முருகு சோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்
சனி பெயா்ச்சி யாக அழைப்பிதழ்
சனி பெயா்ச்சி யாக அழைப்பிதழ்
ஆண்டு பலன்கள் - 2015 மிதுனம்
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
பிறரை எளிதில் வசப்படுத்தக்கூடிய பேச்சாற்றலும் தெய்வ பக்தியும் கொண்ட மிதுன ராசி நேயர்களே! இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். இந்த ஆண்டு நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உற்றார்- உறவினர்களின் உபசரணை உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர். சிறப்பான புத்திர பாக்கியத்தையும் பெறுவர். பூர்வீகச் சொத்து வழியிலிருந்த பிரச்சினைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கல் யாவும் லாபம் தரும். எதிரிகள்கூட நண்பர்களாக மாறுவார்கள். பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கை, புதிய வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றிபல பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெற்று சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் கிட்டும். சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 4-லும், கேது 10-லும் சஞ்சரிப்பதால், தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சியால் குரு பகவான் 3-ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் பண விஷயத்தில் கவனமுடனிருப்பதும், தேவையற்ற விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது.
உடல் ஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியமானது அற்புதமாக இருக்கும். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் தங்குதடையின்றிச் செயல்பட்டு நல்ல அனுகூலத்தைப் பெறுவீர்கள். மனைவி, பிள்ளைகளும் சுபிட்சமாக இருப்பார்கள். இதுவரை நீண்ட நாட்களாக தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை மேற் கொண்டிருப்பவர்களுக்கும் உடல்ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக் குறையும். உற்றார்- உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைவதால் பிரிந்தவர்களும் தேடிவந்து நட்பு பாராட்டுவார்கள். உடல் நிலையும் மனநிலையும் மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையும்.
குடும்பம், பொருளாதார நிலை
இந்த வருடம் முழுவதும் குடும்பச் சூழ்நிலையானது மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சனி 6-ல் சஞ்சரிப்பதாலும் குரு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறை வேறும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். சிறப்பான புத்திர பாக்கி யமும் அமையும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கைகூடும். பண வரவுகள் தாராளமாக அமைவதால் வீடு, மனை, வாகனம் போன்றவை வாங்கும் யோகமும் அமையும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். வரும் ஜூலை 5-ஆம் தேதி குரு 3-ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் பண விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் உயர்வடையும் காலமிது என்று சொன்னால் அது மிகையாகாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, கௌரவமான உயர்பதவிகள், பலரை வழிநடத்தும் நிர்வாகத்திறன் போன்றவை சிறப்பாக அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைப் பளுவை குறைத்துக்கொள்ள முடியும். செய்யும் பணி யாவற்றிலும் உங்கள் திறமைகள் பளிச்சிடும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். பயணங்களால் மறக்கமுடியாத இனிய சம்பவங்கள் நடைபெறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி அமையும். சமுதாயத்தில் பெயர், புகழ் யாவும் உயரும்.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிட்டும். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி கிட்டும். புதிய கிளைகளை உருவாக்கும் நோக்கம், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கம் போன்ற யாவும் நிறைவேறும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடும், தொழிலாளர்களின் ஆதரவும் மேலும் மேலும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச்செல்லும். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றாலும் அனுகூலம் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய புதிய வாய்ப்புகள் தேடிவருவதால் லாபமும் பெருகும்.
பெண்களுக்கு
உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை சிறப்பாக அமையும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். பகைமை பாராட்டிய உறவினர்களும் தேடிவந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். பண வரவுகளும் தாராளமாக அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம் போன்றவை சிறப்பாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். கடன்கள் குறையும். பணிபுரியும் பெண்களுக்கு நல்ல கௌரவமான பதவியும் அமையும். ஊதிய உயர்வு கிட்டும்.
கொடுக்கல்- வாங்கல்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தன காரகன் குரு பகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றிலும் சிறப்பான லாபம் அமையும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்த முடியும் என்றாலும், குரு மாற்றத்திற்குப் பின் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பதும், பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பதும் நல்லது. வீண் வம்பு வழக்கு ஏற்பட்டாலும் எதையும் எதிர் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு
அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு ஒரு பொன்னான ஆண்டாக இருக்கும். நினைத்த காரியங்களை நினைத்தபடி நிறைவேற்றுவீர்கள். மக்களின் ஆதரவால் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு உயரும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய அளவுக்கு உங்களின் பலமும் வலிமையும் கூடும். பொருளாதார நிலையும் உயரும்.
விவசாயிகளுக்கு
விவசாயிகள் விளைச்சலை இரட்டிப்பாகப் பெறுவார்கள். சந்தையில் உங்களின் விளைபொருளுக்கேற்ற விலையும் சிறப்பாகக் கிடைக்கும். எதிர்பாராத அரசாங்க உதவிகளால் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் புதிய பூமி, மனை வாங்கும் யோகம், புதிய பம்ப் செட்டுகள் அமைக்கும் வாய்ப்பு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும் ஆண்டாக இருக்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தாராள தனவரவுகளும் உண்டாவதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வுக்குப் பஞ்சம் இருக்காது. ஆடம்பர கார், பங்களா போன்றவை வாங்கும் யோகம் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். நடித்த படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும்.
மாணவ- மாணவியருக்கு
கல்வியில் சிறப்பான மேன்மை அமையும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் பாராட்டுதல்களும் உங்களுக்கு மேலும் மேலும் உற்சாகத்தைத் தரும். நல்ல நட்பும் மூலம் நற்பலனை அடைவீர்கள். விளை யாட்டு போட்டிகளிலும் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கமே வீசும்.
மாதப் பலன்கள்
ஜனவரி
ஜென்ம ராசிக்கு 6-ல் சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் மாத பிற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிக்க உள்ளதால் உடல் ஆராக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்களும் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில், வியாபாரத்திலும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் உயர்வுகளைப் பெறமுடியும். கடன்கள் நிவர்த்தியாகும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 20-01-2015 காலை 08.57 மணி முதல் 22-01-2015 காலை 08.49 மணி வரை.
பிப்ரவரி
ஜென்ம ராசிக்கு 2-ல் குருவும் 6-ல் சனியும் சஞ்சரிப்பது அற்புதமான நற்பலன்களை அள்ளித் தரும் அமைப்பாகும். உங்களுக்கு கைநிறைய சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் கிட்டும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் வலிமையும் கூடும். 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். சிவ வழிபாடு, பிரதோஷ வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 16-02-2015 இரவு 08.05மணி முதல் 18-02-2015 இரவு 07.57 மணி வரை.
மார்ச்
6-ல் சனியும் 10-ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரரீதியாக லாபங்களை அடையமுடியும். பண வரவுகள் சரளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகிட்டும். குடும்பத்தில் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளால் லாபம் அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிரிபார்த்துக் காத்திருந்த இடமாற்றங்கள் தடையின்றிக் கிடைக்கும் கடன்கள் படிப்படியாகக் குறையும். குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.
சந்திராஷ்டமம்: 16-03-2015 காலை 05.47 மணி முதல் 18-03-2015 காலை 06.58 மணி வரை.
ஏப்ரல்
ராசிக்கு 6-ல் சனி, 10, 11-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் அமையும். எதிர்பாராத திடீர் உயர்வுகளும் உத்தியோகஸ்தர்களுக்கு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 12-04-2015 பகல் 12.57 மணி முதல் 14-04-2015 பகல் 03.52 மணி வரை.
மே
தன ஸ்தானமான 2-ல் குருவும் லாப ஸ்தானமான 11-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் சிறப்பான வரன்கள் தேடிவரும். தொழில், வியாபாரத்திலும் லாபம் பல மடங்கு பெருகும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 09-05-2015 மாலை 06.30 மணி முதல் 11-05-2015 இரவு 10.18 மணி வரை.
ஜூன்
6-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலும், 12-ல் சூரியன், செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். என்றாலும் 2-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். நெருங்கியவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்கநேரிடும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கவேண்டிய லாபம் தடையின்றிக் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 05-06-2015 இரவு 12.18 மணி முதல் 08-06-2015 அதிகாலை 03.40 வரை.
ஜூலை
ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது உடல் ஆராக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துமென்றாலும் தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி உங்கள் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். 5-ஆம் தேதி முதல் குரு 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 03-07-2015 காலை 07.52 மணி முதல் 05-07-2015 காலை 10.00 மணி வரை. மற்றும் 30-07-2015 மாலை 05.19 மணி முதல் 01-08-2015 மாலை 06.30 மணி வரை.
ஆகஸ்ட்
3-ல் குரு, 5-ல் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பென்றாலும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பண விஷயங்களிலும் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமெடுப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்ட முதலீட்டினை எடுக்கவே எதிர்நீச்சல் போடவேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு கூடும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 27-08-2015 அதிகாலை 03.36 மணிமுதல் 29-08-2015 அதிகாலை 04.11 மணிவரை.
செப்டம்பர்
ராசிக்கு 3-ல் சூரியனும், 5-ஆம் தேதி முதல் 6-ல் சனியும், மாத பிற்பாதியில் 3-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். பண வரவுகளிலிருந்த பிரச்சினைகள் சற்று குறையும். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேற்றதை அடையமுடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பூர்வீகச் சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். தொழில், வியாபாரமும் முன்னேற்ற நிலையில் நடைபெறும். விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 23-09-2015 மதியம் 01.05 மணி முதல் 25-09-2015 மதியம் 03.35 மணி வரை.
அக்டோபர்
முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாயும் ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனியும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் நினைத்ததை நிறைவேற்றிக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் குடும்பத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சேமிக்க முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 20-10-2015 இரவு 08.32 மணி முதல் 22-10-2015 இரவு 12.48 மணி வரை.
நவம்பர்
ராசிக்கு 3-ல் செவ்வாயும் 6-ஆம் வீட்டில் சனியும் சஞ்சாரம் செய்வதும், மாதபிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் எதிலும் லாபத்தையும் முன்னேற்றத்தையும் பெறுவீர்கள். பொருளாதார நிலையில் மேன்மைகள் ஏற்படுவதால் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் சாதகப் பலனைப் பெறுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 17-11-2015 அதிகாலை 02.11 மணி முதல் 19-11-2015 காலை 07.33 மணி வரை.
டிசம்பர்
ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன், சனி சஞ்சாரம் செய்வதால் விரோதம் பாராட்டியவர்களும் நட்புக்கரம் நீட்டுவார்கள். பணவரவுகளும் தாராளமாக இருக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் திறமைகளுக்கு தகுந்த பாராட்டுதல்களும் கிட்டும். முருகப்பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 14-12-2015 காலை 07.54 மணி முதல் 16-12-2015 பகல் 12.54 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5, 6, 8; நிறம் - பச்சை, வெள்ளை; கிழமை - புதன், வெள்ளி; கல் - மரகதம்; திசை - வடக்கு; தெய்வம் - விஷ்ணு.
பரிகாரம்
மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 05-07-2015 முதல் குரு 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் வியாழக்கிழமைதோறும் தட்சிணா மூர்த்தியை வழிபாடுசெய்வது, கொண்டக்கடலை மாலை, மற்றும் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது, மஞ்சள்நிறப் பூக்களால் அர்ச்சனை செய்வது நல்லது.
Contact
For your consultation
Please send Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of
MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) &
5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
No comments:
Post a Comment