Wednesday, July 20, 2016

குருப்பெயர்ச்சி பலன்கள் துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

சுக வாழ்வு, சொகுசு வாழ்வு வாழ்வதில் அலாதி பிரியமும், அழகாக உடை உடுத்துவதில் ஆர்வமும் கொண்ட துலா ராசி நேயர்களே! ஆண்டுக்கோளான குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் 02-08-2016 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்பதால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். சனி 2-ஆம் வீட்டில் சஞ்சரித்து ஏழரைச் சனியில் குடும்பசனி நடைபெறுவதால் கணவன்- மனைவியிடையே வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உற்றார்- உறவினர்களும் தேவையற்ற கருத்துவேறுபாடுகளை ஏற்படுத்துவார்கள். ராகு 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய ஆற்றல் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். அபிவிருத்தியும் பெருகும். லாபங்களில் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் தடை உண்டாகாது. குரு பார்வை 4, 6, 8 -ஆமிடங்களுக்கு இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதிக அளவில் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

உடல் ஆரோக்கியம்உடல் நிலையில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களல் ஏற்படகூடிய மருத்துவச் செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். பிள்ளைகளால் தேவையற்ற மனநிம்மதிக் குறைவுகள் ஏற்படும். பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.

குடும்பம், பொருளாதார நிலைகுடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உங்களுக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் தடைகள் உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளால் வீண் விரயங்களும் ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்துச் செயல்படவும். பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுத்தால் வீண் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறியான நிலையே நீடிக்கும்.

தொழில், வியாபாரம்தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் சரியான நேரத்திற்கு வந்து சேரும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது கவனம் தேவை. வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஓரளவுக்கு அனுகூலம் உண்டு. போட்டி பொறாமைகளை சமாளிக்க முடியும்.

உத்தியோகம்பணியில் உயரதிகாரிகளின் கெடுபிடிகள் மனநிம்மதிக் குறைவை ஏற்படுத்தினாலும், உடன்பணிபுரிபவர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் ஏற்படும்.

பெண்கள்உடல் நிலையில் சற்று கவனம் எடுத்துக் கொள்ளவும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உற்றார்- உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் ஓரளவுக்கு கிடைக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை.

அரசியல்சமுதாயத்தில் பெயர், புகழுக்கு பஞ்சம் ஏற்படாது என்றாலும் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை மேற் கொள்ள வேண்டியிருக்கும். கட்சி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். பொருளாதாரநிலை சுமாராக இருக்கும்.

விவசாயிகள்பயிர் விளைச்சல் சுமாராகத்தானிருக்கும். போட்ட முதலீட்டினை எடுக்க சற்று எதிர்நீச்சல் போடவேண்டும். பங்காளிகளின் ஆதரவுகள் ஓரளவுக்கு மனநிம்மதியினை உண்டாக்கும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபம் அமையும். புதிய பூமி, மனை போன்றவற்றை வாங்கும் விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

கலைஞர்கள்கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பார்த்துக்கொள்ளவும். போட்டி பொறாமைகள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் உடனிருப்பவர்களிடம் கவனம் தேவை. வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகும்.

மாணவ- மாணவியர்கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றிப் பெறமுடியும். முடிந்தவரை தேவையற்ற நட்புகளையும் பொழுதுபோக்குகளையும் தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். கல்விக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். விளையாட்டுப் போட்டிகளின்போது சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும், ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வீண் விரயங்கள் அதிகரிக்கும். பொருளாதார நிலையிலும் ஏற்ற இறக்கமான நிலையே நிலவும். என்றாலும் எதையும் சமாளித்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம்செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஓரளவுக்கு இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டி பெறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்றுவிட முடியும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதால் அபிவிருத்தியையும் பெருக்கிக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் பணியில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ஆம் அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும், ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்ற அமைப்பாகும். இதனால் பொருளாதார நிலையில் சுமாரான அமைப்பே இருக்கும். ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. ஏழரைச் சனி தொடருவதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்த்தால் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய போட்டிகள் நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் விரய ஸ்தானத்தில் செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நினைத்ததை ஓரளவுக்கு நிறைவேற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்கள் குறையும். குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். குடும்பத்தில் ஏற்படக் கூடிய சிறுசிறு பிரச்சினைகளை வேற்று நபர்களுடன் பகிர்ந்து கொள்ளாமலிருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலையிருக்கும் என்றாலும் வேலைப் பளுவும் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சற்று மந்தமான நிலையில் நடைபெற்றாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்றுவிட முடியும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் அதிசாரமாக ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். ஏழரைச் சனியில் குடும்பச் சனி நடைபெறுவததால் கணவன், மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலையும் ஏற்ற இறக்கமாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் உடன் பணிபுரிவர்களின் ஆதரவு கிட்டும். ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரைகுரு பகவான் வக்ர கதியிலிருப்பதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் இக்காலங்களில் கைகூடும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை மேம்படும். சுபிட்சங்கள்  அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். அசையும், அசையா சொத்துகளும் சேரும். உற்றார் உறவினர்களால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்துவந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வெளியாட்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலை உண்டாகும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15.07.2017 வரை சஞ்சாரம்குரு பகவான் ஜீவனாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அஜீரணக் கோளாறு இருக்கும். குடும்பத்திலுள்ளவர் களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. 11-ல் ராகு இருப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும் சனி பகவான் 2-ல் சஞ்சரிப்பதால் முடிந்த வரை பேச்சைக் குறைத்து, மற்றவர்கள் விஷயத்தில் தலையீடு செய்யாதிருக்கவும். அரசியல்வாதிகள் மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் மட்டுமே நன்மதிப்பைப் பெறமுடியும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் தன, களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் குடும்பத்தில் பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். 2-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். தேவையற்ற அலைச்சல்கள் சற்றே குறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். உற்றார்- உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது மனநிம்மதியைத் தரும். கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றப் பலனைப் பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது உத்தமம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.

நட்சத்திரப்பலன்
சித்திரை 3, 4-ஆம் பாதங்கள்துலா ராசியில் செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு சற்று ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். பொருளாதார நெருக்கடிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சற்று கடன் வாங்க நேரிடும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

சுவாதிதுலா ராசியில் ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு பண வரவுகளில் சுமாரான நிலையே இருக்கும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல், வாங்கலில் நம்பியவர்களே ஏமாற்ற நினைப்பார்கள். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ளவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் ஏற்படாது.

விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்துலா ராசியில் குருவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்களுக்குப் பிறகு வெற்றி கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளிப்பீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகக்கூடும் என்பதால் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாவதுடன் குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத வீண் விரயங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவைஎண்     : 4, 5, 6, 7, 8நிறம்     : வெள்ளை, பச்சைகிழமை: வெள்ளி, புதன்கல்: வைரம்திசை: தென்கிழக்குதெய்வம்: லட்சுமி
பரிகாரம்துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, தானம் போன்றவற்றை காலைப் பொழுதிலும் (வியாழக் கிழமைகளில்) மந்திர ஜெபங்களை மாலைப் பொழுதிலும் செய்வது நல்லது. ஏழரை சனி தொடருவதால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழு மலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது. சனிக்கிழமைகளில் விரதமிருந்து அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது, சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் முடிந்த உதவிகளைச் செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. 

No comments: