Sunday, April 26, 2015

மே மாத ராசிப்பலன் 2015

மாபெரும் வெற்றி
11 லட்சத்தை கடந்த வலை பக்கம்.

2 லட்சத்தை கடந்த youtube



சோதிட செய்திகளை மட்டும் தரும் எனது வலை பக்கத்திற்கு வருகை தந்த 11 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு எனது மன மார்ந்த நன்றி.


2011 ஜீலையில் தொடங்கி தற்போது 770 பதிவுகளை கொண்ட எனது வலை பக்கத்திற்கு எனது உழைப்பினை மதித்து தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 11 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. அள்ளி தருகிறேன் மேலும் சோதிட செய்திகளை, வாரி பருகுங்கள் சலிக்காமல்.

அதுமட்டும் இல்லாமல் எனது Youtube ல் 300 வீடியோக்கள் உள்ளது சோதிட செய்திகளை மட்டும் தரும் எனது youtube க்கு வருகை தந்த 2 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு எனது மன மார்ந்த நன்றி.

                                                                       அன்புடன்
முருகுபாலமுருகன்



குரு பெயா்ச்சி புத்தகம் 


தற்போது விற்பனையில் 

   


   

காணத்தவறாதீர்

 தினமும் 

 காலை 05.45  மணி முதல் 05.55  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 



" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 

மே மாத ராசிப்பலன்  2015


மேஷம்   ; அஸ்வினி, பரணி, கிருத்திகை&1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 2&ல் சுக்கிரன், 6&ல் ராகு சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதாலும், எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, கணவன்&மனைவி பேச்சில் விட்டு கொடுத்து நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயங்களிலும் பூர்வீக சொத்துக்களாலும் விறுசிறு வலயங்களை எதிர்கொள்வீர்கள். பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து  நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.
பரிகாரம். விநாயகரை வழிபடுவது, சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது, குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.




சந்திராஷ்டமம் 05.05.2015 அதிகாலை 05.33 மணி முதல் 07.05.2015 மதியம் 01.02 மணிவரை.

ரிஷபம்  ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7&ல் சனியும் 3ல் குருவும், விரய ஸ்தானத்தில் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் குடும்பத்தில் ஒற்றுமை கறைவு உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சனைகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் போட்டி பெறாமைகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணி புரிபவர்களை அனுசரித்து சென்றால்  சற்று நிம்மதியுடன் பணி புரிய முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும்.
பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது, குருப்பீரிதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 07.05.2015 மதியம் 01.02 மணி முதல் 09.05.2015 மாலை 06.30 மணிவரை.

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 &ம் பாதங்கள்
அன்புள்ள கடக ராசி நேயர்களே எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2ல் குருவும். 11ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் இதனால் இது வரை தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் தடை விலகி கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சொந்த பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகமும் அமையும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். அழனகான புத்திர பாக்கியமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். 
பரிகாரம் சர்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 09.05.2015 மாலை 06.30 மணி முதல் 11.05.2015 இரவு 10.18 மணி வரை.

கடகம்     ;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான  மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 3&ல் ராகு, 11ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்க பெறும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். 
பரிகாரம். ப்ரீதி, தட்சிணா முர்த்தியை வழிபாடு செய்வது சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 11.05.2015 இரவு 10.18 மணி முதல் 13.05.2015 இரவு 12.50  மணி வரை.

சிம்மம்     ;  மகம், பூரம், உத்திரம்&1& ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு   ஜென்ம ராசிக்கு 2&ல் ராகு, 4&ல் சனி சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 10ல் சுக்கிரன் 11ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை குறைத்து கொள்ள முடியும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு அனுகூலமளிக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் சற்றே உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதால் லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். 
பரிகாரம். சர்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது, துர்கை வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 13.05.2015 இரவு12.50  மணி முதல்16.05.2015 அதிகாலை 02.41 மணி வரை.

கன்னி ;  உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே
மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு  ஜென்ம  ராசிக்கு 11&ல் குரு செய்வதால் கடந்த கால பிரச்சனைகள் யாவும் விலகி நற்பலன்கள் ஏற்படும். என்றாலும் 8ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். உடல் ஆ«¬£க்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
பரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது, தினமும் வினாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 16.05.2015 அதிகாலை 02.41 மணி முதல் 18.05.2015அதிகாலை 04.52மணி வரை.

துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 &ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களேஉயர்ந்த நிலையை அடைய வேண்டிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு ஏழரை சனி தொடருவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6&ல் கேது சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருப்பதால் குடும்ப தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். தேவையின்றி உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேரிடும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மன நிம்மதியளிக்கும்.


பரிகாரம். சனி பகவானை வழிபடுவது, ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் 18.05.2015அதிகாலை 04.52மணி முதல் 20.05.2015 காலை 08.50 மணி வரை.

விருச்சிகம்; விசாகம்&4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு   6&ல் சூரியன் 10&ல் குரு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி  வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். 
பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 20.05.2015 காலை 08.50 மணி முதல் 22.05.2015 மதியம் 03.53 மணி வரை.

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்&1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 6&ல் செவ்வாய் மபபத பிற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும் என்றாலும் ஏழரைச் சனியில் விரய சனி நடைபெறுவதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல்  ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். 

பரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 22.05.2015 மதியம் 03.53 மணி முதல் 25.05.2015 அதிகாலை 02.27 மணி வரை.

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே தானுண்டு தன் வேலையுண்டு என வாழும் குணம் கொண்ட உங்களுக்கு  சுக ஸ்தானமான 4&ல் சூரியன் சஞ்சரித்தாலும், 7ல் குரு 11&ல் சனி சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்-&மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல்&வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும்.தொழிலாளர்களும் ஆதரவுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும்.
பரிகாரம். சிவபெருமானை வழிபடுவது, பிரதோஷ கால விரதமிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் 25.05.2015 அதிகாலை 02.27 மணி முதல் 27.05.2015 மதியம் 03.10 மணி வரை.
.
கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு  10&ல் சஞ்சரிக்கும்  சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் 3&ல்  சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார  நிலை ஓரளவுக்கு தாராளமாக இருக்கும். எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பயணங்களால்  அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை சில தடைகளுக்குப் பின் தான் பெற முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. 
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 27.05.2015 மதியம் 03.10 மணி முதல் 30.05.2015 அதிகாலை 03.24 மணி வரை.

மீனம் ; பூரட்டாதி&4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே  புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு  3&ல் செவ்வாய், 5ல் குரு  சஞ்சாரம் செய்வதல் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவுடன் செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தர கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்து வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். 
பரிகாரம். ஆஞ்சனேயரை வழிபடுவது துர்கை வழிபாடு விநாயகர்வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம் 02.05.2015 மாலை 07.38 மணி முதல் 05.05.2015 அதிகாலை 05.33 மணிவரை. 30.05.2015 அதிகாலை 03.24 மணி முதல் 01.06.2015 மதியம் 01.06 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

01.05.2015  சித்திரை மாதம், 18 ஆம் தேதி வெள்ளிகிழமை,  திரயோதசி திதி, ஹஸ்த  நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 07.30 மணி முதல்  08.30 மணிக்குள் ரிஷப இலக்கினம்  வளர்பிறை.

06.05.2015  சித்திரை மாதம், 23 ஆம் தேதி புதன்கிழமை, துதியை திதி, அனுஷ  நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.00 மணி முதல்  07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம் தேய்பிறை.

08.05.2015  சித்திரை மாதம், 25 ஆம் தேதி வெள்ளிகிழமை சதுர்த்திதிதி, மூல நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 08.30 மணி முதல் 09.90 மணிக்குள் மிதுன இலக்கினம்  தேய்பிறை.

10.05.2015  சித்திரை மாதம், 27 ஆம் தேதி  ஞாயிற்றுகிழமை, சப்தமி திதி, உத்திராட  நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 07.00 மணி முதல்  08.00 மணிக்குள் ரிஷப இலக்கினம்  தேய்பிறை.
.
20.05.2015  வைகாசி மாதம், 06 ஆம் தேதி புதன்கிழமை, திருதியை திதி, மிருகசீரிஷ  நட்சத்திரம் சித்த யோகம் காலை 10.00 மணி முதல்  11.00 மணிக்குள் கடக இலக்கினம்  வளர்பிறை.

22.05.2015  வைகாசி மாதம், 08 ஆம் தேதி வெள்ளிகிழமை, பஞ்சமி திதி, புனர்பூச  நட்சத்திரம் சித்த யோகம் காலை 08.00 மணி முதல்  09.00 மணிக்குள் மிதுன இலக்கினம்  வளர்பிறை.

29.05.2015  வைகாசி மாதம், 15 ஆம் தேதி வெள்ளிகிழமை, ஏகாதசி  திதி, ஹஸ்த நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் கடக இலக்கினம்  தேய்பிறை.

please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Tuesday, April 21, 2015

சருமப் பொலிவு தரும் சந்திரன்

மாபெரும் வெற்றி
 
11 லட்சத்தை கடந்த வலை பக்கம்.

2 லட்சத்தை கடந்த youtube



சோதிட செய்திகளை மட்டும் தரும் எனது வலை பக்கத்திற்கு வருகை தந்த 11 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு எனது மன மார்ந்த நன்றி.

2011 ஜீலையில் தொடங்கி தற்போது 770 பதிவுகளை கொண்ட எனது வலை பக்கத்திற்கு எனது உழைப்பினை மதித்து தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 11 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. அள்ளி தருகிறேன் மேலும் சோதிட செய்திகளை, வாரி பருகுங்கள் சலிக்காமல்.

அதுமட்டும் இல்லாமல் எனது Youtube ல் 300 வீடியோக்கள் உள்ளது சோதிட செய்திகளை மட்டும் தரும் எனது youtube க்கு வருகை தந்த 2 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு எனது மன மார்ந்த நன்றி.

                                                                       அன்புடன்
முருகுபாலமுருகன்



குரு பெயா்ச்சி புத்தகம் 


தற்போது விற்பனையில் 

   


   

காணத்தவறாதீர்

 தினமும் 

 காலை 05.45  மணி முதல் 05.55  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 



" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 
சருமப் பொலிவு தரும் சந்திரன்

     கறுப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு கருப்பே அழகு காந்தலே ருசி. வெள்ளை நிறத்திற்கு மயங்காதவர் யார். என்ன இதெல்லாம் என புரியவில்லையா? ஒருவரின் உடலமைப்பும், நிற அழகும் தான். ஒருவரின் புறத்தோற்றம் தான் பிறரை பார்த்தவுடன் மயங்க செய்யக் கூடிய வசீகர அழகு கொண்டது. பார்ப்பதற்கு பளிச்சென்று இருந்தால் பார்த்தவுடனே அவர்களிடம் பேச தோன்றும். கலர் கறுப்போ சிவப்போ, பார்ப்பதற்கு அவலட்சணமாக இல்லாமல் லட்சணமாக இருந்தால் அனைவருக்கும் பிடிக்கும். மேலழகை அழகாக காட்டுவதற்கு முக்கிய பங்கு வகிப்பது  தோல். தோலின் நிறம் அறுவெறுப்பை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. சிலர் கறுப்பாக இருந்தாலும் கவர்ச்சியாக இருப்பார்கள். சிவப்பாக இருந்தால் இன்னும் அழகாக இருப்போம் என நினைத்துக் கொண்டு கண்ட கண்ட விளம்பரங்களில் காணப்படும் கிரீம்களை வாங்கி முகத்தில் சுண்ணாம்பு அடிக்காத குறையாக அடித்து இருக்கும் அழகையும் கெடுத்துக் கொள்வார்கள். பனி காலங்களில் தோலின் தன்மை சற்று வரண்டு இருக்கும். அதற்கு வீட்டில் பயன்படுத்தும் சுத்தமான தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி பூசிக்கொண்டாலே போதும்.

தோலின் தன்மை சரியாக இல்லாவிட்டால் மற்றர் நம்மிடம் பேசுவதற்கும் பழகுவதற்கும் அறுவெறுப்படைவார்கள். ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் 6,8,12 ஆகிய வீடுகளில் சூரியன் செவ்வாய் போன்ற உஷ்ண கிரகங்கள் அமைந்து சுபர் பார்வையின்றி இருந்தால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் உண்டாகி தோற்றத்தையே அசிங்கமாக்கி விடும். நமக்கு அழகை அள்ளித் தரக் கூடிய கிரகமான சந்திரன் ராகு சேர்க்கையோ, சாரமோ பெற்றிருந்து சுபரின் பார்வையின்றி 6,8,12 ஆகிய ஸ்தானங்களில் இருந்தால்  தோலின் நிறம் அழகாக இருக்காது.

     சுக்கிரன் அஸ்தங்கம் பெற்று 6,8,12ல் அமையப் பெற்றாலும், குறிப்பாக 8ல் பாவிகள் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் தோல் வியாதி மற்றும் ரகசிய நோய்கள் உண்டாகிறது.

     சந்திரன் சுக்கிரன் சேர்க்கைப் பெற்று ஜல ராசியில் அமையப் பெற்று உடன் பாவிகள் சேர்க்கையுடனிருந்தாலும், சந்திரன் சுக்கிரன் ராகு சேர்க்கைப் பெற்றிருந்தாலும் லக்னாதிபதியும் சந்திரனும் ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தாலும் தோல் நோய்கள் உண்டாகிறது.

     அது போல சந்திரனுக்கு இருபுறமும் செவ்வாய் சனி அமையப் பெற்றாலும் செவ்வாய் சனி சேர்க்கையுடன் சந்திரன் லக்னத்தில் அமையப் பெற்றாலும் சந்திரன் செவ்வாய் சனி சேர்க்கை பெற்று மேஷம், ரிஷபத்தில் அமையப் பெற்றாலும் தோல் வியாதியானது உண்டாகிறது.
                         

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading  By email or By Phone 



please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Sunday, April 19, 2015

6ம் இடமும் எதிரிகளை வெல்லும் திடமும்

       

காணத்தவறாதீர்

 விஜய் டிவியில்

தினமும் 

 காலை 05.45  மணி முதல் 05.55  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 


" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


6ம் இடமும் எதிரிகளை வெல்லும் திடமும்


வாழ்வில் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் பிரச்சனையே வாழ்க்கையாகிவிடக் கூடாது. விரோதியை விட எதிரியே மேல் என்பார்கள். நண்பர்களை கூட தள்ளி வைத்து பார்க்கலாம். ஆனால் விரோதியையும், எதிரியையும் நம் பார்வையிலேயே வைத்திருப்பது தான் நல்லது. அப்பொழுது தான் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு வகையில் ஒர் எதிரி இருக்கத் தான் செய்வான். சினிமாவில் ஹீரோ மட்டும் இருந்தால் அவன் எதனால் ஹீரோ என்று புரியாது. அதுவே உடன் ஒரு வில்லன் இருந்தால் தான் அந்த ஹீரோவின் பலம் என்னவென்று மக்களுக்கு புரியும். நம்மை சுற்றி எல்லோருமே நல்லவர்களாக இருந்து விட்டால்  நாம் வாழும் வாழ்க்கைக்கே அர்த்தமில்லாமல் போய்விடும். நம் வாழ்வில் எதிரிகளும் விரோதிகளும் இருப்பதே ஆரோக்கியமான விஷயம்.

அப்பொழுது தான் போட்டிகளும் பொறாமைகளும் வளரும். எந்த விதத்தில் திட்டம் தீட்டினால் சரியான பாதையில் செல்ல முடியும். வாழ்வில் உயர்வடைய முடியும். எதிரிகளை வெல்லும் ஆயுதம் எது என்பதை நம்மால் நன்றாக உணர முடியும் நன்மையும் தீமையும் பிற தர வாரா என்பார்கள். எதையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றலும் வலிமையும், நாம் சந்திக்கும் பிரச்சனைகளிலிருந்து உருவாவதே.

ஆனால் சிலர் சந்தோஷம் வந்தால் துள்ளி குதிப்பார்கள். அதுவே பிரச்சனை என்று ஒன்று வந்து விட்டால் அதற்கு யார் காரணமோ அவர்களை நிந்திப்பார்கள். அதிலிருந்து மீள்வதற்கு என்ன வழி என்று ஆராயாமல் பிரச்சனை செய்தவர்களை பழித்து என்ன பலன், இன்றே வாழ்க்கை முடிந்துவிட்டதை போல சோகத்தில் மூழ்கி விடுவார்கள். இப்படி சோதனை மேல் சோதனைகளை சந்திப்பவர்கள் தங்களுடைய ஜெனன ஜாதகத்தை நல்ல ஜோதிடராக காண்பித்து ஏன் என்னை மட்டும் இந்த எதிரிகள் பாடாய் படுத்துகிறார்கள். எனக்கு இந்த அளவில் எதிர்ப்புகள் உருவாவதற்கு காரணம் என்ன? என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல மற்றவர்களிடம் வளைந்து கொடுத்து வாழும் பண்பை வளர்ந்து கொள்ள வேண்டும்.

ஜோதிட ரீதியாக எதிர்ப்புகள் அதிகம் யாருக்கு ஏற்படுகிறது என ஆராய்ந்தோமானால் ஜென்ம லக்னத்திற்கு 6ம் அதிபதி பலம் பெற்று லக்னாதிபதி பலம் இழந்து காணப்பட்டால் நிறைய எதிர்ப்புகளையும் எதிரிகளையும் சந்திக்க நேரிடுகிறது. 6ம் இடம் தான் ஒருவரது வாழ்வில் ஏற்படக் கூடிய எதிர்ப்பு பற்றியும் அது யார் யாரால் உண்டாகும் என்பது பற்றியும் அறிய உதவுகிறது. 6ம் அதிபதி பலம் பெற்று லக்னாதிபதியும் பலம் பெற்றிருந்தாலும் 6ம் வீடு உபஜெய ஸ்தானம் என்பதால் 6ல் சனி, செவ்வாய், சூரியன், ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையப் பெற்றிருந்தாலும் எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய வலிமையும் வல்லமையும் சிறப்பாக இருக்கும். 6ம் வீட்டிற்கு குரு பார்வை இருந்தால் எதிர்ப்புகள் விலகி ஒடும்.

அதுவே 6ம் அதிபதி பலமிழந்திருந்து 6ம் வீட்டை சனி, செவ்வாய் போன்ற பாவிகள் பார்வை செய்தால் எதிரிகளை சமாளிப்பதற்கே வாழ்வில் நிறைய நாட்களை செலவிட வேண்டியிருக்கும். ஜென்ம லக்னாதிபதி பலமிழந்து  6ம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும் 6ம் வீட்டில் அமைந்திருந்தாலும் அவருக்கு எதிர்ப்பு வெளியிலிருந்து வரத் தேவையில்லை. அவர் செய்யும் செயல்களால் அவருக்கு அவரே  எதிரியாக இருந்து முன்னேற்ற தடைகளை ஏற்படுத்தி கொள்வார்.

ஜென்ம லக்னத்திற்கு 2ம் அதிபதி பலம் இழந்து 6ம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றாலும் 6ம் அதிபதியின் வீட்டில் இருந்தாலும் குடும்பத்திலுள்ளவர்களாலேயே எதிர்ப்புகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலால் எதிர்ப்புகள், கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழ்நிலைகளால் வீண் விரோதங்கள் ஏற்படும்.

     3ம் அதிபதி பலமிழந்து 6ம் அதிபதியுடன் இணைந்தோ 6ம் வீட்டிலோ அமையப் பெற்றால் உடன்பிறந்த சகோதர சகோதரிகளுடன் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பலம் இழந்த செவ்வாய் 3,6க்கு அதிபதியுடன் சேர்க்கைப் பெற்றால் நிச்சயமாக உடன்பிறப்புகளின் எதிர்ப்பை பெறுவார். உடன் பிறந்தவர்களே இல்லை என்றாலும் பங்காளிகளுடனாவது பகைமை ஏற்பட்டு எதிர்ப்புகள் அதிகரிக்கும்.

     4ம் அதிபதி பலமிழந்து 6ம் அதிபதியுடன் இணைந்தோ, 6ம் வீட்டிலோ அமையப் பெற்றால் நெருங்கிய நண்பர்களே எதிரிகளாவார்கள். உடன் பலமிழந்த சந்திரனும் சேர்க்கைப் பெற்றால் தாய் மற்றும் தாய் வழியில் உள்ள உறவுகள் அனைத்தும் எதிராகவே செயல்படும்.

     ஜென்ம லக்னத்திற்கு 5ம் அதிபதி பலமிழந்து 6ம் வீட்டில் அமைந்தாலும் 6ம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றாலும் பெற்ற பிள்ளைகளே எதிரிகளாக மாறுவார்கள்.

     களத்திர ஸ்தானமான 7ம் வீட்டை கூட்டுத் தொழில் ஸ்தானம் என்றும் கூறுவர். 7ம் அதிபதி 6ம் அதிபதியுடன் இணைந்தோ 6ம் வீட்டில் அமைந்தோ இருந்தால் கைபிடித்த மனைவியே (கணவனே) எதிரியாக மாறுவாள். உடன் சுக்கிரன் இருந்தால் மண வாழ்க்கையே நரகமாகிவிடும். அளவிற்கு மனைவி மற்றும் மனைவி வழி உறவுகள் எதிர்ப்பாக மாறும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளே எதிரிகளாக மாறுவார்கள்.

     தந்தை ஸ்தானமான 9ம் வீட்டின் அதிபதி பலமிழந்து 6ம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் 6ம் அதிபதியின்  வீட்டில் இருந்தாலும் தந்தையிடமே பகைமை ஏற்படும். தந்தை வழி உறவிகளிடமும் சுமூகமான நிலை இருக்காது. அதிலும் பலமிழந்த 6,9க்கு அதிபதி களுடன் தந்ததை காரகன் சூரியனும் இணைந்திருந்தால் கண்டிப்பாக தந்தையே அந்த ஜாதகருக்கு விரோதியாக மாறுவார்.


     தொழில் ஸ்தானமான 10ம் வீட்டின் அதிபதி பலமிழந்து 6ல் இருந்தாலும்  6ம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும் செய்யும் தொழிலில் எதிர்ப்பு, தொழிலாளர்களிடம் பகைமை உண்டாகும். உத்தியோகஸ்தர்களாக  இருந்தால் சக ஊழியர்களின் எதிர்ப்பிற்கும் வீண் பழி சொற்களுக்கும் ஆளாக நேரிட்டு மனநிம்மதி குறையும். ஏன் வேலைக்கு செல்கிறோம் என்ற அளவிற்கு வெறுப்பு உண்டாகும்.

     அது போல 11ம் அதிபதி பலமிழந்து 6ம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும் 6ம் வீட்டில் இருந்தாலும் மூத்த உடன் பிறப்புகளுடன் பகை, நெருங்கிய உறவினர்களின் எதிர்ப்பு போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும். பொதுவாக ஜெனன ஜாதகத்தில் எந்த வீட்டின் கிரகம் பலம் இழந்து அந்த வீட்டின் அதிபதி 6ம் வீட்டின் அதிபதியின் சேர்க்கைப் பெற்றோ, 6ம் வீட்டில் அமையப் பெற்றோ இருந்தால் அந்த வீட்டின் காரகத்துவத்திற்குரியவர்களால் வாழ்நாளில் நிறைய எதிர்ப்புகள், பகைமை, பிரச்சனைகள் உண்டாகும் .

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading  By email or By Phone 


please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA



Friday, April 17, 2015

திருமண தோஷங்கள் கிரகண தோஷம்

           
       

காணத்தவறாதீர்

 விஜய் டிவியில்

தினமும் 

 காலை 05.45  மணி முதல் 05.55  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 



" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 
திருமண தோஷங்கள்
கிரகண தோஷம்
     
அறிந்தோ, அறியாமலோ உயிர் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் மாறுவேடத்தில் தேவர்கள் வரிசையில் வந்தமர்ந்த சுவர்பானு கள்ளத்தனமாக அமுதம் வாங்கி உண்டதை கண்ட சூரியனும் சந்திரனும் சுவர்பானுவை காட்டி கொடுத்து விட்டனர். திருமாள் சுவர்பானுவை மன்னித்து விடாமல் அகப்பையினால் அடித்து தலை வேறு, முண்டம் வேறாக ஆகிவிட்டதால் ராகு கேதுவாக மாறி  நவகிரகங்களில் இடம் பெற்றனர். என்ன இருந்தாலும் அசுர குணம் மாறுமா? ராகு கேதுக்களுடன் சூரிய சந்திரர்கள் சந்திக்கும் போதெல்லாம் ராகு கேதுக்கள் பழிதீர்த்து கொள்ளும் வகையில் தங்களுடைய பிரமாண்டமான நிழலில் சூரியனையோ அல்லது சந்திரனையே உபராகம் என்று சொல்ல கூடிய கிரகண தோஷத்தை ஏற்படுத்தி சூரிய சந்திரனை சக்தி இழக்க செய்கின்றன.
   
சூரிய கிரகணம் ஏற்படும் சமயத்தில் எல்லாம் சூரியன் சந்திரன் ராகு ஆகிய மூன்று கோள்களும் அல்லது சூரியன் சந்திரன் கேது ஆகிய மூன்று கோள்களும் ஒரே ராசியில் இடம் பெற்றிருக்கும். சூரியன் நின்ற ராசிக்கு நேர் எதிர் ராசியில் 7&ஆமிடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இடம் பெற்றிருக்கும்.
    சூரியனும் ராகுவும் கூடி இருந்தால் அது ராகு கிரஸ்த சூரிய கிரகணம் என்றும், கேதுவுடன் கூடியிருந்தால் அது கேது கிரஸ்த சூரிய கிரகம் என்றும் கூறப்படுகிறது.
    அதே போல கேதுவும் சூரியனும் ஒரே ராசியிலிருந்து அதன் நேர் எதிர் ராசியில் ராகுவும் சந்திரனும் ஒரே ராசியில் இருக்கும் போதும், ராகுவும் சூரியனும் ஒரே ராசியிலிருந்து அதன் நேர் எதிர் ராசியில் கேதுவும் சந்திரனும் ஒரே ராசியில் இருக்கும் போதும் சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகண தோஷங்கள் தலா ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும்.

    கிரகணத்தின் போது சந்திரனுக்கு 1,7 ஆம் பாவங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் கிரகணங்கள் ஏற்படும் போது பிறப்பவர்களுக்கு கிரகண தோஷம் உண்டாகி திருமண சுப காரியங்கள் நடைபெற கால தாமதமும் தடையும் உண்டாகிறது.
கிரகண தோஷம் உண்டானவர்களுக்கு திருமண வயதில் இராகு&கேது திசை அல்லது புத்தி நடைபெற்றால் திருமணத் தடை உண்டாகும். கிரகண தோஷம் உள்ளவர்களுக்கு இராகு கேது தோஷம் உள்ளவராக பார்த்து திருமணம் செய்து வைப்பது நல்லது. 

Contact



please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA