Sunday, June 1, 2014

இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014- 2016 தனுசு ;


இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014- 2016 தனுசு ;  
மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்

காணத்தவறாதீர், காணத்தவறாதீர், காணத்தவறாதீர்

விஜய் டிவியில் குரு பெயர்ச்சி பலன்கள்


13.06.2014 வெள்ளிக்கிழமை அன்று 

விஜய் டிவியில் காலை 6.30 மணி முதல் 7.15 மணி வரை 
12 இராசிகளுக்கு குரு பெயர்ச்சி பலன்கள் 
பற்றிய எனது சிறப்பு நிகழ்ச்சியை காணத்தவறாதீர்
இப்படிக்கு


ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்


முனைவர் பட்ட ஆய்வாளர்
எண் 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, 
வடபழனி, சென்னை - 600 026
செல் 0091 - 7200163001.9383763001,9841771188

செய்த நன்றியை மறவாத குணமும் நல்ல மனவலிமையும், வைராக்கியமும் கொண்டவராகவும் விளங்கும் தனுசு ராசி அன்பர்களே! சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 10ஆம் வீட்டிலும் கேது 4ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறிவிட முடியாது என்பதால் எதிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படவும். பணவரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் உண்டாகும். 16.12.2014 வரை சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து முன்னேறக் கூடிய ஆற்றலை பெறுவீர்கள். அதன் பின்னர் ஏழரை சனியில் விரய சனி நடைபெறவுள்ளதால் எதிர்பாராத வீண் விரயங்கள், குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் 05.07.2015 முதல் குரு பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுதலாக விருப்பதால் மண வயதை அடைந்தவர்களுக்கு மணமாகும். அழகிய புத்திர பாக்கியமும் அமையும். பொன் பொருள் சேரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் எதிலும் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களையும் பெறுவீர்கள்.

உடல் நிலை
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களால் மனநிம்மதி குறையும். எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபடமுடியாத நிலை உண்டாகும். சுக வாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்படையும். உணவு விஷயத்தில் கவனம் தேவை.

குடும்பம் குழந்தை
கணவன் மனைவியிடையே ஒரளவுக்கு ஒற்றுமை நிலவினாலும், உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகளால் குடும்பத்தில் நிம்மதி குறையும். வீடு, மனை, வண்டி வாகனங்களால் வீண் விரயங்களை எதிர் கொள்வீர்கள். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் பிறருக்கு பிரச்சனைகளை உண்டாக்கும்.

கொடுக்கல் வாங்கல்
பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது  வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்ற இழுபறியான நிலை நீடிக்கும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலையே இருக்கும். வேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும், பயணங்களால் சற்று அலைச்சல்களும் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தாகளுக்கு
பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சற்று தாமத நிலை உண்டாகும். வரவேண்டிய நிலுவை தொகைகளும் கைக்கு வந்து சேருவதில் இழுபறி நிலை நீடிக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க நேரிடும்.

பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன் கிடைப்பதில் தாமத நிலை ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு
மக்களின் ஆதரவைப் பெற சற்று அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருப்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். மக்களுக்காக கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும்.

விவசாயிகளுக்கு
பட்ட பாட்டிற்கான பலனை பெற முடியாத அளவுக்கு பயிர்களின் விளைச்சல் சுமாரகத்தானிருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளில் தலையீடு செய்யாமல் பங்காளிகளை அனுசரித்து செல்லவும்.

கலைஞர்களுக்கு
கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படவும். கடன்கள் படிப்படியாக குறையும்.

மாணவ மாணவியர்களுக்கு
கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலங்களாகும். தேவையற்ற நட்புகள் உங்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றி விடக் கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதமடையும். பயணங்களில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

ராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை
ராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 10ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 4ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். பண வரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைளை ஈடுபடுத்தாமலிருந்தால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப் பட்ட பாதிப்புகள், அஜீரண கோளாறு போன்றவை உண்டாகும். சனி பகவான் லாபஸ்தானமான 11&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொண்டு வெற்றி பெறக் கூடிய ஆற்றல் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபத்தினைப் பெற முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிப் படுத்தி அதற்கேற்ற பாராட்டுதல்களையும் பெறுவார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை.

ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 10ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 4ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். சுக வாழ்வு பாதிப்படையும். குருவும் 8இல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்திலுள்ளவர்களும் நலமாக அமைய மாட்டார்கள். மண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்படும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சனையை உண்டாக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் ஏற்படும் என்றாலும் சனி 16.12.2014 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றத்தை பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.

ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 10ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 4ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் தொழில் வியாபார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. பணவரவுகள் ஒரளவுக்கு திருப்தியளிப்பதாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகளும் பூர்த்தியாகும். ஏழரை சனியில் விரயச் சனி தொடங்கியுள்ளதால் எதிர்பாரத வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. மண வயதை அடைந்தவர்கள் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களால் வீண் வம்பு வழக்குகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.

ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்திலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமானப் பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் சிந்தித்து செயல்படவும். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. ஏழரைசனியில் விரய சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். சுக வாழ்வு பாதிப்படையும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொண்டாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதினால் செய்யும் பணிக்கேற்ற பாராட்டுதல்களை பெற முடியும்.

ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 10ஆம் வீட்டிலும், கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் 4ம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். பொன்,பொருள் சேரும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்று முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்களும் கைகூடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்ட முதலீட்டினை விட இரு மடங்கு லாபத்தினை பெற முடியும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெற முடியும்.

மூலம்
எந்த பிரச்சனைகளையும் தைரியமுடன் எதிர் கொள்ளும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடைகளுக்குப் பின் வெற்றியினை பெறுவீர்கள். வீடு மனை வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைளை தவிர்க்கவும்.

பூராடம்
கனிவான பார்வையால் அனைவரையும் தன் வசப்படுத்தும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

உத்திராடம்&1ம் பாதம்
சமூக நலனில் அதிக அக்கறை கொண்ட உங்களுக்கு பண வரவுகளில் திருப்தியான நிலையே நிலவும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகை வீண் பிரச்சனைகளை உண்டாக்கும். எதிர்பாராத உதவிகள் கிட்டும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் வீண் பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்        1,2,3,9,10,11, 12
கிழமை      வியாழன், திங்கள்
திசை   வடகிழக்கு
நிறம்    மஞ்சள், பச்சை
கல்     புஷ்ப ராகம்
தெய்வம்   தட்சிணா மூர்த்தி

பரிகாரம்
கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 4 லும் ராகு 10 லும் சஞ்சரிப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது, சர்ப சாந்தி செய்வது நல்லது. 16.12.2014 முதல் உங்களுக்கு ஏழரை சனியில் விரய சனி தொடங்கவுள்ளதால் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை தொடர்ந்து வழிபடவும். 05.07.2015 வரை குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்திக்கு பரிகாரம் செய்யவும்.



For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.

Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078

No comments: