Monday, November 17, 2014

சனி பெயர்ச்சி பலன்கள் கும்பம்: 2014 -2017



காணத்தவறாதீர், காணத்தவறாதீர், காணத்தவறாதீர்

விஜய் டிவியில் இந்த நாள் (தினப் பலன்கள்)

 வரும் 24.11.2014 திங்கட்கிழமை முதல் 
( திங்கள் முதல் வெள்ளி வரை ) 
விஜய் டிவியில் காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை
 12 இராசிகளுக்கும் தினப்பலன் நிகழ்ச்சியான
இந்த நாள் என்ற புதிய நிகழ்ச்சியினை 
காணத்தவறாதீர்

இப்படிக்கு


ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்




முருகு சோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும் 


சனி பெயா்ச்சி யாக அழைப்பிதழ்

சனி பெயர்ச்சி பலன்கள் 
கும்பம்: 2014 -2017


கும்பம்: அவிட்டம் 1.2.  சதயம். பூரட்டாதி 123

எடுக்கும் எந்தவொரு காரியங்களிலும் அதன் சாதகப் பலனை ஆராய்ந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே  உங்கள் இராசியாதிபதி சனிபகவான் வரும் 16.12.2014 முதல் 19.12.2017 வரை ஜீவன ஸ்தானமான 10 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். சனி கோட்சாரரீதியாக 10 இல் சஞ்சாரம் செய்வதால் தொழில், உத்தியோக ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் பிரச்சனைகள் ஏற்படும் என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை ஏற்படுத்த மாட்டார். எதிலும் சற்று சிந்தித்து நிதானமுடன் செயல் பட்டால் நற்பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து  நடந்து கொண்டால் வேலைப் பளு குறைவதுடன், தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் அமையும். சிலருக்கு பணி நிமிர்த்தம் காரணமாக எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை பிரியக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடின்றிச் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது பெரிய முதலீடுகளை சற்று தவிர்ப்பது நல்லது.
சனி 10 ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 05.07.2015 வரை ருண, ரோக ஸ்தானமான 6 ஆம் வீட்டில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, தேவையற்ற வம்பு வழக்குகள், மறைமுக  எதிர்ப்புகள் யாவும் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு சமசப்தம  ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் நற்பலன் அடைய முடியும். 02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு  அஷ்டம ஸ்தானமான 8 ஆம் வீட்டில்    சஞ்சாரம் செய்யவிருப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டு உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்பினை எதிர் கொள்வீர்கள்.; 02.09.2017 முதல் 04.10.2018 வரை குரு பாக்கிய ஸ்தானமான 9 இல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக அமையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும்.

தேக ஆரோக்கியம்
     உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளுக்குப் பின் உடனடியாக சரியாகும். குடும்பத்திலுள்ளவர்கள் நலமாக இருப்பார்கள். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். முடிந்த வரை பேச்சில் நிதானத்தைக் கடைபிடித்து அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.

குடும்பம் பொருளாதாரம் 
     கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அன்யோன்னியம் அதிகரிக்கும். அழகான புத்திர பாக்கியமும் அமையும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகாது. பொன் பொருள் சேர்க்கைகளும் தாராளமாக அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலப் பலனை அடையலாம். பதிய வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சிடன் வாழ்வார்கள். குலதெய்வ வழிபாடுகள் மேற்கொள்வதற்காக குடும்பத்தோடு பயணங்கள் செய்வீர்கள். கடன்களும் படிப்படியாகக் குறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
     சனி பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், அவர் உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களைச் செய்ய மாட்டார் செய்யும் பணியில் சில பிரச்சனைகளைச் சந்திப்பீர்கள். பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்ந்து தண்டனையை அனுபவீப்பீர்கள். வேலைப் பளு அதிகரிப்பதால் பணிக்கு அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரியக் கூடிய சூழ்நிலையும் ஏற்படும். மனநிம்மதி குறையும்.

தொழில் வியாபாரம்
     தொழில் வியாபாரம் செய்பவர்கள் என்ன தான் பாடுபட்டாலும் அதற்கேற்ற முழுப் பலனை அடைய முடியாது. கைக்கு எட்டிய வாய்ப்புகளையும் போட்டியாளர்கள் கண் எதிரேயே தட்டிச் செல்வார்கள். தூக்கத்தில் கூட கவனமுடன் இருக்க வேண்டியிருக்கும். உடனிருக்கும் கூட்டாளிகளே நம்பிக்கை துரோகம் செய்வார்கள். தொழிலாளர்களும் சமயம் பார்த்து சம்பள உயர்வு கேட்டு போர்க் கொடி தூக்குவார்கள். திடீரென தொழில் செய்யும் கருவிகள் பழுதாவதால் வீண் விரயங்கள் ஏற்படுவதோடு வந்த வாய்ப்புகளையும் குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியாத நிலை ஏற்படலாம்.

பெண்களுக்கு
     உடல் ஆரோக்கியம் நன்றாக அமையும். பணவரவுகளும் பஞ்சமின்றி இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் ப+ர்த்தி செய்வீர்கள். பொன் பொருள் சேரும். குருபலம் இருக்கும் போது திருமண சுப காரியங்கள் கைகூடுவதுடன் புத்திர பாக்கியமும் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். பணிபுரியும் பெண்களுக்கு சற்று வேலைப் பளு அதிகரிப்பதுடன் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதமடையும்.

கொடுக்கல் வாங்கல்
     பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலிலும் ஏற்றத் தாழ்வான நிலையே இருக்கும். கொடுத்த கடன்கள் வீடு தேடி வரும் என்றாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். முன் ஜாமீன் கொடுப்பதினால் வீண் சிக்கலில் சிக்குவீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் சுமாரான லாபம் கிட்டும்.

அரசியலவாதிகளுக்கு
     கட்சி விட்டுக் கட்சி மாறக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். மக்களின் ஆதரவைப் பெற அதிக பாடுபட வேண்டி வரும். உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறுவதால் எந்தவொரு காரியத்திலும் தீர்மானமான ஒரு முடிவை எடுக்க முடியாது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற கையை விட்டு செலவுகள் செய்யக் கூடிய சூழ்நிலை உண்டாகும். சேமிப்பும் குறையும்.

விவசாயிகளுக்கு
     பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் புழு ப+ச்சிகளின் தொல்லைகளால் உழைப்பு இரட்டிப்பாகும். அதிக செலவுகள் செய்து உரம் போட்டு பயிர்களைக் காப்பாற்ற வேண்டியிருக்கும். அரசு வழியில் உண்டாகக் கூடிய நெருக்கடிகளால் கடனுதவிகளும் தாமதப்படும். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் வீண்  வம்பு வழக்குகளும் ஏற்படும். கால்நடைகளால் ஒரளவுக்கு லாபம் கிட்டும்.

படிப்பு
     கல்வியில் மந்த நிலை உண்டாகக் கூடிய காலம் என்பதால் மற்ற பொழுது போக்குகளில் கவனத்தை செலுத்துவதைத் தவிர்த்து முழு முயற்சியுடன் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. கல்விக்காக அரசு வழியில் ஆதாய பலன்கள் கிடைத்தாலும், நடுவில் இருப்பவர்களின் கெடுபிடிகளால் கைக்கு வந்து சேருவதில் காலதாமதம் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.

ஸ்பெகுலேஷன்: லாட்டரி.ரேஸ். ஷேர் போன்றவற்றில் குரு சாதகமாக இருக்கும் காலங்களில் ஓரளவுக்கு லாபத்தைப் பெற முடியும். 

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
உங்கள் இராசிக்கு தன, லாப ஸ்தானாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 10 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 6 இல் குரு வக்ர கதியில்  சஞ்சரிப்பதால்; இக்காலங்களில்;; பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படாது. பணம் கொடுக்கல் வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்காமலிருப்பது நல்லது. உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டி வரும். புத்திரர்களால் மன சஞ்சலம், தேவையற்ற செலவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களிடம் வீண் விரோதம் உண்டாகும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க வேண்டி இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகள் தடைபடும். தொழில் வியாபார நிலையில் அதிகமான போட்டி பொறாமைகளும் லாபம் இல்லாத நிலையும் உண்டாகும். கூட்டாளிகளிடமும் கருத்து வேறுபட்டால் பிரிவினைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உடல் நல குறைவுகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடுவதால் அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாக நேரிடும். எனவே எதை செய்வதனாலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகளின் பதவிக்கு ஆபத்து உண்டாகும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
தனது நட்சத்திரத்தில் சனி ஜீவன ஸ்தானமான  10 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 6 இல் குரு வக்ர கதியில் இருப்பதால் எதையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுத்தினால் முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் நிலவினாலும் இறுதியில் வெற்றியையே பெறுவீர்கள். உடல் நலத்தில் சிறுசிறு மருத்துவ செலவுகள் மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. உற்றார் உறவினர்களிடமும் உறவு சமூக நிலையில் இருக்கும். பொருளாதார சிக்கல்கள் விலகி ஓரளவு திருப்தியான தனவரவு இருக்கும். கடன் குறையும். தொழில் வியாபார நிலையில் போட்டி பொறாமைகள்; ஏற்பட்டாலும் ஓரளவு லாபம் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு குறைவான வேiலை கிடைத்தாலும் மன திருப்தி உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்த்துவிடுவது நல்லது. அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப் பெற அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்கள் முயன்று படிப்பது உத்தமம். 2 இல் கேதுவும், 8 இல் இராகுவும் இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்களால் ஒற்றுமை குறையும்.

சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
தொழில் உத்தியோக ஸ்தானமான 10 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில்;  சஞ்சரிப்பது சாதகமான அமைப்பாகும். கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக விலகி முன்னேற்றங்களை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் முழு பலனை அடையாவிட்டாலும் சுமாரான அனுகூலத்தை அடைய முடியும். சுபசெய்திகள் கிடைக்கும். சுப செலவுகளும் உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடன் பிறப்புகளாலும் ஆதரவு கிடைக்கும். குடும்பத்திலும் குழப்பங்கள் விலகி நிம்மதி உண்டாகும். வீடுமனை வாங்கும் முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்பார்த்த அனுகூலம் அமையும். பொருளாதார நிலையும் படிப்படியான மேன்மையை அடையும்.  தொழில் வியாபார ரீதியாக பல பிரச்சினைகளை எதிர் கொண்டாலும் படிப்படியான முன்னேற்றங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எதையும் சற்று யோசித்து எச்சரிக்கையுடன் செயல்படுத்தினால் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் இராசிக்கு  10 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில்  பின்னோக்கி 9 இல் சஞ்சரிக்க இருப்பதும் குரு 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும்  அற்புதமான அமைப்பாகும்.பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. பொன் பொருள் சேரும். சுபகாரியங்களும் கைகூடி  மகிழ்ச்சி தரும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும்; எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க பெறும். நண்பர்கள் சற்று ஆதரவாக இருப்பார்கள். குருபகவான் சற்று சாதகமாக இருப்பதால் கடன்கள் குறையும்.  உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரனையாக நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்துக் கொள்ளலாம். அதிகாரிகளின் ஆதரவு மகிழச்சியினை உண்டாக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று முன்னேற்றப் பலன்கள் உண்டாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவதும் நல்லது. கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும் தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது  ஆரோக்கியத்திற்கு நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முடியும்.

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை
உங்கள் இராசிக்கு 2,11 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 10 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குருபகவான் சமசப்தம ஸ்தானமான 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் கடந்த கால சோதனைகள் யாவும் மறைந்து மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி தரும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகளும் சிறப்பாக இருப்பதால் கடன்களும் படிப்படியாக குறையும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகக் கூடிய வாய்ப்புகளும் அமையும். பொருளாதார மேம்பாடுகளால் பொன் பொருள் சேரும். கடன்களும் படிப்படியாகக் குறையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளும் தடபுடலாக நிறைவேறும். சிலருக்கு வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்கக் கூடிய யோகமும் அமையும். நினைத்த காரியங்கள் யாவற்றையும் நிறைவேற்றி காட்டுவீகள். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். வெளிவட்டார தொடர்புகளால் பெயர் புகழ் கூடும். தொழில் வியாபாரத்திலிருந்த பிரச்சினைகள் விலகி லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களும் தங்கள் திறமைக்கேற்ற உயர்வுகளைப் பெற முடியும். வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் அமையும

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 10 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு  7 ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார ரீதியாக முன்னேற்றமே உண்டாகும். குடும்பத்திலும் ஒற்றுமை உண்டாகும். எதிலும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதால் உறவினர்களிடம் நல்லப் பெயரை எடுத்துவிட முடியும். உத்தியோக ரீதியாக வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். கொடுக்கல் வாங்கலிலும் சரளநிலை இருந்தாலும் முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்த்து விடுதல் உத்தமம். உடல் நிலையில் சிறுசிறுப் பிரச்சினைகளை சந்தித்தாலும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் வியாபாரத்தில் நல்ல லாபம், கூட்டாளிகளால் அனுகூலம் போன்ற நற்பலன்கள் உண்டாகும். கலைஞர்கள் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் அடைவார்கள். பொருளாதார நிலையும் உயர்வாகவே அமையும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களும் பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவையும் பெறுவார்கள்;. உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும்;. பொன் பொருள் சேரும். சேமிக்கவும் முடியும

சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
உங்கள் இராசிக்கு 10 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில்; வக்ர கதியில் சஞ்சரித்தாலும் குரு 7 இல் சஞ்சரிப்பதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் யாவும் கைகூடி மகிழ்ச்சி தரும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் உண்டு. உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பலப்படும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கும் லாபமும் அபிவிருத்தியும் பெருகும்.இக்காலங்களில் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். தனவரவுகள் திருப்திகரமாக அமையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது;. புத்திரர்களால் சில மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். மாணவர்கள் அதிக முயற்சிகளை மேற்கொண்டால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமாக செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் தங்கள் கடமைகளில் தவறாது நடந்து கொள்வது முன்னேற்ற பலன்களை கொடுக்கும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
தொழில் உத்தியோக  ஸ்தானமான 10 இல்; சனியும்  ஜென்ம இராசியில் கேது, 7 இல் இராகு, 8 இல் குருவும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும்;. இதனால்உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டி வரும். பொருளாதாரம் ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் குழப்பங்கள் உண்டாகும். நெருங்கியவர்களால் மனசஞ்சலம் தரக்கூடிய சம்பவங்களும் நடை பெறும். எடுத்த காரியங்கள் யாவும் தடைபடும். உத்தியோக நிலையில் நெருக்கடிகள் சோதனைகள் உண்டாகும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகளும் தொழிலாளர்களிடையே ஒற்றுமை குறைவும் உண்டாகும். புதிய முதலீடுகளில் பெரிய அளவில் விரிவுபடுத்தும் செயல்களால் வீண் விரயம் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகள் தடைபடும். எதிரிகளின் தொல்லைகள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் அவமானப்பட கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். பிறருக்கு உதவி செய்வதாக தரும் வாக்குறுதியை தவிர்க்கவும்.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசிக்கு 5,8 இக்கு அதிபதியான புதன் சாரத்தில் 10 இல் சனியும், 8 இல் குருவும் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பொருளாதார நிலை சுபிட்சமாகவே அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை நிலவினாலும் தேக்கம் அடையாது. நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல பலனை அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவ பதவிகளால் கூடுதல் பொறுப்புகளும் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். என்றாலும ;தேவையற்ற மறைமுக எதிர்ப்புகளும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களும் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவை பெற முடியும்.  ஜென்ம இராசியில் கேது, 7 இல் இராகு சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவி இருவரும் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்புது நல்லது.

சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் இராசிக்கு 10 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் ஜென்ம இராசியில் கேது, 7 இல் இராகு, 8 இல் குரு  சஞ்சரிப்பதாலும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் அதிகரிக்கும்.;. உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்திலும் ஒற்றுமையற்ற சூழ் நிலைகளே நிலவும். உங்களின் பேச்சிற்கு மரியாதை இருக்காது. உற்றார் உறவினர்களும் சாதகமின்றி செயல்படுவார்கள். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதால் உங்கள் கௌரவத்தை இழக்ககூடிய நிலை உண்டாகும். பிறருக்கு எவ்வளவு தான் நல்லது செய்தாலும் நன்றியை மற்ந்துவிடுவார்கள். எதிரிகளின் பலம் அதிகரித்து உங்கள் பலம் குறையும் காலமாகும். அது மட்டுமின்றி உங்களுக்கு அஷ்டம் சனியும் தொடருவதால் தொழில் வியாபாரத்தில் போட்டிகளும், வீண் சண்டை சச்சரவுகளும் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் மன அமைதி குறைய கூடிய சம்பவங்கள் நடைபெறும் அமைப்பு போன்றவை ஏற்படும். தெய்வ வழிபாடுகள் மேற்கொள்வது மனநிம்மதியை தரும்.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
சனி தனக்கு நட்பு கிரகமான புதனின் நட்சத்திரத்தில் 10 இல்  சஞ்சரிக்கும் இக்காலத்தில் உடல் ரீதியாக சில உபாதைகள் ஏற்படும் என்றாலும் பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் 02.09.2017 முதல்  பாக்கிய ஸ்தானமான 9 இல் சாதகமாக சஞ்சரிப்பதால் பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றியை தரும். தொழில் வியாபாரத்தில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கப்பெறும். பெரியோர்களின் ஆசியும், ஆதரவும் அனுகூலத்தை உண்டாக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பொருளாதார நிலையும் சற்று மேன்மையாகவே அமையும். புத்திர வழியில் சுப செலவுகள் உண்டாகும். உறவினர் வருகையும் மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட உயர்வுகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் சாதகப்பலன் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை விலகி நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.

அவிட்டம் 3.4ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
     இலக்கிய மனமும், சொல்லாற்றலும், எழுத்தாற்றலும் கொண்டவர்களாக விளங்கும் உங்களுக்கு, சனி பகவான் ஜீவன ஸ்தானமான 10 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சுப காரியங்களும் தடபுடலாக நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும்.

சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
     எதிலும் சுயமாகவும், தனித்தமையுடனும் செயல்படும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையும், கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், உற்றார் உறவினர்களால் நல்ல ஆதரவும் உண்டாகும் என்றாலும் சனி ஜீவன ஸ்தானமான 10 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு வீண் பழிச் சொற்கள் உண்டாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க நேரிடும். உடன் பணிபுரிபவர்களை மிகவும் அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளதிருப்பது நல்லது.

ப+ரட்டாதி 1.2.3ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
     இசை ஆர்வமும், இலக்கியத்தில் நல்ல ஈடுபாடும் கொண்ட உங்களுக்கு பணவரவுகள் ஏற்று இறக்கமாக அமையும். கொடுக்கல் வாங்கலில் நிதானமாகச் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் திருமண வயதை எட்டியவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதியில்லை. சனி ஜீவன ஸ்தானமான 10 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சிகளில் இடைய+றுகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும் வேலைப் பளு அதிகரிக்கும்.

அதிர்ஷ்டம் தருபவை

தேதி : 4.5.6.7.8
கிழமை     : சனி. வெள்ளி
நிறம் : பச்சை. வெள்ளை
கல் : நீலக்கல்
திசை : மேற்கு
தெய்வம் : ஐயப்பன்

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,

https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

No comments: