Friday, May 29, 2015

தொழில் யோகம்

   

   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 



" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 
தொழில் யோகம்

     தொழில் செய்து பிழைப்பவர்களின் ஜனன ஜாதக நிலை எப்படியிருக்க வேண்டும்?
     ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் ஜென்ம லக்னம், லக்னாதிபதி, சந்திரன், சூரியன், புதன், குரு ஆகிய கிரகங்கள் பலமாக இருப்பது மட்டுமின்றி ஜீவன ஸ்தானமான 10ஆம் இடமும் பலம் பெற்றிருந்தால் அவருக்கு சொந்தமாக தொழில் செய்யக் கூடிய யோகமும் அவரே பல பேருக்கு வேலை கொடுத்து பிழைக்க வைக்க கூடிய வாய்ப்பும் உண்டாகும்.
     சொந்த தொழில் செய்ய மனோகாரகனாக சந்திரனும் ஆத்மகாரகனான சூரியனும் பலம் பெறுவது அவசியம். இதனால் எதிலும் தைரியத்துடன் செயல்படும் அமைப்பு, மனவலிமை, பேச்சாற்றல், சுறுசுறுப்பாக உழைக்கும் ஆற்றல் போன்ற யாவும் உண்டாகும். சமுதாயத்தில் பெயர் புகழ் உயரக்கூடிய அளவிற்கு தனித்தன்மை ஏற்படும்.
     புதன் பகவானும் தொழில் அமைப்பிற்கு முக்கிய கிரகமாக விளங்குவதால் நல்ல அறிவுத்திறன், புத்தி கூர்மை, எதிலும் சரியாக திட்டம் தீட்டி சரியாக கணக்கிட்டு செய்யக் கூடிய ஆற்றல் உண்டாகும். புதன் பலம் பெற்றிருந்தால் சமயத்திற்கேற்றார் போல வளைந்து கொடுத்து எங்கு எப்படி பேச வேண்டுமோ, அங்கு அப்படி பேசி தொழிலில் எதையும் சாதித்து விட முடியும்.
     குரு தனக்காரகன் என்பதால் பண நடமாட்டத்திற்கும் தொழில் செய்வதற்கேற்ப கொடுக்கல் வாங்கலுக்கும் குரு பலம் பெற்றிருக்க வேண்டும்.
     சனி பகவான் வேலையாட்களுக்கு காரகனாவார். சனி பலமாக இருந்தால் பல வேலையாட்களை வைத்து வேலை வாங்கும் அமைப்பும் வேலையாட்களால் நல்ல அனுகூலமும் உண்டாகும்.
     சொந்தமாக தொழில் செய்து முன்னேற தன ஸ்தானமான 2ஆம் வீடும் கூட்டு தொழில் ஸ்தானமான 7ம் வீடும், ஜீவன ஸ்தானமான 10ஆம் வீடும், லாப ஸ்தானமான 11ஆம் வீடும் வலுவுடன் இருப்பது அவசியம். ஜென்ம லக்னத்துக்கு 2,7,10,11க்கு அதிபதிகள் இணைந்தோ பரிவர்த்தனைப் பெற்றோ, கேந்திர திரி கோணங்களில் அமையப் பெற்றோ ஆட்சி உச்சம் பெற்றோ அமைந்திருந்தால் சிறப்பான தொழில் யோகமும் அதனால் நல்ல லாபமும் உண்டாகும்.
     என்ன தான் பணம் சம்பாதித்தாலும் முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடின்றி செயல்பட்டால் மன நிம்மதியுடன் சந்தோஷத்துடன் லாபத்தை ஈட்ட முடியும்.


please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Wednesday, May 27, 2015

ஜீன் மாத ராசிப்பலன் 2015




   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 



" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


ஜீன் மாத ராசிப்பலன்  2015

மேஷம்   ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 6ல் இராகு சஞ்சரிப்பதும் மாதபிற்பாதியில் சூரியன் செவ்வாய் 3ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலமான அமைப்பாகும். இதனால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தாலே வீண் பிரச்சனைகள் உண்டாவதை குறைத்து கொள்ள முடியும்.  உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும்.

பரிகாரம். விநாயகரை வழிபடுவது சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 01.06.2015 மதியம் 01.06 மணி முதல் 03.06.2015 இரவு 07.49 மணி வரை.
28.06.2015 இரவு 09.46 மணி முதல் 01.07.2015 அதிகாலை 04.17 மணி வரை.

ரிஷபம்  ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே
இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாயும் 3ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் தடைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும்

பரிகாரம். சிவ வழிபாடு செய்வது, முருகப்பெருமானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 03.06.2015 இரவு 07.49 மணி முதல் 05.06.2015 இரவு 12.18 மணி வரை.

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே
எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&ல் குரு  சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் என்றாலும் 12ல் சூரியன் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எதிலும் கவனமுடன் செயல் படுவது நல்லது.  பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.

பரிகாரம். சிவ பெருமானை வழிபாடு செய்வது பிரதோஷ கால விரதங்கள் இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் 05.06.2015 இரவு 12.18 மணி முதல் 08.06.2015 அதிகாலை 03.40 வரை.

கடகம்     ;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே
கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு முயற்சி ஸ்தானமான 3&ல் ராகுவும், 11ல் செவ்வாய் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சனைகள் யாவும் விலகி நற்பலன்கள் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவும் முடியும்.  வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். அபிவிருத்தியும் பெருகும்.

பரிகாரம். குரு ப்ரீதி, தட்சிணா முர்த்தியை வழிபாடு செய்வது சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 08.06.2015 அதிகாலை 03.40 மணி முதல் 10.06.2015 காலை 06.39 மணி வரை.

சிம்மம்     ;  மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு 10&ல் சூரியன் செவ்வாய் சஞ்சாரம் செய்வது ஜீவன ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்கனால் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். பிள்ளைகளை அனுசரித்து நடப்பது நல்லது. பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்  பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பது நல்லது.

பரிகாரம். துர்கை அம்மனை வழிபாடு செய்வது தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 10.06.2015 காலை 06.39 மணி முதல்12.06.2015 காலை 09.31 மணி வரை.

கன்னி ;  உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே
மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு  ஜென்ம  ராசிக்கு 11ல் குரு சுக்கிரன் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் செவ்வாய் 10ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி  வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். 

பரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 12.06.2015 காலை 09.31 மணி முதல் 14.06.2015 மதியம் 01.04 மணி வரை.

துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே
உயர்ந்த நிலையை அடைய வேண்டிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 8&ல் சூரியன் செவ்வாய் சஞ்சாரம் செய்வது  சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் நிம்மதி குறைவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும்

பரிகாரம். சனி பகவானை வழிபாடு செய்வது, அம்மன் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 14.06.2015 மதியம் 01.04 மணி முதல் 16.06.2015 மாலை 05.42  மணி வரை.

விருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே
தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு   சூரியன் செவ்வாய் சாதகமின்றி சஞ்சரித்தாலும் பாக்கிய ஸ்தானமான 9ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன்&மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ளலாம்.

பரிகாரம். முருக வழிபாடு மேற்கொள்வது சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 16.06.2015 மாலை 05.42  மணி முதல் 18.06.2015 இரவு 12.40 மணிவரை.

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே
வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 6&ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதும் 12ல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியிலிருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால்  நினைத்ததை நிறைவேற்ற முடியும் உடல்  ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். 

பரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 18.06.2015 இரவு 12.40 மணி முதல் 21.06.2015 காலை 10.41 மணி வரை.

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே
தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு  சமசப்தம ஸ்தானமான 7&ல் குருவும் மாத பிற்பாதியில் 6ல் சூரியன் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்-&மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல்&வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும் வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும்.

பரிகாரம். சிவபெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 21.06.2015 காலை 10.41 மணி முதல் 23.06.2015 இரவு 11.07 மணி வரை.

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே
மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4 &ல் சூரியன் செவ்வாய், 6ல் குரு சஞ்சரிப்பது சாதமற்ற அமைப்பு என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்களும் எதிரிகளாக மாறுவார்கள். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடைகளுக்கு பின் அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் சற்று தாமதப்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும்.

பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிவ வழிபாடு முருக வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 23.06.2015 இரவு 11.07 மணி முதல் 26.06.2015 காலை 11.41 மணி வரை.

மீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு 3&ல் சூரியன் செவ்வாய்  சஞ்சாரம் செய்வதாலும் 5ல் குரு சஞ்சரிப்பதாலும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் நல்ல உயர்வு உண்டாகும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் கிடைக்கும். கல்வியிலும் மாணவர்கள் சிறந்து விளங்க முடியும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

பரிகாரம். ஆஞ்சனேயரை வழிபடுவது சர்ப சாந்தி செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 26.06.2015 காலை 11.41 மணி முதல்   28.06.2015 இரவு 09.46 மணி வரை.


சுப முகூர்த்த நாட்கள்

04.06.2015  வைகாசி மாதம் 21 ஆம் தேதி வியாழக்கிழமை துவிதியை திதி, மூல  நட்சத்திரம் சித்த யோகம் காலை 09.00 மணி முதல்  10.00 மணிக்குள் கடக இலக்கினம்  
தேய்பிறை.

07.06.2015  வைகாசி மாதம், 24 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை, பஞ்சமி திதி, திருவோண நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 09.00 மணி முதல்  10.00 மணிக்குள் கடக இலக்கினம் தேய்பிறை.

08.06.2015  வைகாசி மாதம், 25 ஆம் தேதி திங்கள்கிழமை, சஷ்டிதிதி, அவிட்ட  நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.30 மணி முதல்  07.30 மணிக்குள் மிதுன இலக்கினம்  தேய்பிறை.

29.06.2015  ஆனி மாதம், 14 ஆம் தேதி  திங்கட்கிழமை, துவாதசி திதி, அனுஷ  நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.00 மணி முதல்  07.00 மணிக்குள் மிதுன இலக்கினம்  வளர்பிறை.

please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


Thursday, May 14, 2015

சந்திரன்

குரு பெயா்ச்சி புத்தகம் 


தற்போது விற்பனையில் 

   


   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 



" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 

சந்திரன்

நவ கிரகங்களில் முக்கிய கிரகமான சந்திரன், சுபர் அசுபர் என்ற இரு தன்மைகளில் விளங்குகிறார். அதவாது வளர்பிறையில் பிறந்திருந்தால் சுப சந்திரனாகவும் தேய் பிறையில் பிறந்திருந்தால் அசுபராகவும் விளங்குகிறார்.

மனோகாரகன் சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் சுபராக இருந்தால் நல்ல மனவலிமை தைரியம், துணிவு தேக ஆரோக்கியம் யாவும் சிறப்பாக அமையும். அமாவாசைக்குப் பிறகு பிரதமை முதல் (பௌர்ணமி வரை) வருவது வளர்பிறையாகும். இவர் சுப சந்திரனாக கருதப்படுகிறார்.

பௌர்ணமிக்குப் பிறகு (பிரதமை முதல் அமாவாசை) வரும் சந்திரன் தேய்ப் பிறை சந்திரனாவார். இவர் அசுப சந்திரனாக கருதப்படுகிறார். தேய் பிறையில் பிறந்தவர்கள் தைரியம் துணிவு குறைந்தவர்களாகவும் சற்று குழப்பவாதியாகவும் இருப்பார்கள்.


ஒருவரது ராசி சக்கரத்தைப் பார்த்தவுடனேயே அவர் வளர்பிறையில் பிறந்தவரா? அல்லது தேய் பிறையில் பிறந்தவரா என்பதை எளிதில் கூறி விடலாம். சூரியனை சுற்றி வரும் இயல்பு கொண்ட சந்திரன் ராசி சக்கரத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 7ஆம் வீட்டிற்குள் அமைந்திருந்தால் அவர் வளர்பிறையில் பிறந்தவராவார். அதாவது சுக்ல பட்சத்தில் பிறவி எடுத்தவராவார்.


அதுவே சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 7ஆம் வீடு முதல் 12ஆம் வீடு வரை ஏதாவது ஒரு கட்டத்தில் சந்திரன் அமைந்திருந்தால் அவர் தேய்பிறை சந்திரனில் பிறந்தவராவார். இது கிருஷ்ண பட்சத்தில் பிறவி எடுத்ததாக கருதப்படுகிறது.

இது மட்டுமின்றி ஒருவர் பிறந்தது பகலா, மதியமா, இரவா, விடியற்காலையா என்பதையும் ராசி கட்டத்தின் மூலம் அறியலாம். அதாவது ராசி சக்கரத்தில் சூரியன் இருக்கும் வீட்டிலிருந்து 4 கட்டங்களுக்குள் லக்னம் அமைந்திருந்தால் அவர் சூரிய உதய நேரமான காலை 6 மணி முதல் 12 மணிக்குள் பிறந்தவராவார். ஜென்ம லக்னம் சூரியன் இருக்கும் கட்டத்திலிருந்து 4 முதல் 7க்குள் இருந்தால் அந்த ஜாதகர் பிறந்த நேரமானது மதியம் 12 மணி முதல் மாலை 6க்குள் இருக்கும். ஜென்ம லக்னமானது சூரியன் இருக்கும் வீட்டிலிருந்து 7ம் வீடு முதல் 10ம் வீட்டிற்குள் இருந்தால் அவர் பிறந்த நேரமானது மாலை 6 மணிக்கு மேல் இரவு 12 மணிக்குள் இருக்கும். சூரியன் இருக்கும் வீட்டிலிருந்து ஜென்ம லக்னமானது 10ம் வீட்டிற்கு மேல் சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு மேல் பாதம் வரை இருந்தால் அவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு மேல் சூரிய உதய காலமான 6 மணிக்குள் பிறந்தவராவார்.

சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து 8வது ராசிக்குரிய நட்சத்திரங்கள் வரும் நாட்கள் சந்திராஷ்டம் தினங்களாகும். இந்த நாட்களில் சற்று மனக்குழப்பங்கள் உண்டாகும். அதிலும் தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு (கிருஷ்ண பட்சத்தில்) மனகுழப்பங்கள் அதிகமாக இருக்கும். இந்நாட்களில் எதிலும் சற்று சிந்துத்து செயல்படுவது மிகவும் நல்லது.



please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


Sunday, May 10, 2015

தர்மகர்மாதிபதி யோகம்

குரு பெயா்ச்சி புத்தகம் 


தற்போது விற்பனையில் 

   


   

காணத்தவறாதீர்

 தற்போது தினமும் 

 காலை 05.45  மணி முதல் 05.55  மணி வரை

வரும் 18-05-2015 முதல்

காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 



" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


தர்மகர்மாதிபதி யோகம்

     திரைக்கடல் ஒடியும் திரவியம் தேடு என்று நமது நாட்டில் ஒரு பழமொழி உள்ளது. ஒருவர் ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் அமையப் பெற்றால் தான் வெளி நாடு செல்லும் வாய்ப்பு ஏற்படுகிறது. அந்த தர்மகர்மாதிபதி யோகம் கொடுக்கக்கூடிய திசாபுக்திகள் நடைபெறும் போது வெளிநாடு செல்வதோடு மட்டுமல்லாமல் அந்நிய நாட்டில் தங்கி தொழில் உத்தியோகம்  செய்யும் அற்புத யோகமும் அமையப் பெறுகிறது.
     முதலில் தர்மகர்மாதிபதி யோகத்தை பற்றி பார்ப்போம். ஒருவர் ஜாதக கட்டத்தில் 9ஆம் இடம் பாக்கியம், செல்வம், செல்வாக்கு போன்றவற்றை குறிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக 9ஆம் இடம் தந்தையை பற்றியும் அவரது யோகம் பற்றியும் குறிப்பிடுகிறது.
     10ஆம் இடம் தொழில் ஜீவனம், கர்மம் போன்றவற்றை எடுத்துரைக்கிறது. 9,10க்கு அதிபதிகள் இணைந்து காணப்படும் போது ஒருவருக்கு தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. 9,10க்கு அதிபதிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. 9,10க்கு அதிபதிகள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனைப் பெற்றாலும் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. இந்த தர்மகர்மாதிபதி யோகம் அமையப் பெற்றால் செல்வம் செல்வாக்கு அமையப் பெற்றவர்களாகவும், சிறந்த தொழில் மேதையாகவும், வெளிநாட்டில் வேலை கிடைத்து அதிக பணம் சம்பாதிக்கும் அற்புத யோகம் அமையப் பெற்றவர்களாகவும் திகழ்வர்.
     10ஆம் அதிபதி குருவாக இருந்து சந்திரனுடன் சேர்க்கை பெற்றால் யாகங்கள் செய்வான் என்றும் அந்த குருவோடு சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றால் அரசியலில் ஈடுபட்டு மந்திரி ஆவான் என்றும் கூறப்படுகிறது.
     ஒருவர் ஜாதகத்தில் 9ஆம் வீடும், 10ஆம் வீடும் பலமின்றி காணப்பட்டால் அவன் வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடுகிறான். அவன் எவ்வளவு திறமை பெற்றிருந்தாலும் அவனுடைய புகழ் குடத்திலிட்ட விளக்கு போலக் காணப்படுகிறது. ஒருவர் ஜாதகத்தில் 9ஆம் வீடு பலம் பெற்றுக் காணப்பட்டால் அவர் தந்தையைவிட பலசாலியாக வலிமை மிக்கவனாக காணப்படுகிறான்.
     9ஆம் வீட்டுக்கு அதிபதியும் சுக்கிரனும், இணைந்து லக்கினத்தில் அமையப் பெற்றாலும் குருவும் பாக்கியாதிபதியும் இணைந்து 10ஆம் இடத்தில் காணப்பட்டாலும் திரண்ட செல்வம் ஏற்படுகிறது என்று ஜாதக அலங்காரம் கூறுகிறது. அது மட்டுமல்ல அழகிய மனைவி அமையப் பெற்று அன்னிய நாட்டில் சக்கரவர்த்தியாகும் அற்புத யோகம் ஏற்படுகிறது.
     ஆனால் சிலருக்கு இந்த யோகம் அமைந்து அந்த யோகப் பலன் உண்டாக வில்லையே என்ற கேள்வி ஏழலாம். 9,10க்கு அதிபதிகள் இணைந்து 6,8 போன்ற இடங்களில் காணப்பட்டால் அந்த யோகத்தின் பலன் உண்டாகாது.
please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Thursday, May 7, 2015

குற்றவாளிக் கூண்டிலேற்றும் கிரக அமைப்புகள்


குரு பெயா்ச்சி புத்தகம் 


தற்போது விற்பனையில் 

   


   

காணத்தவறாதீர்

 தற்போது தினமும் 

 காலை 05.45  மணி முதல் 05.55  மணி வரை

வரும் 18-05-2015 முதல்

காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 



" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 



குற்றவாளிக் கூண்டிலேற்றும் 
கிரக அமைப்புகள்
                                                 
     மனிதனின் பேராசையும் வக்ர குணமும் அவனை கொலை செய்யும் அளவிற்கு கொண்டு செல்கிறது. சமீப காலமாக நாம் செய்தி தாளிகளில் படிக்கும் நிறைய விஷயங்கள் கடத்தல், கொலை, கொள்ளை போன்றவற்றை பற்றி தான். பணத்திற்காக இளம் பிஞ்சுகளை கடத்துகிறார்கள். பணத்திற்காக மட்டும் இந்த பாதக செயல்களை செய்பவர்களை கூட மன்னித்து விடலாம். ஆனால் பிஞ்சு குழந்தைகளிடம் கிடைக்காததை தேடி அவர்களை சித்ரவதை செய்து உயிரோடு விட்டு விட்டால் உண்மையை வெளியே சொல்லி விடுவார்கள் என்ற பயத்தில் அவர்களின் உயிரையும் பறித்து விடுகிறார்கள். இதன் பின் வாழ  நினைப்பது தலை மறைவு வாழ்க்கை விடுமா காவல்துறை, தேடிப்பிடித்து நாலு வாங்கு வாங்கினால் நெஞ்சில் உள்ளதை வாயால் கக்குவான். வளர்ந்து விட்ட நவீன உலகில் மருத்துவத் துறையும் தன் பங்கிற்கு அவன் செய்து சொல்லாமல் மறைத்த ரகசியங்களை வெளியாக்கும்.
     யாருமே வேண்டுமென்று குற்றங்களை செய்வதில்லை. குற்றச் செயல்கள் செய்வதும் அவரவர் பிறந்த கிரக நிலைகளின் அடிப்படையில் தான் அமைகிறது. நவகிரகங்களில் செவ்வாயானவர் மிகக் கொடிய பாவ கிரகமாக விளங்குகிறார். செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் வலுப் பெற்று சுப கிரக சேர்க்கையுடன் அமைந்திருந்தால் சமுதாயத்தில் உயர் பதவிகளை அடையக் கூடிய யோகத்தையும் நல்ல நிர்வாகத் திறமைகளையும் பெற்றிருப்பார்.
     அதுவே செவ்வாயானவர் பாவிகள் சேர்க்கை மற்றும் பார்வை பெற்று அமைந்து விட்டால் அந்த ஜாதகரின் மனநிலையும் திறமையும் அதன் தசாபுக்தி காலங்களில் தீய செயல்களுக்கு பயன்படுத்தக் கூடிய சூழ்நலையை உண்டாக்குகிறது.
     ஒருவரது ஜென்ம லக்னத்தை கொண்டு அவரது குணநலன்களை பற்றி அறியலாம். 5ஆம் வீடு உணர்ச்சியை குறிக்கும். 9ஆம் வீடு தானதர்ம செயல்களை குறிக்கும். 6,12ஆம் வீடுகள் மறைமுக எதிர்ப்புகளை குறிக்கும்.
     நவ கிரகங்களில் பாவிகள் என குறிக்கப்படும் சனி, செவ்வாய், ராகு கேது போன்ற கிரகங்கள் 1,5,9 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்றால் அந்த ஜாதகருக்கு முரட்டு சுபாவம் அதிகம் இருக்கும்.
     செவ்வாய் சனி ராகு இணைந்து மேற்கூறிய ஸ்தானங்களில் அமையப் பெற்றால் அந்த ஜாதகர் கொலை செய்யவும் தயங்காத கொடூர குணம் கொண்டவராக இருப்பார்.
     செவ்வாயின் வீடுகளான மேஷம், விருச்சிகத்திலும், சனியின் வீடான மகரம் குடும்பத்திலும் சனி செவ்வாய் ராகு போன்ற பாவிகள் அ¬ந்திருந்தால் அவர் கொலை குற்றங்கள் செய்வதில் வல்லவராக இருப்பார்.
     அது போல ஜென்ம லக்னத்திற்கு 6,12 ஆகிய ஸ்தானத்திற்கு சனி செவ்வாய் அமையப் பெற்றாலும்  தனித் தனியே அமைந்து சனிக்கு கேந்திரத்தில் செவ்வாயோ, செவ்வாய்க்கு கேந்திரத்தில் சனியோ அமையப் பெற்றாலும் குற்றச் செயல்கள் செய்வதில் அதிக ஈடுபாடு இருக்கும். செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் பாவிகளின் சேர்க்கைப் பெற்றிருந்து அக்கிரங்களின் தசா புக்திகள் நடைபெறுகின்ற காலங்களில் கொடூரமான செயல்களை செய்ய வைக்கும்.

please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA