Saturday, December 10, 2016

வார ராசிப்பலன் டிசம்பர் 11 முதல் 17 வரை 2016

வார ராசிப்பலன்  டிசம்பர்  11  முதல் 17 வரை   2016   

கார்த்திகை  26  முதல்  மார்கழி 2 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


சந்தி


கேது 
திருக்கணித கிரக நிலை




செவ்
சுக்கி  
ராகு
புதன்
சனி 
சூரிய
               
குரு 



கிரக   மாற்றம்
11- 12- 2016  கும்ப செவ்வாய்
15-12- 2016 தனுசு சூரியன்

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மேஷம்    - 10.12.2016 காலை 08.28 மணி முதல் 12.12.2016 காலை 08.50 மணி வரை.
ரிஷபம்    - 12.12.2016 காலை 08.50 மணி முதல் 14.12.2016 காலை 08.14 மணி வரை.
மிதுனம்   - 14.12.2016 காலை 08.14 மணி முதல் 16.12.2016 காலை 08.51 மணி வரை.
கடகம்     - 16.12.2016 காலை 08.51 மணி முதல் 18.12.2016 மதியம் 12.41 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
16.12.2016 மார்கழி 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரிதியை திதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் தனுசு இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே  உங்கள் ஜென்ம ராசிக்கு 9ல் புதன், 10ல் சுக்கிரன், 11ம் தேதி முதல்  11ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். முடிந்தவரை ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்ளவும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் ஒரளவுக்கு லாபம் கிட்டும். பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும் என்றாலும் 8ல் சூரியன் இருப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடும் என்பதால் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். தொழிலாளர்களிடம் தட்டி கொடுத்து வேலை வாங்கி கொள்ளவது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது நல்லது. வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது மூலம் நற்பலனை அடையலாம்.

வெற்றிதரும் நாட்கள் -  11,14,15.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5ல் குரு சஞ்சரிப்பதும், 11ம் தேதி முதல் 10ல் செவ்வாய் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமாக சுபகாரியங்கள் கை கூடும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். 7ல் சனி சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் அமையும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாகவே இருக்கும். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் குறையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு செய்வது உல்லது.

வெற்றிதரும் நாட்கள் -  12,13,16,17.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 6ல் சனி, சூரியன் சஞ்சரிப்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும் பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்ற கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு ஏற்பட கூடிய உடல்நலக் குறைவுகளால் பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். முருகபெருமானை வழிபடுவதன் மூலம் நற்பலன் கிட்டும்.

வெற்றிதரும் நாட்கள் -  11,14,15.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, குடும்ப ஸ்தானமான 2ல் ராகு 3ல் குரு, 5ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள், தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். கணவன் மனைவிடையே ஒற்றுமை குறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகளால் நடக்க இருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கை நழவி போகும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கரை எடுத்து கொள்வது நல்லது. துர்கை அம்மனை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.

வெற்றிதரும் நாட்கள் -  11,12,13,1617.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2ல் குரு, 5ல் புதன், 6ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் இந்த வாரம் உங்களது பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். வீடு மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மனஅமைதியை அளிப்பதாக அமையும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும்தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்களின் கல்வி திறன் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -  12,13,14,15.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் சனி, சூரியன் சஞ்சரிப்பதும், 11ம் தேதி முதல் 6ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில், வியாபார ரீதியாக சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷன்களை குறைத்து கொள்ள முடியும். பலரை வழிநடத்திச் செல்லக் கூடிய கௌரவமான பதவிகள் தேடி வரும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். புத்திர வழியிலும் சில மனசஞ்சலங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அசையும் அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படும். மாணவர்கள் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். குருவுக்கு பரிகாரம் செய்வது தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்

வெற்றிதரும் நாட்கள் -  14,15,16,17.
சந்திராஷ்டமம்  10.12.2016 காலை 08.28 மணி முதல் 12.12.2016 காலை 08.50 மணி வரை.


துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படுவதால் சுகவாழ்வில் பாதிப்பும், வீண் விரயங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்காது. அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சோர்வு உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை ஏற்படும். பணவரவுகளில் சற்று நெருக்கடியான நிலையே இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்த வித பிரச்சனைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எந்தவொரு காரியத்தையும் செய்யாதிருப்பது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -  11,16,17.
சந்திராஷ்டமம்      -  12.12.2016 காலை 08.50 மணி முதல் 14.12.2016 காலை 08.14 மணி வரை.


விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் புதன், 3ல் சுக்கிரன், 11ல் குரு சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள். அசையும் அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். ஏழரை சனியில் ஜென்மசனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ வெலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -  11,12,13.
சந்திராஷ்டமம்      -  14.12.2016 காலை 08.14 மணி முதல் 16.12.2016 காலை 08.51 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி  ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே  உங்கள் ஜென்ம ராசிக்கு 12ல் சூரியன், சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11ம் தேதி முதல் 3ல் செவ்வாய் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்கள் பலமும் வளமும் கூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளும், சோர்வு மந்த நிலை போன்றவையும் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவையற்ற ஆடம்பல செலவுகளை தவிர்த்தால் கடன்களைக் குறைக்க முடியும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம்தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவுனாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தமான நிலையே இருக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது, முருகப்பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -  12,13,14,15.
சந்திராஷ்டமம்      -  16.12.2016 காலை 08.51 மணி முதல் 18.12.2016 மதியம் 12.41 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 9ல் குரு, 11ல் சூரியன் சனி சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். ஆடை ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் சற்று சாதகமானப்பலனை அடைவீர்கள். எதிர்பாராத  உதவிகளும் கிடைக்கப் பெறும். சர்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகி நல்ல லாபம் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். பல பொதுநலக் காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்    -  14,15,16,17.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்களுக்கு மாதகோளான சூரியன் சாதகமாக சஞ்சாரம் செய்வதும், 11ல் புதன் சஞ்சரிப்பதும் ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன் வாங்கும் நிலை ஏற்படாது. கணவன் மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின்பே வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும் என்றாலும் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்  -   11,16,17.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் உடையவர்களாவும், திறமைசாலிகளாகவும்  விளங்கும் மீன  ராசி நேயர்களே உங்களுக்கு ராசிக்கு 7ல் குரு, 10ல் புதன் 11ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பணம் பல வழிகளில் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். பொன், பொருள் சேரும். கணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவதால் மகிழ்ச்சி நிலவும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணயில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள்    -  12,13.


No comments: