Thursday, March 31, 2016

மாத ராசிப்பலன் -சுப முகூர்த்த நாட்கள்- 2016

மாத ராசிப்பலன் -சுப முகூர்த்த நாட்கள்- 2016



காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்


ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


மேஷம்   ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே 
       நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு அட்டம ஸ்தானமான 8ம் வீட்டில் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும், சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன் மனைவியிடையே ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உங்களுக்கு அஷ்டம சனியும் தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் சற்று கவனடன் செயல்படுவது நல்லது. 
பரிகாரம். விநாயகரை வழிபடுவது சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது, தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது  உத்தமம்.
சந்திராஷ்டமம் 24.04.2016 காலை 06.24 மணி முதல் 26.04.2016 மாலை 05.53 மணி வரை.

ரிஷபம்  ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே 
        இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு 10ல் சுக்கிரன் லாப ஸ்தானமான 11ல் சூரியன் சஞ்சராரம் செய்வதால் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளையும் தற்போது மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் தோன்றும் தொழில் வியபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சனி 7இல் சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களால் சிறசிற மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர் பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளையும்  ஊதிய உயர்வுகளையும் பெற முடியும். 
பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது  துர்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 26.04.2016 மாலை 05.53 மணி முதல் 29.04.2016 அதிகாலை 03.16 மணி வரை.

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே 
        எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட உங்களுக்கு மாதகோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், ஜென்ம ராசிக்கு 6ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் எதிலும் முன்னேற்றமான நிலையை உண்டாக்கும் அமைப்பாகும். பண வரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளை கிடைக்கப் பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். 
பரிகாரம். தட்சினா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 01.04.2016 இரவு 08.22 மணி முதல் 04.04.2016 அதிகாலை 01.14 மணி வரை. 29.04.2016 அதிகாலை 03.16 மணி முதல் 01.05.2016 காலை 09.41மணி வரை.

கடகம்     ;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே 
       கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10ல் புதன் சஞ்சாரம் செய்வதும், மாதபிற்பாதியில் சூரியனும் 10ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. 
பரிகாரம். குருப்ரீதி, தட்சிணா முர்த்தியை வழிபாடு செய்வது  மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் 04.04.2016 அதிகாலை 01.14 மணிமுதல் 06.04.2016அதிகாலை 02.46 மணி வரை.

சிம்மம்  மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே 
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு 4ல் சனி செவ்வாய், 8ல் சூரியன் சஞ்சாரம் செய்வது சாதகற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். சுக வாழ்வு பாதிப்படையும். வண்டி வாகனம்,  வீடு மனை போன்றவற்றால் வீண் விரயங்கள் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்காது. செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் பணிகளை சிறப்புடன் செய்து பாராட்டுதல்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப்பலனை பெற முடியும்.
பரிகாரம். சிவ வழிபாடு மேற்கொள்வது ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 06.04.2016அதிகாலை 02.46 மணி முதல்08.04.2016 அதிகாலை 02.21 மணி வரை.

கன்னி ;  உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே 
      மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு 3ல் சனி செவ்வாய், 6ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதும் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது, முன் கோபத்தை குறைப்பது,னல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள்.
பரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 08.04.2016 அதிகாலை 02.21 மணி முதல் 10.04.2016 அதிகாலை 01.55மணி வரை.

துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே 
     உயர்ந்த நிலையை அடைய கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு  6&ல் சூரியன் 11ல் குரு ராகு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாகவே நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலனை பெற முடியும். அரசு வழியிலும் லாபம் கிட்டும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். சிலருக்கு வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணி புரியும் வாய்ப்பும் உண்டாகும்.
பரிகாரம். சனி பகவானை வழிபாடு செய்வது ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 10.04.2016 அதிகாலை 01.55 மணி முதல் 12.04.2016 காலை 03.28 மணி வரை.

விருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே 
      தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு ஏழரைசனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் மாதபிற்பாதியில் சூரியன் 6ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் ஓரளவுக்கு சுமாரான நற்பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டாகும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு, குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை பயன் படுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும்.
பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது  சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 12.04.2016 காலை 03.28 மணி முதல் 14.04.2016 காலை 08.28 மணி வரை.

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே 
      வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு  4ல் சூரியன் சஞ்சரிப்பதும் 12ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களை உண்டாக்கும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை ஏற்படாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றத்தினை அடைந்து விட முடியும். தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். உத்தியோகஸ்தர்களும் எதிர் பார்க்கும் உயர்வினை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் உடல் சோர்வு உண்டாகும். 
பரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 14.04.2016 காலை 08.28 மணி முதல் 16.04.2016 மாலை 05.17 மணி வரை

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே
     தானுண்டு தன் வேலையுண்டு என வாழும் குணம் கொண்ட உங்களுக்கு 8ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதும், 3ல் சூரியன், 11ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதும், சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாகவே இருக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய உதவிகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் நிதானமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையிருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும். 2,8இல் கேது ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
பரிகாரம். தட்சிணா மூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றுவது நல்லது.
சந்திராஷ்டமம் 16.04.2016 மாலை 05.17 மணி முதல் 19.04.2016 அதிகாலை 04.56 மணி வரை 

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே 
      மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு 10ல் சனி செவ்வாய் மாத பிற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதையும் வித பிரச்சனைகளையும் எளிதில் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு  பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயம் ஏற்படும் காலம் என்பதால்  வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படக் கூடிய காலம் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 19.04.2016 அதிகாலை 04.56 மணி முதல் 21.04.2016 மாலை 05.46 மணி வரை.

மீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே 
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு  மாத கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரித்தாலும் 6&ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருந்தால் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும்.கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் சிறுசிறு போட்டிகள் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும்.  புதிய வாய்ப்புகள் தேடி வரும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். கடன்கள் படிப்படியாக குறையும்.உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்படும்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிவன் முருகன் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 21.04.2016 மாலை 05.46 மணி முதல் 24.04.2016 காலை 06.24 மணி வரை

சுப முகூர்த்த நாட்கள்

03.04.2016 பங்குனி 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசிதிதி திருவோண நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை.

04.04.2016 பங்குனி 22 ஆம் தேதி திங்கட்கிழமை துவாதசிதிதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை.

11.04.2016 பங்குனி 29 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்திதிதி ரோகிணி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

21.04.2016 சித்திரை 08 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்த்தி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

25.04.2016 சித்திரை 12 ஆம் தேதி திங்கட்கிழமை திருதியை திதி அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுனம் இலக்கினம். தேய்பிறை.

29.04.2016 சித்திரை 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சப்தமி திதி உத்திராட நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை.
.



No comments: