி நடத்தக் கூடிய திடமான நம்பிக்கை கொண்ட உங்களுக்கு உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். திருமண சுப காரியங்களில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். புத்திர வழியில் சிறு சிறு கவலைகள் தோன்றினாலும் பெரிய கெடுதியில்லை. செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் போன்ற அனைத்தையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும்.

திருவாதிரை
சூழ்நிலைக்கு தகுந்தாற் போல தன்னை மாற்றிக் கொள்ளும் இயல்பு கொண்ட உங்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தியாகும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலிலும் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும்.

புனர்பூசம் 1,2,3&ம் பாதங்கள்
பொய் பேசாத குணமும்,  நல்ல வாக்கு வன்மையும் கொண்ட உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு லாபத்தினைப் பெற முடியும்.

அதிர்ஷ்டம் அளிப்பை
எண் & 5,6,8,14,15,17
நிறம் & பச்சை, வெள்ளை
கிழமை & புதன், வெள்ளி
கல் & மரகதம்
திசை& வடக்கு
தெய்வம் & விஷ்ணு

பரிகாரம்
மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 4&ஆம் வீட்டிலும், கேது 10&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது. 16.12.2014 வரை சனி 5&இல் சஞ்சரிப்பதால் சனிப்ரீதி, ஆஞ்சநேயரை வழிபடவும். 5.7.2015 முதல் குரு 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person who is will to sent money by western union money transfer or by money gram details are as follows as

R.Balamurugan,
S/O Murugu Rajendran,
No 33 Palani andavar koil street,
Vadapalani Chennai -600026,
South India. Cell 9841771188/7200163001


Thursday, May 22, 2014

இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 ரிஷபம் ;


இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 ரிஷபம் ;

 கிருத்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிஷம் 1,2&ம் பாதங்கள்

பொன் பொருள் மீது அதிக ஆசையும் இனிமையான பேச்சாற்றலும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே சர்ப கிரகங்களான ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 5ஆம் வீட்டிலும், கேது பகவான் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிலும், சஞ்சாரம் செய்ய விருப்பது ஏற்ற இறக்கமானப் பலன்களை உண்டாக்கும் அமைப்பாகும். குரு சாதகமின்றி சஞ்சரித்தாலும் கேது லாப ஸ்தானத்திலிருப்பதால் பண வரவுகள் தேவைக் கேற்ற படி இருக்கும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்கு பின் நிறைவேறும். ராகு 5&இல் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் நிம்மதி குறைவு, பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும். 16.12.2014 முதல் சனி பகவான் 7ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்றாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்,உறவினர்களை சற்றே அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் அமையும் என்றாலும் கூட்டாளிகளால் சற்று நிம்மதி குறைவு ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல் பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். உடன் பணிபுரிபவரை அனுசரித்து செல்வது நல்லது.

உடல் நிலை

உடல் நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்பட முடியும். புத்திர வழியில் சிறு சிறு மனக்கவலைகள் மருத்துவ செலவுகள் தோன்றும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் வீண் அலைச்சல் டென்ஷனும் குறையும்.

குடும்பம் குழந்தை

பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு வீண் செலவுகள் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்

பண வரவுகளில் சுமாரான நிலை இருந்தாலும் கொடுக்கல் வாங்கல் சரளமாகவே நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தாமத நிலை உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சற்று இழுபறியிலிருந்து பின்பு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். போட்டிகள் பொறாமைகள் குறையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடனுதவிகள் சிறு சிறு தடைகளுக்குப் பின் கிடைக்கும். கூட்டாளிகளால் லாபங்கள் உண்டாகும் என்றாலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர் பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும், உத்தியோக உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் நிம்மதியளிப்பதாக அமையும். இடமாற்றங்களும் கிடைக்கும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடனேயே செயல்படுவீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்கள் யாவும் தடைகளுக்குப் பின் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். அசையும் அசையா சொத்துகளை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு

பெயர் புகழ் உயரக் கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவைப் பெற சற்று போராட வேண்டியிருந்தாலும் கிடைக்க வேண்டிய ஆதரவுகள் கிடைக்கும். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் ஏற்படும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும் விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைப்பதால் பொருளாதாரம் மேம்படும். அதி நவீன கருவிகளை வாங்க முடியும்.

கலைஞர்களுக்கு

வாய்ப்புகள் நிறைய கிடைக்கப் பெற்றிருந்தாலும், எதிர் பார்த்து காத்திருந்த நல்ல வாய்ப்புகள் கை நழுவிப் போகும். வர வேண்டிய பணத் தொகைகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.

மாணவ மாணவியர்களுக்கு

கல்வியில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் படிப்படியான முன்னேற்றத்தைக் கொடுக்கும். எதிர் பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

ராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை

சர்ப கிரகங்களான ராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5ஆம் வீட்டிலும், கேது பகவான் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும். ராகு 5இல் இருப்பதால் பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள், புத்திர வழியில் கவலைகள் ஏற்படும் என்றாலும் கேது 11இல் இருப்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்க்கவும்.

ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில் கேது பகவான்&ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை

ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 5ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானமான 11இல் சஞ்சாரம் செய்கிறார். இக்காலங்களிலும் அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடியிருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர வழியில் மனசஞ்சலங்கள் ஏற்பட கூடிய காலம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. இது வரை 6&இல் சஞ்சரித்து அனுகூலப்பலன்களை வாரி வழங்கிய சனி பகவான் 17.12.2014 முதல் 7&ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் உங்களுக்கு கண்ட சனி தொடங்கவுள்ளது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. உறவினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடக்கவும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும்.

ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில் கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை

ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5ஆம் வீட்டிலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 11ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் சாதகமானப் பலன்களைப் பெற முடியும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் உண்டாகும். புத்திர வழியிலும் மனக் கவலைகள் ஏற்படும். பொருளாதார மேன்மை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன் மனைவியிடமே ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் அமையும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். கொடுக்கல் வாங்கல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரியும் வாய்ப்பும் கிட்டும். கடன்கள் குறையும்.

ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில் கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை

ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5லும், கேது பகவான் 11லும் சஞ்சாரம் செய்கின்றனர். இக்காலங்களில் குருபகவான் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். சொந்த பூமி, வண்டி வாகனம் போன்றவை வாங்கும் யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறுவீர்கள். பொன் பொருள் சேரும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பயணங்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்.

ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில் கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை

ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5லும் கேது பகவான் கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் அற்புதமான நற்பலன்களைப் பெற முடியும். பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். குரு 4ஆம் வீட்டிலும் சனி 7லும் சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்று அமைப்பு என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக்  கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறுப்பிரச்சனைகள் தோன்றும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. புத்திர வழியில் மனக் கவலைகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக ஈடுபட முடியும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபத்தினைப் பெற முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை பெறமுடியும்.

கிருத்திகை 2,3,4&ம் பாதங்கள்

மென்மையான குணமும், வெளிப்படையாக பேசும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு எடுக்கும் காரியங்களில் சிறு சிறு தடைகளுக்குப் பின்பு வெற்றி கிட்டும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். திருமண சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மன சஞ்சலங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

ரோகிணி

அனைத்து கலைகளையும் எளிதில்  கற்று கொள்ளும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தின் தேவைகளும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்களின்றி வாழ முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சற்று தாமதத்துடன் வரன் அமையும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து செல்லவும்.

மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்

திடமான நம்பிக்கையும் யாருக்கு பயப்படாத குணமும் கொண்ட உங்களுக்கு உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடனேயே செயல்பட முடியும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுகள் இருக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் சற்று குறையும். எதிர் பார்க்கும் லாபங்கள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது.

திர்ஷ்டம் அளிப்பை
எண்   5,6,8,14,15,17
நிறம்   வெண்மை,நீலம்
கிழமை  வெள்ளி, சனி
கல்   வைரம்
திசை  தென்கிழக்கு
தெய்வம்   விஷ்ணு, லகூஷ்மி


பரிகாரம்

ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் சாதகமின்றி சஞ்சரிப்பதால் வியாழக் கிழமை தோறும் தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்யவும். 16.12.2014 முதல் சனி 7இல் சஞ்சரிக்கவிருப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு பரிகாரம் செய்யவும். ராகு பகவான் 5&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடவும்.

Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person who is will to sent money by western union money transfer or by money gram details are as follows as

R.Balamurugan,
S/O Murugu Rajendran,
No 33 Palani andavar koil street,
Vadapalani Chennai -600026,
South India. Cell 9841771188/7200163001


இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மேஷம் ;

இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016   மேஷம் ; 

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்

தன்மானமும், சுய கௌரவமும் எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி அன்பர்களே! சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 6&லும், கேது 12ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது ஒரளவுக்கு சாதகமான அமைப்பே ஆகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குரு பகவான் 5.7.2015 முதல் ஜென்ம ராசிக்கு 5&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துகளால் லாபமும் உண்டாகும். 16.12.2014 முதல் உங்களுக்கு அஷ்டம சனி தொடங்கவுள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் செலுத்துவது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது போன்றவை நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து செல்லவும். தெய்வ தரிசனங்களுக்காக குடும்பத்தோடு பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு கிட்டும்.

உடல் நிலை ;
உடல் நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல் பட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களும் சுபிட்சமாக அமைவார்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கு மருத்துவ செலவுகள் குறையும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

குடும்பம் குழந்தை
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரிய முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையேயும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூமி மனை வாங்கும் யோகம் தாமதமாக அமையும்.

கொடுக்கல் வாங்குல்
பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும் என்றாலும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் யாவும் விலகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபம் கிட்டும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தொழிலாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு
செய்யும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். உயரதிகாரிகளால் சிறு சிறு கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன் பணி புரியவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்பெறும்.

பெண்களுக்கு
உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்பட முடியும். மணவயதை அடைந்தவர்களுக்கு திருமணம் அமைய சற்று தாமதமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம் சேரும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் கிட்டும்.

அரசியல்வாதிகளுக்கு
பெயர், புகழ் சிறப்பாக இருக்கும். மக்களின் ஆதரவை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி வரும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். சிறப்பான வருவாய்கள் வந்தபடியே இருக்கும்.

விவசாயிகளுக்கு
விளைச்சல் சிறப்பாக இருக்கும் பட்டபாட்டிற்கான முழு பலனையும் தடையின்றி பெற முடியும். விளை பொருளுக்கேற்ற விலையும் சிறப்பாக கிடைக்கும். அரசு வழியில் கிடைக்கப் பெறும் உதவியால் நவீன கருவிகளை வாங்கி போடுவீர்கள்.

கலைஞர்களுக்கு
நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிட்டும். தாராள தன வரவுகளால் அசையும் அசையா சொத்துக்களை வாங்கி சேர்க்க முடியும். படபிடிப்பிற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.

மாணவ மாணவியர்களுக்கு,
கல்வியில் சற்றே மந்த நிலை ஏற்படக் கூடிய காலம் என்றாலும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கல்விக்காக சுற்றுலா பயணங்களை மேற்கொள்வீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் நற்பலன்களை அடைய முடியும்.

ராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை
சர்ப கிரகங்களான ராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் 6&ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பாகும். இதனால் எதிர்பாராத பணவரவுகள் கிட்டும். குரு 4இல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். நல்ல நட்புகள் தேடி வரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொருளாதார மேன்மையால் சுபிட்சமான வாழ்க்கை அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகளில் தடை இருக்காது. போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி பெற முடியும். சனி 7&இல் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளையும். தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல் பட முடியும். உயர் பதவிகளை வகிக்கும் வாய்ப்பும் உண்டாகும்.

ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6&ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் சாதகப் பலன்களையே அடைய முடியும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர் பாராத உதவிகள் மூலம் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தின் மூலம் சனி பகவான் 8&ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் அஷ்டம சனி உங்களுக்கு தொடங்கவுள்ளது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது, உற்றார் உறவினர்களையும், குடும்பத்திலுள்ளவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும்.

ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில் கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்திலும் 6ஆம் வீட்டிலும், கேது சனியின் நட்சத்திரத்திலும் 12ஆம் வீட்டிலும், சஞ்சாரம் செய்யும் காலங்களில் தெய்வ தரிசனங்களுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். சிறு சிறு வீண் விரயங்களை எதிர் கொள்ள நேரிட்டாலும் பெரிய கெடுதியில்லை. உங்களுக்கு அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. திருமண சுப காரியங்கள் சிறு சிறு தடைகளுக்கு பின் கை கூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் இன்றி வாழலாம். பணம் கொடுக்கல் வாங்கலிலும் கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் தடைகள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் அமையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடமும், விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நெருக்கடிகளை சந்தித்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.

ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில் கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் நற்பலன்களே உண்டாகும். குரு பகவானும் பஞ்சம ஸ்தானமான 5&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி தடபுடலாக நடைபெறும். அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரம் லாபமளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைய முடியும். கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தலாகும்.

ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில் கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும் கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் அனுகூலமான பலனே அமையும். குரு பகவான் 5&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபமும், அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தினாலும் அன்றாட பணிகளின் சுறு சுறுப்பாக செயல்பட முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களைப் பெற முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும்.

அஸ்வினி
ஒருவரை பார்த்தவுடன் எடைபோடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு பண வரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியீனை கொடுக்கும். உற்றார் உறவினர்கள் சற்று சாதகமாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். புதிய பூமி, மனை வாங்கும் ஆசைகள் தாமதமாக நிறைவேறும்.

பரணி
மற்றவரை கவரக் கூடிய உடலமைப்பும், சிறந்த பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு திருமண சுப முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் தோன்றி மறையும். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்திலிருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும்.

கிருத்திகை &1ம் பாதம்
நல்ல உடல் வலிமையும் புத்திசாலி தனமும் கொண்ட உங்களுக்கு பணவரவுகள் தேவைக் கேற்றபடி இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் தடைகளுக்குப் பின் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேறுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஒரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல் படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பணி புரிபவர்களுக்கு வேலை பளு குறைவாக இருக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பை
எண்   1,2,3,9,10,11,12
நிறம்   ஆழ் சிவப்பு
கிழமை   செவ்வாய்
கல்   பவளம்
திசை   தெற்கு
தெய்வம்   முருகன்

பரிகாரம்
மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது பகவான் விரயஸ்தானமான 12 இல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடவும். 05.07.2015 வரை குரு 4 இல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது. 16.12.2014 முதல் அஷ்டம சனி தொடங்க விருப்பதால் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது மிகவும் நல்லது.

Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person who is will to sent money by western union money transfer or by money gram details are as follows as

R.Balamurugan,
S/O Murugu Rajendran,
No 33 Palani andavar koil street,
Vadapalani Chennai -600026,
South India. Cell 9841771188/7200163001




.

Tuesday, May 6, 2014

குரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 மீனம் ;

குரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015  மீனம் ;

 பூரட்டாதி &4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
     
     எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் உதவி கரமாக திகழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மீன ராசி அன்பர்களே! உங்கள் ராசியாதிபதி குரு பகவான் ஜென்ம ராசிக்கு 5 ஆம் வீட்டில் உச்சம் பெற்று 13.06.2014 முதல் 5.07.2015 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கு அஷ்டம சனி நடைபெற்றாலும் குருவின் சாதகமான சஞ்சாரத்தால் நினைத்தது நிறைவேறும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. இது வரை தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். மணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் அமையும். சிலருக்கு சொந்தமாக வீடு கார் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபங்கள் அமையும். பொன் பொருள் சேரும். கடன்கள் குறையும். 21.06.2014 முதல் ஜென்ம ராசியில் கேதுவும் 7&இல் ராகுவும் சஞ்சரிப்பதால் கணவன் மனைவி விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. வரும் 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி பெயர்ச்சியால் உங்களுக்கு அஷ்டம சனி முடிவடைகிறது. அதன் பின் சனி 9 இல் சஞ்சரிக்க விருப்பது ஒரளவுக்கு அனுகூலமான அமைப்பு என்பதால் நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றல் உண்டாகும்.

தேக ஆரோக்கியம்

     உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களும் சில நேரங்களில் மருத்துவ செலவுகளை ஏற்படுத்துவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

குடும்பம் பொருளாதார நிலை

     குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.  திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமண சுப காரியம் தடபுடலாக கை கூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கும் புத்திர பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அமையும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்

     பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலும் சரளமாகவே நடைபெறும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுக்கும் போது சற்று சிந்தித்து செயல்படவும். உடனிருப்பவர்களே பண விஷயத்தில் துரோகம் செய்ய துணிவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் நல்ல ஒரு முடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரிகளுக்கு

     தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் பெருகும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உங்களுக்குள்ள வங்கி கடன்கள் குறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

     செய்யும் பணியில் உயர்வான நிலை ஏற்படும். கௌரவமான பதவிகள் கிடைக்க பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர் பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு

     பெயர் புகழ் கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

விவசாயிகளுக்கு

     பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியம் கைகூடும்.

பெண்களுக்கு

     உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினரை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக வழியில் லாபம் கிட்டும்.

.படிப்பு

     கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். திறமைக்கேற்ற மதிப்பெண்களைப் பெற்று முன்னேறுவீர்கள். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.

ஸ்பெகுலேஷன்

     லாட்டரி ரேஸ் ஷேர் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.

குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 13.06.2014 முதல் 28.06.2014 வரை

     உங்கள் ராசியாதிபதி குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு பஞ்சம் ஸ்தானமான 5 இல் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் தொட்டதெல்லாம் துலங்கும். இது வரை தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். நல்ல வரன்கள் தேடி வரும், புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உங்களுக்கு அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது நிதானம் தேவை. தொழில் வியாபாரத்தில் நல்ல அனுகூலங்களும் லாபங்களும் உண்டாகும். இது வரை 2,8&இல் சஞ்சரித்த ராகு கேது 21.06.2014 முதல் கேது ஜென்ம ராசியிலும் ராகு 7&ஆம் வீட்டிலுமாக சஞ்சாரம் செய்யவுள்ளனர். இதனால் கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்திலும் கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வதால் ஒற்றுமை பலப்படும்.

குரு பகவான் பூச நட்சத்தரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை

     ஜென்ம ராசியாதிபதி குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5 இல் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்கிறார். உங்களுக்கு அஷ்டம சனி தொடருவதும், ஜென்ம ராசியில் கேது 7 இல் ராகுவாக சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் குருவின் சாதகமான சஞ்சாரத்தால் மலை போன்ற பிரச்சனைகளும் பணி போல் மறையும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கொடுக்கும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் யாவும் தடையின்றி தடபுடலாக கை கூடும். பொன்னும் பொருளும் சேரும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியையும் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்திருந்த ஊதிய உத்தியோக உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். சேமிப்பும் பெருகும்.

குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 29.08.2014 முதல் 02.12.2014 வரை

     ராசியாதிபதி குரு பகவான் கேந்திராதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5 இல் சஞ்சாரம் செய்கிறார். இது அற்புதமான அமைப்பாகும். இக்காலங்களில் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சொந்த பூமி மனை போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபம் அமையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பொன்னும் பொருளும் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் திருப்தியான நிலையிருக்கும். கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்களும், முன்னேற்றங்களும் உண்டாகும்.

குரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை

     குரு பகவான் இக்காலங்களில் அதிசாரமாக சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இது ஜென்ம ராசிக்கு 6 ஆமிடம் என்பதால் அவ்வளவு சாதகமான நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் தோன்றினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, குடும்பத்திலுள்ளவர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் பொறாமைகள் ஏற்படுவதால் வர வேண்டிய வாய்ப்புகளில் இழுபறி நிலை ஏற்படும். எந்த வொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல் படுவது நல்லது. வரும் 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் 9&ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் உங்களுக்கு அஷ்டம சனி முடிவடைவது குறிப்பிட தக்கது.

குரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2015 வரை

     குரு பகவான் 5 ஆம் வீட்டில் சஞ்சரித்தாலும் வக்ர கதியிலிருப்பதால் இக்காலங்களிலும் சுமாரான நற்பலன்களையே எதிர் பார்க்க முடியும். உடல் நிலையில் சற்றே மந்த நிலை ஏற்படுவதால் அன்றாட பணிகளில் மந்தமாகவே செயல்பட முடியும்.  குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகையால் சிறு சிறு வீண் பிரச்சனைகளை சந்தித்தாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பூமி மனை வாங்கும் விஷயங்களில் வீண் விரயங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் சனி 9&இல் சஞ்ரிப்பதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து செல்ல வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும்.

குரு பகவான் ஆயில்ய நட்சத்தரத்தில் 16.04.2015 முதல் 05.07.2015 வரை

     ராசியாதிபதி குரு பகவான் கேந்திராதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5 இல் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் மீண்டும் முன்னேற்றப் பலன்களை பெற முடியும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள்  தடை விலகி கை கூடும். கணவன் மனைவியிடையே சிறு சிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பொன் பொருள் சேரும். பொருளாதார மேம்பாடுகளால் சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம் பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். எதிர் பார்த்த இட மாற்றங்களும் கிடைக்கும். செய்யும் தொழில் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். லாபங்கள் பெருகும்.

பூரட்டாதி&4ம் பாதம்

     யாருக்கும் தொந்தரவு தராத குணமும், இளகிய மனமும் கொண்ட உங்களுக்கு ராசியாதிபதி குரு பகவான் 5 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்களில் தடைவிலகி தடபுடலாக நடந்தேறும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலம் உண்டு. செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் சிறப்பாக அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள்.

உத்திரட்டாதி

     பேச்சில் வேகம் இருந்தாலும் எப்பொழுதும் உண்மையே பேசுக்  கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ராசியாதிபதி குரு 5 இல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.  கடன்கள் குறையும் கணவன் மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் உண்டாகாது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும்.

ரேவதி

     எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு ராசியாதிபதி குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். வம்பு வழக்குகளில் சாதகமான பலன் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமானப் பதவி உயர்வுகளைப் பெற முடியும். பயணங்களாலும் அனுகூலங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்   1,2,3,9,10,11,12
கிழமை   வியாழன், ஞாயிறு
திசை   வடகிழக்கு 
நிறம்   மஞ்சள், சிவப்பு
கல்   புஷ்ப ராகம்
தெய்வம்   தட்சிணாமூர்த்தி

பரிகாரம்

     மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 21.06.2014 முதல் ஜென்ம ராசியில் கேதுவும்,  7 இல் ராகுவும் சஞ்சாரம் செய்ய விருப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்யுவும். 16.12.2014 வரை அஷ்டம ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கவுள்ளதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள் எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது, தினமும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

For your consultation
Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person who is will to sent money by western union money transfer or by money gram details are as follows as

R.Balamurugan,S/O Murugu Rajendran,No 33 Palani andavar koil street,Vadapalani Chennai -600026,South India. Cell 9841771188/7200163001