Thursday, July 21, 2016

குருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம்









விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)


மற்றவர்களிடம் நயமாகப்பேசி எளிதில் காரியங்களை சாதித்துக் கொள்ளும் விருச்சிக ராசி நேயர்களே! பொன்னவனான குரு பகவான் 02-08-2016 முதல் 02-09-2017 வரை ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும்.  இதனால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் அனைத்தும் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சனி ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுகிறது. உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, சேர்வு, கை கால் மூட்டுகளில் வலி போன் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பதும் நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. எந்தவொரு செயலிலும் ஒரு முறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. குரு சாதகமாக சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெறமுடியும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எல்லா வகையிலும் ஏற்றங்கள் ஏற்படும். பதவி உயர்வுகளும் தடையின்றி கிட்டும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குரு பார்வை 3, 5, 7-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பூர்வீக சொத்துகளாலும் அனுகூலங்கள் உண்டாகும். பொன், பொருள் சேரும். 

உடல் ஆரோக்கியம்

உடல் நிலை சுமாராகத்தானிருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், கை கால் மூட்டுகளில் வலி உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். என்றாலும் எதையும் சமாளித்து அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

குடும்பம், பொருளாதாரநிலை
குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் குறைந்து தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மணமானவர்களுக்கு சிறப்பான புத்திர பாக்கியமும் உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் அனுகூலப் பலனைப் பெற முடியும்.

கொடுக்கல்- வாங்கல்
பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். மற்றவர்களுக்குச் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். கடன் வாங்கியவர்களுக்கும் அதனை அடைக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகள் முடிவுக்கு வரும். அதிநவீன பொருட்கள் சேரும்.

தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் சிறுசிறு போட்டிகள் நிலவினாலும் அனைத்தையும் சமாளித்து லாபத்தினைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளிலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபத்தினைப் பெறமுடியும்.

உத்தியோகம்
பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்பட்டாலும் தடையின்றிக் கிடைக்கும். பொருளாதாரநிலை மிகவும் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனநிறைவைத் தரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்தின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடப்பது நல்லது. கடன்கள் குறையும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பொன், பொருள் சேரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுகள் கிட்டும். வேலைப் பளு குறையும்.

அரசியல்
பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் மக்களின் தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்ய முடியும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். போதிய நீர்வரத்தும் உண்டாகும். சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலை கிடைக்கப் பெறும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளும் கைகூடிய மகிழ்ச்சியளிக்கும்.

கலைஞர்கள்
நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ரசிகர்களின் பேராதரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கப் பெறும். படப்பிடிப்பிற்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.

மாணவ- மாணவியர்
கல்வியில் சிறப்பான மேன்மைகள் உண்டாகும். கல்விரீதியாக எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். நல்ல நட்புகளின் சேர்க்கையால் அனுகூலங்கள் தேடிவரும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்று பள்ளி கல்லூரி களுக்கு பெருமை சேர்ப்பீர்கள். அரசு வழியில் ஆதாயங்கள் கிட்டும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்
குரு பகவான் ஜீவனாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். ஏழரைச்சனியில் ஜென்மச் சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். கடன்கள் நிவர்த்தியாகும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளும் அனுகூலமாகச் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலைச்சல்களும் வேலைப் பளுவும் குறையும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்
குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள். ஏழரைச் சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் சொந்த பூமி, மனை யாவும் சேரும். அசையும், அசையா சொத்துகளால் அனுகூலமடைவீர்கள். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். மகிழ்ச்சி தரக்கூடிய இனிய சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். உற்றார்- உறவினர்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். கல்வி பயிலுபவர்களுக்கு கல்வியில் நல்ல மேன்மை உண்டாகி மதிப்பெண்கள் உயரும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் உங்கள் ராசியாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இக்காலங்களில் அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் லாபம் அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல், வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் இக்காலங்களில் உங்கள் ராசியாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்றாலும், அதிசாரமாக ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். இதுமட்டுமின்றி ஏழரைச் சனியில் ஜென்ம சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் மன நிம்மதி குறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலைக் குறைத்துக் கொள்ள முடியும். 

குரு பகவான் வக்ர கதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரை
குரு பகவான் வக்ர கதியிலிருப்பதால் நற்பலன்கள் ஏற்படுவதில் தடைகள் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை, சோர்வு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களின் ஆதரவுகள்  ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை எதிர்கொண்டே லாபத்தினைப் பெற முடியும். பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலை இருக்கும் என்றாலும் வேலைப் பளு அதிகரிக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளிலும் தாமத நிலை உண்டாகும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் லாப ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சந்திரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் கடந்தகால பிரச்சினைகள் யாவும் குறையும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்களும் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கப் பெறும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்
 உங்கள் ராசியாதிபதியான செவ்வாயின் சாரத்தில் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். 27-07-2107-ல் ஏற்படவுள்ள சர்ப்பகிரக மாற்றத்தால் கேது 3-ல் சஞ்சரிக்கவிருப்பதால் ஆன்மிக, தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களைத் தடையின்றிப் பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேரமுடியும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். 

நட்சத்திரப்பலன்

விசாகம் 4-ஆம் பாதம்
விருச்சிக ராசியில் குருவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தி யாகும். கணவன், மனைவியிடையே சிறுசிறு ஊடல்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவு உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

அனுஷம்
விருச்சிக ராசியில் சனியின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகளி லிருந்த நெருக்கடிகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் தடையின்றி லாபம் அமையும். கடன்கள் நிவர்த்தியாகும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். பொன், பொருள் சேரும். குடும்பத்திலுள்ள வர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். சேமிக்க முடியும்.

கேட்டை
விருச்சிக ராசியில் புதனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு லாபஸ்தானத்தில்  சஞ்சரிப்பதால் தடைப்பட்ட திருமண சுப காரி யங்கள் கைகூடும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொண் டால் குடும்ப ஒற்றுமை சிறப்படையும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். எதிர் பார்த்த இடமாற்றங்களும் தடையின்றிக் கிட்டும். வேலைப்பளு குறையும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்:         1, 2, 3, 9, 10, 11
நிறம்     :    ஆழ்சிவப்பு, மஞ்சள்
கிழமை:     செவ்வாய், வியாழன்
கல்:         பவளம்
திசை:     தெற்கு
தெய்வம்:     முருகன்

பரிகாரம்
விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு சாதமாக சஞ்சரித்தாலும் ஏழரைச் சனி தொடருவதால் வியாழக்கிழமைகளில் திருப்பதி ஏழு மலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது. சனிக்கிழமைகளில் விரதமிருந்து அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது, சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. ராகு 10-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது உத்தமம். கேது 4-ல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது, கேது மந்திரமான ""ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ'' என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது. செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

No comments: