Monday, June 29, 2015

ஜுலை மாத ராசிப்பலன் 2015


வாங்கி படிக்க தவறாதீர்கள்

ஜீலை 2015 ஓம்சரவணபவா இதழுடன்

முருகுபாலமுருகன் 

எழுதிய

பொருளாதார உயர்வு தரும் 

கல்வி, தொழில், வேலை எது ?



12, இலக்கினகாரர்களுக்கு ஜோதிட வழிகாட்டி


96 பக்கம் இலவச இனைப்பு



   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 





" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


(05.07.2015 காலை 06-30  மணி 

முதல் 07.00  மணி வரை  
குரு பெயர்ச்சி பலனை   
காணத்தவறாதீர்)


ஜுலை மாத ராசிப்பலன்  2015



மேஷம்; அஸ்வினி, பரணி, கிருத்திகை&1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன் செவ்வாய், 6&ல் ராகு  சஞ்சரிப்பதும் இம் மாதம் ஏற்படவுள்ள குரு பெயர்ச்சி மூலம் குரு 5ல் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். இதனால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவும் முடியும்.   தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். 

பரிகாரம். விநாயகரை வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது. 
சந்திராஷ்டமம் 26.07.2015 காலை 06.40 மணி முதல் 28.07.2015 மதியம் 01.50 மணி வரை.

ரிஷபம்; கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6ல் சனியும், 11ல்கேதுவும் சஞ்சாரம் செய்வதும் மாத பிற்பாதியில் சூரியன் 3ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம் பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை தடைகளுக்குப் பின் பெற முடியும். 

பரிகாரம். துர்கையம்மனை வழிபடுவது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீப மேற்றுவது நல்லது.
சந்திராஷ்டமம் 01.07.2015 அதிகாலை 04.17 மணி முதல் 03.07.2015 காலை 07.52 மணி வரை.
28.07.2015 மதியம் 01.50 மணி முதல் 30.07.2015 மாலை 05.19 மணி வரை.

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 &ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்  சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாயும் தனஸ்தானமான 2&ல் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வத உடல் ஆரோக்கியத்தில் அக்கரை எடுத்தக்கொள்வது நல்லது. உஷ்ண சம்மந்தப்பட்ட சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்ப தேவைகள் பூ£ஙத்தியாகும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். 

பரிகாரம். சிவ பெருமானை வழிபாடு செய்வது பிரதோஷ கால விரதமிருப்பது முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 01.07.2015 அதிகாலை 04.17 மணி முதல் 03.07.2015 காலை 07.52 மணி வரை.
28.07.2015 மதியம் 01.50 மணி முதல் 30.07.2015 மாலை 05.19 மணி வரை.

கடகம்; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட உங்களுக்கு விரய ஸ்தானமான 12&ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பது எதிர் பாராத வீண் விரயங்களை ஏற்படும் என்றாலும் இம் மாதம் ஏற்படவுள்ள ழுரு பெயர்ச்சியின் மூலம் 2&ல் குரு சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைவார்கள். அரசியல்வாதிகளுக்கு வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டும்.

பரிகாரம். முருகப் பெருமானை வழிபாடு  சஷ்டி விரதமிருப்பது சிவனை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 05.07.2015 காலை 10.00 மணி முதல் 07.07.2015 பகல் 12.08 மணி வரை.

சிம்மம்     ;  மகம், பூரம். உத்திரம்&1& ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11&ல் சூரியன் செவ்வாய் புதன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்றாலும் 2&ல் ராகு 8&ல் கேது சஞ்சாரம் செய்வதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். கணவன்-&மனைவியிடையே சிறுசிறு கருத்த வேறுபாடுகள் தோன்றி மறையும். கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு கிடிடக்கப்பேற்றாலும் ஊதிய உயர்வு தாமதப்படும்.

பரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது தினமும் விநாயகரை வழிபாடு செய்வது சர்ப சாந்தி செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 07.07.2015 பகல் 12.08 மணி முதல்09.07.2015 மதியம் 03.07 மணி வரை.

கன்னி ;  உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10&ல் சூரியன் செவ்வாய் 11ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பு என்பதால்  நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண சுப முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத்  தேவைகளும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

பரிகாரம். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 09.07.2015 மதியம் 03.07 மணி முதல் 11.07.2015 இரவு 07.18மணி வரை.

துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 &ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு 9&ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதும் இம் மாதம் ஏற்படவுள்ள குரு 11ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் தாராள தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். Ðல பெரிய மனித்களின் ஆதரவுகளால் வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

பரிகாரம். சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ªணையில் தீப மேற்றி வழிபாடு செய்வது துர்கை அம்மனை வழிபடுவது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் 11.07.2015 இரவு 07.18 மணி முதல் 13.07.2015 இரவு 12.56 மணி வரை.

விருச்சிகம்; விசாகம்&4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 8&ல் சூரியன் செவ்வாய் புதன் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எதிலும் சற்று நிதானமுடன் செயல் படுவதே நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும்.  உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெற முடியும்.

பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது, சனிப்பரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 13.07.2015 இரவு 12.56 மணி முதல் 16.07.2015 காலை 08.30 மணி வரை.

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்&1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே
எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி  ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட உங்களுக்கு ஏழரை சனியில் விரய சனி நடைபெறுவதும் 7ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதும் வீண் விரயங்களையும் பிரச்சனைகளையும்  ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் குரு 9&ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் ஓரளவுக்கு அனுகூலங்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. கணவன் மனைவி அனுசரித்து நடந்து கொள்வது உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணி புரிபவர்களிடம் சற்று கவனமுடன் நடந்த கொள்வது நல்லது. 

பரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 16.07.2015 காலை 08.30 மணி முதல் 18.07.2015 மாலை 06.31 மணி வரை.

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட உங்களுக்கு 6ல் சூரியன் செவ்வாயும் 3&ல் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் மறைமுக எதிர்ப்புகள் சற்று விலகும். சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றியினைப் பெற முடியும்.  பொருளாதார நிலை தேவைக்கேற்ற படியிருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் சிறுசிறு வம்பு வழக்குகளை சந்திக்க வேண்டிவரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பொன் பொருள் சேரும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். 

பரிகாரம். குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 18.07.2015 மாலை 06.31 மணி முதல் 21.07.2015 காலை 06.49 மணி வரை.

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு இம்மாதம்ஏற்படவுள்ள ழுரு பெயர்ச்சியின் மூலம் ஜென்ம ராசிக்கு 7&ல் குரு சஞ்சாரம் செய்யவிருப்பதும் மாதபிற்பாதியில் சூரியன் 6ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் எதிலும் வெற்றிகளை பெறுவீர்கள். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.  சொந்தமாக வீடு வாகனம் போன்றவற்றை வாங்க கூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும். பொன் பொருள் சேரும் கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும்.  தொழில் வியாபாரத்தில் சிறப்பான  முன்னேற்ற நிலையிருக்கும்.

பரிகாரம். விநாயகரை வழிபாடு செய்வது அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 21.07.2015 காலை 06.49 மணி முதல் 23.07.2015 மாலை 07.43 மணி வரை.

மீனம் ; பூரட்டாதி&4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் உங்களுக்கு 4&ல் செவ்வாய் சூரியனும் 7ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.  உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் தடைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும்.

பரிகாரம். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது அம்மன் வழிபாடு மேற்கொள்வது சர்ப சாந்தி செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 23.07.2015 மாலை 07.43 மணி முதல் 26.07.2015 காலை 06.40 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்
03.07.2015  ஆனி மாதம், 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, துதியை திதி, உத்திராட நட்சத்திரம் சித்த யோகம் காலை 07.00 மணி முதல்  08.00 மணிக்குள் கடக இலக்கினம்  தேய்பிறை.

06.07.2015  ஆனி மாதம், 21 ஆம் தேதி திங்கட்கிழமை, பஞ்சமி திதி, சதய  நட்சத்திரம் சித்த யோகம் காலை 05.30 மணி முதல்  06.30 மணிக்குள் மிதுன இலக்கினம் தேய்பிறை.

08.07.2015  ஆனி மாதம், 23 ஆம் தேதி புதன்கிழமை, சப்தமிதிதி, உத்திரட்டாதி  நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.30 மணி முதல்  07.30 மணிக்குள் கடக இலக்கினம்  
தேய்பிறை.

13.07.2015  ஆனி மாதம், 28 ஆம் தேதி  திங்கட்கிழமை, துவாதசி திதி, ரோகிணி  நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 05.00 மணி முதல் 06.00 மணிக்குள் மிதுன இலக்கினம்  தேய்பிறை.

27.07.2015  ஆடி மாதம், 11 ஆம் தேதி திங்கட்கிழமை, ஏகாதசி திதி, அனுஷ  நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.30 மணி முதல்  07.30 மணிக்குள் கடக இலக்கினம்  வளர் பிறை.


please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


No comments: