Monday, June 29, 2015

ஜுலை மாத ராசிப்பலன் 2015


வாங்கி படிக்க தவறாதீர்கள்

ஜீலை 2015 ஓம்சரவணபவா இதழுடன்

முருகுபாலமுருகன் 

எழுதிய

பொருளாதார உயர்வு தரும் 

கல்வி, தொழில், வேலை எது ?



12, இலக்கினகாரர்களுக்கு ஜோதிட வழிகாட்டி


96 பக்கம் இலவச இனைப்பு



   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 





" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


(05.07.2015 காலை 06-30  மணி 

முதல் 07.00  மணி வரை  
குரு பெயர்ச்சி பலனை   
காணத்தவறாதீர்)


ஜுலை மாத ராசிப்பலன்  2015



மேஷம்; அஸ்வினி, பரணி, கிருத்திகை&1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன் செவ்வாய், 6&ல் ராகு  சஞ்சரிப்பதும் இம் மாதம் ஏற்படவுள்ள குரு பெயர்ச்சி மூலம் குரு 5ல் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். இதனால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவும் முடியும்.   தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். 

பரிகாரம். விநாயகரை வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது. 
சந்திராஷ்டமம் 26.07.2015 காலை 06.40 மணி முதல் 28.07.2015 மதியம் 01.50 மணி வரை.

ரிஷபம்; கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6ல் சனியும், 11ல்கேதுவும் சஞ்சாரம் செய்வதும் மாத பிற்பாதியில் சூரியன் 3ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம் பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை தடைகளுக்குப் பின் பெற முடியும். 

பரிகாரம். துர்கையம்மனை வழிபடுவது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீப மேற்றுவது நல்லது.
சந்திராஷ்டமம் 01.07.2015 அதிகாலை 04.17 மணி முதல் 03.07.2015 காலை 07.52 மணி வரை.
28.07.2015 மதியம் 01.50 மணி முதல் 30.07.2015 மாலை 05.19 மணி வரை.

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 &ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்  சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாயும் தனஸ்தானமான 2&ல் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வத உடல் ஆரோக்கியத்தில் அக்கரை எடுத்தக்கொள்வது நல்லது. உஷ்ண சம்மந்தப்பட்ட சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்ப தேவைகள் பூ£ஙத்தியாகும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். 

பரிகாரம். சிவ பெருமானை வழிபாடு செய்வது பிரதோஷ கால விரதமிருப்பது முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 01.07.2015 அதிகாலை 04.17 மணி முதல் 03.07.2015 காலை 07.52 மணி வரை.
28.07.2015 மதியம் 01.50 மணி முதல் 30.07.2015 மாலை 05.19 மணி வரை.

கடகம்; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட உங்களுக்கு விரய ஸ்தானமான 12&ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பது எதிர் பாராத வீண் விரயங்களை ஏற்படும் என்றாலும் இம் மாதம் ஏற்படவுள்ள ழுரு பெயர்ச்சியின் மூலம் 2&ல் குரு சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைவார்கள். அரசியல்வாதிகளுக்கு வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டும்.

பரிகாரம். முருகப் பெருமானை வழிபாடு  சஷ்டி விரதமிருப்பது சிவனை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 05.07.2015 காலை 10.00 மணி முதல் 07.07.2015 பகல் 12.08 மணி வரை.

சிம்மம்     ;  மகம், பூரம். உத்திரம்&1& ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11&ல் சூரியன் செவ்வாய் புதன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்றாலும் 2&ல் ராகு 8&ல் கேது சஞ்சாரம் செய்வதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். கணவன்-&மனைவியிடையே சிறுசிறு கருத்த வேறுபாடுகள் தோன்றி மறையும். கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு கிடிடக்கப்பேற்றாலும் ஊதிய உயர்வு தாமதப்படும்.

பரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது தினமும் விநாயகரை வழிபாடு செய்வது சர்ப சாந்தி செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 07.07.2015 பகல் 12.08 மணி முதல்09.07.2015 மதியம் 03.07 மணி வரை.

கன்னி ;  உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10&ல் சூரியன் செவ்வாய் 11ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பு என்பதால்  நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண சுப முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத்  தேவைகளும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

பரிகாரம். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 09.07.2015 மதியம் 03.07 மணி முதல் 11.07.2015 இரவு 07.18மணி வரை.

துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 &ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு 9&ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதும் இம் மாதம் ஏற்படவுள்ள குரு 11ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் தாராள தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். Ðல பெரிய மனித்களின் ஆதரவுகளால் வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

பரிகாரம். சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ªணையில் தீப மேற்றி வழிபாடு செய்வது துர்கை அம்மனை வழிபடுவது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் 11.07.2015 இரவு 07.18 மணி முதல் 13.07.2015 இரவு 12.56 மணி வரை.

விருச்சிகம்; விசாகம்&4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 8&ல் சூரியன் செவ்வாய் புதன் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எதிலும் சற்று நிதானமுடன் செயல் படுவதே நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும்.  உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெற முடியும்.

பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது, சனிப்பரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 13.07.2015 இரவு 12.56 மணி முதல் 16.07.2015 காலை 08.30 மணி வரை.

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்&1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே
எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி  ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட உங்களுக்கு ஏழரை சனியில் விரய சனி நடைபெறுவதும் 7ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதும் வீண் விரயங்களையும் பிரச்சனைகளையும்  ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் குரு 9&ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் ஓரளவுக்கு அனுகூலங்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. கணவன் மனைவி அனுசரித்து நடந்து கொள்வது உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணி புரிபவர்களிடம் சற்று கவனமுடன் நடந்த கொள்வது நல்லது. 

பரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 16.07.2015 காலை 08.30 மணி முதல் 18.07.2015 மாலை 06.31 மணி வரை.

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட உங்களுக்கு 6ல் சூரியன் செவ்வாயும் 3&ல் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் மறைமுக எதிர்ப்புகள் சற்று விலகும். சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றியினைப் பெற முடியும்.  பொருளாதார நிலை தேவைக்கேற்ற படியிருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் சிறுசிறு வம்பு வழக்குகளை சந்திக்க வேண்டிவரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பொன் பொருள் சேரும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். 

பரிகாரம். குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 18.07.2015 மாலை 06.31 மணி முதல் 21.07.2015 காலை 06.49 மணி வரை.

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு இம்மாதம்ஏற்படவுள்ள ழுரு பெயர்ச்சியின் மூலம் ஜென்ம ராசிக்கு 7&ல் குரு சஞ்சாரம் செய்யவிருப்பதும் மாதபிற்பாதியில் சூரியன் 6ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் எதிலும் வெற்றிகளை பெறுவீர்கள். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.  சொந்தமாக வீடு வாகனம் போன்றவற்றை வாங்க கூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும். பொன் பொருள் சேரும் கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும்.  தொழில் வியாபாரத்தில் சிறப்பான  முன்னேற்ற நிலையிருக்கும்.

பரிகாரம். விநாயகரை வழிபாடு செய்வது அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 21.07.2015 காலை 06.49 மணி முதல் 23.07.2015 மாலை 07.43 மணி வரை.

மீனம் ; பூரட்டாதி&4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் உங்களுக்கு 4&ல் செவ்வாய் சூரியனும் 7ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.  உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் தடைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும்.

பரிகாரம். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது அம்மன் வழிபாடு மேற்கொள்வது சர்ப சாந்தி செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 23.07.2015 மாலை 07.43 மணி முதல் 26.07.2015 காலை 06.40 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்
03.07.2015  ஆனி மாதம், 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, துதியை திதி, உத்திராட நட்சத்திரம் சித்த யோகம் காலை 07.00 மணி முதல்  08.00 மணிக்குள் கடக இலக்கினம்  தேய்பிறை.

06.07.2015  ஆனி மாதம், 21 ஆம் தேதி திங்கட்கிழமை, பஞ்சமி திதி, சதய  நட்சத்திரம் சித்த யோகம் காலை 05.30 மணி முதல்  06.30 மணிக்குள் மிதுன இலக்கினம் தேய்பிறை.

08.07.2015  ஆனி மாதம், 23 ஆம் தேதி புதன்கிழமை, சப்தமிதிதி, உத்திரட்டாதி  நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.30 மணி முதல்  07.30 மணிக்குள் கடக இலக்கினம்  
தேய்பிறை.

13.07.2015  ஆனி மாதம், 28 ஆம் தேதி  திங்கட்கிழமை, துவாதசி திதி, ரோகிணி  நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 05.00 மணி முதல் 06.00 மணிக்குள் மிதுன இலக்கினம்  தேய்பிறை.

27.07.2015  ஆடி மாதம், 11 ஆம் தேதி திங்கட்கிழமை, ஏகாதசி திதி, அனுஷ  நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.30 மணி முதல்  07.30 மணிக்குள் கடக இலக்கினம்  வளர் பிறை.


please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


Intha Naal 06/29/15

Thursday, June 25, 2015

குரு பெயர்ச்சி பலன் - 2015 2016 தனுசு

   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 





" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


(05.07.2015 காலை 06-30  மணி 

முதல் 07.00  மணி வரை  
குரு பெயர்ச்சி பலனை   
காணத்தவறாதீர்)


 குரு பெயர்ச்சி பலன் - 2015  2016 தனுசு
05.07.2015 முதல் 02.08.2016 வரை 

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்

கம்பீரமான தோற்றமும், சிறந்த தெய்வ பக்தியும், எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றலும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! உங்கள் ராசியாதிபதி குரு பகவான் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ஆம் வீட்டில் 05.07.2015 முதல் 02.08.2016 வரை சஞ்சாரம் செய்யவிருப்பது அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கு ஏழரை சனியில் விரயச் சனி நடைபெறுவதால் வாழ்வில் எதிர்பாராத விரயங்களை சந்திக்க வேண்டி வரும் என்றாலும் குரு ஜென்ம ராசி,3,5ஆம் வீடுகளை பார்வை செய்வதால் குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும்.  சொந்த பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும். 08.01.2016 முதல் கேதுபகவான் 3ம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மேன்மை ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் சிறப்பாக அமையும். வெளியூர் வெளி நாட்டு தொடர்புடைவைகளாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்டு கொண்டிருந்த பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் தற்போது கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம் 
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் சிறு சிறு கவலை தரும் சம்பவங்கள் நடைபெறும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிப்பதால் உடல் நிலை சோர்வடையும்.

குடும்பப் பொருளாதார நிலை
கணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். மணமாகாதர்களுக்கு மணமாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பிரிந்தவர்களும் ஒன்று சேருவார்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். சிலருக்கு சொந்தமாக கார் பங்களா வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலும் சரளமாகவே இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்கும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று இழுபறி நிலை ஏற்பட்டாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

தொழில் வியாபாரம்
செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபம் கிட்டும். பயணங்களையும் அடிக்கடி மேற்கொள்வீர்கள். போட்டி, பொறாமைகள் குறையும். நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் கடன் உதவி கிடைக்கும்.

உத்தியோகம்
பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். பொருளாதார உயர்வுகளால் வாழ்க்கை தரம் உயரும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளு குறையும். புதிய வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி கிடைக்கும்.

அரசியல்
மக்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும் பெயர் புகழுக்கு பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடை பேச்சுகளில் நிதானமுடன் நடந்து கொள்வது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். வருவாய் பெருகும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விட முடியும். வேலையாட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். பூமி மனை சேரும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல் பட முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றும் பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் ஒரளவுக்கு அனுகூலம் கிட்டும் சேமிக்க முடியும்.

கலைஞர்கள்
இது வரை பட்ட துயரங்களுக்கு ஒரு முடிவு வரும் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். வரவேண்டிய பணத்தொகைகளும் கைக்கு வந்து சேரும். இழந்தவற்றை மீட்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.

மாணவ மாணவியர்
கல்வியில் சிறு சிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர் பார்த்த நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும்.

குரு பகவான் மகம் நட்சத்திரத்தில் 05.07.2015 முதல் 07.09.2015 வரை
குரு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9ல் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. நினைத்த காரியங்கள் யாவற்றையும் நிறைவேற்ற முடியும். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் யாவும் குறையும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றக் கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் அனைத்தும் தடை விலகி கை கூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் பெருகும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 08.09.2015 முதல் 17.11.2015 வரை
குரு பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9ல் சஞ்சரிக்கும்இக்காலங்களிலும் முன்னேற்றமான நிலைகளே உண்டாகும். பொருளாதார நிலை மேன்மையாக இருக்கும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் தடபுடலாக கை கூடும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் நிலையில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். எந்த வித பிரச்சனை ஏற்பட்டாலும் அவற்றை  முறியடித்து முன்னேறும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து ஏற்றம் பெற முடியும். பயணங்களால் சாதகப் பலன்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 18.11.2015 முதல் 19.12.2015 வரை
குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9ல் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதாரம் உயர்வடையும். செல்வம் செல்வாக்கு பெருகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும்.  கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சொந்த வீடு மனை வாங்கும் வாய்ப்பு கிட்டும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் ஏற்படும். உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதால் எந்தவொரு விஷயத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் தேவை. 

குரு பகவான் அதிசாரமாக கன்னி ராசியில் 20.12.2015 முதல் 19.01.2016 வரை
குருபகவான் இக்காலங்களில் அதிசாரமாக ராசிக்கு 10ஆம் வீடான கன்னி ராசியில் சஞ்சாரம் செய்வதால் செய்யும் தொழில் உத்தியோகத்தில் நெருக்கடிகள் உண்டாகும்.போட்டிகளும் பொறாமைகளும் அதிகரிக்கும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் வீண் பழிகளைச் சுமக்க வேண்டியிருக்கும். வேலைப் பளுவும் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஜென்ம ராசிக்கு 12ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதால் உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். அசையும் அசையா சொத்துகளால் வீண் வம்பு வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். மக்களின் தேவையறிந்து அரசியல்வாதிகள் செயல்பட்டால் மட்டுமே பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். 

குரு பகவான் வக்ர கதியில் 20.01.2016 முதல் 18.05.2016 வரை
குரு பகவான் சஞ்சரித்தாலும் வக்ரகதியிலிருப்பதால் நன்மை தீமை கலந்தப் பலன்களையேப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை அஜீரண கோளாறு போன்றவைத் தோன்றி மருத்துவ செலவுளை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களின் ஆதரவை முழுமையாகப் பெற இயலாது. எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஏழரை சனி நடைபெறுவதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்யத் துணிவார்கள் என்பதால் மற்றவருக்கு பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். கேது 3ல் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் போட்டிகள் அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய லாபங்கள் தடையின்றி கிடைக்கும்.எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நற்பலனை தரும்.

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 19.05.2016 முதல் 11.07.2016 வரை
குரு பகவான் சிம்ம ராசியில் சுக்கிரனின்  நட்சத்திரத்தில் 9ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் தொழில் வியாபார ரீதியாக நல்ல லாபங்கள் கிட்டும். போட்ட முதலீட்டினை எடுப்பதில் எந்தவித சிரமமும் ஏற்படாது. போட்டி பொறாமைகள் விலகும். பெரிய முதலீடுகளை -ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் எளிதில் ஈடுபட முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் பணிகளில் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 12.07.2016 முதல் 02.08.2016 வரை
குரு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் தொட்டதெல்லாம் துலங்கும். பண வரவுகளிலில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி தரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் அனுகூலப் பலனை தரும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். அசையும் அசையா சொத்துக்களையும் வாங்குவீர்கள். ஏழரை சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். எதிர்பாராத விரயங்களும் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்களைப் பெற முடியும். கடன்கள் குறையும்.


மூலம்
எந்த பிரச்சனைகளையும் தைரியமுடன் எதிர் கொள்ளும் நெஞ்சுரம் கொண்ட உங்களுக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்கும் வாய்ப்புகளும் கிட்டும். ஏழரை சனி தொடருவதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த கௌரவ பதவிகள் கிடைக்கும்.

பூராடம்
எதை கண்டு பயப்படாமல் நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு  குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். ஏழரை சனியும் நடைபெறுவதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும்.

உத்திராடம் 1ஆம் பாதம்
சமூக நலனுக்காக பாடுபடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். நினைத்ததை நிறைவேற்ற முடியும். பூர்வீக சொத்துக்களால் லாபமும், அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். ஏழரை சனி நடைபெறுவதால் எதிலும் சற்று கவனம் தேவை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்  1,2,3,9
கிழமை  வியாழன், திங்கள்,
திசை    வடகிழக்கு,
நிறம்   மஞ்சள், சிகப்பு,
கல்   புஷ்ப ராகம்,
தெய்வம்  தட்சிணா மூர்த்தி

பரிகாரம்
தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.

please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


Intha Naal 06/25/15

Wednesday, June 24, 2015

குரு பெயர்ச்சி பலன் & 2015&2016 விருச்சிகம்

   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 





" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


(05.07.2015 காலை 06-30  மணி 

முதல் 07.00  மணி வரை  
குரு பெயர்ச்சி பலனை   
காணத்தவறாதீர்) 



குரு பெயர்ச்சி பலன் & 2015&2016  விருச்சிகம் 
05.07.2015 முதல் 02.08.2016 வரை



விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை

நல்ல அறிவாற்றலும், மற்றவர்களின் மன நிலை அறிந்து பேசும் திறனும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே! ஆண்டுக் கோளான குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10&ல் வரும் 05.07.2015 முதல் 02.08.2016 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறு முடியாது. எனவே தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது.  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுவதால் கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். குரு 2,4,6ஆம் வீடுகளை பார்வை செய்வதால் சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகமும் அதனால் கடன்களும் உண்டாகும். உற்றார், உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமான செயல்படுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொது நலக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். வரும் 08.01.2016 முதல் சர்ப கிரகங்களான கேது 4லும், ராகு 10லும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது, ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சுறு சுறுப்பாக இருக்கும். அவ்வப்போது ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்து செலவுகளுக்குப் பின் குணமாகும். எந்தவொரு காரியத்திலும் அதிக உழைப்பினை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

குடும்பப் பொருளாதார நிலை
பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்க பெறும். சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று சாதகமான நிலைகள் உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பிரச்சனைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டிகளால் கைநழுவிப் போகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்பட மாட்டார்கள். அரசு வழியிலும் சிறு சிறு நெருக்கடிகள் உண்டாகும். தொழிலிலும் மந்த நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனமுடனிருப்பது நல்லது.

உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் காலம் என்பதால் தங்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீண் பழிச் சொற்களை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளை கண்முன்னேயே பிறர் தட்டிச் செல்வர். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு தாமதமாக கிடைக்கும்.

அரசியல்
மக்களின் ஆதரவைப் பெற அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது நல்லது. பெயர் புகழுக்கு இழுக்கு நேராதபடி பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் நன்றாக அமைய கடும் முயற்சியினை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலையால் பயிர் வேலைகள் சரி வர நடக்காது போகும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய மானிய உதவிகள் தாமதப்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும்.

கலைஞர்கள்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகளிலும் இழுபறியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். சுக வாழ்க்கை பாதிப்படையும்.

மாணவ மாணவியர்
கல்வியில் ஒரளவுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புக்களை தவிர்ப்பது நல்லது.

குரு பகவான் மகம் நட்சத்திரத்தில் 05.07.2015 முதல் 07.09.2015 வரை
குரு பகவான் சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10&ல் சஞ்சாரம் செய்கிறார். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகள் ஒரளவுக்கு திருப்தியளிப்பதாக இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பூர்வீக சொத்துக்களால் ஒரளவுக்கு அனுகூலத்தை பெறுவீர்கள்.  ராகு 11&ல் சஞ்சரிப்பதால் வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாவதால் வரவேண்டிய வாய்ப்புகளில் தாமத நிலை உண்டாகும். சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்ற மடைவார்கள்

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 08.09.2015 முதல் 17.11.2015 வரை
குரு பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10&ல் சஞ்சாரம் செய்வது சுமாரான அமைப்பாகும். இக்காலங்களில் ஒரளவுக்கு எதிலும் முன்னேற்றமான நிலையினை அடைந்து விட முடியும். சிலருக்கு பழைய கார், பங்களா போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலம் கிட்டும். உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும் என்றாலும் பெரிய கெடுதிகள் இல்லை. உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் சிறந்த அனுகூலத்தை அடைய முடியும். போட்டிகள் சற்றே குறையும். ராகு 11&ல் சஞ்சரிப்பதால் எந்தவித எதிர்ப்புக¬யும் எதிர் கொண்டு வெற்றி பெறக் கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளை கண்முன்னேயே பிறர் தட்டிச் செல்வார்கள்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 18.11.2015 முதல் 19.12.2015 வரை
குரு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ஒரளவுக்கு அனுகூலமளிப்பதாகவே அமையும். குரு 10&ல் சஞ்சரிப்பதால் உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படுவது நல்லது. வர வேண்டிய பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சுப விரயங்களும் உண்டாகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். கடன்கள் படிப்படியாக குறையும்.

குரு பகவான் அதிசாரமாக கன்னி ராசியில் 20.12.2015 முதல் 19.01.2016 வரை
குருபகவான் இக்காலங்களில் அதிசாரமாக ராசிக்கு 11ஆம் வீடான கன்னி ராசியில் சஞ்சாரம் செய்வதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் குவியும். கணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். பலருக்கு உதவி செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். சிலர் சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவார்கள். சிலர் கட்டிய வீட்டை மேலும் புதுப்பிப்பார்கள். கடன்கள் யாவும் குறையும். கொடுக்கல் வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பார்கள். நல்ல நண்பர்களின் நட்பும் கிடைக்கும்.

குரு பகவான் வக்ர கதியில் 20.01.2016 முதல் 18.05.2016 வரை
குரு பகவான் வக்ரகதியிலிருப்பதால் இக்காலங்களிலும் முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தாராள தனவரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும், புத்திர வழியில் மகிழ்ச்சியும் ஏற்படும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். ஏழரை சனி நடைபெறுவதால்  குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். வம்பு வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் அனுகூலம் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கல் சரள நிலையில் நடைபெறும். சர்ப கிரகங்கள் 4,10ல் சஞ்சரிப்பதால் அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் உண்டாகும்.

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 19.05.2016 முதல் 11.07.2016 வரை
குரு பகவான் இக்காலங்களில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10&ல் சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். குரு 10&ல் சஞ்சரிப்பதால் மங்களகரமான சுப காரியங்கள் கை கூட சற்று தாமத நிலை உண்டாகும். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலை உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்ய சற்று கடன் வாங்க வேண்டிய கூழ்நிலைகள் ஏற்படும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. ஏழரை சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் போது சிந்தித்து செயல்படவும்-. செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 12.07.2016 முதல் 02.08.2016 வரை
குரு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10&ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் வர வேண்டிய பண வரவுகள் தடையின்றி வரும் என்றாலும் எதிர்பாராத திடீர் விரயங்களும் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை குறைத்து கொள்ள முடியும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எதையும் எதிர் கொண்டு அடைய வேண்டிய லாபத்தினை அடைவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்புக்களைத் தவிர்ப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்ணை பெறலாம்.


விசாகம் 4ஆம் பாதம்
நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோக ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து முன்னேற்றத்தை அடைவீர்கள். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

அனுஷம்
பலருக்கு சுமை தாங்கியாகவும், மாறுபட்ட மனநிலையை கொண்டவராகவும் விளங்கும் உங்களுக்கு குரு பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் தொழில் வியாபார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் கவனம் தேவை. பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும்.

கேட்டை
வருங்காலத்தைப் பற்றி முன் கூட்டியே அறியும் திறனும், நல்ல அறிவாற்றலும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்றுக் கூற முடியாது. இதனால் உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது முன் கோபத்தை குறைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண்  & 1,2,3,9,
நிறம்  & ஆழ்சிவப்பு, மஞ்சள்
கிழமை & செவ்வாய், வியாழன்
திசை  & தெற்கு
கல்   & பவளம்
தெய்வம் & முருகன்

பரிகாரம்
விருச்சிக  ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10&ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு ப்ரீதி, தட்சிணா மூர்த்திக்கு நெய் தீப மேற்றி வழிபாடு செய்வது நல்லது. ஏழரை சனி நடைபெறுவதால் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீப மேற்றுவது நல்லது. 4ல் கேது, 10ல் ராகு சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது உத்தமம்.

please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA