Thursday, May 7, 2015

குற்றவாளிக் கூண்டிலேற்றும் கிரக அமைப்புகள்


குரு பெயா்ச்சி புத்தகம் 


தற்போது விற்பனையில் 

   


   

காணத்தவறாதீர்

 தற்போது தினமும் 

 காலை 05.45  மணி முதல் 05.55  மணி வரை

வரும் 18-05-2015 முதல்

காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 



" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 



குற்றவாளிக் கூண்டிலேற்றும் 
கிரக அமைப்புகள்
                                                 
     மனிதனின் பேராசையும் வக்ர குணமும் அவனை கொலை செய்யும் அளவிற்கு கொண்டு செல்கிறது. சமீப காலமாக நாம் செய்தி தாளிகளில் படிக்கும் நிறைய விஷயங்கள் கடத்தல், கொலை, கொள்ளை போன்றவற்றை பற்றி தான். பணத்திற்காக இளம் பிஞ்சுகளை கடத்துகிறார்கள். பணத்திற்காக மட்டும் இந்த பாதக செயல்களை செய்பவர்களை கூட மன்னித்து விடலாம். ஆனால் பிஞ்சு குழந்தைகளிடம் கிடைக்காததை தேடி அவர்களை சித்ரவதை செய்து உயிரோடு விட்டு விட்டால் உண்மையை வெளியே சொல்லி விடுவார்கள் என்ற பயத்தில் அவர்களின் உயிரையும் பறித்து விடுகிறார்கள். இதன் பின் வாழ  நினைப்பது தலை மறைவு வாழ்க்கை விடுமா காவல்துறை, தேடிப்பிடித்து நாலு வாங்கு வாங்கினால் நெஞ்சில் உள்ளதை வாயால் கக்குவான். வளர்ந்து விட்ட நவீன உலகில் மருத்துவத் துறையும் தன் பங்கிற்கு அவன் செய்து சொல்லாமல் மறைத்த ரகசியங்களை வெளியாக்கும்.
     யாருமே வேண்டுமென்று குற்றங்களை செய்வதில்லை. குற்றச் செயல்கள் செய்வதும் அவரவர் பிறந்த கிரக நிலைகளின் அடிப்படையில் தான் அமைகிறது. நவகிரகங்களில் செவ்வாயானவர் மிகக் கொடிய பாவ கிரகமாக விளங்குகிறார். செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் வலுப் பெற்று சுப கிரக சேர்க்கையுடன் அமைந்திருந்தால் சமுதாயத்தில் உயர் பதவிகளை அடையக் கூடிய யோகத்தையும் நல்ல நிர்வாகத் திறமைகளையும் பெற்றிருப்பார்.
     அதுவே செவ்வாயானவர் பாவிகள் சேர்க்கை மற்றும் பார்வை பெற்று அமைந்து விட்டால் அந்த ஜாதகரின் மனநிலையும் திறமையும் அதன் தசாபுக்தி காலங்களில் தீய செயல்களுக்கு பயன்படுத்தக் கூடிய சூழ்நலையை உண்டாக்குகிறது.
     ஒருவரது ஜென்ம லக்னத்தை கொண்டு அவரது குணநலன்களை பற்றி அறியலாம். 5ஆம் வீடு உணர்ச்சியை குறிக்கும். 9ஆம் வீடு தானதர்ம செயல்களை குறிக்கும். 6,12ஆம் வீடுகள் மறைமுக எதிர்ப்புகளை குறிக்கும்.
     நவ கிரகங்களில் பாவிகள் என குறிக்கப்படும் சனி, செவ்வாய், ராகு கேது போன்ற கிரகங்கள் 1,5,9 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்றால் அந்த ஜாதகருக்கு முரட்டு சுபாவம் அதிகம் இருக்கும்.
     செவ்வாய் சனி ராகு இணைந்து மேற்கூறிய ஸ்தானங்களில் அமையப் பெற்றால் அந்த ஜாதகர் கொலை செய்யவும் தயங்காத கொடூர குணம் கொண்டவராக இருப்பார்.
     செவ்வாயின் வீடுகளான மேஷம், விருச்சிகத்திலும், சனியின் வீடான மகரம் குடும்பத்திலும் சனி செவ்வாய் ராகு போன்ற பாவிகள் அ¬ந்திருந்தால் அவர் கொலை குற்றங்கள் செய்வதில் வல்லவராக இருப்பார்.
     அது போல ஜென்ம லக்னத்திற்கு 6,12 ஆகிய ஸ்தானத்திற்கு சனி செவ்வாய் அமையப் பெற்றாலும்  தனித் தனியே அமைந்து சனிக்கு கேந்திரத்தில் செவ்வாயோ, செவ்வாய்க்கு கேந்திரத்தில் சனியோ அமையப் பெற்றாலும் குற்றச் செயல்கள் செய்வதில் அதிக ஈடுபாடு இருக்கும். செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் பாவிகளின் சேர்க்கைப் பெற்றிருந்து அக்கிரங்களின் தசா புக்திகள் நடைபெறுகின்ற காலங்களில் கொடூரமான செயல்களை செய்ய வைக்கும்.

please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

No comments: