Friday, July 3, 2015

குரு பெயர்ச்சி பலன் 2015 2016 மீனம்

வாங்கி படிக்க தவறாதீர்கள்

ஜீலை 2015 ஓம்சரவணபவா இதழுடன்

முருகுபாலமுருகன் 

எழுதிய

பொருளாதார உயர்வு தரும் 

கல்வி, தொழில், வேலை எது ?



12, இலக்கினகாரர்களுக்கு ஜோதிட வழிகாட்டி



96 பக்கம் இலவச இனைப்பு



   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 





" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


(05.07.2015 காலை 06-30  மணி 

முதல் 07.00  மணி வரை  


குரு பெயர்ச்சி பலன் & 2015&2016   மீனம் 
05.07.2015 முதல் 02.08.2016 வரை

மீனம் ; பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் மற்றவர்களுக்கு உதவிகரமாக திகழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மீன ராசி அன்பர்களே! ஆண்டு கோளாளான குரு பகவான் ஜென்ம ராசிக்கு 6&ஆம் வீட்டில் 05.07.2015 முதல் 02.08.2016 வரை சஞ்சாரம் செய்யவுள்ளதால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். வீண் வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடும். குரு 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்றாலும் குரு ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதியை செய்ய மாட்டர். குரு 2,4,12ஆம் வீடுகளை பார்வை செய்வதாலும்  சனி பகவான் 9&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் அனுகூலப்பலன் கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்திலும் ஒரளவுக்கு லாபம் அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டார பழக்க வழக்கங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. 08.01.2016 முதல் ராகு 6ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எந்த எதிர்ப்பையும் எதிர் கொண்டு வெற்றியினைப் பெறுவீர்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரண கோளாறு போன்றவை ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். மனக்குழப்பங்களும் நிம்மதி குறைவுகளும் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும்.

குடும்பப் பொருளாதார நிலை
குடும்ப ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். அனைவரிடமும் விட்டுக் கொடுத்து செல்வது பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்
பண வரவுகளில் நெருக்கடிகள் உண்டாக கூடிய காலம் என்பதால் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும்.  பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதினால் வீண் பிரச்சனைகளில் சிக்கி கொள்வீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வீண் வம்பு வழக்குகள் ஏற்படும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் சுமாராக தான் நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. புதிய கூட்டாளிகளால் தேவையற்ற மனசஞ்சலங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமுடனிருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

உத்தியோகம்
பணியில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். செய்யும் பணியில் இடையூறுகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்துக் கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானமுடனிருப்பது நல்லது.

அரசியல்
மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருந்தாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறுகள் உண்டாகும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்தாலும் எந்த வொரு காரியத்திலும் திருப்தி இருக்காது. உடன் பழகுடவர்களுடன் எச்சரிக்கையுடனிருப்பது நல்லது.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் விலை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்காது. இதனால் பட்ட பாட்டிற்கு பலன் குறைவாக இருக்கும். போகும் நீர் வரத்து குறைவதால் பயிரிட அதிக செலவு ஏற்படும். புதிய பூமி மனை வாங்கும் முயற்சிகளில் விரயங்கள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளிலும் தாமத நிலை ஏற்படும்.

பெண்கள்
உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியாமல் போகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். 7&ம் வீட்டில் ராகு சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

கலைஞர்கள்
எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்து கொள்வது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகளில் சற்று இழுபறி நிலை ஏற்பட்டாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

மாணவ மாணவியர்
கல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புக்களால் வீண் பிரச்சனைகளுக்கு ஆளாவீர்கள். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. பொழுது போக்குளாலும் கல்வியில் நாட்டம் குறையும்.

குரு பகவான் மகம் நட்சத்திரத்தில் 05.07.2015 முதல் 07.09.2015 வரை
உங்கள் ராசியாதிபதி குரு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். ருண ரோக ஸ்தானமான 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற சிறு சிறு மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருந்தாலும் ஆடம்பரமாக செலவு செய்வதை தவிர்க்கவும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் தடையின்றி கிடைக்கும். போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் யாவற்றையும் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கப் பெற்றாலும் உடன் பணிபுரிபவர்களால் பிரச்சனைகள் ஏற்படும். 

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 08.09.2015 முதல் 17.11.2015 வரை
உங்கள் ராசியாதிபதியான குரு பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. எனவே உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உங்களுக்கே வீண் பிரச்சனைகளை உண்டாக்கி விடும். பொருளாதார நிலை ஒரளவுக்கு குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம்  செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றக் கூடும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது உத்தமம். செய்யும் தொழில் வியாபாரத்திலும் நிறைய போட்டிகள் நிலவும் உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு கூடும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 18.11.2015 முதல் 19.12.2015 வரை
குரு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 6&ம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை, கை கால் மூட்டுகளில் வலி போன்றவை உண்டாகும். உணவு விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்படும். திருமண மானவர்கள் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமையினை அடைய முடியும். பண வரவுகள் தேவைக்கேற்ற படியிருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். எதிர் பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும். 08.01.2016 முதல் ராகு 6&ல் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மறையும்.

குரு பகவான் அதிசாரமாக கன்னி ராசியில் 20.12.2015 முதல் 19.01.2016 வரை
குருபகவான் இக்காலங்களில் அதிசாரமாக ராசிக்கு 7ஆம் வீடான கன்னி ராசியில் சஞ்சாரம் செய்வதால் தடைபட்ட திருமண சுப காரியங்கள் கை கூடும்.தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறுவதால் லாபங்கள் பெருகும்.பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களும் நினைத்த இடமாற்றங்களையும் பதவி உயர்வுகளையும் பெறுவார்கள். பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பொன், பொருள் சேரும். கொடுக்கல் வாங்கலில் லாபம் பெருகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். விவசாயிகளுக்கு விளைச்சல்கள் பெருகும். அரசு வழியிலும் ஆதரவு கிடைக்கும்.

குரு பகவான் வக்ர கதியில் 20.01.2016 முதல் 18.05.2016 வரை
குரு பகவான் வக்ர கதியிலிருப்பதால் இக்காலங்களிலும் அனுகூலமானப் பலன்களை பெற முடியும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபத்தை அடைவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியும் பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியிலிருந்த பூர்வீக சொத்து வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் அமையும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறும். உடன் பணிபுரியவர்களின் ஒத்துழைப்பால் வேலை பளு குறையும். எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 19.05.2016 முதல் 11.07.2016 வரை
உங்கள் ராசியாதிபதியான குரு பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதம் போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும். ராகு 6&ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. கணவன் மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படவும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 12.07.2016 முதல் 02.08.2016 வரை
குரு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன் மனைவியிடையேயும் அடிக்கடி கருத்து வேறுபாடுகளை உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் தாமதப்படும். உற்றார் உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். பொருளாதார நிலையும் சுமாராக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிக்கல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது, பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல் படுவது நல்லது. சனி பகவான் 9&ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர் பாராத பயணங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்தே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் போட்டி பொறாமைகளால் வர வேண்டிய வாய்ப்புகள் கை நழுவி போகும்.

பூரட்டாதி 4ஆம் பாதம்
யாருக்கும் தொந்தரவு தராத குணமும், இளகிய மனமும் கொண்ட உங்களுக்கு ராசியாதிபதி குரு பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவில் நெருக்கடிகள் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் திறம் பட செயல்பட முடியாமல் போகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.

உத்திரட்டாதி
பேச்சில் வேகம் இருந்தாலும் எப்பொழுதும் உண்மையே பேசுக்  கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ராசியாதிபதி குரு பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களிலும் மற்றவர்கள் குறை காண்பார்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படும்.

ரேவதி
எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு ராசியாதிபதி குரு பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்  & 1,2,3,9,
கிழமை & வியாழன், ஞாயிறு
திசை  & வடகிழக்கு
நிறம்  & மஞ்சள், சிவப்பு
கல்   & புஷ்ப ராகம்
தெய்வம் & தட்சிணாமூர்த்தி

பரிகாரம்
குரு பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். குரு பகவான் 6ல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

please contact my postal adress
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

No comments: