Saturday, December 24, 2016

வார ராசிப்பலன் டிசம்பர் 25 முதல் 31 வரை 2016



வார ராசிப்பலன்     டிசம்பர்  25  முதல் 31 வரை   2016
மார்கழி 10 முதல் 16 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


சந்தி


கேது  செவ்
               
திருக்கணித கிரக நிலை




சுக்கி  
ராகு
புதன் (வ)
சூரிய
சனி 

               
குரு 


கிரக   மாற்றம்
29.12.2016 கும்ப சுக்கிரன் அதிகாலை 02.47 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
துலாம்              23.12.2016 காலை 08.06 மணி முதல் 25.12.2016 இரவு 08.52 மணி வரை.
விருச்சிகம்  25.12.2016 இரவு 08.52 மணி முதல் 28.12.2016 காலை 09.00 மணி வரை.
தனுசு                 28.12.2016 காலை 09.00 மணி முதல் 30.12.2016 இரவு 07.37 மணி வரை.
மகரம்                30.12.2016 இரவு 07.37 மணி முதல் 02.01.2017 அதிகாலை 04.29 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள் இல்லை
இந்த வார பஞ்சாங்கம்
               
25.12.2016, மார்கழி 10, ஞாயிற்றுகிழமை, தேய்பிறை துவாதசி திதி பின்இரவு 06.07  வரை பின்பு திரயோதசி, விசாகம் நட்சத்திரம் பின்இரவு 03.37 வரை பின்பு அனுஷம், நாள் முழுவதும் மரணயோகம், நேத்திரம்   0, ஜீவன்  1/2, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

26.12.2016, மார்கழி 11 திங்கட்கிழமைநாள் முழுவதும் தேய்பிறை திரியோதசி, அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 06.27 வரை பின்பு கேட்டை, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம்  0, ஜீவன்  1/2, பிரதோஷம் சிவ வழிபாடு நல்லது, கரிநாள், சுப முயற்சிகளை தவிர்க்கவும்

27.12.2016, மார்கழி 12, செவ்வாய்கிழமை, திரியோதசி திதி காலை 08.30 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி, நாள் முழுவதும் கேட்டை, நாள் முழுவதும் மரண யோகம்நேத்திரம்   0, ஜீவன்  0,   மாத சிவராத்திரி சிவ வழிபாடு நல்லது, சுப முயற்சிகளை தவிர்க்கவும்.       

28.12.2016, மார்கழி 13, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 10.36 வரை பின்பு அமாவாசை, கேட்டை நட்சத்திரம் காலை 09.01 வரை பின்பு மூலம், சித்தயோகம் காலை 09.01 வரை பின்பு மரணயோகம், நேத்திரம்  0, ஜீவன்  0, சர்வ அமாவாசை,            ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி. ஆஞ்சநேயர் வழிபாடு நல்லது,

29.12.2016, மார்கழி 14, வியாழக்கிழமை, அமாவாசை திதி பகல் 12.23 வரை பின்பு வளர்பிறை பிரதமை,       மூலம் நட்சத்திரம் பகல் 11.17 வரை பின்பு பூராடம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம்   0, ஜீவன்   0.
                               
30.12.2016, மார்கழி 15, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி பகல் 01.48 வரை பின்பு வளர்பிறை துதியை, பூராடம் நட்சத்திரம் பகல் 01.12 வரை பின்பு உத்திராடம், பிரபலாரிஷ்ட யோகம் பகல் 01.12 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம்  0, ஜீவன்  0, சந்திர தரிசனம், அம்மன் வழிபாடு நல்லது.                    

31.12.2016, மார்கழி 16, சனிக்கிழமைதுதியை திதி பகல் 02.52 வரை பின்பு வளர்பிறை திரிதியை, உத்திராடம் நட்சத்திரம் பகல் 02.47 வரை பின்பு திருவோணம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம்   0, ஜீவன்  1/2 , ஹயக்ரீவர் வழிபாடு நல்லது.



மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
முன் கோபம் அதிகம் இருந்தாலும் இனிமையாக பழகும் சுபாவம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 9ல் சூரியன், 10ல் சுக்கிரன், 11ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் வீண் விரயங்களை குறைத்து கொள்ளலாம். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கை கூட சற்று தாமத நிலை உண்டாகும். முன்கோபத்தை குறைப்பது தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் சில நேரங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள்உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் - 25,31.
சந்திராஷ்டமம்                        & 25.12.2016 இரவு 08.52 மணி முதல் 28.12.2016 காலை 09.00 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத பண்பும் தன்மையான குணமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 8ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 5ல் குரு 10ல் செவ்வாய்  சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவில் இருந்த தடைகள் விலகி தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சியும், ஒற்றுமையும் உண்டாகும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். சிவ பொருமானை வழிபாடு செய்வது நல்லது

வெற்றிதரும் நாட்கள் - 25,26,27.
சந்திராஷ்டமம்                        & 28.12.2016 காலை 09.00 மணி முதல் 30.12.2016 இரவு 07.37 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி காரியங்களை சாதித்து கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 6ல் சனி, 9ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் அனைத்து வகையிலும் நற்பலன்கள் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமத நிலை உண்டாகும்பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். கொடுக்கல் வாங்கல் பெரிய தொகைகளை பயன்படுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை பெற முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளை சமாளித்து நல்ல லாபத்தினை அடைவார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது நற்பலனை தரும். துர்கை அம்மனை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள் - 26,27,28,29.
சந்திராஷ்டமம்                        & 30.12.2016 இரவு 07.37 மணி முதல் 02.01.2017 அதிகாலை 04.29 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது நிறைவேற்ற கூடிய ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன், 7ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் செயல்படுவது நல்லது. புத்திர வழியில் தேவையற்ற மனக்கவலைகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளை சமாளித்து முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகளும் கிட்டும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து நடப்பது நற்பலனை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் சற்று தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். குரு ப்ரீதி, தட்சிணா முர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் - 28,29,30,31.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் எதையும் சமாளித்து தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 7ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 2ல் குரு 5ல் புதன் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்களும் குறையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று வாழ்க்கை தரம் உயரும். கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் நோக்கங்களும் நிறைவேறக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்தநிலை சோர்வு போன்றவை உண்டாகும்பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்படுவதால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். விநாயகரை வழிபடுவது சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் -  25,31.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமையும், அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்பும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் சனி 6ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவியிடையே ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் நிலவும் என்றாலும் உடன்பணிபுரிபவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை நிலவும். சனி பகவானை வழிபடுவது ---உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் - 26,27.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதில் அலாதி பிரியம் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள்  ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன் 4ல் சுக்கிரன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் ஏழரை சனி தொடருவதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகி ஒற்றுமை குறைவு ஏற்படும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியினை அளிக்கும். புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்களை எதிர் கொள்ள நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் சிறுசிறு மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் வீண் பிரச்சனைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சனிப்பரீதி ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் - 25,28,29,30.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் பாடுபடக் கூடிய ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன், 4ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகி குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் தேவையற்ற வீண் செலவுகள் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாகவே செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை காண முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் தடையின்றி வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கப் பெறும். வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். சனி ப்ரீதி, சிவ வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் - 26,27,31.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
தன்னுடைய கொள்கைகளை யாருக்காகவும், எதற்காகவும் எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் சுக்கிரன், 3ல் செவ்வாய், கேதுசஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். உடல்  ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றுவதால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்க பெறுவதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உறவினர்களும் சில நேரங்களில் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். வேலைபளு கூடுதலாகும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சர்ப சாந்தி செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் - 25,28,29,30.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே பாக்கிய ஸ்தானமான 9ல் குரு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும் என்றாலும் 2ல் செவ்வாய், 12ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை உண்டானாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். திருமண  சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்ல வரன்கள் தேடி வரும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் குறையும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்ற பள்ளி கல்லூரிக்கு பெருமை செர்ப்பார்கள். சிவ வழிபாடு, முருக வழிபாடு நல்லது.

வெற்றிதரும் நாட்கள் - 25,26,27,31.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
வேகமாக பேசினாலும், திருத்தமாகவும், திறம்படவும் பேசக் கூடிய கும்ப ராசி நேயர்களே, உங்கள்  ஜென்ம ராசிக்கு 11ல் சூரியன், புதன் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவினை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களின் வருகை மனமகிழ்ச்சியை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். மங்களகரமான சுபகாரியங்கள் கை கூட சற்று தாமத நிலை ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். அபிவிருத்தியும் பெருகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை யாருக்கும் கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த கடன்களை வசூலித்துவிட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் சற்ற கடின முயற்சிகளை மேற்கொண்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் - 26,27,28,29,30.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
மற்றவர்களின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட மீன  ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 10ல் சூரியன் புதன், 11ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார  நிலை சிறப்பாக இருக்கும். எந்தவித பிரச்சனைகளையும் எதிர் கொள்ள கூடிய அளவுக்கு உங்கள் பலமும் வளமும் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். ஆடை அபரணங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடையின்றி நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கடன்களும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுதிடுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் கா£ரியங்களில் எதிர்பார்த்த நற்கலனை பெற முடியும். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் - 28,29,30,31.
சந்திராஷ்டமம்      23.12.2016 காலை 08.06 மணி முதல் 25.12.2016 இரவு 08.52 மணி வரை.




No comments: