முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின்
சாா்பில் நடைபெறவுள்ள
சனி பெயா்ச்சி யாகம்
தடுக்கப்பட வேண்டிய தற்கொலைகள்
பெற்றோர் படைத்த உயிரை மாய்த்துக் கொள்ள யாருக்கும் உரிமை இல்லை. அதற்கு சட்டமும் அனுமதிக்கவில்லை. இருந்தும் உலகம் முழுவதும் ஆயிரக் கணக்கானோர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் சிலர் தங்களது வாழ்க்கையை தாங்களாகவே முடித்துக் கொள்கிறார்கள். இயற்கை மரணமாக இல்லாமல் அவர்களது வாழ்க்கையை அவர்களே செயற்கையாக முடித்துக் கொள்கிறார்கள்.
குறிப்பாக சந்தர்ப்ப சூழ்நிலையாலும் நெருங்கியவர்கள் செய்யும் கொடுமைகளை தாங்க முடியாததாலும் தங்களை தாங்களாகவே தற்கொலை மூலம் மாய்த்துக் கொள்கிறார்கள். சில இடத்தில் வரதட்சணை கொடுமையால் கூட தற்கொலைகள் ஏற்படுகிறது.
தற்கொலை மரணம் என்பது ஒரு தைரியம் இழந்த நிலையில் ஏற்படும் ஒரு சம்பவமாகும். வாழ வேண்டும் என்ற எண்ணம் பொதுவாக ஒருவருக்கு இயற்கையாகவே இருக்க வேண்டும். ஏதாவது ஒரு செயற்கை செயலால் உடலில் வலுவான காயங்கள் ஏற்பட்டு அதுவே மரணமாகி விடுகிறது. தற்கொலை செய்யும் சூழ்நிலை யாருக்கு ஏற்படுகிறது என்பதனை இங்கு தெளிவாக பார்ப்போம்.
ஜோதிட ரீதியாக ஆராய்கின்ற போது ஜென்ம லக்னமானது ஒருவரின் உடல் அமைப்பு ஆகும். 3ம் வீடு தைரியம் வலது கை ஆகும். 11ம் வீடு இடது கையும் அதன் செயல்பாடுகளும் ஆகும். 10ம் வீடு ஒருவரின் கர்ம ஸ்தானமாகும். தற்கொலையில் ஒருவரின் சுயமாகச் செய்யும் செயல்களே முக்கிய பங்கு வகிக்கின்றது. மேற்கூறிய ஸ்தானங்களின் அதிபதிகளின் சேர்க்கையானது 1,8ல் அமையப் பெற்று சூரியன் சனி ராகு போன்ற பாவ கிரகங்களின் ஆதிக்கம் வலுப் பெற்று பாவ கிரகங்களின் திசா புக்தி நடைபெற்றால் தற்கொலை செய்யும் சூழ்நிலை உண்டாகும்.
8 ம் வீடு ஆயுள் ஆரோக்கிய ஸ்தானமாகும். 1,8க்கு அதிபதிகள் பலமிழந்து பாவ கிரகங்களான சூரியன் செவ்வாய், சனி, ராகு போன்ற பாவிகளின் பார்வை மற்றும் சேர்க்கை பெற்றிருந்தாலும், 12ம் வீட்டில் அமையப் பெற்றாலும் தற்கொலை போன்ற அசம்பாவித சம்பவம் நடைபெறும். அது போல பாவ கிரகங்களின் சேர்க்கை 3,11ல் அமையப்பெற்றாலும் அவர்களின் செயல்பாடுகளே கெடுதலை தரும். குறிப்பாக 3,8க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று பாவ கிரகங்களின் தொடர்பு ஏற்பட்டால் தற்கொலை செய்ய நேரிடுகிறது.
4,10ல் அல்லது 5,9ல் பாவ கிரகங்கள் அமையப் பெற்று 8ல் செவ்வாய் அமைந்தாலும், 8ம் அதிபதி செவ்வாய் சேர்க்கை பெற்றாலும். சந்திரனுக்கு 5,9ல் பாவ கிரகங்கள் அமையப் பெற்று பாவ கிரக பார்வையும் உண்டாகி 8ம் வீட்டில் சர்ப கிரகங்கள் அமையப் பெற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்யக் கூடிய சூழ்நிலை உண்டாகும்.
ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் தேய்பிறை சந்திரனாகி சனி செவ்வாய் ராகு போன்ற கொடிய பாவ கிரக சேர்க்கை பெற்று 8ம் வீட்டில் அமையப் பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால் அந்த ஜாதகர் நெருப்பாலோ தண்ணீர் மூலமாகவோ தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலையை உண்டாக்கிக் கொள்வார்.
சந்திரன் சனி ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று 6,8,12ல் அமையப் பெற்றால் அந்த ஜாதகருக்கு செயற்கை மரணம் உண்டாகும்.
சந்திரனானவர் சனி செவ்வாயின் வீட்டில் அமைந்து பாவ கிரகங்களால் சூழப்பட்டிருந்தால் செயற்கை மரணம் தற்கொலை செய்யும் சூழ்நிலை உண்டாகும்.
சந்திரன்,ராகுவிற்கு பரிகாரம் செய்வது தியானம் நல்லது.
Contact
For your consultation
Please send Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of
MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) &
5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
No comments:
Post a Comment