Saturday, January 16, 2016

பத்திரிகைத் துறை சார்ந்த கல்வி




வரும் 17/1/2016  ஞாயிறு


காலை 06/30- மணி முதல்-07/00 மணி வரை

உங்கள் விஜய் டிவியில் எனது 

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் காணதவறாதீர்


தற்போது சென்னை ராயபேட்டை YMCA அரங்கில் நடைபெறும் 
புத்தக கண்காட்சியில் புதிதாக வெளிவந்துள்ள எனது படைப்புகள்

சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் (நக்கீரன் நிறுவனம்)
ISBN எண்ணுடன் வெளிவந்துள்ள தனிபுத்தகங்கள்
  •  27 நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்நாள் வழிகாட்டி.
  • நலம் தரும் நவகிரக வழிபாடு.
  • காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம் 
  • திருமண தோஷம் போக்கும் பாிகாரங்கள்




பத்திரிகைத் துறை சார்ந்த கல்வி

     காலை எழுந்தவுடன் பத்திரிகை படிப்பதென்பது மக்கள் மத்தியில் இன்றியமையாத ஒரு செயலாக இருக்கிறது. அரசியல் சினிமா விளம்பரங்கள் குடும்ப செய்திகள் விபத்து பற்றிய செய்திகள் போன்றவற்றை பற்றி துல்லியமாக தெரிந்து கொள்ள பத்திரிகை மிகவும் உறுதுணையாக இருக்கிறது. பத்திரிகைத் துறை என்பது மிகவும் சக்தி வாய்ந்த துறையாகும். பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை மக்கள் படித்து தங்களின் பொது அறிவையும் வளர்த்து கொள்வதோடு, நாட்டு நடப்பையும் தெளிவாக தெரிந்து கொள்கிறார்கள். பத்திரிக்கைகளில் வரும் செய்தியை மக்கள் படிப்பதற்கு ஏற்றவாறு தருவது எழுத்தாளர்களின் திறமை. ஒரு சிறந்த பத்திரிகைதுறை என்பது இன்றைய சூழ்நிலையில் அறிவாற்றலுக்கு அதிக வேலை கொடுக்க கூடிய துறையாக உள்ளது. பல தரப்பட்ட மக்களை மகிழ்ச்சி  படுத்தும் எழுத்தாளராக ஆவது மிகப் பெரிய பாக்கியம். பத்திரிகை துறை என்பது பல்வேறு பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து மற்றவர்கள் அறியுமாறு கருத்துக்களை வெளியிடும் துறை ஆகும். ஒருவர் சிறந்த அறிவாளியாகவும், பல்வேறு விஷயங்களைப் பற்றி தெரிந்தவராகவும் இருந்தால் தான் பத்திரிகை துறையில் சிறந்து விளங்க முடியும். 

ஜென்ம லக்கினத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீடு நல்ல அறிவாற்றலையும், புத்தி கூர்மையையும் பற்றி விளங்கும் ஸ்தானமாகும். ஒருவர் ஜாதகத்தில் 5ம் வீடு பலம் பெற்றால் நல்ல அறிவாற்றல், பல்வேறு விஷயங்களை ஆராய்ச்சி செய்யும் திறன், கற்றதை வெளிப்படுத்தும் வல்லமை உண்டாகும். கலைக்காரகன் சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் பலம் பெறுவது, பத்திரிகை துறைக்கு காரகனாக விளங்க கூடிய கிரகமான புதன் பகவான் பலம் பெறுவது, கற்பனை திறனுக்கு காரகனான சந்திரன் பலம் பெறுவது போன்றவற்றின் மூலம் பத்திரிகை துறையில் சிறந்து விளங்குவதற்கான கல்வியை கற்க முடியும். 

ஜென்ம லக்னத்திற்கு 4,5க்கு அதிபதிகள் வலுவாக இருந்தால் தான் நல்ல அறிவாற்றல் உண்டாகும். 4,5க்கு அதிபதிகள் இணைந்து உடன் புதன் இருந்தால் பத்திரிகையாளராகும் வாய்ப்பு, சிறந்த எழுத்தாற்றல் கொண்ட நபராக விளங்கும் அமைப்பு உண்டாகும். 4,5க்கு அதிபதி இணைந்து உடன் குரு, புதன், சூரியன் போன்ற கிரகங்களின் சேர்க்கையோ, பார்வையோ பெற்றிருந்தால் சிறந்த பத்திரிகையாளராகும் வாய்ப்பு உண்டாகும். 4,5க்கு அதிபதிகள் புதனுடன் இணைந்து 10ல் அமைந்தாலும் 10ஆம் அதிபதி சேர்க்கை பெற்றிருந்தாலும் அந்த  ஜாதகர் பத்திரிகையையே தொழிலாகக் கொள்ள கூடிய கல்வியை கற்பார். 

4,5க்கு அதிபதிகள் புதன் சேர்க்கைப் பெற்று உடன் சுக்கிரன் இணைந்து காணப்பட்டால் அந்த  ஜாதகர் பத்திரிகைத் துறையில் குறிப்பாக சமூகப் பிரச்சனைகள், பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கலை தொடர்புடைய விஷயங்களைப் பற்றி எழுதும் பத்திரிகையாளராக விளங்க முடியும். குரு சேர்க்கை பார்வை பெற்று அல்லது குரு வீட்டில் கிரகங்கள் அமையப் பெற்றால் பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயங்கள், நீதி துறை தொடர்புடைய விஷயங்கள், மக்களுக்கு ஆலோசனை கூறும் விஷயங்களை பற்றி  அதிகம் எழுதுவதற்கான கல்வியை கற்கும் ஆற்றல் உண்டாகும். 

4,5க்கு அதிபதிகள் புதன் சனி போன்ற கிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தால் புராணங்கள் பற்றியும், தொழிலாளர்கள் பிரச்சனைகள் பற்றியும், தொழில் சங்க தொடர்புடைய விஷயங்களைப் பற்றியும் எழுதும் ஆற்றல் உண்டாகும். 4,5க்கு அதிபதிகள், புதன் ஆகியவை சூரியன் சேர்க்கைப் பெற்றிருந்தால் அரசு, அரசியல் சார்ந்த விஷயங்களைப் பற்றி அலசி ஆராயும் ஆற்றல் உண்டாகும்.

செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தால் ராணுவத் தொடர்புடைய விஷயங்கள், விவசாயம் மருத்துவத் தொடர்புடைய விஷயங்களைப் பற்றி அலசி ஆராயும் பத்திரிகையாளராக ஆகும் ஆற்றல் உண்டாகும். சந்திரன் சேர்க்கை பெற்றிருந்தால் பயணங்கள் உணவு வகைகள் தண்ணீர் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி அலசி ஆராய்ந்து எழுதும் ஆற்றல் ஏற்படும்.

புதன் சுக்கிரன் சந்திரன் மூவரும் பலம் பெற்றிருந்தால் சிறந்த எழுத்தாற்றல் உண்டாவது மட்டுமின்றி நல்ல பேச்சாற்றலும் உண்டாகும். குறிப்பாக புதன் சுக்கிரன் சேர்க்கை என்பது வலுவான எழுத்தாற்றலை உண்டாக்கும். சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் சுக்கிரன் கூடி இருந்தால் சிறந்த எழுத்தாற்றல் கொண்டவராகவும் மற்றவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் கவிதை கட்டுரைகளை எழுதும் எழுத்தாற்றல் பெற்றவராகவும் விளங்க முடியும். துலாம் மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9ம் வீடு புதனின் வீடாக வருகிறது. 9ல் புதன் சுக்கிரன் இணைந்தாலும் சிறந்த எழுத்தாற்றல் கொண்டவர்களாக விளங்குவதற்கான கல்வியை கற்க முடியும்.         

FOR YOUR CONSULTATION




JOTHIDAMAMANI

DR MURUGUBALAMURUGAN PHD ASTROLOGY.
NO-19/33 VADAPALANI ANDAVAR KOIL STREET
VADAPALANI,  CHENNAI-600026 NEAR BANK OF BARODA   
 MY CELL - 0091 - 7200163001,  9383763001
HTTPS://WWW.FACEBOOK.COM/MURUGU.BALAMURUGAN
HTTPS://PLUS.GOOGLE.COM/U/0/+MURUGUBALAMURUGAN
HTTPS://TWITTER.COM/MURUGUBALA
YOUTUBE / MURUGUBALAMURUGAN


E-MAIL  MURUGU.ASTRO@GMAIL.COM MURUGU_ASTRO@YAHOO.CO.IN.
WEB  WWW.MURUGUASTROLOGY.COM

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

OR

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person you sent money By western union money transfer 

Dr. R.Balamurugan PhD Astrology.
S/o M.Rajendran
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001

No comments: