Saturday, December 31, 2016

வார ராசிப்பலன் ஜனவரி 1 முதல் 7 வரை 2017

(ஜனவாி 1ம் தேதி முதல் தினமும் 
வலைதளத்தில் தினப்பலன்)

வார ராசிப்பலன்  ஜனவரி  1 முதல் 7 வரை   2017
மார்கழி 17 முதல் 23 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com





இந்த வார பஞ்சாங்கம்

01.01.2017, மார்கழி 17, ஞாயிறுக்கிழமை, திரிதியை திதி பகல் 03.33 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி, திருவோணம் நட்சத்திரம் மாலை 04.01 வரை பின்பு அவிட்டம், அமிர்தயோகம் மாலை 04.01 வரை பின்பு மரணயோகம், நேத்திரம் & 0, ஜீவன் & 1/2, சுப நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.


02.01.2017, மார்கழி 18, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி மதியம் 03.51 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி, அவிட்டம் நட்சத்திரம் மாலை 04.51 வரை பின்பு சதயம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் & 0, ஜீவன் & 1/2 , மாத சதுர்த்தி விநாயக வழிபாடு நல்லது, சுப நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.


03.01.2017, மார்கழி 19, செவ்வாய்கிழமை, பஞ்சமி திதி மதியம் 03.42 வரை பின்பு வளர்பிறை சஷ்டி, சதயம் நட்சத்திரம் மாலை 05.17 வரை பின்பு பூரட்டாதி, நாள் முழுவதும் மரணயோகம்நேத்திரம் &  1, ஜீவன் & 1/2, முருக வழிபாடு நல்லது, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

04.01.2017, மார்கழி 20, புதன்கிழமை, சஷ்டி திதி மாலை 03.06 வரை பின்பு வளர்பிறை சப்தமி, பூரட்டாதி நட்சத்திரம் மாலை 05.15 வரை பின்பு உத்திரட்டாதி, அமிர்தயோகம்   மாலை 05.15 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் & 1 , ஜீவன் & 1/2 , சஷ்டி விரதம் முருக வழிபாடு நல்லது.        

05.01.2017, மார்கழி 21, வியாழக்கிழமை,       சப்தமி திதி பகல் 02.01 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி, உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 04.45 வரை பின்பு ரேவதி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் &  1, ஜீவன் & 1/2 , சுப நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.


06.01.2017, மார்கழி 22, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி பகல் 12.25 வரை பின்பு வளர்பிறை நவமி, ரேவதி நட்சத்திரம் பகல் 03.45 வரை பின்பு அஸ்வினி, சித்த யோகம் பகல் 03.45 வரை பின்பு  அமிர்தயோகம், நேத்திரம் &  1, ஜீவன் & 1/2 , அம்மன் வழிபாடு நல்லது, சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

07.01.2017, மார்கழி 23, சனிக்கிழமை, நவமி திதி காலை 10.22 வரை பின்பு  தசமி, அஸ்வினி நட்சத்திரம் மதியம் 02.18 வரை  பின்பு பரணி,      நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் &  2, ஜீவன் & 1/2 , சனி பகவான் வழிபாடு நல்லது.







கேது  செவ்
சுக்கி
               
திருக்கணித கிரக நிலை




சந்தி  
ராகு
புதன் (வ)
சூரிய
சனி 

               
குரு 


கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மகரம்  30.12.2016 இரவு 07.38 மணி முதல் 02.01.2017 அதிகாலை 04.25 மணி வரை.
கும்பம்  02.01.2017 அதிகாலை 04.25 மணி முதல் 04.01.2017 பகல் 11.15 மணி வரை.
மீனம்          04.01.2017 பகல் 11.15 மணி முதல் 06.01.2017 மதியம் 03.45 மணி வரை.
மேஷம்   06.01.2017 மதியம் 03.45 மணி முதல் 08.01.2017 மாலை 05.58 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

01.01.2017 மார்கழி 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியைதிதி திருவோண நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை

02.01.2017 மார்கழி 18 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்திதிதி அவிட்ட நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை

05.01.2017 மார்கழி 21 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமிதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை


மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
தைரியமும் அஞ்சா நெஞ்சமும் உடன் பிறந்தது என்பதால் எந்த வித பிரச்சனைகளையும் எளிதில் சமாளித்து விடும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 9ல் சூரியன், 11ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பதால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலன் கிட்டும்தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சற்ற கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பால் எதையும் சமாளிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் ஆதாயங்கள் தேடி வரும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். இந்த வாரம் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்                     1,7.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
பார்ப்பதற்கு சாதாரணப் பேர் வழிகளாக இருந்தாலும் யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்டியடிக்கும் குணம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 5ல் குரு, 10ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்றாலும் 8ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் சுபிட்சமும் சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வரும். குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வீடு மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகளை தற்போது மேற் கொள்ளலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்களும் தேடி வரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதையும் சிறப்புடன் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். பெற்றோர் ஆசிரியர்களுக்கு கீழ் படிந்து நடந்து கொண்டால் அனைவரின் ஆதரவுகளையம் பெறுவீர்கள். சிவபொருமானை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்                     2,3,4,5,6.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
தன்னுடைய  ரசிக்கும்படியான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு எளிதில் பாத்திரமாக கூடிய மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 6ல் சனி, 9ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எந்த வித எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றிகளை பெற்று விடுவீர்கள். உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது என்றாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிரமமும் இருக்காது. கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது உத்தமம்பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சற்று பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியை பெருக்க முடியும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை உண்டாக கூடும் என்பதால் முழு மூச்சுடன் முயன்று படிப்பது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்                     4,5,6,7.
சந்திராஷ்டமம்      30.12.2016 இரவு 07.38 மணி முதல் 02.01.2017 அதிகாலை 04.25 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனமும் பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் நடந்து கொள்ளும் பண்பும் கொண்ட கடக ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன் சஞ்சரிப்பது ஓரளவுக்கு நல்ல அமைப்பு என்றாலும் 8ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். எதிர்பார்த்த லாபத்தை பெற எதிர் நீச்சல் போட வேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் வேலைபளு கூடும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளைத் ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். இந்த வாரம் முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்     1,7.
சந்திராஷ்டமம்                      02.01.2017 அதிகாலை 04.25 மணி முதல் 04.01.2017 பகல் 11.15 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கும் பண்பும், தன்னை போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் குணமும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 5ல் சூரியன், 7ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 2ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில்  பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கலாம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சனைகளும் ஏற்படாது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். இந்தவாரம் சிவபெருமானை வழிபாடுவது செய்வது நற்பலனை தரும்
வெற்றிதரும் நாட்கள்     1,2,3.
சந்திராஷ்டமம்                      04.01.2017 பகல் 11.15 மணி முதல் 06.01.2017 மதியம் 03.45 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
தவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவராக விளங்கும் கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் சனி 6ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன் மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு வீண் செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றமானப் பலன்களைப் பெறுவீர்கள். கிடைக்க வேண்டிய லாபமும் கிடைக்கும். மாணவர்கள் கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ள கூடிய சூழ்நிலைகள் உண்டாவதால் சற்றே அலைச்சல்கள் அதிகரிக்கும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்     2,3,4,5.
சந்திராஷ்டமம்                      -06.01.2017 மதியம் 03.45 மணி முதல் 08.01.2017 மாலை 05.58 மணி வரை.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் எதற்கும் சலைக்காமல் பாடுபடும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன், 5ல் சுக்கிரன், 11ல் ராகு சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் கருத்துவேறுபாடுகள் தோன்றினாலும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமதநிலை ஏற்படும்பண வரவுகள் தாராளமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் செலவுகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அசதி சோர்வு போன்றவை உண்டாவதால் அன்றாட பணிகளில் மந்த நிலையிலேயே செயல்படுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன் படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கப் பெறும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்     4,5,6,7

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
மற்றவர்களில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன், 4ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. லாப ஸ்தானமான 11ல் குரு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறு சிறு ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலனை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விட கூடிய ஆற்றல் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர் பார்த்த லாபத்தை அடைந்துவிட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது சிறப்பு. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் கவனம் தேவை. தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்                     1,6,7.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பது இயலாத காரியமாக கருதும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 3ல் செவ்வாய்கேது சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்க்கும் வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அனைவரிடமும் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது மூலம் மருத்துவ செலவுகளை குறைத்து கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது என்றாலும் நிறைய போட்டிகளை சமாளித்தே லாபத்தை பெற வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படாமல் சமாளிக்கலாம். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல் படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவபொருமானை வழிபாடு செய்வது சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து மேற்கொள்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்     2,3,4.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமன்றி வெகுளித்தனமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2ல் செவ்வாய் 12ல் சூரியன் சஞ்சாரம்  செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 9ல் குரு 11ல் சனி சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறு சிறு ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சில நேரங்களில் அவர்களே தேவையற்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவதோடு எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். தொழிலாளர்களும் கூட்டாளிகளும் அனுகூலமாக செயல்படுவார்கள். பயணங்களால் சாதகப்பலன் அமையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கனைப் பெற முடியும். எதிர்பார்க்கும் இட மாற்றமும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்     1,4,5,6.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
தனக்கு பிடித்தவர்களிடம் அன்புடன் நெருங்கி பழகும் பண்பும், பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்காத குணமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசியில் சுக்கிரன், 11ல் சூரியன், புதன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கரை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகி குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். திருமண சுபகாரியங்கள் கை கூட சற்று தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலன்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று தாமத நிலை உண்டாகும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்தே லாபத்தினைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்க பெறும் என்றாலும் தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வது நல்லது. மாணவர்களுக்கு உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் கல்வியில் சற்ற மந்த நிலை உண்டாகும். முருகப் பெருமானை வழிபாடு செய்யவும்.
வெற்றிதரும் நாட்கள்     2,3,4,7.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
சின்ன சின்ன விஷயங்களில் கூட குற்றம் கண்டுபிடித்து பேசும் போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என உணர்த்தும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 7ல் குரு, 10ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் நிலை சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். பொன் பொருள் சேரும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக அமைவார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். செய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறுதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்     1,4,5,6.