Tuesday, March 31, 2015

மாத ராசிப்பலன் ஏப்ரல் 2015

மாத ராசிப்பலன்  ஏப்ரல் 2015


காணத்தவறாதீர்

 விஜய் டிவியில்

தினமும் 

 காலை 05.45  மணி முதல் 05.55  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 



" இந்த நாள் "

என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்

மேஷம்   ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே 
       தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு  எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவி செய்யும் பண்பு கொண்ட உங்களுக்கு  செய்வதும், 4&ல் குரு, 8&ல் சனி 12&ல் சூரியன்,  சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. ஜென்ம ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6&ம் வீட்டில் ராகு சஞ்சாரம்  செய்வதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.   கணவன்&மனைவியிடையே ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உங்களுக்கு அஷ்டம சனியும் தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகளின் ஆதரவுகள் ஒரளவுக்கு கிடைப்பதால் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும்.

பரிகாரம். சிவ பெருமானை வழிபடுவது, விநாயகரை வழிபடுவது, சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது, தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது  உத்தமம்.
சந்திராஷ்டமம் சந்திராஷ்டமம் 07.04.2015 இரவு 11.19 மணி முதல் 10.04.2015 காலை 07.28 மணி வரை.


ரிஷபம்  ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களேர் 
          தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைபடாதவராகவும் எதற்கும் உணர்ச்சிவசப்படாதவராகவும் விளங்கும் பண்பு கொண்ட உங்களுக்கு 3&ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் 11&ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். 
பண வரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். கடந்த காலப் பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறையும். தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். 7&இல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. போட்டி பொறாமைகளை சமாளித்து முன்னேற முடியும். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். 

பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது முருகப்பெருமானை வழிபாடு செய்வது, துர்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 10.04.2015 காலை 07.28 மணி முதல் 12.04.2015 பகல் 12.57 மணி வரை.

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே 
        எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும் பிறரை எளிதில் நம்பாத குணமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&ல் சனியும், 11&ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதும்  மாதகோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்தது நிறைவேறும். அற்புதமான நற்பலன்களை அடைய முடியும். பொருளாதார நிலை மேன்மையாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினை பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். 

பரிகாரம். தட்சினா மூர்த்தியை வழிபாடு செய்வது துர்கை அம்மனை வழிபாடு செய்வது  நல்லது.
சந்திராஷ்டமம் 12.04.2015 பகல் 12.57 மணி முதல் 14.04.2015 பகல் 03.52 மணி வரை.

கடகம்     ;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே மற்றவர்களிடம்  எவ்வளவு எளிதில் நட்பு வைத்துக் கொள்ளமுடியுமோ அவ்வளவு எளிதில் தொடர்பை  துண்டிக்கவும் தயங்காத குணம்  கொண்ட உங்களுக்கு 3-&ல் ராகுவும் 9&ல் சூரியனும், 10&ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினை பெறுவீர்கள். பண வரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளை கிடைக்கப் பெறுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கும் கௌரவமான நிலைகள் ஏற்படும். பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். எதிர் பார்க்கும் இடமாற்றங்களும் உயர் பதவிகளும் கிடைக்கப் பெறும்.

பரிகாரம். குருப்ரீதி, தட்சிணா முர்த்தியை வழிபாடு செய்வது  சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது நல்லது.
சந்திராஷ்டமம் 14.04.2015 பகல் 03.52 மணி முதல் 16.04.2015 மாலை 04.55 மணி வரை.

சிம்மம்     ;  மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே தனக்கு இடையூறு செய்பவர்களை வேரோடு களையும் ஆற்றலும் தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் பண்பும் கொண்ட உங்களுக்கு 2&ல் ராகுவும், 8&ல் கேது,  சூரியனும் சஞ்சாரம் செய்வதும் சாதகற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. சனி ஜென்ம ராசிக்கு 4&இல் சஞ்சரித்தாலும் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு ஏற்றமானப் பலன்களை பெற முடியும். கணவன்-&மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் உண்டாகும். உடலில் உண்டாக கூடிய பாதிப்புகளாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கப் பெறும்.

பரிகாரம். சிவ வழிபாடு மேற்கொள்வது, ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகரை வழிபடு  நல்லது.
சந்திராஷ்டமம் 16.04.2015 மாலை 04.55 மணி முதல்18.04.2015 மாலை 05.22 மணி வரை.


கன்னி ;  உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே 
      எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்பும் குணம்  கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகுவும், 7&ல் சூரியன், கேதுவும்,  8&ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் இக்காலங்களில் நன்மை தீமை கலந்தப் பலன்களையேப் பெற முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்கனால் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். பிள்ளைகளை அனுசரித்து நடப்பது நல்லது. பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்பபது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்  பெறும். குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். 

பரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 18.04.2015 மாலை 05.22 மணி முதல் 20.04.2015 மாலை 06.54 மணி வரை.



துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே 
     வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு மாத முற்பாதி வரை 6&ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் 10&ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியிலிருப்பதும் ஓரளவுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாகவே நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலனை பெற முடியும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். சிலருக்கு வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணி புரியும் வாய்ப்பும் உண்டாகும்.

பரிகாரம். சனி பகவானை வழிபாடு செய்வது ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 20.04.2015 மாலை 06.54 மணி முதல் 22.04.2015 இரவு 11.10 மணி வரை.

விருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே 
       நியாய  அநியாயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 6ல் செவ்வாயும்,11&ல் ராகுவும் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 6ல் சஞ்சரிக்கவிருப்பதும் ஓரளவுக்கு சுமாரான நற்பலன்கள் உண்டாகும். அற்புதமான நற்பலன்களை பெற முடியும். சொந்தமாக வீடு வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல பல அனுகூலங்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். தாராள தன வரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகள் லாபமளிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும்.

பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது  சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 22.04.2015 இரவு 11.10 மணி முதல் 25.04.2015 காலை 07.12 மணிவரை.

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே 
      எல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் பண்பு கொண்ட உங்களுக்கு 4&ல் சூரியன் 5&ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், 12&ல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் சஞசாரம் செய்வதும் சுமாரான அனுகூலங்களை உண்டாக்கும் அமைப்பாகும். தேவயைற்ற வீண் அலைச்சல்கள் உண்டாகும் என்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். முடிந்த வரை குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும்.

பரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது விஷ்ணு பகவானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 25.04.2015 காலை 07.12 மணி முதல் 27.04.2015 மாலை 06.37 மணிவரை.

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே
      நல்ல வாக்கு சாதுர்யம் படைத்தவராகவும் பேச்சில் தங்களுடைய சாமர்த்தியத்தை வெளிப்படுத்த கூடியவராகவும் திகழும் கொண்ட உங்களுக்கு 3&ல் சூரியன், 7&ல் குரு சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் நினைத்தது நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது.  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உற்றார், உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமான செயல்படுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொது நலக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.

பரிகாரம். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 27.04.2015 மாலை 06.37 மணி முதல் 30.04.2015 காலை 07.32 மணிவரை.

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே 
      பிறர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளில் தேவையின்றி தலையிடாத நியாயவாதிகளாக இருக்கும் உங்களுக்கு 3&ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாதபிற்பாதியில் 3&ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினை ஏற்படுத்தும். ஒரளவுக்கு அனுகூலமளிப்பதாகவே அமையும்.  உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படுவது நல்லது. வர வேண்டிய பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சுப விரயங்களும் உண்டாகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். 

பரிகாரம். சிவ பெருமானை வழிபாடு செய்வது, அம்மன் வழிபாடு மேற்கொள்வது  நல்லது.
சந்திராஷ்டமம் 02.04.2015 இரவு 12.36 மணி முதல் 05.04.2015 மதியம் 12.50 மணி வரை.
30.04.2015 காலை 07.32 மணி முதல் 02.05.2015 மாலை 07.38 மணிவரை 


மீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே 
      மற்றவர்களின் சுக துக்கங்களையும் தம்முடைய சுக துக்கங்களாக நினைகும் குணம் கொண்ட உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரிப்பதும் 2&ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும், 5&ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியில் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பாகும் எடுக்கும் முயற்சிகளில் தடைகளையே சந்திப்பீர்கள். சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள், நிம்மதி குறைவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில்  உண்டாக கூடிய பாதிப்புகளால் அன்றாட பணிகளில் திறம்பட செயல் பட முடியாமல் போகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நிலைஏற்ற இறக்கமாக இருக்கும். வீடு மனை போன்றவற்றை வாங்குவதன் மூலம் செய்யும் செலவுகள் சுபச் செலவாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை தடைகளுக்குப்பின் அடைந்து விட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். 

பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிவன் முருகன் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 05.04.2015 மதியம் 12.50 மணி முதல் 07.04.2015 இரவு 11.19 மணி வரை.


சுப முகூர்த்த நாட்கள்

03.04.2015  பங்குனி மாதம், 20 ஆம் தேதி வெள்ளிகிழமை, சதுர்தசி திதி, உத்திர  நட்சத்திரம் சித்த யோகம் காலை 09.00 மணி முதல்  10.00 மணிக்குள் ரிஷப இலக்கினம்  
வளர்பிறை.

      06.04.2015  பங்குனி மாதம், 23 ஆம் தேதி திங்கட்கிழமை, துதியை திதி, சுவாதி  நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 06.30 மணி முதல்  07.30 மணிக்குள் மேஷ இலக்கினம் தேய்பிறை.

08.04.2015  பங்குனி மாதம், 25 ஆம் தேதி புதன்கிழமை, சதுர்த்தி திதி, அனுஷ  நட்சத்திரம் சித்த யோகம் காலை 09.00 மணி முதல்  10.00 மணிக்குள் ரிஷப இலக்கினம்  
தேய்பிறை.

15.04.2015  சித்திரை மாதம், 02 ஆம் தேதி  புதன்கிழமை ஏகாதசி திதி, சதய  நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.00 மணி முதல்  07.30 மணிக்குள் மேஷ இலக்கினம்  தேய் பிறை.

22.04.2015  சித்திரை மாதம், 09 ஆம் தேதி புதன்கிழமை, சதுர்த்தி திதி ரோகினி  நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.0 மணி முதல்  07.30 மணிக்குள் மேஷ இலக்கினம்  
வளர்பிறை.

Contact



please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

திருமண வாழ்வில் தசா புக்தி நாதர்களின் பங்கு


காணத்தவறாதீர்

 விஜய் டிவியில்

தினமும் 

 காலை 05.45  மணி முதல் 05.55  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 



" இந்த நாள் "

என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்


திசை என்பது நவ கிரகங்களில் எந்த கோளின் திசை நடைபெறுகிறதோ அக்கிரகத்தின் ஆட்சிக் காலமாகும். நடப்பில் எந்த கோளின் திசை நடைபெறுகிறதோ அக்கிரகமே தசா நாதனாவார். தசா நாதனின் தன்மைக்கேற்ப அத்திசையின் பலா பலன்களும் நடைபெறும். 120 வருட காலம் கொண்ட விம்சோத்திரி திசையே பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு 100&க்கு அதிகமான 20 வருடங்கள் எனப் பொருள். திசை காலங்கள் மேலும் புக்தி காலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. கோளின் சேர்க்கைகள், ராசிகள் அமையும் வீடுகளின் விதம், வீடுகளுக்கிடையே உள்ள தொடர்புகள் ஆகியவை ஒரு மனிதனின் வாழ்வில் தங்களது பங்கை அளிக்கின்றன. நல்ல யோகம் தரும் கோளின் திசை, புக்தி நடைபெறும் போது ஒரு மனிதனின் வாழ்வில் நல்ல முன்னேற்றங்களையும், யோகங்களையும் அளிக்கின்றது. பெரிய மாற்றம் உண்டாகிறது.

நவ கோள்களில் இயற்கை சுபர், இயற்கை பாவர் என இரு வகைகள் உள்ளன.

இயற்கை சுபர் ;
குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன் சுபர் சேர்க்கைப் பெற்ற புதன்

இயற்கை பாவர் ;
சனி, சூரியன், செவ்வாய், ராகு கேது, தேய்பிறை சந்திரன், பாவர் சேர்க்கைப் பெற்ற புதன் போன்றவையாகும்.

இயற்கை சுபர்களின் தசா புக்தி நடைபெறும் காலங்களில் திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமணம் எளிதில் கை கூடும். அழகான புத்திர சிறப்பும் அமையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். அதுவே பாவ கோள்களின் தசா புக்தி நடைபெறும் காலங்களில் திருமண சுப காரியங்கள் நடைபெறுவதில் தடை தாமதம் ஏற்படும். புத்திர பாக்கியம் அமைவதிலும் சிக்கல் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்பு குறையும். குறிப்பாக சனி, ராகு கேது போன்ற கோள்களின் தசாபுக்தி காலங்களில் முன்கோபம், வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, இல்வாழ்க்கையில் ஈடுபாடற்ற நிலை கணவன் மனைவி பிரியக் கூடிய சூழ்நிலை உண்டாகும். என்றாலும் பாவ கோள்கள் லக்னாதிபதியானாலும் லக்னாதிபதிக்கு நட்பு கோளாக இருந்தாலும், மேற்கூறிய கெடு பலன்கள் குறையும்.

மண வாழ்க்கையானது எந்தெந்த தசாபுக்தி காலங்களில் இனிமையாக, மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் எனப் பார்க்கும் போது குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், சுபர் சேர்க்கை பெற்ற புதன் போன்ற இயற்கை சுபர்கள் பலவீனமடையாமல் (நீசம், அஸ்தங்கம்,வக்ரம்,சஷ்டாஷ்டமம்) அமைந்திருந்தால் மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரி கோணாதிபதிகளின் தசா புக்தி காலங்களிலும் லக்னாதிபதிக்கு நட்பு கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் குடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்கும். களத்திர ஸ்தானாதிபதிக்கு நட்பு கோள்களின் தசா புக்திகள் நடைபெறும் போதும் மணவாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

இயற்கை பாவ கோள்களாகிய சூரியன் செவ்வாய் ஆகிய கோள்கள் நட்பு கோள்களின்  சேர்க்கைப் பெற்று சுபர் பார்வையுடன் அமைந்து அக்கோள்களின் தசா புக்தி நடைபெற்றாலும் இல்வாழ்க்கை இனிப்பாகவே அமையும். தசா நாதனுக்கு புக்தி நாதனின் பங்கைப்பற்றி பார்க்கும் போது, தசா நாதனுக்கு நட்பு கோள்களின் புக்தி காலத்திலும், தசா நாதனுக்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்ற கோள்களின் புக்தி காலத்திலும் மண வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். பாவ கோள்களாக இருந்தாலும் அவை சுபர் சாரம், சுபர் சேர்க்கை, சுபர் பார்வையுடன் அமையப் பெற்றிருந்தால் குடும்ப வாழ்வில் சிறு சிறு பிரச்சனைகள் எற்பட்டாலும் ஒற்றுமைக் குறையாமலிருக்கும்.

திருமண வாழ்வில் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய தசாபுக்திகள் பின்வருமாறு;  

ஜென்ம லக்னத்திற்கும், சந்திரனுக்கும் 2,7 ஆமிடங்களில் அமைகின்ற பாவ கோள்களின் தசா புக்தி காலங்களில் குடும்ப வாழ்வில் ஒற்றுமை குறைவு உண்டாகிறது. 7&ஆமிடமும், 7&ஆமதிபதியும், சுக்கிரனும், 6&ஆம் அதிபதியின் சேர்க்கையோ, தொடர்போ பெற்று 6ஆமதிபதியின் திசை புக்தி நடைபெற்றால் குடும்ப வாழ்வில் வீண் வாக்கு வாதங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு, வழக்காடு மன்றங்களுக்கு செல்லக் கூடிய நிலை, பிரிவு உண்டாகிறது.

7&ஆமிடமும், 7&ஆமதிபதியும், சுக்கிரனும் 8&ஆமதிபதியின் சேர்க்கையோ, தொடர்போ, பெற்று இருந்தாலும் 7&க்கு 8&ஆமிடமான 2&ஆமதிபதியின் சேர்க்கை, தொடர்பு, பார்வை பெற்று பாவகோள்களின் தொடர்பு ஏற்பட்டிருந்தாலும், கணவனுக்கோ, மனைவிக்கோ, ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட்டு, அதனால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி குறைவு உண்டாகும். 7&க்கு 2&ஆமிடமான 8&ஆமிடத்தில் பாவ கிரகங்கள் அமைந்து சுபர் பார்வையின்றி அதன் திசையோ புக்தியோ நடைபெற்றால் களத்திர வழி உறவுகளிடையே ஒற்றுமை குறைவு ஏற்பட்டு அதனால் கணவன் மனைவியிடையே மனகசப்பு உண்டாகும்.

களத்திர ஸ்தானமான 7&ஆமிடத்தில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பாவகோள்கள் அமையப் பெற்றாலும், களத்திர ஸ்தானாதிபதி ஒன்றுக்கு மேற்பட்ட பாவகோள்களின் சேர்க்கைப் பெற்றாலும், களத்திர காரகன் சுக்கிரன் ஒன்றுக்கும் மேற்பட்ட பாவ கோள்களுடன் அமைந்திருந்தாலும் களத்திர தோஷம் உண்டாகிறது. களத்திர தோஷத்தை ஏற்படுத்திய கிரகங்களின் புக்தி காலங்களில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், வெளி நபர்களின் தலையீட்டால் குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் ஏற்படும். நவகோள்களில் ராகு, கேது தன்னிலை மறந்து செயல் பட வைக்க கூடிய கோளாகும். ஒருவரின் ஜாதகத்தில் 7&ஆமதிபதிக்கோ களத்திரகாரகன் சுக்கிரனுக்கோ, 7&ஆமிடத்திற்கோ ராகுவின் ஆதிக்கம் அதிகமிருந்தால் தாம்பத்திய வாழ்வில் இச்சைகள் அதிகம் இருக்கும். ராகுவின் புக்தி காலங்களில் தன்னிலை மறந்து என்ன செய்கிறோம் என்பதையறியாமல் மிருகத்தனமாக செயல்படுவார்கள். இதனால் பலவித அசம்பாவிதங்களும் நிகழ்கின்றன.

திருமணம் என்ற நிகழ்வே இருவரின் உடல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் இனப் பெருக்கம் செய்வதற்கும் தான். குடும்ப வாழ்வில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சகித்து கொண்டு வாழ முடியும். குறிப்பாக தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருந்தால் எல்லா பிரச்சனைகளும் தவிடு பொடியாகிவிடும். இதற்கு தான் புருஷன் பொண்டாட்டி சண்டை பொழுது போனால் சரியாகி விடும் என்ற பழமொழியை கூறுவார்கள். அதுவே தாம்பத்ய வாழ்வில் ஒருவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்து மற்றொருவருக்கு அதில் ஈடுபாடு குறைவாக இருந்தால், மனமொத்து வாழ்வது கடினம். பருவ நிலை மாற்றம் போல சில நேரங்களில் சிலருக்கு உணர்ச்சிகள் தேவைகள் அதிகமாக இருக்கும். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் மற்றொருவரின் செயல்பாடுகளும் இருந்தால் அந்த வாழ்க்கை சொர்க்கம் தான்.

களத்திர காரகனும், காமத்துக்கு காரகனுமாகிய சுக்கிரன் சுபகோள்களின் சம்மந்தத்துடனிருந்தால் ஒருவருக்கு உண்டாக கூடிய உடல் உணர்ச்சிகள் தேவைகள் போன்றவை அளவாக அமைந்து தாம்பத்ய வாழ்க்கையும் இனிப்பாக இருக்கும். அதுவே சுக்கிரன் பாவ கோள்களின் சம்மந்தத்துடனிருந்தால் உடல் தேவைகள் அதிகரிக்கும். அந்த கோள்களின் தன்மைக்கேற்ப இத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக மிகவும் கடினமாக நடந்து கொள்வார்கள். சுக்கிரன் அலி கோள்களின் சம்மந்தத்துடனிருந்தால் தாம்பத்ய வாழ்வில் ஈடுபாடு குறைவு மற்றொருவரை முழு திருப்தி அடைய செய்ய இயலாத நிலை போன்றவை உண்டாகும்.

நவ கிரகங்களில் அலி கோள்கள் என கூறக் கூடியவை சனி, புதன் கேது, ஆகும். இக்கோள்களின் ஆதிக்கம் ஒருவரது ஜாதகத்தில் அதிகமாக இருக்குமானால் அதன் தசா புக்திகள் நடைபெறும் காலங்களில் தாம்பத்ய வாழ்வில் ஈடுபாடு குறைவு ஏற்பட்டு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

மோட்சகாரகன், ஞானக்காரகன் என கூறக்கூடிய கேதுவின் திசை புக்தி நடைபெறும் காலங்களில் தாம்பத்ய வாழ்வில் ஈடுபாடு குறைவு உண்டாகும். கேதுவின்திசையில் கேதுபுக்தி காலங்களிலும், மற்ற கோள்களில் திசையில் கேதுபுக்தி நடைபெறும் காலங்களிலும்  திருமண சுப காரிய முயற்சிகளில் தடை ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கை அமைய தாமதம் உண்டாகும். திருமணம் நடைபெற்றவர்களுக்கு உடல் உணர்ச்சிகளின் தேவைகள் குறைந்து தாம்பத்ய வாழ்வில் ஈடுபாடு இருக்காது. கணவன் மனைவி இருவரில் ஒருவருக்கு மேற்கூறிய தசா புக்தி நடைபெற்று, மற்றொருவருக்கு உடல் உணர்ச்சிகளை அதிகம் ஏற்படுத்த கூடிய கோள்களின் தசா புக்தி நடைபெற்றால் ஒருவர் தேவைகளை மற்றொருவர் பூர்த்தி செய்ய முடியாமல் போகும். இதனால் குடும்பத்தில் பிரிவு, பிரச்சனை வாக்குவாதங்கள் போன்றவை ஏற்படும்.

ஆனால் அலி கோள்களாகிய சனி புதன் கேது போன்றவர்கள் நல்ல கோள்களின் சாரத்தில் அமைந்தால்  தாம்பத்ய வாழ்க்கை சற்று மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுவே புதன்,சனி,கேது போன்றவர்கள், புதன் சனி,கேது, போன்றவர்களின் சாரத்திலேயே அமைந்து விட்டால் புதன் திசை புதன் புக்தி காலங்களிலும், சனிதிசை சனி புக்தி காலங்களிலும்  கேது திசை, கேது புக்தி காலங்களிலும் தாம்பத்ய வாழ்வில் ஈடுபாடு குறைவு ஏற்படும். இது போல மற்ற கோள்களின் திசைகளிலும் சனி, புதன் கேது புக்தி காலங்களிலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். கணவன் மனைவி இருவரில் ஒருவருக்கு மேற்கூறிய தசா புக்தி நடைபெறும் காலங்களில் பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மனைவியிடையே பிரிவு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

Contact

For your consultation


please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Sunday, March 29, 2015

திருமண வாழ்வில் பிரிவினையை ஏற்படுத்தும் அமைப்பு-


காணத்தவறாதீர்

 விஜய் டிவியில்

தினமும் 

 காலை 05.45  மணி முதல் 05.55  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 



" இந்த நாள் "

என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்



     மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது கட்டுபாடான வாழ்க்கை. ஒரு தேரின் சக்கரங்கள் இரண்டும் ஒரே அளவாய், வட்டமாய், அதற்கேற்ற அச்சாணிகளுடன் அமைந்திருந்தால் தான் அந்த தேர் நகரும் போது அசைந்தாடி செல்வதை பார்க்க ரம்மியமாக இருக்கும். விதியை மதியால் வெல்ல முடியும் என்பது மக்களின் நம்பிக்கை என்றாலும் ஒரு மனிதனின் வாழ்வை முழுமையாக்க கூடிய திருமணம் என்ற சடங்கில் கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மனமொத்து நம்பிக்கையுடன் வாழ கற்றுக் கொண்டால் மட்டுமே இங்கு பிரிவுக்கும் பிரச்சனைக்கும் இடமிருக்காது. ஆனால் எல்லோருக்கும் நிம்மதியான, ஒற்றுமையான வாழ்க்கை அமையுமா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையே பிரச்சனையாகி விடக் கூடாது. சில நேரங்களில் கணவன் மனைவியின் பிரச்சனைகளை மற்றவர்கள் பயன்படுத்தி கொள்ளகூடிய சூழ்நிலைகளும் உண்டாகி விடுகின்றன. மனரீதியான பிரச்சனைகளுக்கும், உடல் ரீதியான தேவைகளுக்கும் இன்னொருவரின் ஆறுதல் கிடைக்கும் போது மனம் அதை நாடி தான் செல்லும். இதனால் குடும்பத்தில் சிறிது, சிறிதாக ஆரம்பித்த பிரச்சனைகள் கணவன் மனைவிக்குள் ஆழமாய் ஊடுருவிடும்.

     களத்திர ஸ்தானமான 7ஆம் வீடும், 7ஆம் வீட்டின் அதிபதியும் பாவ கோள்களின் சம்மந்தமின்றி பலமாக அமைந்திருந்தால் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஜென்ம லக்னத்திற்கும், ராசிக்கும் 6ஆமிடமாக வரும் பாவம் வம்பு வழக்குகளைப் பற்றி குறிப்பதால், இந்த 6ஆமிடத்திற்குரிய அதிபதி 7ஆமதிபதியுடன் இணைந்தோ, 6ஆமதிபதி 7ஆமிடத்திலும், 7ஆமதிபதி 6ஆமிடத்திலும் அமைந்தோ, 6,7க்கு அதிபதிகள் ஒன்றுக்கொன்று பார்வை பெற்றோ இருந்தால்  மண வாழ்வில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். 

அது போல குடும்ப ஸ்தானமான 2ஆம் வீட்டின் அதிபதி 6&ஆமதிபதியுடன் இணைவது, 6&ஆமதிபதியின் வீட்டிலிருப்பது 2,7இல் பாவ கோள்கள் அமைய பெறுவது போன்றவற்றின் மூலமும் மணவாழ்வில் மகிழ்ச்சி குறைவு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிவினைக்கு வழிவகுக்கும்.  மேற்கூறிய கோள் அமைப்பு கொண்டவர்களுக்கு 6&ஆமதிபதியின் 
தசையோ, புக்தியோ, 6ஆம் வீட்டின் தொடர்புடைய கோள்களின் திசை புக்தியோ,2,7 ல் அமைந்த பாவ கோள்களின் திசை,புக்தியோ நடைபெற்றால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகி பிரிவினையை  ஏற்படுத்தும்.



    லக்னாதிபதியும், 7ஆமதிபதியும் குடும்பவாழ்விற்கு இன்றியமையாத பங்கை வகிக்கின்றன. இந்த வீட்டதிபதிகள் ஒருவருக்கொருவர் 6,8,12 ஆமிடங்களில் மறைந்திருந்தாலும், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகி பிரிய நேரிடுகிறது.



     ஜென்ம லக்னத்தில் சனியும், ராகுவும் இணைந்திருந்தாலும், 7ஆமதிபதி வக்ரம் பெற்றிருந்தாலும் மணவாழ்க்கை மகிழ்ச்சியற்று போகும்.


Sunday, March 22, 2015

திருமண வாழ்க்கை இல்லாத நிலை


காணத்தவறாதீர்

 விஜய் டிவியில்

தினமும் 

 காலை 05.45  மணி முதல் 05.55  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 


" இந்த நாள் "

என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்



பிறக்கும் போது பெற்றோரின் அரவணைப்பில் வளரும் நாம் பள்ளிக்கு செல்லும் வயதில் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என அனைவரின் ஆதரவோடு வளர்கிறோம். திருமண வயது என்ற ஒன்று வந்தவுடன் நமக்கென  அமையும் வாழ்க்கைத் துணையின் அரவணைப்பில் மற்ற எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம். என் குடும்பம், என் மனைவி, என் பிள்ளைகள் என ஒரு தனித்துவமே வந்து விடுகிறது என்ன தான் பெற்றோரின் அரவணைப்பும் பாசமும் நண்பர்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்றாலும், திருமண உறவு என்ற ஒன்று வரும் போது தான் மனிதன் முழுமையடைகிறான். 

மற்ற எல்லா உறவுகளிடம் இருந்தும் ஒரு அடிதள்ளிச் செல்ல நேரிடுகிறது. அதிலும் வரக்கூடிய வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டானால் அந்த வாழ்க்கையே இன்பமயமாகிறது. ஆனால் சிலருக்கு இந்த  திருமண உறவு என்பது எட்டாக்கனியாகவே  மாறிவிடுகிறது. சிலருக்கு திருமணம் என்று நடந்தாலும் இளம் வயதிலேயே வாழ்க்கைத் துணையை இழக்கக்கூடிய சூழ்நிலை, பிரியக்கூடிய வாய்ப்பு என பலவகையில் சங்கடங்கள் உண்டாகின்றது. சிலருக்கு வாழ்க்கை துணையாலேயே பாதிப்புகள் உண்டாகிறது. இதில் ஜோதிட ரீதியாக வாழ்க்கை துணையே ஏற்படாத நிலை ஏன் என பார்ப்போம். 

ஒருவரது ஜாதகத்தில் திருமண வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்ககூடிய குடும்ப ஸ்தானமான 2 லோ, களத்திர ஸ்தானமான 7 லோ பாவ கிரகங்களான  சனி,  ராகு, கேது போன்றவை அமைவதும், ஜென்ம ராசி என்ன வர்ணிக்கப்படும் சந்திரனுக்கு 2,7 இல் பாவிகள் அமைவதும், 2,7 இக்கு அதிபதிகளோ, களத்திர காரகன் சுக்கிரனோ வக்ரம் பெறுவது  நல்லதல்ல, அப்படி அமைய பெற்று அக்கிரகத்தின் திசை அல்லது புக்தி திருமண வயதில் நடைபெற்றால் திருமணம் அமைவதில்லை, அப்படி அமைந்தாலும் பிரிவு, பிரச்சனை ஒற்றுமையில்லாத நிலை உண்டாகும்.

ஒருவரது  ஜாதகத்தில் 4 க்கு மேற்பட்ட கிரகங்கள் எந்தவொரு வீட்டில் அமைந்தாலும் அது சந்நியாசி வாழ்க்கையை ஏற்படுத்தும். அது போல செவ்வாய், சூரியன், சனி, ராகு கேது, தேய்பிறை சந்திரன், பாவிகள் சேர்க்கைப் பெற்ற புதன்  ஆகியவை,  பாவகிரகங்கள் என்பதால் இவற்றில் 4 அல்லது  5 கிரகங்கள் சேர்க்கைப் பெற்று ஒருவரது ஜாதகத்தில் அமைந்திருக்குமேயானால்  மணவாழ்க்கையே இல்லாமல் போய்விடும். குறிப்பாக இந்த மாதிரியான கிரக சேர்க்கைகளானது 7 ஆம் வீட்டில் இருந்தாலும், சுக்கிரன் அல்லது 7ம்  அதிபதியுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும் சந்நியாசி வாழ்க்கை வாழ நேரிடம்.

ஜென்ம இலக்னத்திற்கு 3 ஆம் வீடு வீரிய ஸ்தானமாகும், புத்திர காரகன் குரு, களத்திர காரகன் சுக்கிரன் ஆகும். சூரியன் ஆண்மை கிரகமாகும், ஒருவரது ஜாதகத்தில் 3 ஆம் அதிபதி, குரு, சுக்கிரன் ஆகியவை நீச்சம் அல்லது வக்ரம் பெற்றாலோ, சூரியன் நீச்சம் அல்லது சனி இராகு சாரம் பெற்றாலோ ஆண்மை குறைபாடு உண்டாகும்.மேற் கண்ட கிரக அமைப்பு பெற்ற ஆண்கள் திருமண வாழவிற்கு தகுதியற்றவர்களாகிறார்கள்.  

Contact

For your consultation


please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Tuesday, March 17, 2015

கிரக அமைப்பும் வாழ்க்கை துணைக்கு உண்டாகக்கூடிய நோய்களும்



காணத்தவறாதீர்

 விஜய் டிவியில்

தினமும் 

 காலை 05.45  மணி முதல் 05.55  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 


" இந்த நாள் "

என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைவது எவ்வளவு முக்கியமோ, அது போல கணவன் மனைவி இருவரும் நோய் நொடி இல்லாமல்  வாழ்வதும் முக்கியம். கஷ்டப்பட்டு சம்பாதித்த அனைத்து பணத்தையும் டாக்டருக்கு மொய் எழுதிக் கொண்டிருந்தால், அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி என்பதே இருக்காது. ஒரு சிலருக்கு தினமும் ஏதாவது ஒரு பாதிப்பு உண்டாகிக் கொண்டேயிருக்கும். காலையில் தலைவலி அடுத்த நாள் உடல் வலி, உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாத நிலை என ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டு அதனால் மன உளைச்சல், குடும்பத்தை ஒழுங்காக நிர்வகிக்க முடியாத சூழ்நிலை, அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படுவதால் பொருளாதாரத்தில் பற்றாக்குறை உண்டாகும். ஒரு சிலருக்கோ நிரந்தரமாக உடல் பாதிப்புகள் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு என உடலோடு வியாதி ஒட்டிக்கொண்டேயிருக்கும். மருத்துவருக்கு செலவு செய்து செய்து பேசாமல் நாமே மருத்துவம் படித்திருக்கலாமே எனத் தோன்றும். இப்படி நோயுடனேயே போராட வேண்டிய காரணம் என்ன வென்று ஜோதிட ரீதியாக ஆராய்ந்தோனால், ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7 ஆம் வீடும், களத்திர காரகன் சுக்கிரனும் பலவீனமடைந்திருந்தால் மனைவிக்கு ஆரோக்கிய பாதிப்பு (பெண் என்றால் கணவருக்கும்) உண்டாகும். 
7 ஆம் அதிபதி நீசம் பெற்றிருப்பதும் சூரியனுக்கு மிக அருகில் அமையப் பெற்று அஸ்தங்கம் பெற்றிருப்பதும் சனி, ராகு போன்ற பாவ கிரகங்களின் சேர்க்கைப் பெற்றிருப்பதும் பலஹீனமான அமைப்பாகும். இப்படிப்பட்ட கிரக அமைப்புகள் ஏற்பட்டு அதன் தசா புக்திகள் நடைபெற்றால் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் மனைவிக்கு (கணவருக்கு) ஏற்படும். 
நவகிரகங்களில் ஆணுக்கு களத்திர காரகன் சுக்கிரனும், பெண்ணுக்கு செவ்வாயும் ஆகும். சுக்கிரன் செவ்வாய் பலவீனமடைவதும் பாவிகள் சேர்க்கை பார்வை பெற்றிருப்பதும் குடும்பத்தில் மருத்துவ செலவுகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7 ஆம் வீட்டிற்கு 2 ஆம் பாவமான 8 ஆம் வீட்டிலும், 12 ஆம் பாவமான 6 ஆம் வீட்டிலும் பாவகிரகங்களான சனி, ராகு போன்ற கிரகங்கள் அமையப்பெற்று அதாவது ஜென்ம லக்னத்திற்கு 6,8 இல் பாவகிரகங்கள் அமையப்பெற்று 7 ஆம் பாவமானது பாவிகளால் சூழப்பட்டால் 7 ஆம் வீடானது பலவீனப்பட்டு குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
அதுபோல 7 ஆம் வீட்டிற்கு 8 ஆம் வீடான ஜென்ம லக்னத்திற்கு 2 ஆம் வீட்டில் அதிக பாவ கிரகங்கள் அமைவது, 2 ஆம் வீட்டதிபதி பலவீனப்படுவது போன்றவை சாதகமற்ற அமைப்பாகும். இது போன்ற கிரக அமைப்புகள் ஏற்பட்டு அதன் தசாபுக்திகள் நடைபெற்றால் மனைவிக்கு (கணவருக்கு) ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். 
ஜென்ம லக்னத்திற்கு 2,6,7,8 போன்ற வீடுகளில் பாவ கிரகங்கள் அமையப் பெற்று அதன் தசாபுக்திகள் நடைபெற்றால் மனைவிக்கு உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பெண்கள் ஜாதகத்தில் மேற்கூறிய கிரக அமைப்புகள் இருக்கின்ற போது அதன் தசா புக்தி காலங்களில் கணவருக்கு ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் குறிப்பாக 8 ஆம் பாவத்தை அதிமுக்கியத்துவம் கொடுத்து மாங்கல்ய ஸ்தானமாக குறிப்பிட்டுவதால் 8 ஆம் இடம் பலவீனப்பட்டோ 8 இல் பாவிகள் அமைந்தோ அதன் தசாபுக்தி நடைபெற்றால் கணவருக்கு கண்டம் ஏற்படக்கூடிய சூழ்நிலை  உண்டாகும். 
சந்திரனுக்கு 2,6,7,8 போன்ற ஸ்தானங்களில் அதிக பாவகிரகங்கள் அமையப் பெற்று அமைந்திருந்தால் அதன் தசாபுக்தி காலங்களிலும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

Contact


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA