Friday, October 16, 2015

கல்வியும் பெற்றோர் கடமையும்





 காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் 
காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை 
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
 ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
 " இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


கல்வியும் பெற்றோர் கடமையும்


     கல்வி செல்வம் நமக்கு என்றும் அழியாத செல்வமாகும். திருடரால் திருட முடியாதது. தீயால் கருகாதது வெள்ளத்தால் அடித்து செல்ல முடியாதது. அள்ள அள்ள குறையாது. மற்றவருக்கு கற்று கொடுப்பதால் வளருமே தவிர குறையாது. கல்வி ஒருவருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பை தரும். ஒருவன் தாம் கற்ற கல்வி ஏழு பிறப்பிற்கும் உதவும் என வள்ளுவர் கூறியுள்ளார்.

     ஒரு குழந்தைக்கு பிறந்தவுடன் முதல் ஆசிரியராக தாய் விளங்குகின்றாள். மெல்ல மெல்ல சிறு சொற்களை கற்றுக் கொடுத்து அவனை பேசும் படி கற்-று கொடுக்கிறாள். ஆக பிறந்த உடனேயே மனிதனுக்கு கல்வி உண்டாகி விடுகிறது. கல்விக்கான வயதை அடைந்தவுடன் பள்ளியில் சேர்க்க முயற்சி எடுக்கின்றோம்.

     நமது பண்பாட்டின் படி அனைத்திற்கும் நேரம் காலம் பார்த்து செய்வதை வழக்கமாக கொண்டுள்ளோம். கல்வி என்பது நமக்கு அழிவில்லாத சொத்து. இதனை கற்க நேரம் காலம் பார்க்க வேண்டியது அவசியம். நமது முன்னோர்கள் எதை செய்வதற்கும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று வகுத்து உள்ளார்கள். காரணம் இல்லாமல் காரியம் இல்லை. எனவே ஒரு குழந்தைக்கு கல்வி கற்க ஆரம்பிக்கும் போது அதன் வாழ்க்கைப் பாதை வெளிச்சமாக மேம்பாடு அடைய வேண்டும். அதற்கான நாள், நட்சத்திரம் தேர்ந்து எடுத்து செய்ய நமக்கு முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர்.

      முதல் முதலில் கல்வி தொடங்க அசுவினி, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, உத்திராடம், திருஒணம், அவிட்டம், உத்திரட்டாதி,  ரேவதி போன்ற நட்சத்திர நாட்களும். துதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி ஆகிய திதிகளும். மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம் தனுசு, மகரம், மீனம் ஆகிய லக்கின  நேரங்களிலும்  திங்கள், புதன், வியாழன், வெள்ளி, ஆகிய நாட்களில் முதல் முதலில் கல்வி கற்க தொடங்குவது மிகவும் சிறப்பு. கல்வி தொடங்கும் நேரத்தில்  லக்னத்திற்கு 4,8ம் வீடுகளில் பாவகிரகங்கள் ஏதும் இல்லாமல் சுத்தமாக இருப்பது மிகவும் நல்லது. 

     ஒரு வயதான பெரியவரை (பிராமணர், வேதம் அறிந்தவர்) ஒருவரை அழைத்து (அல்லது) குழந்தையின் தாத்தா தாய் மாமனையும் அழைக்கலாம். அவரை முன் நிறுத்தி முதலில் வீட்டில் சரஸ்வதி விநாயகர் தமிழ் கடவுளான முருகன் போன்ற தெய்வங்களின் படங்களுக்கோ  விக்ரகங்களுக்கோ பூசாற்றி அதன் முன்பாக பொறி கடலை பழம் தேங்காய் வைத்து பூஜிக்க  செய்ய வேண்டும். படங்களுக்கு முன்பாக ஒரு படி நெல் அல்லது அரிசியை சதுரமாக பரத்தி வைக்க வேண்டும். பூஜை முடிந்த பிறகு அக்குழந்தையின் கைகளை அந்த குருவானவர் (பெரியவர்கள்) பிடித்து அந்த பரத்திய நெல் அல்லது அரிசியில் ஸ்ரீஹரி என்ற திருமாலின் நாமத்தை எழுத வைத்து அதன் பிறகு தமிழ் உயிர் எழுத்தான அ, ஆ என்ற எழுத்தினை எழுத வைக்க வேண்டும். அதன் பிறகு அந்த அரிசியை அல்லது நெல்லை பழம் தேங்காய் வெற்றிலை பாக்குடன் வேஷ்டி சட்டை துண்டு போன்யவற்றை தட்சிணையாக வைத்து அந்த குருவுக்கு தானமாக அக்குழந்தையின் பெற்றோர் தர வேண்டும். பின்பு அக்குழந்தையை குருவின் காலில் விழுந்து வணங்க சொல்லி அவரின் ஆசியை பெற வைக்க வேண்டும். 

அன்றே பள்ளியில் சேர்க்க சிறப்பான நாளாக இருந்தால் ராகு காலம் எமகண்டம் இல்லாத நேரமாக பார்த்து சுப ஓரைகளான குரு சுக்கிரன் புதன் ஓரைகளில் பள்ளிக்கு அழைத்துப் போக வேண்டும். முதல் நாளன்று இனிப்பு வாங்கி குழந்தையின் கையில் அளித்து ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு வகுப்பில் வழங்க செய்ய வேண்டும். இத்துடன் பொறுப்பு முடிந்து விடாமல் ஆரம்ப நாள் முதலே குழந்தைக்கு நல்ல பழக்க வழக்கங்களை பெற்றோர் கற்றுத் தர வேண்டும். சூரியன் உதிப்பதற்குள் எழ வைக்க வேண்டும். காலைக் கடன்களை முடிக்க கற்றுத் தர வேண்டும். அதன் பிறகு சூரியனையும் தெய்வத்தையும் வணங்க கற்றுத் தர வேண்டும்.  

காலையில் படிக்கும் வழக்கத்தை கண்டிப்பாக கற்றுத் தர வேண்டும். வகுப்பில் மற்ற மாணவர்களை அனுசரித்து போக அறிவுரை கூற வேண்டும். அவர்களை அவர்களுக்கு தெரியாமல் கண்காணிக்க வேண்டும். அவர்கள் மாலையில் திரும்பியதும் வகுப்பில்  நடந்ததை கூற  ஆர்வம் காட்டுவார்கள். அதை செவி கொடுத்து கேட்க வேண்டும். தவறு செய்தால் அன்புடன் திருத்த வேண்டும். 

பள்ளிக்கு குழந்தை செல்ல அடம் பிடிக்கிறது என்றால் கண்டிப்பாக ஏதோ ஒரு காரணம் இருக்கும்.  அக்காரணத்தை பொறுமையுடன் பெற்றோர் கண்டறிந்து நிவாரணம் தேடுவது  சிறப்பு. நமது  அணுகு முறை தான் குழந்தைகளை நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் உருவாக்கும் என்பதை மறந்து விடக் கூடாது. பெரியவர்களுக்கு மரியாதை தர கற்றுக் கொடுக்க வேண்டும். வயது ஏற ஏற அவர்களாகவே தமது பொறுப்புகளை உணரும் படி செய்ய வேண்டும். அடிப்படை பலமாக அமைந்து விட்டால் மேல் எழும்பும் கட்டிடம் கண்டிப்பாக பலமானதாக தான் இருக்கும். 5ல் வளையாதது 50தில் வளையாது என்று கூறுவார்கள். சிறுவயது முதலே நாம் ஒரு உதாரணமாக இருந்து அவர்களை வழி நடத்தினால் எல்லாக் குழந்தையுமே புத்திசாலிகளாகவும் தன்மைபிக்கை மிக்கவர்களாகவும் உருவாகி விடுவார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. 

இதில் அன்னையர்கள் தான் குழந்தையின் முதல் ஆசிரியர். எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே என்ற பாடல் வரிகள் தாயை தான் குறிக்கிறது. குழந்தைகள் தாயின் அன்பிற்குக் கட்டுப்படுவார்கள். ஒரு குழந்தை நல்லபடி வளர வேண்டும் என்ற உள்ளம் கொண்டவள் தாய். தந்தை பொருளை தேடுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். என்றாலும் தாயானவள் அன்பின் வடிவம். மன்னிக்கும் மனது உடையவள். குழந்தையை தன் உயிருக்கு உயிராக எண்ணுபவள். பெற்றோர்களின் கண்காணிப்பில் வளரும் குழந்தைகள் கண்டிப்பாக நன்கு கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

Contact

For your consultation


Please sent Rs 500 for 5 Questions( with in  India)  per person , 25 US DOLLAR  For NRI  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) to  e-mail  for  horoscope reading

please contact my postal address  

Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

No comments: