Friday, July 3, 2015

குரு பெயர்ச்சி பலன் 2015 - 2016 - கும்பம்

வாங்கி படிக்க தவறாதீர்கள்

ஜீலை 2015 ஓம்சரவணபவா இதழுடன்

முருகுபாலமுருகன் 

எழுதிய

பொருளாதார உயர்வு தரும் 

கல்வி, தொழில், வேலை எது ?



12, இலக்கினகாரர்களுக்கு ஜோதிட வழிகாட்டி


96 பக்கம் இலவச இனைப்பு



   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 





" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


(05.07.2015 காலை 06-30  மணி 

முதல் 07.00  மணி வரை  

குரு பெயர்ச்சி பலனை   
காணத்தவறாதீர்)

குரு பெயர்ச்சி பலன்   2015 - 2016 - கும்பம் 
05.07.2015 முதல் 02.08.2016 வரை 

கும்பம் ;  அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள்

எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து நியாயமாக தீர்த்து வைக்கும் அறிவாற்றல் கொண்ட கும்பராசி அன்பர்களே! பொன்னவன் என போற்றப் படக் கூடியவரும் உங்கள் ராசிக்கு தன லாபாதிபதியுமான குரு பகவான் ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7ல் 05.07.2015 முதல் 02.08.2016 வரை சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். குரு ஜென்ம ராசி,3,11ஆம் வீடுகளை பார்வை செய்வதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் தடைபட்டுக்கொண்டிருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர பாக்கியமும் உண்டாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் சேரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள், ஊதிய உயர்வுகள் போன்றவை கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். சனி 10 ல் சஞ்சரித்தாலும் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதிகளை செய்ய மாட்டர். 08.01.2016 முதல் ஜென்ம ராசியில் கேதுவும், 7ல் ராகுவும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, கணவன் மனைவி விட்டு கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். இது வரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். குடும்பத்திலுள்ளவர்களாலும் இருந்து வந்த மருத்துவ செலவுகள் மறையும். அனைவரும் சுபிட்சமாக இருப்பதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

குடும்பப் பொருளாதார நிலை
பண வரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன், குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகமும் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் போன்றவையும் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சனைகள் குறையும். வம்பு வழக்கு போன்றவற்றில் தீர்ப்பு சாதகமாக வரும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையிருக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தி பெருகுவதுடன் லாபங்களும் தாராளமாக அமையும். வெளியூர் வெளி நாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.10ல் சனி சஞ்சரிப்பதால் நிதானமாக செயல்பட்டுவது நல்லது.

உத்தியோகம்
பணியில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர் பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விரும்பம் நிறைவேறும் புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறும்.10ல் சனி சஞ்சரிப்பதால் சக நண்பர்களிடம் கவணமாக இருப்பது நல்லது.

அரசியல்
பெயர் புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் பெருகும். அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்ய கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவுகள் பெருகும். வருவாய்கள் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் குறையும்.

கலைஞர்களுக்கு
எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும்

பெண்கள்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடப்பது நல்லது, புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பொன் பொருள் சேரும். சொந்த வீடு வாகனங்களையும் வாங்குவீர்கள்.

மாணவ மாணவியர்
கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்கு செல்வீர்கள். நல்ல நட்புகளால் அனுகூலப்பலன் உண்டாகும்.

குரு பகவான் மகம் நட்சத்திரத்தில் 05.07.2015 முதல் 07.09.2015 வரை
குரு பகவான் ஜென்ம ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7&ல் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பொன் பொருள் சேரும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்க கூடிய யோகமும் அமையும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கல் சரள நிலையில் நடைபெறும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த உயர்வுகளை அடைவார்கள். கேது 2லும், ராகு 8&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வெளிவட்டார பழக்கப் வழக்கங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 08.09.2015 முதல் 17.11.2015 வரை
குரு பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் 7&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். பணம் பலவழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். எல்லா வித தேவைகளும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக குடும்பத்தோடு பயணம் மேற்கொள்வீர்கள். தடைபட்டு கொண்டிருந்த மங்களகரமான சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். ஆடை ஆபரணம் சேரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்திலும் நல்ல லாபம் கிட்டும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். தொழிலாளர்கள் ஒத்துழைப்புடன் செயல் படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 18.11.2015 முதல் 19.12.2015 வரை
குரு பகவான் சூரியனின்  நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் குடும்பத்தில் மங்கள கரமான சுப காரியங்கள் கை கூடும். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி பொங்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மூலம் பல வித சாதகப் பலனை பெற முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் குறையும். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் தடையின்றி கிட்டும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலை பளுவும் குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். 

குரு பகவான் அதிசாரமாக கன்னி ராசியில் 20.12.2015 முதல் 19.01.2016 வரை
குருபகவான் இக்காலங்களில் அதிசாரமாக ராசிக்கு 8ஆம் வீடான கன்னி ராசியில் சஞ்சாரம் செய்வதால் வயிறு சம்மந்தப் பட்ட பாதிப்புகள் உண்டாகும்.  எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நற்பலன் உண்டாகும். வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. கலைஞர்கள்  கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமல் பார்த்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.  தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் எதிர்பார்க்கும் லாபங்களைப் பெற முடியும். அரசியல்வாதிகள் மேடை பேச்சுகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.08.01.2016 முதல் ஜென்ம ராசியில் கேது 7ல் ராகு சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 20.01.2016 முதல் 18.05.2016 வரை
குரு பகவான் வக்ர கதியில் இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் எதையும் எதிர்கொண்டு முன்னேற்றமடைவீர்கள். பண வரவுகள் தேவைகேற்றபடி இருக்கும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். போட்டிகள் சற்று அதிகரிக்கும். புதிய வழிமுறைகளை கண்டு பிடித்து அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். என்றாலும் உடன் பணி புரிபவர்களிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சர்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 19.05.2016 முதல் 11.07.2016 வரை
குரு பகவான் இக்காலங்களில் சுக்கிரனின் நட்சத்திரத்தில் 7ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற் கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி  வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 12.07.2016 முதல் 02.08.2016 வரை
குரு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 7&ல் சஞ்சாரம் செய்கிறார். இதனால் நினைத்த தெல்லாம் நிறைவேறும். பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. மணமாதவர்களுக்கு மணமாகும். நல்ல வரன்கள் தேடி வரும். கணவன் மனைவி விட்டு கொடுத்த நடந்து கொள்வது உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். செய்யும் தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்-. பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் வெளி நாடுகளுக்கு செல்லும் விருப்பம் நிறைவேறும்.

அவிட்டம் 3,4ஆம் பாதங்கள்
தன் அனுபவ அறிவால் மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக விளங்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குரு பகவான் சம சப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கடன்கள் அனைத்தும் குறையும்.

சதயம்
எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து தீர்வு காணும் உங்களுக்கு குரு பகவான்  7ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடபுடலாக கை கூடும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை தடையின்றி பெற முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை இருக்கும்.

பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள்
முன் கோபியாக இருந்தாலும் பரந்த மனப்பான்மை கொண்ட உங்களுக்கு குரு பகவான் 7ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதால் எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். பலருக்கு உதவி செய்ய கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பொன் பொருள் சேரும். சிலருக்கு அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சேமிப்புகள் பெருகும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்   5,6,8,
கிழமை  வெள்ளி, சனி
திசை   மேற்கு
நிறம்   வெள்ளை, நீலம்
கல்    நீலக்கல்
தெய்வம்  ஐயப்பன்
பரிகாரம்
கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் 10ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபாடு செய்வது நல்லது. சர்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

please contact my postal adress
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


No comments: