Saturday, February 20, 2016

இசை சார்ந்த கல்வி

இசை சார்ந்த கல்வி

இன்றைய உலகில் இசைக்கு மக்களிடையே மிகப் பெரிய மதிப்பும் மரியதையும் உண்டு. ஓசை என்பது  பல வகையாக இருந்தாலும் குறிப்பாக இசை மூலம் வரும் ஓசையே மிகவும் பிரசித்தி பெற்றது. அதுவும் புகழ் பெற்ற கலைஞர்களால் இசைக்கப்படும் இசை என்பது மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. இசை மன அமைதியை ஏற்படுத்தும். பொழுது போக்குவதற்கும் பயன்படும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இசைக் கலையானது எல்லோருக்கும் கை வராது. அதில் நாட்டம் என்பது இயற்கையிலேயே அமைய வேண்டிய ஒன்றாகும். கருவில் இருக்கும் குழந்தைகள் முதல் கல்லறை செல்லும் முதியவர் வரை இசைக்கு மயங்காதவர்களே இல்லை. இசையில் ஈடுபாடு என்பது ஒருவரின் அடி மனத்திலிருந்து வரக் கூடிய உணர்ச்சிகளின் வெளிப்பாடாகும். முறையாக ராகம் தாளம் தெரியாதவர்களுக்கும் தொலைகாட்சியில் ஒரு பாடலை கேட்கும் போது வாய் தானாக முணுமுணுக்கும். கை கால்கள் தாளம் போடும். ஒருசிலர் எப்பொழுதும் எதையாவது பாடிக்கொண்டும், எதையாவது தட்டி ஓசையை எழுப்பிக்கொண்டும் இருப்பார்கள். சிலர் இசை சம்மந்தப்பட்ட அத்தனை விஷயங்களையும் கற்று தேர்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார்கள். இறைவனின் அருளால் இவ்வுலகில் நாம் அனைவரும் ஜீவித்து வந்தாலும் நவக்கோள்களின் திரு விளையாட்டால் தான் நமது அன்றாட செயல்கள் செல்கிறது. 

இந்த இசை ஆர்வம் ஏற்படுவதற்கு ஜோதிட ரீதியாக காரணங்களை  ஆராய்கின்ற போது ஜென்ம லக்னத்திற்கு 3ஆம் இடம் மிக மிக முக்கியமான ஸ்தானமாக விளங்குகிறது. 3ஆம் இடம் வலுப் பெற்றால் மட்டுமே இசைத்துறையில் ஈடுபாடு உண்டாகும். இத்துடன் கலைக்காரன் என வர்ணிக்கப்படும் சுக்கிரனின் ஆதிக்கமும் இசைத்துறையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 3ல் சுக்கிரன் வலுப்பெற்று இருந்தாலே இசைத்துறையில் ஈடுபாடு இசை சார்ந்த துறைகளில் நாட்டம் உண்டாகிறது. சுக்கிரன் இசை பாட்டு நடனம், நாட்டியம், சினிமா போன்றவற்றிற்கு காரகன் ஆவார். சுக்கிரனின் சேர்க்கையானது சூரியன் செவ்வாயுடன் இருந்து 3ஆம் வீட்டில் அமையப் பெற்றால் நடிப்புத் துறையில் ஈடுபாட்டை உண்டாக்குகிறது. சுக்கிரன், புதன், சேர்க்கை பெற்று 3ல் அமைகின்ற போது இசை சார்ந்த துறையில் ஆழ்ந்த அறிவாற்றல் உண்டாகிறது. சுக்கிரன் ஆட்சி உச்சம் பெறுகின்ற போது குறிப்பாக 3ஆம் வீட்டில் வலுப்பெறுவதும் 3ஆம் வீட்டு அதிபதியுடன் வலுப்பெறுவது மூலம் இசைத்துறையில் ஈடுபாட்டை உண்டாக்கும். கலைக்காரகன் சுக்கிரன் மட்டுமின்றி இசைத்துறையில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் கிரகமாக விளங்குவது சந்திரன் ஆவார். சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் வலுப்பெறும் போது அவர்களுக்கு இயற்கையிலேயே ஒரு கற்பனை ஞானமும் சுக்கிரனுடன் சேர்க்கை பெறும் போது இசைத்துறையில் புகழ் பெறும் வாய்ப்பும் உண்டாகிறது. குறிப்பிட்டுச் சொன்னால் சந்திரன் சுக்கிரன் 3ல் வலுப்பெறுகின்ற போது இசைத்துறையில் நாட்டமும் இத்துடன் ஜீவனாதிபதி சேர்க்கை ஏற்படுகின்ற இசைத்துறையில் ஈடுபட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டும் வாய்ப்பும் உண்டாகிறது.


சுக்கிரன் சந்திரன் மட்டுமின்றி ராசி மண்டலத்தில் சுக்கிரன் சந்திரன் வீடுகளான ரிஷபம், துலாம், கடகம் ஆகிய ராசிகளும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ரிஷபம் கடகம் துலாம் ஆகிய ராசிகளில் சுக்கிரன் சந்திரன் சேர்க்கை ஏற்படுகின்ற போது வலுவான இசை ஞானம் உண்டாகிறது. குறிப்பாக சுக்கிரன் சந்திரனின் ஆதிக்கம் மிக முக்கியமானது என்பதால் சுக்கிரன் சந்திரன் இருவரும் பரிவர்தனை பெறும் நிலை ஏற்பட்டால் அவர்கள் இசைத்துறையில் வலுவான நிலையினை அடைவார்கள். ரிஷபம் கடகம் துலாத்தில் சுக்கிரன் சந்திரன் அமைவது மிகவும் உத்தமமான அமைப்பு என்பது போல இவ்வீடானது ஜென்ம லக்னத்திற்கு 3ஆம் வீடாக அமைகின்ற போது அனுகூலமான பலன்களை உண்டாக்குகிறது. அதாவது ரிஷப லக்னத்தில் பிறந்த வர்களுக்கு 3&ஆம் வீடு சந்திரனுடைய வீடாகவும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3ஆம் வீடு துலா ராசியாகவும் மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3ஆம் வீடு ரிஷப ராசியாகவும். கடகம் துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இயற்கையிலேயே லக்னாதிபதி சந்திரன் சுக்கிரன் ஆக வருவதால் மேற்கூறிய லக்னத்தில் பிறந்து சந்திரன் சுக்கிரன் வலுப்பெற்றால் கண்டிப்பாக இசைத்துறையில் வலிமை பெறும் யோகம் உண்டாகும். அது போல மீன ராசி சுக்கிரனின் உச்ச வீடு என்பதால் மகர லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் 3ல் உச்சம் பெறுகின்ற போதும் இசைத்துறையில் ஈடுபாட்டை உண்டாக்கும். இக்கிரக நிலை மட்டுமின்றி 3ம் வீட்டதிபதி வலுப்பெற்ற சந்திரன் சுக்கிரனுடன் சேர்க்கை பெறும் பொழுதும் இசைத்துறையில் ஈடுபாட்டை உண்டாக்குகிறது. குறிப்பாக  ஜென்ம லக்னம் மற்றும் 3ம் வீட்டில் சந்திரன் சுக்கிரன் இணைந்து வலுப்பெறுகின்ற போதும் 1,3க்கு அதிபதிகள் வலுப்பெற்று சந்திரன் சுக்கிரனுடன் சேர்க்கை பெறுகின்ற போதும் இசைத்துறையில் நல்ல நிலையை அடையும் சூழ்நிலை உண்டாகிறது.

வலுப் பெற்ற சந்திரன் சுக்கிரனை குரு பார்வை செய்தாலும் சந்திரன் சுக்கிரன் இணைந்து பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ல் அமையப் பெற்றாலும் இசைத்துறையில் வலுவான நிலையை அடையும் சூழ்நிலை உண்டாகிறது. சந்திரன் சுக்கிரன் சேர்க்கையுடன் ஜீவனாதிபதி சேர்க்கை ஏற்படும் போது இசைத்துறை மூலம் சம்பாதிக்கும் நிலை உண்டாகிறது.


FOR YOUR CONSULTATION




PLEASE CONTACT MY POSTAL ADDRESS  

JOTHIDAMAMANI

DR MURUGUBALAMURUGAN PHD ASTROLOGY.
NO-19/33 VADAPALANI ANDAVAR KOIL STREET
VADAPALANI,  CHENNAI-600026 NEAR BANK OF BARODA   
 MY CELL - 0091 - 7200163001,  9383763001
HTTPS://WWW.FACEBOOK.COM/MURUGU.BALAMURUGAN
HTTPS://PLUS.GOOGLE.COM/U/0/+MURUGUBALAMURUGAN
HTTPS://TWITTER.COM/MURUGUBALA
YOUTUBE / MURUGUBALAMURUGAN


E-MAIL  MURUGU.ASTRO@GMAIL.COM MURUGU_ASTRO@YAHOO.CO.IN.

WEB  WWW.MURUGUASTROLOGY.COM

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

OR

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person you sent money By western union money transfer 

Dr. R.Balamurugan PhD Astrology.
S/o M.Rajendran
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001

No comments: