Monday, November 30, 2015

டிசம்பர் மாத ராசிப்பலன் சுப முகூர்த்த நாட்கள் 2015



கற்பகம் பல்கலை கழகத்தில் ஜோதிடவியல் துறையில் 20/11/2015அன்று நடைபெற்ற வாய் மொழி தேர்வில் எனக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. எனது நெறியாளர் திருமதி மகாலட்சுமி அம்மா அவர்களுக்கும், இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து பெருமக்களுக்கும், மற்றும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நன்றியினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்து கொள்கிறேன்.





 காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் 

காலை 07-15 மணி முதல் 07.30 மணி வரை 
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
 ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
( காலை 07-05 மணி முதல் 07.15 மணி வரை சனி ஞாயிறு)

 " இந்த நாள் "

என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 
டிசம்பர்  மாத ராசிப்பலன்   சுப முகூர்த்த நாட்கள்    2015

மேஷம்   ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 5&ல் குரு, 6ல் செவ்வாய் இராகு சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். கடந்த கால பிரச்சனைகள் யாவும் விலகி நற்பலன்கள் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும்.  வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய வார்கள். அபிவிருத்தியும் பெருகும்.
பரிகாரம். விநாயகரை வழிபடுவது சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 09.12.2015 மாலை 04.28 மணி முதல் 12.12.2015 அதிகாலை 01.19 மணி வரை.

ரிஷபம்  ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே
இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4ல் குருவும் 7&ல் சூரியன் சனியும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் அடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தாலே வீண் பிரச்சனைகள் உண்டாவதை குறைத்து கொள்ள முடியும்.  உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும்.
பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 12.12.2015 அதிகாலை 01.19 மணி முதல் 14.12.2015 காலை 07.54 மணி வரை

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே
எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&ல் சூரியன் சனி சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் செயல் பட்டால் எதிர் பார்த்த லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். 
பரிகாரம். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 14.12.2015 காலை 07.54 மணி முதல் 16.12.2015 பகல் 12.54 மணி வரை.

கடகம்     ;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே
கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு தன ஸ்தானமான 2ல் குருவும், 3ல் செவ்வாய், ராகுவும் சஞ்சாரம் செய்வதும் மாத பிற்பாதியில் ருண ரோக ஸ்தானமான 6ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும், அற்புதமான அமைப்பாகும். இதனால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். மிருமண சுப காரியங்கள் கைகூடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற் கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி  வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். 
பரிகாரம். சிவ பெருமானைன வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 16.12.2015 பகல் 12.54 மணி முதல் 18.12.2015 மதியம் 04.48 மணி வரை.

சிம்மம்     ;  மகம், பூரம். உத்திரம்1& ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு   ஜென்ம ராசிக்கு 2ல் செவ்வாய் ராகு, 4ல் சனி சூரியன்  சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன்&மனைவியிடையே ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய முயற்சிகளில் சற்று கவனம் தேவை. 
பரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 18.12.2015 மதியம் 04.48 மணி முதல்20.12.2015 இரவு 07.44 மணி வரை.

கன்னி ;  உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே
மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு  ஜென்ம  ராசிக்கு 3&ல் சனியும் சூரியனும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்-மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். நினைத்தது நிறைவேறும். கொடுக்கல்&வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும் வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும்.
பரிகாரம். முருகப்பெருமானை வழிபடவும்
சந்திராஷ்டமம் 30.12.2014 காலை 05.55 மணி முதல் 01.01.2015 பகல் 11.47 மணி வரை. 

துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே
உயர்ந்த நிலையை அடைய வேண்டிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 11&ல் குரு, மாத பிற்பாதியில் 3&ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் 
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். கல்வியிலும் மாணவர்கள் சிறந்து விளங்க முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம். சனி பகவானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 22.12.2015 இரவு 10.04 மணி முதல் 24.12.2015 இரவு 12.46  மணி வரை.

விருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே
தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு   ஏழரை சனியில் ஜென்ம சனி தொடருவதும் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதும் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். என்றாலும் 11&ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன்&மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது  ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 24.12.2015 இரவு 12.46  மணி முதல் 27.12.2015 காலை 05.18 மணிவரை.

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே
வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 9&ல் குரு, 11ல் சுக்கிரன், சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு எனறாலும், 12ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கரை எடுத்து கொண்டால் மட்டுமே தேவைவயற்ற மருத்துவ செலவுகளை குறைக்கலாம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். வேலை பளுவும் குறைவாகவே இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். முடிந்தவரை பயணங்களை தவிர்த்து விவது நல்லது.
பரிகாரம். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 27.12.2015 காலை 05.18 மணி முதல் 29.12.2015 மதியம் 01.03 மணி வரை.

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே
தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு  லாப ஸ்தானமான 11ல் சூரியன், சனி சஞ்சரிப்பதும் 10ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். நினைத்ததை நிறைவேற்ற முடியும். உடல்  ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும். பண வரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். வேலை பளு கூடுதலாகும்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 02.12.2015 அதிகாலை 04.01 மணி முதல் 04.12.2015 மாலை 04.00  மணி வரை.
மற்றும் 29.12.2015 மதியம் 01.03 மணி முதல் 31.12.2015 இரவு 12.13 மணி வரை.

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே
மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7&ல் குரு சஞ்சரிப்பதாலும் மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார  நிலை சிறப்பாகவே இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணம் போன்ற மங்களகரமாக சுப காரியங்கள் கை கூடும். எந்த வித பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.  எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கரை எடுத்த கொள்வது நல்லது. சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். 
பரிகாரம். ராகு கேதுவை வழிபடுவது, சர்ப சாந்தி செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 04.12.2015 மாலை 04.00 மணி முதல் 07.12.2015 அதிகாலை 05.00 மணி வரை.

மீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு ருண ரோக ஸ்தானமான 6ல் குரு சஞ்சரிப்பதும், களத்திர ஸ்தானமான 7ல் செவ்வாய் ராகு சஞ்சாரம் செய்வதும் குடும்பத்தில் தேவையற்ற வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். உடல்  ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்&மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.  பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை ஏற்படும். புதிய சேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன் படுத்தி கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலார்களை அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம். தினமும் விநாயகரை  வழிபடுவது முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 07.12.2015 அதிகாலை 05.00 மணி முதல் 09.12.2015 மாலை 04.28 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

06.12.2015 கார்த்திகை 20 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை தசமிதிதி அஸ்த நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை.

07.12.2015 கார்த்திகை 21 ஆம் தேதி திங்கட்கிழமை ஏகாதசிதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் தனுசு இலக்கினம். தேய்பிறை. 

20.12.2015 மார்கழி 04 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை தசமிதிதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை

21.12.2015 மார்கழி 05 ஆம் தேதி  திங்கட்கிழமை ஏகாதசிதிதி அஸ்வினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

28.12.2015 மார்கழி 12 ஆம் தேதி  திங்கட்கிழமை திருதியைதிதி பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மகர இலக்கினம் .தேய்பிறை.

30.12.2015 மார்கழி 14 ஆம் தேதி  புதன்கிழமை பஞ்சமிதிதி மகம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை.

Contact

For your consultation



Jothidamamani

Dr MuruguBalamurugan M.A.astro. Ph.D in Astrology

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA.


Intha Naal 11/30/15

w

Saturday, November 28, 2015

மேஷம் (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய) 2016 ஆண்டு பலன்கள்

கற்பகம் பல்கலை கழகத்தில் ஜோதிடவியல் துறையில் 20/11/2015அன்று நடைபெற்ற வாய் மொழி தேர்வில் எனக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. எனது நெறியாளர் திருமதி மகாலட்சுமி அம்மா அவர்களுக்கும், இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து பெருமக்களுக்கும், மற்றும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நன்றியினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்து கொள்கிறேன்.





 காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் 

காலை 07-15 மணி முதல் 07.30 மணி வரை 
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
 ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
( காலை 07-05 மணி முதல் 07.15 மணி வரை சனி ஞாயிறு)

 " இந்த நாள் "

என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 




மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

டுக்கும் காரியங்கள் அனைத்திலும் திறம்படச் செயல்பட்டு வெற்றி பெறக்கூடிய ஆற்றல்கொண்ட மேஷ ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்புகிரகமான பொன்னவன் என போற்றக்கூடிய குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதாரரீதியாக உயர்வான நிலை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். இதுமட்டுமின்றி 08-01-2016 முதல் கேது பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபங்கள் பெருகும். சிலருக்கு வீடு, மனை வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும் என்றாலும் இந்த ஆண்டுமுழுவதிலும் சனி பகவான் 8-ல் சஞ்சரிப்பதால் அஷ்டமச் சனி நடைபெறுவது சற்று சாதகமற்ற அமைப்பாகும். ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களை வாரிவழங்கும் குரு பகவான் வரும் 02-08-2016 முதல் ருண ரோக ஸ்தானமான 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பது அனுகூலமற்ற அமைப்பாகும். இதனால் அலைச்சல், டென்ஷன், தொழில், உத்தியோகரீதியாக நெருக்கடிகள் போன்றவை ஏற்படும்.  எனவே 2016-ஆம் ஆண்டின் முற்பாதியில் சாதகமான பலன்களை அடைந்தாலும் பிற்பாதியில் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். பண வரவிலும் நெருக்கடிகள் நிலவும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் கவனம் தேவை.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி சிறுசிறு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் சில மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமாகும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உற்றார்- உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதால் மனநிம்மதி குறையும். பயணங்க ளாலும் அலைச்சல், டென்ஷன், உடல்சோர்வு உண்டாகும்.

குடும்பம், பொருளாதார நிலை

பணவரவுகள் ஆண்டின் முற்பாதியில் வெகுசிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். சுப காரியங்கள் கைகூடும். புத்திரர்களால் சில கவலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. ஆகஸ்ட் மாதம் முதல் எதிலும் கவனமுடன் நடந்துகொண்டால் மட்டுமே வாழ்வில் நற்பலனை அடையமுடியும்.

உத்தியோகம்

ஆண்டின் தொடக்கத்தில் தடைப்பட்ட ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வுகள் கிடைக்கப்பெறும். சற்றே அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலைப் பளுவை சற்றுக் குறைத்துக்கொள்ளலாம். ஆகஸ்ட் மாதம் முதல் பணியில் அதிக கவனமுடன் நடந்துகொண்டால் வீண் பழிச் சொல்லை தவிர்க்கலாம்.

தொழில், வியாபாரம்

இந்த ஆண்டின் தொடக்கமானது உங்களுக்கு நல்ல லாபத்தினை ஏற்படுத்தும். எடுக்கும் புதிய முயற்சிகளிலும் வெற்றிகளைப் பெறமுடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபங்கள் உண்டாகும். ஆகஸ்ட் மாதம் முதல் நீங்கள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவதே நல்லது. நிறைய போட்டி பொறாமைகளாலும் தொழிலாளர்களின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளாலும் லாபங்கள் குறைந்து மந்த நிலை உண்டாகும். கடன் அதிகரிக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

ஆண்டின் தொடக்கத்தில் நல்ல மேன்மைகள் உண்டாகும். தொட்டதெல்லாம் துலங்கும். கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். என்றாலும் ஆகஸ்ட் மாதம் முதல் பிறரை நம்பி பணவிஷயத்தில் முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதாலும் வீண் விரயங்கள் உண்டாகும். கொடுத்த கடனை வசூலிக்கமுடியாது. 

அரசியல்

மக்களின் ஆதரவுகளைப் பெற அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளைச் சந்தித்தாலும் இறுதியில் வெற்றிபெறுவீர்கள். ஆகஸ்ட் மாதம் முதல் எதிலும் கவனமுடன் செயல்பட்டால் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். மேடைப் பேச்சுகளில் கவனமுடன் நடப்பதும், உடனிருப்பவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பதும் நல்லது. கட்சிக்காக நிறைய வீண் செலவுகளும் செய்ய வேண்டியிருக்கும்.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். பயணங்களாலும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதார நிலையும் மிகச் சிறப்பாக இருக்கும். ஆகஸ்ட் மாதம் முதல் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் தடையும் பொருளாதாரரீதியாக நெருக்கடிகளையும் சந்திக்கநேரிடும். ஆரோக்கிய பாதிப்புகளால் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெறமுடியும். நவீன முறைகளைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குவீர்கள். வேலையாட்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்களும் கைகூடும். சொந்த பூமி, மனை போன்றவற்றையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.

பெண்கள்

ஆண்டின் முற்பாதியில் திருமண சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. ஆகஸ்ட் மாதம் முதல் பண விஷயங்களில் கவனமுடன் இருப்பது நல்லது.

மாணவ- மாணவியர்

மாணவர்களுக்கு கல்வியில் சற்று ஈடுபாடு குறைந்தாலும், முழு முயற்சியுடன் பாடுபட்டால் வெற்றிபெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். பயணங்களின்போது கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதங்களுக்கு பின் தான் கிடைக்கும்.


மாதப்பலன்



ஜனவரி 

உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும், குரு அதிசாரமாக 6-ல் சஞ்சாரம் செய்வதாலும் குடும்பத்திலுள்ளவர்களிடம் சற்று விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தேவையற்ற பிரச்சினைகளையும் அலைச்சல்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளைச் சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயங்களிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் சற்று தாமதப்படும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது. 

சந்திராஷ்டமம்: 05-01-2016 இரவு 12.56 மணி முதல் 08-01-2016 காலை 09.46 மணி வரை

பிப்ரவரி 

மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 9-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கு பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். அஷ்டமச் சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் தாராள தனவரவுகள் உண்டாவதால் எதையும் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபங்கள் பெருகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடையமுடியும். சனிக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 02-02-2016 காலை 09.40 மணி முதல் 04-02-2016 இரவு 07.17 மணி வரை.

மார்ச்

ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நற்பலனை தரும். பொருளாதாரரீதியாக முன்னேற்றங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி, சுப காரியங்கள் கைகூடக் கூடிய அமைப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 29-02-2016 மாலை 05.37 மணி முதல் 03-03-2016 காலை 04.19 மணி வரை மற்றும் 27-03-2016 இரவு 12.22 மணி முதல் 30-03-2016 பகல் 11.48 மணி வரை.

ஏப்ரல் 

அஷ்டம ஸ்தானமான 8-ல் சனி, செவ்வாயும் 12-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். பண விஷயத்தில் யாருக்கும் முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 24-04-2016 காலை 06.24 மணி முதல் 26-04-2016 மாலை 05.53 மணி வரை.

மே

ஜென்ம ராசியில் சூரியனும் 8-ல் சனி செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் பயணங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிலும் கடினமான முயற்சிகள் மேற்கொண்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். உற்றார்- உறவினர்கள் தேவையற்ற டென்ஷன்களை ஏற்படுத்துவார்கள். திருமணம்போன்ற சுபகாரியங் களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும்.  உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் நிலவும். எவ்வளவுதான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்கமுடியாது. துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் 21-05-2016 மதியம் 12.30 மணி முதல் 23-05-2016 இரவு 11.36 மணி வரை.

ஜூன்

குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் பொருளாதாரரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். புத்திர வழியில் பூரிப்பு, குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறக்கூடிய வாய்ப்பு, வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் போன்ற யாவும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். பூர்வீக சொத்து வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்கள் நிம்மதியுடன் செயல்பட முடியும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.
சந்திராஷ்டமம்: 17-06-2016 இரவு 07.18 மணி முதல் 20-06-2016 மாலை 06.04 மணி வரை.

ஜூலை 

ஜென்ம ராசிக்கு 3-ல்  சூரியனும், 5-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பண விஷயங்களில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 15-07-2016 அதிகாலை 02.56 மணி முதல் 17-07-2016 மதியம் 01.44 மணி வரை.

ஆகஸ்ட் 

சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதும், 8-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் 11-ல் கேது சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக மேன்மைகள் ஏற்படும். பயணங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த நேரிடும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்களும் கைகூடும்.  உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் அதிகரித்து வேலைப் பளு கூடும். முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 11-08-2016 மதியம் 11.01 மணி முதல் 13-08-2016 இரவு 10.18 மணி வரை.

செப்டம்பர் 

லாப ஸ்தானமான 11-ல் கேதுவும், மாதபிற்பாதியில் 6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்றாலும் 8-ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பயணங்களில் கவனமுடனிருப்பது நல்லது. பண வரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும்.  ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் தேக்கம் உண்டாகாது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் அலைச்சல் உண்டாகும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 07-09-2016 மாலை 06.52 மணி முதல் 10-09-2016 காலை 06.51 மணி வரை.

அக்டோபர் 

சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரனும், 6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். பண வரவுகளில் சுமாரான நிலை இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எந்தவொரு புதிய முயற்சிகளிலும் சிந்தித்துச் செயல்பட்டால் சாதகப் பலனை பெறமுடியும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 05-10-2016 அதிகாலை 01.57 மணி முதல் 07-10-2016 மதியம் 02.24 மணி வரை

நவம்பர்

அஷ்டமச் சனி நடைபெறுவதும் 7-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் தேவையற்ற பிரச்சினைகள் மேலோங்கும். நெருங்கியவர்களிடையே கருத்துவேறுபாடுகள் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களில் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிவரும். பண விஷயங்களில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். மற்றவர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 01-11-2016 காலை 08.15 மணி முதல் 03-11-2016 இரவு 08.45 மணி வரை மற்றும் 28-11-2016 மதியம் 02.19 மணி முதல் 01-12-2016 அதிகாலை 02.36 மணி வரை.

டிசம்பர் 

அட்டம ஸ்தானத்தில் சூரியன், சனி சஞ்சரிப்பது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் ராசியாதிபதி செவ்வாய் பலமாக சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றிகிட்டும்.  பணவரவுகளில் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தாமதப்படும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். மருத்துவச் செலவுகள் ஏற்படும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 25-12-2016 இரவு 08.52 மணி முதல் 28-12-2016 காலை 09.00 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 1, 2, 3, 9.

நிறம் : ஆழ்சிவப்பு.

கிழமை : செவ்வாய்.

கல் : பவளம்.        

திசை : தெற்கு. 

தெய்வம் : முருகன்.

Intha Naal 11/28/15

w

Tuesday, November 24, 2015

Intha Naal 11/24/15





இன்றுடன் விஜய் தொலைகாட்சியில்
 இந்தநாள் நிகழ்ச்சி ஒராண்டு நிறைவு

காணத்தவறாதீர், காணத்தவறாதீர், காணத்தவறாதீர்
விஜய் டிவியில் இந்த நாள்  (தினப் பலன்கள்)
  திங்கள் முதல் வெள்ளி வரை விஜய் டிவியில் காலை 7.15 மணி முதல் 7.30 மணி வரை (சனி ஞாயிறுகளில் காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை) பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் அடங்கிய  ( 12  இராசிகளுக்கும் தினப்பலன் )  இந்த நாள் என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர் 

இப்படிக்கு
முனைவர் முருகுபாலமுருகன்
எண் 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, 
வடபழனி, சென்னை 600 026
செல்  0091  7200163001.9383763001


Sunday, November 22, 2015

அதிகாரம் நிர்வாகம் சார்ந்த கல்வி அமைப்பு

கற்பகம் பல்கலை கழகத்தில் ஜோதிடவியல் துறையில் 20/11/2015அன்று நடைபெற்ற வாய் மொழி தேர்வில் எனக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. எனது நெறியாளர் திருமதி மகாலட்சுமி அம்மா அவர்களுக்கும், இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து பெருமக்களுக்கும், மற்றும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நன்றியினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்து கொள்கிறேன்.


ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


அதிகாரம் நிர்வாகம் சார்ந்த கல்வி அமைப்பு

      படித்தவர்களுக்கு மட்டுமே இச்சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. பல்வேறு நிலை கல்வி இருந்தாலும் பலரையும் வழி நடத்தி அதிகாரமுடன் பலரை நிர்வகிக்கும் கல்வி என்பது அனைவராலும் கற்று விட முடியாது. நிர்வாகம் சார்ந்த  B.B.A, M B A   படிக்கும் யோகம் சிலருக்கே உண்டாகிறது.  மற்ற பட்ட படிப்புகள் பலதை படித்தாலும் தனது அனுபவம் மூலம் நிர்வாகம் செய்கின்ற பொறுப்பு, அதிகாரியாகும் யோகம் சிலருக்கே அமைகின்றது. நிர்வாகத்தை தரும் கிரகமாக விளங்குபவர் செவ்வாய் பகவான். செவ்வாய் தைரியம் துணிவுடன் எந்தவொரு செயலையும் சுறுசுறுப்பாக செய்ய வழி வகுப்பார்.

      ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று 4, 10ஆம் அதிபதி சேர்க்கை பெற்றாலும் 4,10ல் அமைந்தாலும் நிர்வாகம் சார்ந்த கல்வி கற்கும் யோகம் உண்டாகும். அது மட்டும் இன்றி நல்ல மன உறுதி தைரியம் துணிவுடன் எதையும் எதிர் கொள்ளும் திறனை செவ்வாய் வலுபெற்றால் தருவார். 

செவ்வாய் 10ல் அமையப் பெறுவது திக் பல அமைப்பாகும். இந்த திக் பல அமைப்பு பெற்றவர்களே மிகச்சிறந்த நிர்வாகியாகும் யோகம் பெறுகிறார்கள் நிர்வாகம் சார்ந்த கல்வியில் ஈடுபடும் ஆர்வமும் உண்டாகிறது. 10ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் அமையப் பெற்று குரு போன்ற சுப கிரக பார்வை ஏற்பட்டால் அரசாங்கம் சார்ந்த துறைகளில் உயர் பதவிகளை வகிக்கும் வாய்ப்பு உண்டாகும். 

சூரியன் செவ்வாய் 10ல் அமையப் பெற்றாலே நிர்வாகம் செய்யும் திறமை அதனை சார்ந்த  கல்வி கற்கும் யோகம் அமைகின்றது. 10ல் சூரியன் செவ்வாய் அமையப் பெற்று உடன் புதன் சேர்க்கை உண்டானால் ஆடிட்டிங் துறையில் கல்வி கற்று வருமான வரித்துறை போன்றவற்றில் அதிகாரியாகும் அமைப்பு ஏற்படுகிறது.

      சனி பகவான் இன்சூரன்ஸ் துறைக்கு காரகம் வகிப்பவர் அது மட்டுமின்றி 8ஆம் வீடு காப்பீட்டுத் துறை ஸ்தானமாகும். 8ஆம் வீட்டதிபதி சனி புதனுடன் இணைந்து 10ல் வலு பெற்றால்  குறிப்பாக குரு போன்ற சுப கிரக பார்வை பெற்றால் கற்கும் கல்வியால் காப்பீட்டுத் துறையில் அதிகாரியாக பணி செய்ய கூடிய ஆற்றல் உண்டாகும்.
     
லக்னாதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்று கேந்திர கோணத்தில் அமையப் பெறுவது மிகவும் அற்புதமான அதிகாரம் மிகுந்த கல்வியை ஏற்படுத்தும். செவ்வாய் ஜாதகத்தில் பலம் பெற்று 3,6,10,11 போன்ற உபஜய ஸ்தானங்களில் அமையப் பெற்று லக்னாதிபதி அல்லது குருவின் பார்வையை பெற்று அமையப் பெற்றால் ஐ ஏ எஸ் கல்வி பயிலும் வாய்ப்பு அமைய பெற்று ஒரு மாவட்டத்தையே நிர்வாகம் செய்யும் ஆற்றல் உண்டாகிறது. 9க்குரிய கிரகம் எங்கு இருந்தாலும் பலம் இழக்காமல் சுபர் பார்வை அல்லது சேர்க்கை பெற்றிருத்தல் மிகவும் அவசியம். சந்திரன், சூரியன் இருவரில் ஒருவராவது ஆட்சி உச்சம் அல்லது குரு பார்வை பெற்றிருந்து 10ஆம் வீட்டுடன் தொடர்பு பெற்று அமையப்  பெற்றால் ஐ ஏ எஸ் போன்ற உயர் கல்வி கற்று பட்டம் பதவிகளை பெறும் யோகம் கண்டிப்பாக அமைகின்றது.

Wednesday, November 18, 2015

Intha Naal Episode 301

ww

மருத்துவக்கல்வி




 காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் 

காலை 07-15 மணி முதல் 07.30 மணி வரை 
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
 ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )

 " இந்த நாள் "

என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


மருத்துவக்கல்வி 

கடவுளுக்கு அடுத்தபடியாக நாம் நம்புவதும் கையெடுத்து கும்பிடுவதும் மருத்துவரைத்தான். உயிரை காப்பாற்றும் திறமை டாக்டருக்கே உண்டு. உயிருக்கு போராடுபவர்களையும் உயிரோடு மீட்டுதரும் வல்லமை கொண்டவர்கள் மருத்துவர்கள். மருத்துவத்துறையில் பல பிரிவுகள் உள்ளன. மனிதனின் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒவ்வொரு கல்வி உண்டு. அவற்றை தனித்தனிப்பிரிவுகளாக எடுத்து கொண்டு அவற்றை கற்று தேர்ந்து மனிதனின் ஆயுளைகூட்டித் தருகிறார்கள். இதனால் மருத்துவர்கள் கடவுளுக்கு அடுத்த படியாக திகழ்கிறார்கள். 10வது கூடதேர்ச்சி பெறாத சிலர் தங்களை மருத்துவர் என்று கூறிக்கொண்டு மக்களுக்கு போலியாக மருத்துவம் பார்க்கிறார்கள். விளம்பரங்களில் வரும் தலைவலிக்கு இதை போடுங்கள் வயிற்றுவலிக்கு அதை குடியுங்கள் என்ற விளம்பரங்களை மனதில் வைத்து கொண்டு மக்களின் உயிரோடு விளையாடும் போலிமருத்துவர்களை கண்டு பிடித்து அவர்களுக்கு தக்க தண்டனையை வாங்கி தருவது அரசின் கடமையாகும்.

சூரியன் மருத்துவ காரகன். செவ்வாய் ரத்தம் அறுவை சிகிச்சை மற்றும் மருந்து காரகன் ஆவார்.  ராகு கேது இருவரும் மருந்து கெமிக்கல்ஸ் போன்றவற்றிற்கும் காரகம் வகிக்கும் கிரகங்கள் ஆகும். செவ்வாய் பகவான் தைரியம் துணிவையும் தருபவர். 

      ஜெனன ஜாதகத்தில் லக்கினத்திற்கு கல்வி ஸ்தானமான  4 அல்லது ஜீவன ஸ்தானமான 10ல் சூரியன் செவ்வாய் இருந்தாலும், இருவரும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் சூரியன் செவ்வாய் சாரம் பெற்று செவ்வாய் சூரியன் சாரம் பெற்று சாரப் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் மருத்துவக் கல்வி கற்கும் யோகம் உண்டாகும்.

      10ல் கேது அமையப் பெற்று இருந்தாலும் 10ஆம் அதிபதி கேது சாரம் பெற்றாலும் மருத்துவ கல்வி அமையும். 10ல் சூரியன் உச்சம் பெற்று செவ்வாய் புதன் பலம் பெற்றால் சிறப்பான மருத்துவ கல்வியை கற்க முடியும்.
     
9,10,11ல் கேது அமையப் பெற்றிருந்தால் மருத்துவம் சார்ந்த கல்வி உண்டாகும்.  அதனுடன் சந்திரன் உச்சம் பெற்றாலும் மருத்துவ கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்படும்.

      சூரியன் செவ்வாய் பலம் பெற்று 9மிடம் பலம் பெற்றிருந்தால் கடல் கடந்து வெளிநாடு சென்று மருத்துவத்துறையில் ஆராய்ச்சி செய்து பட்டம் பெறும் வாய்ப்பு உண்டாகும். இதில் செவ்வாயின் பலம் அதிகமாக பெற்றவர்கள் அறுவை சிகிச்சையில் சாதனை புரிந்து பலரும் போற்றும் புகழ் பெற்றவர்களாக விளங்குவார்கள்.

ஜென்ம லக்கினத்திற்கு 4ஆம் வீட்டிலோ, 4ஆம் அதிபதியுடனோ, சூரியன் சுக்கிரன் புதன் இணைந்து காணப்பட்டால் அவர் காது மூக்கு தொண்டை மருத்துவத்தில் சிறப்பான கல்வியை கற்று இத்துறையில் புகழ் மிக்க அறுவை சிகிச்சை நிபுணராகவும் உயர்வடைவார்.
     
      சூரியன் சனி சேர்க்கை பெற்று காணப்பட்டால் அவருக்கு பல் மருத்துவக் கல்வி அமைந்து மிகச் சிறந்த பல் மருத்துவராக சாதனை செய்ய முடியும்.சூரியன் சுக்கிரன் ராகு ஆகிய மூவரும் இணைந்து ஒரே வீட்டில் காணப்பட்டால் மருத்துவத் துறையில் x Ray  E C G Scan  போன்ற பல விதமான பணிகளிலும் சிறப்பு பெற்ற கல்வியை கற்க முடியும்.
     
கண்களுக்கு காரகனான சூரியன் சுக்கிரன் சந்திரன் மூவரும் இணைந்து காணப்பட்டால் கண் மருத்துவ கல்வியை கற்று அதில் புகழ் பெற முடியும். சூரியன் சந்திரன் குரு இணைந்து காணப்பட்டால் குடல் நோய் சார்ந்த மருத்துவத் துறையில் நிபுணராக விளங்க முடியும்.
     
சூரியன் சுக்கிரன் செவ்வாய் குரு சேர்க்கை பெற்று பலம் பெற்றால் மகப்பேறு மருத்துவராகவும் மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுனராகவும் புகழ் பெறுவார். சூரியன் சனி இணைந்து பலம் பெற்ற காணப்பட்டால் எலும்பு மூட்டு சிகிச்சை  தொடர்புடைய கல்வி உண்டாகும், சூரியன் புதன் குரு இணைந்து காணப்பட்டால் நரம்பியல் துறையில் மருத்துவ கல்வி கற்பர்.

Contact

For your consultation


Please sent Rs 500 for 5 Questions( with in  India)  per person , 25 US DOLLAR  For NRI  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) to  e-mail  for  horoscope reading

please contact my postal address  

Jothidamamani

MuruguBalamurugan M.A.astro. Ph.D in Astrology

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA.