Wednesday, July 22, 2015

சுக்கிரனும் மாளவிகா யோகமும்



   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 





" இந்த நாள் "



                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 







ஒருவர் வளமான வாழ்க்கை வாழ்வதை பார்த்தால் அவனுக்கென்ன சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார் என கூறுவதை கேட்டிருக்கிறோம். இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது சுக்கிரன் அமையும் இடத்தை பொருத்தே அமையும். சுக்கிர திசை வந்தால் சூப்பராகி விடுவோம் என எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் பலருண்டு. சுக்கிரன் அசுர குரு என்றாலும் சுப கிரகம் என்பதால் யோகத்தை அள்ளி தருவார். நாம் வாரிக் கொள்வோம் என எண்ணக் கூடாது. 

சுக்கிரன் வலுப் பெற்று அமைந்தால் மட்டுமே நற்பலனை தருவார். சுக்கிரன் சூரியனை ஒட்டியே சஞ்சரிப்பதால் அஸ்தங்கம் அடைந்து விட்டால் வாழ்க்கை நிலையும் அஸ்தங்கம் தான். ரிஷபம் துலாத்தில் ஆட்சியும் மீனத்தில் உச்சமும் கன்னியில் நீசமும் பெறும் சுக்கிரன் இரு வீட்டு ஆதிபத்யம் கொண்டவர் என்பதால் ஒரு வகையில் நற்பலனை கொடுத்தாலும் மற்றொரு வகையில் கெடுதலையும் செய்து விடுவார்.

     சுக்கிர பகவான் தன் நட்பு வீடுகளாகிய மிதுனம், கன்னி (புதனின் வீடு), மகரம் கும்பம் (சனியின் வீடு) போன்றவற்றில் அமைகின்ற போதும் புதன், சனியுடன் சேர்க்கை பெறும் போதும் அதிகமான நற்பலனை உண்டாக்குவார். மற்ற கிரகங்களின் சேர்க்கை-யுடனிருந்தால் நற்பலனை ஏற்படுத்த மாட்டார் என்றாலும் கேந்திர ஸ்தானங்களில் ஆட்சி உச்சம் பெறும் போது பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகத்தை ஏற்படுத்துகிறார். 

     உதாரணமாக மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7ஆம் வீடான (துலாத்தில்) தன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்றாலும், ரிஷப லக்னத்திற்கு தன் வீடான ரிஷபத்தில் ஆட்சி பெறும் போதும், மிதுனத்திற்கு 10ஆம் வீடான ஜீவன ஸ்தானத்தில் உச்சம் பெறுகின்ற போதும், கடகத்திற்கு 4ஆம் வீடான துலாத்தில் ஆட்சி பெற்றும், சிம்மத்திற்கு 10ஆம் வீடான மேஷத்தில் ஆட்சி பெற்றும், கன்னிக்கு 7ஆம் வீடான மீனத்தில் உச்சம் பெற்றும், துலாத்திற்கு தன் சொந்த லக்னத்திலேயே ஆட்சி பெற்றும், விருச்சிகத்திற்கு 7லும் தனுசுக்கு 4லும் மகரத்திற்கு 10லும் கும்பத்திற்கு 4லும் மீனத்திற்கு லக்னத்திலும் ஆட்சி உச்சம் பெற்று அமையப் பெற்றால் மாளவியாயோகம் உண்டாகி அனுகூலமான நற்பலனை ஏற்படுத்துகிறது. எனினும்

     கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெறுகின்ற போது கேந்திராதிபதி தோஷமும் ஏற்பட வாய்ப்புள்ளதால் சற்று அனுகூலமற்ற பலன்களும் ஏற்பட வாய்ப்புள்ளன. களத்திர காரகனான சுக்கிரன் பாவிகள் சேர்க்கையுடன், சுபர் பார்வை இன்றி இருந்தாலோ நற்பலனை வழங்க இடையூறு உண்டாகும். சுக்கிரன் பலமிழந்து சனி ராகு (அ) கேது சேர்க்கையுடனிருந்தால் பெண்களால் அவப்பெயரை சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் சூரியனுடனும் இணைந்து மிகவும் நெருக்கத்தில் அஸ்தங்கம் அடைந்திருந்தாலும் அவனது வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும். இல்வாழ்வில் இன்பமே தொலைந்து விடும்.
                                                          
please contact my postal adress
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

No comments: