Friday, February 27, 2015

அனைத்துலக வானியல் மற்றும் ஜோதிடவியல் மாநாடு.

முனைவர் மகாலெட்சுமி அம்மாவின் நேரடி அழைப்பிதழ்...

அனைத்துலக வானியல் மற்றும்

 ஜோதிடவியல் மாநாடு.

நாள் : 01.03.2015 (வரும் ஞாயிறு )
இடம் : குரு ஞானக் கல்லூரி, வேளச்சேரி, சென்னை.
குறிப்பு : கல்லூரி அருகில் உள்ள சைதை துரைசாமி அவர்களின் "அம்மா திருமண மண்டபத்தில்" முதல் நாள் இரவு தங்கி கொள்ளும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. வெளியூர் நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.





Friday, February 20, 2015

காதல், கலப்பு திருமணம்

காதல், கலப்பு திருமணம் 

இன்றைய இளைஞர்களுக்கு காதல் என்ற சொல்லே ஐஸ் கிரீம் சாப்பிடுவது போல இனிமையாக இருக்கும். இளைஞர்கள் மத்தியில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் பேய் என்றும் காதலைக் கூறலாம். காதல் செய்வதால் வரக்கூடிய சாதக பாதகங்களைப் பற்றியோசிப்பதற்கு  இன்றைய இளைஞர்களுக்கு நேரமில்லை. காதல் என்பது ஜாதி, மதம், இனம், மொழிகளைக் கடந்து, வரதட்சணை போன்ற பிரச்சனைகளுக்கும் ஓர் தீர்வு என்பதால் அது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், காதல் என்ற பெயரால் காம விளையாட்டுகளில் ஈடுபட்டு, பெற்றவர்களுக்கும் சுற்றத்தாருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் காதலர்களை ஏற்றுக் கொள்ள முடியாது தான். 

காதலுக்கு கண்ணில்லை என்பதால் காதலிக்கும் போது நிறை குறைகள் பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் திருமணத்திற்குப் பின் சின்ன சின்ன விஷயங்கள் கூட பூதாகரமாகி விடும். காதலிப்பது மன ரீதியாக ஆரோக்கியமான விஷயம் என்பதால், காதலிப்பதில் தப்பில்லை. திருமண வாழ்க்கையை அனுசரித்து வாழ  முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே காதலிப்பது நல்லது. ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது, ஏமாறுவது போன்றவை நடக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. காதலிக்கக்கூடிய வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லை. காதல் திருமணமும், கலப்புத் திருமணமும் அவரவரின் பிறந்த ஜாதகத்திலேயே கிரகங்களால் குறிப்பிடப்பட்டு இருக்கும். காதல் என்பது காமம் அல்ல. அது ஒரு அன்பின் ஈர்ப்பு. இனக்கவர்ச்சியும், உடல் உணர்ச்சியையும் காதல் என்ற பெயரால் அசிங்க படுத்தாமல் இருப்பது நல்லது. முதலில் மனதை புரிந்து கொள்ளுங்கள்.

ஜோதிட ரீதியாக காதலுக்கு முக்கிய காரணமாக விளங்கும் கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும். இதில் சந்திரன் மனோகாரகன். சுக்கிரன்  காதல், பாலியல் உணர்வுகளுக்கு காரகன். காதல் உணர்வுகளுக்கும் காம விளையாட்டுகளுக்கும் செவ்வாயின் பங்கும் உண்டு. ஏனென்றால், செவ்வாய் பெண்களுக்கு களத்திரகாராகனாவார். ஜென்ம லக்னத்திற்கு  5 ம் வீடும் 7ம் வீடும் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் போன்றவையும் பாவகிரகங்களால் பாதிக்கப்பட்டாலும், சந்திரன், சுக்கிரன், செவ்வாயுடன் 5,7 க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும், அந்த ஜாதகங்களுக்கு காதல் கண் மூடித்தனமாக அதிகரித்து திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகிறது. 

சந்திரன் மனோகாரகன் என்பதால் காதல் உணர்வை அதிகம் தூண்டி விடுவார். குரு பகவானிடம் வித்தை கற்கசீடராக சேர்ந்த சந்திரன் அழகாக இருந்ததால், குருவின் மனைவி தாராவின் ஆசை நாயகன் ஆனார்.  இதை அறிந்த குரு உன் அழகினால் தானே இந்தநிலை என சந்திரனை தேய்ந்து வளர சாபமிட்டார். இதனால் தான் சந்திரன் கெட்டதும் பெண்ணாலே என கூறுவார்கள். காதல் எல்லை தாண்டினால் பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு. சந்திரனை நிலா என்றும் கூறுவதுண்டு. எத்தனை காதலர்கள் நிலாவைப் பார்த்து பெருமூச்சு விட்டிருப்பார்கள். நிலவின் ஒளியில் மடியில் படுத்து மயக்கமொழி பேசியிருப்பார்கள். நிலா தூது செல்லாது என தெரிந்தும் எத்தனை காதலர்கள் தூது விட்டிருப்பார்கள். காதலர்கள் தம்பதிகள் ஆனதும் முதலில் செல்வது தேனிலவுக்குத் தானே.

திருமணம் என்பது இருமனங்களை ஒன்றுபடுத்தக்கூடிய சமயச் சடங்காகும். அவரவர் மொழி,  இனங்களுக்கேற்ப நடத்தப்படும் இந்த சடங்கானது பாரம்பரியமிக்கதாகும். இதிலிருந்து மாறி அவரவர் மனதிற்கேற்றவரை தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளும் காதல் வாழ்க்கையானது, இந்த சமய சடங்குகள் அனைத்தையும் தாண்டி கலப்புத் திருமணமாகவும் அமைகிறது. ஒருவரின் ஜாதகத்தில் 5ம்  வீடானது பூர்வீதத்தைப் பற்றி குறிப்பிடுவதாகும். இந்த 5ம் வீடானது பாதிக்கப்படுகின்ற போது உறவுகளிலிருந்து விலகி காதல் வயப்படக்கூடிய சூழ்நிலை கலப்புத் திருமணம் செய்து கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டாகிறது. 

ஒருவர் ஜாதகத்தில் 5 ஆம்  வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும், 5 ஆம் அதிபதி சனி, ராகு கேது சேர்க்கைப் பெற்றாலும், 5 இல் அமையக்கூடிய பாவிகளுடன் 7 ஆம் அதிபதி சேர்க்கைப் பெற்றாலும், 5,7 க்கு அதிபதிகள் இணைந்து உடன் பாவகிரகங்களின் தொடர்பு -ஏற்பட்டிருந்தாலும் காதல் வயப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு திருமணம் செய்யும் வாய்ப்பு உண்டாகும். 5,7 க்கு அதிபதிகள்  பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் ஒருவருக்கொருவர்  பார்த்துக்கொண்டு சனி, ராகு சேர்க்கைப் பெற்றாலும், காதல் ஏற்பட்டு கலப்பு திருமணம் நடைபெறுகிறது. 
ஒருவர் ஜாதகத்தில் 7 ஆம் வீடு களத்திர ஸ்தானமாகும். களத்திரகாரகன் சுக்கிரனாவார். 7 ஆம் வீட்டதிபதியும், சுக்கிரனும் சனி, ராகு போன்ற பாவிகளின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும், 7 இல் செவ்வாய் சனி, ராகு அமையப் பெற்று, சுபர் பார்வையின்றி இருந்தாலும் காதல் திருமணம் கலப்பு திருமணம் நடைபெறுகிறது. 7 ஆம் வீட்டில் கேது அமையப்பெற்று 7 ஆம் அதிபதியும் சுக்கிரனும் கேது சேர்க்கை அல்லது கேது சாரம் பெற்றிருந்தால் காதல் திருமணம், கலப்புத் திருமணம் நடைபெறும். ஜென்ம லக்னத்திற்கு 5ல் 1,7 க்கு அதிபதிகள் இருந்தாலும் 5 ம் அதிபதி பாவியாக இருந்து ஜென்ம லக்னத்தில் அமைந்து 7 ம் வீட்டை பார்வை செய்தாலும் காதலித்து திருமணம் செய்யும் வாய்ப்பு மற்றும் கலப்புத் திருமணங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். 

ஜென்ம லக்னத்திற்கு 7 ஆம் வீட்டில் ராகுபகவான் அமையப் பெற்று, 7 ஆம் அதிபதியும் சுக்கிரனும் ராகு சாரம் பெற்றிருந்தால், சிறிதளவாவது சாதியில் வேறுபட்ட ஒருவரை  கலப்புத் திருமணம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். ஜென்ம லக்னத்திற்கு 7 ஆம் வீட்டை குறிப்பிடுவது போல சந்திரனுக்கு 7 ஆம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு போன்ற கிரகங்களில் ஏதாவது இரு கிரகங்கள் அமையப் பெற்றாலும் பழக்கவழக்த்தில் மாறு பட்ட இடத்தில் திருமணம் செய்ய நேரிடும்.


Contact
Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) & 5 questions  to 
( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
Name ; Murugubalamurugan
Bank name  - Bank of Baroda
Savings Account No - 29900100000322
Branch name - VadapalaniChennai - 600026.
INDIA.MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA

Friday, February 13, 2015

திருமணம் சொந்தத்திலா அந்நியத்திலா



ஒருவருக்கு அமையக்கூடிய வாழ்க்கைத் துணையானது சொந்தத்தில் அமையுமா, அந்நியத்தில் அமையுமா என்பது திருமண வயதை அடைந்தவர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாகும். அக்காலங்களில் சொந்தங்கள் விட்டு போய்விடக்கூடாது என்பதற்காகவும், சொத்துக்கள் கைமாறி வெளியில்  சென்றால் பிறர் அனுபவிப்பார்கள் அதைவிட நம் சொந்தங்கள் அனுபவிக்கட்டுமே என்பதற்காகவும் ஒன்றுக்குள் ஒன்றாகவே சொந்தத்தில் திருமணத்தை செய்து முடிப்பார்கள். ஆனால் மருத்துவ ரீதியாக சொந்தங்களில் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தைகள் ஊனமாக பிறக்கும் என கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் சொந்தத்தில் திருமணம் செய்வதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது என்றாலும் தூரத்து சொந்தங்களில் திருமணம் செய்து வைக்கிறார்கள். சரி ஜோதிட ரீதியாக ஒருவருக்கு அமையக்கூடிய வாழ்க்கை துணையானது சொந்தத்தில் அமையுமா, அந்நியத்தில் அமையுமா என்பதைப் பற்றி பார்ப்போம். 

ஜென்ம லக்னத்திற்கு களத்திர ஸ்தானமான 7 ஆம் வீடும்,  களத்திரகாரகன் சுக்கிரனும் சுபகிரக சேர்க்கை, பார்வை மற்றும் சுபநட்சத்திரங்களில் அமையப் பெற்று இருந்தால் மனைவியானவள் நல்ல ஒரு கௌரவமான இடத்திலிருந்து அமைந்து மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும்
ஜென்ம லக்னத்திற்கு 7 ஆம் வீடும், சுக்கிரனும் சொந்த பந்தங்களைக் குறிக்கும் கிரகங்களின் சேர்க்கை பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் உறவில் திருமணம் நடைபெறக்கூடிய உன்னதமான அமைப்பு உண்டாகும். நவகிரகங்களில் முதன்மை கிரகமாக விளங்கக்கூடிய சூரியன் தந்தை காரகனாவார். ஜென்ம லக்னத்திற்கு 9 ஆம் இடம் தந்தை ஸ்தானமாகும். 9 க்கு 9 இடமாக, 5 ம் வீடு தந்தை வழி மூதாதையர் பற்றியும் பூர்வ புண்ணியத்தை பற்றியும் குறிப்பிடும் ஸ்தானமாகும். ஒருவரின் ஜாதகத்தில் 5,9 இல் சுபகிரகங்கள் அமையப் பெற்று 7 ஆம் அதிபதியும், சுக்கிரனும் சூரியன் சேர்க்கை அல்லது சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் போன்றவற்றில் அமையப் பெற்றோ, 5,9 க்கு அதிபதிகளுடன் 7ம் அதிபதியும். சுக்கிரனும் அமையப் பெற்றோ இருந்தால் திருமணமானது தந்தை வழி உறவில் அமையும். 

நவக்கிரகங்களில் தாய்காரகன் சந்திரனவார். தாய்மாமனை குறிக்கக்கூடிய கிரகம் புதன் ஆவார்.ஒருவர் ஜாதகத்தில் வளர்பிறை சந்திரனும், புதனும் சுபர் பார்வை பெற்றாலும், 7 ஆம் அதிபதி சுபராக இருந்து வளர்பிறை சந்திரன், புதன் சேர்க்கைப் பெற்றாலும், சுக்கிரனும் சந்திரன் அல்லது புதன் சேர்க்கை பெற்றாலும், 7 ஆம் அதிபதி  சந்திரன் புதன் நட்சத்திரங்களான ரோகினி, அஸ்தம், திருவோணம், ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்றவற்றில் அமையப்பெற்றாலும் தாய் வழி உறவில் அல்லது மாமன் மகளை மணம் முடிக்கக்கூடிய அமைப்பு, பெண் என்றால் மாமன் மகனை மணம் முடிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 

ஜென்ம  லக்னத்திற்கு 3 ஆம் இடமானது இளைய உடன் பிறப்பையும், 11 ஆம் இடமானது மூத்த உடன் பிறப்புகளையும் பற்றி குறிப்பிடக்கூடிய ஸ்தானமாகும். நவக்கிரகங்களில் செவ்வாய் சகோதர காரகனாவார். ஒருவரது ஜாதகத்தில் 7 ஆம் அதிபதியும், சுக்கிரனும் 3,11 க்கு அதிபதிகளுடன் சேர்க்கைப் பெற்று, சுபர் சாரம் மற்றம் சுபர் சேர்க்கை பெற்று, செவ்வாயின் சம்மந்தம் ஏற்பட்டிருந்தால் உடன் பிறந்தவர்களின் உறவினர்களின் வழியில் மண வாழ்க்கையானது அமையும். 

ஆக ஜென்ம லக்னத்திற்கு 7 ஆம் வீடும், சுக்கிரனும் பந்தங்களை குறிக்கக்கூடிய கிரகங்களான சூரியன், சந்திரன் செவ்வாய், புதன், குரு தொடர்புடன் அமைந்தால் நெருங்கிய உறவில் திருமணம் நடைபெறும். என்றாலும் 7 ஆம் அதிபதியோ, சுக்கிரனோ சனி, ராகு, கேது சேர்க்கை அல்லது சாரம் பெற்றிருக்கும் பட்சத்தில் நெருங்கிய உறவில் அமையாமல், தூரத்து உறவில் அந்நியத்தில் திருமணம் கைகூடும். சுபகிரகங்களின் ஆதிக்கம் 7 ஆம் வீட்டிற்கும், 7 ஆம் அதிபதிக்கும் இருக்குமேயானால் ஜாதி மத வேறுபாடுமின்றி பிறந்த குலத்திலேயே திருமணம் செய்யும் வாய்ப்பு உண்டாகும். 

ஒருவரது ஜாதகத்தில் 7 ஆம் வீட்டில் சனி அமையப் பெற்றாலோ, 7 ஆம் அதிபதி சனி சேர்க்கை பெற்றாலோ உறவுகளில் இல்லாமல் அந்நியத்தில் திருமணம் நடக்கும். சனிபகவானனவர் சுபகிரக சம்மந்தத்துடனிருந்தால் அந்நியத்தில் ஓரளவுக்கு நல்ல இடத்தில் வாழ்க்கை அமையும். 7 இல் அமையும் சனி & ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றாலும்,5ல் சனி & ராகு அல்லது கேதுயுடன் இணைந்தாலும், சனி,ராகு இணைந்து 7ம்    அதிபதியின் சேர்க்கை அல்லது சுக்கிரனின் சேர்க்கை பெற்றிருந்தாலும்  கலப்பு திருமணம், மதம் மாறி திருமணம், செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 


Contact
Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading
please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
Name ; Murugubalamurugan
Bank name  - Bank of Baroda
Savings Account No - 29900100000322
Branch name - VadapalaniChennai - 600026.
INDIA.MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA

Sunday, February 8, 2015

திருமணத்தின் மூலம் வாழ்வில் ஏற்படக்கூடிய முன்னேற்றங்கள்

திருமணத்தின் மூலம் வாழ்வில்
 ஏற்படக்கூடிய முன்னேற்றங்கள்

ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு சென்றவுடன், அந்த வீட்டில் எதிர்பாராத முன்னேற்றங்களும் பொருளாதார உயர்வுகளும் உண்டாகினால் இந்த பெண் வந்த நேரம் நல்ல நேரம். இவள் மகாலஷ்மி என எல்லோரும் போற்றுவார்கள். கஷ்டப்பட்டு ஜீவனம் நடத்தும் குடும்பத்தில் கூட மனைவி என்ற உறவு வந்தவுடன் அதிர்ஷ்டங்களும் தேடி வரும். வாழ்க்கைத் தரமும் உயரும், குப்பை மேட்டிலிருந்தவர்களும் கோபுரத்திற்கு வருவார்கள். மனைவி வந்த பின் தான் வாழ்க்கையில் மாற்றங்களும் உண்டாகும். பொன் பொருள் வரவு, தொழிலில் உயர்வு, சுக வாழ்வு, சொகுசாக அமையும். 

ஜென்ம லக்னத்திற்கு 7 ஆம் வீடானது களத்திர ஸ்தானமாகும். சுக்கிரன் களத்திர காரகனாவார். பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் 7 ஆம் வீடும், சுக்கிரனும் ஆட்சி உச்சம் பெற்று அமைந்தால் திருமணத்திற்கு பின் அவர் வாழ்வில் பொருளாதார மேன்மைகளும் உயர்வுகளும் உண்டாகும். 

ஜென்ம லக்னத்திற்கு 2 ஆம் இடம் தனஸ்தானம் ஆகும். 11 ஆம் இடம் லாப ஸ்தானம் ஆகும்.  ஒருவரின் ஜாதகத்தில் 2,11 க்கு அதிபதிகள் 7 ஆம் வீட்டு அதிபதியுடனோ, சுக்கிரனுடனோ இணைந்து பலம் பெற்றிருந்தாலும், 7 ஆம் அதிபதியுடன் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் திருமணத்திற்குப் பின் வாழ்க்கைத் தரமே உயர்ந்து எல்லாவகையிலும் மேன்மைகள் உண்டாகும். 

ஜென்ம லக்னத்திற்கு 4 ஆம் பாவம் வீடு, வாகன யோகத்தை குறிக்கக்கூடிய ஸ்தானமாகும். ஜாதகத்தில் 4 ஆம் அதிபதியும், 7 ஆம் அதிபதியும், சுக்கிரனும் பலம் பெற்றிருந்தாலும் 4,7 க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் திருமணத்திற்கு பின் சொந்த பூமி மனை வீடு யோகம், வண்டி வாகன வசதிகள் போன்ற யாவும் சிறப்பாக அமையும். 4,7 க்கு அதிபதிகள் சுக்கிரனுடன் இணைந்து ஆட்சி உச்சம் பெற்றோ, பரிவர்த்தனை பெற்றோ, பலமாக இருந்தால், சிறப்பாக தொழில் யோகம் உண்டாகி நிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதிலும் 10 ஆம்  அதிபதியுடன் 7 ஆம் அதிபதி இணைந்திருந்தாலும், பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் திருமணத்திற்குப் பின் வாழ்க்கைத் துணையுடன் இணைந்து தொழில் செய்து வாழ்வில் உயரக்கூடிய யோகம் உண்டாகும். 

ஜென்ம லக்னத்திற்கு 7,10 க்கு அதிபதிகளுடன் சுக்கிரனின் சம்மதமும் ஏற்பட்டிருந்தால் கணவன், மன¬வி இணைந்து தொழில் மூலம் சம்பாதித்து ஏற்றங்கள், உயர்வுகளை அடைய முடியும். உபய லக்னமான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு 7,10 க்கு அதிபதிகள் இணைந்து பலம் பெற்றிருந்தால் எக்காரணத்தைக் கொண்டும் வெளியாட்களை கூட்டாளிகளாகச் சேர்க்காமல் மனைவியை மட்டுமே கூட்டாளியாக வைத்து தொழில் செய்வது மூலம் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். ஏனென்றால் உபயலக்னகாரர்களுக்கு  7 ஆம் இடம் பாதக ஸ்தானம் ஆகும்.

ஒருவர் ஜாதகத்தில் 10 ஆம் அதிபதி பலமாக அமைந்திருந்தாலும் 7 ஆம் அதிபதி அதிபலம் பெற்றிருந்தால் தங்கள் பெயரில் தொழில் செய்வதை விட அவர்களின் வாழ்க்கைத் துணையின் பெயரில் தொழில் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடையமுடியும்.

Contact
Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading
please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
Name ; Murugubalamurugan
Bank name  - Bank of Baroda
Savings Account No - 29900100000322
Branch name - VadapalaniChennai - 600026.
INDIA.MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA

Tuesday, February 3, 2015

மாத ராசிப்பலன் பிப்ரவரி 2015

 மாத ராசிப்பலன் & பிப்ரவரி & 2015

மேஷம்   ; அஸ்வினி, பரணி, கிருத்திகை&1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் ராகு 6&ல் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். இதனால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவும் முடியும்.   தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள்.
பரிகாரம். விநாயகரை வழிபடுவது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 12.02.2015 காலை 11.08 மணி முதல் 14.02.2015 மாலை 05.37  மணி வரை.

ரிஷபம்  ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11ல் கேது சஞ்சாரம் செய்வதும் வரும் 10&ஆம் தேதி முதல் செவ்வாய் 11&ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். பெரிய தொகைகளை கடனாக கொடுத்து லாபத்தைப் பெற முடியும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம் பட செயல்பட்டு கை நழுவிய பதவி உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள்.
பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 14.02.2015 மாலை 05.37 மணி முதல் 16.02.2015 இரவு 08.05மணி வரை.
.
மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 &ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்  சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட உங்களுக்கு  தனஸ்தானமான 2&ல் குருவும் 6&ல் சனியும் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்றாலும் 8&ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கரை எடுத்தக்கொள்வது நல்லது. சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும்.
பரிகாரம். சிவ பெருமானை வழிபாடு செய்வது பிரதோச கால விரதமிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் 16.02.2015 இரவு 08.05மணி முதல் 18.02.2015 இரவு 07.57 மணி வரை.

கடகம்     ;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட உங்களுக்கு முயற்சி ஸ்தானமான 3&ல் ராகு சஞ்சாரம்  செய்வது எடுக்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு வெற்றியினை ஏற்படுத்தும் என்றாலும் 8&ல் செவ்வாய் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பொருளாதார நிலை சுமாராக தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பூர்வீக சொத்துக்களாலும் நிம்மதி குறைவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். வேலை பளுவும் குறையும்.
பரிகாரம். முருகப் பெருமானை வழிபாடு  சஷ்டி விரதமிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் 18.02.2015 இரவு 07.57 மணி முதல் 20.02.2015 மாலை 07.15 மணி வரை.
சிம்மம்     ;  மகம், பூரம். உத்திரம்&1& ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&ல் சூரியன் சஞ்சரிப்பது ஓரளவுக்கு நற்பலனை ஏற்படுத்தும் என்றாலும் 2&ல் ராகு 8&ல் கேது சஞ்சாரம் செய்வதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்-&மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல்&வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும்.
பரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 20.02.2015 இரவு 07.15 மணி முதல்22.02.2015 இரவு 08.01 மணி வரை.

கன்னி ;  உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&ல் சனி, 6&ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 6&ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால்  நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

பரிகாரம். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 22.02.2015 இரவு 08.01 மணி முதல் 24.02.2015 இரவு 11.46 மணி வரை.

துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 &ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு 2&ல் சனியும் 4&ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எதிலும் சற்று நிதானமுடன் செயல் படுவதே நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும்.  உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெற முடியும்.
பரிகாரம். சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ªணையில் தீப மேற்றி வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் 24.02.2015 இரவு 11.46 மணி முதல் 27.02.2015 காலை 07.01 மணி வரை.

விருச்சிகம்; விசாகம்&4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&ல் சூரியனும் 9&ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது, சனிப்பரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 31.01.2015 பகல் 01.17 மணி முதல் 02.02.2015 11.28 மணிவரை.
27.02.2015 காலை 07.01 மணி முதல் 01.03.2015 மாலை 05.17 மணி வரை.

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்&1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே
எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி  ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட உங்களுக்கு ஏழரை சனியில் விரய சனி நடைபெறுவது வீண் விரயங்களை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் மாத பிற்பாதியில் சூரியன் 3&ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் ஓரளவுக்கு அனுகூலங்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. கணவன் மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படவும்.
பரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 02.02.2015 11.28 மணி முதல் 04.02.2015 இரவு 11.17 மணி வரை.

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட உங்களுக்கு 3&ல் கேதுவும் 7&ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற முடியும்.  பொருளாதார நிலை தேவைக்கேற்ற படியிருக்கும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரம் ஒரளவுக்கு ஏற்றம் அளிக்கும்.
பரிகாரம். சிவபெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 04.02.2015 இரவு 11.17 மணி முதல் 07.02.2015 மதியம்12.09 மணி வரை.
.

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 8&ல் ராகுவும் 12&ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் தடைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும்.
பரிகாரம். சிவ பெருமானை வழிபாடு செய்வது அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 07.02.2015 மதியம் 12.09 மணி முதல் 09.02.2015 இரவு 12.47  மணி வரை.

மீனம் ; பூரட்டாதி&4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன  ராசி நேயர்களே
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் உங்களுக்கு 9&ல் சனியும் 11&ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எதிலும் வெற்றிகளை பெறுவீர்கள். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.  சொந்தமாக வீடு வாகனம் போன்றவற்றை வாங்க கூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும். பொன் பொருள் சேரும் கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும்.  தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும்.
பரிகாரம். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 09.02.2015 இரவு 12.47 மணி முதல் 12.02.2015 காலை 11.08 மணி வரை.



சுப முகூர்த்த நாட்கள்

02.02.2015  தை மாதம், 19 ஆம் தேதி திங்கள்கிழமை, சதுர்தசி திதி, புனர்பூச  நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 09.30 மணி முதல்  10.30 மணிக்குள் மீன இலக்கினம்  வளர்பிறை.

05.02.2015  தை மாதம், 22 ஆம் தேதி வியாழகிழமை, துதியை திதி, மக  நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 08.00 மணி முதல்  09.00 மணிக்குள் கும்ப இலக்கினம் தேய்பிறை.

09.02.2015  தை மாதம், 26 ஆம் தேதி திங்கள்கிழமை, பஞ்சமிதிதி, ஹஸ்த  நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.00 மணி முதல்  70.00 மணிக்குள் மகர இலக்கினம்  
தேய்பிறை.



11.02.2015  தை மாதம், 28 ஆம் தேதி  புதன்கிழமை, சப்தமி திதி, சுவாதி  நட்சத்திரம் சித்த யோகம் காலை 07.00 மணி முதல்  07.30 மணிக்குள் கும்ப இலக்கினம்  தேய்பிறை.
.

15.02.2015  மாசி மாதம், 03 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை, ஏகாதசி திதி, மூல  நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 07.00 மணி முதல்  08.00 மணிக்குள் கும்ப இலக்கினம்  தேய் பிறை.

22.02.2015  மாசி மாதம், 10 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை, சதுர்த்தி திதி, ரேவதி  நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 08.00 மணி முதல்  09.00 மணிக்குள் மீன இலக்கினம்  வளர்பிறை.

      23.02.2015  மாசி மாதம், 11 ஆம் தேதி திங்கள்கிழமை, பஞ்சமிதிதி அசுவினி  நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 09.30 மணி முதல்  10.30 மணிக்குள் மீன இலக்கினம்  வளர்பிறை.  

Contact

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading
please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA